Jump to content

கொலைக் களமாகும் லண்டன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_44801044_both_226.jpg

கொல்லப்பட்ட பிரான்ஸ் மாணவர்கள். வயது தலா 23.

இந்த ஆண்டில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட கத்திக் குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் லண்டனில் அரங்கேறியுள்ளன.

அந்த வரிசையில் இறுதியாக பிரித்தானியாவிலேயே சிறந்த பல்கலைக்கழகமான இம்பீரியல் கல்லூரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio tech/ bio - engineering) படித்து வந்த இரண்டு பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் தென் கிழக்கு லண்டனில் அவர்களின் வதிவிடத்தில் வைத்து குத்திக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளனர்.

இவர்களின் வதிவிடம் முன்னர் ஒரு மடி கணணிக்காக சூறையாடப்பட்டும் இருக்கிறது.

அண்மைக்காலமாக கத்திக் குத்துக் கொலைகளும், துப்பாக்கிகள் பயன்படுத்திய கொலைகளும், களவுகளும் லண்டன் மாநகரையே பேரதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் உள்ளாக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன..!

தனது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் முன்னாள் பிரதமர் டொனி பிளேயரின் துணைவியார் கூட அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.

செய்திக்கான அடிப்படை மூலம்: http://news.bbc.co.uk/1/hi/england/london/7487126.stm

Link to comment
Share on other sites

கவனமாயிருங்கோ.பக்கதிலயா இருக்கிறீங்க.தவறி சுட்டால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனமாயிருங்கோ.பக்கதிலயா இருக்கிறீங்க.தவறி சுட்டால்

எனது வதிவிடத்திலும் களவு நடவடிக்கை ஒன்றை அண்மையில் முறியடித்திருக்கிறேன். மிகவும் நுட்பமான முறையில் கருவிகளைப் பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பான கதவை உடைக்க முற்பட்டார்கள். அவர்களின் ஆரம்ப செயற்பாட்டை தடுக்காமல் கதவை உடைக்க அனுமதித்துவிட்டு.. மேலும் உடைக்க முற்பட்ட போது எச்சரிக்கையாக இருந்து ஒலி எழுப்ப ஓடிவிட்டார்கள். அவர்கள் இந்திய அல்லது இலங்கையைச் சேர்ந்தவர்களாக தோற்றத்தில் தெரிந்தனர்.

இதற்கு முன்னொரு சம்பவத்தில் சுமார் 500 பவுண் பெறுமதியான பொருட்கள் பணம் என்பவற்றை கொள்ளையிட்டிருந்தார்கள். அதற்காக பொலீஸில் முறையிட பொலிஸ் எமது கைரேகையை எடுத்துக் கொண்டது. குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை..! :lol:

இங்கு பொலிஸாரின் மெத்தனப் போக்கே இவ்வாறான சம்பவங்கள் பெருக முக்கிய காரணம்.

இப்போ பொலிஸ் கொஞ்சம் கடும் நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. தமிழ் குழுக்கள் உட்பட பல குழுக்களின் செயற்பாடுகள் ஒடுக்கப்பட்டுள்ளன அல்லது அவற்றின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஓரிருவராக அவர்கள் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக கடின வேலை செய்யும் தமிழ் இளைஞர்களில் சிலர் ஏதிலிகளாக இரவு வேளைகளில் குடித்துவிட்டு வீதிகளில் கத்தித் திரிகிறார்கள். சிலர் விபச்சாரிகளை அழைத்துக் கொண்டு திரிவர்.

இங்கு போதைப்பொருள் பாவனை அதிகம். பொலிஸார் பார்த்துக் கொண்டு போவார்கள். குறிப்பிட்ட தொகைக்கு மேல் வைத்திருந்தால் தான் பிடிப்பார்கள். அதனால் கனாபிஸ் போன்ற போதைப் பொருட்களோடு சிறுமிகள் கூட வீதிகளில் புகைப்பிடித்தபடி திரிகிறார்கள்.

யுனி வழிய சொல்லத் தேவையில்லை. அறைகளைப் பூட்டிவிட்டு போதைப் புகைக்குள் மண்டிக்கிடப்பார்கள்.

