Jump to content

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிசெது ஆவர்கள் ஆசிரியராகப் பணியாற்றுபவர். எனவே இதன் மூலம் பலருடனான தொடர்பு இயல்பாகவே இருக்கும். இதனை குதர்க்க் கண்கொண்டு நான் பார்க்கப் போவதில்லை.

இவரது திரை முயற்சி தொடர்பபான கருத்துகளில்தான் விவாதம் இங்கு நடைபெறுகிறது.

புபுலம் பெயர் திரைமுயற்சியில் கனடாவிலிருந்து "தமிழிச்சி" எனம் படம் பலருது கவனத்தைப் பெற்றிருந்தது.

குறும்படங்களில் பல கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக "பேரன் பேத்தி' (பிரான்சு).

புலம்பெயர்வாழழ்வு என்பது அனுபவப் பொக்கிசம். இலகுவில் கிடைக்க முடியாதது. இவை படைப்புகளால் உலகின் கவத்தைப்பெறும் என்பதில் அசைக்க முடியாத கருத்துடையவன் நான்.

இந்தியாவில் கோடிகளால் கடட்டியெழுப்பப்படும் கனவுலகச் சினிமாவிலிருந்து விலகி அன்று சத்தியஜித் ரே இன்று அடுர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் காணப்படவில்லையா?

கருத்துகளால் எண்ணம் வலுவடைந்து சிறப்பாக செயல் வருமல்லவா!

பத்தோடு பதினொன்றாவதில் என்னதான் இருக்கிறது!!

:lol:

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

சுழியன் அண்ணா உங்களுக்கு கி.செ.துரையை நன்றாக தெரிந்திருக்கிறது. இங்கு விமர்சிக்கப்படுவதுபோல அவர் குமாரதுரை குழுவுடன் தொடர்புள்ளவரா?

இங்கு விமர்சிப்பவர்களுக்காக படமெடுத்தால் படமெடுப்பவர் ஓட்டாண்டியாகவேண்டியதுதான். ஒரு படத்தை வியாபாரரீதியாக எடுத்தால் மட்டும் படத்தயாரிப்பாளர் அடுத்த முயற்சியில் வெற்றிபெற முடியும். படம் வெற்றியடைவதற்கு இலங்கைத்தமிழரும்(புலம்பெயர்) அவசியம். அதற்காகதான் ஒவ்வொருவரும் விடுதலையை ஊறுகாய் போன்று தொட்டுக்கொள்கின்றார்கள். மற்றபடி அவர்கள் வியாபாரிகள் அதற்குமேல் அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது.

முழுக்க முழுக்க எம்மவர் பிரச்சனையை வைத்து படமெடுத்து விமர்சன ரீதியில் வேண்டுமானால் அவர்கள் பாராட்டை பெறமுடியும் . ஆனால் பெற்றுக்கொள்ளும் நட்டத்தை ஈடுசெய்ய யார் துணை போவார்கள் இந்த விமர்சகர்கள் அதற்கும் தயாரா?

எங்கள் தாயகத்திலே எதிரியால் ஆக்கிரமிக்கப்படும் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்பதற்கு எங்களது போராளிகள் தங்களது உயிரையும் இரத்தத்தையும் விலையாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.விலைமதி

Link to comment
Share on other sites

குழந்தைகள் முதலில் கிறுக்கும்

அவை கிறுக்கல்

அது ஓவியமல்ல.....ஆனால் அதையும் ஓவியத்தின் மனதோடு ரசிப்போர் இருக்கிறார்கள்.

அவற்றை பார்த்து வெறுத்தோ அல்லது அவர்களாக புரிந்து கற்றுக் கொண்டோ

ஒரு நாள் , ஒரு சில ஓவியர்கள் முன் வருவார்கள். உருவாவார்கள்.

இலங்கை தமிழ் படங்கள் வெற்றி பெறாததற்கு

இந்திய சினிமாதான் காரணம் என நினைத்திருந்தேன்.

