Jump to content

ஈரமான ரோஜாவே


Recommended Posts

ஈரமான ரோஜாவே

roseds3.jpg

மலரே!

தென்றல் தேடிய முகவரி நீ.

முகவரி மாறிய தென்றலின்

முதல் வரியும் நீ.

தென்றல் தீண்டிட

நீ மலர்ந்தாய்

தென்றல் உன்னைத்

தொட்ட போது

நீ நிலை தடுமாறினாய்

தென்றல் சுமந்த நீரால்

நீ நனைந்தாய்.

தென்றல் உன்னை

அணைத்தபோதும்

நீ ஏனோ

தலை குனிந்தாய்.

மழை கழுவிய

மலரே

உன் வாசம் போனதாய்

வருந்தாதே

வாழ்வு முடிந்ததாய்

புலம்பாதே

மலர் தழுவிய என்னில்

சுவாசமாய்

உன் வாசம்

இன்று நான் மண்னோடு

உன் வாசம் மீண்டும் காற்றோடு

நாளை நீ என்னோடு

உன் வாசம் அதே காற்றோடு

கலங்காதே

உனக்கும் எனக்கும் மட்டுமல்ல

உலகிற்கே இதுதான் நியதி

Link to comment
Share on other sites

வெண்ணி...

கவிதை படிக்கும்போது....

தென்றல் ஒரு ஆணாக....

மலர் ஒரு பெண்ணாக... பார்க்கமுடிந்தாலும்...

காற்றுக்கு புயல்.. சூறாவளி போன்ற பன்முகங்கள் உண்டு...

பூக்களில் வண்டை இதழ்களால் கொன்றுவிடும் பூக்களும் உண்டு..

வண்டு நாடாத.. தேன் கொடுக்காத பூக்களும் உண்டு...

கவிதை தென்றல்..வாழ்வில் கிடைக்குமா?...

கவதையின் மலர்கள் வாழ்வில் கிட்டுமா...

உங்கள் கவிதையை

தேன் தேன்..தேன்

நானும் ரசித்தேன் :lol:

வெண்ணிலா நன்றி

Link to comment
Share on other sites

நல்ல கவிதை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரமான ரோஜவைதந்த வெண்ணிலாவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

வெண்ணிலா அக்காவின் "ஈரமான ரோஜா"...வை பறிக்க ஆசை..ரோஜாவிற்கு கண்ணீர் வந்திடுமோ எண்டு நினைக்கையில் பறிக்க முடியவில்லை... :lol:

ரோஜா அழகு எண்டு தான் இதுவரை நினைத்திருந்தேன் ரோஜாவில் ஈரம் பட்டால் அது பேரழகு எண்டு இப்போது தான் அறிந்தேன்..வாழ்த்துக்கள் நிலா அக்கா.. :lol:

காற்றோடு காற்றாக்கி விட்ட

உன் வாசத்தை

காற்றில் தேடுகிறேன்

காற்றும் காட்ட

மறுக்கிறது.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வெண்ணிலா

கவிதை நன்றாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் வாசங்கள் மாறுவதில்லை.மாறவும் கூடாது.நன்று நிலா.

Link to comment
Share on other sites

வெண்ணி...

கவிதை படிக்கும்போது....

தென்றல் ஒரு ஆணாக....

மலர் ஒரு பெண்ணாக... பார்க்கமுடிந்தாலும்...

காற்றுக்கு புயல்.. சூறாவளி போன்ற பன்முகங்கள் உண்டு...

பூக்களில் வண்டை இதழ்களால் கொன்றுவிடும் பூக்களும் உண்டு..

வண்டு நாடாத.. தேன் கொடுக்காத பூக்களும் உண்டு...

கவிதை தென்றல்..வாழ்வில் கிடைக்குமா?...

கவதையின் மலர்கள் வாழ்வில் கிட்டுமா...

உங்கள் கவிதையை

தேன் தேன்..தேன்

நானும் ரசித்தேன் :o

வெண்ணிலா நன்றி

சொல்லுங்கோ விகடகவி... வெண்ணி என கூப்பிட்டியளோ :lol::lol:

கவிதை படிக்கும் போது............