வெளித் தோற்றத்துக்கு பெரிய நாகரிகமாக தெரியும் உலகத்துள் நுழைந்து பார்த்தால் தான் தெரிகிறது சூத்தை..! :D

நான் சிறீலங்காவில் இப்படி ஒரு நிலையைக் காணவே இல்லை. முன்னேறிய நாடுகளில் மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள்.. மிக மோசமாகவே இருக்கிறது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்...........லண்டன்நிலை கவலைக்கிடம்தான்.

குடியேறியவர்கள் நிலையும் அப்படித்தான்

Link to comment
Share on other sites

ம்...........லண்டன்நிலை கவலைக்கிடம்தான்.

குடியேறியவர்கள் நிலையும் அப்படித்தான்

சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள் குடி ஏறியவர்களின் நிலையும் அப்படித்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தநாள் சென்றல் லண்டனிலிருந்து அண்டர் கிரவுண்டில் வந்து பஸ் எடுக்க ஏறிய போது எனக்கு முன்னே நின்றவன் (தெற்காசியன் - ஆனால் இலங்கையில்லை) என்னிடம் இந்த பஸ் வெம்பிளி போகுமா என்று கேட்டான்.. உண்மையில் அவன் எதிர்த்திசையில் போக வேண்டும்.

நான் அவனுக்கு எதிர்த்திசையைக் காட்டி வழிசொல்லும்போது பின்னால் எனது வலட்டை ஒருவன் உருவ முற்பட்டது தெரிந்தது (ஒரு குறுந்தாடி ஆசாமி). பேஸைக் கையால் பிடித்தபடி அவனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் என்னைக் கடந்து என்னிடம் வழிகேட்டவனோடு பஸ்ஸிலிருந்து இறங்கி எங்கேயோ மாறிவிட்டான்.

இவரும் திட்டம்போட்டு ஒருவன் கவனத்தைத் திசைதிருப்ப மற்றவன் பர்ஸை அடிக்கும் நோக்கமென்பது எனக்குச் சற்றுப் பிந்தித்தான் விளங்கியது.

இங்கு சில தெற்காசியர்கள் அப்படியான நோக்கத்தோடு உலவுகிறார்கள். மெசினில் காசடிக்கும் போதும் ஒரு தடவை இப்படியொருவன் கிட்ட வந்து எதையோ கேட்க மற்றவனும் நெருங்கினான். நான் தள்ளிப் போ என்று சொல்லி ஒருதடவை கலைத்திருக்கிறேன்.

இனிமேல் பஸ்ஸில் ஏறும்போது யாராவது தெற்காசியன் பிழையான திசையில் நின்று கொண்டு வழிகேட்டால் ஜாக்கிரதை. பர்ஸைப் பிடித்துக்கொண்டு பதில் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் பஸ்ஸில் ஏறும்போது யாராவது தெற்காசியன் பிழையான திசையில் நின்று கொண்டு வழிகேட்டால் ஜாக்கிரதை. பர்ஸைப் பிடித்துக்கொண்டு பதில் சொல்லுங்கள்.

வழி கேட்டால் பதில் சொல்வதா? நோ.........நோ

Link to comment
Share on other sites

எனது வதிவிடத்திலும் களவு நடவடிக்கை ஒன்றை அண்மையில் முறியடித்திருக்கிறேன். மிகவும் நுட்பமான முறையில் கருவிகளைப் பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பான கதவை உடைக்க முற்பட்டார்கள். அவர்களின் ஆரம்ப செயற்பாட்டை தடுக்காமல் கதவை உடைக்க அனுமதித்துவிட்டு.. மேலும் உடைக்க முற்பட்ட போது எச்சரிக்கையாக இருந்து ஒலி எழுப்ப ஓடிவிட்டார்கள். அவர்கள் இந்திய அல்லது இலங்கையைச் சேர்ந்தவர்களாக தோற்றத்தில் தெரிந்தனர்.

இதற்கு முன்னொரு சம்பவத்தில் சுமார் 500 பவுண் பெறுமதியான பொருட்கள் பணம் என்பவற்றை கொள்ளையிட்டிருந்தார்கள். அதற்காக பொலீஸில் முறையிட பொலிஸ் எமது கைரேகையை எடுத்துக் கொண்டது. குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை..! :lol:

இங்கு பொலிஸாரின் மெத்தனப் போக்கே இவ்வாறான சம்பவங்கள் பெருக முக்கிய காரணம்.