இங்கே கருத்துகளை வைப்போர் போன்றவர்களே

அன்றும் அங்கு இருந்திருப்பார்கள்?

நம்மவரே அதற்கும் காரணம் என்பதை இப்போது உணர்கிறேன். :lol:

குப்பைகளாவது வரட்டும்

அது நல்லவை வர ஒரு நாள் உதவும்.

இங்கு அதை எதிர்த்து கருத்து வைப்போராவது

ஒரு நல்ல படத்தை உருவாக்காமலா இருப்பார்கள்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று பாரதிராஜா தெரிவித்த கருத்தைப் பொருத்தப்பாடு கருதி இணைக்கிறேன். அவரது கருத்து தசாவதாரம் தொடர்பானது. ஆனால் இக்கருத்தை ஆசிரியர் கிசெது அவர்களது முயற்சிக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

தசாவதாரம்-பாரதிராஜா கடும் விமர்சனம்!!

பொழுதுபோக்கா கதை எழுதிக்கிட்டிருந்தவங்க முழு நேர இயக்குநராக மாறினா எப்படி இருக்கும்? தசாவதாரம் மாதிரிதான் இருக்கும். கதையே இல்லாம, வெறும் தொழில்நுட்பத்தைக் காட்டி மக்களை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்துவதைத்தான் இப்போதெல்லாம் சினிமா என்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

திருச்சூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

இன்றைக்கு தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நல்ல கதைகளுக்குத்தான் பஞ்சமாக உள்ளது. எக்கச்சக்கமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் கதை கிடையாது. இரண்டு மொழி திரையுலகிலும் இதுதான் நிலைமை. கதையை விட்டு விடுகிறார்கள். தொழில்நுட்பம் என்ற 'ஜிகினா' வேலையை மட்டும் காட்டி மக்களை ஏமாற்றும் கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

.......

http://thatstamil.oneindia.in/movies/speci...savatharam.html

கிசெது அவர்களுக்கு அவருக்குப்பிடித்தமான இந்தப் பாடலைப்பற்றியதான விளக்கத்தைத் தருமாறு அன்புடன் வினவினால் என்ன?

'ஏமாறாதே...... ஏமாற்றாதே...!!!!!

Link to comment
Share on other sites

இன்று பாரதிராஜா தெரிவித்த கருத்தைப் பொருத்தப்பாடு கருதி இணைக்கிறேன். அவரது கருத்து தசாவதாரம் தொடர்பானது. ஆனால் இக்கருத்தை ஆசிரியர் கிசெது அவர்களது முயற்சிக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

தசாவதாரம்-பாரதிராஜா கடும் விமர்சனம்!!

பொழுதுபோக்கா கதை எழுதிக்கிட்டிருந்தவங்க முழு நேர இயக்குநராக மாறினா எப்படி இருக்கும்? தசாவதாரம் மாதிரிதான் இருக்கும். கதையே இல்லாம, வெறும் தொழில்நுட்பத்தைக் காட்டி மக்களை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்துவதைத்தான் இப்போதெல்லாம் சினிமா என்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

திருச்சூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

இன்றைக்கு தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நல்ல கதைகளுக்குத்தான் பஞ்சமாக உள்ளது. எக்கச்சக்கமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் கதை கிடையாது. இரண்டு மொழி திரையுலகிலும் இதுதான் நிலைமை. கதையை விட்டு விடுகிறார்கள். தொழில்நுட்பம் என்ற 'ஜிகினா' வேலையை மட்டும் காட்டி மக்களை ஏமாற்றும் கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

.......

http://thatstamil.oneindia.in/movies/speci...savatharam.html

கிசெது அவர்களுக்கு அவருக்குப்பிடித்தமான இந்தப் பாடலைப்பற்றியதான விளக்கத்தைத் தருமாறு அன்புடன் வினவினால் என்ன?

'ஏமாறாதே...... ஏமாற்றாதே...!!!!!

