Jump to content

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் நம்மவர் ஒருவர் கலைத்தறையில் ஏதாவது செய்ய முற்பட்டால், //

அண்ணை.. பூக்கள் படத்த பார்த்தாப் பிறகும் அவர் கலைத்துறையில ஏதாவது செய்ய வெளிக்கிடுறாரோ எண்டு பாத்து பகிடி விடுங்கோ..

ஆனா இதில நான் சொல்ல வாறதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். அதாவது வசதியும் வாய்ப்பும் கிடைத்த நாங்களே ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் எண்டு மசாலாப் படம் செய்து போட்டு..

பிறகு ஐயோ மணிரத்னம் எங்களை பற்றி படமெடுக்கவில்லை. பாரதிராசா பண்ணவில்லை.. பாலு மகேந்திரா செய்ய வில்லையென மாரடிச்சு அழுவதும் எழுதுறதும் என்ன நியாயம்?

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

ஆனா இதில நான் சொல்ல வாறதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். அதாவது வசதியும் வாய்ப்பும் கிடைத்த நாங்களே ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் எண்டு மசாலாப் படம் செய்து போட்டு..

பிறகு ஐயோ மணிரத்னம் எங்களை பற்றி படமெடுக்கவில்லை. பாரதிராசா பண்ணவில்லை.. பாலு மகேந்திரா செய்ய வில்லையென மாரடிச்சு அழுவதும் எழுதுறதும் என்ன நியாயம்?

இதை நீங்கள் இயக்குனர் அமீரிடம் இருந்து கடன் வாங்கியது இல்லைத்தானே..?

Link to comment
Share on other sites

//ஆனால் நம்மவர் ஒருவர் கலைத்தறையில் ஏதாவது செய்ய முற்பட்டால், //

அண்ணை.. பூக்கள் படத்த பார்த்தாப் பிறகும் அவர் கலைத்துறையில ஏதாவது செய்ய வெளிக்கிடுறாரோ எண்டு பாத்து பகிடி விடுங்கோ..

ஆனா இதில நான் சொல்ல வாறதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். அதாவது வசதியும் வாய்ப்பும் கிடைத்த நாங்களே ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் எண்டு மசாலாப் படம் செய்து போட்டு..

பிறகு ஐயோ மணிரத்னம் எங்களை பற்றி படமெடுக்கவில்லை. பாரதிராசா பண்ணவில்லை.. பாலு மகேந்திரா செய்ய வில்லையென மாரடிச்சு அழுவதும் எழுதுறதும் என்ன நியாயம்?

பூக்கள் படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. அப்படம் அவரின் முதல்படம். எம்மவர்கள் சினிமாவை இந்தியச் சினிமாவுடன் ஓப்பிடுவது தவறு. ஒருவர் படிப்படியாகத் தானே முன்னேற முடியும். ஆரம்பத்தில் மசாலாப் படங்களை எடுத்தால்த் தான் கையை சுட்டுக் கொள்வது குறைவாக இருக்கும். ஒரு நிலையான இடத்திற்கு வந்தபின் துணிந்து எதையும் செய்யலாம். ஆனால் பின்பும் ஒரு நிலையான இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லையென்றால் அது அவரின் தவறு. அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அவருக்குத் தானே.

மேலும் மணிரத்னம் எங்களை பற்றி படமெடுக்கவில்லை. பாரதிராசா பண்ணவில்லை.. பாலு மகேந்திரா செய்ய வில்லையென நான் ஒருபோதும் கேட்டதுமில்லை. இக்கேள்வியைக் கேட்டவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

எனக்கு இன்னொரு சந்தேகம் ஐரோப்பாவில் ஒருவர் தன்னை ரஜனியாக்கி, ரஜனி தன் படங்களில் செய்வது போல் விளம்பரத்திற்காக ஏதேதோ எல்லாம் செய்து அதை தன் புகழ் பாட இணையத்தளங்கள் பலவற்றில் உலா விட்டுக் கொண்டிருக்கின்றாரே?? ஏன் அவரை ஒருவரும் விமர்சிக்கவில்லை. தேசியவாதி என்ற போர்வையை போர்த்தி வலம் வருவதனாலேயா??

விமர்சனம் என்பது கூட போலித்தனமாக வேண்டியவர், வேண்டப்படாதவர் என்பதைப் பார்த்தா செய்யப்படுவது??

Link to comment
Share on other sites

வசம்பண்ணா உங்கள் நேர்மையான விமர்சனத்துக்கு நன்றி. *** சாந்தி அவர்களின் கட்டுரைக்கு நிதானமாக கருத்தெழுத நினைத்தேன். செ.துரை அவர்கள் கூறியதில் சில உண்மைகள் உண்டு ஈழத்தமிழரும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்றவர்களாகவே இருக்கவேண்டும். அது விஜயன் செல்வதற்கு முன்னர் நடை பெற்றிருக்கின்றது.

மற்றையது நமது தேசியத்தலைவரே ஒரு நேர்காணலில் இயற்கை எனது வழிகாட்டி வீரபாண்டிய கட்ட பொம்மன் கப்பலோட்டிய தமிழன் போன்ற திரைப்படங்கள் தன்னுடைய விடுதலை உணர்வை வளர்த்ததாக. தனக்கு சோழர்களின் வீரம் பிடித்தாகவும் கடல்புறா போன்ற நூல்கள் மூலம் சோழர்களின் வீரத்தை அறிந்ததாகவும் அதனால் புலிச்சின்னத்தை தான் தேர்ந்தெடுத்ததாகவும்..

சாந்தி அக்கா உங்களுக்கு செ துரையில் தனிப்பட்ட கோபங்கள் இல்லாவிடின் உங்கள் தவறை உணர்ந்து உங்கள் கருத்தை களத்தில் வைப்பிர்களா?