இப்போ பொலிஸ் கொஞ்சம் கடும் நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. தமிழ் குழுக்கள் உட்பட பல குழுக்களின் செயற்பாடுகள் ஒடுக்கப்பட்டுள்ளன அல்லது அவற்றின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஓரிருவராக அவர்கள் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக கடின வேலை செய்யும் தமிழ் இளைஞர்களில் சிலர் ஏதிலிகளாக இரவு வேளைகளில் குடித்துவிட்டு வீதிகளில் கத்தித் திரிகிறார்கள். சிலர் விபச்சாரிகளை அழைத்துக் கொண்டு திரிவர்.

இங்கு போதைப்பொருள் பாவனை அதிகம். பொலிஸார் பார்த்துக் கொண்டு போவார்கள். குறிப்பிட்ட தொகைக்கு மேல் வைத்திருந்தால் தான் பிடிப்பார்கள். அதனால் கனாபிஸ் போன்ற போதைப் பொருட்களோடு சிறுமிகள் கூட வீதிகளில் புகைப்பிடித்தபடி திரிகிறார்கள்.

யுனி வழிய சொல்லத் தேவையில்லை. அறைகளைப் பூட்டிவிட்டு போதைப் புகைக்குள் மண்டிக்கிடப்பார்கள்.

வெளித் தோற்றத்துக்கு பெரிய நாகரிகமாக தெரியும் உலகத்துள் நுழைந்து பார்த்தால் தான் தெரிகிறது சூத்தை..! :D

நான் சிறீலங்காவில் இப்படி ஒரு நிலையைக் காணவே இல்லை. முன்னேறிய நாடுகளில் மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள்.. மிக மோசமாகவே இருக்கிறது. :D

உங்களிடமே கைவரிசையை காட்டியிருக்கிறார்கள் என்றால் நம்பவே முடியவில்லை. இருந்தாலும் மணி எல்லாம் கட்டியிருந்ததால் ஓடிவிட்டார்கள். அந்த ஒலிபெறுக்கி எல்லாம் அங்கு அதிக விலை வருமா?

சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள் குடி ஏறியவர்களின் நிலையும் அப்படித்தான்.

லண்டன் நம்ம ஊரு மாதிரிதானாமே சார்.

வழி கேட்டால் பதில் சொல்வதா? நோ.........நோ

பஸ்ஸை சே பர்ஸை பிடித்துக் கொண்டு பதில் சொல்வதைவிட நோ பெட்டர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழி கேட்டால் பதில் சொல்வதா? நோ.........நோ

ஆங்கில வார்த்தையை பாவிப்பது எந்தவிதத்தில் நியாயம் ?

Link to comment
Share on other sites

வீட்டுக்கை வந்த திருடனை பிடிச்சு பொலிசிலை குடுத்தால், பக்கத்திலை கிடந்த தும்புத்தடியாலை எடுத்து கள்ளனுக்கு அடிச்சு போட்டன் எண்டு எனக்கு பொலீசிலை 3 வருட எச்சரிக்கை வழங்கினதோட கைவிடல் அடையாளமும், DNA யும் எடுத்து வச்சு இருக்கிறாங்கள்.

பிடிபட்ட கள்ளன் குடிவெறியிலை எனது வீடு எண்டு வேற வீட்டை திறப்பை துலைச்சதாலை பின்வேலியால பாஞ்சு வீடு மாறி போய் விட்டன் எண்று கதை சொல்லி தப்பீட்டான்.

எல்லாம் காலம்.

Link to comment
Share on other sites

லண்டன் எல்லாம் ஒரு இடமே..! எப்பிடித்தான் அங்கையெல்லாம் குப்பை கொட்டுறீங்களோ தெரியாது..! :D

Link to comment
Share on other sites

லண்டன் எல்லாம் ஒரு இடமே..! எப்பிடித்தான் அங்கையெல்லாம் குப்பை கொட்டுறீங்களோ தெரியாது..! :D

வழமைபோல குப்பை வாளியிலையும் கறுப்பு பையிலையும்தான் . அதை லொறியிலை வந்து எடுத்து கொண்டு வேற போறவங்கள்.

Link to comment
Share on other sites

அரைகுறையா அடிக்கக் கூடாது.. ஒழுங்கா குடுத்தா ஒரு பிரச்சனையும் வராது.

Link to comment
Share on other sites

வழமைபோல குப்பை வாளியிலையும் கறுப்பு பையிலையும்தான் . அதை லொறியிலை வந்து எடுத்து கொண்டு வேற போறவங்கள்.