உங்க கிசெது வின் "இளம் புயல்" திரைப்படம் எப்படியிருக்குமோவென்று வந்த பின்னால்த் தான் தெரியும். ஆனால் அவரை வைச்சு இப்போ நீங்க காட்டற படம் அப்பப்பாபாபாபாபாபா....................

முன்பு கூடுதலாக உணவு விடுதிகளில் ஒரு அறிவிப்புப்பலகை தொங்கும், அதில் "நிறைவிருந்தால் நண்பர்களிடம் கூறுங்கள்; குறையிருந்தால் எங்களிடம் கூறுங்கள்" என்று எழுதியிருப்பார்கள். நீங்கள் உண்மையான விமர்சகராக இருந்திருந்தால் அவரின் முதல்ப் படத்தை பார்த்தபின் அவரிடமே சொல்லியிருக்கலாம். அப்படியில்லாமல் இங்கே வந்து நீங்களும் காட்டுவது............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-நிறை இருந்தால் நண்பர்களிட்் கூறுங்கள். குறையிருந்தால் எம்மிடம் கூறுங்கள்- மிக நல்ல கூற்று.

நீங்கள் கி.செ.துரையின் முதல் படமான பூக்கள் பார்த்ததில்லையா?

இளம் புயல் அவரது இரண்டாவது படம் நீங்கள் அறிவீர்களா?

புலம் பெயர் தேசங்களில் குறும்படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதும், அவற்றிற்கான போட்டிகள் நடைபெறுகின்றன என்பதும் அறிந்துள்ளீர்களா?

இங்கு எழுதும் எத்தனைபேர் புலம் பெயர் நாடுகளில் தயாரிக்கப்பட்ட படங்களை பார்த்துள்ளீர்கள்.

பூக்கள் வந்தபோது குறைகளை அவர்களிடம் மட்டுமே பலரும் கூறினார்கள்.

ஆளனால் இளம் புயல் வந்து தமிழ்நாட்டவராலேயே குட்டுப்பட்ட பின் நண்பர்களிடம் கூற என்ன நிறை இருக்க முடியும்.

இப்போது துரையை விட்டுவிடுங்கள். அவர் பிழைத்துப் போகட்டும்.

ஆனால் புலம்பெயர்ந்தோரின் சினிமா என்பது என்ன. கோடம்பாக்கத்திற்கு போட்டியா அல்லது அதற்கு மாற்றா?

தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்பார்கள்.

தமிழ்நாட்டிற்கும் - ஈழத்திற்கும் அப்படித்தானே உள்ளது.

தமிழ்நாட்டு இலக்கியம் - ஈழத்து இலக்கியம் வேறுபாடு இல்லையா?

அப்ப சினிமாவில் மட்டும் தமிழ்நாட்டை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்.

நாம் புதிதாக சிந்திக்க கூடாதா?

நிச்சயம் நமது சினிமா வேறாகத்தான் இருக்க முடியும்.

அது கி.செ.யின் மசாலாவாக இருக்க முடியாது.

அவரை ஒதுக்கி தள்ளுங்கள்.

அவர் கோடம்பாக்கத்துடன் மாரடிக்கட்டும்.

நாம் தமிழ் என்னும் பொதுப்பரப்பில்

ஏடுகளில் இருந்த இலக்கியத்தை அச்சுப்பதிப்பாக்கிய ஈழத்தரவரான சி.வை.தாமோதரம் பிள்ளளையை முன்னுதாரணமாக கொள்வோம்.

தமிழ்நாட் இலக்கியத்தில் இருந்து வேறுபட்ட ஈழத்திலக்கியத்தை நம்முன்ளோர் முன்வைத்தார்கள் என்பதை கவனத்தில் கொள்வோம்.

இன்று தமிழ்நாட்டில் பேசப்படும் தலித்திலக்கியத்தின் முன்னோடியாக ஈழத்தின் சாதிய எதிர்ப்பு போராட்டமும், இலக்கியமும் 1965களியே எழுச்சி பெற்று விட்டதை மனதில் கொள்வோம்.

