Jump to content

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பர்களே!

இந்த யாழ்க்களத்தில் பொதுவாக பெண்களைப்பற்றியே கவிதைகள் எல்லாம் வர்ணிக்கின்றனவே எப்போதாவது பெண்கள் மனந்திறந்து ஆண்களை நோக்கி தங்கள் கவிதையை வரைவதில்லை என்ற குறைபாடுகள் நிறையவே இருக்கின்றன. இது யாழுக்குள் மட்டுமல்ல எல்லாவிடத்திலும் உண்டு. இந்தக்களத்திற்குள்ளேயே, ஆண்களை வைத்துக் கவிதை எழுதுங்கள் என்று யாரோ கேட்டதாக ஞாபகம். வாசித்துவிட்டு உங்களுடைய உண்மையான விமர்சனத்தை தாருங்கள் நண்பர்களே!

rain-1.jpg

பூக்களுக்கு வாசம் உண்டு கண்ணா உன்னைப்போல் - என்

பாக்களுக்குள் வாசம் செய்யும் உயிரே நீதானே!

கூகிலுக்குள் தேடிப் பார்த்தேன் அன்பே உன்முகத்தை - வந்த

கோபத்தாலே சினந்தது உள்ளம் அதுவே உன் இல்லம்.

கண்ணில் வந்து மின்னல் வெட்டிக் கவனப்படுத்துகிறாய் - என்

காதல் நெஞ்சின் அருகே வந்து அனலை மூட்டுகிறாய்.

சின்னச் சின்ன நினைவிலும் கூட நீயே வாட்டுகிறாய். - என்

சிந்தை அழுகிற வேளையில்க்கூட நீயே ஆற்றுகிறாய்.

வானை, மண்ணைப் பார்த்தேன் அங்கே வண்ணம் தெரியவில்லை.

தேனை நாவில் தொட்டுப்பார்த்தேன் சுவையும் அறியவில்லை.

ஏனோ எந்தன் அசைவுங்கூட எனக்குப் புரியவில்லை.

எந்தன் விழிக்கு உன்னைத் தவிர எதுவும் தெரியவில்லை.

ஆழக்கடலில் என்னைத் தாட்டு மூச்சை முட்டுகிறாய் - மோதிச்

சிதறும் குண்டில்க்கூட முகத்தைக் காட்டுகிறாய்.

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய். - அட

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்.

வேனில் வீசும் நாளில் எனக்கு வேர்த்துக் கொட்டுதடா - என்

மேனிக்குள்ளே உருகும் இதயம் மூர்ச்சையாகுதடா

கானல் கண்ட மானா என்நிலை கண்ணா சொல்லிவிடு! - என்

காயத்தோடு ஆவி கிடக்க கட்டளை இட்டுவிடு!

Link to comment
Share on other sites

ஆருமை வல்லை. . .

ஆண்களைப்பற்றி கவிதை வடிப்பதில் கடினம் இல்லை என்பதை உங்கள் கவிதைவாயிலாக உணர முடிந்தது. . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய். - அட

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்.

அற்புதமான வரிகள்,

வல்வை சகாரா உங்கள் கவிக்கு நானும் ஓர் இரசிகன் என்ற உரிமையில் கேட்கிறேன், சமுதாய பிரச்சனைகளை உங்களது படைப்பாக்கலாமே,உங்களைப் போன்ற சிறந்த கவிகளின் வரிகள் ஏதாவது ஓர் பிரச்சனையை தீர்பதில் சிறு தாக்கத்தையேனும் உருவாக்கும்.வெறும் கவியாக அல்லாமல்,ஓர் பேனா போராளியானால் உங்கள் கவியாழுமை மேலும் சிறக்கும்.

வாழ்த்துக்கள். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

அது ஒன்றுமில்லை...

பெண்கள் கவிதையை எழுதி வெளியிடுவது குறைவு....

ஆண்கள் வெளியிடுவது அதிகம்...

ஆண்களை ஆண்கள் வர்ணிப்பது..உணர்வுரீதியில் சிறிது சிரமம்...

நல்ல நடை...பாட்டாக்கலாம்...

வாழ்த்துகள்..

Link to comment
Share on other sites

ஆழக்கடலில் என்னைத் தாட்டு மூச்சை முட்டுகிறாய் - மோதிச்

சிதறும் குண்டில் கூட முகத்தைக் காட்டுகிறாய்.