லண்டன்ல எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் வீட்டில ஏணி வச்சு ஒருத்தன் பின்பக்கமா ஏறியிருக்கிறான். இவர் சத்தம் போட அவன் கூலா இறங்கி ஏணியையும் எடுத்துக்கொண்டு போனானாம்.. :lol:

இன்னொருத்தர் வீட்டில் அவையள் வெளிய போயிருக்கினம். கள்ளன் உள்ள வந்திட்டான். இவையளும் எதையோ எடுக்க திரும்பி வந்திருக்கினம். அவன் கதவுக்குப் பின்னால ஒளிச்சிருந்திட்ட எழும்பி ஓட்டிட்டானாம். :D

இப்பிடி லண்டனில எண்டர்டெயின்மெண்டுக்கு குறைவே இல்லை போலை..! :D

அரைகுறையா அடிக்கக் கூடாது.. ஒழுங்கா குடுத்தா ஒரு பிரச்சனையும் வராது.

நீங்கள் பொய்கையை ஒரேயடியா உள்ள அனுப்பாமல் விடமாட்டியள் போலை..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கை வந்த திருடனை பிடிச்சு பொலிசிலை குடுத்தால், பக்கத்திலை கிடந்த தும்புத்தடியாலை எடுத்து கள்ளனுக்கு அடிச்சு போட்டன் எண்டு எனக்கு பொலீசிலை 3 வருட எச்சரிக்கை வழங்கினதோட கைவிடல் அடையாளமும், DNA யும் எடுத்து வச்சு இருக்கிறாங்கள்.

பிடிபட்ட கள்ளன் குடிவெறியிலை எனது வீடு எண்டு வேற வீட்டை திறப்பை துலைச்சதாலை பின்வேலியால பாஞ்சு வீடு மாறி போய் விட்டன் எண்று கதை சொல்லி தப்பீட்டான்.

எல்லாம் காலம்.

இதையேன் சொல்லுறீங்க.. ஒரு வெள்ளை சைக்கிளில வேகமா ஓடி வந்து ஒருவருக்கு முகத்தில அடிச்சிட்டான். அவருக்கு மூக்கால இரத்தம் ஓடுது. பக்கத்தில போன பொலிஸை மறிச்சு விசயத்தைச் சொல்ல.. அவங்கள் என்ர விபரத்தை எடுத்திட்டு நிற்கிறாங்கள்.. அடிச்சிட்டுப் போனவனைப் பிடிப்பம் என்றில்ல..! என்ர விபரத்தையும் அடிவாங்கினவரின்ர விபரத்தையும் எடுத்திட்டு.. "துரித முதலுதவிப் படை - பராமெடிக்ஸ்" வர அவை விட்டிட்டுப் போயிட்டினம்.

இனத்துவத் துவேசத் தாக்குதல் என்று இது உண்மையில் ஒரு முக்கிய விடயம். ஆனால்.....????! இதுவே ஒரு வெள்ளைக்கு நடந்திருந்தால் பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில் போடுவார்கள்..! :icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

கொல்லப்பட்ட மாணவரைப் பற்றி தொலைக்காட்சிச் செய்தியில், அவரது உடலில் 240 தடவை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.

Link to comment
Share on other sites

ஆங்கில வார்த்தையை பாவிப்பது எந்தவிதத்தில் நியாயம் ?

லண்டனில் தமிழில் சொன்னால் புரியும் போது நோ சொல்லாமல் விடுறேன். தமிழ்நாட்டிலேயே இல்லை என்றா புரியுதில்லை.நோண்ணு சொன்னாத்தான் பரியுது. வெளிநாட்டில இருந்து வரும் ஆட்கள் கூட ஆங்கிலத்தில்தான் பேசுறாங்க சார். தமிழனாக வாழ்வோம். தமிழ் வெறியனா வேணாம்யா. :icon_mrgreen:

வீட்டுக்கை வந்த திருடனை பிடிச்சு பொலிசிலை குடுத்தால், பக்கத்திலை கிடந்த தும்புத்தடியாலை எடுத்து கள்ளனுக்கு அடிச்சு போட்டன் எண்டு எனக்கு பொலீசிலை 3 வருட எச்சரிக்கை வழங்கினதோட கைவிடல் அடையாளமும், DNA யும் எடுத்து வச்சு இருக்கிறாங்கள்.

