Jump to content

இதயத்தை ரணமாக்கிய ******இருண்ட நாட்கள் ..******


Recommended Posts

aisheh1.jpg

நட்பாய் என்னில் அமர்ந்து

காதலாய் என்னில் உறங்கி

இன்று கானலான

எனது நாட்குறிப்பின்

நனைந்து போன பக்கங்கள்

கண்ணீரில்....

கடந்த காலத்தின்

கசப்பில்

மனப்புண்களால்

முடமாகித்தானே

முதலில் வந்தாய்

என் முன்னில்....

எத்தனை இன்னல்களை

எனதாக்கி

உயிர்பித்தேன் உன்னை ,..

ஆழமாய் காதல்செய்

பிரிந்து போனாலும்

அவள் அடையும்

அளவிலா தண்டனை

அது மட்டுமே ..

பொன்மொழியாய்

உலகிற்கு

நீயும் சொல்லி...

என் உயிரதனை சிறகாக்கி

பறந்து சென்றாய்....

புனிதமான நட்புக்கு கூட

ஆண்வர்க்கத்தையே

அணுக விடாமல்

என் மனதை

கல்லாக்கி விட்டு

நீயும்

காணாமல் போன

மாயம் தான் என்னடா ...

என்

இதயத்தில்

நெருடும் புழுக்களாய்

உன் நினைவுகள் ....

அருவருப்பும்

கூச்சமும்

அடங்காமல் எனை

சித்ரவதை செய்ய

வெட்கி தலைகுனிகிறேன் ....

நீயும் கபடத்தோடு

என்னில்

நட்டு வைத்த ...

காதலை

நினைக்கையில்...

Link to comment
Share on other sites

என்

இதயத்தில்

நெருடும் புழுக்களாய்

உன் நினைவுகள் ....

மற்றுமொரு இனிய காதல் கவிதை. யார் தான் காதலுக்கு விதிவிலக்காய் வாழ முடியும்? .இனியவள் இனிய கவிதை.

Link to comment
Share on other sites

இப்படியும் ஒரு கவிதை

பெயர், மதம், ஜாதி என்று

ஆயிரம் பொருத்தம் பார்த்தும்

உன் மனப் பொறுத்தம் பாராமல்

வெறும் பணப்பொருத்தம் மட்டும் பார்த்து

நடந்தது நம் திருமணம்.

கொழுத்த சீதனம், ஜாதிதிமிர் என்று

போலிகள் மலிந்த அந்த கூட்டத்தில்

உன் திருமணம் பற்றிய

உனது அபிப்பிராயம்

பதிவேட்டில் முற்றுப்புள்ளி இடமுதல்

நீ விட்ட கண்ணீர்ப்புள்ளி தான் என்பதை

நான் அப்போது புரிந்துகொள்ளவில்லை

தோற்றுபோன ஒரு ஆணின் காதல்

மதுவுடன் சென்று முடிகிறது.

தோற்றுப்போன ஒரு பெண்ணின் காதல்

இரண்டு ஆண்களின் வாழ்வை

மதுவால் நிறைக்கின்றது.

அடி பெண்ணே

உன் தோளில் பச்சை குத்தப்பட்ட

நான் அல்லாத ஒருவனின்

பெயரை பார்த்தபின்

உன்னை தொட எனக்கு

அருவறுப்பது போல தான் உனக்கும்

அருவறுத்திருக்கும்

என் ஒவ்வொரு தீண்டலிலும்.

தோற்கடிக்கப்பட்ட ஒரு காதலை

வாழவைக்கும் உன்னை

ஒரு மனைவியாக அல்லாது

பெண்ணாக இன்னமும் நேசிக்கிறேன்

அதனால்தான் கேட்கிறேன்

வா! இப்போதாவது பிரிந்து போவோம்

http://reader.feedshow.com/show_items-feed...b271facae6f6469

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" என்

இதயத்தில்

நெருடும் புழுக்களாய்

உன் நினைவுகள் ..."

வணக்கம் இனியவள் .........

நினைவுகள் என்றும் நீங்காதவை .காலம் தான் ஆற்றும் மருந்து

.காலம் செல்ல மனதின் ரனம் ஆறும் .......

