Jump to content

நீங்கள் யாராக விருப்பம்?


Recommended Posts

அடுத்த பிறவி என்டு ஒன்டு இருந்தால்...நீங்கள் யாராக விருப்பம்?

சும்மா பொழுதுபோக்குக்காக ஒரு வித்தியாசமான தலைப்பு.

நீங்கள் மறுபிறப்பு என்று உண்டு என்று நம்பினால், அதில் யாராக, எதுவாக,

எப்படியானவராக பிறக்க நினைக்கிறீங்கள். ஏன்?

எங்க எல்லாரும் உங்கள் கற்பனை குதிரையை ஓடவிடுங்க பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply

நல்லதொரு கேள்வி ரசிகை பபா..

இந்தாருங்கோ முரளி பபாவிண்ட குதிர முதலில ஓடுது..

அடுத்த பிறவி எண்டு ஒன்டு இருந்தால்...நீங்கள் யாராக விருப்பம்?

எனக்கு கடவுள் மாதிரி குறிப்பாக கிருஷ்ண பகவான் மாதிரி பிறக்க விருப்பம்...

ஏன்?

ஏன் எண்டால் அது நல்ல ஜாலியா இருக்கும்.

அடுத்த பிறவி மட்டும் பொறுமையாக இருக்க முடியவில்ல. இப்பகூட கிருஷ்ணபகவானா மாறிக்கொண்டுதான் இருக்கிறன். சமயம் வரேக்க நான் கடவுளிண்ட அவதாரம் எண்டு எங்க.. யாழிலதான் அறிவிக்கப்போறன்.. குடை, ஆலவட்டம், சாமரங்களோட ஆயத்தமா இருங்கோ......... தங்கத்தில தேர் கட்டினால் எனக்கு உலா வர வசதியா இருக்கும். முயற்சியே திருவினை. பகவானிண்ட நீள் பயண பவனி கால்கோலாகப் போகின்றது. அதுவரை பொறுமையாக இருந்து எனது முன்னேற்றங்கள உன்னிப்பாக அவதானிச்சுக்கொண்டு இருங்கோ. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க வேண்டும்.பசுமையான வாழ்க்கை.அடிமைத்தனமில்லாத வாழ்க்கை.இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை. :wub:

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் எவரின் தொந்தரவுகளும் இல்லாமல் எவரிடமும் கையேந்தி நிற்காமல் நிம்மதியான வாழ்க்கைக்கு விவசாயமே உதவும் :D ஒரு சிலர் என்னைப்பார்த்து பட்டிக்காட்டான் என முணுமுணுப்பது எனக்கு கேட்கின்றது. :lol:

இருப்பினும் எனது கருத்துக்கள் இங்கு தொடரும் :unsure:

Link to comment
Share on other sites

அடுத்த பிறவி என்டு ஒன்டு இருந்தால்...நீங்கள் யாராக விருப்பம்?

சும்மா பொழுதுபோக்குக்காக ஒரு வித்தியாசமான தலைப்பு.

நீங்கள் மறுபிறப்பு என்று உண்டு என்று நம்பினால், அதில் யாராக, எதுவாக,

எப்படியானவராக பிறக்க நினைக்கிறீங்கள். ஏன்?

எங்க எல்லாரும் உங்கள் கற்பனை குதிரையை ஓடவிடுங்க பார்ப்பம்.

சும்மா பொழுது போக்குக்காக ஒரு வித்தியாசமான தலைப்பாக நீங்கள் கேட்டாலும், நிஜமாகவே என் ஆசை என் அன்புத் தாய்க்கு இதே மகனாக பிறக்க வேண்டுமென்பதே. காரணம் பிள்ளைகளுக்காக என் அம்மா செய்தவை எல்லாவற்றையும் இன்று நினைத்தாலும் கண்ணீர் தான் வரும். அவருடன் அருகில் இருந்த போது அந்த அருமைத் தாய் செய்த தியாகங்கள் புரியவில்லை. ஆனால் அவவை விட்டு பிரிந்து வெளிநாடு வந்தபின் தான் ஒவ்வொன்றும் புரிந்தன. ஊரிலிருக்கும் போது எந்த வேலையாகவிருந்தாலும் தானே எல்லாவற்றையும் எமக்குச் சிரமம் கொடுக்காமல் செய்து முடிப்பா. வீட்டில் 2 வேலைக்காரர்கள் உதவிக்காக இருந்தாலும் குறிப்பாக சமையலில் முழுக்க முழுக்க அவவின் கைவண்ணம் தான். அந்தச் சுவையை இன்றுவரை நான் வேறெங்கும் காணவில்லை. அம்மா 5 பேருக்குச் சமைத்தால் என்ன 50 பேருக்குச் சமைத்தால் என்ன அந்த ருசி என்றுமே ஒரே மாதிரித்தானிருக்கும்.

