Jump to content

நன்மை, தீமைகள்


Recommended Posts

Apple Mac System த்திற்கும் Windos System த்திற்கும் இடையிலுள்ள நன்மை, தீமைகளை அறிய விரும்புகின்றேன். நான் இதுவரை Apple Mac System ஐ பாவிக்கவில்லை. எனவே அதனைப் பாவித்த அனுபவமுள்ளோர் அதுபற்றிய விபரங்களை அறியத் தந்தால் பலரும் அறிந்து கொள்ள உதவியாகவிருக்கும். நன்றி.

Link to comment
Share on other sites

நானும் விரைவில அப்பிள் லப்டொப் ஒண்டு வாங்கலாம் எண்டு இருக்கிறன். இப்ப பாவிக்கிறது டெல்.

யாராச்சும் அப்பிள் லப்டொப் வச்சு இருந்தால் உங்கட அனுபவங்கள கொஞ்சம் பகிர்ந்துகொள்ளுவீங்களோ? குறிப்பா இப்ப latest ஆனதில நிறைய மாற்றங்கள் வந்து இருக்கிறதா சொல்லுறீனம். யாராச்சும் மிக அண்மையில அப்பிள் கணணி வாங்கி இருக்கிறீங்களோ?

மற்றது அப்பிள் வாங்கேக்க கவனிக்க வேண்டிய முக்கியமான விசயங்கள் பற்றியும் உங்களுக்கு தெரிஞ்சால் சொன்னால் புண்ணியமாப் போகும்.

நான் முக்கியமா அப்பிள் வாங்க விரும்புறது ஏன் எண்டால் மியூசிக் எடிட்டிங், மற்றது கிராபிக்ஸ் வேலைகளுக்கு அப்பிள் நல்லது எண்டு சொல்லிறீனம். அதான்.

எண்ட அண்ணா அப்பிள்தான் பாவிக்கிறார். அதில எம்.எஸ். மெசஞ்சர், எம்.எஸ்.என் வெப்காம்புகள் போன்றது பாவிக்க ஏலாது எண்டு சொன்னார். மற்றும்படி வேற முறைப்பாடுகள் இல்லை. வேற ஆக்களிடம் இருந்தும் அப்பிள் கணணி வாங்க ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன். நன்றி!

நான் அண்ணாவின்ட அப்பிள் லப்டொப்பை பாவிச்சபோது எனக்கு அதுகொஞ்சம் கஸ்டமாக இருந்தது பாவிப்பதற்கு. புதுப்பழக்கம் எண்டபடியால். பழகக்பழக சரிவரும் எண்டு நினனக்கிறன்

Link to comment
Share on other sites

எனனிடம் அப்பிள் மக் புக் இல்லை. அதனால் சொந்த அனுபவத்தை சொல்ல முடியாது.

இணையத்தில் தேடி கிடைத்தது.

http://kb.wisc.edu/showroom/page.php?id=3045

http://www.macvswindows.com/index.php?titl...ows_Comparisons

http://www.macvswindows.com/index.php?titl...ware_Management

Link to comment
Share on other sites

நன்றி குளக்காட்டான் பபா. பிறகு நேரம் இருக்கேக்க இத வாசிச்சு பார்க்கிறன். ஆனால் ஒரு சிக்கல் அப்பிள் சரியான விலை.

Link to comment
Share on other sites

குளக்காட்டான் பபா, நுணாவிலான் பபா இணைத்த இணைப்புக்கள் மூலம் பல தகவல்களை பெறக்கூடியதாக இருந்திச்சிது. இருவருக்கும் முரளி பபாவின் நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இணைப்புக்களை இணைத்த குளக்காட்டன் மற்றும் நுணாவிலானுக்கு நன்றிகள். ஆனாலும் யாரவது நம்மவர்கள் பாவித்த போது கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

13 வருடமாக Apple Macintosh மட்டுமே பாவிக்கிறேன்.

தொழில்னுட்பத்தின் முன்னோடியாக Apple நிறுவனம் கருதப்படுகிறது. Microsoft நிறுவனத்தின் Windos System கூட ஆரம்பத்திலிருந்து இன்றுவரை Apple இன் புதுமையான கண்டுபிடிப்புகளையே பிரதிபலிக்கிறது.

Mac System பாவிப்பதற்கு இலகுவானது. அழகான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இன்று பரவலாகப் பாவிக்கப்படும் graphics மென்பொருட்களின் (Photoshop, Adobe Premier, Quark Xpress... ) தோற்றத்திற்கு காரணமாக இருந்துள்ளது.

2000 ம் ஆண்டுவரை பிடிவாதமாக தனக்கென தனித்துவமான தொழில்னுட்பங்களுடன் இயங்கி வந்த Apple நிறுவனம் அதன்பின்னர் விற்பனையை அதிகரிக்கும் விதமாக சில மாற்றங்களைச் செய்யவேண்டி வந்தது.

அதன் ஒஉர் கட்டமாக PC கணணியில் பாவிக்கும் உதிரிப்பாகங்களை தனது கணணியிலும் பாவிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்து அதன் System இல் பாரிய மாற்றம் ஏற்பட்டது. Unix system (Free BSD) ஐ பல மாற்றங்களுடன் தனது கணணிக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் பல வசதிகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக வைரஸ் தாக்கம் இல்லவே இல்லை. நான் இதுவரை எந்த Anti Virus அல்லது Anti Spy மென்பொருட்களையும் பாவித்தது கிடையாது.