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய். - அட

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்.

நல்ல வரிகள். சகாரா பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

ஆழக்கடலில் என்னைத் தாட்டு மூச்சை முட்டுகிறாய் - மோதிச்

சிதறும் குண்டில்க்கூட முகத்தைக் காட்டுகிறாய்.

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய். - அட

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்.

அதுஆழக்கடலில் என்னைத் தாட்டு மூச்சை முட்டுகிறாய்

கடலுக்குள்ளை தள்ளிறதா??

சிதறும் குண்டில்க்கூட முகத்தைக் காட்டுகிறாய்.

சுட்டுக் கொல்லுறதா??

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய்

கொழுத்துறதா??

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்

வெட்டிக் குத்தறதா??

எண்டு உங்களை முடிக்கிறதுக்கான திட்டமிட்ட சதி நடக்குது எண்டு நினைக்கிறன் கவனமாயிருங்கோ ..

:wub::wub:

அதில்லை ஆண்களைப் பற்றி கவிதை எழுதினவுடனை எனக்கு ஒரு சந்தேகம் அதுதான் <_<:huh:

Link to comment
Share on other sites

அட..ஆண்களை கவிதையில வர்ணிக்கிறதோ..(நிசமா முடியல்ல) :wub: ..ஆனா சகாரா அக்கா இலகுவாக வர்ணித்து விட்டா வாழ்த்துக்கள் சகாரா அக்கா :huh: ..நானும் இந்த கவிதயை வாசித்தா பிறகு ஆண்களை வர்ணிக்க முயற்சி செய்து பார்த்தன் அச்சோ ஒன்னுமே வரல்ல.. <_<

அப்ப தான் விளங்கிச்சு..ஆண்களை கவிதைகுள்ள அடக்க ஏலாது எண்டு.சரி அதை விடுவோம்..ஆனாலும் நீங்க அடக்கி போட்டியள் பாருங்கோ.. :wub:

கூகிலுக்குள் தேடிப் பார்த்தேன் அன்பே உன்முகத்தை - வந்த

கோபத்தாலே சினந்தது உள்ளம் அதுவே உன் இல்லம்.

வித்தியாசமான சிந்தனை இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்..வாழ்த்துக்கள்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேனில் வீசும் நாளில் எனக்கு வேர்த்துக் கொட்டுதடா யாழ்களத்தில்

இக் கோடை வசந்தம் ஆண்கள் நெஞ்சில் பனியைக் கொட்டுதடா

ஏன் சகாரா ஏதோ ஒரு முடிவோடதான் வெளிக்கிட்டிருக்கிறியள் போலத் தெரியுது

ஆண்களே ஜாக்கிரதை அக்கா பப்பாவில ஏத்தேக்க எச்சரிக்கையா இருங்க

கவிதையில மயங்கி கைய விட்டிங்க அப்புறம் கவித்துப் போடுவாங்க

Link to comment
Share on other sites

இந்த கவிதையில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு அம்சம். அந்த படம். வித்தியாசமாக இருக்கின்றுது. மீண்டும் மீண்டும் பார்க்கவும் தூண்டுகின்றுது. ஓவியனின் கற்பனைக்கு வாழ்த்துக்கள். ..

Link to comment
Share on other sites

கண்ணில் வந்து மின்னல் வெட்டிக் கவனப்படுத்துகிறாய் - என்

காதல் நெஞ்சின் அருகே வந்து அனலை மூட்டுகிறாய்.

சின்னச் சின்ன நினைவிலும் கூட நீயே வாட்டுகிறாய். - என்

சிந்தை அழுகிற வேளையில்க்கூட நீயே ஆற்றுகிறாய்.

வரிகள் அருமையிலும் அருமை சகாரா...! ஆண்கள் எப்படி ஆண்களைப்பற்றி கவி பாட முடியம் அவர்கள் பெண்களைப் பற்றி பாடுகிறார்கள் பெண்கள் தான் ஆண்களைப் பற்றி கவி பாட முன்வர வேண்டும்.... இதயத்தைத் தொடும் அளவிற்கு கவியின் ஆழங்கள் அமைந்திருந்தது... பாராட்டுக்கள் ,வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சஹாரா .........

கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்,

படத்தில் உள்ள பூவில் ,சமாதான புற எழுகிறது . வழமையாக ..பூவில் வண்டு தான் மொய்க்கும் .

