Jump to content

கனடாவுக்க இன்னொரு பேய் வந்துட்டுது


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாகச்சொன்னீர்கள்.. பக்கத்துவீட்டு அன்ரி இரண்டு வருசத்துக்கு முந்தி போட்டு கழட்டி எறிஞ்ச நாற்றம் பிடிச்ச குப்பைகளை போடுகிற அம்மாவுக்கு புத்தி சொல்கிறோம்.. சீத்தை துணியெண்டாலும் உங்கடை துணியிலை போடுங்கோ. இல்லையெண்டால் பக்கத்து வீட்டு அன்ரி பளபளப்பாய் தெரியத்தான் செய்வா.. என்ன செய்யலாம். ஐயா..

உங்கள் விவாதங்கள் சரி என்று ஏற்றுக்கெள்ள முடியாது. ஈழத்தமிழர்களது வராலாற்றில் ஊடகம் என்று தனித்தன்மையோடு இன்றும் இல்லை. ஏதோ ஒன்றிரண்டு தொலைக்காட்சிகள், வானொலிகள் ஊடகம் என்ற வரையறைக்குள் செயற்ப்பட முயற்ச்சிக்கின்றன. அந்த ஒன்றிரண்டுக்குள் ரி.வி.ஐ., சீ.எம். ஆர் நிறுவனங்களும் ஒன்று.

நிகழ்ச்சிகள் பற்றிய விமர்சனங்களை முன் வகைக்கும் நீங்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஊடகத்தின் அத்திவாரம் விளம்பரம் அந்த விளம்பரமின்றி யாராலும் ஊடகத்தை கொண்டு நடாத்த முடீயாது. அந்த விளம்பரங்கள் கிடைக்க வேண்டுமெனில் மக்களின் ஆதரவு குறிப்பிட்ட ஊடகத்துக்கு தேவை அவ்வாறு இல்லை எனில் விளம்பரங்களை பெறுவது கடினம்.

எனவே மக்களை கவரக்கூடிய நிகழ்ச்சிகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஊடகங்களுக்கு ஏற்ப்படுகின்றது. படத்தெளிவின்மை தொடர்பாக கருத்து கூற முடியாத போதும் வளர்ச்சிப்பாதையில் ஈழத்தமிழர்களின் தொலை்ககட்சிகளும் படத்தெளிவுடன் ஒளிபரப்பாகும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

மற்றும் படி இந்தியக்குப்பபைகள், கழிவு, கத்தரிக்காய் என்று சொல்லும் நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு அமைவாக சொல்லுங்கள்....

நீங்கள் இந்திய நடாகங்களை பார்ப்பதில்லையா?

இந்தியத்திரைப்படங்களை பார்ப்பதில்லையா?

உங்களின் எத்தனை பேர் எமது படைப்புகளையாவது பணம் கொடுத்து வாங்கலாம் என்று நினைப்பவர்கள் இருக்கின்றீர்கள்?

எமக்குள் எத்தனை பேர் எமது படைப்புக்களை கூட இணையத்தில் ஏற்றி வெளியீட்டாளர்களுக்கு நட்டத்தை விளைவிக்கிறீர்கள்?

குறைந்த பட்சம் தயாக வெளியீடுகளையாவது நீங்கள் விலை கொடுத்து வாங்க தயாரா?

'

பதில் இல்லை என்கின்ற போது நீங்கள் ரி.வி.ஐ பற்றியோ, இதர தமிழ்த் தொலைக்காட்சி பற்றியோ விமர்சிக்கும் உரிமையை இழக்கின்றீர்கள்...!

முதலில் எங்கள் படைப்புகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உங்கள் மத்தியில் உருவாக்கி விட்டு எங்களது ஊடகங்கள் பற்றி உங்கள் ஆக்க பூர்வமான விமர்சனங்களை வையுங்கள். ( எங்கள் என்பது எமது ஈழத்தவர்களின்) ஒரு ஊடகத்தை நடாத்தும் எத்தனை சவால்களை எதிர் கொள்ள வேண்டும் என்பது சும்மா ஒரு கணிணிப்பெட்டியை வைத்து ரைப் செய்யும் உங்களுக்கு புரியாது. அவை அவை அவர்களுக்கு மட்டுமே புரியும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் எங்கள் படைப்புகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உங்கள் மத்தியில் உருவாக்கி விட்டு எங்களது ஊடகங்கள் பற்றி உங்கள் ஆக்க பூர்வமான விமர்சனங்களை வையுங்கள். ( எங்கள் என்பது எமது ஈழத்தவர்களின்) ஒரு ஊடகத்தை நடாத்தும் எத்தனை சவால்களை எதிர் கொள்ள வேண்டும் என்பது சும்மா ஒரு கணிணிப்பெட்டியை வைத்து ரைப் செய்யும் உங்களுக்கு புரியாது. அவை அவை அவர்களுக்கு மட்டுமே புரியும்...!

ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயம் தான்.

ஆனால் ஆடு தன் இறைச்சியை எங்கு வேண்டலாம் என்று சொல்லும் விளம்பரங்களை ஏற்றுக் கொள்ளலாமா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆல விருட்சங்கள் நிறைந்த சூழலில் போட்டி போடுவது என்றால் நாமும் ஆல விருட்ச அவதாரம் எடுக்க வேண்டும். நாணல் புற்களாக இருந்து கொண்டு கையில் தேசியம் எனும் ஆயுத்ததை மட்டும் வைத்துக்கொண்டு நெடுநாட்களுக்கு வித்தை காட்ட முடியாது.

மீடியாக்களை மக்கள் விரும்புவது அவர்கள் இரசனை தேர்வின் அடிப்படையில். யாரும் எதனையும் திணிக்க முடியாது. தாம் வாங்க நினைப்பது இன்ரர்நெட்டில் இலவசமாக கிடைக்காவிட்டால் பணம் கொடுத்து வாங்குவார்கள். பணம் கொடுத்து வாங்குவதற்கு தகுதியான பொருட்கள் தான் விலைப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆல விருட்சங்கள் நிறைந்த சூழலில் போட்டி போடுவது என்றால் நாமும் ஆல விருட்ச அவதாரம் எடுக்க வேண்டும். நாணல் புற்களாக இருந்து கொண்டு கையில் தேசியம் எனும் ஆயுத்ததை மட்டும் வைத்துக்கொண்டு நெடுநாட்களுக்கு வித்தை காட்ட முடியாது.

மீடியாக்களை மக்கள் விரும்புவது அவர்கள் இரசனை தேர்வின் அடிப்படையில். யாரும் எதனையும் திணிக்க முடியாது. தாம் வாங்க நினைப்பது இன்ரர்நெட்டில் இலவசமாக கிடைக்காவிட்டால் பணம் கொடுத்து வாங்குவார்கள். பணம் கொடுத்து வாங்குவதற்கு தகுதியான பொருட்கள் தான் விலைப்படும்

இது தான் உங்களின கருத்தின் இரண்டு நிலை முன்னர் இந்திய நிகழ்ச்சிகள், ஒளித்தரம் என்றீர்கள் ஆனால் பின்னர் தேசியத்தை மட்டும் வைத்துக்கொண்டு செயற்ப்பட முடியாது என்கின்றீர்கள் . மக்கள் எதை விரும்புகின்றனர், எதை விரும்ப வில்லை என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒட்ட மொத்தமாக தென்னிந்திய மொத் தொடர்களின் அளவுக்கதிகமாள இரசனை வைத்திருக்கின்றனர். என்பது தமிழ் வணிப நிறுவனங்களில் நாடகப்பிரதிகளுக்காய் வரிசையில் நிற்ப்போரைப்ப பார்த்தால் புரிகின்றது.

பிள்ளை தமிழ் படிக்கிறதையே கேவலமாக நினைக்கிற எங்களில் ஒரு சிலருக்குள் தமிழ்த் தொலைக்காட்சிகள் எண்பது வீணே!

அது மட்டுமன்றி, இணையத்தில் தகுதியற்ற பொருட்கள் மட்டுமல்ல தரமான படைப்புக்களும் களாவாய் தரவிறக்கம் செய்யப்படுகின்றது. திணிப்பு என்பது வேறு ஏற்றுக்கொள்ளல் என்பது வேறு முன்பொருகாலத்தில் திணிப்பாக இருந்த தென்னிந்தியா சினிமா இன்று முழு சமூகத்தையும் ஆட்டிப்படைக்கவில்லையா? அது போல எம்மவர் படைப்புக்கள் வெளி வரவேண்டும் அவை உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். தரம் தகுதி எல்லாவற்றுக்கும் மேலாக எம்மை நாமே விமர்சிப்பதற்க்கு குறிப்பிட்ட படைப்புக்கான அங்கீகாரத்தை வழங்கி விமசனம் செய்ய எத்தனை பேர் தயாராக இருக்கின்றீர்கள்?