***

நீங்களும் வசம்பு அவர்களும் சொல்லுவது போல நாங்கள் ஏதோ தொப்புள் கொடி உறவு என சொல்கிறோம். எங்களுக்காக குரல் கொடுங்கள் என்று சொல்கிறோம். தலைவர் பிரபாகரன் அவர்கள் கூட MGR அவர்களின் பரம ரசிகர். தலைவரே ஒரு முறை சொன்ன கருத்தை யாரோ சொன்னார்கள். அதை எழுதினால் அதுவும் பிரச்சனையாகிவிடும் :wub: இது ஒன்றும் தவறல்ல. நாடோடி மன்னன் என்ற படம்தான் MGR ன் கனவை முதல்வராக நனவாக்கியதாக படித்த ஞாபகம். லெனின் மாவோ போன்றவர்களை பின்பற்றுவதை ஏற்றுக் கொள்ளும் நம்மால் ஏனோ நம்மவர்களை ஏற்றுக்கொள்ளப் பிடிக்காதது? அது ஏனோ தெரியவில்லை? காந்தியை உலகமே ஏற்றுக்கொள்கிறது. அதுவும் அரைப்பக்கிரியாய் அலைந்த ஒருவரை... அப்படி இருக்கும் போது.... :lol: ஒரு மனிதன் தன்னால் முடிந்ததை செய்கிறான். அவன் நம்முடையவனாக இருக்கிறான். முடிந்தால் 4 வார்த்தை பாராட்டி விட்டு போவம். அதைவிட்டு அவன் மனதை பெரியவர்களாக இருப்போர் அல்லது நினைப்போர் வருத்துவது அவன் எதிரியாக இருந்தாலும் சரியில்லை.

Link to comment
Share on other sites

நான் இப்பதான் அந்த 7லிருந்து பார்த்தேன். அவரது பேச்சில் தவறில்லை. இருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேணும். திமுகவின் சாயல்தான் உதய சூரியன் சின்னம். அது ஈழத்துக்காக வாக்கு கேட்ட சின்னம். நாளை நமதே : அச்சம் என்பது மடமையடா இப்படி பாடல்தான் அன்றைக்கு லவுஸ்பீகரில் ஒலித்ததாய் பலர் சொல்லக் கேட்டது உண்டு. தமிழகத்து தமிழர்களே , ஈழத்து தமிழன் ஒருவனையும் அவனது திரைப்படத்தையும் மெச்சும் போது....எம்மில் ஏன் சிலர் கல்லோடும் பொல்லோடும் திரிகிறார்கள் என்பது புரியவில்லை. அவரும் நம்மைப் போல் ஒரு மனிதன்தான். அதை உணர்ந்தால் நம் இனம் உயரும். இல்லையென்றால்..... :lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொன்னாலும் இந்திய தமிழ் சினிமாவுடன் தமிழீழ போராட்டத்தை

ஒப்பிட்டது தவறு என்று நான் கூற முனைகிறேன்

தமிழ் சினிமா வெறும் முன்று மணித்தியாலங்களே......ஆனால்

தமிழிழ போராட்டம் என்பது எம் உறவுகளுக்கு சொல்ல வேண்டிய

அவசியம் இல்லை.

Link to comment
Share on other sites

கலைச் சேவை செய்பவர்களுக்கும் அது பற்றி கருத்தாடல் செய்பவர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்!

உங்களுக்கு கலை ஆர்வமிருந்தால் உங்களிடம் பணம் இருந்தால் அல்லது கடன் வாங்கி கையை சுட்டுக் கொள்ளும் துணிவிருந்தால் நீங்கள் படம் எடுக்கலாம் அதில் நீங்களே நடித்து ஒடிப்பிடித்து ஆடிப்பாடி மகிழலாம்.அல்லது இளவயதினரை ஒடிப்பிடித்து விளையாட வைத்து பார்த்து மகிழலாம்.நீங்கள் தொலைக்காட்சி வலைக்காட்சி நடத்தலாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல உங்கள் திருவாய் மொழிகளை மறைபொருளாகச் சொல்லி நியாயப்படுத்தலாம்.இணையத்தளம

Link to comment
Share on other sites

சாந்தி நீங்கள் சொன்னதில் தவறு இருப்பதாக தெரியவில்லை . ஈழத்தமிழர் போராட்டத்தை தங்களது சுய தேவைக்காக யாரும் பயன்படுத்துவதை ஈழத்தமிழர்கள் அனுமதிக்கமுடியாது. இவருடைய பேச்சு முழுவதையும் பார்த்தேன் அதிலிருந்து இவர் தன்னைத்தானே புகழ்ந்து பேசுகின்றார் என்று நன்றாக தெரிகிறது. ஆனால் அப்படி பேசுவது தப்பில்லை அதில் ஈழத்தமிழர் போராட்டத்தை சேர்த்ததுதான் தப்பு .வசம்பர் முதலிருந்தே தமிழக அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்குபவர் அவருக்கு இது தப்பாக தெரியாது ஆனால் உணர்வுள்ள ஈழத்தமிழர்களுக்கு இது தப்பாக தெரியும் . ஈழத்தமிழர் போராட்டம் ஒருவருடைய தனிச்சொத்தல்ல அது ஈழத்தமிழர்களின் சொத்து அதை யாராவது தவறான வழியில் பயன்படுத்தமுனைந்தால் அது எமக்கு தலைகுனிவையே ஏற்படுத்தும் அகவே இவரினுடைய பேச்சும் கருத்துக்களும் கடுமையான கண்டனத்துக்குரியது இவர் தவறு செய்துள்ளார். இவருடைய படைப்புக்களை புறக்கணிக்க வேண்டிய அவசியம் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிக்கு தமிழக சினிமாவும் ஒரு சிறிய பங்கை ஆற்றியிருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. தமிழக சினமாவின் எழுச்சி வசனங்களை, எழுச்சிப் பாடல்களை விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

"தோல்வி நிலையென நினைத்தால்" பாடல் ஏற்படுத்திய தாக்கம்குறிப்பிடத்தக்க ஒன்று.

ஆனால் விடுதலைப் போராட்டத்திற்கு காரணம் சிங்களப் பேரினவாத அரசு அல்ல, தமிழக சினிமாவே என்பது அபத்தமான ஒரு கருத்து. கண்டிக்கப்பட வேண்டியது.

தமிழக சினிமா இல்லாமல் இருந்தாலும் கூட தமிழீழப் போராட்டம் நடந்துதான் இருக்கும்.

மேடைப் பேச்சுக்களில் சில மிகைப்படுத்தலை செய்வது வழமைதான். ஆனால் துரை செய்த மிகைப்படுத்தல் அபத்தத்தின் உச்சம்.

ஆனால் அதற்காக இவருடைய படங்களை புறக்கணிக்க வேண்டும் என்பதும் சற்று அதிகப்படியானது.

