Jump to content

என் காதல் ................தோற்கவேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் காதல் ...............................தோற்கவேண்டும்

நினைத்து கிடைத்து விட்டால் ,கிடைத்ததற்கு மதிப்பு இல்லை

தேடியது கிடைத்து விட்டால் சற்று நேர சந்தோசம்

மனச்சிறையில் பூட்டி வைத்து கோவில் கட்டி வாழ்ந்து இருந்தேன்

கண் திறந்து பார்த்த போது கண்ட சுகம் கொஞ்சம் கொஞ்சம்

வேண்டாப் பெண்டாடி கால் படால் குட்டம் கை பட்டால் குற்றம்

நினைத்து நடந்தது கேட்டது கிடைத்தது போட்டது வந்தது

அருமை தெரியவில்லை ,நினைத்து ,கேட்டு , கிடைத்தபோது

காதல் தோற்க வேண்டும் ,வாழ்வில் விளங்கும் வலியும் ,வழியும்

குன்றில் ஏறி வைத்து இருந்தால் குத்து விளக்கும் ஒளி வீசும்

குடத்துள் விளக்காக கூனி குறுகி ,எரிகிறது எண்ணையின்றி

அருமை பெருமை தெரியவில்லை கண் கெட்ட சூரியனுக்கு

இரவில் தெரியும் ஒளியின் அருமை காலம் பதில் சொல்லும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி காதலில தோற்கவேண்டுமா? :wub: தோற்றுப்பார்த்தால்தான் தான் விளங்கும் ஏனடா இந்த நாசமாப்போன வாழ்வு என்று :) . ஒரு சந்தேகம் இந்த கவிதையில் உங்களின் மனதில் உள்ளதை சொல்லியிருக்கிறீர்களா ? பார்த்தல் அப்படித்தான் தெரியுது . அழகான கவிதை வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites

தோற்க வேணுமா??!!!!!!!!!!!!1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ,நன்றி சுப்பண்ணா ,தூயா .............

ஆமாம் .... காதல் தோற்கவேண்டும் .

நிலவை பிடிக்க ஆசை படுகிறீர்கள்

அது கையில் கிடைத்தால் அதன் அருமை சிறிது காலம் இருக்கும் .

பின் தெவிட்டி போய்விடும் ...அது போல அன்பு , காதல் , கிடைத்து அது

அலட்சியப்படுத்தும் பொது ...இதுவும் பத்தோடு பதினொன்று ....

என்று என்ன தோன்றுகிறது ...........வர வர காதல் கசக்குதடி ........

எல்லாம் வேலையிலாத .....வீண் பொழுது இருப்பதால் ....

Link to comment
Share on other sites

வலிக்காமல் வாழ்க்கை இல்லை...

ஆனால் என்னைப் பொறுத்தவரை காதல் என்பதற்கு தோல்வி...

திருமணமோ... பிரிவோ அல்ல..

காதலுக்கு தோல்வி.. நீங்கள் நேசிக்கின்றவரின் பொய்முகம் அடையாளம் காணப்படுவதுதான் காதல் தோல்வி..அப்படியொருமுகம் இருந்தால்..காதலைப்புரிந்து சூழலுக்காக பிரிந்தாலும் அது தோற்ற காதலில்லை இருவர் மனதிலும் இறுதிவரை வாழும் வெற்றிக்காதல்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலாமதி

காதல் போல புவியில்

வேதம் ஒன்றும் இல்லை

காதல் ஒன்று போதும்

வேறு கடவுள் தேவை இல்லை

என்று கவிதை பாடினேன்

எதுவரை

என் வீட்டுக் கதவைக்

காதல் தட்டும்வரை

இன்று

காதல் என்ற சொல்லே

இன்ற காலம் செய்த கோலம்

காதல் செய்தல் பாவம்

இளமைக் காலம் சிந்தும் மாயம்

என்று கவிதை பாடுகிறேன்

காரணம்

அட்வைஸ் பண்ணிய நான்

அடிபட்டுப்போனேன்

பாவம் காதலர்

என் இரண்டு முகங்களுக்குள்

நசுக்கப்பட்டு....