என் தந்தைக்கு கடமை செய்ய சந்தர்ப்பம் கிடைத்து அவரே என்னைப் பாராட்டத் தக்கவகையில் செய்திருக்கின்றேன். ஆனால் என் தாய்க்கு கடமை செய்ய முடியாமல் காலன் விபத்தொன்றினால் என் தாயைக் கவர்ந்து சென்று விட்டான். நான் வெளிநாடு வந்த பின்னால் என் தாயை மீண்டும் சந்தித்து என் கடமையைச் செய்ய எனக்குக் கொடுப்பனவு இல்லாமல் போய்விட்டது. அதனால் என் தாய்க்கு இப்பிறப்பில் செய்ய முடியாமல் போன கடமைகளை அடுத்த பிறவியிலாவது செய்ய ஆசைப்படுகின்றென்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தபிறவியில் பொம்பிளையாகப் பிறக்க ஆசை. அப்பதானே அடிவாங்காமல் தப்பலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு முந்திவிட்டார்.

நிஜமாகவே என் ஆசையும் என் அன்புத் தாய்க்கு இதே மகனாகப் பிறக்க வேண்டுமென்பதே.

அத்துடன் தற்போது என் கூடவே வரும் நல்ல நண்பி என் மனைவிக்கு மீண்டும் நண்பனாக வேண்டும் என்பதும்.

Link to comment
Share on other sites

அடுத்த பிறவியில் ஈழத்தில் பிறந்து அங்கு ஒரு போராளியாக வேண்டும்.

(போர் முடிந்தாலும் போராளிகள் வேண்டும் தானே)

Link to comment
Share on other sites

இதேபோல் மறுபடியும் ஈழத்தில் பிறக்கவேண்டும். சுதந்திரத்தை என் நாட்டில் முற்று முழுதாக அனுபவிக்க வேண்டும்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாண் நாணாகவே மீண்டும் பிறக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சுப்பர் மான்" போல பிறக்கனும் என்று ஆசை..! :D

Link to comment
Share on other sites

இன்றுபோல் அன்றும் தமிழனாய் பிறக்கவேண்டும். தமிழ் ஈழத்தின் வாசத்தை தினம் தினம் நுகர்ந்து வாழவேண்டும். வெளிநாட்டு வாழ்க்கையே வேண்டாம். தாயிலிருந்து இன்றைய என் குழந்தைவரை எனது நண்பர்கள் உறவினர்கள் உற்றவர்கள் மொத்தத்தில் இன்றைய வாழ்க்கை வேண்டும். மாவீரர்களும் உயிரோடு வேண்டும்;. புன்னகை செல்வனுடன் அரசியல் அண்ணனும் வேண்டும். . . .

Link to comment
Share on other sites

இந்தப் பிறவி போதும். இனி ஒரு பிறவி வேண்டாம்.

Link to comment
Share on other sites

அடுத்த பிறவியில் நான் என்னுடைய அம்மாவாகப் பிறக்க வேண்டும். அதே போல என்னுடைய அம்மா நானாகப் பிறக்கவும் வேண்டும்.

அடுத்து ஒருபிறப்பிருந்தால்

அம்மா உன்பிள்ளையாக

பிறக்கின்ற வரமெனக்கு

பிச்சையாகவும் வேண்டாம்

மாறாக நீயெனக்கு

மகனாக வரவேண்டும்

நான்செய்த தவறெல்லாம்

நீசெய்ய அழவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறுபிறப்பின் மீது நம்பிக்கை ஒன்றும் இல்லை, ஆனால்:

அடுத்த பிறவியில் ஈழத்தில் பிறந்து அங்கு ஒரு போராளியாக வேண்டும்.

(போர் முடிந்தாலும் போராளிகள் வேண்டும் தானே)

இதுவே எனது ஆசையும் கூட.

Link to comment
Share on other sites

நான் மீண்டும் பிறந்தால், இன்னும் புத்திசாலியாக, பலசாலியாக, பணக்காரனாக, நல்லவனாக பிறந்து, உற்றார், உறவினர், இனசனம், எம்தமிழ் உறவுகள் என்று எல்லோருக்கும் மேலும் பயனுள்ளவனாக இருக்கவேண்டும்.

சே.. கனவு கண்டது காணும். இருப்பதை வைத்துக்கொண்டு மேலும் பயனுள்ளவனாக இருக்க முயற்றிக்கிறேன்.