கவிதையில் சோகம் மிகுதியாய் இருக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" தோற்றுபோன ஒரு ஆணின் காதல்

மதுவுடன் சென்று முடிகிறது.

தோற்றுப்போன ஒரு பெண்ணின் காதல்

இரண்டு ஆண்களின் வாழ்வை

மதுவால் நிறைக்கின்றது.

வணக்கம் நுனாவிலான் .........

சுட்டு தந்த கவிதை நன்றாக இருக்கிறது .மதுவை நாடுபவர் எல்லோரும் காதலில் தோற்றவர்களா ?

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான் ....

...உறவும் வரும் பிரிவும் வரும் வாழ்கை ஒன்று தான் ....என்று ஏன் எடுக்க கூடாது ?

நன்றி நிலாமதி ..

Link to comment
Share on other sites

மதுவை நாடுபவர் எல்லோரும் காதலில் தோற்றவர்களா ?

இல்லை. ஆனால் காதலில் தோற்றவர்கள் (ஆண்கள்) மதுவை நாடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

சோகமான கனமான வரிகள்... கவிதை நல்லா இருக்கிது எண்டு சொல்ல முடிய இல்ல. ஆழ்ந்த அனுதாபங்கள்... தொடர்ந்து நம்பிக்கையுடன் இருங்கோ இனியவள்... வாழ்க்கை நம்மோட கையிலதான் இருக்கிது. மற்றவன் வந்து எங்களுக்காக வாழப்போவது இல்லை.. மற்றவன் எங்களுக்காக அக்கறைப்படப்போவது இல்லை. நாமதான் நம்மில அக்கறையுடன் இருக்கவேணும். நாமாதான் நம்மில இரக்கம் காட்டவேணும்... அனுதாபப்பட வேணும்.. காதல் கைகூடினால் மகிழ்ச்சி. கைகூடாவிட்டால்.. முன்பு நாம் இருந்த நிலமையை விட இன்னும் எம்மை சகலவழிகளிலும் முன்னேற்றிக்கொள்வதே, வாழ்வில் முன்னேறுவதே நாம் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான வேலை. :icon_mrgreen: வேற என்ன இந்த கவிதைய மன்னிக்கவும்... சோகக்கதைய வாச்சிச்ச பிறகு சொல்லிறதுஎண்டு எனக்கு தெரிய இல்ல.. :lol::(:D

Link to comment
Share on other sites

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடின்

மனிதரின் மொழிகள் தேவை இல்லை !

இதயத்தின் மொழிகள் புரிந்து விடின்

மனிதர்க்கு மொழியே தேவை இல்லை !

மண் குடிசை வாசல் என்றால்

தென்றல் வர மறுத்திடுமா !

வான நிலா ஏழை எனறால்

ஒளி கொடுக்க மறந்திடுமா !

மானம் என்ற உயிர் காக்க

மனக்கதவை மூடிக் கொண்டேன் !

அது நாலு பக்கம் திறந்து கொண்டால்

நான் அதற்கு என்ன செய்ய !

புத்தம் புது பூமி வேண்டும் !

நித்தம் ஒரு வானம் வேண்டும் !

தங்க மழை பொழிய வேண்டும் !

தமிழில் குயில் பாட வேண்டும் !

நெற்றி வியர்க்கின்ற போது

அந்த நிலவில் மழை பொழிய வேண்டும் !

உனக்கும் எனக்கும் எல்லாம்

பிடிக்கும் என்றாய் ! அடி ஏன்

என்னை மட்டும் பிடிக்காதென்றாய் !

உள்ளே போன அத்தனை பேரும்

குற்றவாளி இல்லேங்க !

வெளியே உள்ள அத்தனை பேரும்

புத்தன் காந்தி இல்லேங்க !

நடந்தா இரண்டடி

இருந்தா நாலடி

இறந்தா ஆறடி

இது அத்தனை பேருக்கும்

இறைவன் கொடுத்த வரம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட பட்டியலில கன பேர் இருக்கினம் போல :icon_mrgreen: ! இனியவள் உங்கள் கவிதை பழைய நினைவுகளை மீட்டிச்செல்கிறது. வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

என்

இதயத்தில்

நெருடும் புழுக்களாய்

உன் நினைவுகள் ....

