Jump to content

ஆடிப்பிறப்பு


Recommended Posts

ஆடி பிறப்பு அன்று ஆடி கூழும், கொழுக்கட்டையும் சாப்பிட்டதை மறந்திருக்க மாட்டீர்கள்.

96409872sg8.jpg

newimagemk3.jpg[/

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்த மானந்தம் தோழர்களே!

கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்

பச்சை அரிசி இடித்துத் தள்ளி,

வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரில் சக்கரையுங்கலந்து,

தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி

சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி

வெல்லக் கலவையை உள்ளே இட்டு

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டு மாவுண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே

குத்து விளக்குக் கொளுத்தி வைத்து

அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல

மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்த மானந்தந் தோழர்களே

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்தரப்புலவர்

http://viriyumsirakukal.blogspot.com/2007/...g-post_277.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://viriyumsirakukal.blogspot.com

இது உங்கள் வலைபூவா?

அழகாயிருக்கிறது.

கூழ் கொழுக்கட்டையும் மேலும் அழகு சேர்க்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஞாபகத்தை கிழறி விட்டீர்கள் குளக்காட்டான் , நன்றி .

ஆடிபிறப்பு என்றால் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்களின் ஞாபகம் தான் எனக்கு வரும் .

பாட்டிலேயே சமையல் குறிப்பையும் எழுதிய விதம் அருமை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ கொழுக்கட்டையையும் கூழையும் பார்க்க வாய் ஊறுது :) . ஜமுனா நாங்கள் செய்வமா? நன்றி குளக்காட்டான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிப்பிறப்பு இன்று புதன்கிழமை (16-07-2008) என்று நினைக்கிறேன்..! :)

அனைவருக்கும் ஆடிப்பிறப்பு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஆடிப்பிறப்புக்கு இப்ப எல்லாம் ஏன் விடுமுறை விடுவதில்லை....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிப்பிறப்பு இன்று புதன்கிழமை (16-07-2008) என்று நினைக்கிறேன்..! :lol:

அனைவருக்கும் ஆடிப்பிறப்பு வாழ்த்துக்கள்.

ஆடிப்பிறப்பு வாழ்த்துக்களா? :)

Link to comment
Share on other sites

ஆகா பார்க்கவே பசிக்குதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிப்பிறப்பு வாழ்த்துக்களா? :)

ஏன் வாழ்த்துச் சொல்லக் கூடாதோ. ஆடிப்பிறப்பு தமிழர்களின் பண்டிகைகளில் ஒன்றாச்சே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

16ம் திகதி 7ம் மாதம் 2008ம் ஆண்டான இன்றுதான்

ஆடிப்பிறப்பு.

கள உறவுகளுக்கு வாழ்த்துகள்.

குளா அண்ணா படம் அருமை..

Link to comment
Share on other sites

உலகத்தில் பரந்து வாழ் அனைத்து மக்களிற்கும் என்னுடைய ஆடிப்பிறப்பு நல்வாழ்த்துக்கள் :) ..அது சரி அது ஏன் ஆடிபிறப்பை மட்டும் கூழ் எல்லாம் காய்ச்சி கொண்டாடீனம் மிச்ச மாதங்களும் தானே பிறக்குது அதை எல்லாம் கூழ் காய்ச்சி கொண்டாடுறதில்ல ஏன்..??..(நிசமா நேக்கு தெரியாது)... :mellow:

எதாச்சும் விசேசமான காரணம் இருக்கோ..இருந்தா எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கோ இல்லாட்டி என்னுடைய பிறந்த தினத்தையும் நீங்க எல்லாரும் "கூழ்" குடித்து கொண்டாடனும் சொல்லி போட்டன் :) ..சரி..சரி ஒருத்தரும் என்னை திட்டி போடாதையுங்கோ நான் அப்பாவி குழந்தை ஆக்கும்... :(

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா பிறக்கும் போது கொண்டாடுறோம் பிறந்தா பிறகு திண்டாடுறோம் இது தான் வாழ்க்கை" :wub:

அப்ப நான் வரட்டா!!

ஐயோ கொழுக்கட்டையையும் கூழையும் பார்க்க வாய் ஊறுது . ஜமுனா நாங்கள் செய்வமா? நன்றி குளக்காட்டான்

சித்தப்பு..உப்ப உது எல்லாம் சாப்பிட்டு போட்டு தான் நான் வாரன்.. :wub: (ஆகா என்ன ருசி)..உங்கன்ட வீட்ட செய்யலையா சித்தப்பு..?? :wub: ..தங்களின் ஆசையையும் நிறைவேற்றிட்டா போச்சு..ஆடி கூழ் தானே பேஷா செய்து எல்லாருக்கு கொடுத்திடுவோம் கோகுலத்தில... :lol:

அப்ப நான் வரட்டா!!

ஆடிப்பிறப்புக்கு இப்ப எல்லாம் ஏன் விடுமுறை விடுவதில்லை....?

அதுவோ..வந்து..வந்து..ஆடிபிறபிற

Link to comment
Share on other sites

இன்றா???

எந்த திகதி??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஆடிக்கூழ் குடித்தேன். ஆடிப்பிறப்பு வாழ்த்துகள். தமிழரின் பண்டிகை இல்லாத நத்தார், தீபாவளி போன்றவற்றுக்கு வாழ்த்துச் சொல்வது என்றால் எம்மவர்கள் வரிசையில் நிற்பினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்கந்தப்பு.... எல்லாருக்கும் எனது ஆடிப்பிறப்பு வாழ்த்துக்கள்.

அதுசரி குளக்ஸ்... உந்த படத்தில இக்கிற கூழ், மோதகம் கொளுக்கட்டை எல்லாம் உங்கள் வீட்டில் செய்ததோ இல்லையெண்டால் எங்களை கடுப்பேத்த போட்டதோ?

Link to comment
Share on other sites

இன்று என்றால் 16/07/08, உங்களுக்கு இப்ப 17/07/08, எனக்கு இன்னும் 16/07/08 :mellow:

நான் நேற்று இரவு இதை பதிந்த போது உங்களுக்கு 16/07/08.... அதாவது ஆடிப்பிறப்பு எனக்கு 15/07/08...... இப்ப புரிஞ்சிச்சா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.