மனிதர்கள் நடிக்கும் கார்ட்டுண் படங்களை தருவதற்கு எமக்கு துரையை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேடைப் பேச்சுக்களில் சில மிகைப்படுத்தலை செய்வது வழமைதான். ஆனால் துரை செய்த மிகைப்படுத்தல் அபத்தத்தின் உச்சம்.

ஆனால் அதற்காக இவருடைய படங்களை புறக்கணிக்க வேண்டும் என்பதும் சற்று அதிகப்படியானது.

மனிதர்கள் நடிக்கும் கார்ட்டுண் படங்களை தருவதற்கு எமக்கு துரையை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?

சபேசன் மனிதர்கள் நடிக்கும் காட்டுண் படங்களை துரையை வி்ட்டால் யார் இருக்கிறார்கள் என்பது எல்லாவற்றையும் விட அதிகம். உங்களை வன்மையாக கண்டிக்கிறது கண்ணகி கழகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்று பதில் சொல்கிறாயே என ஊரில் கேட்பார்கள்.

யாழ் களத்தாரும் இப்படித்தான் விவாதத்தை ஒரு புள்ளியில் தொடக்கினால் அவர்கள் மறு புள்ளியை இட்டு விவாதத்தை வேறு வழிக்கு கொண்டு செல்வது அல்லது வேறு பதிலை அளித்து சமாளிப்பது.

தற்போதும் அதுதான் தொடர்கின்றதோ என்று சந்தோகப்படுகிறேன்.

தமிழக சினிமாவின் வரலாறு இப்பதான் 75 ஆண்டுகள் கொண்டாடினார்கள்.

ஈழப்போராட்மும் அதன் விதைகளும் வெறும் 75 ஆண்டுகள்தானா?

இலங்கைத் தீவின் சுதந்திரத்திற்கு முன்பே இடம்பெற்ற அரசியல் சீாதிருத்தங்களில் டொனமூர் சீர்திருத்தம் எத்தனையாம் ஆண்டு தெரியுமா உங்களுக்கு.

அதன்மீது டொனமூருக்கு எதிரான போராட்டங்களை நடத்திய யாழ்ப்பாண வாலிப காங்கிரசின் போராட்டம் எத்தனையாம் ஆண்டு என்று தெரியுமா?

அப்ப எந்த தமிழக சினிமா அப்ப அந்த போராட்டத்தை கற்றுத்தந்தது.

என்ன கதைக்கிறீர்கள்.

கி.செ.துரை கதைத்தது முட்டாள்தனம்தான் நாங்கள் அதனை ஏற்கிறோம் என்று சொல்லிவிட்டு செல்லுங்கள்.

ஆனால் ஈழப்போராட்டத்தை தமிழக சினிமாவுடன் ஒப்பிட்டு கேவலப்படுத்தாதீர்கள்.

ஈழப்போராட்டம் அரசியல் கோரிக்கைகளை முன்வைத் வளர்த்தெடுக்கப்பட்டது.

அதற்கு இந்திய சுதந்திரப்போராட்டம், அயர்லாந்து போராட்டம் என்பவை முன்மாதிரிகளாக கொள்ளப்பட்டன.

இந்திய தமிழக அரசியல் தாக்கங்கள் என்பவை வேறு தமிழக சினிமா வழங்கும் உந்துதல் என்பது வேறு.

கி.செ.துரை சினிமா என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்களையும் உதிர்க்கும் வாய்ச்சொற்களையும் விவாதத்திற்கு எடுத்து மறுத்துரைப்பதே பொருத்தமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இப்பதான் அந்த 7லிருந்து பார்த்தேன். அவரது பேச்சில் தவறில்லை. இருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேணும். திமுகவின் சாயல்தான் உதய சூரியன் சின்னம். அது ஈழத்துக்காக வாக்கு கேட்ட சின்னம். நாளை நமதே : அச்சம் என்பது மடமையடா இப்படி பாடல்தான் அன்றைக்கு லவுஸ்பீகரில் ஒலித்ததாய் பலர் சொல்லக் கேட்டது உண்டு. தமிழகத்து தமிழர்களே , ஈழத்து தமிழன் ஒருவனையும் அவனது திரைப்படத்தையும் மெச்சும் போது....எம்மில் ஏன் சிலர் கல்லோடும் பொல்லோடும் திரிகிறார்கள் என்பது புரியவில்லை. அவரும் நம்மைப் போல் ஒரு மனிதன்தான். அதை உணர்ந்தால் நம் இனம் உயரும். இல்லையென்றால்

துரையின் பேச்சில் சுயவிளம்பரம் தான் அதிகம் தெரிகின்றது. தன்னுடைய படத்தை விற்பனை செய்வதற்காக ஈழப்போரைக் கையில் எடுத்துள்ளார். இதை ஏற்கமுடியாது.

இந்தியா போல ஒரு காலத்தில்கட்சிப் பெயர் கொண்டு அரசியல் நடத்தினவர்களும், மேடை நிறைய வாக்குஞதி வழங்கிவிட்டு மக்களை ஏமாற்றிய அரசியல் என்றும் ஒன்று இருந்தது. ஆனால் அது எம் போராட்டத்திற்கு இணையாகாது. எம் போராட்டம் வளர்ந்ததற்கு அது எதிரியிடம் வாங்கிய பாதிப்புக்கள் தான் காரணம்.

தலைவர் எம்ஜிஆரினைத் தனிப்பட்ட விதத்தில் ரசிக்கலாம். ஏன் ஆங்கில நடிகர்கள் சிலரைக் கூடத் தனக்குப் பிடிக்கும் எனவும் சொல்லியிருக்கின்றார். அதற்காக அவற்றைப் பின்பற்றித் தான் போராட்டம் என்றல்ல. அவை இரண்டுமே வேறு தளங்கள். துரைக்கு மண்டை கழண்டுவிட்டது என்றால் அவருக்கு மருத்துவம் பார்க்க நம்மால் முடிந்தது படத்தைப் புறக்கணிப்பது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு கூறியது போல் செல்லத்துரை டென்மார்க்கில் மதிக்கப்படுபவர் அல்ல. அவரிடம் ஒரு சிறிய வட்டம் ஒன்று உள்ளது அது அவரின் குடும்பத்தவர்கள். மற்றது குமாரதுரை குடும்பம். குமாரதுரையின் பிள்ளைகளுக்கு தமிழ் படிபித்த ஆசான் அல்லவா துரை.