நீண்ட நாட்களின் பின் சோகமான கவிதையோடு வந்திருக்கிறீங்க இனியவள்.

இருண்ட நாட்கள் வெளிச்சமடைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

மற்றுமொரு இனிய காதல் கவிதை. யார் தான் காதலுக்கு விதிவிலக்காய் வாழ முடியும்? .இனியவள் இனிய கவிதை.

வணக்கம் ,

ஆமாம் காதல் இல்லாமல் இங்கு யாறும் இல்லை!!

நன்றி உங்கள் வருகைக்கு!!

Link to comment
Share on other sites

சோகமான கனமான வரிகள்... கவிதை நல்லா இருக்கிது எண்டு சொல்ல முடிய இல்ல. ஆழ்ந்த அனுதாபங்கள்... தொடர்ந்து நம்பிக்கையுடன் இருங்கோ இனியவள்... வாழ்க்கை நம்மோட கையிலதான் இருக்கிது. மற்றவன் வந்து எங்களுக்காக வாழப்போவது இல்லை.. மற்றவன் எங்களுக்காக அக்கறைப்படப்போவது இல்லை. நாமதான் நம்மில அக்கறையுடன் இருக்கவேணும். நாமாதான் நம்மில இரக்கம் காட்டவேணும்... அனுதாபப்பட வேணும்.. காதல் கைகூடினால் மகிழ்ச்சி. கைகூடாவிட்டால்.. முன்பு நாம் இருந்த நிலமையை விட இன்னும் எம்மை சகலவழிகளிலும் முன்னேற்றிக்கொள்வதே, வாழ்வில் முன்னேறுவதே நாம் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான வேலை. :) வேற என்ன இந்த கவிதைய மன்னிக்கவும்... சோகக்கதைய வாச்சிச்ச பிறகு சொல்லிறதுஎண்டு எனக்கு தெரிய இல்ல.. :(:(:(

வணக்கம் முரளி!!

நீண்ட நாட்களின் பின் , நீங்கள் அனைவரும் நலம் நானே

ஆமாம் முரளி கவிதை மிகவும் சேகமாகிவிட்டது,என்ன செய்ய இப்படி ஒரு பெண்னின் வாழ்க்கை ஆகிவிட்டது!!

தனது வேதனையை என்னிடம் கூறினால் ,இப்படி ஒரு கவி உறுவாகிவிட்டது!!வாழ்க்கை என்பது ஒரு பேர்க்களம்!!

ஆமாம் அதி இருந்த அவளை மீட்டு விட்டதில் எனக்கும் ஒரு சந்தேசம் தான்!!

உங்கள் கருத்துக்கு நன்றி,!! அதை பார்த்து அவள் மகிழ்வாள்!!

Link to comment
Share on other sites

இனியவள் கவிதை நன்றாக இருக்கின்றது

இருந்தும் புழுக்களாய் நெளியும் நினைவுகள் என்பது சற்று அருவருப்பாக இருக்கின்றுது.

நினைவுகள் கொடுமையானவையாக இருந்தாலும் அவை அருவருப்பை தரக்கூடாது. காதல் நினைவுகள் அதுவும் முதல் காதல் நினைவு . என்றும் என்றென்றும் காலத்தால் மட்டுமல்ல யாராலும் அழிக்க முடியாதது. கொடியதாயினும் அது அழகிய இன்பம்

Link to comment
Share on other sites

யாராக இருந்தாலும் ஆழ்ந்த அனுதாபங்கள் இனியவள். ஓம்... காயத்துக்கு மற்ற ஆக்களிண்ட ஆறுதல் வார்த்தைகள் சுகமாக இருக்கும். கீழ காயப்பட்டவர் ஒருவர் காயப்படப் போற ஆக்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லுறார். நண்பியிடம் இதை முடிந்தால் முழுமையாக பார்க்கச் சொல்லுங்கோ. வாழ்க்கைக்கு பல தேவையான பல விசயங்கள இதில சொல்லுறார். நன்றி!

