Jump to content

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.


Recommended Posts

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

'ஈழத்தழிழர்களின் வலியை பதிவு செய்வேன்" பருத்திவீரன் இயக்குனர் அமீர் ஆவேசம் என அண்மையில் செய்திகள் படித்தோhம். அமீரின் ஆவேசம் என்ன என்பது பற்றி அவரது உரையைக் கேட்டபின் பின்தான் உண்மை உறைத்தது. ஒரு உண்மையான கலைஞனின் ஆதங்கம் அமீரின் உரையில் வெளிப்பட்டிருக்கிறதேயன்றி அது ஆவேசமல்ல. யதார்த்த வாழ்வை பிரதிபலித்த பருத்தீவீரனை நுணுநுணுக கவிதையாகப் பதிந்திருக்கும் அமீரின் கவிதைக் கண்களுக்குள் உப்புச்சப்பில்லாத எதையோ சினிமா என்று டென்மார்க்கிலிருந்து தமிழகம் சென்று பணத்தை விசிறி பாடல்காட்சிப் படம் காட்டியிருக்கிறார் கி.செ.துரையென்கின்ற கி.செல்லத்துரை.

சினிமா என்ற பெயரில் பல லட்சம் டெனிஷ் குரோணர்களை ஏற்கனவே 'பூ(ஈ)க்கள்" என்று கத்;தியும் துவக்கும் காட்டி எமது தொலைக்காட்சிகளும் தென்னிந்தியப் பெரும்பான்மைப் படங்கள் போடும் கனவுலக ஆட்டத்தையுமே புதுமையான பூக்கள் என்று பெயரிட்டு கொசுக்களைப் படம் காட்டிய கி.செல்லத்துரை அவர்கள் திரும்பவும் பல லட்சம் டெனிஷ் குரோணர்களை கொட்டி தனது மகனை கதாநாயகனாக்கி 'இளம்புயல்" என்ற பெயரில் திரைப்படம் என்று ஒன்றைத் தயாரித்திருக்கின்றார்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டினை சென்னையில் நிகழ்த்தியுமிருக்கிறார். எம்மவர் சினிமா என இதற்குப் பெயரிட்டு எம்மவர்களுக்கான சினிமா இதுதான் என தமிழகத்தில் போய் நின்று வீரவிளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த உரையைக் கேட்கின்ற ஒவ்வொரு ஈழத்தவனும் நாக்கைப்பிடுங்கி (இவர்களுக்காக நாக்கைப் பிடுங்குவது அதிகம்தான்) சாகலாம் போலத்தானிருக்கும். இல்லை எங்கள் கால்களில் இருப்பதைக் கழற்றி எங்கள் முகத்தில் நாங்களே அடிக்கத் தான் தோன்றுகிறது.

போதாமைக்கு ஈழத்தழிழர் இங்கிருந்தே (அதாவது இந்தியாவிலிருந்தே) ஈழத்துக்குப் போனோம் , இங்கிருந்து போர்வீரர்களாகப் போனவர்களின் வம்சமே இன்று போராடுகின்றது என அருளுரை வழங்கியிருக்கிறார். ஈழத்தமிழினம் இலங்கையின் பூர்வீகக்குடிகள் என்பதும் எங்களுக்கான தனித்துவம் பண்பாடு கலாசாரம் மொழி உள்ளது என்பதும் எமது பூர்வீக நிலத்தை கொள்ளையிடும் சிங்களர்களுடன் நடக்கும் தமிழீழ விடுதலைப்போரின் வலிகளும் துயர்களும் டென்மார்க் வந்ததுடன் கி.செல்லத்துரைக்கு மறந்துவிட்டதா அல்லது ஞாபகப்பதிவில் மங்கிவிட்டதா ? சிங்கள இராணுவத்தின் கொலைப்பட்டியலில் குடும்பத்திலிருந்து 6பேரை கொடுத்துவிட்டு டென்மார்க் போனேன் என உருக்க உரை வழங்கியவருக்கு உண்மையில் ஈழத்தமிழரின் ஊற்று எங்கே தோற்று எங்கேயென்பது புரியாமல் கேவலக்கெட்ட ஒரு சினிமாவுக்காக எங்கள் இன மானத்தையே தமிழகத்தி;ல் போய் நின்று விற்றுவிட்ட வெங்காயச் சினிமா இயக்குனர் திலகம் கி.செ.துரையென்றால் மிகையில்லை. குடும்பத்தில் ஆறுபேரை இலங்கை இராணுவத்திற்கு பலி கொடுத்தவருக்கு அந்த வலியிருந்திருப்பின் இப்படியான வார்த்தைகளைச் சொல்ல மனம் ஒப்புமா ? யாரோ சிந்தும் குருதியில் தங்களை வளர்க்கும் துரோகத்தை கி.செல்லத்துரையால் தான் செய்ய முடியும்.

அதுமட்டுமல்ல தமிழ்சினிமாவில் இருக்கின்றவர்கள் இலங்கையிலே ஓர் இனப்போர் ஏன் நடக்கின்றது என்று கேட்டால் அதற்கு சிங்கள அரசு காரணமல்ல அதற்கு தமிழ் சினிமாதான் காரணம் என்பதைத் தமிழகத்தில் இருக்கின்ற சினிமாக்கலைஞர்கள் அறிந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்கிறார் இந்த அறிவுசீவி. தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் உட்பட சினிமாத்துறை சார்ந்த எம்மில் நேசமுள்ளவர்கள் ஈழத்தமிழினம் அதன் போராட்டம் என்ன என்பதைப் புரிந்து எங்களுக்கான பலம் தமிழகத்தில் பெருகியிருக்கிறது. இந்நிலையில் தனது சுய விளம்பரத்துக்காகவும் சொந்த இலாபத்துக்காகவும் கதையளக்கும் இவரிடமிருந்து ஈழத்தமிழர்களோ தமிழகத் தமிழர்களோ கற்க எதுவுமில்லை.

தமிழக சினிமாவைப் பார்த்துத்தான் தமிழீழ விடுதலைப்போராட்டமே நடப்பதாக ஒரு மாயையான கனவை தமிழகக் கலைஞர்கள் மத்தியில் உரைத்த கி.செல்லத்துரையின் உதவாத சினிமாவை உலகம் முழுவதிலும் புறக்கணிக்கப் போகின்றது தமிழினம். இதுவரை தமிழீழ விடுதலைப்போரில் இறந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களின் தியாகங்களும் இந்த விளக்கம் கெட்ட கி.செ.துரை காற்றாய்,கடலாய்,பெயர் சொல்லாமல் ஊர் சொல்லாமல் உயர்ந்த லட்சியத்துக்காய் தங்கள் இளைய உயிர்களை உதிர்த்த மாவீரர்களின் தியாகங்களெல்லாம் வெங்காயச் சினிமாவின் தாக்கம் என்கிறாரா ? தமிழக சினிமாக்களில் தலைவர்களின் பின்னால் நூறுபேர் நின்று தலைவர் வாழ்க தலைவர் வாழ்க என கி.செல்லத்துரைக்கும் கோஷம் போடுவார்கள் என்று எண்ணியோ என்னவோ சிவாஜி கணேசனின் 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்" பாடலில் பாதிப்பு கி.செல்லத்துரையை தலையில் முடியைக் கூட உதிர்த்துவிட்டதாக உணர்ச்சி விழிம்பில் நின்று துடித்திருக்கிறார். அப்போ சினிமாவைப் பார்த்துத்தான் தங்கைக்கு வாழ்வமைத்துக் கொடுத்தாரா ? அப்போ சுய சிந்தனையே இவரிடம் இல்லையா ? எல்லாம் சினிமாவின் வழிநடநத்தல்தானா ? தன்னை ஒரு தமிழ் ஆசிரியானாக கலைஞனாக அறிமுகமாக்கிய மனிதரின் மூளை மண்டலமே சினிமாவின் இயக்குதலா ?