Link to comment
Share on other sites

அடுத்த பிறவி ஒன்றிருந்தால் மார்க்கண்டேயனாக பிறக்க விரும்புகிறேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணாக பிறந்து இந்த ஆண்களை அடக்கி ஆளனும் :lol:

அப்படி என்றால் இப்ப நீங்கள் ஆணா? :D:lol:

Link to comment
Share on other sites

பெண்ணாக பிறந்து இந்த ஆண்களை அடக்கி ஆளனும் :D

ஏன் இப்ப அடக்கி ஆள எந்த ஆணும் சிக்கவில்லையா... கொஞ்சம் பொறுங்கள்.. கிடைப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு கேள்வி ரசிகை பபா..

இந்தாருங்கோ முரளி பபாவிண்ட குதிர முதலில ஓடுது..

அடுத்த பிறவி எண்டு ஒன்டு இருந்தால்...நீங்கள் யாராக விருப்பம்?

எனக்கு கடவுள் மாதிரி குறிப்பாக கிருஷ்ண பகவான் மாதிரி பிறக்க விருப்பம்...

ஏன்?

ஏன் எண்டால் அது நல்ல ஜாலியா இருக்கும்.

அடுத்த பிறவி மட்டும் பொறுமையாக இருக்க முடியவில்ல. இப்பகூட கிருஷ்ணபகவானா மாறிக்கொண்டுதான் இருக்கிறன். சமயம் வரேக்க நான் கடவுளிண்ட அவதாரம் எண்டு எங்க.. யாழிலதான் அறிவிக்கப்போறன்.. குடை, ஆலவட்டம், சாமரங்களோட ஆயத்தமா இருங்கோ......... தங்கத்தில தேர் கட்டினால் எனக்கு உலா வர வசதியா இருக்கும். முயற்சியே திருவினை. பகவானிண்ட நீள் பயண பவனி கால்கோலாகப் போகின்றது. அதுவரை பொறுமையாக இருந்து எனது முன்னேற்றங்கள உன்னிப்பாக அவதானிச்சுக்கொண்டு இருங்கோ. :D

கலைஞா,,,இவை மட்டும்தான் காரணமா?????? கிருஷ்ணனில் லீலைகள் யாமறிவோம் :lol:))

"சுப்பர் மான்" போல பிறக்கனும் என்று ஆசை..! :D

இப்பவும் 'மான்" மாதிரித்தான் துள்ளுறீங்க நெடுக்ஸ் அண்ணை....அது பிரமாதமாக(சுப்பரா)த்தான் இருக்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பிறவி என்டு ஒன்டு இருந்தால்...நீங்கள் யாராக விருப்பம்?

சும்மா பொழுதுபோக்குக்காக ஒரு வித்தியாசமான தலைப்பு.

நீங்கள் மறுபிறப்பு என்று உண்டு என்று நம்பினால், அதில் யாராக, எதுவாக,

எப்படியானவராக பிறக்க நினைக்கிறீங்கள். ஏன்?

எங்க எல்லாரும் உங்கள் கற்பனை குதிரையை ஓடவிடுங்க பார்ப்பம்.

<<<

ரசிகை அக்கா,

உது நீங்கள் விளையாட்டுக்காக கேட்ட கேள்விதானே..:D அதனால் விளையாட்டாகவே சொல்றன்..

நெடுக்ஸ் அண்ணைக்குப் படிப்பிக்கும் ஆசிரியையாகப் பிறக்க வேண்டும் :lol:

Link to comment
Share on other sites

எனக்கு கடவுள் மாதிரி குறிப்பாக கிருஷ்ண பகவான் மாதிரி பிறக்க விருப்பம்...

ஏன்?

ஏன் எண்டால் அது நல்ல ஜாலியா இருக்கும்.

அடுத்த பிறவி மட்டும் பொறுமையாக இருக்க முடியவில்ல. இப்பகூட கிருஷ்ணபகவானா மாறிக்கொண்டுதான் இருக்கிறன். சமயம் வரேக்க நான் கடவுளிண்ட அவதாரம் எண்டு எங்க.. யாழிலதான் அறிவிக்கப்போறன்.. குடை, ஆலவட்டம், சாமரங்களோட ஆயத்தமா இருங்கோ......... தங்கத்தில தேர் கட்டினால் எனக்கு உலா வர வசதியா இருக்கும். முயற்சியே திருவினை. பகவானிண்ட நீள் பயண பவனி கால்கோலாகப் போகின்றது. அதுவரை பொறுமையாக இருந்து எனது முன்னேற்றங்கள உன்னிப்பாக அவதானிச்சுக்கொண்டு இருங்கோ. :lol:

ஆகா ஏன் உங்களுக்கு இப்படி ஒரு விபரீதமானா ஆசை. ??