20071022pp_pausch_500.jpg

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

இண்டைக்கு யூரியூப் இணையத்தில மிகவும் பயனுள்ள காணொளிகள் பார்த்தன். இந்த காணொளிகளில அமெரிக்கா Carnegie Mellon University (CMU) Pittsburgh, Pennsylvania வை சேர்ந்த கணணியில் பேராசிரியர் ஒருவர் வாழ்வில் பற்றி அருமையாக உரை நிகழ்த்தி இருக்கிறார். இவர் 1960ம் ஆண்டு பிறந்தவர். இப்போது புற்றுநோயுக்கு உள்ளாகி இருக்கிறார். மருத்துவர்கள் இவரிண்ட நாட்கள எண்ணத்துவங்கி இருக்கிறீனம்.

இந்த சுமார் 1.30 மணித்தியாலம் நீளமான காணொளிகள் இரண்டையும் முடியுமானால் பொறுமையுடன் முழுவதுமாக பாருங்கோ. எங்கட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளவை. ஏற்கனவே இதைப்பார்க் காதவர்களுக்காக இங்கு இணைக்கின்றேன். இந்த காணொளிகள் - பேராசிரியரின் இந்த இறுதி உரை - உலகப்புகழ் பெற்று உள்ளன.

இதப்பார்த்து முடிஞ்சதும், மற்றும் பார்த்துக்கொண்டு இருக்கேக்க எனக்கு கண்களில கண்ணீர் வந்திச்சிது. வாழ்க்கை பற்றி வித்தியாசமான ஒரு கோணத்தில உரை ஆற்றுகின்றார்.

Randy Pausch பற்றி மேலதிகமாக அறிய: http://en.wikipedia.org/wiki/Randy_Pausch

நன்றி!

">
Link to comment
Share on other sites

நட்பாய் என்னில் அமர்ந்து

காதலாய் என்னில் உறங்கி

இன்று கானலான

எனது நாட்குறிப்பின்

நனைந்து போன பக்கங்கள்

கண்ணீரில்....

அட..இனியின் "இருண்ட நாட்கள்" கவி..இருளாகி போனதொரு காதலின் விம்பம் வாழ்த்துக்கள் இனியவள் :wub: ..ஓ உங்களின் நாட்குறிப்பின் பக்கங்கள் நனைந்து போய்விட்டதோ..அப்ப அடுத்த வருசம் இன்னொரு நாட்குறிப்பு வரும் அல்லோ அதில எழுத தொடங்குங்கோ..(நான் பகிடிக்கு பிறகு கோவிக்கிறதில்ல)... :wub:

இப்படி ஏதாச்சும் ஆகும் எண்டு தெரிந்து தான் நான் நாட்குறிப்பே எழுதுறதில்ல... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இனியவள் கவிதை நன்றாக இருக்கின்றது

இருந்தும் புழுக்களாய் நெளியும் நினைவுகள் என்பது சற்று அருவருப்பாக இருக்கின்றுது.

நினைவுகள் கொடுமையானவையாக இருந்தாலும் அவை அருவருப்பை தரக்கூடாது. காதல் நினைவுகள் அதுவும் முதல் காதல் நினைவு . என்றும் என்றென்றும் காலத்தால் மட்டுமல்ல யாராலும் அழிக்க முடியாதது. கொடியதாயினும் அது அழகிய இன்பம்

வணக்கம் பரணி!!

முதல் உங்கள் உண்மையான கருத்துக்கு எனது நன்றிகள்!!

நீங்கள் கூறுவது கூட ஒரு வகையில் உண்மையாக இருக்கலாம்!!

ஆனால் நல்ல இருக்கும் என்பதுக்காக மனதில் படும் வேதனை மறைப்பதால் யாறுக்கு பயன்

இப்படி பட்ட வேசம் பேடுவதுக்கு அவளுக்கு விருப்பம் இல்லை!!

அழகான நினைவுகளை எவளவுக்கு மறக்க முடியாதோ அது பேல துன்பங்களையும் பறக்க முடியாது!!

இது தான் உண்மை கூட!!

Link to comment
Share on other sites

காதல் சோகமாய் வரைந்த கவிதை நன்றாக இருக்கின்றது இனியவள்.

நீண்ட நாட்களின் பின் உங்களை சந்திக்கிறேன் என்று நினைக்கிறேன்.