உலகத்திற்கே வழிகாட்டியான விடுதலைப்போராட்டம் ஈழத்திலேயே நடத்தப்படுகின்றது எனப் பெருமை கொள்வோம்.

சினிமா மட்டும் கோடம்பாக்கம் சாயலில் இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்.

கருத்துக்களை எழுதுங்கள்.

விவாதங்களை தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி சாந்தி.

துரையார் தன்ர கதையைச் சினிமாவோடு மட்டும் தொடர்புபடுத்தி வைத்துக்கொள்வதுதான் நல்லது. தேவையில்லாமல் ஈழப்போராட்டத்தை இழுத்துவிடுகிறார். காக்கா பிடிப்பதற்கு போராட்டம்தான் இவருக்குக் கிடைத்ததா?

தமிழகத் திரையுலகத்தின் பாதிப்பு ஈழப்போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்தது என்பதைத்தான் அவர் சொல்ல வந்தாரென்றால், நறுக்குத் தெறித்தாற்போல் அதைச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவரின் பேச்சு அப்படியில்லை.

அடுத்தது, நாங்கள் தமிழகத்திலிருந்துதான் ஈழத்துக்குப் போனோம் என்ற கண்டுபிடிப்பொன்றை வெளியிட்டிருக்கிறார். இதற்காக அவருக்கு புதுசா ஏதாவது ஒரு பட்டம் குடுங்கப்பா. (அதுக்காக சோழனுக்கும் குடுக்க வேணுமெண்டதில்லை ;-))

ஏற்கனவே 'இங்கிருந்து பிழைப்புத் தேடிப்போன உங்களுக்கு எதுக்குத் தனிநாடு?' எண்டு தமிழகத்தார் நையாண்டி பண்ணிக் கொண்டிருக்கிறாங்கள். அதுக்குள்ள இராஜஇராஜ சோழன் படையாட்கள்தான் வல்வெட்டித்துறையார் எண்டுறார். சோழன் படையாட்கள் வல்வெட்டித்துறைக்கு வந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் வரலாற்றில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இலங்கையின் மத்தியில் வேண்டுமானால் சாத்தியப்படலாம். எதுக்கும் விவரம் தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

நிற்க,

துரையாருக்குத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்த கருத்தை அவர் மேடையில சொல்லிறார்.

"நீங்களெல்லாம் தமிழகத்துக்கு வந்திடுங்கோ. எல்லாரும் நிம்மதியாக இருக்கலாம். ஈழத்தில சண்டை சச்சரவுகள் தேவையில்லை'. இதை எம்மேல் கொண்ட அன்புமிகுதியால் சொல்வதாக துரையர் சொல்கிறார். நானும் அப்படித்தான் நம்புகிறேன்.

ஆனால் இதைக் கேட்கும்போது,

"இலங்கையிலிருக்கும் ஏனையவர்கள் எல்லாம் பெளத்தராக மாறிவிடுவதே இனப்பிரச்சினைக்கு சுலபமான தீர்வு" என்று பிரபல பன்னாட்டு அறிவுசீவியொருத்தர் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தது ஞாபகம் வந்தது.

கடைசியாக காவடிக்கு...

நீர் உந்தத் தேவையில்லாத கதைகளை நிப்பாட்டும்.

தேசியத் தலைவரே பாரதிராசாவின்ர கையப்பிடிச்சு, 'அண்ணை எங்கட மக்களின்ர வாழ்க்கையை நீங்கள்தான் படமாக்க வேணும்' எண்டு கேட்டுக்கொண்ட பிறகு அதை நக்கலடிச்சு நீர் கதைக்கிறது சரியில்லை.

விட்டு விடும். (நல்லவன் எண்டு நான் பேர் வைச்சது கொஞ்சம் ஓவர்தான்).

போராட்டத்தையே அவங்களப் பாத்துத் தொடங்கீட்டமாம், எங்களுக்கான சினிமாவை அவங்களை மாதிரி எடுத்தா என்ன வந்தது?