வயது முதிர மனித உடலிலும் மனத்திலும் மாற்றங்கள் நிகழ்வது போல முடியுதிர்வும் இயற்கை. ஆனால் புலம் பெயர் நாடுகளில் இளவயதிலே நரையும் வழுக்கையும் பலருக்கு வந்துவிடுகிறது. காரணம் எமது இளைஞர்கள் ஒன்று இரண்டு மூன்று வேலைகளென்று செய்து உழைத்து தங்கள் தலைகளை விமான ஓடுபாதை நிலைக்கு வர வைத்துவிடுகிறார்கள். இப்படியான உழைப்பாழிகளின் பணத்தை இந்த மனிதர் தனது உதவாச் சினமாவுக்கு முதலீடாகவும் மாற்றுகிறார்.

ஈழத்தில் எத்தனையே தேவைகள் நிறைந்து கிடக்கிறது. நாளும் பசியிலும் குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலிலும் ஆட்லறி வீச்சுகளிலும் பிணங்களாக எம்மினம் நாளும் சாகிறது. அந்த மண்ணுக்காக அந்த மக்களுக்காக இந்தப் பணத்தை உதவினால் எத்தனையே நல்லவை எங்கள் மண்ணில் நடக்கும். மனமிருப்போரிடம் பணமில்லை பணமிருப்போனிடம் கொடுக்கும் மனமில்லை. வீணாக தனது குடும்ப விளம்பரத்துக்காக எத்தனை கோடிகளையும் செலவு செய்யத் தயாராக இந்த ஈழத்தமிழன். (ஈழத்தமிழருக்கே இழிவு)

அமீர் போன்றவர்கள் தமிழகசினிமாவை கதாநாயகப்பிடியிலிருந்து மீட்க போராட ஈழத்தவர்களின் பெயரைச் சொல்லி ஒரு சதத்துக்கும் பயனில்லாத ஓடிப்பிடித்து விளையாடும் கனவுப்படம் காட்டும் கி.செல்லத்துரை அமீர் போன்ற இயக்குனர்களுக்கு உதவினால் கூட குறைந்த செலவில் நிறைந்தவொரு சினிமாவை தருவார்கள். நல்லதொரு சினிமாவுக்கான தளமாக தனது பொருளாதார வளத்தை பயன்படுத்தினால் எம்மவர்களே சிறந்த சினிமாவை எடுப்பார்கள்.

ஈழத்து இளைஞன் சோமிதரன் அண்மையில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 'எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படத்தைத் தந்திருக்கிறான். சோமிதரன் செய்திருப்பது ஈழத்தமிழனத்தின் ஒரு வரலாற்று ஆவணம். யாழ் நூலக எரிப்பின் நினைவுகளை எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் ஆவணமாக்க அரும்பாடுபட்டு உழைத்திருக்கிறான். ஆயினும் இந்த இளைஞனது முயற்சிக்கு வீணாக இறைக்கும் பணத்தில் ஒரு பங்கைக் கொடுத்து உதவியிருப்பின் 'எரியும் நினைவுகள்" போல எத்தனையோ நினைவுகளை சோமிதரனும் சோமிதரன் போன்ற திறமையாளர்களும் தருவார்கள்.

மிகுந்த நெருக்கடிக்குள் சிறந்த தொழில்நுட்ப வசதியற்ற வன்னிக்குள்ளிருந்து வெளியான போராளிக்கலைஞர்களின் திரைப்படங்கள் எத்தனையோ அவையே எங்கள் ஈழத்து சினிமாவின் ஊற்றான ஆணிவேர்கள். இவையெல்லாம் தமிழக சினிமாவிலிருந்து பிறந்தவையல்ல எங்கள் கலை எங்கள் கண்களுக்குள்ளிருந்து எங்கள் மனிதர்களுக்குள்ளிருந்து பிறந்தவை. இதை விலைபேச டென்மார்க்கிலிருந்து புறப்பட்டு ஈழத்தமிழர் போராட்டமானது இந்தியா சினிhவிலிருந்து பிறந்ததென கதைவிடும் கி.செல்லத்துரையின் 'இளம் புயல்" தமிழர் வாழும் எந்த தேசத்திலும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். 30 ஆண்டுக்கு மேலாக ஈழத்தமிழர் படும் துயரை ஒற்றை வரிக்குள் ஒளித்து எங்கள் வாழ்வின் வலியை சாதாரண சினிமாவுக்கு ஒப்பாக்கிய இந்த கி.செல்லத்துரையின் இரண்டாவது படமான 'இளம் புயல்" அனைத்துத் தமிழர்களும் புறந்தள்ளி சிறந்த படைப்புக்களை ஊக்குவிக்க வேண்டும்.

இறுதியாக , பணத்துக்காக தமிழகக்கலைஞர்களின் தமிழக சினிமா உலகின் படைப்புக்களை திருடி வலைப்பதிவேற்றி பல்லாயிரம் டெனிஸ்குரோணர்களை இலாபமாகப் பெறுகிறார் கி.செல்லத்துரை. இவரது மேற்பார்வையில் இயங்கும் பல இணையத்தளங்கள் திரைக்கு வந்ததும் வராததுமாக திரைப்படங்களை திருடி தனது சுய வருவாயைப் பெருக்கிக் கொள்கின்ற பெருச்சாளி. இத்தகைய இழிவான தொழில் செய்யும் கி.செல்லத்துரை மீதும் அவரது குழு மீதும் தமிழக சினிமாவுலகம் நடவடிக்கையெடுக்க வேண்டும். ஒரு திரைப்படத்தை எவ்வளவோ செலவுகளின் மத்தியில் தமிழகத் தயாரிப்பாளர்கள் வெளியிட வீட்டுக்குள் இணைய இணைப்பும் இணைய வழங்கலுக்கான வசதியையும் பெற்று உங்கள் முதுகிலேயே சவாரி செய்யும் இந்தத் துரோகத்தனத்தை இந்தியத் திரையுலகம் இனங்காண வேண்டும்.

இறுதியாக ஈழத்தமிழர்கள் இத்தகைய வெளியிடுகளைப் புறக்கணிப்போம். சிறந்த படைப்புக்களை வரவேற்போம். ஈழம் தமிழகம் என்று பிரித்துப் பார்க்காமல் தமிழகத்திலிருந்து வெளிவரும் சிறந்த சினிமாக்களையும் வரவேற்போம். பருத்திவீரனைத் தந்த அமீர் , ஆணிவேரைத் தந்த ஜான் போன்ற இயக்குனர்களை வரவேற்போம். 'பூக்கள்" 'இளம்புயல்" என்று ஆக்களை ஏமாற்றும் கி.செல்லத்துரையிடமிருந்து சிறந்த படைப்புக்கள் கிடைக்குமாயின் அதை ஊக்குவிக்கவும் தயாராகவுள்ளோம். கி.செல்லத்துரை நீங்கள் தயாரா ? அல்லது இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பாட்டுப்பாட உங்கள் பிழைகளை மறைக்க புனைபெயர்களைத் தேடுவீர்களா ? அல்லது பூக்கள் நாயகர்களை அனுப்பி துப்பாக்கியால் சுடுவீர்களா ? எதுவாயினும் வாருங்கள். கருத்தை கருத்தால் வெல்வோம். சிறந்த கலைப்படையல்களைப் படைப்போம்.

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இந்த கி.செ. அலைகள் எண்டொரு இணையத்தளம் நடத்திக்கொண்டு பூக்கள் எண்டொரு படத்தை எடுத்து நாறடிச்சஅதே ஆளா?? ஆளாளுக்கு போராட்டத்தை வைச்சு வயிறு வளக்கினம் அதிலை துரையும் சேந்து வளக்க தொடங்கியிருக்கிறார். ஆனாலும் இந்திய தமிழ் சினிமாவை பாத்துத்தான் ஈழப் போராட்டம் தொடங்கினது என்று இந்தளவுக்கு ஈழப்போராட்டத்தை இழிவுபடுத்தியிருக்கக்கூடாத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆச்சரியமாக இருக்கிறது. கூடவே வெப்பத்துடன் நீண்டதொரு பெருமூச்சு.