2005 ம் ஆண்டு வரை குமாரதுரையின் பிள்ளைகளால் நடாத்தப்பட்ட தமிழ் தேசவிரோத இணையத்தளங்களுக்கு தனது இணையத்தில் இணைப்பும் கொடுத்திருந்தார் இந்த செல்லத்துரை.

தமிழ் மக்களின் போராத்திர்கு டென்மார்க்கில் வாழும் அனைத்து இளைஞர்களும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்யும் வேளையில் செல்லத்துரையின் வாரிசுகள் மட்டுமம் ஒதுங்கியிருப்பது ஏன்.

ஐபிசி என்ற வானொலியில் இருக்கும் சிலரின் தனிபட்ட நட்பை பாவித்து துரை இப்ப ஊடகவியளார் ஆகிவிட்டார். அதனால் இதே துரை இந்தியாவில் விடுதலைப்Nபுhராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டு, ஐரோப்பா வந்ததும் ஐபிசியில் இருந்து எமக்கு எல்லோருக்கும் அரசியல் படிப்பிப்பார். முதலில துரையின் உரை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் ஐபிசி யினர்.

ஒருவரை பற்றி தெரியாவிட்டால் புகழும் போது கூட சொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது வசம்பு அண்ணா அவர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையே நான் கூறமுற்பட்டேன் ஆனால் ஏற்கனவே ஒரு பாடல் பெரிய பிரச்சினையை

கிளப்பிவிட்டதால் நான் எனது கருத்தை முன் வைக்கவிரும்பவில்லை

அதனால் நான் விலகிநிற்க விரும்புகிறேன் இருந்தாலும் சிலரது பொழுது போக்கு

இந்த சினிமா தானே

சினிமா எங்கே.................................................................

.

................................................................................

.....................................தமிழீழ விடுதலை போராட்டம் எங்கே

தனது சொந்த லாபத்திற்காக.......................

தமிழிழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தியுள்ளார் என்றே நான் கூறுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு கூறியது போல் செல்லத்துரை டென்மார்க்கில் மதிக்கப்படுபவர் அல்ல. அவரிடம் ஒரு சிறிய வட்டம் ஒன்று உள்ளது அது அவரின் குடும்பத்தவர்கள். மற்றது குமாரதுரை குடும்பம். குமாரதுரையின் பிள்ளைகளுக்கு தமிழ் படிபித்த ஆசான் அல்லவா துரை.

2005 ம் ஆண்டு வரை குமாரதுரையின் பிள்ளைகளால் நடாத்தப்பட்ட தமிழ் தேசவிரோத இணையத்தளங்களுக்கு தனது இணையத்தில் இணைப்பும் கொடுத்திருந்தார் இந்த செல்லத்துரை.

தமிழ் மக்களின் போராத்திர்கு டென்மார்க்கில் வாழும் அனைத்து இளைஞர்களும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்யும் வேளையில் செல்லத்துரையின் வாரிசுகள் மட்டுமம் ஒதுங்கியிருப்பது ஏன்.

ஐபிசி என்ற வானொலியில் இருக்கும் சிலரின் தனிபட்ட நட்பை பாவித்து துரை இப்ப ஊடகவியளார் ஆகிவிட்டார். அதனால் இதே துரை இந்தியாவில் விடுதலைப்Nபுhராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டு, ஐரோப்பா வந்ததும் ஐபிசியில் இருந்து எமக்கு எல்லோருக்கும் அரசியல் படிப்பிப்பார். முதலில துரையின் உரை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் ஐபிசி யினர்.

ஒருவரை பற்றி தெரியாவிட்டால் புகழும் போது கூட சொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது வசம்பு அண்ணா அவர்களே.

இப்படி யாராவது "உள்ளூர்க் காரர்" வந்து உண்மையைச் சொன்னால் தான் ஒருவரின் பின்புலம் வருகிறது. இந்த மாதிரியான பின்னணியை மாற்ற முடியாது. நடு நிலையாக நிற்கிறோம், மாற்றுக் கருத்து ஜன நாயகத்தைத் தூக்கிப் பிடிக்கிறோம் என்று திரிபவர்கள் வசதியாக அணிந்து கொள்ளும் முகமூடியாக "கலைஞன்" முகமூடி ஆகி விட்டது. கலைஞன்/எழுத்தாளன் நேர்மையாகப் பேச/எழுத வேண்டும் என்று யாரோ சொன்னதை துரைக்கு ஆதரவாக எழுதிய ஒருவர் மேற்கோள் காட்டினார். பிறகு, அவர் தவறாகப் பேசியிருந்தாலும் நாம் மன்னித்து விட வேண்டும் என்கிற தொனியிலும் கருத்து வைக்கப் பட்டது. நேர்மையான பேச்சில் ஏன் "முகஸ்துதி" வருகிறது? என்று கேட்டால் பதில் என்னவோ தெரியாது. "என் குடும்பத்தை நீங்கள் ஊட்டி வளர்க்கிறீர்கள்!" என்று சொல்லியிருந்தால் அது அவர் குடும்பத்தை விற்ற மாதிரி இருந்திருக்கும். துரை போன்ற முகஸ்துதியாளர்கள் விற்க தேசியப் போராட்டம் இருக்கும் போது, ஏன் தான் அவர்கள் குடும்பத்தை விற்கப் போகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய இணைய வலச்சுற்றில் இங்கு நடைபெறும் விவாதத்துக்கேற்ற பதிவொன்றைக் கண்டேன் பொருத்தம் கருதி இணைக்கிறேன்.

***

இன்றைய விமர்சகர்களின் பரிதாப நிலை!

அன்று, வலைபூக்களும் கருத்துக்களங்களும் இல்லாத காலத்தில் விமர்சகர்கள் எல்லாம் என்ன வேண்டுமானால் பேசலாம், சொல்லலாம். அவர்கள் சொல்வதுதான் வேதவாக்குபோல் இருந்தது –உண்மைக்கு புறம்பானதை சொல்லும்போது கூட. அவர்கள் கருத்தில் உள்ள தவறுகளை படித்துவிட்டு ஒரு சிலர் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சொல்லி புலம்புவதுதான் வழக்கம். அவர்கள் தவறை அந்த பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினால் அதை கண்டுகொள்வதும் இல்லை, அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவது அந்த பத்திரிக்கை நிர்வாகத்தின் வழக்கம். இது அந்த “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்றும் கொள்ளலாம்!