வித்தியாசமாக இருக்கு .எம் இதய மலரில் எழும் சமாதானம் எனும் விடுதலை புறாவோ ?

நிலாமதி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய். - அட

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்.

அற்புதமான வரிகள்,

வல்வை சகாரா உங்கள் கவிக்கு நானும் ஓர் இரசிகன் என்ற உரிமையில் கேட்கிறேன், சமுதாய பிரச்சனைகளை உங்களது படைப்பாக்கலாமே,உங்களைப் போன்ற சிறந்த கவிகளின் வரிகள் ஏதாவது ஓர் பிரச்சனையை தீர்பதில் சிறு தாக்கத்தையேனும் உருவாக்கும்.வெறும் கவியாக அல்லாமல்,ஓர் பேனா போராளியானால் உங்கள் கவியாழுமை மேலும் சிறக்கும்.

வாழ்த்துக்கள். தொடருங்கள்.

சங்கிலியன் ஒரு பேனா முனைப்போராளியாவது என் இலக்குகளில் ஒன்று. என்னுடைய அநேக படைப்புகள் விடுதலைசார்ந்தவையாகவே முக்கியமாக தேச விடுதலை சார்ந்தவையாகவே உருவம் கொண்டுள்ளன. சமீப காலமாகத்தான் எங்கள் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சில அசட்டுத்தனங்களைப்பற்றி எழுத முனைகிறேன். தேசவிடுதலை மட்டுமே எங்களுக்கு வேண்டியது என்று நீண்ட நாட்களாக நான் நினைத்திருந்தேன் ஆனால் என் நண்பன் எனக்குள் ஒரு சிறு பொறியைத்தூண்டியதில் எங்கள் தேசவிடுதலையின் பரிபூரணத்தை நாம் அனுபவிக்கவேண்டுமென்றால் எங்களுக்குள் சமூகவிழிப்புணர்வு மிக அவசியம் பழமைகளுக்குள்ளும் பக்குவப்படாத புதுமைக்குள்ளும் சரியான வழிகாட்டல்களையும், அதேநேரம் புரையோடிக்கிடக்கும், எதிர்கால சமுதாயத்திற்கு வேண்டாதவையையும் அடையாளங்காட்டவேண்டிய சந்தியில் நாங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறோம். இங்கு இணைக்கப்பட்ட இப்படைப்பு உண்மையிலேயே மெட்டுக்குப்பாட்டெழுத வெளிக்கிட்டதன் விளைவு.

நன்றி சங்கிலியன் உங்கள் கருத்திற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுஆழக்கடலில் என்னைத் தாட்டு மூச்சை முட்டுகிறாய்

கடலுக்குள்ளை தள்ளிறதா??

சிதறும் குண்டில்க்கூட முகத்தைக் காட்டுகிறாய்.

சுட்டுக் கொல்லுறதா??

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய்

கொழுத்துறதா??

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்

வெட்டிக் குத்தறதா??

எண்டு உங்களை முடிக்கிறதுக்கான திட்டமிட்ட சதி நடக்குது எண்டு நினைக்கிறன் கவனமாயிருங்கோ ..

:lol::)

அதில்லை ஆண்களைப் பற்றி கவிதை எழுதினவுடனை எனக்கு ஒரு சந்தேகம் அதுதான் :D:unsure:

சாத்திரி உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம்? :wub:

காதல் என்பது கடலில் மூழ்கிச் சாவதைக்காட்டிலும், தீயில் தீய்வதைக்காட்டிலும், வெடித்துத் உடலில் புகுந்து வலிப்படுத்தும் சன்னங்களைக்காட்டிலும், வேட்டையில் மிருகங்களை வதைப்படுத்தும் அம்பு, கத்தி, கோடாரி போன்றனவற்றால் ஏற்படுத்தப்படும் வேதனையைக்காட்டிலும் பொல்லாததுதானே.