ஓஓஹோ இபப்டியோ விளக்கம் கொண்டியள். எனக்கென்னமோ உங்கள் விளக்கம் போல் என் கவிதையில் விளக்கம் அமையவில்லை என தோணுது.

அதுசரி என்ன குழப்புறீங்க விகடகவி......

"வண்டு நாடாத.. தேன் கொடுக்காத பூக்களும் உண்டு..."

இவ்வரிகளை ஏற்றுக்கொள்கின்ற போதிலும்......

"பூக்களில் வண்டை இதழ்களால் கொன்றுவிடும் பூக்களும் உண்டு.."

உதுக்கு ஒரு பூ சொல்லுங்கோ விகடகவி. அதுக்காக மங்கையர் என சொல்லுறேல்லை சொல்லிட்டேன். :o

:unsure: தேன்...தேன்...தேன்...

நானும் ரசித்தேன்......................... :lol: ரசிக்காமல் ருசியுங்கோ

நன்றிகள் விகடகவி...

நல்ல கவிதை..

ஈரமான ரோஜவைதந்த வெண்ணிலாவுக்கு நன்றி

:o நன்றிகள். தூயா & நிலாமதி

Link to comment
Share on other sites

வெண்ணிலா அக்காவின் "ஈரமான ரோஜா"...வை பறிக்க ஆசை..ரோஜாவிற்கு கண்ணீர் வந்திடுமோ எண்டு நினைக்கையில் பறிக்க முடியவில்லை... :o

ரோஜா அழகு எண்டு தான் இதுவரை நினைத்திருந்தேன் ரோஜாவில் ஈரம் பட்டால் அது பேரழகு எண்டு இப்போது தான் அறிந்தேன்..வாழ்த்துக்கள் நிலா அக்கா.. :lol:

காற்றோடு காற்றாக்கி விட்ட

உன் வாசத்தை

காற்றில் தேடுகிறேன்

காற்றும் காட்ட

மறுக்கிறது.. :lol:

அப்ப நான் வரட்டா!!

:lol::o பிச்சுப்போடுவன் பிச்சு. எப்பவும் நிலாக்காவோடை தான் அவருக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஜம்மு ஈரமான ரோஜாவை பறிக்கும்போது ரோஜா அழுதோ இல்லையோ,... நிலாக்கா.................... :o:unsure:

ரோஜா அழகுதான் குளிச்சால் இன்னமும் அழகு என தெரியாதோ பேபி. அச்சோ பேபி இப்பவும் பேபியாகவே இருக்குது பாவம்.

(காற்றை கண்ணுக்கே தெரியாது...இதுலை வேறை காற்றில் வாசத்தை தேடுதாம் பேபி.................. ஜம்மு......... :lol:

காற்றில் வாசத்தை

தேடாதே

காற்றை சுவாசித்துப்பார்

றோஜாவின் நறுமணம்

உன் நாசியை துளைக்கும் :o

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் வெண்ணிலா

கவிதை நன்றாக உள்ளது

ம்ம்ம் வாசங்கள் மாறுவதில்லை.மாறவும் கூடாது.நன்று நிலா.

:lol: நன்றிகள் முனிவர் & சஜீவன் அண்ணா

சஜீ அண்ணா பூக்களின் வாசங்கள் மாறுவதில்லையோ..... மாறுமே ஏன்னா முதல் நாள் இருக்கும் வாசம் போல மறுநாள் இருக்காதே. அதுதான் இயற்கை :lol:

Link to comment
Share on other sites

வெண்ணீ!...

ஆதியும் மூளையை பிய்ச்சுப் பிய்ச்சு பாத்தன் எல்லாம் முக்கோணமாத் தெரியுது..... :lol:

:o:lol: அச்சோ பலவிதமான கவிதைகள் படைக்கும் ஆதிக்கே இந்நிலமையா? சரி கவிதையின் பொருளை சொல்லவோ? :lol: கொஞ்சம் தாமதமாக சொல்லுறேனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா வெண்ணிலா திருடிப்புட்டாய் பாட்டு பாடினான். கவிதை நல்லா இருக்குது . ஏன் கோகுலத்தில இருக்கிற ரோஜாவை பறிச்சிட்டிங்கள் :lol: ? ஜம்மு தேடிட்டு இருக்கிறார் தான் யாருக்கோ கொடுக்க வைத்திருந்த ரோஜாவை காணவில்லை என்று :lol: .