இப்ப எங்கள் முன்னாலுள்ள நோக்கம், தமிழ்ச்சினிமாவைப் பார்த்தே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவாறதுதான்.

என்னுடைய தெரிவு விஜயகாந்த் பாணி சண்டைகள்.

உங்கள் தெரிவென்ன?

Link to comment
Share on other sites

புபுலம் பெயர் திரைமுயற்சியில் கனடாவிலிருந்து "தமிழிச்சி" எனம் படம் பலருது கவனத்தைப் பெற்றிருந்தது.

குறும்படங்களில் பல கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக "பேரன் பேத்தி' (பிரான்சு).

புலம்பெயர்வாழழ்வு என்பது அனுபவப் பொக்கிசம். இலகுவில் கிடைக்க முடியாதது. இவை படைப்புகளால் உலகின் கவத்தைப்பெறும் என்பதில் அசைக்க முடியாத கருத்துடையவன் நான்.:icon_mrgreen:

தங்களது இக்கருத்தில் நானும் உடன்படுகிறேன் சுழியன்.

சிங்களத்திரைப்படங்கள் விருதுப்படங்களாக வெற்றி பெறும் தகைமை மிக்கனமாய் இருப்பதற்கு யதார்த்தம் சினிமா மொழியில் சொல்லப்படுவதால்தான். சிங்களப்படங்கள் தரத்தில் வேண்டாம் புலம்பெயர் வாழ்வில் பதியப்பட திரைக்கதைகள் நிறையவே உள்ளன. அவை பதிவு செய்யப்பட கி.செல்லத்துரை அவர்களிடம் உள்ள வளம் பயன்பட்டால் சிறந்த படைப்பை செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

-புலம் பெயர் தேசங்களில் குறும்படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதும், அவற்றிற்கான போட்டிகள் நடைபெறுகின்றன என்பதும் அறிந்துள்ளீர்களா?

இங்கு எழுதும் எத்தனைபேர் புலம் பெயர் நாடுகளில் தயாரிக்கப்பட்ட படங்களை பார்த்துள்ளீர்கள்.

ஈழத்திலிருந்து வெளியான பல குறுப்படங்கள் சில நீளத்திரைக்காவியங்கள் என எம்மவர்களின் தயரிப்புக்கள் கோடம்பாக்கமே வியக்கம் அளவுக்கு குறைந்த வளங்களுடனும் நெருக்கடிக்குள்ளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆவணப்படத்துக்கும் திரைப்படத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் நாங்கள் குறும்படங்களைப்பற்றிக் கதைக்கிறோம்)

இந்தத்திரைப்படங்கள் எல்லாம் கையைச்சுட்டுக் கொள்ளாமல் காலத்தை வென்ற படைப்புக்கள். ஆனால் இந்தப்படங்களை பார்க்கவோ ஆதரவு கொடுக்கவோ மாட்டாதவர்கள் மசாலாவே கையைச்சுட்டுக்கொள்ளாமல் காசை அள்ளித்தரும் என்று கதைவிடுகிறார்கள்.

புலத்தில் தயாரான "பேரன்பேர்த்தி , எதமட்டும் , மனுசி , மனமுள் , பிஞ்சுமனம் என பல குறும்படங்கள் வெளிவந்துள்ளன இவையெல்லாம் யாரின் கண்ணிலும் படவில்லைப்போலும். இந்தப்படங்களை எடுத்தவர்களிடம் போதிய பணவளம் இருப்பின் இவர்கள் உலகத்தரத்துக்கு நிகரான சினிமாக்களை தருவார்்கள். இதை உரியவர்கள் புரிந்த கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

என்ரை கவலையெல்லாம் இந்தத் தமிழ் சினிமாவைப் பார்த்து எங்கடை பிள்ளையள் போராட்டத்தை நடத்த இல்லை எண்டது தான். அப்படிச் செய்திருந்தால் எப்பவோ தமிழீழம் கிடைச்சிருக்கும்.