வேலைத் தளத்தில் எனக்கு Mac தான் வேண்டுமென்று பிடிவாதமாகக் கூறினேன். 50 பேர் வேலை செய்யும் நிறுவனத்தில் நான் மட்டுமே Mac பாவிக்கிறேன். முதலில் வாங்கிய கணணி 7 வருடங்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இயங்கியது. பின்னர் வேகம் குறைவாக இருந்ததால் மாற்றிவிட்டேன். Microsoft Office நன்றாக வேலை செய்கிறது. இப்போது வெளிவரும் Mac கணணிகளில் Mac System, Windows Vista ஆகிய இரண்டையும் இயக்கலாம். கணணியைத் திறக்கும்போது எந்த System தேவை என்பதைத் தெரிவு செய்யலாம்.

ஆனால் பாதகமான விடயங்களும் உண்டு. PC யிலுள்ள மென்பொருட்கள் இதனுடன் சேராது. விளையாட்டுகள் மிக மிகக் குறைவு.

Link to comment
Share on other sites

macpc2va4.jpg

இடது பக்கம் உள்ளது ஒரு iMac

வலது பக்கம் அதற்குச் சமனான Dell PC

macpc1ek9.jpg

Mac Pro ஒன்றின் உள் பக்கம்.

PC ஒன்றின் உள் தோற்றம் (வலது).

iphone-abonnement-zoom.jpg

iPhone இல் பாவிக்கப்படுவதும் Mac system தான்

Link to comment
Share on other sites

நன்றி இணையவன்

உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு.

ஏனைய கள உறவுகள் எவரேனும் அனபவமுடையோர் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

உலகம் பூராவும் பெரும்பாலோர் பாவிப்பது PC கணனிகளைத்தான்.

உலகம் பூராவும் பெரும்பாலான அச்சகத்தார், வெளியீட்டாளர்கள், Graphic designers பாவிப்பது அப்பிளின் MAC கம்பியூட்டர்களையும் அதனோடு Quark மென்பொருளையும். Quark ல் விண்டோஸ் பதிப்பும் உண்டு.

ஆனால் தற்போது PCயும் InDesign மென்பொருளும் சரியான போட்டியை கொடுக்கிறது.

Quark ம் InDesign உம் வெளியீட்டாளர்கள் பாவிக்கும் Lay-out Programme.

குறித்த தேவைக்கு உகந்தது Apple+Mac. பரவலான பொது தேவைக்கு PC+விண்டோஸ்.

Mac கம்பியூட்டர்கள் 3 மடங்கு விலை அதிகமானது. ஆனால் உறுதியானது. நீடித்து உழைக்ககூடியது.

Link to comment
Share on other sites

நன்றி தேவகுரு அண்ணா.

உங்களை நீண்ட நாட்களின் பின் பார்ப்பதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சமீபத்தில் எனது நண்பரொருவர் Apple Computer வாங்கினார். அதில் Harddisk 300 GB இருக்கின்றது. அதை குறைந்தது 6 பகுதிகளாக பிரிக்க விரும்பி கணினியை வாங்கிய கடையில் கேட்ட போது, Apple Computer அப்படி பிரிக்க முடியாது என்று கடைக்காரர் கூறினார். இது சரியான தகவலா?? ஏன் பகுதிகளாக பிரிக்க முடியாது என்பதை யாராவது விளக்குவீர்களா!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் எனது நண்பரொருவர் Apple Computer வாங்கினார். அதில் Harddisk 300 GB இருக்கின்றது. அதை குறைந்தது 6 பகுதிகளாக பிரிக்க விரும்பி கணினியை வாங்கிய கடையில் கேட்ட போது, Apple Computer அப்படி பிரிக்க முடியாது என்று கடைக்காரர் கூறினார். இது சரியான தகவலா?? ஏன் பகுதிகளாக பிரிக்க முடியாது என்பதை யாராவது விளக்குவீர்களா!!!

இதிலை இருக்கோ எண்டு பாருங்கோ.

Link to comment
Share on other sites

நன்றி சபேஷ் இணைப்பிற்கு. எனது நண்பருக்கு தெரிவித்து விடுகின்றேன்.

Link to comment
Share on other sites

சமீபத்தில் எனது நண்பரொருவர் Apple Computer வாங்கினார். அதில் Harddisk 300 GB இருக்கின்றது. அதை குறைந்தது 6 பகுதிகளாக பிரிக்க விரும்பி கணினியை வாங்கிய கடையில் கேட்ட போது, Apple Computer அப்படி பிரிக்க முடியாது என்று கடைக்காரர் கூறினார். இது சரியான தகவலா?? ஏன் பகுதிகளாக பிரிக்க முடியாது என்பதை யாராவது விளக்குவீர்களா!!!

16 பகுதிகளாக இலகுவாகப் பிரிக்க முடியும்.

image4cq3.gif

Link to comment
Share on other sites

நன்றி இணையவன் தங்களின் படத்துடன் கூடிய விளக்கத்திற்கு.

ஆனால் HD ஐ பிரிக்கும் போது HD யில் பதிந்துள்ளவை அழியாமல் எப்படிப் பிரிப்பதென்பதை கொஞ்சம் விளக்கமாகத் தருவீர்களா??

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Apple Mac System த்திற்கும் Windos System த்திற்கும் இடையிலுள்ள நன்மை, தீமைகளை அறிய விரும்புகின்றேன். நான் இதுவரை Apple Mac System ஐ பாவிக்கவில்லை. எனவே அதனைப் பாவித்த அனுபவமுள்ளோர் அதுபற்றிய விபரங்களை அறியத் தந்தால் பலரும் அறிந்து கொள்ள உதவியாகவிருக்கும். நன்றி.

கருங்கல் வீட்டிற்கும் செங்கல் வீட்டிற்கும் உள்ள வித்தியாசம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.