Link to comment
Share on other sites

:lol::lol: பிச்சுப்போடுவன் பிச்சு. எப்பவும் நிலாக்காவோடை தான் அவருக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஜம்மு ஈரமான ரோஜாவை பறிக்கும்போது ரோஜா அழுதோ இல்லையோ,... நிலாக்கா....................

ரோஜா அழகுதான் குளிச்சால் இன்னமும் அழகு என தெரியாதோ பேபி. அச்சோ பேபி இப்பவும் பேபியாகவே இருக்குது பாவம்.

(காற்றை கண்ணுக்கே தெரியாது...இதுலை வேறை காற்றில் வாசத்தை தேடுதாம் பேபி.................. ஜம்மு......... :o

காற்றில் வாசத்தை

தேடாதே

காற்றை சுவாசித்துப்பார்

றோஜாவின் நறுமணம்

உன் நாசியை துளைக்கும்

அச்சோ..அந்த ரோஜாவை போல தான் ஜம்மு பேபியும்..பிய்க்க கூடாது நிலா அக்கா :D ..பாவம் அல்லோ..(இது எப்படி இருக்கு??)...ஓ ஈரமான ரோஜாவை பறிக்கும் போது தாங்கள் அழுவியளோ..??..ஏன்.. :o

யாருக்கு தெரியும் அந்த வானிலவின் கண்ணீர் தான் ரோஜா ஈரமானதிற்கு காரணமோ..??..ரோஜாவின் கண்ணீரை துடைக்க வண்டு வரும்..ஆனால் வானிலவின் கண்ணீரை துடைக்க..(முடியலையே)..கொஞ்சம் "ஓவரா" போயிட்டமோ.. :D

இப்ப மட்டும் இல்ல எப்பவுமே நான் பேபி தான்..(அப்ப தான் ரோஜாவின் இதழகளை கொய்ந்து விட்டு அழுது சமாளிக்களாம்). :o .இது எல்லாம் சொல்லி தரவா வேண்டும் எனக்கு..ம்ம்..காற்று கண்ணிற்கு தெரியாது என்பது உண்மை ஆனால்..அது சுமந்து வரும் வாசணையை முகரமுடியும் தானே..?? :o

காற்றில் பல வாசம்

அதில் ஏது

ரோஜாவின்

வாசம்..??

அறிந்த போது

ரோஜா நிலத்தில்..!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மலரே!

தென்றல் தேடிய முகவரி நீ.

முகவரி மாறிய தென்றலின்

முதல் வரியும் நீ.

ஒரு மழைத்துளி சொல்லுது தென்றல் வந்து ரோஜாவே உன்னைத்தான் தேடுது. உன்னை சந்தித்தபோது அது தான் தென்றல் என்பதையே மறந்துட்டுது.

தென்றல் தீண்டிட

நீ மலர்ந்தாய்

தென்றல் உன்னைத்

தொட்ட போது

நீ நிலை தடுமாறினாய்

தென்றல் உன்னை மலர வைக்கின்றது. அபப்டி இருந்தும் மலர்ந்த பின் தென்றல் தொட்டபோது ஆடுது. (தடுமாறுதல்)

தென்றல் சுமந்த நீரால்

நீ நனைந்தாய்.

தென்றல் உன்னை

அணைத்தபோதும்

நீ ஏனோ

தலை குனிந்தாய்.