மனிதரின் வயது ஐம்பதுகளைக் கடக்கும்போது சிறுபிராய மனதில் வீழ்ந்த ஆழ்மனதின் ஏக்கங்களை நனவாக்கும் பகீரத முயற்சிகளில் ஈடுபடுதல் இயல்பானதுதான். கிசெது சினிமா நாயகர்களின் கனவுலகில் சிக்குண்டவராக சிறுபிராயத்தில் இருந்திருக்கிறார். சினிமாவூடாகவே தமிழ்நாட்டையும் இந்தியாவையும் அறிந்திருக்கிறார். அக்காலத்தில் வாழ்ந்த இளையோரில் அதிகமானவர்கள் இவர்போலவே ஈழத்தில் காணப்பட்டிருந்தனர். இதை யாழ்நகரில் சினிமா வெளியிடப்பட்ட திரையரங்குகளில் பலரும் பார்த்திருக்கக்கூடும். இந்தத் திரைநாயக-நாயகிகளைத் தொட்டுப்பார்ப்பதற்காக தமிழ்நாடு சென்றுவந்தவர்களையும் நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடும்.

ஆனாலும் எழுச்சியுற்ற பெரியார்வழி திராவிடச் சிந்தனையின் பின்னாக வேறொருவகை ஈடுபாடு தமிழகம்-ஈழத்துடன் உயிர்ப்புடன் கிளம்பியிருந்தது. இந்த உறவு இன்றுவரையில் இறுக்கமானதாகத் தொடர்கிறது.

முன்னையது கனவுலகச் சலனங்களாகப் பின்னப்பட்டது. இரண்டாவது, மானிட நேசிப்பால் யதார்த்த இருப்பால் பின்னப்பட்டது.

ஆசிரியராக அறியப்பட்ட கிசெது அவர்கள் முதல் வகைப்பிரிவினராக தன்னை வெளிக்காட்டியிருக்கிறார். அதுவும் 2008இல்.

திரையில் சலனப்பிம்பமாக சினிமா அறிமுகமாகி மக்களின் பெரும் கவனத்தைப் பெற்றிருந்த அக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து சினிமாவில் நடிக்கவந்திருந்த அழைப்பை நிராகரிதவர் ஈழத்து மேடைநாடக அரங்கில் தடம்பதித்த கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள்.

'நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்" என்று உரத்துக் கவிபடைத்தான் ஈழத்து மகாகவி.

'எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வம் கொணர்ந்திடுவீர்" என விழித்தான் சென்ற நூற்றாண்டுக் கவி பாரதி.

கலை என்பது காலம் கடந்தும் பயணிக்கும் மாபெரும் சொத்து, ஒருகாலகட்டத்தை வேறொரு காலகட்டத்திற்குப் புரியவைக்கும் பதிவு. வெறும் பொழுது போக்குக்கானதல்ல.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அனுபவங்கள் காலம் கடந்தும் செல்லக்கூடிய பொக்கிசங்கள். உலகத்தின் மானிட மனட்சாட்சியை உலுக்கக்கூடியவை.

இவற்றை திறம்பட பதிவுசெய்யக்கூடிய படைப்பாளிகளை அதுவும் உத்வேகமுடைய இளையோரை நாடி இருக்கிறது இன்றைய தமிழ்பேசும் உலகு.

இன்று 'வணக்கம், நன்றி, சுகமா.... " போன்ற வார்ததைகளை பல்லின வாய்களிலிருந்து வெளிப்படுவதைக்காண்கிறோம்.ஈழ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது இந்த...................................சொல்லுங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோடம்பாக்கம் சினிமாவில் வரும் கர்பிணித் தாய்மாரைப் பார்த்துத்தான் ஈழத்தாய்மார் குழந்தைபெறக் கற்றுக்கொண்டார்கள் என்று சொல்லாமல் விட்டாரே கி.செ.துரையார்.

அறுபது வந்தால் அறளைபெயரும் என்பார்கள் ஆனால் அதற்கு முன்னரே கி.செ.துரைக்கு அறளை பெயர்ந்து விட்டதோ எனச் சந்தேகிக்க வேண்டி உள்ளது.

நுணலும் தன்வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப தான் குட்டு வாங்கியது மட்டுமல்லாமல் புலம்பெயர்தோர் சினிமாவிற்கான முயற்சியாளர் அனைவருக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில் கி.செ.துரை நடந்து கொண்டது நம்மால் புறந்தள்ளக் கூடியதல்ல.

தனது நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனையும், இயக்குநர் அமீரையும் அழைக்க இந்த கி.செ.துரை என்ன புலுடாக்களை எல்லாம் அவிழ்த்துவிட்டாரோ. நாம் அறியோம். ஆனால் அவை வெளிவரும்.

தனது மகனுக்காக தந்தையான கி.செ.துரையின் திருகுதாளங்களைப் பார்த்தால் குடும்ப வாரிசுகளுக்கு முடிசூட்ட தமிழ்நாட்டு முதல்வர் ஆடும் ஆட்டங்கள் அனைத்தும் தூசுதான்.

கி.செ.துரை போன்றோரின் கபடத்தனங்களை உரித்துக்காட்டுவோர் புகழ் ஓங்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.

ஈழப்போராட்டத்தை வைச்சுத்தான் உந்த சினிமா இப்போ நடக்கிறது

Link to comment
Share on other sites

சாந்தியின் பதிவிற்கு நன்றி.

ஆனால் உங்கள் பதிவில் தந்த குறிப்பிட்ட விடயங்கள் வெளிவந்த இணைப்புக்களையும் தந்தீர்களானால் அவற்றினை நாமும் பார்த்து விமர்சிக்க உதவியாகவிருக்கும்.

Link to comment
Share on other sites

தலைப்பை பார்த்துத்தான் உள்ள வந்தன்.... சினிமாவுக்குள் ஈழத்தை இழுத்ததால்...வந்தேன். கவனம் கவனமாக இருக்கணும்... நாமும் இந்த யாழும் இல்லைண்டா... எம்மையே எமாத்துடுவாங்க... எம்மையே எண்டா.... எம்போல் இணைய.... ஈழத்தகவல் அறியாத... அந்த ரீவி.... சினிமா... படத்திலையே வாழும்.... ஈழ அன்றாட கூலிவேலையும் தான் வாழ்க்கை... இது என இருக்கும் ஈழத்தமிழர்கள் பாடு... கடவுளே....... :unsure::lol::o:lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரிட உரையை நானும் கேட்டனான். எனக்கு வாயில தூசனம்தான் வந்தது. அதை எழுதக் கூடெதென்டு விட்டுட்டன்.

ஐயோ.. தமிழக இயக்குனர்கள் எங்கடை வலியை பதிவு செய்யவில்லையே.. என்று அழுகிற ஆட்களுக்கு ஒண்டு சொல்லுறன் - எங்கடை -------------- வலியை பதிவு செய்யாமல் பாட்டும் கூத்துமெண்ட மூன்றாம்தர (தமிழ்சினிமாவை விட கேவலம். ) கழிசறைப் படங்களை எடுத்துக் கொண்டு.. அடுத்தவனைப் பார்த்து ஐயோ எங்களை பற்றி ஒரு படம் எடன் எண்டு சொல்லுற ஒரு மண்ணாங்கட்டி உரிமையும் எங்களுக்கு இல்லை.

ஆளும் அவரின்ரை இளிச்ச வாயும்.. ரத்தத்துக்குள்ளை வாரிக் கொண்டு போன தன்ர மகனை வளர்த்து கதாநாயகனாக்கினவராம். ம்.. வல்வெட்டித்துறை மக்கள் ஆரோ அரசன்ர காலத்தில வந்து குடியேறினவை எண்டும் சொல்லுறார்.

இப்பிடியான படங்கள் வந்த வேகத்திலேயே தோல்வியடைந்து போட்ட காசுமிழந்து போக வாழ்த்துகிறேன்.