பிடிபட்ட கள்ளன் குடிவெறியிலை எனது வீடு எண்டு வேற வீட்டை திறப்பை துலைச்சதாலை பின்வேலியால பாஞ்சு வீடு மாறி போய் விட்டன் எண்று கதை சொல்லி தப்பீட்டான்.

எல்லாம் காலம்.

இங்கே கதைக்கிறீங்க. அதுமாதிரி அங்க கதைக்காம என்ன வெள்ளியா பார்த்தீங்க.அடிச்சு பேச வேண்டியதுதானே ஐயா. நல:ல காலம் உங்களை உள்ள தள்ளாம விட்டாங்க.

Link to comment
Share on other sites

இதையேன் சொல்லுறீங்க.. ஒரு வெள்ளை சைக்கிளில வேகமா ஓடி வந்து ஒருவருக்கு முகத்தில அடிச்சிட்டான். அவருக்கு மூக்கால இரத்தம் ஓடுது. பக்கத்தில போன பொலிஸை மறிச்சு விசயத்தைச் சொல்ல.. அவங்கள் என்ர விபரத்தை எடுத்திட்டு நிற்கிறாங்கள்.. அடிச்சிட்டுப் போனவனைப் பிடிப்பம் என்றில்ல..! என்ர விபரத்தையும் அடிவாங்கினவரின்ர விபரத்தையும் எடுத்திட்டு.. "துரித முதலுதவிப் படை - பராமெடிக்ஸ்" வர அவை விட்டிட்டுப் போயிட்டினம்.

இனத்துவத் துவேசத் தாக்குதல் என்று இது உண்மையில் ஒரு முக்கிய விடயம். ஆனால்.....????! இதுவே ஒரு வெள்ளைக்கு நடந்திருந்தால் பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில் போடுவார்கள்..! :icon_mrgreen::icon_idea:

இங்க எழுதுற மாதிரி ஆங்கில பத்தரிகையில நீங்களும் எழுதவேண்டியதுதானே? அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டுட்டீங்ளோ என்று ஆதங்கமா இருக்கு. நீங்க இருக்கிறது மோசமான நாடுதான். அதுசரி ஆளப்புடிச்சாங்களா?

Link to comment
Share on other sites

இங்கே கதைக்கிறீங்க. அதுமாதிரி அங்க கதைக்காம என்ன வெள்ளியா பார்த்தீங்க.அடிச்சு பேச வேண்டியதுதானே ஐயா. நல்ல காலம் உங்களை உள்ள தள்ளாம விட்டாங்க.

என்ன விளையாடுறீயளா ? ஒருவரை தடி போண்ற ஆயுதத்தாலை தாக்குவது கிரிமினல் குற்றம், அதுவே அவன் வீடு மாறி உங்களின் வீட்டுக்குள் வருவது சிவில் குற்றமாம். ( 8 மணிநேரம் வச்சு உதைத்தான் விளங்கப்படுத்தினார்கள்)

திருடன் ஒரு கத்தியை கொண்டுவந்து அதைப்பறித்து அவனை நீங்கள் குத்தி இருந்தாலும் அது குற்றம் இல்லை. அது தற்காப்பு, ஆனால் உங்கள் வீட்டில் இருந்து சிறு குச்சியை எடுத்து அவனை அடித்தாலும் அது குற்றம். ஏனெனில் அது தாக்குதலாம்.

Link to comment
Share on other sites

என்ன விளையாடுறீயளா ? ஒருவரை தடி போண்ற ஆயுதத்தாலை தாக்குவது கிரிமினல் குற்றம், அதுவே அவன் வீடு மாறி உங்களின் வீட்டுக்குள் வருவது சிவில் குற்றமாம். ( 8 மணிநேரம் வச்சு உதைத்தான் விளங்கப்படுத்தினார்கள்)

திருடன் ஒரு கத்தியை கொண்டுவந்து அதைப்பறித்து அவனை நீங்கள் குத்தி இருந்தாலும் அது குற்றம் இல்லை. அது தற்காப்பு, ஆனால் உங்கள் வீட்டில் இருந்து சிறு குச்சியை எடுத்து அவனை அடித்தாலும் அது குற்றம். ஏனெனில் அது தாக்குதலாம்.