உந்த ரசினிகாந்தும் விசயகாந்தும் பிடிக்கிற சண்டையளைப் பாத்தியளே. அடக் கடவுளே என்ன மாதிரிப் பாஞ்சு பாஞ்சு அடிக்கிறாங்கள்.

ஒரு படத்pலை நாலு பக்கமும் நிண்டு ஆக்கள் சுடுகினம். விசயகாந்த் தான் போட்டிருந்த சங்கிலியைக் கழட்டிப் பிடிக்கிறார். சன்னமெல்லாம் அந்தச் சங்கிலியிலை பட்டுத் தெறிக்குது. அங்கடை போராளிகளுக்கும் விசயகாந் மாதிரி ஒவ்வொரு சங்கிலி வாங்கிப் போட்டு விட்டால் இழப்பே இருக்காது.

இது மாதிரி எக்கச் சக்கமான விசயங்கள் தமிழ் சினிமாவுக்குள்ளை இருக்குது.

கி.செ.துரை மாதிரயான ஆக்கள் எல்லாத் தமிழ்ப் படத்தையும் இருந்து பாத்து உதுமாதிரியான விசயங்களை எல்லாம் எடுத்துச் சொன்னால் அல்லது 'எம்மவர் படைப்புகளிலை' படைச்சுக் காட்டினால் போராட்டத்துக்கு உதவியா இருக்கும். :icon_mrgreen::lol::lol:

Link to comment
Share on other sites

-நிறை இருந்தால் நண்பர்களிட்் கூறுங்கள். குறையிருந்தால் எம்மிடம் கூறுங்கள்- மிக நல்ல கூற்று.

நீங்கள் கி.செ.துரையின் முதல் படமான பூக்கள் பார்த்ததில்லையா?

இளம் புயல் அவரது இரண்டாவது படம் நீங்கள் அறிவீர்களா?

புலம் பெயர் தேசங்களில் குறும்படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதும், அவற்றிற்கான போட்டிகள் நடைபெறுகின்றன என்பதும் அறிந்துள்ளீர்களா?

இங்கு எழுதும் எத்தனைபேர் புலம் பெயர் நாடுகளில் தயாரிக்கப்பட்ட படங்களை பார்த்துள்ளீர்கள்.

பூக்கள் வந்தபோது குறைகளை அவர்களிடம் மட்டுமே பலரும் கூறினார்கள்.

ஆளனால் இளம் புயல் வந்து தமிழ்நாட்டவராலேயே குட்டுப்பட்ட பின் நண்பர்களிடம் கூற என்ன நிறை இருக்க முடியும்.

இப்போது துரையை விட்டுவிடுங்கள். அவர் பிழைத்துப் போகட்டும்.

ஆனால் புலம்பெயர்ந்தோரின் சினிமா என்பது என்ன. கோடம்பாக்கத்திற்கு போட்டியா அல்லது அதற்கு மாற்றா?

தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்பார்கள்.

தமிழ்நாட்டிற்கும் - ஈழத்திற்கும் அப்படித்தானே உள்ளது.

தமிழ்நாட்டு இலக்கியம் - ஈழத்து இலக்கியம் வேறுபாடு இல்லையா?

அப்ப சினிமாவில் மட்டும் தமிழ்நாட்டை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்.

நாம் புதிதாக சிந்திக்க கூடாதா?

நிச்சயம் நமது சினிமா வேறாகத்தான் இருக்க முடியும்.

அது கி.செ.யின் மசாலாவாக இருக்க முடியாது.

அவரை ஒதுக்கி தள்ளுங்கள்.

அவர் கோடம்பாக்கத்துடன் மாரடிக்கட்டும்.

நாம் தமிழ் என்னும் பொதுப்பரப்பில்

ஏடுகளில் இருந்த இலக்கியத்தை அச்சுப்பதிப்பாக்கிய ஈழத்தரவரான சி.வை.தாமோதரம் பிள்ளளையை முன்னுதாரணமாக கொள்வோம்.