ஏன்டாப்பா வசதியும் வாய்ப்பும் உள்ள நீங்களே உங்கடை வலியை பதிவு செய்யாமல் வௌளைக் காரியை கதாநாயகியா போட்டு ஆட்டம் காட்டுறியள். இந்த லட்சனத்தில அமீர் வந்து பதிவு செய்யணுமே.. ? (இலங்கை தமிழ் பெண்களை எங்கடை ஆட்கள் பெரும்பாலும் கதாநாயகியாக போடுவதில்லை. கலாசாரமாம். கண்டறியாத... )

உந்தப் படம் தோத்து துண்டைக் காணம் துணிய காணம் எண்டு அப்பனும் மகனும் ஓடினால்தான்... உது மாதிரியான செக்ஸ் படங்கள் வாறது நிக்கும். ஓ..

Link to comment
Share on other sites

சாந்தியின் பதிவிற்கு நன்றி.

ஆனால் உங்கள் பதிவில் தந்த குறிப்பிட்ட விடயங்கள் வெளிவந்த இணைப்புக்களையும் தந்தீர்களானால் அவற்றினை நாமும் பார்த்து விமர்சிக்க உதவியாகவிருக்கும்.

[url="http://www.tubetamil.com/view_video.php?vi...30870060538746e

வசம்பு இந்த லிங்கில் போய் மேலதிகமான விபரங்களை கேளுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம் தெரியாத செ.துரை தன் தனிப்பட்ட சினிமா ஆசையை ஒரு படப்மெடுப்பதன்மூலம் தணித்திருக்கலாம்

ஒரு படம் எடுத்தால் நான் ஏன் கொதியில கத்தப் போறன்..?

இந்த மனுசன் என்ன எடுக்கிறார் என பார்த்துதான் கதைக்கிறியளோ

Link to comment
Share on other sites

டென்மார்க்கில் வாழ்ந்தும் தமிழ் கலைஞர்களால் பூக்கள் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக டேனிஸ் மக்கள் மத்தியிலும் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் வாழ்ந்து கலைப்பணியாற்றும் கலைஞர்களின் படைப்பு இதுவாகும். உலக நாடக விழாக்கள் உள்ளிட சர்வதேச நாடக அரங்குகளில் பங்கேற்ற கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர், கணினி கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். இதன் கதை திரைக்கதை இயக்கம் ஆகிய பணிகளை கி.செ.துரை ஏற்றுள்ளார். இவர் 100 மேடை நாடகங்களை மேடையேற்றிய அனுபவமுடையவர். அமெரிக்கா முதல் ஜப்பான் வரை உலகின் பல மொழிகள் அடங்கிய நாடகக் கலைஞர்கள் பங்கேற்ற உலக நாடக விழாவில் வெற்றிபெற்ற யாத்திரை என்ற நாடகத்தை தயாரித்தவர். அத்துடன் பல நாவல்கள், இசைப்பேழைகள், இணையப்பக்க உருவாக்கம் என்று பல்வேறு தளங்களில் பணியாற்றி இம்முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த ஆண்டு மொத்தம் 100 கலைஞர்கள் நடித்த உயிரோவியங்கள் நாடகத்தை இங்கிலாந்து, டென்மார்க் ஆகிய இடங்களில் மேடையேற்றியவராவார். கலைமணி, கலைமாமணி, கலைப்பெரு வேந்தன், கலைக்காவலன் போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவராவார். இந்தத் திரைப்படத்திற்கான இசையமைப்பை எஸ். வஸந்த் கவனிக்கிறார். இவர் சமீபத்தில் இளமை இனிமை புதுமை என்ற இசைத்தட்டை வெளியிட்டு பெரும் பாராட்டைப் பெற்றவர். ஐரோப்பிய, கீழைத்தேச இசையை உயர் கல்வியில் கற்கும் மாணவனாவார். படத்தொகுப்பையும் படப்பிடிப்பையும் இணைய வடிவமைப்பாளர் அலைகள் ரவிசங்கர் பொறுப்பேற்றுள்ளார். காட்சி உருவாக்கத்தில் இவருடைய தொழில் நுட்ப தயாரிப்புக்கள் டேனிஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றுள்ளன. இப்போது தமிழ் மக்களுக்கான திரையில் அவர் பணியாற்ற முற்பட்டுள்ளார்.

சுமார் 200 மேற்பட்ட புலம் பெயர் தமிழ் கலைஞர்கள் இத்திரைப்படத்தில் பங்கேற்கிறார்கள். டென்மார்க், இங்கிலாந்து, நோர்வே, சுவீடன், சுவிற்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் படப்பிடிப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை தயாரான பகுதிகளை ஆய்வு செய்த பிரபல ஸ்கன்டிநேவிய திரைப்பட தர நிர்ணய நிறுவனம் இப்படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங், ஒலியமைப்பு யாவும் சர்வதேச தரத்தில் இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட திட்டமிட்டு பணியாற்றுகிறார்கள். தற்போது காலநிலை பனி மழையாகக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் படப்பிடிப்புக்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் தமிழ், பொஸ்னிய, துருக்கி, டேனிஸ் ஆப்கானிஸ்தான், சோமாலிய நாடுகளின் நடிகர்கள் நடிக்கிறார்கள். இது முழு நீள தமிழ் படமாகும். உலகம் பூராவும் வாழும் தமிழ் மக்களிடையே வெளியிட எத்தனிக்கப்படும் இப்படம் தமிழை மிக இலாவகமாகக் கையாழுகிறது. தமிழை எப்படிக் கையாழுவது என்ற கேள்விக்கான பதிலாகவும் இது வெளிவரவுள்ளது.

பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஐரோப்பாவின் அழகிய காட்சிகளை எல்லாம் உள்ளடக்கி வெளிவருகிறது. வெறும் அறைகளுக்குள் திரைப்படத்தை அடக்கி வைக்காமல் ஒவ்வொரு காட்சியும் ஒரு அழகான வர்ணப் புகைப்படம்போல உருவாகிவருகிறது. திரைப்படம் கமேராவால் பிடிக்கப்படுவதல்ல அது ஒவ்வொரு செ.மீ. ஆக செய்யப்படுவது என்ற புரிதலில் உருவாக்கப்பட்டு வருகிறது. புத்தம் புதிய அதிசக்தி வாய்ந்த கணினிகளில் தமிழ் கணினி விற்பனர்கள் இதை உருவாக்கி வருகிறார்கள்.

மொத்தம் 300 அற்புதமான லொக்கேஷன்களில் கதை நடைபெறுகிறது. இதுவரை வந்த தமிழ்ப் படங்களில் பாடல்களுக்குள் மட்டும் வரும் ஐரோப்பா இத்திரைப்பட மூலம் கதைக்குள்ளும் விரவிவரப் போகிறது. இதுவரை தயாரான காட்சிகளைப் பார்த்த தொழில் நுட்பக் கலைஞர்கள் நம்மாலும் முடியும் என்ற காலத்திற்குள் இலங்கைத் தமிழ் திரைப்படமொன்று கால் பதித்திருக்கிறதென்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பிரபல இயக்குநர் ஒருவர் இப்படத்தை தமிழகத்தில் பிலம் சேம்பரில் பதிவு செய்து வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறார். இப்படியான புதிய முயற்சிகள் தமிழகத்திலும் வெளியாவதே எதிர்கால வெற்றிக்கு சிறப்பாக அமையும். புலம் பெயர் தமிழரும், தமிழக கலைஞரும் இணைந்து திரைப்படங்களை தயாரிக்கும் புதிய காலம் பூப்பதற்கும் இத்தகைய முயற்சிகள் கைகொடுக்கலாம். இளம் கலைஞர்கள் பட்டாளம் நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறது. சினிமா வர்த்தகத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் திரைப்படங்களும் உலகளாவிய பயணம் செய்வதற்கான ஏற்பாடு இதுவாகும்.

http://www.yarl.com/forum/index.php?showto...p;mode=threaded

Link to comment
Share on other sites

ஓகஸ்ட் 19, 2005

அடுத்த மேற்கு ஆபிரிக்கா இலங்கையா ? -கி.செ.துரை

-சூரியன்-

இந்த நிகழ்வு சென்ற மாதம் நடைபெற்றது.