கராத்தே ஏதாவது தெரிந்திருந்தால் எதை வச்சு வழக்கு போடுறது. இருக்கு ஆனா இல்ல. இல்ல ஆனா இருக்கு என்று மாறி மாறி குழப்ப வேண்டியதுதானே. :rolleyes: அட பாவிமனுசா, சட்டப்புத்தகத்தை கையில வச்சிருந்தா அடி வாங்கி சாகவேண்டியதுதான். :lol: . இல்ல அதாலயாவது அடிக்க வேண்டிடியதுதானே? :icon_idea: ஊரிலயிருந்து ஓடிவந்தவங்க வெளிநாட்டிலயும் ஓடித்தரியிறாங்க எனும் போது மனசு வலிக்குதய்யா :icon_idea::icon_mrgreen: சே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மீண்டும் ஒரு கத்திக் குத்துக் கொலை.

தெற்கு லண்டனில் 16 வயது பள்ளிச் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளான். இவர் இவ்வாண்டில் கொல்லப்படும் 18வது பருவ வயதுப் பையனாவார்.

ஞாயிறு நடந்த பிரான்ஸ் மாணவர்களின் கொலைக்குப் பின்னர் திங்கள் செவ்வாய் கிழமைகளிலும் வேறு இருவர் தென் கிழக்கு லண்டனில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.

தகவல் ஆதாரம்: http://news.bbc.co.uk/1/hi/england/london/7489039.stm

Link to comment
Share on other sites

இலண்டனில் பொலிஸாரின் நிலையும் கவலைக்கிடம் தான். எனது நண்பரொருவருடன் வெள்ளைகள் நடாத்தும் உணவு விடுதியொன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு சுமார் 12, 13 வயது மதிக்கத்தக்க 7, 8 பேர் கொண்ட குழுவொன்று வந்து பிரைச்சினை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் பியரும் சிகரெட்டும் இருந்தன. உணவுவிடுதி உரிமையாளர் பொலிசாரை அழைத்தார். பின் பொலிசார் வந்தனர். பொலிசார் அந்தச் சிறுவர்களை விசாரிக்க முற்படும் போது சிறுவர்கள் சிகரெட் புகையை பொலிசாரின் முகத்திலேயே விட்டார்கள். பொலிசார் அடையாள அட்டைகளை கேட்டபோதும், அவர்கள் அவை தம்மிடம் இல்லையென்றார்கள்.

நானும் பொலிசார் எல்லோரையும் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப் போகின்றார்கள் என நினைத்தேன். ஆனால் பொலிசார் கெஞ்சிமன்றாடி அவர்களை உணவுவிடுதியை விட்டு வெளியேறச் செய்தனர். பிறகு எப்படித் தவறு செய்வோர் திருந்துவார்கள். இதுபற்றி நண்பரிடம் கேட்டபோது அவர் சொன்னார் இங்கு பொலிசாருக்கு எதையும் கையாள அதிகாரமில்லை. பிறகு எப்படி அவர்கள் நடவடிக்கை எடுப்பது??

:icon_mrgreen: இதுவே சுவிசாக இருந்திருந்தால.............................; :icon_idea::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் பொலிஸாரின் நிலையும் கவலைக்கிடம் தான். எனது நண்பரொருவருடன் வெள்ளைகள் நடாத்தும் உணவு விடுதியொன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு சுமார் 12, 13 வயது மதிக்கத்தக்க 7, 8 பேர் கொண்ட குழுவொன்று வந்து பிரைச்சினை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் பியரும் சிகரெட்டும் இருந்தன. உணவுவிடுதி உரிமையாளர் பொலிசாரை அழைத்தார். பின் பொலிசார் வந்தனர். பொலிசார் அந்தச் சிறுவர்களை விசாரிக்க முற்படும் போது சிறுவர்கள் சிகரெட் புகையை பொலிசாரின் முகத்திலேயே விட்டார்கள். பொலிசார் அடையாள அட்டைகளை கேட்டபோதும், அவர்கள் அவை தம்மிடம் இல்லையென்றார்கள்.

நானும் பொலிசார் எல்லோரையும் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப் போகின்றார்கள் என நினைத்தேன். ஆனால் பொலிசார் கெஞ்சிமன்றாடி அவர்களை உணவுவிடுதியை விட்டு வெளியேறச் செய்தனர். பிறகு எப்படித் தவறு செய்வோர் திருந்துவார்கள். இதுபற்றி நண்பரிடம் கேட்டபோது அவர் சொன்னார் இங்கு பொலிசாருக்கு எதையும் கையாள அதிகாரமில்லை. பிறகு எப்படி அவர்கள் நடவடிக்கை எடுப்பது??

