Jump to content

உறவும் வரும் பகையும் .வரும் .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உறவும் வரும் பகையும் .வரும் .....

பூமிப்பந்து தன் வேலையை செவனே செய்து கொண்டு இருக்க மணித்துளிகள் நாட்களாகி அவை வாரந் களாகி மாதங்களாகி வருடங்களும் பதினைந்தை தாண்டி விட்டது .ஈழத்தின் ஒரு தீவகதொகுதியில் ஆசைகொரு மகனும் ஆசைகொரு மகளுமாக சின்னையா குடும்பம் வாழ்ந்து வந்தது

காலம் கடமையை செய்ய மகள் நிதிலாவும் மகன் நிரோஷனும் பருவ வயதை அடைந்தனர்

.மகன் பட்ட படிப்புக்காக தலைநகரம் செல்ல மகள் நித்திலா தையல் ,சமையல் டிப்ளோமா ,என்று ஒரு குடும்ப பாங்கான பெண்ணாக வளர்ந்து கொண்டு வந்தாள்

.தையல் வகுப்புக்கு போகும் வழியில் ரேடியோ கடை . அதில் போவோர் வருவோரை கவரும் பாடல் இசைத்து கொண்டே இருக்கும் . அதன் சொந்த காரன் தான் ஆதவன் . இளைஞனுக்கு உரிய அத்தனை அம்சங்களுடனும் இருந்த அவன் தோகை மயிலான நிதிலாவை கவனித்து கொண்டே வந்தான்

. பாடல்களில் பிரியமான அவளுக்கு பாடலாலே காதல் தூது விட்டான் .

காலங்களும் உருண்டு ஓடின .அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் , என்று ஆகி ஊரிலும் கதை பரவி விட்டது . இதற்கிடையில் அவளுக்கு மாமன் மகனும் வெளி நாடில் இருந்து வந்து விட்ட்ருந்தான் . சின்னையா மனிவி இடம் அண்ணர் மாணிக்கம் கலியாண பேச்சை தொடங்கினார் .

ஒன்றுக்குள் ஒன்றுஆக உறவும் நீடிக்கும் . வரும் கார்த்திகை மாசம் நாள் பார்க்கலாம் என்று இரு வீடாரும் முடிவாகியது. நிதிலாவுக்கு நெஞ்சிலே ஆதவனும் ,பாசத்திலே பெற்றோருமாக ,நித்திரை அற்ற இரவுகளாக நாட்கள் ஓடின ,ஒரு நாள் ஆதவன் நிதிலாவிடம் முடிவாக என்ன சொல்கிறாய் ,உன் மனம் கொண்டவன் நான் ,எனை மறந்து மச்சானுடன் வாழ முடியுமா? உன் தாய் தந்தையர் எது வரை ,? உன்னை வற்புறுத்தவில்லை உனக்கு இதயம் ஒன்று இறந்தால் என்னுடன் வா என்று தன் முடிவை தெரிவித்து விட்டான் . .

.நித்திலா என்ன செய்வாள் ?....( நாளை தொடரும் )...

Link to comment
Share on other sites

உறவும் வரும் பகையும் .வரும் .....

..... ,ஒரு நாள் ஆதவன் நிதிலாவிடம் முடிவாக என்ன சொல்கிறாய் ,உன் மனம் கொண்டவன் நான் ,எனை மறந்து மச்சானுடன் வாழ முடியுமா? உன் தாய் தந்தையர் எது வரை ,? உன்னை வற்புறுத்தவில்லை உனக்கு இதயம் ஒன்று இறந்தால் என்னுடன் வா என்று தன் முடிவை தெரிவித்து விட்டான் . .

.நித்திலா என்ன செய்வாள் ?....( நாளை தொடரும் )...

நிலாமதி நித்திலா என்ன சொன்னா நமக்கென்ன...? நீங்களா இருந்தா என்ன சொல்லுவீங்க அதைச் சொல்லுங்க முதல்ல...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D நிலாமதி அக்கா உன்மையான கதையா அல்லது அனுபவகதையா

என்று சொல்லுங்கள் ?

பாவம் ஆதவன்

Link to comment
Share on other sites

என்ன சொன்னாள் என நீங்களே சொல்லுங்க.. ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி உங்கள் கதையில் இடம்பிடித்துவிட எழுத்துகளுக்குள் சண்டை போல்... சண்டைபிடித்து தாமே முந்திவிட சொற்களும் மாறிவிட்டன.... சற்று அவதானித்துக் கொள்ளுங்கள்.....

நாளைக்காக காத்திருக்கிறோம்........

Link to comment
Share on other sites

அட...பொறுத்த இடத்தில கதையை நிற்பாட்டி போட்டியள்..நிலா(மதி) அக்கா :lol: ..சரி மிச்சத்தையும் எழுதுங்கோ வாசிக்க ஆவலா இருக்கிறன்.. :lol:

ஆனா எனக்கு இன்னொரு சந்தேகம்...ஒரு ஆள பார்த்தவுடன காதல் வந்திடுமா..??.. :D (நானும் எத்தனையோ பேரை பார்க்கிறன் எனக்கு அப்படி ஒரு இலவும் நடக்கல)..அப்படின்னா எப்படி தான் காதல் வருது..இப்ப ஒரே நேரத்தில பல பேரோட காதல் வந்தா என்ன செய்யிறது :lol: ஒருத்தரும் என்னை ஏசாதையுங்கோ நிசமா எனக்கு உது எல்லாம் விளங்கள ஒருக்கா விளங்கபடுத்திறியளோ..??.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியன் தங்கள் நாசூக்கான பிழை சுட்டி காடலுக்கு நன்றி முயற்சிக்கிறேன் . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனைவருக்கும் .......

கதை வாசித்து கருத்து பகிர்ந்த முரளி,தூய,ஜம்மு பேபி,முனிவர் ,இதயநிலா ,பிரபா நன்றி.

நான் ஒரு தேர்ச்சி பெற்ற கதை ஆசிரியை அல்ல .என்னால் முடிந்த

,எழுத முயற்சிக்கும் ஒரு தமிழ் மகள். தட்டி கொடுப்பும் பண்பான தவறு சுட்டி காட்டுதலும்

,கருத்து பகிர்வும் என்னை மேலும் ஊக்கப் படுத்தும் .நன்றி

நட்புடன் நிலாமதி , ,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.