கொழும்பு புறக்கோட்டையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொருட்களை வாங்கும் யாருக்குமே அவற்றின் உண்மை விலை தெரியாது. ஆளுக்கு ஒரு விலையில் பொருட்கள் விற்பனையாகின.

அங்கு கடைவைத்திருந்த ஒரு சிங்கள வாலிபரிடம் பயணப்பை ஒன்றை ஒருவர் விலை கேட்டார். வாலிபர் இரண்டாயிரம் ரூபா விலை சொல்ல இவர் நானூறு ரூபா கேட்டார்.

அதற்கு பதில் தந்த சிங்கள இளைஞன், இவ்வளவு தூரம் நீங்கள் விலையைக் குறைத்தால் என்னால் ஒன்றுமே செய்ய இயலாது. நானும் துப்பாக்கி எடுத்து கூலிக்கு ஆட்களைக் கொல்லும் தொழிலுக்குத்தான் போக வேண்டிவரும். மனச்சாட்சிக்குப் பயந்துதான் நான் இப்படி வெய்யிலில் நின்று வியாபாரம் செய்கிறேன் என்றார்.

அந்த இளைஞரின் குரல் நேர்மையானது என்பதால் அந்த நபர் 2500 ரூபா கொடுத்து அந்த பயணப்பையை வாங்கினார். இலங்கைத் தீவு எங்கே போகிறது என்பதை அறிய விரும்புவோர்க்கு அந்த இளைஞர் கூறிய கருத்து நாளை நடப்பதைக் காட்டும் பளிங்குபோல பல செய்திகளைச் சொல்லுகிறது.

வரும் 2010 ல் இலங்கை எப்படியிருக்கும் என்று சிந்திப்போர்க்கு திரைப்படம் போல அது பல காட்சிகளைக் காட்டும். நாட்டை முன்னேற்ற எந்தவொரு பணியையும் முன்னெடுக்க முடியாத நெருக்குவாரம் உருவாகும், வெளிநாட்டு முதலீடுகள் தடைப்படும், பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்து வங்குரோத்து நிலையை அடையும், இன்று மேற்கு ஆபிரிக்க நைஞர் நாடு அடைந்துள்ள பட்டினிச்சாவு அவலம்தான் நமது நாட்டிலும் தரிசனமாகும் என்று படிப்படியாக எண்ணங்கள் விரிவடையும்.

எண்ணங்களை ஒரு புறம் வைத்துவிட்டு, நைஞர் போன்ற நாடுகள் எவ்வாறு இப்படியான நிலையை அடைந்தன என்று முதலில் சிந்திக்க வேண்டும். அந்த நாடுகள் பின்வரும் பாதாளப் படிகளால் இறங்கியே இன்றைய அவலப் புள்ளியைத் தொட்டன. முதலாவது தொடர்ச்சியான உள்நாட்டுப் போர். இரண்டாவது போரினால் மக்கள் செயலூக்கமற்று அகதிக் கூடாரங்களில் ஒதுங்க, வெளிநாடுகள் போடும் நிவாரணமே அவர்களின் வாழ்வாக மாறியது. மூன்றாவது நிவாரணங்களுக்கான காத்திருப்பு வாழ்வாகி, இறுதியில் பட்டினியிலும், பாண்டு நோயிலும் சமுதாயம் சிக்குண்டது.

இந்த நிகழ்வுகள் அங்கு நிகழும்போதே சம காலத்தில் மேலும் பல பக்க விளைவுகள் உருவாகின. ஒன்று கூலிக்குக் கொலை செய்வது, இரண்டு திருட்டுக்காக கொலை செய்வது, மூன்று போதை வஸ்த்து, நான்கு சிறுவரைப் பாலியல் வக்கிரத்திற்கு பலியாக்குவது போன்ற காரியங்கள் கிளை நதிபோல ஓடிச் சென்றன. இவைகள் பெருவாரியாக நடைபெற்று இப்போது அவைகளையும் நடாத்த வழியின்றி, நடாத்தினாலும் பயனின்றி மேற்கு ஆபிரிக்காவின் வறுமைக்கோடு பூஜ்ஜிய மட்டத்தையும் தாண்டிப் போய்விட்டது. இதுதான் மேற்கு ஆபிரிக்க வறுமையின் பொதுவான கதை. சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே மேற்கு ஆபிரிக்காவின் கடைத்தெருக்களில் கேட்டுக் கொண்டிருந்த அதே வாசகத்தைத்தான் இப்போது புறக்கோட்டையில் நின்ற சிங்கள இளைஞரும் பேசியிருக்கிறார்.

இந்த அபாயமான தொனிகள் சிங்கள ஆட்சியாளருக்கு தெரியாது, ஏதோ நமக்குத்தான் எல்லாம் தெரிந்துவிட்டது என்று நாம் நினைத்துவிடக்கூடாது. அவர்களுக்கும் இது தெரியும், ஆனாலும் அவர்களிடம் வேறுவழியில்லை. நதி பாதாளத்தை நோக்கிப் போனாலும் அதை எதிர்த்து படகை வலிக்க முடியாமல் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு நதியோடு நதியாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இடையில் சுனாமி வந்தது -

பெருமளவு உதவிகள் நாட்டை நோக்கி வந்தன. உண்மையில் அந்த உதவிகளல்ல, சிறீலங்கா அரசுக்கு சர்வதேச நாடுகள் வைத்த பரீட்சை என்றுதான் கூறவேண்டும். கிடைத்த உதவிகளை சரியான முறையில் ஊழல் இன்றிப் பகிர்ந்தளிப்பது ஓர் ஆட்சிக்கலை. சிறீலங்கா அரசுக்கு அது தெரியவில்லை, துறைமுகங்களில் உதவிகள் தேங்கிக் கிடக்க என்ன செய்வதென்று தெரியாமல் அது தலையைச் சொறிந்தது. எட்டு மாதங்களுக்குப் பிறகு சுனாமிக்கட்டமைப்பு பற்றி பேசத் தொடங்கியிருக்கிறது.

நாம் பாடுபடாமல் யாரோ தர்மத்திற்கு கொடுத்த உதவிகளையே பகிர்ந்தளிக்க இயலாதவர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து, போரினால் உண்டான அழிவுகளை மீளக் கட்டியமைக்கும் பணிகளை எப்படி முன்னெடுப்பார்கள் ? இது இன்னொரு கேள்வியாகும்.

இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக பல கேள்விகள் -

நேற்று முன்தினம் நைஞர் நாட்டு அதிபர் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் நைஞரில் வறுமை இல்லை என்றார். பின் அதற்கான காரணத்தை போசாக்கின் தலையில் போட்டு நிறைவு செய்தார். ஆனால் அவருடைய கருத்தில் ஒரு உண்மை இருக்கிறது, சர்வதேச உதவிகளை உரிய இடங்களுக்கு ஊழல் இல்லாமல் பாயச் செயதால் அவர் கூறியதுபோல நைஞர் வறுமை இல்லாத நாடுதான். ஆனால் அவரால் அது முடியவில்லை. நைஞர் மட்டுமா அனைத்து மேற்கு ஆபிரிக்க நாடுகளின் நிலையும் இதுதான். பற்றாமையை விட, கிடைத்த வளங்களைப் பிரித்தளிக்கும் கலையை அடியோடு தெரியாதிருப்பதே அவர்களின் பட்டினி மரணங்களுக்கு அடிப்படைக் காரணமாகும்.