:icon_mrgreen: இதுவே சுவிசாக இருந்திருந்தால.............................; :icon_idea::icon_idea:

இதே எங்கடை நாடாக இருந்தால் beat_him.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பிரான்சில் நடக்கின்ற சில சம்பவங்களை எழுதுகின்றேன்

உதாரணமாக

இங்கு இளைஞர்களுக்கும் பொலிசாருக்கும் சிறுபிரச்சினையொன்றில் தகராறு வந்து முற்றி அடிதடி ஆரம்பித்தது

போக்குவரத்து வாகனங்கள் எல்லாம் எரிக்கப்பட்டன

ஒரு வீதியால் போய்க்கொண்டிருந்த புகையிரத வண்டியை 12 பேர்கொண்ட ஒரு கும்பல் மறித்தது

46 பெரியவர்கள் வயது வந்தோர் உள்ளே இருந்தனர்

வண்டியை எரிக்கப்போகின்றோம்

எல்லோரும் இறங்குங்கள் என்றவுடன் அனைவரும் இறங்கிவிட்டனர்

வண்டி கொழுத்தப்பட்டது

தீயணை;க்கும்படை வந்தும் தீயை அணைக்க முடியவில்லை

சரி இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா???

வழிமறித்த கும்பலில் இருந்தவர்கள் அனைவரும் 8ஆம் வகுப்புப்படிக்கும் அருகிலுள்ள பாடசாலை மாணவர்கள் வயது 13-14.

வண்டியைவிட்டு வெளியேறியோர் அனைவரும் பெரியவர்கள்.....

வானொலியில் இதைப்பற்றி கதைத்துக்கொண்டிருந்த பொழுது நான் வானொலியில் வந்து சொன்னேன்

நானென்றால் வண்டியைவிட்டு இறங்கியிருக்கமாட்டேன்

இது உங்களின் தப்பு

பிரஞ்சு மக்களுக்கு தாய்நாட்டின் மீதான பற்றை விட எனக்கேன் வம்பு என்ற நிலை மேலோங்கி வருவதுதான் இதற்கு காரணம்

எங்கள் நாட்டிலென்றால் இப்படி பெரியோர் முன் எதிர்த்துக்கதைக்கவே முடியாது

அப்படி இல்லையென்றால் அப்படியே அவ்வளவு பேரையும் தூக்கிக்கொண்டுபோய் பாடசாலையில் கொடுத்துவிடுவோம்

பொதுச்சொத்தை அழிக்க அனுமதியோம் என்றேன்........

வானொலி நடத்துனரும் பல நேயர்களும் என் கருத்தை ஆதரித்து கதைத்தார்கள்....

Link to comment
Share on other sites

கு. சா!

எங்கட நாட்டை விட லண்டன் பறவாயில்லை... லண்டனில கத்தியால தானே குத்துறாங்கள்.. கெட்டித்தனமா இருந்தா ஓடித்தப்பலாம். இஞ்ச வானிலவாறங்கள்... துவக்கால இல்லோ சுடுறாங்க.... பொலிஸுல சொன்னா புடிச்ச வெளியெ இல்லோ துரத்துராங்கள்.

நான் இங்கிலாந்துக்கு பட்டப்படிப்பு படிக்கிற ஆசையில் பல்கலைக்கழத்துக்கு வந்து ஒருநாள் இரவு தனிய நடந்து வரும்போது என்னை 10ம் மேல வெள்ளையல் துரத்தினவங்கள்... நான் ஓடிப்போய் ஒரு கடையில தஞ்சம் கோர அவன் என்னை வெளியில போட்டு மூடிட்டான்... பிறகென்ன. துரத்திவந்தவங்கள் வடிவேலுக்கு சாத்தினமாதி சாத்தி இரத்தம் ஒழுக ஒழுக இருக்க போலீஸுக்காரங்கள் வந்து அவங்களைப்பிடிக்கவில்லை.. என்னை விசாரித்து கொண்டுபோய் யூனி காவலாளிகளிட்ட குடுத்து மருந்து போட்டு... இரவில தனிய போகவேண்டாமெண்டு அட்வைஸ் வேற....

நியாயத்துக்காக ஒருமுறை முன்றுபாத்து.. சரிவராமல் அடுத்த தவணையே வெளியேறிவெட்டேன்.

சொன்னாப்போல அது லண்டன் இல்லை சரே, கில்போர்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.