Jump to content

சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைகிறது !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி: சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆசிய மொழிகளின் பண்பாட்டு துறைப் பேராசிரியர் ஆ.ரா. சிவக்குமாரன்.

திருச்சி தேசியக் கல்லூரியில் தத்துவப் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் அவர் பேசியது:

"உலக வரைபடத்தில் சிங்கப்பூர் ஒரு சிறு புள்ளிபோல் காட்சியளித்தாலும், உலக நாடுகள் மத்தியில் அனைத்து துறைகளிலும் உயர்ந்து பெரும் புள்ளியாகவே உள்ளது.

சிங்கப்பூரின் அபார வளர்ச்சிக்கான காரணத்தில் முக்கியமானது அரசியல் பின்னணி, மக்களின் கடின உழைப்பு, சரியான சட்டங்கள்தான்.

சிங்கப்பூரில் இயற்கை வளங்கள் கிடையாது. தண்ணீர் கூட மலேசியாவில் இருந்துதான் விலைக்கு வாங்கப்படுகிறது. ஆனால், அதே தண்ணீரை சுத்தம் செய்து மலேசியாவுக்கே திரும்பி விற்கின்றனர்.

சிங்கப்பூரில் 77 சதவிகித சீனர்களும், 14 சதவிகித மலாய்களும், 8 சதவிகித இந்தியர்களும் உள்ளனர். 8 சதவிகித இந்தியர்களில் 65 சதம் பேர் தமிழர்கள்.

தமிழையும் ஆட்சி மொழியாகக் கொண்ட சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு பல்வேறு வசதிகளை அங்குள்ள அரசு செய்து வருகிறது.

ஆனால், அங்குள்ள தமிழர்கள் தமிழ் மொழியைப் பேசினால் ஏதோ தரம் குறைந்தவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்படுவதால், ஆங்கிலத்திலேயே பேசி வருகின்றனர். குழந்தைகளும் வீட்டில் ஆங்கிலத்தில் பேசி வருவதால் எதிர்காலத்தில் தமிழ்மொழி வழக்கற்றுப் போகும் நிலை உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழை தெளிவாக பேச குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழில் பேச கூச்சப்படுவதால் வாய்மொழித் தேர்வில் அவர்கள் குறைவான மதிப்பெண்களையே பெறுகின்றனர்.

தமிழ் பண்பாடு சிங்கப்பூரில் தமிழ்நாட்டைப்போல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள செண்பகவிநாயகர் கோயிலில் ஞாயிறு பள்ளி நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு தமிழும், சைவமும் கற்பிக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்கு அடிப்படைக் காரணமே, அங்குள்ள மக்கள் சட்டத்தை மதிப்பதுதான். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது.

ஒருமுறை தவறு செய்தவர்கள், மறுமுறை தவறு செய்யும் போது தண்டனை மேலும் அதிகரிக்கப்படும். சாதாரன குடிமகன் முதல் அரசு பதவிகளில் இருப்பவர்கள் வரை யாருக்கும் பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் தண்டனை ஒன்றே.

தமிழகத்தைப் போல் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களிடையே ஜாதிப் பிரிவுகள் கிடையாது. பெரும்பாலான திருமணங்கள் கலப்பு திருமணங்களே. ஜாதியால் தனித்து இயங்கும் நிலை இல்லை.

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து வழங்கியது போல் தற்போது ஹிந்திக்கும் ஆட்சி மொழி அந்தஸ்து கேட்டு வருகின்றனர். இதனால் தமிழ் மொழிக்கான அரசின் சலுகை ஏதும் குறைந்து விடப்வதில்லை.

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழாசிரியர்கள் தற்போது கோடீஸ்வரர்களாக உள்ளனர். மொழி, கலாசாரம், பண்பாடு என அரசு எதற்கும் வேறுபாடு காட்டுவது கிடையாது' என்றார் சிவக்குமாரன்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கே. அன்பரசு, தத்துவப் பேரவை துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி தற்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள ஈழத்தமிழர்களையும் இந்தியர் என்றே கணக்கிடுகினம் போல இருக்கிறது. சிலோன் வீதியில் இருக்கிற செண்பக விநாயகர் ஆலயம் ஈழத்தமிழர்களினால் கட்டப்பட்டது. அதனால் தான் தமிழும் சைவமும் அங்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் பேராசிரியர், இந்தியத்தமிழர்களினால் தான் அங்கு தமிழும் சைவமும் வளர்க்கப்படுகிறது போலச் சொல்கிறார். புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்களினால் நடாத்தப்படும் பல நிகழ்வுகளை இந்தியத்தமிழர்கள் நடாத்துகிறார் என்று அண்மைக்காலங்களில் தினமலர் பத்திரிகையின் உலகத்தமிழர் பகுதியில் செய்திகள் வருவது தெரிந்ததே.