எவ்வளவு உதவிகளை வழங்கினாலும் பட்டினியால் மரணிப்போர் தொகை குறைவடையாமலே இருக்கக் காரணமென்ன ? இதுபற்றி நீண்டகாலமாக சிந்தித்த மேலைநாடுகள் ஒரு நாள் உண்மையைக் கண்டு பிடித்தன. உதவிகள் உரியவருக்கு போய்ச் சேராமையே அங்குள்ள அடிப்படைப் பிரச்சனை என்பதையும் கண்டு கொண்டன. அதைச் சீர் செய்ய ஒரு வலையாக்க வேலைத்திட்டம் இருக்கிறது. அதை அமுல் செய்ய வேண்டுமென உதவி வழங்கும் நாடுகள் கோரின. ஆனால் அதனால் தமக்கு இலாபம் இல்லை என்பதால் ஆபிரிக்க அரசுகள் அதற்கு உடன்படவில்லை. இந்த நிலையில் வேறு வழியின்றி ஆபிரிக்க ஏழைகளை மேலை நாடுகள் இப்போது மெல்ல மறக்க ஆரம்பித்துவிட்டன. ஆபிரிக்காவில் மட்டுமா பாலஸ்தீனத்திலும் அதுதான் நடைபெற்றது. யாசீர் அரபாத் சிறந்த தலைவராக இருந்தும், உதவிகளை பகிர்ந்தளிப்பதில் அவருடைய ஆட்சியும் திறமை குன்றிய ஒன்றாகவே இருந்தது.

மேற்கு ஆபிரிக்க நாடுகளின் வறிய மரணத்திற்கு பகிர்ந்தளிப்பதில் ஊழலும், பகிர்ந்தளிக்கத் தெரியாமையும், பெருந் தொகையான மக்கள் உழைப்பின்றி உதவிகளுக்காக காத்திருந்து வாழ்ந்த வாழ்வுமே பிரதான காரணங்களாகும். இப்படி நைஞர் போல வறிய நிலைக்கு ஒரு நாடு போனால் போனதுதான் பின் அதை எந்த விலை கொடுத்தும் பழைய நிலைக்குக் மீட்டுவர இயலாது. எனவேதான் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.

இலங்கை மக்களின் வாழ்வு சுனாமிக்குப் பின்னர் பெரு மந்தமான நிலையில் உள்ளது. உதவிகள் வரும் என்ற காத்திருப்பில் வாழ்வு கரைகிறது. எந்தவிதமான சுய செயற்பாடுகளுமற்று நிவாரணத்திற்காகவும், வெளிநாட்டு உதவிகளுக்காகவும் காத்திருப்பதும், வெளிநாட்டில் இருந்து உறவுகள் அனுப்பும் பணத்தில் வாழ்வதும் காத்திருப்பின் அடையாளங்களாகும். இப்படியான நிகழ்வு மிகவும் ஆபத்தானது. காத்திருத்தல் என்பது சமுதாய வாழ்வின் கழுத்தை முறிப்பது போல ஓர் ஆபத்தான பகுதி.

இது குறித்து புலம் பெயர் தமிழ் மக்கள் கூடுதல் கவனமெடுத்து சிந்திக்க வேண்டும். அரசுகளின் செயல்களையும் போட்டி பொறாமைகளையும் கேள்விப்பட்டு சோர்ந்து விடாமல் தாயகத்தில் இருக்கும் உங்கள் உறவுகளுக்கு உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும். அவர்களுக்கு வெறுமனே பணத்தை அனுப்பி சேம்பேறிகளாக்கக் கூடாது. அவர்களை செயற்பாடுள்ள மனிதர்களாக மாற்றும் பணிகளையும் முடுக்கிவிட வேண்டும்.

ஐரோப்பாவின் பொருளாதாரப் போக்கு புலம் பெயர் மக்கள் முன்னரைப்போல பணத்தைக் கொடுக்கும் அளவுக்கு செழிப்பாக அமையவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் வருகையால் பெரும் வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார மந்தமும் அருவமாக வளர ஆரம்பித்துள்ளன. இந்த எதிர்மறை நிலை உறவுகளுக்கு உதவிகளை வழங்க இயலாத நிலையை உங்களுக்கு ஏற்படுத்தலாம். எனவேதான் சகல விடயங்களையும் ஆழ அகலமாகச் சீர் தூக்கி ஒவ்வொருவரும் தாயகத்தில் உள்ள உங்கள் உறவுகளை செம்மையாக வழி நடாத்த வேண்டும். வெறும் நுகர்வோராக இல்லாமல் செயற்பாட்டுத் திறனுள்ளவர்களாக உங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.

நீங்கள் யார் யாருக்கெல்லாம் உதவுகிறீர்கள் என்று பட்டியலிடுங்கள். அந்த உதவியால் ஏதாவது சிறு அளவிலாவது உற்பத்தி நடைபெறுகிறதா என்றும் எண்ணிப்பாருங்கள்.

http://www.webtamilan.com/politics/2005/08...2505788147.html

Link to comment
Share on other sites

நுணாவிலான் கி.செல்லத்துரை என்ற கலைஞனின் திறமைகளை யாரும் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை. தமிழகத்தில் போய் நின்று தனது சொந்தத்திரைப்படத்தை வெளியிட்டுவிட்டு வந்திருந்தால் யாரும் அவரது திறனை ஆராயமாட்டோம். ஈழவிடுதலைப்போராட்டத்தை இந்திய சினீமாவுடன் ஒப்பாக்கியதுதான் மேற்படி கட்டுரை வரவேண்டியிருந்தது.

கவிமணி கலாமணி பட்டங்களை எந்த இடத்திலும் குறைக்கவுமில்லை இழிக்கவுமில்லை.

கி.செல்லத்துரை அவர்களின் உரையைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்தை வையுங்கள்.

http://www.tubetamil.com/view_video.php?vi...30870060538746e

பூக்களையும் புயல்களையும் பயனுள்ளதாய் தரட்டும். யாரும் தடையில்லை. வேண்டிய ஆதரவை நாமும் வளங்குவோம்

Link to comment
Share on other sites

சாந்தி

இணைப்புக்கள் வழங்கியமைக்கு நன்றிகள். அதுபோல் உரிய பதிவுகளையும் இணைத்தமைக்கு நுணாவிலானுக்கும் நன்றிகள்.

நீங்கள் இணைத்த இணைப்பில் 8 பகுதிகளாக இருந்தவை அனைத்தையும் இதுவரை பார்த்து முடித்தேன். இணைப்புக்களில் சிலது ஒரு நேரம் வேலை செய்கின்றது, ஒரு நேரம் வேலை செய்யவில்லை. அதனால் தொடர்ந்து முயற்சி செய்து எல்லாவற்றையும் பார்த்து முடித்தேன்.

உண்மையில் நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள். துரை அவர்கள் எமது போராட்ட எழுச்சிக் குணம் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் வசனங்களினாலும் எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களின் நடிப்பைப் பார்த்து ஏற்பட்டதேயொழிய, சிங்கள அரசினால் அல்ல என்று இந்திய தமிழ்ச் சினிமா பற்றி பாராட்டாகச் சொல்ல முனைந்திருக்கின்றார். மற்றும்படி விடுதலைப் போராளிகளையோ, விடுதலைப் போராட்டத்தையோ எந்த இடத்திலும் இழிவாக அவர் சொல்ல வரவில்லை. பூனைக்குட்டி இன்னொரு பக்கத்தில் அவசரப்பட்டது போன்று, நீங்களும் இங்கு அவசரப்பட்டது வியப்பளிக்கின்றது. நான் அறிந்தவரை டென்மார்க் தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப் படுபவராக துரை அவர்கள் இருக்கின்றார். அப்படிப்பட்ட ஒரு கலைஞரை வெறும் அரசியல் சாயம் பூசி கேவலப்படுத்த முயல்வது முறையல்ல. நீங்கள் தெரிந்து செய்தீர்களோ அல்லது தெரியாமல் செய்தீர்களோ எனக்குத் தெரியாது?? ஆனால் உங்களிடமிருந்து இப்படியான மலிவான செயல்களை நான் எதிர் பார்க்கவில்லை. இந்நிகழ்ச்சியில் தொல் திருமாவளவன் அவர்கள் குறிப்பிட்டது போல் "பேனா பிடிப்பவர்கள் முதலில் தாம் என்ன எழுதப் போகின்றோமென்பதை மனச்சாட்சியோடு யோசித்துவிட்டு எழுதுவதே சாலச் சிறந்தது".