சரி என்ன என்டாலும் அப்படியே உங்கள் ஆசை நிறைவேறட்டும் :D:D

நான் அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க வேண்டும்.பசுமையான வாழ்க்கை.அடிமைத்தனமில்லாத வாழ்க்கை.இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை. :D

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் எவரின் தொந்தரவுகளும் இல்லாமல் எவரிடமும் கையேந்தி நிற்காமல் நிம்மதியான வாழ்க்கைக்கு விவசாயமே உதவும் :lol: ஒரு சிலர் என்னைப்பார்த்து பட்டிக்காட்டான் என முணுமுணுப்பது எனக்கு கேட்கின்றது. :D

இருப்பினும் எனது கருத்துக்கள் இங்கு தொடரும் :o

ம்ம் நல்ல ஆசை உங்களுக்கு. உங்கள் ஆசை அப்படியே நிறைவேறக்கடவது. :D

எனது சின்னத்தாத்தா விவசாயி அவடை வீட்டை போறது வயலுக்கை போறது தாத்தாக்கு சாப்பாடு கொண்டு போறது என்டால் எங்களுக்கு நல்ல விருப்பம் சின்னனுல எங்கட பொழுதுபோக்கே அந்த வயல்வரம்பெல்லாம் சுத்தி திரியுறதுதான். அது ஒரு கனாக்காலம்

Link to comment
Share on other sites

சும்மா பொழுது போக்குக்காக ஒரு வித்தியாசமான தலைப்பாக நீங்கள் கேட்டாலும், நிஜமாகவே என் ஆசை என் அன்புத் தாய்க்கு இதே மகனாக பிறக்க வேண்டுமென்பதே. காரணம் பிள்ளைகளுக்காக என் அம்மா செய்தவை எல்லாவற்றையும் இன்று நினைத்தாலும் கண்ணீர் தான் வரும். அவருடன் அருகில் இருந்த போது அந்த அருமைத் தாய் செய்த தியாகங்கள் புரியவில்லை. ஆனால் அவவை விட்டு பிரிந்து வெளிநாடு வந்தபின் தான் ஒவ்வொன்றும் புரிந்தன.

ஆகா வசம்ப்பண்ணா நெஞ்சை நக்கீட்டீங்கள். சரி சரி உங்கள் ஆசையும் அப்படியே நிறைவேறட்டும்.

உண்மைதான் ஒரு எங்களை எல்லாம் சுமந்து பிரசவிக்க ( ஏன் பிரசவம் என்டு சொல்லுற என்டு தெரியுமா> ஒரு உயிரை பெற்றெடுக்கும் போது தாய் செத்துப் பிழைக்கிறா அதனால் தான் பிர சவம் என்டு சொல்லுறது) எவ்வளவு கஷ்டப்பட்டு பிறக்கு எங்கட குழப்படி கூத்துக்கள் எல்லாம் பொறுத்து எங்களை வளர்த்து நல்ல மனிதராக உருவாக்கி விடுகினமே.. அதுக்கு என்ன கைமாத்து செய்தாலும் ஈடாகாது. :D:D

அடுத்தபிறவியில் பொம்பிளையாகப் பிறக்க ஆசை. அப்பதானே அடிவாங்காமல் தப்பலாமே.

ஹா ஹா கந்தப்பு உங்களுக்கு எப்பவுமே குசும்புதான் சரி சரி போனால் போகட்டும் உங்கள் ஆசையும் அப்படியே நடக்கட்டும். ஆனால் குஞ்சாச்சி தான் அடுத்த முறை உங்களுக்கு புருசனா வந்து வெளுத்துக்கட்டனும் :lol::D

வசம்பு முந்திவிட்டார்.

நிஜமாகவே என் ஆசையும் என் அன்புத் தாய்க்கு இதே மகனாகப் பிறக்க வேண்டுமென்பதே.

அத்துடன் தற்போது என் கூடவே வரும் நல்ல நண்பி என் மனைவிக்கு மீண்டும் நண்பனாக வேண்டும் என்பதும்.

ம்ம் அப்படியே உங்கள் ஆசையும் நிறைவேறட்டும் அதுசரி இதே மனைவிக்கு கணவனாக வேண்டும் என்கிறீங்களா இல்லை நண்பனாக மட்டும் இருந்தால் போதும் என்கிறீங்களா??? ;) :D

அடுத்த பிறவியில் ஈழத்தில் பிறந்து அங்கு ஒரு போராளியாக வேண்டும்.