எனினும் சிங்கப்பூரில் உள்ள சில ஈழத்தமிழர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்காமல் சீனா மொழியினைக் கற்பிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

ஓ..அப்படியா அது என்னவெண்டா எங்கன்ட "பொன்னி தாத்தா" சிங்கபூரை விட்டு வெளியேறியமை தான் முக்கிய காரணியாக இருக்கும் எண்டு நான் நினைக்கிறன்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அந்தக்கோயில் இன்னும் எங்கள் ஈழத்துக்கோயிலை நினைவு படுத்துகிறது... அங்குள்ள பூசாரிகளும் ஈழத்து பூசாரிகளே... இது ஒரு 3 வருடத்துக்கு முந்தின கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் உள்ள சில ஈழத்தமிழர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்காமல் சீனா மொழியினைக் கற்பிக்கிறார்கள்.

இப்போது பல நாடுகளில் சீன மொழியை விரும்பி கற்கின்றார்கள் . எதிர்காலத்திற்கு பிரயோசனமாக இருக்குமென்று கூறுகின்றார்கள்

சில வேளைகளில் அடுத்த வல்லரசு சீனாவாக இருக்குமோ?

19ம் நூற்றாண்டு பிரித்தானியா

20ம் நூற்றாண்டு அமெரிக்கா

21ம் நூற்றாண்டு சீனா??????

Link to comment
Share on other sites

சிங்கப்பூர் இல் ஈழதமிழர் மிகக்குறைவு ஆனாலும் எமகென தனி இடமுண்டு.

Link to comment
Share on other sites

இப்போது பல நாடுகளில் சீன மொழியை விரும்பி கற்கின்றார்கள் . எதிர்காலத்திற்கு பிரயோசனமாக இருக்குமென்று கூறுகின்றார்கள்

சில வேளைகளில் அடுத்த வல்லரசு சீனாவாக இருக்குமோ?

19ம் நூற்றாண்டு பிரித்தானியா

20ம் நூற்றாண்டு அமெரிக்கா

21ம் நூற்றாண்டு சீனா??????

22ம் நூற்றாண்டு தமிழ்... ளொள்ளு.. :lol::rolleyes:

Link to comment
Share on other sites

லா லா என எல்லாமே லா ஆகிவிட்டது போல ;)

சிங்கப்பூருக்கு பல தடவைகள் சென்றுள்ளேன்... விடுமுறைக்கு போகலாம்..இருப்பதற்கு..ம்ஹிம் எனக்கு பிடிக்கவில்லை.. நெருக்கமான வீடுகள் எனக்கு பிடிக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவிலேயே துப்பரவான நாடு என்று சிங்கப்பூரைத்தானே குறிப்பிடுகின்றார்கள் தூயா .

Link to comment
Share on other sites

ஆசியாவிலேயே துப்பரவான நாடு என்று சிங்கப்பூரைத்தானே குறிப்பிடுகின்றார்கள் தூயா .

அது உண்மை தான்.

வீதியில் எப்போதும் துப்பரவாக்கும் பணி நடந்து கொண்டேயிருக்கும்.

ஆனால் என் கண்ணிற்கு சிங்கப்பூர் செயற்கைதனமாக படுகின்றது.

Link to comment
Share on other sites

இங்கே தமிழ் மெல்ல செத்துக்கொண்டுதான் இருக்கிறது. தமிழர்கள் பலரும் தம்மை இந்தியர் என்றுதான் இனத்தால் கருதப்படுவதும், தமிழ் கற்பதனால் அப்படி என்ன பெரிசா நடக்கப்போகின்றது (பொருளாதாரரீதியாக) என்ற நினைப்பும் முக்கிய காரணங்கள். ஆனாலும் இங்கே தாய்மொழிக்கல்வி அவசியம், அப்படி இருந்தும் பலர் தமிழை வெறுத்து ஒதுக்குவது வேதனையானது. சீனர்கள் ஆர்வமாக சீன மொழியும், மாலாய் காரர் மலாய் மொழியும் ஆர்வமாக கற்று வளர்த்து வருகையில் தமிழர்களின் செயல்களால் சில ஆண்டுகளில் தமிழை இந்தி மொழி பின் தள்ளினாலும் ஆச்சரியமில்லை.