ஆனால் இன்று இதெல்லாம் மலையேறி போய்விட்டது. விமரசர்களை விமர்சிக்க வந்துவிட்டார்கள் பொதுமக்களும், வம்பு பேசுபவர்களும், மற்றும் விமர்சகர்கள் விமர்சித்த சப்ஜெக்ட்டில் உள்ள எக்ஸ்பர்ட்களும்! அதனால், இன்றைய விமர்சகர்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதாகிவிட்டது. தன்னை “ஞாநி” என்று சொல்லிகொள்பவர்கள் ஞாநியும் அல்ல. “பைத்தியக்காரன்” என்று சொல்லிக்கொள்பவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம். உண்மையே வெல்லும் என்பதே இன்றைய பேச்சுச் சுதந்திர உலகம்!

...........

thanks:

http://timeforsomelove.blogspot.com/2008/0...og-post_29.html

Link to comment
Share on other sites

கலைச் சேவை செய்பவர்களுக்கும் அது பற்றி கருத்தாடல் செய்பவர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்!

உங்களுக்கு கலை ஆர்வமிருந்தால் உங்களிடம் பணம் இருந்தால் அல்லது கடன் வாங்கி கையை சுட்டுக் கொள்ளும் துணிவிருந்தால் நீங்கள் படம் எடுக்கலாம் அதில் நீங்களே நடித்து ஒடிப்பிடித்து ஆடிப்பாடி மகிழலாம்.அல்லது இளவயதினரை ஒடிப்பிடித்து விளையாட வைத்து பார்த்து மகிழலாம்.நீங்கள் தொலைக்காட்சி வலைக்காட்சி நடத்தலாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல உங்கள் திருவாய் மொழிகளை மறைபொருளாகச் சொல்லி நியாயப்படுத்தலாம்.இணையத்தளம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுரைக்கேநெருப்பு வைச்ச கண்ணகிக்கே மண்டையை பிய்கிறமாதிரியிருக்கண்ணே வசம்பண்ணை. நீங்கள் பிழையென்று மற்றவை சொல்லிப்பூற விசியங்களை சரியெண்டு பூவைக்கிறியள். சரியெண்டு சொல்லிற விசியங்களை பிழையெண்டு குளிவைக்கிறியள்.

நீங்கள் எங்கினை நிண்டு முறிஞ்சாலும் துரை சொன்னது பிழைதான். அவருடைய பிழையை கேள்விக்கேட்றது சரிதான்.

பூக்களை நானும் பாத்திட்டு நினைச்சன்தான் முதல் முயற்சியை ஏன் முளையில கிள்ளிறான்களெண்டு புயலை கேட்டப்பிறவுதான கி.செ.து வின்ரை முகஸ்துதி விளங்கிச்சு. ஜஸ்ரின் சொன்னது மாதிரி துரை முகஸ்துதிதான் செய்திரக்கிறார். அதுக்காக தமிழீழப்போராட்டத்தை இழுத்து தனக்கு பூமாலை வாங்க முயற்சித்து மூஞ்சியைப்பொத்தி வேண்டிக்கட்டியிருக்கிறார்.

இண்டைக்கு ஒருக்கா மூக்குக்கண்ணாடியையும் போட்டு துரையின்ரை பேச்சை கேட்டுப்பாத்தன் சவம்ாண்ணை சொன்னமாதிரி ஏதும் சரியாயிருக்கோண்டு. அந்த முகத்துச் சிரிப்பிüலையிருந்து சொன்னவார்த்தைகள் முழுக்களும் துதியும் விசமும் தான்.

அதுசரி வசம்பண்ணை இயக்குனர் அமீர் அந்த கீரோ வசந்தைப் பற்றி கனக்க சொன்னவரெல்லோ அதையெல்லாம் ஏனண்ணை கி.செ.துவின்ரை வெப்பில இருட்டிச்சு போட்டிருக்கனம் ?

இன்றைய இணைய வலச்சுற்றில் இங்கு நடைபெறும் விவாதத்துக்கேற்ற பதிவொன்றைக் கண்டேன் பொருத்தம் கருதி இணைக்கிறேன்.

***

இன்றைய விமர்சகர்களின் பரிதாப நிலை!

அன்று, வலைபூக்களும் கருத்துக்களங்களும் இல்லாத காலத்தில் விமர்சகர்கள் எல்லாம் என்ன வேண்டுமானால் பேசலாம், சொல்லலாம். அவர்கள் சொல்வதுதான் வேதவாக்குபோல் இருந்தது –உண்மைக்கு புறம்பானதை சொல்லும்போது கூட. அவர்கள் கருத்தில் உள்ள தவறுகளை படித்துவிட்டு ஒரு சிலர் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சொல்லி புலம்புவதுதான் வழக்கம். அவர்கள் தவறை அந்த பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினால் அதை கண்டுகொள்வதும் இல்லை, அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவது அந்த பத்திரிக்கை நிர்வாகத்தின் வழக்கம். இது அந்த “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்றும் கொள்ளலாம்!

ஆனால் இன்று இதெல்லாம் மலையேறி போய்விட்டது. விமரசர்களை விமர்சிக்க வந்துவிட்டார்கள் பொதுமக்களும், வம்பு பேசுபவர்களும், மற்றும் விமர்சகர்கள் விமர்சித்த சப்ஜெக்ட்டில் உள்ள எக்ஸ்பர்ட்களும்! அதனால், இன்றைய விமர்சகர்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதாகிவிட்டது. தன்னை “ஞாநி” என்று சொல்லிகொள்பவர்கள் ஞாநியும் அல்ல. “பைத்தியக்காரன்” என்று சொல்லிக்கொள்பவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம். உண்மையே வெல்லும் என்பதே இன்றைய பேச்சுச் சுதந்திர உலகம்!

...........

thanks:

http://timeforsomelove.blogspot.com/2008/0...og-post_29.html

சுழியண்ணை நீங்கள் என்னத்த சொல்லவாறியள் ? ஏற்கனவே நீங்கள் ஏதோ சொர்ணலிங்கம் மகாகவியணெ்டு எழுதியிரக்கிறியள். ஒண்டுமா விளங்குதில்ல.