(போர் முடிந்தாலும் போராளிகள் வேண்டும் தானே)

ம்ம் உங்கள் ஆசை நியாயமான ஆசை அப்படியே நிறைவேறட்டும். :D

இதேபோல் மறுபடியும் ஈழத்தில் பிறக்கவேண்டும். சுதந்திரத்தை என் நாட்டில் முற்று முழுதாக அனுபவிக்க வேண்டும்..! :lol:

ஒவ்வொரு ஈழத்தமிழனது ஆசையும் இதுதானே. :D

நாண் நாணாகவே மீண்டும் பிறக்க வேண்டும்.

நீங்கள் நீங்களாகவே பிறந்து???? :D

சும்மா லொள்ளு :o

Link to comment
Share on other sites

"சுப்பர் மான்" போல பிறக்கனும் என்று ஆசை..!

இப்பவே அப்படித்தானே இருக்கிறியள் இதுக்கு ஏன் அடுத்த பிறவிக்குப் போவான்.

சரி சரி சும்மா லொள்ளு உங்கள் ஆசையும் அப்படியே நிறைவேறட்டும் :D

இன்றுபோல் அன்றும் தமிழனாய் பிறக்கவேண்டும். தமிழ் ஈழத்தின் வாசத்தை தினம் தினம் நுகர்ந்து வாழவேண்டும். வெளிநாட்டு வாழ்க்கையே வேண்டாம். தாயிலிருந்து இன்றைய என் குழந்தைவரை எனது நண்பர்கள் உறவினர்கள் உற்றவர்கள் மொத்தத்தில் இன்றைய வாழ்க்கை வேண்டும். மாவீரர்களும் உயிரோடு வேண்டும்;. புன்னகை செல்வனுடன் அரசியல் அண்ணனும் வேண்டும். . . .

நியாயமான ஆசை அப்படியே நடக்கட்டும் :o

இந்தப் பிறவி போதும். இனி ஒரு பிறவி வேண்டாம்.

என்ன இப்படி வெறுத்துப்போய் சொல்லுறியள். :D

அடுத்த பிறவியில் நான் என்னுடைய அம்மாவாகப் பிறக்க வேண்டும். அதே போல என்னுடைய அம்மா நானாகப் பிறக்கவும் வேண்டும்.

உங்கட நியாயமான ஆசை தான் ஆனால் நிறைவேறக் கூடாது. அப்புறம் என்ட ஆசை நிறைவேறாமல் போயிடும். :D

சரி சரி சும்மா. அப்படியே ஆகட்டும் :D

மறுபிறப்பின் மீது நம்பிக்கை ஒன்றும் இல்லை, ஆனால்:

இதுவே எனது ஆசையும் கூட.

நல்லது அப்படியே நடக்கட்டும்.

ஆனால் உந்த ஆசை நிறைவேற கட்டாயம் அடுத்த பிறப்பு வரையும் காத்திருக்க வேணுமா???

நான் மீண்டும் பிறந்தால், இன்னும் புத்திசாலியாக, பலசாலியாக, பணக்காரனாக, நல்லவனாக பிறந்து, உற்றார், உறவினர், இனசனம், எம்தமிழ் உறவுகள் என்று எல்லோருக்கும் மேலும் பயனுள்ளவனாக இருக்கவேண்டும்.

சே.. கனவு கண்டது காணும். இருப்பதை வைத்துக்கொண்டு மேலும் பயனுள்ளவனாக இருக்க முயற்றிக்கிறேன்.

ஐயையோ உங்களுக்கு ரொம்ப பெரிய ஆசையா கிடக்கு.

சரி சரி அப்படியே நடக்கட்டும் :D

அடுத்த பிறவி ஒன்றிருந்தால் மார்க்கண்டேயனாக பிறக்க விரும்புகிறேன்.

ஆகா!! ஏன் உங்களுக்கு இப்படி ஒரு ஆசை என்டு சொல்லவே இல்லையே :lol:

பெண்ணாக பிறந்து இந்த ஆண்களை அடக்கி ஆளனும் :D

ஏன் இந்தப்பிறவில உதுக்கு வழியில்லையோ?????????? :lol:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணைக்குப் படிப்பிக்கும் ஆசிரியையாகப் பிறக்க வேண்டும் :)

ஐயையோ நெடுக்சுக்கேவா?? ரொம்பக்கஷ்டமே.

சரி உங்கட ஆசையை ஏன் கெடுப்பான். அப்படியே ஆகட்டும். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.