சோகத்தை சொல்லும் வரிகள் அருமை!

தோற்றுபோன ஒரு ஆணின் காதல்

மதுவுடன் சென்று முடிகிறது.

தோற்றுப்போன ஒரு பெண்ணின் காதல்

இரண்டு ஆண்களின் வாழ்வை

மதுவால் நிறைக்கின்றது.

நுணாவிலன் சுட்ட கவியில் இந்த வரிகள் வித்தியாசமானதாக இருக்கின்றது.

அந்த ஒரு ஆணை அவள் தேர்ந்தெடுத்தாக இருக்கலாம்.ஆனால் இரண்டாவது ஆணையும் அவள் தான் தேர்ந்தெடுத்தாளா இல்லை பெற்றோரா? என்பது தான் கேள்வி. ஆனால் இரு ஆண்களின் வாழ்வை,மனதை நோகடித்த பழி என்னமோ பெண் மேல் தான் விழுகின்றது.!

(எல்லா பெண்களும் இல்லை சிலர்! அப்புறம் நெடுக்ஸ் சண்டைக்கு வந்திட வேணாம்!)

Link to comment
Share on other sites

இனியவள் கவிதை நன்றாக இருக்கின்றது

இருந்தும் புழுக்களாய் நெளியும் நினைவுகள் என்பது சற்று அருவருப்பாக இருக்கின்றுது.

நினைவுகள் கொடுமையானவையாக இருந்தாலும் அவை அருவருப்பை தரக்கூடாது. காதல் நினைவுகள் அதுவும் முதல் காதல் நினைவு . என்றும் என்றென்றும் காலத்தால் மட்டுமல்ல யாராலும் அழிக்க முடியாதது. கொடியதாயினும் அது அழகிய இன்பம்

நன்றாக சொன்னீர்கள் பரணி அண்ணா.

அருவருப்பு தருவது,ஆறுதல் தருவது கதலித்தவரை,நடந்தவற்றை,நபரின் மன காயத்தை பொறுத்தது என நினைக்கிறேன்.

அதை விட உங்கள் " சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போல் வருமா?" என்பதை எப்போதும் பார்க்கையில் எனக்கு நம்ம ஊர் ஞாபகம் தான் வருகின்றது. உங்கள் கருத்தை கடந்து செல்கையில் எப்போதும் அந்த வரிகளை வாசிக்கையில் உங்கள் வீட்டை கடந்து நம்ம வீட்டுப்பக்கம் செல்வது போல் தோணுகிறது. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வணக்கம் பிரியசகி

உண்மையை சொன்னால் காதல் நினைவுகள் என்பது அது கசப்பாயினும் இனிப்பாயினும் நினைக்கும்போது ஒர்; இன்பம்தான். எனது முதல்காதல் தோல்விதான். ஆனாலும் இன்றுவரை (எனது மனைவியிடம் கூட சொல்லி நினைவுகூருவேன்) என்னால் அதை மறக்க முடியாது. நினைத்து நினைத்து ஏதோ ஓர்; வகையில் மகிழ்ந்துகொள்வேன். கசப்பான நினைவென்றாலும் நினைக்கும்போது ஓர்; இன்பம் அதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.

நான் களத்தில் வந்த காலத்தில் இருந்து இன்றுவரை அந்த கையெழுத்தை மறக்கவில்லை இன்றல்ல என்றுமே எனக்கு என் தாய்மண்ணை மறக்க மாட்டேன். எத்தனை சொத்துக்கள் சுகங்கள் வந்தாலும் அந்த மண்தான் எனக்கு சுவாசம். . தற்போது தாயகத்தில் யாரும் இல்லை என நினைக்கும்போது கவலையாக இருக்கும். எப்போது சென்று நம் மண்ணில் புரண்டு விழுவேனோ என்று ஏக்கத்திலேயே காலம் கழிகின்றது.

Link to comment
Share on other sites

புழுக்கள் நெளியத்தானே செய்யும். இதுல அருவருக்க என்ன இருக்கிது. இதுவும் ஒரு வித்தியசமான கற்பனைதான் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றுபோன ஒரு ஆணின் காதல்

மதுவுடன் சென்று முடிகிறது.