நம்ம ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். சிலோனிஸ்ட் என்று அழைக்கப்படும் சிங்கையில் ஆரம்ப காலத்தில் குடியேறியவர்களாக குறிப்பிடப்படுகின்றனர். பிரபல தலைவர்களான மறைந்த ராஜரட்ணம்(சிங்கையின் பிதாமகர்களில் ஒருவர்), தற்போதைய நிதி அமைச்சர் தர்மன் சண்முகரட்ணம் என்று பலர் நம்மவர்களே. தற்போது பல இலங்கை பட்டதாரி மாணவர்கள் இங்கே வேலை செய்கிறார்கள், பல்கலைகழகங்களில் படித்தும் கொண்டிருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

தவிர அங்கிருக்கும் பல தமிழர்கள் தமிழ்+மலே+ஆங்கிலம் கலந்து ஒரே நேரத்தில் கதைப்பார்கள்...ரொம்ப சிக்கலா இருக்கும்..

Link to comment
Share on other sites

தவிர அங்கிருக்கும் பல தமிழர்கள் தமிழ்+மலே+ஆங்கிலம் கலந்து ஒரே நேரத்தில் கதைப்பார்கள்...ரொம்ப சிக்கலா இருக்கும்..

ஆமாவா? இன்னிக்கு காலேல காடில ஏறி ஜாகா வேலைக்குப் போனே. என் கூட்டாளியும் கூட வந்தாப்ல. அவுங்க சிகரட் தண்ணி அதிகமா பக்கப் பண்றாப்ல.

இப்பிடியா? <_<

Link to comment
Share on other sites

ஆமாவா? இன்னிக்கு காலேல காடில ஏறி ஜாகா வேலைக்குப் போனே. என் கூட்டாளியும் கூட வந்தாப்ல. அவுங்க சிகரட் தண்ணி அதிகமா பக்கப் பண்றாப்ல.

என்ன டங்குவார்... ஒன்னுமே புரியலனு!

ஏதோ புலம்புராபில?

Link to comment
Share on other sites

ஆமாவா? இன்னிக்கு காலேல காடில ஏறி ஜாகா வேலைக்குப் போனே. என் கூட்டாளியும் கூட வந்தாப்ல. அவுங்க சிகரட் தண்ணி அதிகமா பக்கப் பண்றாப்ல.

இப்பிடியா? <_<

அதே அதே :o:lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாவா? இன்னிக்கு காலேல காடில ஏறி ஜாகா வேலைக்குப் போனே. என் கூட்டாளியும் கூட வந்தாப்ல. அவுங்க சிகரட் தண்ணி அதிகமா பக்கப் பண்றாப்ல.

இப்பிடியா? :o

இதைக்கொஞ்சம் எங்களுக்கும் விளங்கிறமாதிரி சொன்னால் நாங்களும் சேர்ந்து சிரிப்பமெல்லே <_<

Link to comment
Share on other sites

என்ன டங்குவார்... ஒன்னுமே புரியலனு!

ஏதோ புலம்புராபில?

புலம்பல் தூயாவுக்கு விளங்கீட்டுது கண்டியளோ? <_<

Link to comment
Share on other sites

இதைக்கொஞ்சம் எங்களுக்கும் விளங்கிறமாதிரி சொன்னால் நாங்களும் சேர்ந்து சிரிப்பமெல்லே <_<

குமாரசாமி அண்ணை.. அதை விளங்கிற மாதிரி சொன்னால் அதில சிரிக்கிறதுக்கு ஒண்டுமில்லை. :o சரி உங்களுக்காக,

அரும்பொருள் விளக்கம்:

காடி: மகிழுந்து

ஜாகா: காவலர் வேலை (செக்யூரிட்டி)

பக்கப் பண்ணுதல்: உபயோகித்தல் :lol:

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணை.. அதை விளங்கிற மாதிரி சொன்னால் அதில சிரிக்கிறதுக்கு ஒண்டுமில்லை. <_< சரி உங்களுக்காக,

அரும்பொருள் விளக்கம்:

காடி: மகிழுந்து

ஜாகா: காவலர் வேலை (செக்யூரிட்டி)

பக்கப் பண்ணுதல்: உபயோகித்தல் :o

டங்குவார் இடைக்கிடை லா..லா..வையும் போடவேணும். அப்பதான் நல்லா இருக்கும். நானும் கொஞ்சக்காலம் அங்கை லோ..லோ...எண்டு அலைஞ்சனான்லா.... :lol::lol:

Link to comment
Share on other sites

இப்போது பல நாடுகளில் சீன மொழியை விரும்பி கற்கின்றார்கள் . எதிர்காலத்திற்கு பிரயோசனமாக இருக்குமென்று கூறுகின்றார்கள்

சில வேளைகளில் அடுத்த வல்லரசு சீனாவாக இருக்குமோ?