ஒன்று மட்டும் விளங்கிறது வழமைக்கு மாறாக எழுதினாலே யாழ்க்களத்தில் எல்லோரும் அதிகம் யோசிப்பார்கள் போல்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட..ஆண்களை கவிதையில வர்ணிக்கிறதோ..(நிசமா முடியல்ல) :unsure: ..ஆனா சகாரா அக்கா இலகுவாக வர்ணித்து விட்டா வாழ்த்துக்கள் சகாரா அக்கா :D ..நானும் இந்த கவிதயை வாசித்தா பிறகு ஆண்களை வர்ணிக்க முயற்சி செய்து பார்த்தன் அச்சோ ஒன்னுமே வரல்ல.. :wub:

அப்ப தான் விளங்கிச்சு..ஆண்களை கவிதைகுள்ள அடக்க ஏலாது எண்டு.சரி அதை விடுவோம்..ஆனாலும் நீங்க அடக்கி போட்டியள் பாருங்கோ.. :lol:

யமுனா உங்கள் கற்பனை மிகவும் அதிகம்.

நீஙக சின்னப்பிள்ளை என்பதால் அதகம் சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கவிதையில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு அம்சம். அந்த படம். வித்தியாசமாக இருக்கின்றுது. மீண்டும் மீண்டும் பார்க்கவும் தூண்டுகின்றுது. ஓவியனின் கற்பனைக்கு வாழ்த்துக்கள். ..

பரணீ உங்கள் பாராட்டுக்கு நன்றி, இந்த ஓவியத்தை உருவாக்கி அந்த முகம்தெரியாத நண்பருக்கும் நன்றி சொல்லவேண்டும். எவ்வளவு அற்புதமான ஓவியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேனில் வீசும் நாளில் எனக்கு வேர்த்துக் கொட்டுதடா யாழ்களத்தில்

இக் கோடை வசந்தம் ஆண்கள் நெஞ்சில் பனியைக் கொட்டுதடா

ஏன் சகாரா ஏதோ ஒரு முடிவோடதான் வெளிக்கிட்டிருக்கிறியள் போலத் தெரியுது

ஆண்களே ஜாக்கிரதை அக்கா பப்பாவில ஏத்தேக்க எச்சரிக்கையா இருங்க

கவிதையில மயங்கி கைய விட்டிங்க அப்புறம் கவித்துப் போடுவாங்க

முடிவோடு அல்ல கண்மணி தொடக்கத்தோடு ஆரம்பித்துள்ளேன்.

நீங்களே எனக்கு எதிராக ஆண்கள் அணியைத் திரட்டிவிடுவீர்கள் போல் உள்ளது.

உங்கள் கலகலப்பான பாராட்டுக்கு நன்றி கண்மணி.

மற்றும் விகடகவி, நுணாவிலான், இதயநிலா, நிலாமதி, ஆகியோருக்கும் மனந்திறந்து நன்றி உரைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சஹாரா .........

கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்,

படத்தில் உள்ள பூவில் ,சமாதான புற எழுகிறது . வழமையாக ..பூவில் வண்டு தான் மொய்க்கும் .

வித்தியாசமாக இருக்கு .எம் இதய மலரில் எழும் சமாதானம் எனும் விடுதலை புறாவோ ?

நிலாமதி

மனதிற்குப் பிடித்தவருடன் சண்டைகள் பிடிக்கத்தான் ஆசை இருப்பினும் சமாதானப்புறா ஏற்றத்தாழ்வற்ற நிர்மலமான அழகைப் பிரசவிக்கிறதே.....

Link to comment
Share on other sites

ஆகா சாகாறா அற்புதமான படத்துக்கு அருமையான கற்பனை வரிகள்.

உண்மையிலேயே நன்றாக இருக்கிறது.

உங்கட கவிதையை பார்த்த உடனை முந்திய எனது கவி ஒன்டும் ஞாபகம்

வந்திச்சு யாழை ஒருக்கா தூசுதட்டி இப்ப வாசிச்சு பார்த்தன் :wub:

Link to comment
Share on other sites

கவிதை பக்கம் வரவே வெறுப்பா இருக்குங்க. 98% காதல் கவிதைகளாய் அழுகிறீங்கப்பா. சோகம் பின்னுது.

மயிர் துணுக்கு எல்லாம் எழும்பி நிக்கிறது போல உணர்ச்சி கவிகளையும், நகைச்சுவையோ எழுத மாட்டியளோ.?

Link to comment
Share on other sites

  • 1 year later...

பூக்களுக்கு வாசம் உண்டு கண்ணா உன்னைப்போல் - என்

பாக்களுக்குள் வாசம் செய்யும் உயிரே நீதானே!

கூகிலுக்குள் தேடிப் பார்த்தேன் அன்பே உன்முகத்தை - வந்த

கோபத்தாலே சினந்தது உள்ளம் அதுவே உன் இல்லம்.