இறுதியாக,

ஆலமரம் பெரிது, அதன் விருட்சங்கள் அதிகம் அதைப்போல் பனை மரமும் விருட்சங்கள் விட வேண்டும் என்று சொல்ல வருவது எதுக்கு எப்பானது என்ற உவமானம் சொல்ல முடியவில்லை. நாம் இன்று ஒரு பனை மரம் விழுதுகள் விட்டு வேரூன்ற காலம் இன்னும் அதிகம் தேவை. அடித்தளம் இல்லாத ஒரு சமாத்தரத்தில் நாங்கள் பயணிக்கின்றோம். மாறாக, அரசாங்கங்களில் துணையோடும், பல பாரிய நிறுவனங்களின் அனுசரனையுடனும் நின்று போட்டி போடவில்லை. இன்னும் சொல்ல போனால், போட்டிகளுக்கு முன்பு நாம் எம் மக்களோடு தொடர்பாட ஒரு ஊடகத்தை பேணுகின்றோம் போட்டு கோட்டுக்குள் எம்மை இப்போதைக்கு இட வேண்டாமே!

அப்படி இட விரும்பின் எமது கலைஞர்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்கி அவர்களை வளப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தக்கன பிழைத்தலும், அல்லன மடிதலும். டார்வின் கூற்று

இது தான் உங்களின கருத்தின் இரண்டு நிலை முன்னர் இந்திய நிகழ்ச்சிகள், ஒளித்தரம் என்றீர்கள் ஆனால் பின்னர் தேசியத்தை மட்டும் வைத்துக்கொண்டு செயற்ப்பட முடியாது என்கின்றீர்கள் .

சொல்லிக்கொண்டே போகலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தக்கன பிழைத்தலும், அல்லன மடிதலும். டார்வின் கூற்று

சொல்லிக்கொண்டே போகலாம்

மாற்றங்களை எதிர்த்துப் போராடுபவை மட்டுமே வாழும், மற்றவறை அழிந்துவிடும்

நல்லது மாற்றங்களை எதிர்பார்த்தே நாமும் இருக்கிறோம்...! அந்த மாற்றம் ஈழத்தவன் என்ற தனித்தன்மையை நிலை நாட்ட ஈழத்தமிழர்கள் தங்கள் படைப்புக்களை ஏற்றுக்கொள்ளலாக வேண்டும்...அது மட்டுமன்றி நமக்குள் தன் சார்பு நிலையற்ற நடுநிலையான விமர்சகர்களும், கருத்தாளர்களும் ஏற்ப்பட்டு மாற்றத்தை ஏற்ப்படுத்தட்டும் என்ற நோக்கிற்காக யாழ் களத்தில நாம போராடுறம்...

யாரு கேக்கிறார் இதை... :lol:

Link to comment
Share on other sites

பக்கத்து வீட்டு அன்ரி வடிவாக இருப்பதால் அவர்கள் எனக்கு அம்மா ஆகவும் முடியாது.

அம்மா வடிவில்லாத படியால் அன்ரியாக்கவும் முடியாது.

இரண்டு வரிகளில் தெளிவான பதில்

பக்கத்து வீட்டு அன்ரி தன்னை அம்மாவாக நினைக்கும் படி எம்மைக் கேட்கவில்லையே. நாம தானே அவவை அம்மாவாக்க நினைக்கின்றோம் . தவறுகளை எம்மில் வைத்துக் கொண்டு அடுத்தவரைச் சாடுவதில் என்ன பயன்.

மாற்றங்களை எதிர்த்துப் போராடுபவை மட்டுமே வாழும், மற்றவறை அழிந்துவிடும்

நல்லது மாற்றங்களை எதிர்பார்த்தே நாமும் இருக்கிறோம்...! அந்த மாற்றம் ஈழத்தவன் என்ற தனித்தன்மையை நிலை நாட்ட ஈழத்தமிழர்கள் தங்கள் படைப்புக்களை ஏற்றுக்கொள்ளலாக வேண்டும்...அது மட்டுமன்றி நமக்குள் தன் சார்பு நிலையற்ற நடுநிலையான விமர்சகர்களும், கருத்தாளர்களும் ஏற்ப்பட்டு மாற்றத்தை ஏற்ப்படுத்தட்டும் என்ற நோக்கிற்காக யாழ் களத்தில நாம போராடுறம்...