தோற்றுப்போன ஒரு பெண்ணின் காதல்

இரண்டு ஆண்களின் வாழ்வை

மதுவால் நிறைக்கின்றது.

பலர் காதலின் வெற்றி என்பதை திருமணம் செய்வதோடு இணைத்துப் பார்க்கின்றனர். அது தவறு.

பல முன் பின் அறியாதவர்கள் திருமணம் செய்து வெற்றி கண்டுள்ளனர்.. திருமண வாழ்வில். அது காதலின் வெற்றி என்று சொல்ல முடியுமா..??!

நீங்கள் காதலித்தவர் எப்போ உங்களையும் காதலித்தாரோ அப்பவே உங்களின் காதல் வெற்றி பெற்றுவிட்டது என்பதே உண்மை. அதாவது உங்களின் காதல்.. நீங்கள் காதலித்தவரால் உங்கள் மீதும் அவர் மீதும் உணரப்பட்டிருக்கிறது. அதுதான் காதலின் வெற்றி..!

அது இடையில முறியிறது.. விட்டிட்டு இன்னொருத்தரோட ஓடிக்கிறது.. இன்னொருத்தரை திருமணம் செய்துக்கிறது.. அதெல்லாம்.. காதல் அல்ல. அது பேராசையின் விளைவுகள்..! இவற்றைக் காதல் தோல்வியாக எண்ணப்படாது. அது அவரவர் மனப் பலவீனங்களின் வெளிப்பாடுகள்.

நீங்கள் காதலிக்கிறது தெரிஞ்சும்.. இன்னொருத்தருக்கு உங்க மேல காதலே வரல்ல என்றுங்க.. அது உங்களளவில் தோல்வி தான்..! அதற்காக உங்களை வருத்திக்க தேவையில்லை. காரணம்.. நீங்கள் காதலிச்சவருக்கு.. உங்களைக் காதலிக்கிற மன நிலை இல்லாமல் இருக்கலாம்.

எனவே.. ஒரு மனிதனாக காதலில் தோல்வி என்பது இருப்பதாக என்னால் உணர முடியல்ல..! வெற்றியைத் தான் உணர முடிகிறது..! :rolleyes:

இனியவள்.. நுணாவிலான்.. இருவரின் கவிதைகளும் அழகு. :wub:

Link to comment
Share on other sites

நுணாவிலன் சுட்ட கவியில் இந்த வரிகள் வித்தியாசமானதாக இருக்கின்றது.

அந்த ஒரு ஆணை அவள் தேர்ந்தெடுத்தாக இருக்கலாம்.ஆனால் இரண்டாவது ஆணையும் அவள் தான் தேர்ந்தெடுத்தாளா இல்லை பெற்றோரா? என்பது தான் கேள்வி. ஆனால் இரு ஆண்களின் வாழ்வை,மனதை நோகடித்த பழி என்னமோ பெண் மேல் தான் விழுகின்றது.!

(எல்லா பெண்களும் இல்லை சிலர்! அப்புறம் நெடுக்ஸ் சண்டைக்கு வந்திட வேணாம்!)

நீண்ட நாட்களுக்கு பின் பிரியசகி! .

அது இருக்கட்டும் பிரியசகி, எந்த பெற்றோர்தான் தன் பிள்ளையை காதலிக்க விட்டிருக்கினம்? அப்படி தெரிஞ்சுகொண்டும் (பெற்றோர்கள் கைகளில் தான் தன் முடிவு என்று) எந்த பெண் தான் தான் விரும்பு பையனை காதலிப்பாள்? அப்ப யாரின் தவறு பெற்றோரின் தவறா? இல்லை அந்த பெண்னின் தவறா? பிறகு எப்படி சொல்லுவீங்க பெண் மேல் பழி விழுது எண்டு? (என்ன எழுதினன் எண்டு எனக்கே புரியல்ல புரியாவிட்டால் புரிஞ்சுகொள்ளுங்க....)

புலத்தில இப்ப இப்படித்தான் கனக்க நிகழ்கின்றது, அதிலும் சோமாலியாவில் சொல்லி வேலை இல்லை போங்க.....