19ம் நூற்றாண்டு பிரித்தானியா

20ம் நூற்றாண்டு அமெரிக்கா

21ம் நூற்றாண்டு சீனா??????

ஓமென்ன கு.சா தாத்தா.. <_<

22 நூற்றாண்டில வந்து - சோமாலியா... :o

யார் கண்டது என்ன நடக்குமோ அது தான் எண்ட தீர்கதரிசனமான பார்வையால நான் கண்டு பிடித்தது பாருங்கோ எப்படி தாத்தா... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கப்பூரில் மட்டும் அல்ல, தமிழர்களின் பூர்வீக தேசம் என்றழைக்கப்படும் தமிழ்நாட்டில் கூட சரியான தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவது வருத்தத்திற்குரியது. அங்கே வாழும் ஆறு கோடி தமிழர்களில் எத்தனை பேருக்கு சரியான தமிழ் பேச, எழுதத் தெரியும் (அதாவது வேற்றுமொழி கலக்காத தமிழ்)? ஏன் புலம்பெயர் நாடுகளை எடுத்துக்கொள்ளுங்களேன், இங்கையும் இதே நிலமைதான். தமிழில் சில வார்த்தைகளை தவிர மற்றும்படி அந்தந்த நாட்டுமொழிகளிலேயே உரையாடுகிறார்கள் (விரும்புகிறார்கள்?!). இந்த நிலமையை மாற்றியமைக்க ஒரே ஒரு வழிதான், அது தமிழீழம் மலர்வதிலேயே உள்ளது.

Link to comment
Share on other sites

அனைத்துக்கும் தேவை உடனடி ஒரு தேசம் எங்களுக்காய்... சரியா சொன்னிங்க டைகர்

Link to comment
Share on other sites

சிங்கப்பூரில் மட்டும் அல்ல, தமிழர்களின் பூர்வீக தேசம் என்றழைக்கப்படும் தமிழ்நாட்டில் கூட சரியான தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவது வருத்தத்திற்குரியது. அங்கே வாழும் ஆறு கோடி தமிழர்களில் எத்தனை பேருக்கு சரியான தமிழ் பேச, எழுதத் தெரியும் (அதாவது வேற்றுமொழி கலக்காத தமிழ்)? ஏன் புலம்பெயர் நாடுகளை எடுத்துக்கொள்ளுங்களேன், இங்கையும் இதே நிலமைதான். தமிழில் சில வார்த்தைகளை தவிர மற்றும்படி அந்தந்த நாட்டுமொழிகளிலேயே உரையாடுகிறார்கள் (விரும்புகிறார்கள்?!). இந்த நிலமையை மாற்றியமைக்க ஒரே ஒரு வழிதான், அது தமிழீழம் மலர்வதிலேயே உள்ளது.

ம்ம்.."டைகர் பிளேட்" அண்ணா நீங்கள் கூறுவது ஏற்று கொள்ள கூடிய விடயம் தான் :lol: ..அதாவது "தமீழீழம்" மலர்ந்தவுடன் எங்களுக்கு அந்த அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.. :o

அவ்வாறான நேரத்தில் புலத்தில் வேற்று மொழிகளிள் பேசி திரிகிற இன்றைய எங்கன்ட இளையோர் சமுதாயம்..(நான் இதில் எல்லாரையும் குறிபிடவில்லை).. :lol: உடனடியாக மாறுவார்களோ எங்கள் மொழிக்கு இல்லை எண்டு தான் நினைக்கிறேன்..இது தொடர பார்க்கும் சந்தர்ப்பதில் அதிவும் ஒரு பாதகாமன முடிவை நோக்கி அல்லவா நகரும் இதை பத்தி உங்களின் கருத்து என்ன..?? <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நான் யம்மு எல்லாம் தமிழில் தான் பேசுகின்றோம்... இல்லையா யம்ஸ்?

Link to comment
Share on other sites

நான் யம்மு எல்லாம் தமிழில் தான் பேசுகின்றோம்... இல்லையா யம்ஸ்?

ஓம்..தங்கச்சி ஆனா நீங்கள் சிட்னியை மையமாக எடுத்து கொண்டால் எத்தனை விகிதமானவர்கள் தமிழில் பேசுகிறார்கள் குறிப்பாக தங்களின் வயதை ஒத்த தமிழ் நண்பர்களுடனே..?? <_<

அப்படி அவதானித்தால் ஒரு சிலரே அந்த பிரிவினுள் அடக்கபடுகிறார்கள் மிகுதியானவர்களின் நிலை..?? :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.