Jump to content

கை தவழும் காதல்


Recommended Posts

கை தவழும் காதல்

பூ விழுந்த மனசு மற்றும் சிதறல்கள் என்ற கவிதை தொகுப்புகளை (இன்னும் வெளிவராமலேயே) இந்த யாழ் இணையத்தினூடாக உலாவ விட்டிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக இனி இந்த கிறுக்கல்களும் வரவிருக்கின்றன.

கடிகாரத்தின் முட்களோடு போட்டி போட என் பேனாக்களிற்கு முடியவில்லை. ஆதலால் இயலுமானவரை தருகின்றேன்.

இன்று தவழ்ந்த காதல்

(எனது மகளை நினைத்து கிறுக்கியது)

new_image.jpg

அலைகடலில் ஓடமாய்

அந்தரிக்கும் விழி அழகோ

அடுக்கடுக்காய் உதிர்ந்து விழும்

புன்னகைப் பூக்கள் அழகோ

ஆயிரம் அர்த்தம் விதைக்கும்

அசைவுகள் அழகோ

என் மஞ்சத்தில் உருவாகி

கைகளில் தவழுகின்ற

காதல்தான் உன்னழகோ

அழகிற்கே அழகுரைக்கும்

உன்னழகுதான் எதுவோ ?

Link to comment
Share on other sites

ம்ம்..மாஸ்டர் "கை தவழும் காதல்" கைகளை விட்டு தவழமால் அழகாக செல்கிறது :o ..தங்களின் மகளை நினைத்து கிறுக்கிய கவியும் ஒர் அழகு தான்..தங்களின் கைகடிகாரதிற்கு நேரம் கிடைக்கும் போது இன்னும் தவழட்டும் உங்கள் பேனா வாழ்த்துக்கள்.. <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அன்பாக அழகாக உங்கள் மகளின் அசைவுகள் ஒவ்வொன்றையும் ரசிக்கின்றீர்கள் என்பதை கவிதைகள் சொல்லிச் செல்கின்றன மாஸ்டர். தொடருங்கோ

Link to comment
Share on other sites

நன்றி வெண்ணிலா மற்றும் ஜம்முபேபி

இன்றைய காதல்

என் உயிரின் ஓசையே

உளியில் பிறந்த சிலையே

கலவியில் மலர்ந்த கவிதையே

ஜென்மங்கள் தேடி கிடைத்தாயோ

ஜெனனத்தின் அர்த்தம் தந்தாயோ

புண்ணியம் செய்து பிறந்தவளே

பூர்வ ஜென்மத்தின் தொடராய் வந்தாயோ

கற்பனை சிறகில் நான் பறக்க

கண்முன்னே தோன்றி நின்றாயே

பொத்தி வைத்த அன்பையெல்லாம் - இனி

பூசை செய்தே காட்டிடுவேன். . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" பொத்தி வைத்த அன்பையெல்லாம் -" இனி

வணக்கம் பரநீ .......

பொத்தி வைத்த அன்பையெல்லாம் பூசைசெய்து காட்டுவேன் ....

.அருமை யான கவி ...அதை அனுபவிபவர்களுக்கு தான் புரியும்

.செல்லமகளை நான்றாக அனுபவிக்கிறீர்கள் .கொடுத்து வைத்தவர்.

இனிய வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா .

Link to comment
Share on other sites

நன்றி நிலாமதி

இன்று என்னுடைய மகளிற்கு சோறு ஊட்டி மகிழ்ந்தோம். உண்மைதான் சிலவற்றை அனுபவிக்கும்போதுதான் மகிழமுடிகின்றதுஷ

Link to comment
Share on other sites

இன்றைய காதல்

விழிமுன் மலர்ந்து

விரைந்து புகுந்தாள்

விடலை என்னுள்ளே

படபடத்து தேடினேன்

தடமின்றி மறைந்துவிட்டாள்

மின்னல் மகளோ

தேவதைப்பெண்ணோ

கண்முன் தோன்றி கரைந்து சென்றவள்

காதலை என்னுள்ளே கலந்து சென்றவள்

யாரோ யாரவளோ ?