யாரு கேக்கிறார் இதை... :)

புதுவை இரத்தினதுரை சுவிசிலுள்ள சூரிச் சிவன் கோவில் பற்றி எழுதிய பாடல்களின் ஒலித்தட்டு வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. பாடல்கள் பாடியவர்களிலிருந்து பாடல்களுக்கு இசையமைத்தவர் வரை அனைத்தும் இந்தியர்கள். நடைமுறை இப்படியிருக்க நீங்கள் எப்படி மக்களைக் குறை கூற முடியும்.

Link to comment
Share on other sites

மாற்றங்களை எதிர்த்துப் போராடுபவை மட்டுமே வாழும், மற்றவறை அழிந்துவிடும்

நல்லது மாற்றங்களை எதிர்பார்த்தே நாமும் இருக்கிறோம்...! அந்த மாற்றம் ஈழத்தவன் என்ற தனித்தன்மையை நிலை நாட்ட ஈழத்தமிழர்கள் தங்கள் படைப்புக்களை ஏற்றுக்கொள்ளலாக வேண்டும்...அது மட்டுமன்றி நமக்குள் தன் சார்பு நிலையற்ற நடுநிலையான விமர்சகர்களும், கருத்தாளர்களும் ஏற்ப்பட்டு மாற்றத்தை ஏற்ப்படுத்தட்டும் என்ற நோக்கிற்காக யாழ் களத்தில நாம போராடுறம்...

யாரு கேக்கிறார் இதை... :)

ரிவிஐ யை எவ்வளவு வருடகாலமோ நடத்தினாலும் மக்கள் இதைதான் விரும்புகிறார்கள் என்ற கதையுடன் உங்களுக்கு என்று நிகழ்ச்சிகளை உருவாக்கமுடியாமல் தென்னிந்தியபடங்களையும், தொடர் நாடகங்களையும், அசிங்கம் ஆன நிகழ்ச்சிகளையும் எவ்வளவு காலத்துக்கு காட்டிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்.

வெளியிலே நீங்கள் சொல்லுகின்ற நிகழ்ச்சிகள் நீங்கள் சொன்ன வர்த்தக ஸ்தாபனங்களில் விற்பனையாகுது. அதையே திருப்பிக்காட்டுகிறீர்கள்.

போதக்குறைக்கு அவற்றையே மூலப்பிரதியாக காட்டுபவர்கள் (SUN TV)இப்போது சட்டபூர்வமாக கனடா வந்து விட்டார்கள்.

இனி என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் கேள்வி..

மாற்றம் மக்களிடமிருந்து மட்டும் வரவேண்டுமா? நீங்கள் அதற்கு முயற்சிக்க வேண்டாமா?

Link to comment
Share on other sites

பக்கத்து வீட்டு அன்ரி தன்னை அம்மாவாக நினைக்கும் படி எம்மைக் கேட்கவில்லையே. நாம தானே அவவை அம்மாவாக்க நினைக்கின்றோம் . தவறுகளை எம்மில் வைத்துக் கொண்டு அடுத்தவரைச் சாடுவதில் என்ன பயன்.

சரியாகச்சொன்னீர்கள். இவர்களுடைய வாதம் வியப்பாக இருக்கிறது.

..

அவர்கள் போட்டுக்கழித்ததை தாங்கள் போட்டுக்க்கொண்டு வியாபாரம் செய்கிறார்களாம். அதனால்தான் விளம்பரம் வருகிறதாம். அப்போ சொல்லுங்களேன் நீங்களும் பச்சை வியாபாரிகள் என்று. மக்கள் இதை விரும்புகிறார்கள் என்று தீர்மானிக்க என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிவிஐ யை எவ்வளவு வருடகாலமோ நடத்தினாலும் மக்கள் இதைதான் விரும்புகிறார்கள் என்ற கதையுடன் உங்களுக்கு என்று நிகழ்ச்சிகளை உருவாக்கமுடியாமல் தென்னிந்தியபடங்களையும், தொடர் நாடகங்களையும், அசிங்கம் ஆன நிகழ்ச்சிகளையும் எவ்வளவு காலத்துக்கு காட்டிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்.