உதைத்தான் சுழிச்சுச் சொல்லிறதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களின் வலியை பதிவு செய்வேன் - இயக்குனர் அமீர் ஆவேசம்

ilamnet.jpg

இளம்புயல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் பங்காற்றிய கலைஞர்களில் அநேகம் பேர் இலங்கை தமிழர்கள் என்பதால்இ அரங்கம் முழுவதும் தூய தமிழின் மணம்! படத்தின் இயக்குனர் கே.எஸ்.துரையின் வரவேற்புரையே பலரை கிறங்கடித்தது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிடஇ ஆடியோவை அமீர் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடு. முன்பாக பேசிய அமீர்இ ‘வாழ்த்துகள்’ என்று ஒரே வார்த்தையில் தனது உரையை முடித்துவிடஇ விழாவுக்கு வந்திருந்த பலருக்கும் அதிர்ச்சி.

பின்பு அவரை வற்புறுத்தி பேச வைத்தார் கே.எஸ்.துரை. ‘நான் பேசவே கூடாது போலிருக்கிறது. கடந்த வாரம் ஒரு விழாவில் நான் சில கருத்துக்களை சொல்லப்போகஇ மறுநாளே எல்லா பத்திரிகைகளிலும்இ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீர் கண்டனம் என்று கொட்டை எழுத்தில் போட்டுவிட்டார்கள். அதனால்தான் இந்த விழாவில் பேச வேண்டாம் என்று நினைத்தேன்’ என்றார்.

‘தமிழை நிஜமாகவே வாழ வைப்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான். உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் ஒரு படத்தில் பதிவு செய்யாமல் விடமாட்டேன்’ என்றார் அமீர். இதை சொல்லும்போது சற்றே உணர்ச்சிவசப்பட்ட அவரை மேலும் உணர்ச்சிவசப்பட வைத்தது திரண்டிருந்த கூட்டத்தின் கைத்தட்டல்! ‘இப்படியெல்லாம் எதையாவது பேசிவிடுவேன் என்பதால்தான் நான் பேசமாட்டேன்னு சொன்னேன்’ என்றார் அமீர்.

திரையிடப்பட்ட சில பாடல்களில் ஒரு பாடல் மட்டும் தனி ஈழம் குறித்த கதாநாயகனின் கனவை சொன்னது. அந்த வரிகளும்இ படமாக்கப்பட்ட விதமும் சிலிர்ப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D:lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்குநர் அமீரின் பேச்சு பற்றி இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.

நன்றிகள்.

நான் தற்போது தற்ஸ்தமிழ் வெளியிட்ட அமீரின் பேச்சை இணைத்துள்ளளேன் படியுங்கள்.

அமீரின் பேச்சை அலைகளில் வெளியிட்ட கி.செ.துரையின் நேர்மை புரியும்.

ஈழத் தமிழர் பற்றி படம் - அமீர்

திரையுலகை விட்டுப் போவதற்குள் ஈழ மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பைத் தருவேன் என்கிறார் இயக்குநர் அமீர்.

அலைகள் மூவீஸ் சார்பில் டென்மார்க் வாழ் ஈழத் தமிழர் கே.எஸ்.துரை தயாரித்து இயக்க, அவரது மகன் வசந்த் செல்லத்துரை நாயகனாக நடிக்கும் இளம்புயல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிலிம்சேம்பர் திரையரங்கில் நடந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதல் சிடியை வெளியிட, அதை அமீர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய தொல் திருமாவளவன், பத்திரிகைகள் ஆதாரமின்றி கிசுகிசுக்களை எழுதி நடிகர் நடிகைகளின் பெயரைக் கெடுப்பதாகக் குறைபட்டார். தான் சினிமாவே கதி என்று கிடக்கவில்லை என்றும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துக்களைச் சொல்லும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறினார்.

முன்னதாக, விழாவில் அமீர் பேசியதாவது:

சில தினங்களுக்கு முன் ஏஆர் ரஹ்மான் பற்றி எதார்த்தமாக நான் சொன்ன சில கருத்துக்களை, ரஹ்மானுக்கு அமீர் கண்டனம் என்கிற பாணியில் எழுதிவிட்டார்கள். என்னுடைய ஒரு கருத்தைச் சொல்கிறேன். அவரிடம் நான் கேட்க நினைத்த கேள்வியை மேடையில் வைத்தேன். அது கண்டனமல்ல.

அதனால்தான், எந்த விழாவுக்கும் இனி போகவே வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் இந்த விழாவுக்கு வந்ததன் காரணம், இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை எடுத்திருக்கும் ஈழத் தமிழர்கள்.

நான் பெர்லினுக்கு பருத்தி வீரன் திரையிடலுக்காகச் சென்றிருந்தேன். அப்போது 50-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் தினமும் வந்து படம் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் என்னை தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.

நான் தட்டிக் கழிக்கப் பார்த்தேன். ஆனால் அவர்கள் விடாமல் நின்று கூட்டிப் போனார்கள். என்னைப் பார்த்ததும் அந்த குடும்பத்துப் பெண்கள் அழுதனர். எனக்கு சங்கடமாகி விட்டது. இதற்காகவா என்னைக் கூட்டி வந்தீர்கள்? என்றேன்.

இல்லை தம்பி, உங்க பருத்தி வீரன் பார்த்தோம். எங்களுக்கு ஊர் நினைவு வந்துவிட்டது. அதனால்தான் உங்களைப் பார்க்க விரும்பினோம் என்று நெகிழ வைத்தனர்.

இந்த தருணத்தில் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நான் இந்தத் திரையுலகை விட்டுப் போவதற்குள் ஈழத் தமிழர்களின் வாழ்க்கை, அவர்களுக்கான விடிவு குறித்து விளக்கும் ஒரு அழுத்தமான படைப்பைத் தந்துவிட்டுத்தான் போவேன்.

இந்த நேரத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கும் துரைக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.

முன்பு நடிகர்கள் கையிலிருந்த சினிமாவை கஷ்டப்பட்டு இயக்குநர்கள் மீட்டார்கள். பின்னர் அதைத் தயாரிப்பாளர்கள் ஆர்பி சௌத்ரி போன்றவர்கள் தங்கள் வசமாக்கினார்கள். புதுப்புது இயக்குநர்களை உருவாக்கினார்கள். சௌத்ரி ஒருவர் மட்டுமே 37 இயக்குநர்களை தமிழுக்குத் தந்திருக்கிறார்.