தேடுகின்றேன் தேடிக்கொண்டிருக்கின்றேன்

Link to comment
Share on other sites

இன்று என்னுடைய மகளிற்கு சோறு ஊட்டி மகிழ்ந்தோம். உண்மைதான் சிலவற்றை அனுபவிக்கும்போதுதான் மகிழமுடிகின்றதுஷ

சோறு ஊட்ட ஆரம்பித்தாகிட்டுதா? எத்தனை வயது மாஸ்டர் மகளுக்கு?

உங்கள் இண்ரைய காதலின் நாயகிக்கு(மகளுக்கு) என்ன பெயர் மாஸ்டர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை தொடருங்கள்

Link to comment
Share on other sites

அழகான கவிதைகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகள் பரணி, உங்களுக்கும் ,உங்கள் செல்லக் கவிக்கும்......

Link to comment
Share on other sites

இன்றைய காதல்

என் சின்ன தேவதையின் கால்சிறகுகளை

அரவணைத்தபடி கொலுசுகள்

மௌனமாய் இல்லை

தமக்குள்ளே ஆயிரம் கதைகள்

அருகே சென்று காதுகொடுத்தேன்

சிறகுகள் தொட்டதால் எமக்குப்பெருமையா ?

எம்மைத்தொட்டதால் சிறகுக்கு பெருமையா ?

பட்டிமன்றம் நடக்கின்றது

விடைபகிராமல் சுவடுமறைத்து

நான் விலகிவிட்டேன்

முடிவும் எடுத்தேன்

உடனேயே இவற்றையும் விலக்கவவேண்டும்

பொறாமைத்தீயில் என் சின்னத்தேவதையின்

சிறகை காயம் செய்துவிட்டால் . .

Link to comment
Share on other sites

பரணி அண்ணாவின் குட்டி மகளை பார்த்த பின் எனக்குள் தோன்றிய சில வரிகள் :wub:

நீலவர்ண ஆடை அணிந்து

தவண்டு விளையாடும் குட்டி நிலவே

உன் வட்டமுகம் கண்டால்

நீலவான் முழுமதி நாணுமே

ஒளி பொருந்திய உன்

சின்னக்கண்களிரண்டு

கண்புருவங்களின் நெளிவு

பாணத்தையே விஞ்சிவிடும்

பல்லில்லாத வாய் திறந்து

சிவந்த நாக்கு காட்டி

சிரிக்கும் உன் அழகில்

நான் என்னையே மறந்தேன்

கண்ணிமைக்காது நீண்டநேரம்

உன் குழந்தைமுகம் பார்த்து

சந்தோச வானில்

பறந்தேன் இறக்கைகள் இன்றி

குட்டிப்பூவே

உன் மழலைமொழி

கேட்டிட ஆசை

எப்போது உன் வாய்மலர்வாய்? :lol:

பரணி அண்ணா திட்டாதீங்கோ உங்கள் மகள் மேல் கண்ணு வைச்சிட்டாங்களோ னு. நிலாவும் பெண் தான். :lol:

Link to comment
Share on other sites

ம் நிறைய கண் வைச்சிட்டாங்களே. . .

அருமையான கவிதை வெண்ணிலா

வாழ்த்துக்கள். . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரணீ அண்ணாவின் மழலைக்கு ........

சின்ன அரும்பு மலரும் சிரிப்பில் சிந்தை மகிழும்

எங்கிருந்த போதும் என் இதயம் உனை வாழ்த்து

வாழ்வும் உன்னால் மலரும் நாளிலே ....

என்று கூறி நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன் .நிலாமதி ஆன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆதியாக இருப்பதைக்காட்டிலும் பரணியின் குழந்தையாக வடிவெடுத்திருக்கலாமோ? எதுக்கும் பிரம்மனிடம் மனுப்போட்டு வைப்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.