Jump to content

மலருக்கு மட்டுமல்ல…….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலருக்கு மட்டுமல்ல…….

ஊருக்குள் புகுந்த இராணுவத்தால்

உருக்குலைந்த தெருக்கள்

ஊமையாய் அழுதன

தெருவில் தேடுவாரற்ற

ஒரு கட்டாக்காலி நாயின்

தீனமான ஊளைஒலி

நிலவுகூட முகம் மறைத்து

முக்காடிட்டக் கொண்டது

விண்மீன்கள் மட்டும்

விட்டுவிட்டு விழிமலர்த்தி

என்னை நோட்டமிட்டன

சோதிக்கவென்று கொண்டு சென்ற

ஏன் அண்ணன்

வேலிக்கு அருகில் பிணமாக

பள்ளிக்குச் செல்லவென

துள்ளிச் சென்ற என் தங்கை

வெள்ளி முளைத்த பின்னும்

வீடு திரும்பவில்லை

வேலைக்குச் சென்ற வேளையில்

என் அப்பா

ஸெல் அடியில் சிக்கி

சிதறிப் போய் விட்டார்

அடுப்பங் கரையினிலே

ஆரவாரமேதுமின்றி

அடுத்த வீட்டுப் பூனையின்

அமைதியான தூக்கம்

அங்கு அம்மா மட்டும்

அசைவதிலிருந்து இன்னும்

உயிரிருப்பதை உணருகின்றேன்

இத்தனைக்கும் மத்தியில்

நானோ நடைப் பிணமாக

நாளை நானும் சோதனைக்காக

சுற்றி வளைக்கப் படலாம்

அல்லது

ஸெல் அடியில் சிக்கி

சதைப்பிண்டமாக சிதைக்கப் படலாம்

எதுவும் நிச்சயமில்லை

எனினும் தமிழீழம் மலர்வது மட்டும்

நிச்சயிக்கப்பட்ட நிஜம்

எனவே நிஜத்தைத் தேடி

நிழல்களைத் துறந்து

புறப்பட்டு விட்டேன்

ஆனாலும் மனதுக்குள் ஓர் நெருடல்

அது என் அம்மாவின் தனிமை

நாளை நானும் மாவீரர் இல்லத்தில்

மலர்ந்திடும் பொழுதில்

என் தாயும் ஒரு வீரத்தாய்

அங்கு மலருக்கு மட்டுமல்ல

அதைச் சுமந்த செடிக்கும்

மறக்காமல் செலுத்துங்கள்

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

எங்களின் உண்மை நிலையை உணர்ச்சிபூர்வமாக வடித்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள் காவலூர் கண்மணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரசிகை உங்கள் பாராட்டிற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கண்மணி ...........

முழுக்குடும்பத்தையும் தமிழ் ஈழத்துக்கு அழைத்து சென்ற தங்களுக்கு மிக்க நன்றி .

Link to comment
Share on other sites

ம்ம்..கண்மனி அக்கா மலர் செழிக்க காரணமா இருந்த செடியை மறந்திடுவோமா என்ன.. <_< (ஆனால் காலங்களிள் சில மறந்து சென்றாலும்)..பூத்து குலுங்கும் மலரின் வாசனையில் அந்த செடியை காணலாம் என்ன.. :lol:

நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள்.. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஸெல் அடியில் சிக்கி

சதைப்பிண்டமாக சிதைக்கப் படலாம்

எதுவும் நிச்சயமில்லை

எனினும் தமிழீழம் மலர்வது மட்டும்

நிச்சயிக்கப்பட்ட நிஜம்

அழகான வரிகள் கொண்டமைந்த கவிதைகள் அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுபூர்வமான கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுபூர்வமாக பாராட்டிய நிலாமதி யமுனா வெண்ணிலா புத்தன் அனைவருக்கும் கண்மணியின் கனிவான நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.