Link to comment
Share on other sites

நீங்கள் காதலிக்கிறது தெரிஞ்சும்.. இன்னொருத்தருக்கு உங்க மேல காதலே வரல்ல என்றுங்க.. அது உங்களளவில் தோல்வி தான்..! அதற்காக உங்களை வருத்திக்க தேவையில்லை. காரணம்.. நீங்கள் காதலிச்சவருக்கு.. உங்களைக் காதலிக்கிற மன நிலை இல்லாமல் இருக்கலாம்.

அழகான விளக்கம் நெடுக்ஸ்!

என்ன இருந்தாலும் அனுபவம் பேசுவது போல் வருமா என்ன :lol:

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களுக்கு பின் பிரியசகி! .

அது இருக்கட்டும் பிரியசகி, எந்த பெற்றோர்தான் தன் பிள்ளையை காதலிக்க விட்டிருக்கினம்? அப்படி தெரிஞ்சுகொண்டும் (பெற்றோர்கள் கைகளில் தான் தன் முடிவு என்று) எந்த பெண் தான் தான் விரும்பு பையனை காதலிப்பாள்? அப்ப யாரின் தவறு பெற்றோரின் தவறா? இல்லை அந்த பெண்னின் தவறா? பிறகு எப்படி சொல்லுவீங்க பெண் மேல் பழி விழுது எண்டு? (என்ன எழுதினன் எண்டு எனக்கே புரியல்ல புரியாவிட்டால் புரிஞ்சுகொள்ளுங்க....)

புலத்தில இப்ப இப்படித்தான் கனக்க நிகழ்கின்றது, அதிலும் சோமாலியாவில் சொல்லி வேலை இல்லை போங்க.....

:lol::lol::lol: ம் புரிஞ்சிடுச்சு!

நான் சொன்னது அந்த ஒரு வரிக்கு. 'ஒரு பெண்ணின் காதலால் 2 ஆண்களின் வாழ்க்கை மதுவில் நிறைகின்றது! '

அது தப்பு பெண்ணில் மட்டுமில்லை...பெற்றோரிலும் சில சமயங்களில் தங்கி இருக்கென்று சொன்னேன்.

...................

நெடுக்ஸ் வருவாரென்று பயந்தால் இப்போ புதுசு புதுசா வாறாங்க.

ஏனுங்க நெடுக்ஸ் சிப்பாய்களை சேர்த்திட்டீங்கள் உங்க படையில? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

aisheh1.jpg

புனிதமான நட்புக்கு கூட

ஆண்வர்க்கத்தையே

அணுக விடாமல்

என் மனதை

கல்லாக்கி விட்டு

நீயும்

காணாமல் போன

மாயம் தான் என்னடா ...

இனியவள்,

காதல் தந்த இரணத்தால் நட்பை வெறுத்தல் ஆகாது. நட்பின் வெளியில் உங்கள் இரணத்தை ஆற்றும் மருந்து இருக்கும். எவரோ ஒருவர் செய்த தவறுக்காக ஆண்வர்க்கத்தையே நட்பு நிலையிலிருந்து விலத்தி வைத்தல் என்பது முழுமையாக உங்களை நீங்களே முடக்குதலுக்கு ஒப்பானது. காதல் என்பது கையிணையாது தோற்குமாகில் புனிதமாகும். நினைவுச்சுழிக்குள் வலம் வந்து வந்து மானுட உன்னதத்தின் உச்சமாகி உயிர் தொலையும் வரை தொடரும் அதிசய உணர்வு.

உங்கள் கவிதையைப் பார்க்கும் போது உண்மையற்ற ஒருவரிடம் மனதைப் பறிகொடுத்த பேதமை தெரிகிறது. வெளியே வந்து இந்தப் பிரபஞ்சத்தைப் பாருங்கள். இயற்கை எவ்வளவு உன்னதங்களைத் தன்வசம் வைத்திருக்கிறது. மண்புழுவிலிருந்து மனிதர்கள் வரை வாழ்வதற்காகவே படைக்கப்படுவதை பாருங்கள். மனதில் ஏற்படும் தளர்ச்சியும் சோகமும் கண்காணாத தூரத்திற்து ஓடிவிடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.