ஆனால் தமிழ் சினிமா மீண்டும் நடிகர்கள் கைக்குப் போய்விட்டது. வழக்கமான மசாலா சினிமாவாக மாறிக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து சினிமாவை மீட்டெடுக்கும் போராட்டத்தில்தான் என்னைப் போன்ற சிலர் இறங்கியிருக்கிறோம். இந்த நேரத்தில் நீங்களும் அதே பாணி மசாலா கதைகளோடு, படைப்புகளோடு வருகிறீர்களே என்பதுதான் என் ஆதங்கமெல்லாம்.

இது முதல்படம் என்பதால் மன்னிப்போம். ஆனால் அடுத்தடுத்த படைப்புகளில் உங்கள் தனித் திறமையைக் காட்டுங்கள். எதற்காக இந்தத் துறைக்கு வந்தீர்களோ அந்த நோக்கம் சிதையாத மாதிரி படங்களை எடுங்கள், என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதிராஜா நம் மக்களுக்காக படம் செய்யவில்லை பாலு மகேந்திரா செய்யவில்லை என்ற ஒரு புறு புறுப்பு நம்மில் சிலருக்கு உண்டு. இதனை நினைவுபடுத்திக் கொண்டே சொல்ல விழைகிறேன்.

டென்மார்க்கில் இருந்து ஈழத்தமிழர் சிலரின் தயாரிப்பில் உருவான இளம்புயல் என்ற படத்தின் இசை வெளியீடு சென்னையில் அண்மையில் நடந்தது. அதன் ஒளித்துண்டுகளை பார்க்கக் கிடைத்தது. அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தயாரித்த பூக்கள் என்ற சினிமாவினை இடையில் கண்டபடி திட்டிக் கொண்டே எழுந்து செல்லும் வரை பார்த்தேன். (கணணியில்தான்)

ஹீரோயிசம் பாய்ந்தோடும் இளைஞர்கள் அவர்களுக்கு பயந்தோடும் வில்லன்ஸ் அப்புறம் காதலிக்கவும் பாடல்களுக்கும் ஒரு பெண் கொஞ்சம் துப்பாக்கிகள் என நீளும் கதை அது. அந்தப் பெண் வெள்ளைக் காரப் பெண். வெளிநாடுகளில் கமெராவும் கணணியும் கிடைத்தால் தயாராகும் நம்மவரின் மூன்றாம்தரப் படங்களில் கதாநாயகிகள் பெரும்பாலும் வேற்று இன அழகிகளாகத் தான் இருக்கிறார்கள். இதனை நான் தொடர்ச்சியாகக் கவனித்திருக்கிறேன். இதைப் பற்றி கனடாவில் படமெடுத்துத் திரியும் நண்பரிடம் கேட்டிருந்தேன். அவர் நடித்திருந்த ஒரு படத்தில் (அவரது முதலாவது படத்திற்கு நிகழ்ந்த சோகம் சுவாரசியமானது. படத்தின் பாடல்கள் வெளியிட்ட பிறகு பெரும்பாலும் படப்பிடிப்புகள் நிறைவடைந்த பின்னர் இயக்குனருடனான வீட்டுச் சண்டையில் இயக்குனரின் மனைவி படத்தின் மூலப் பிரதிகளை தீ மூட்டிக் கொழுத்தி விட்டாராம். அத்தோடு படம் ப்ளாப்) கதாநாயகி கானா நாட்டைச் சேர்ந்தவராயிருந்தார். ஏனெனில் நெருக்கமான காட்சிகளில் நமது இலங்கைத் தமிழ் பெண்களை ஈடுபடுத்துவது நமது கலாசாரத்திற்கு ஒவ்வாதாம். இந்தக் கணத்தில் என் வாயில் வருவதை எழுதினால் அது தமிழ்மணத்தில் **** என்றவாறு இருக்கும்.

மேற்சொன்ன பூக்கள் திரைப்படக் குழு தயாரிக்கும் படம் இளம்புயல். இயக்குனர் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளர் கதாநாயகனாகவும் நடிக்கும்? குடும்பப் படம். (குடும்பப் படம் என்றால் குடும்ப உறுப்பினர்களே தயாரிக்கும் படம்) இசை வெளியீட்டு விழாவில் அமீர் ஆர் பி செளத்ரி உட்பட சில திரை பிரமுகர்கள் வந்திருந்தார்கள். தயாரிப்பாளர் தனது உரையில் இலங்கையில் தமிழர்களின் போராட்டத்திற்கு சிங்கள இராணுவம் காரணமில்லை. தமிழ் நாட்டு திரைப்படங்கள் தான் காரணம் எனச் சொல்லி விட்டு ஒரு லுக் விட்டார். பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறாரோ என்னவோ?

பிறகு வீரபாண்டிய கட்டப்பொம்மனையும் மனோகராவையும் இன்ன பிறவையும் பார்த்துத்தான் நாங்கள் போராட்ட குணம் கொண்டோம் என்றார். நல்ல வேளை இந்த வரிசையில் போக்கிரி குருவி வீராசாமி படங்களைச் சேர்க்காமல் விட்டார். தமிழ் சினிமாவில் நுழைந்து விட்டார். இனி இப்படியெல்லாம் பேசித்தானே தீர்க்க வேண்டும். அவர் தேவை அவருக்கு. அதை விட்டு விடுவோம்.

அந்நிகழ்வில் அமீரின் பேச்சுத்தான் கவனத்திற்குரியது. அமீர் சொல்கிறார். நாயகிகளுக்குப் பின்னால் ஓடித்திரியும் நாயகர்களைக் கொண்ட தமிழ் சினிமாவை கொஞ்சங் கொஞ்சமாக மாற்ற என்னைப் போன்றவர்கள் முயற்சிக்கிறோம். ஆனால் நீங்கள் திரும்பவும் நாயகியைத் துரத்துவது மரத்தைச் சுற்றிப் பாடுவது மாதிரியான ஜிகினா காலத்திற்கு செல்வது கவலை தருகிறது.