வெளியிலே நீங்கள் சொல்லுகின்ற நிகழ்ச்சிகள் நீங்கள் சொன்ன வர்த்தக ஸ்தாபனங்களில் விற்பனையாகுது. அதையே திருப்பிக்காட்டுகிறீர்கள்.

போதக்குறைக்கு அவற்றையே மூலப்பிரதியாக காட்டுபவர்கள் (SUN TV)இப்போது சட்டபூர்வமாக கனடா வந்து விட்டார்கள்.

இனி என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் கேள்வி..

மாற்றம் மக்களிடமிருந்து மட்டும் வரவேண்டுமா? நீங்கள் அதற்கு முயற்சிக்க வேண்டாமா?

மன்னிக்க பொன்னியின் செல்வன் உங்கள் வாதம் நகைப்புக்குரியது. தென்னிந்திய அளவில் ஈழத்தமிழ் கலைஞர்களுக்கு மக்களின் ஆதரவில்லை. எந்த ஒரு நிறுவனமும் தன் கையை சுட்டுக்கொள்ள விரும்பாது. அது உங்களுக்கும், எனக்கும் பொருந்தும் நான் நட்டமடையப்போகின்றென் என்ற போது அதை சரி செய்யவெ நான் முயற்ச்சிப்பேன் அதையே அவர்கள் செய்கின்றனர்.

அதே நேரம் தென்னிந்தி நிகழ்சிகளை ஐரோப்பால் சில தொலைக்காட்சிகள் செய்வது போல் பிரதி செய்து அவர்கள் போடவில்லை. மாறாக, அதற்கான உரிமத்தை விலை கொடுத்து வாங்கியே ஒளிபரப்புகின்றனர். ஆனால் என்ன கொடுமை எனில் விலைக்கு விற்றவர்களே இன்று தமது ஒளிபரப்புக்களை ஆரம்பித்துள்ளமையே!

சன் ரீ.வி சட்ட ரீதியாக கனடா வர முன்னர் பல ஆண்டு காலாமாக கள்ள சற் லைட்டுக்குள்ளால் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அதை விடுத்து சன் ரீ.வியின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் பிரதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

எனக்கு மற்றைய தொலைக்காட்சி நிறுவனங்கள் பற்றி சரியாக தெரியாது. ஆனால் ரி.வி.ஐயின் நேயராக அது பற்றி நன்றாக தெரியும். ரி.வி.யில் 100 வீதம் தென்னிந்திய நிகழ்ச்சிகளை தாங்கி காலம் மாறி தற்போது கிட்டத்தட்ட 60 வீதம் என்ற நிலையாகிற்று. இன்று 40 வீதம் ஈழத்தவர் நிகழ்ச்சிகளே ஒளிபரப்பாகின்றன.

மீதி இருக்கும் 60 வீதமும் எம்மால், உங்களால் அல்லது திறமையுள்ள ஈழத்து கலைஞர்களால் , படைபாளிகளால் நிரப்பப்பட கூடியாது. ஆனால் அதற்கான கால அவகாசம் இன்னும் அதிகம் தேவைப்படும்.

சில விடயங்களில் ரி.வி.ஐ யை விமர்சித்த நான் அவர்கள் மீதுள்ள புரிந்துணர்வாலும் ஒரு ஊடக நிறுவனம் மேற்குலகில் முகம் கொடுக்கும் சவால்களை புரிந்துமே விளக்க முனைகின்றேன்.

மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களிடம் திணிப்பை மேற்கொண்டாது திணிக்காதீர் என்கின்றீர்கள். இது இப்பிடியிருக்கையில் எப்படி ஊடகங்கள் மாற முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பக்கத்து வீட்டு அன்ரி போட்டு கழட்டி எறிஞ்ச உடுப்புக்களை போட்டு கொண்டு தான் உங்கட அம்மாக்கள் காலத்த ஓட்டுகினம். காலாவதியாகிப்போன நாடகங்கள் இதர நிகழ்சிகளை சொன்னேன் சொன்னேன்

சரியாகச்சொன்னீர்கள்.. பக்கத்துவீட்டு அன்ரி இரண்டு வருசத்துக்கு முந்தி போட்டு கழட்டி எறிஞ்ச நாற்றம் பிடிச்ச குப்பைகளை போடுகிற அம்மாவுக்கு புத்தி சொல்கிறோம்.. சீத்தை துணியெண்டாலும் உங்கடை துணியிலை போடுங்கோ. இல்லையெண்டால் பக்கத்து வீட்டு அன்ரி பளபளப்பாய் தெரியத்தான் செய்வா.. என்ன செய்யலாம். ஐயா..