தமிழ்நாட் இலக்கியத்தில் இருந்து வேறுபட்ட ஈழத்திலக்கியத்தை நம்முன்ளோர் முன்வைத்தார்கள் என்பதை கவனத்தில் கொள்வோம்.

இன்று தமிழ்நாட்டில் பேசப்படும் தலித்திலக்கியத்தின் முன்னோடியாக ஈழத்தின் சாதிய எதிர்ப்பு போராட்டமும், இலக்கியமும் 1965களியே எழுச்சி பெற்று விட்டதை மனதில் கொள்வோம்.

உலகத்திற்கே வழிகாட்டியான விடுதலைப்போராட்டம் ஈழத்திலேயே நடத்தப்படுகின்றது எனப் பெருமை கொள்வோம்.

சினிமா மட்டும் கோடம்பாக்கம் சாயலில் இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்.

கருத்துக்களை எழுதுங்கள்.

விவாதங்களை தொடருங்கள்.

உண்மையான விமர்சனங்களையும், விவாதங்களையும் நான் ஒருபோதும் புறந்தள்ளியது கிடையாது. அது போல் தங்கள் தனிப்பட்ட சுய விளம்பரங்களுக்காக தனிநபர்களைத் தாக்கிக் கருத்து வைப்பவர்களுக்கு நான் ஜால்ரா அடித்ததும் கிடையாது. ஏற்கனவே நான் துரை அவர்களின் "பூக்கள்" படத்தை பார்க்கவில்லை என்பதை பதிவு செய்துள்ளேன். அதை நீங்கள் கவனிக்கவில்லைப் போலும்.. அதுபோல் "இளம்புயல்" அவரது இரண்டாவது படமென்பதையும், ஏன் அவரையுமே இப்பதிவின் மூலம் தான் அறிந்து கொண்டேன். அதுபோல் "இளம்புயல்" ஒலித்தட்டு வெளியீட்டு விழா தான் தமிழகத்தில் நடந்தது. திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. வெளிவராத படத்தை எப்படி விமர்சிக்க முடியும்?? .படத்தின் கதைப் போக்கை கேள்விப்பட்டு அது பற்றி இயக்குனர் அமீர் சொன்னதைத் தான் நீங்கள் ஏதோ பெரிய விமர்சனம் என்று கருதுகின்றீர்கள். அமீர் பருத்தி வீரன் திரைப்படத்தின் இயக்குனரே தவிர தயாரிப்பாளரல்ல. அதுபோல் அமீருக்கு பருத்திவீரன் 2வதோ 3வதோ படமுமல்ல. அவர் பாலசந்தரிடம் பல வருடங்கள் பயிற்சி பெற்று வெளிவந்து, பலவருடங்களாக திரைப்படங்களை இயக்குகின்றார்.

ஒருவரின் திரைப்படமோ அல்லது அவர் நடாத்திய ஒரு நிகழ்ச்சி பற்றியோ விமர்சனம் செய்ய விரும்பினால் அவ்விடயத்தைப் பற்றி விமர்சிப்பது நாகரீகம். அதைவிடுத்து அவர் யாருக்கு படிப்பிச்சவர், அவரது பின்புலம் என்ன?? முன்புலமென்ன?? என்று தேவையில்லாமல் ஒருவர் மீது கரி பூச விளைவதை எவரும் விமர்சனம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அடுத்தது ஆறுமுகநாவலரிலிருந்து பல எம் மண்ணைச் சார்ந்தவர்கள் தமிழ் நாட்டில் தான் படித்துப் பட்டம் பெற்றார்கள். இதை நீங்கள் மறந்து விட்டீர்களோ?? இன்று நாம் பாடும் தேவாரம், திருவாசகமெல்லாம் இந்தியாவில் படைக்கப் பட்டவை தான். அப்ப நாங்கள் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு எமக்காக புதிதாக வேறு படைப்போமா?? முன்பு இலங்கை வானொலியில் ஈழத்துப் பாடல்கள் என்று ஒரு நிகழச்சியே போனது. எத்தனை அருமையான பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. ஆனால் நாங்கள் மேடயைமைத்து அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினோமா?? அல்லது இந்தியப் பாடகர்களை இலங்கைக்கு அழைத்து அவர்கள் பாட வாய் பிளந்து பார்த்து நின்றோமா??