அந்த நிகழ்வில் வைத்து அமீர் ஈழத்து மக்களில் வலியை சினிமாவில் பதிவு செய்வேன் என்றார். அவ்வாறு செய்யவில்லையானாலும் அவரை எந்த ஈழத்துக் கொம்பனும் கேள்வி கேட்க முடியாது. தயாரிக்கும் வசதியும் இயக்கும் வசதியும் இசையமைக்கும் வசதியும் நடிக்கும் வசதியும் பெற்ற எங்களாலேயே வலியைப் பதிவு செய்ய வக்கில்லை. இந்த லட்சணத்தில் அமீரும் பாரதிராஜாவும் பாலுமகேந்திராவும் வந்து பதிவு செய்ய வேண்டுமா?

http://blog.sajeek.com/?p=357

Link to comment
Share on other sites

அந்த நிகழ்வில் வைத்து அமீர் ஈழத்து மக்களில் வலியை சினிமாவில் பதிவு செய்வேன் என்றார். அவ்வாறு செய்யவில்லையானாலும் அவரை எந்த ஈழத்துக் கொம்பனும் கேள்வி கேட்க முடியாது. தயாரிக்கும் வசதியும் இயக்கும் வசதியும் இசையமைக்கும் வசதியும் நடிக்கும் வசதியும் பெற்ற எங்களாலேயே வலியைப் பதிவு செய்ய வக்கில்லை. இந்த லட்சணத்தில் அமீரும் பாரதிராஜாவும் பாலுமகேந்திராவும் வந்து பதிவு செய்ய வேண்டுமா?

http://blog.sajeek.com/?p=357

இந்தியச் சினிமாவுக்கு நிகராக படமெடுக்கும் தரத்தில் எங்கடை நிலமை இருக்க உங்கடை வலியும் நீங்களும்.

எங்கள் துயரத்தை ஈழத்தவரின் வரலாற்றுப் பதிவொன்றை ஆவணப்படமாக்கிய சோமிதரனின் எரியும் நினைவுகளை கி.செல்லத்துரை அவர்களின் சினிமாவென்று சினிமா மொழி பேசியிருக்கிறார் என்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. சோமிதரன் போன்ற திறமையாளர்களின் கைகளில் வசதியில்லை ஆனால் காலத்தின் தேவையை பதியும் ஆர்வமும் திறமையும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- இன்றைய விமர்சகர்களின் பரிதாப நிலை!

அன்று, வலைபூக்களும் கருத்துக்களங்களும் இல்லாத காலத்தில் விமர்சகர்கள் எல்லாம் என்ன வேண்டுமானால் பேசலாம், சொல்லலாம். அவர்கள் சொல்வதுதான் வேதவாக்குபோல் இருந்தது –உண்மைக்கு புறம்பானதை சொல்லும்போது கூட. அவர்கள் கருத்தில் உள்ள தவறுகளை படித்துவிட்டு ஒரு சிலர் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சொல்லி புலம்புவதுதான் வழக்கம். அவர்கள் தவறை அந்த பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினால் அதை கண்டுகொள்வதும் இல்லை, அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவது அந்த பத்திரிக்கை நிர்வாகத்தின் வழக்கம். இது அந்த “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்றும் கொள்ளலாம்!

..........................

இக்கருத்து இங்கு விவாதிக்கப்படும் ஆசிரியர் கிசெது தொடர்பாகவே பொருத்திப் நான் பார்க்கிறேன்.

அவரது ஆசிரியர் பணி தொடர்பாகவே எனக்கு அறிமுகம் கிட்டியிருந்தது. பின் அவரது பல்வேறு ஈடுபாடுகளுடன் தொடர்ந்தது. இந்தவகையில் புக்கள் திரைப்படம் திரையிடப்பட்டபோது குடும்ப அழைப்பிதழ் (திருமண அழைப்பிதழ் போன்றது) கிடைக்கப்பெற்று ஈழத்தமிழ் திரை வளர்ச்சிக்கு ஆர்வம் உள்ள பலருடம் திரையைப்ப்பார்த்த பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன். திரையரங்கின் உள்ளே இருட்டில் பரிதாபகரமாக அங்கும் இங்கும் பார்த்த முகங்களுடன் எனதுமுகமும் பதிவானது. திரையரங்கில் பேசிய வார்த்தைககள் கேட்டு சங்கடப்பட்டவர்கள் பலர். ஆனாலும் இறுக்கமான மெளனத்துடன் அனைவரும் பயணித்தோம். ஏனெனில் இது ஆசிரியர் கிசெது அவர்களின் முதல் முயற்சி.

ஆனால் இப்போது அமீர் அவர்களின் கருத்தானது கிசெது அவர்களின் இரண்டாவது முயற்சி தொடர்பானது. அமீரின் குட்டு ஈழத்தமிழ் திரையின்பால் அக்கறையுடைய பலரது தலையின்மீதும் விழுந்துள்ளது.

அன்று இதை விமர்சிக்காததன் தவறை பெரிய அளவில் இன்று பெற்றிருக்கிறோம்.

பெருமூச்சுதான் மிஞ்சுகிறது.

கிசெது அவர்களின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு குறுக்காக நாம் எதுவுமே கூறப்போவதில்லை. ஆனால் ஈழத்தமிழர்களின் திரைப் மற்றும் படைப்புகள் தொடர்பாக கருத்துக்கூறும் கடமை அனவருக்கும் உண்டு. இது ஆரோக்கியமானது.

:lol:

Link to comment
Share on other sites

சுழியன் அண்ணா உங்களுக்கு கி.செ.துரையை நன்றாக தெரிந்திருக்கிறது. இங்கு விமர்சிக்கப்படுவதுபோல அவர் குமாரதுரை குழுவுடன் தொடர்புள்ளவரா?

இங்கு விமர்சிப்பவர்களுக்காக படமெடுத்தால் படமெடுப்பவர் ஓட்டாண்டியாகவேண்டியதுதான். ஒரு படத்தை வியாபாரரீதியாக எடுத்தால் மட்டும் படத்தயாரிப்பாளர் அடுத்த முயற்சியில் வெற்றிபெற முடியும். படம் வெற்றியடைவதற்கு இலங்கைத்தமிழரும்(புலம்பெயர்) அவசியம். அதற்காகதான் ஒவ்வொருவரும் விடுதலையை ஊறுகாய் போன்று தொட்டுக்கொள்கின்றார்கள். மற்றபடி அவர்கள் வியாபாரிகள் அதற்குமேல் அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது.

முழுக்க முழுக்க எம்மவர் பிரச்சனையை வைத்து படமெடுத்து விமர்சன ரீதியில் வேண்டுமானால் அவர்கள் பாராட்டை பெறமுடியும் . ஆனால் பெற்றுக்கொள்ளும் நட்டத்தை ஈடுசெய்ய யார் துணை போவார்கள் இந்த விமர்சகர்கள் அதற்கும் தயாரா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.