தென்றலில் வந்த தண்ணீர் பட்டு ரோஜா நனைக்கின்றது. நனைந்தபோது அது தலைகுனிகின்றது....(பாரமோ வெட்கமோ) :wub:

மழை கழுவிய

மலரே

உன் வாசம் போனதாய்

வருந்தாதே

வாழ்வு முடிந்ததாய்

புலம்பாதே

ரோஜாவின் நீர் பட்டதால் வாசம்போனதாய் வருந்தாமல் வாழ்வு முடிந்தது என புலம்பாமல் இருக்க சொல்ல்லுறம் :lol: ஏனெனில்

மலர் தழுவிய என்னில்

சுவாசமாய்

உன் வாசம்

அம்மழைத்துளி பட்ட ரோஜாவின் வாசம் மழைத்துளியில் கலந்து அந்நீரின் சுவாசமாக உள்ளது

இன்று நான் மண்னோடு

உன் வாசம் மீண்டும் காற்றோடு

அம்மழைத்துளி நிலத்தில் விழுது. ஆனால் ரோஜாவின் வாசம் மீண்டும் தென்றலோடு கலக்குது

நாளை நீ என்னோடு

உன் வாசம் அதே காற்றோடு

நாளை ரோஜாவும் நிலத்தில் உதிர்ந்து விழுந்துடும். ஆனாலும் வாசம் தென்றலோடு :lol:

கலங்காதே

உனக்கும் எனக்கும் மட்டுமல்ல

உலகிற்கே இதுதான் நியதி

உதுதான் விளக்கம் ஆதீ............... :huh::huh:

Link to comment
Share on other sites

நல்ல காலம் திருக்குறளோட நிப்பாட்டி போட்டார் திருவள்ளுவர்..அவரே உரையும் எழுதியிருந்தால் இப்படி நிறைய குழப்பம் வந்திருக்கும் போல.. :huh:

Link to comment
Share on other sites

நல்ல கவிதை வெண்ணிலா.

அதுசரி என்ன குழப்புறீங்க விகடகவி......

"வண்டு நாடாத.. தேன் கொடுக்காத பூக்களும் உண்டு..."

இவ்வரிகளை ஏற்றுக்கொள்கின்ற போதிலும்......

"பூக்களில் வண்டை இதழ்களால் கொன்றுவிடும் பூக்களும் உண்டு.."

உதுக்கு ஒரு பூ சொல்லுங்கோ விகடகவி. அதுக்காக மங்கையர் என சொல்லுறேல்லை சொல்லிட்டேன். :huh:

சிறுவயதில் நெப்பந்திஸ் என்று ஒரு தாவரம் வண்டு/பூச்சிகளை மடக்கி பிடித்து உண்ணும் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதன் பூ தான் இந்த வேலையை செய்யுதா தெரியாது.

Link to comment
Share on other sites

நல்ல காலம் திருக்குறளோட நிப்பாட்டி போட்டார் திருவள்ளுவர்..அவரே உரையும் எழுதியிருந்தால் இப்படி நிறைய குழப்பம் வந்திருக்கும் போல.. :lol:

:lol::lol: நாமளும் திருக்குறளோடை :lol: சீ கவிதையோடை நிப்பாட்டி இருக்கலாம். நமக்கும் திருவள்ளுவர் என பெயர் வந்தாலும் என்றுதான் பொருளையும் எழுதிட்டமாக்கும் :lol:

Link to comment
Share on other sites

நல்ல கவிதை வெண்ணிலா.

சிறுவயதில் நெப்பந்திஸ் என்று ஒரு தாவரம் வண்டு/பூச்சிகளை மடக்கி பிடித்து உண்ணும் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதன் பூ தான் இந்த வேலையை செய்யுதா தெரியாது.

:lol: நன்றிகள்

ஆமாம் நானும் கேள்விப்பட்டேன் இப்பதான் நினைவுக்கு வருது என்றா பாருங்கோவன். நன்றிகள் தகவலுக்கு :lol:

வெண்ணிலா வெண்ணிலா திருடிப்புட்டாய் பாட்டு பாடினான். கவிதை நல்லா இருக்குது . ஏன் கோகுலத்தில இருக்கிற ரோஜாவை பறிச்சிட்டிங்கள் :lol: ? ஜம்மு தேடிட்டு இருக்கிறார் தான் யாருக்கோ கொடுக்க வைத்திருந்த ரோஜாவை காணவில்லை என்று :lol: .

:lol: ஓ நல்லா தான் பாட்டு பாடுறியள் சுப்பண்ணௌ

நாங்க அங்கை எல்லாம் ரோஜாவை பறிக்கலை என ஜம்முவுக்கு நல்லாவே தெரியுமே :D

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வெண்ணிலா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686 @colomban
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.