இவ்விடயத்தில் விடயங்களை இணைப்போர் மட்டுமல்லாது, அதனைத் தொடர்ந்து கருத்துக்களை வைப்போரும் விடயத்தினை நிதானமாக நன்கு ஆராய்நது தமது கருத்துக்களை வைப்பதும் நல்லது. கருத்துக்களை வைத்து விட்டு, ஐயோ நாம் தவறாக எண்ணி கருத்தை எழுதிவிட்டோமென்று பின்பு யோசிப்பதில் என்ன பயன்.

இங்கு சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை மற்றவர்களை உசுப்பேற்ற எந்தவித ஆதாரங்களுமின்றி இணைத்துவிட்டுச் செல்கின்றார்கள். ஆதாரமாக தமது இணையத்தள முகவரியை போடுகின்றார்கள். இதைவிடக் கேவலம் சிலர் புதினம், தறஸ்தமிழ் போன்ற இணையத்தளங்களில் இருந்து செய்திகளைச் சுட்டுப் போட்டுவிட்டு தமது நிருபர் என்று ஒரு பெயரையும் எமுதிவிடுவது. அதனை நிர்வாகமும் ஒரு தலைப்பட்சமாக விட்டு வைக்கின்றது. அதனை பார்த்துவிட்டு எத்தனை பேர் உண்மைத் தன்மையை யோசிக்காது கருத்துக்கள் வைத்திருக்கின்றார்கள் என்பதற்கு ஒரு இணைப்பையும் இணைக்கின்றேன். படித்துப் பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=41172&hl=

Link to comment
Share on other sites

யாராவது சாந்தி இணைத்த இணைப்பைப் பார்க்க விரும்பினால் இணைப்பிலுள்ள 8 பகுதிகளையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. 7வது 8வது பகுதிகளைப் பார்த்தாலே போதும். 7வது பகுதியில் பாடகர் மாணிக்க விநாயகம் அவர்களைத் தொடர்ந்து, துரை அவர்கள் உரை தொடங்குகின்றது. அவரின் உரை பகுதி 8 வரை உள்ளது.

Link to comment
Share on other sites

வசம்பண்ணா உங்கள் நேர்மையான விமர்சனத்துக்கு நன்றி. ***

சாந்தி அவர்களின் கட்டுரைக்கு நிதானமாக கருத்தெழுத நினைத்தேன். செ.துரை அவர்கள் கூறியதில் சில உண்மைகள் உண்டு ஈழத்தமிழரும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்றவர்களாகவே இருக்கவேண்டும். அது விஜயன் செல்வதற்கு முன்னர் நடை பெற்றிருக்கின்றது.

மற்றையது நமது தேசியத்தலைவரே ஒரு நேர்காணலில் இயற்கை எனது வழிகாட்டி வீரபாண்டிய கட்ட பொம்மன் கப்பலோட்டிய தமிழன் போன்ற திரைப்படங்கள் தன்னுடைய விடுதலை உணர்வை வளர்த்ததாக. தனக்கு சோழர்களின் வீரம் பிடித்தாகவும் கடல்புறா போன்ற நூல்கள் மூலம் சோழர்களின் வீரத்தை அறிந்ததாகவும் அதனால் புலிச்சின்னத்தை தான் தேர்ந்தெடுத்ததாகவும்..

சாந்தி அக்கா உங்களுக்கு செ துரையில் தனிப்பட்ட கோபங்கள் இல்லாவிடின் உங்கள் தவறை உணர்ந்து உங்கள் கருத்தை களத்தில் வைப்பிர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி எழுதியதைத் தான் வசம்பு இணைப்பை பார்த்து மீளவும் உறுதி செய்திருக்கிறார். இதில் என்ன தவறு கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது? தென்னிந்திய சினிமா கொடுத்த உணர்ச்சி வேகம் தமிழர் போராட்டத்திற்கு குறிப்பிடத்தக்க வேகமூட்டியது என்ற கருத்து துரை அவர்களின் சொந்தக்கருத்து மட்டுமே. ஒரு பாரிய பங்களிப்பு நடந்திருந்தால் அதை யாராவது "நாடகமும் அரங்கியலும்" மாணவர்கள் இக்கணம் ஆய்வு செய்து ஒரு முதுகலைப் பட்டம் வாங்கிப் போயிருப்பார்கள். தமிழர் போராட்டத்திற்கு உந்துதல் தரும் வலுவான காரணங்கள் எவ்வளவோ இருக்க ஒரு கற்பனை உலகோடு முடிச்சுப் போட்டது தேவையில்லாத ஒரு "முகஸ்துதி" மட்டுமே! போதாக் குறைக்கு தலைவரின் கருத்தைக் கொண்டு வந்து முண்டு வேறு கொடுக்கிறார்கள். தலைவரோ அவர் தளபதிகளோ, நிஜமாக நடந்த போராட்ட வரலாறுகளிடம் தான் அதிகம் ஈர்க்கப் பட்டிருக்கிறார்கள். அரசியல் வாதிகளின் மேடை வசன வீச்சுகள், சினிமாக் காரர்களின் கற்பனைகள் பால் அல்ல!

Link to comment
Share on other sites

வசம்பண்ணா உங்கள் நேர்மையான விமர்சனத்துக்கு நன்றி. ***

சாந்தி அவர்களின் கட்டுரைக்கு நிதானமாக கருத்தெழுத நினைத்தேன். செ.துரை அவர்கள் கூறியதில் சில உண்மைகள் உண்டு ஈழத்தமிழரும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்றவர்களாகவே இருக்கவேண்டும். அது விஜயன் செல்வதற்கு முன்னர் நடை பெற்றிருக்கின்றது.

மற்றையது நமது தேசியத்தலைவரே ஒரு நேர்காணலில் இயற்கை எனது வழிகாட்டி வீரபாண்டிய கட்ட பொம்மன் கப்பலோட்டிய தமிழன் போன்ற திரைப்படங்கள் தன்னுடைய விடுதலை உணர்வை வளர்த்ததாக. தனக்கு சோழர்களின் வீரம் பிடித்தாகவும் கடல்புறா போன்ற நூல்கள் மூலம் சோழர்களின் வீரத்தை அறிந்ததாகவும் அதனால் புலிச்சின்னத்தை தான் தேர்ந்தெடுத்ததாகவும்..

சாந்தி அக்கா உங்களுக்கு செ துரையில் தனிப்பட்ட கோபங்கள் இல்லாவிடின் உங்கள் தவறை உணர்ந்து உங்கள் கருத்தை களத்தில் வைப்பிர்களா?

சோழன்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். மேலும் நிச்சயமாக சாந்தி வேண்டுமென்று இவ்விடயத்தை செய்திருப்பதாக நான் நம்பவில்லை. தவறாக அவ விளங்கியிருக்கலாம்.

மேலும் இராவணனே ஒரு தமிழன் என்று வரலாறுகள் கூறுகின்றன. அப்படியானால் அவன் ஆட்சியிலிருந்த மக்களும் தமிழர்கள் தானே?? அப்படியிருக்க இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு தமிழர்கள் வந்தார்கள் என்பதும், ஒரு ஊகமாக வேண்டுமானால் எடுக்கலாமே தவிர திடமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் மகாவம்சத்தில் விஜயனும் அவனது 400 தோழர்கள் வருகையும், அதன் பின் அவன் குவேனியை மணந்து அவளைக் கைவிட்டு, திரும்பவும் தென் இந்தியாவிலிருந்தே விஜயனுக்கும் அவனது 400 தோழர்களுக்கும் மணமகள்கள் வந்ததாகச் சொல்லப்படுகின்றதே!! அவர்களின் வாரிசுகள் தான் தற்போதைய பெரும்பாண்மையான சிங்களவர்கள். அப்படிப் பார்த்தால் சிங்கள இனத்தை விட அதிகமான உருத்துரிமை தமிழர்களுக்கு உண்டல்லவா?? எனவே எவர் எப்போது இலங்கைக்கு வந்தார் என்ற விவாதங்களை விடுத்து, எல்லா மக்களும் சம உரிமையுடன் வாழ வழி வகுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

