Jump to content

வவுனிக்குளத்தில் பாரிய மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 60 பேர் படுகாயம்- உடலங்கள் உட்பட படைப்பொருட்கள் மீட்பு


Recommended Posts

பாலையடியில் பாரிய முறியடிப்புத் தாக்குதல்-முப்பது படையினர் பலி - பல கனரக ஆயுதங்கள் கைப்பற்றப்படுள்ளன.

- புலிகளின் குரல்

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

வவுனிக்குளத்தில் பாரிய மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 60 பேர் படுகாயம்- உடலங்கள் உட்பட படைப்பொருட்கள் மீட்பு

[வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 09:45 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வவுனிக்குளத்தில் உள்ள பாலையடிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய அளவிலான மும்முனை முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதலால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில், 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மேற்கு வவுனிக்குளத்தில் உள்ள பாலையடிப் பகுதியில் இருந்து மும்முனைகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6:00 மணியளவில் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடனும் எம்.ஜ-24 ரக உலங்குவானூர்தியின் பீரங்கித்தாக்குதலுடனும் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்

மல்லாவியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் மும்முனைகளில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வினை முறியடிக்கும் தாக்குதலை இன்றிரவு 7:00 மணிவரை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குலை அடுத்து பாரிய உயிரிழப்பு- படைக்கல இழப்புச் சேதங்களுடன் படையினர் பின்வாங்கி ஓடிவிட்டனர்.

இம்முறியடிப்புத் தாக்குதலில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

படையினரின் 'லான்ட்றோவர்' ஊர்தி உட்பட பெருமளவிலான படைக்கலங்கள், படைப்பொருட்கள் படையினரின் உடலங்கள் ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புதினம்

Link to comment
Share on other sites

புலிகளின் இந்த முறியடிப்புத் தாக்குதல் படையினரின் வல்வளைப்பு நடவடிக்கைகளிற்கு இனிமேல் இடம்கொடுக்கப்படமாட்டாது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்ல

எமது மண்ணில் நீ நிற்கமுடியாது என்பதையும் முன்னகர்ந்த அணியின் சிதைவுடன் உணரப்பட்டிருக்கும்..........................

.

Link to comment
Share on other sites

சிங்களமும் தாம் வாங்கிக் கட்டியுள்ளதை ஓரளவிற்கு ஒத்துக்கொண்டுள்ளது.

இதோ பாதுகாப்பு அமைச்சின் செய்தி:

Heavy clashes erupts in Wanni, troops encounter stiff resistance from terrorists

Heavy clashes have flared up in the South of Tunukkai and South of Mallavi areas since this morning (August 1), said the defence sources in the Vavuniya - Mannar battlefront.

According to the sources, troops of 57 division continuing their advance towards the strategically vital Tunukkai town and Mallavi town have come under stiff resistance from LTTE terrorists struggling to hold their strongholds. Terrorists have lobbed hundreds of mortars in order to slowdown the advancing soldiers. However, troops have effectively overpowered the terror attack and taken the situation under control, the sources added.

According to the available information, several soldiers have been killed and others suffered wounds due to the enemy mortar fire. The terrorists too have suffered serious damages. The battle is still on, the latest reports said.

More information will follow..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

வெகுநாளாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு தாக்குதல். இப்போதுதான் காலம் கணிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். நல்லதுதான். களமாடிய வீரர்களுக்கு நன்றிகள்.

இனி யாழ்க் களம் சுறுசுறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

இந்த மாதம் எமக்கு வெற்றியாக ஆரம்பித்திருக்கின்றது.இனி என்றுமே எமக்கு வெற்றி செய்திகளாக இருக்கட்டும்.களமாடிய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

30 SLA killed, offensive thwarted - LTTE

[TamilNet, Saturday, 02 August 2008, 01:59 GMT]

Liberation Tigers of Tamileelam officials in Vanni told TamilNet that their defensive formations at Mallaavi thwarted Friday a three-pronged Sri Lanka Army (SLA) offensive, which was launched from Vavunikku'lam and Paalaiyadi targeting Mallaavi. At least 30 SLA soldiers were killed and more than 60 troopers sustained injuries in an intense fighting, according to the Tigers. An SLA troop carrier rushed to transport the casualties was seized by the Tigers.