இங்குள்ள பிரச்சனையே இதுதான்.

என்னுடைய அம்மாவையே இது உன்னுடைய அம்மா எனச்சொல்லி உபதேசம் செய்வது.

மானத்தை மறைக்க உடுப்பு இல்லாவிட்டால் அவள் என்ன செய்வாள்.

பிள்ளைகள் வளர்ந்து வாங்கித்தரும் என்ற நம்பிக்கையில், தற்போதைக்கு பக்கத்து வீட்டு நாற்றம் பிடித்த உடுப்பாயினும், மானத்தை மறைக்க உதவுதே போடுவம் என்று போட்டுக்கொண்டிருக்கிறாள்.

Link to comment
Share on other sites

சரியாகச்சொன்னீர்கள். இவர்களுடைய வாதம் வியப்பாக இருக்கிறது.

..

அவர்கள் போட்டுக்கழித்ததை தாங்கள் போட்டுக்க்கொண்டு வியாபாரம் செய்கிறார்களாம். அதனால்தான் விளம்பரம் வருகிறதாம். அப்போ சொல்லுங்களேன் நீங்களும் பச்சை வியாபாரிகள் என்று. மக்கள் இதை விரும்புகிறார்கள் என்று தீர்மானிக்க என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்.?

காற்று, திசை மாறியதன் காரணம் என்னவோ??? :):(:(

Link to comment
Share on other sites

இங்குள்ள பிரச்சனையே இதுதான்.

என்னுடைய அம்மாவையே இது உன்னுடைய அம்மா எனச்சொல்லி உபதேசம் செய்வது.

மானத்தை மறைக்க உடுப்பு இல்லாவிட்டால் அவள் என்ன செய்வாள்.

பிள்ளைகள் வளர்ந்து வாங்கித்தரும் என்ற நம்பிக்கையில், தற்போதைக்கு பக்கத்து வீட்டு நாற்றம் பிடித்த உடுப்பாயினும், மானத்தை மறைக்க உதவுதே போடுவம் என்று போட்டுக்கொண்டிருக்கிறாள்.

மானத்தை மறைக்க கிழிந்ததைப் போட்டாலும் அதை வரவேற்கலாம். ஆனால் இவர்கள் அடுத்தவர்களுக்கு பவுசு காட்டவல்லவா அடுத்தவனிடமே ஆடை வாங்குகின்றார்கள். அடுத்தவனின் உடை நாற்றம் பிடித்தது என்றால், அதை சகித்துக் கொள்ளும் இவர்கள், ஏற்கனவே அதை விட நாற்றத்திற்கு பழக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

புதுவை இரத்தினதுரை சுவிசிலுள்ள சூரிச் சிவன் கோவில் பற்றி எழுதிய பாடல்களின் ஒலித்தட்டு வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. பாடல்கள் பாடியவர்களிலிருந்து பாடல்களுக்கு இசையமைத்தவர் வரை அனைத்தும் இந்தியர்கள்.

நடைமுறை இப்படியிருக்க அடுத்தவரை கேவலப்படுத்தி நமது தவறுகளுக்கு வக்காலத்து வாங்கி என்ன பயன்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே எழுதுபவர்கள் கவனிக்க. TVIதொலைக்காட்ட்சியில், அண்மையில் தில் என்று ஒரு தொடர் ஆடல் நிகழ்ச்சி இருட்டில் ஒளிபரப்பினார்கள். Close up இல் கூட அவர்களின் முகம் தெரியவில்லை. அந்தளவு இருட்டு. அந்த நிகழ்சிக்கும் எமது தேசியம் அல்லது பாரம்பரியத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? விடை இல்லை. மாறாக எம்மினத்தை இன்னும் சீரளிக்கும் நிலைக்கு இட்டு சென்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.