சாந்தி எழுதியதைத் தான் வசம்பு இணைப்பை பார்த்து மீளவும் உறுதி செய்திருக்கிறார். இதில் என்ன தவறு கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது? தென்னிந்திய சினிமா கொடுத்த உணர்ச்சி வேகம் தமிழர் போராட்டத்திற்கு குறிப்பிடத்தக்க வேகமூட்டியது என்ற கருத்து துரை அவர்களின் சொந்தக்கருத்து மட்டுமே. ஒரு பாரிய பங்களிப்பு நடந்திருந்தால் அதை யாராவது "நாடகமும் அரங்கியலும்" மாணவர்கள் இக்கணம் ஆய்வு செய்து ஒரு முதுகலைப் பட்டம் வாங்கிப் போயிருப்பார்கள். தமிழர் போராட்டத்திற்கு உந்துதல் தரும் வலுவான காரணங்கள் எவ்வளவோ இருக்க ஒரு கற்பனை உலகோடு முடிச்சுப் போட்டது தேவையில்லாத ஒரு "முகஸ்துதி" மட்டுமே! போதாக் குறைக்கு தலைவரின் கருத்தைக் கொண்டு வந்து முண்டு வேறு கொடுக்கிறார்கள். தலைவரோ அவர் தளபதிகளோ, நிஜமாக நடந்த போராட்ட வரலாறுகளிடம் தான் அதிகம் ஈர்க்கப் பட்டிருக்கிறார்கள். அரசியல் வாதிகளின் மேடை வசன வீச்சுகள், சினிமாக் காரர்களின் கற்பனைகள் பால் அல்ல!

உங்களுக்கு நான் தெரிவித்திருக்கும் கருத்தும், சாந்தி எழுதியிருப்பதும் ஒன்றாகவா தெரிகின்றது?? :wub: ஒரு சினிமா மேடையில் சினிமாத் தனமாகத் தான் பேசலாம். அதில் துரை செய்ததில் எவ்வித தவறும் இல்லை.

இவ்வளவு சொல்லும் நீங்கள் இயக்குனர் சீமானுக்கு தம்பி படமா முதல்ப்படம்?? தம்பி படம் வெளிவரும் போது தானே அவருக்கு இலங்கைத் தமிழ் மக்களின் துயரம் தெரிந்தது. ஏன் அதற்கு முதல் அவர் வெளிநாட்டிலா இருந்தார். அதுபோல் இயக்குனர் அமீர் அவர்களுக்கு நமது துயரங்கள் இந்தியாவிலிருக்கும் போது புரியவில்லை. ஆனால் பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் பறந்து பேர்லின் வந்த பின் தான் புரிந்தது என்று சொன்னால் எல்லோரும் நம்பி விடுவீர்கள். எல்லாம் விளம்பரம் செய்யும் வியாபாரத் தந்திரங்கள் என்பது எவருக்குமே புரியாது தான்!! :lol::lol:

ஆனால் நம்மவர் ஒருவர் கலைத்தறையில் ஏதாவது செய்ய முற்பட்டால், அதை எப்படியாவது அரசியலாக்கி உண்டு இல்லையெனப் பண்ணிவிடுவீர்கள். இது தான் நம்மினத்தின் சாபக்கேடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந் நிகழ்ச்சிக்கு முக்கியமானவரின் ஒரு சில வார்த்தை பரிமாற்றம் தவறுதலாகி விட்டதென நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

இந் நிகழ்ச்சிக்கு முக்கியமானவரின் ஒரு சில வார்த்தை பரிமாற்றம் தவறுதலாகி விட்டதென நினைக்கின்றேன்.

:wub:சொல்லு சூழ்ச்சி பண்ணீற்றுதெண்டு சொல்ல வாறியளோ?? :lol:

Link to comment
Share on other sites

//இலங்கையிலே ஒரு இனப்போர் ஏன் நடக்கின்றது என்று கேட்டால் அதற்கு சிங்கள அரசு காரணமல்ல தமிழ்சினிமாதான் காரணம் என்பதை தமிழகத்தில் இருக்கின்ற தமிழ் சினிமா கலைஞர்கள் அறிந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.//

தமிழ்சினிமா காரணம் என்பதும் சிங்கள அரசு காரணமில்லை என்பதும் மிகப்பிழையான ஒரு கருத்தே. இது உற்சாக மிகுதியோ வார்த்தை பிறழ்வோ எதுவோ திருத்தப்படவேண்டிய ஒன்றே. போராட்டத்திற்கு தமிழர் வீர வரலாற்றை சொல்லும் சில திரைப்படங்களில் இருந்து சில உந்து சக்திகள் கிடைத்தது என்ற ஒரு கருத்தை தான் சொல்லவந்தார் என்று ஊகிக்க முடியாதளவுக்கு சிங்கள அரசு காரணமில்லை என்பது இடக்கு முடக்கான ஒரு நிலை. இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படாது என்று நம்புவோம்.

Link to comment
Share on other sites

QUOTE(குமாரசாமி @ Jul 28 2008, 07:25 PM)

இந் நிகழ்ச்சிக்கு முக்கியமானவரின் ஒரு சில வார்த்தை பரிமாற்றம் தவறுதலாகி விட்டதென நினைக்கின்றேன்.

:lol:சொல்லு சூழ்ச்சி பண்ணீற்றுதெண்டு சொல்ல வாறியளோ?? :D

என்வோ நடக்கிறது.... அன்று தொட்டு இன்றுவரை யாழ் இணயத்தில்.... சில செய்திகளை... விமர்சனங்களை.... இங்கு உள்ளமுக்கய கள உறவுகள் கருத்தாடும்போது.... புலத்தில்.... நாம் அரிதாக உள்ள நேரத்தில்... வந்து உடனே உள்வாங்குகிறோம்.... :wub::) இது யாழில் நிடுகலும் தொடர்ந்தால்... எல்லாருக்கும் பிரச்சனைதான்.... :lol: இதில் இருந்து தீர்வுகாண்பதும் குதிரைக்கு கொம்பு முழைத்தமாதிரித்தான் ... :lol::( நன்றி :D

Link to comment
Share on other sites

தமிழ்சினிமா காரணம் என்பதும் சிங்கள அரசு காரணமில்லை என்பதும் மிகப்பிழையான ஒரு கருத்தே. இது உற்சாக மிகுதியோ வார்த்தை பிறழ்வோ எதுவோ திருத்தப்படவேண்டிய ஒன்றே. போராட்டத்திற்கு தமிழர் வீர வரலாற்றை சொல்லும் சில திரைப்படங்களில் இருந்து சில உந்து சக்திகள் கிடைத்தது என்ற ஒரு கருத்தை தான் சொல்லவந்தார் என்று ஊகிக்க முடியாதளவுக்கு சிங்கள அரசு காரணமில்லை என்பது இடக்கு முடக்கான ஒரு நிலை. இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படாது என்று நம்புவோம்.

//தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் இலங்கையிலே ஒரு இனப்போர் ஏன் நடக்கின்றது என்று கேட்டால் அதற்கு சிங்கள அரசு காரணமல்ல தமிழ்சினிமாதான் காரணம் என்பதை தமிழகத்தில் இருக்கின்ற தமிழ் சினிமா கலைஞர்கள் அறிந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.//

நீங்கள் இணைத்திருக்கும் உரையின் தொடக்கம் தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் என்று தான் ஆரம்பிக்கின்றது. இதேபோல் இதனைத் தொடர்ந்து வருவனவற்றையும் கேட்டால் எல்லோருக்கும் புரியும். நீங்கள் ஒலிப்பதிவை கேட்கவில்லையென்றே எண்ணுகின்றேன். முடிந்தால் முழுவதையும் (பகுதி 7 மற்றும் பகுதி 8) கேட்டுப் பாருங்கள். தவறுகள் ஏற்படும் போது சுட்டிக் காட்டுவது தவறில்லை. நிச்சயமாக தவறுகள் திருத்தப் பட வேண்டும். ஆனால் ஒரு கலைஞனை முளையியேயே கிள்ளி விடுவது போல் விமர்சிக்க முயல்வது முட்டாள்த் தனமானது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.