கண்ணில் வந்து மின்னல் வெட்டிக் கவனப்படுத்துகிறாய் - என்

காதல் நெஞ்சின் அருகே வந்து அனலை மூட்டுகிறாய்.

சின்னச் சின்ன நினைவிலும் கூட நீயே வாட்டுகிறாய். - என்

சிந்தை அழுகிற வேளையில்க்கூட நீயே ஆற்றுகிறாய்.

வானை, மண்ணைப் பார்த்தேன் அங்கே வண்ணம் தெரியவில்லை.

தேனை நாவில் தொட்டுப்பார்த்தேன் சுவையும் அறியவில்லை.

ஏனோ எந்தன் அசைவுங்கூட எனக்குப் புரியவில்லை.

எந்தன் விழிக்கு உன்னைத் தவிர எதுவும் தெரியவில்லை.

ஆழக்கடலில் என்னைத் தாட்டு மூச்சை முட்டுகிறாய் - மோதிச்

சிதறும் குண்டில்க்கூட முகத்தைக் காட்டுகிறாய்.

தீயைக் கூட தின்னச் சொல்லி ஆசை ஊட்டுகிறாய். - அட

காலித்தனமாய் என்னை மட்டும் வேட்டையாடுகிறாய்.

வேனில் வீசும் நாளில் எனக்கு வேர்த்துக் கொட்டுதடா - என்

மேனிக்குள்ளே உருகும் இதயம் மூர்ச்சையாகுதடா

கானல் கண்ட மானா என்நிலை கண்ணா சொல்லிவிடு! - என்

காயத்தோடு ஆவி கிடக்க கட்டளை இட்டுவிடு!

சகாறா அக்கா, கவிதை அற்புதம். முன்பும் இதை வாசித்து இருந்தேன் என்று நினைக்கிறன். கருத்து ஏன் இடவில்லை என்று தெரியவில்லை. இன்று யாழ் முகநூல் தொடுப்பில இந்ததிரியை கண்டன். கவிதை மிக நன்றாய் இருக்கிது, பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

இரவு 11:45 இற்கு இந்த கவிதையை வாசிச்சன் இப்ப...இந்த இலேசான குளிர் இருக்கும் இரவில் வாசிக்க வேண்டிய கவிதை, இனியும் கணணி முன் இருக்க முடியாதவாறு கவிதை என்னை உசுப்பிட்டு.... மிச்சம் பிறகு எழுதுறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு 11:45 இற்கு இந்த கவிதையை வாசிச்சன் இப்ப...இந்த இலேசான குளிர் இருக்கும் இரவில் வாசிக்க வேண்டிய கவிதை, இனியும் கணணி முன் இருக்க முடியாதவாறு கவிதை என்னை உசுப்பிட்டு.... மிச்சம் பிறகு எழுதுறன்

இதைத்தான்

இதைத்தான் அன்று திண்ணையில் எழுதினேன்

விரல்பட்டால் துள்ளி எழும்பும் நாங்கள்

விசுவாமித்திரர் பற்றி விமர்சிக்கக்கூடாது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இது வேற நடந்திருக்கோ.கவிதை பாடாட்டாலும் பறவாய் இல்லை.புறனி பாடாமல் விட்டால் அதுவே பெரிய விசயம் :lol:

Link to comment
Share on other sites

வானை, மண்ணைப் பார்த்தேன் அங்கே வண்ணம் தெரியவில்லை.

தேனை நாவில் தொட்டுப்பார்த்தேன் சுவையும் அறியவில்லை.

ஏனோ எந்தன் அசைவுங்கூட எனக்குப் புரியவில்லை.

எந்தன் விழிக்கு உன்னைத் தவிர எதுவும் தெரியவில்லை.

நாளை இந்த நேரம் பார்த்து

ஓடி வா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை

சென்று வா நிலா

தென்றலே என் தனிமை கண்டு

........ ....... கவியரசரின் காதலியின் தனிமையை ..... வரிகள் ஞாபத்துக்கு வருகின்றன!!

Link to comment
Share on other sites

ஓ இது வேற நடந்திருக்கோ.கவிதை பாடாட்டாலும் பறவாய் இல்லை.புறனி பாடாமல் விட்டால் அதுவே பெரிய விசயம் :)

:lol: :lol: :) நானும் அதைத்தான் யோசிச்சன்..! :) :) :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.