உங்கள் கவிதைக்குப் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ,நன்றி சுப்பண்ணா ,தூயா .............

ஆமாம் .... காதல் தோற்கவேண்டும் .

நிலவை பிடிக்க ஆசை படுகிறீர்கள்

அது கையில் கிடைத்தால் அதன் அருமை சிறிது காலம் இருக்கும் .

பின் தெவிட்டி போய்விடும் ...அது போல அன்பு , காதல் , கிடைத்து அது

அலட்சியப்படுத்தும் பொது ...இதுவும் பத்தோடு பதினொன்று ....

என்று என்ன தோன்றுகிறது ...........வர வர காதல் கசக்குதடி ........

எல்லாம் வேலையிலாத .....வீண் பொழுது இருப்பதால் ....

நிலாமதி,

நீங்கள் காதலிக்கவே இல்லையென்று தோன்றுகின்றது..வேலையில்லாத வீண் பொழுதுதான் காதலா? புதிதாக இருக்கின்றது. ....கவிதையின் பொருளோடு மனசு உடன் படமறுக்கிறது.

கண்ட எழுத்துப் பிழைகள்:

"பெண்டாடி கால் படால் குட்டம் "

பெண்டாட்டி

பட்டால்

குற்றம்

Link to comment
Share on other sites

ஆமாம் .... காதல் தோற்கவேண்டும் .

நிலவை பிடிக்க ஆசை படுகிறீர்கள்

அது கையில் கிடைத்தால் அதன் அருமை சிறிது காலம் இருக்கும் .

பின் தெவிட்டி போய்விடும் ...அது போல அன்பு , காதல் , கிடைத்து அது

அலட்சியப்படுத்தும் பொது ...இதுவும் பத்தோடு பதினொன்று ....

என்று என்ன தோன்றுகிறது ...........வர வர காதல் கசக்குதடி ........

எல்லாம் வேலையிலாத .....வீண் பொழுது இருப்பதால் ....

காதல் கைகூடினால் என்ன பிரிந்தால் என்ன

உண்மைக்காதல் கசக்காது. என்றும் நீங்கா

நினைவாக இருக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

நிலா(மதி) அக்கோய்..என்னாச்சு..?? <_< ..இப்ப நான் சொல்லுறன் கேளுங்கோ..காதல் தோற்க வேண்டும் எண்டு போட்டு இருந்தாலும்..வாழும் வரைக்கும் அந்த நினைவுகளின் வலி உங்களை வியாபித்து கொண்டு தான் இருக்கும் என்ன நான் சொல்லுறது சரியோ..(நம்மளிற்கு எண்டா அப்படி இருக்கா அது வேற கதை).. :lol:

அதை விட நீங்கள் தோற்க நினைக்கும் காதலை கூட வெற்றி அடைய முயற்சிக்க கூடாது.."காதலில" காலை வைக்க முன்னம் யோசிக்கனும் வைத்திட்டோம் எண்டா கடசி மட்டும் ஓடனும் என்ன..அது தான் காதல்.. :lol:

அட..அதுக்கா நான் அப்படியோ எண்டு கேட்கிறதில்ல அத வேற நான் சொல்லனுமா ஏன் எண்டா நான் இன்னுமே இறங்கல்ல அல்லோ.. :o

கவிதை நன்னா இருக்கு..அடுத்த முறை எழுதும் போது "என் காதல் ஜெயிக்கனும்" எண்டு எழுதனும் என்ன.. :lol:

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை -

கதிரவன் சுட்ட போது

நான் கதிரவனை வெறுத்தேன்

மறுநாள் நான் அவ் கதிரவனிற்காக

காத்திருக்கிறேன்...

ஏன் அவனோ

கறுத்த மேகங்களுகுள்..

மறுநாள் பொழுது விடிய

அவன் என் நிழலாக தொடந்தான்..

இது தானா காதல்..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.