வன்னிக்குக் கூட இயக்குனர் மகேந்திரனையும், இயக்குனர் பாரதிராசாவையும் அழைத்து அவர்கள் மூலம் தான் திரைப்படம் சம்பந்தமான பயிற்சிப் பட்டறைகள் நடந்தது. ஏன் "ஆணிவேர்" திரைப்படத்தை இயக்கிய ஜான் கூட இயக்குனர் மகேந்திரனின் மகனே. நிலைமைகள் இப்படியிருக்க தற்போதய நிலையில் எங்களால் இலங்கைத் தமிழ்ப்படத்துறையில் தனித்து நின்று சாதிக்க முடியுமென்று சவால் விட முடியுமா?? எப்போது முடியும்? நாமும் முறையாக பயிற்சி பெற்று திறைமைகளை வளர்த்து விட்டால், நாமும் பின் சாதிக்கலாம். ஆனால் இலகுவாகவும் இயல்பாகவும் பயிற்சி பெறுவதென்றால் தமிழ்நாட்டுச் சினிமாவில் தான் பயிற்சிகளைப் பெற முடியும். சிறிது காலம் அவர்கள் பாணியிலேயே படங்களை வழங்கிவிட்டு, பின் நமக்காக இன்னொரு பாணியை அமைத்துக் கொள்ளலாம்.

எமக்கான முறை வேறு என்பவர்கள் சினிமாவில் அல்ல, தொலைக்காட்சியில் என்ன சாதித்தீர்கள்?? இன்றும் இந்தியத் தொலைக்காட்சிகளை நம்பித் தானே எமது தொலைக் காட்சிகளை நடாத்துகின்றோம்.

நீங்கள் தமிழ்நாட்டுச் சினமாவைப் பற்றி படித்தீர்களோ தெரியாது ஆனால் நான் நிறையவே படித்துள்ளேன். ஆரம்ப காலங்கில் தமிழ்நாட்டுச் சினிமாவை இயக்கியவர்கள் பலர் வட இந்தியாவையும் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள். அவர்கள் மூலமே பல திரைப்படங்கள் வெளிவந்தன. பல வருடங்களாக அவர்களிடம் பயிற்சி பெற்ற பின்னரே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சாதிக்கத் தொடங்கி இன்று இந்தியாவில் அதிக படங்கள் தயாரிக்கும் ஒரு மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. அதுபோல் இன்று இந்தியத் திரைப்படங்களின் பல துறைகளிலும் தமிழ் நாட்டவரே பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நாம் இன்றும் குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டிக் கொண்டு, ஏதோ சந்திரனுக்கு ராக்கட் விட்டவன் போல பீலா விட்டே பழகிவிட்டோம். அதனால் அடுத்தவன் எவனாவது எதையாவது செய்ய வெளிக்கிட்டால் விடுவோமா என்ன ??

அடுத்தவர் செய்வதை தவறென்று விமர்சிக்க வருபவர்கள் சரியான வழியையும் செய்து காட்டினால், அதை வரவேற்கலாம். அதை விட்டுவிட்டு சும்மா வாய்ச்சவடாலேயே பிலிம் காட்டலாமென்றால், அதுதான் நமக்குரிய சினிமாவோ??? :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெனிஸ் பாடலை பிரதியெடுத்து கே சி... துரை தனது மகனின் கண்டுபிடிப்பு என தம்பட்டம் அடித்துகொள்ளவதால் விரைவில் சட்டசிக்கலுக்கு உட்ப்படுத்தப்படபோறார்.

டெனிஸ் பாடல் : http://www.youtube.com/watch?v=CbfGg9o9J9w

சி.. துரையின் படத்தில் உள்ள பாடல்.:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.