The SLA attempted to break the LTTE defence with the support of helicopter gunships and intense artillery and Multi-Barrel Rocket Launcher (MBRL) fire while engaging the ground forces on three fronts.

The fighting broke out at 5:30 a.m. and lasted till 7:00 p.m. when the SLA was pushed back.

The Sri Lankan soldiers have left behind arms and ammunitions, the Tigers said.

LTTE officials did not provide details on their casualties.

Mallaavi is the fourth largest town in LTTE controlled Vanni.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: மின்னல்,

இந்தச் செய்தி பற்றிய மேலதிக தகவல்கள் எந்தத் தளத்திலும் இணைக்கப்படவில்லை. ராணுவமும் தமது தரப்பில் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்து உள்ளார்கள் என்று மட்டுமே சொல்லியிருக்கிறது. மேலும் இன்னும் சமர் நடந்து வருவதாகவே சொல்லுகிறது.

கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களில் ஒரு துருப்புக்காவியும் அடங்குவதாக சொல்லப்பட்டிருக்கு.

Link to comment
Share on other sites

ஓகோ செய்தி கொஞ்சம் தூக்கலாத் தான் இருக்கு ! அதாவது மாதப் பிறப்பன்றே அல்லோலகல்லோ படவேண்டியihப் போச்சு ! அதுவும் இந்திய பிரதமர் வறநாள் பாத்து பிரகண்டமாப் போச்சு !

அதற்காக எல்லோரும் இந்தா வன்னியை புடிக்கிறன் என்ர கட்டியிருக்கிற வேட்டியை கழட்டி கொடி ஏத்துறன் என்ற மகிந்தவின்ர கனவெல்லாம் கலைஞ்சு போட்டுது என்று நினைக்காதையுங்கோ !

ஏன் என்றால் கொண்டு போன துருப்புக்காவியையும் பறி கொடுத்து போட்டு நிற்கினம் !

இன்னும் வெறிபுடிச்சு முன்னேறப் போயினம் !

சில வேளைகளில் மல்லாவி கூட இயக்கத்தால் விட்டு இழப்பின்றி பின்வாங்கி பின்பு தமது தந்திரத்திற்கு ஏற்ப தாக்குதலிற்கு வரும் வரை உள்வர விடப்படலாம் !

இதை ஏன் சொல்லுறன் எண்டால்பாருங்கோ ! இப்ப அடிவேண்டின உடனே வந்து சந்தோசத்தில துள்ளிக் குதிக்கிற நாங்கள் நாளைக்கு சில இடங்கள் பறி போனாலும் குழம்பாமல் மற்றாக்களையும் குழப்பல் இருக்கவேணும் !.

Link to comment
Share on other sites

:lol: மின்னல்,

இந்தச் செய்தி பற்றிய மேலதிக தகவல்கள் எந்தத் தளத்திலும் இணைக்கப்படவில்லை. ராணுவமும் தமது தரப்பில் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்து உள்ளார்கள் என்று மட்டுமே சொல்லியிருக்கிறது. மேலும் இன்னும் சமர் நடந்து வருவதாகவே சொல்லுகிறது.

கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களில் ஒரு துருப்புக்காவியும் அடங்குவதாக சொல்லப்பட்டிருக்கு.

ஓம் ரகுநாதன், நேற்றிரவு புலிகள் வெளியிட்ட தகவல் மட்டும்தான் இதுவரை ஊடகங்களில் வந்திருக்கிறது. இது பற்றிய மேலதிக விபரங்கள் எதனையும் புலிகள் வெளியிடவில்லை.

சண்டை தொடர்வதாக படைத்தரப்பு தெரிவித்திருந்து. எனினும் படை நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 7.00 வரை முறியடிப்புத் தாக்குதல் நடைபெற்றதாக புலிகள் தெரிவித்திருந்தனர். கைப்பற்றப்பட்ட சடலங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களின் முழுமையான விபரங்கள் அப்பகுதியில் கிளியரிங் முடிந்த பின்னர் புலிகளால் வெளியிடப்படலாம்.

என்னதான் இருந்தாலும் ஓகஸ்டில் புலிகளின் கதையை முடிக்கிறன் எண்ட எங்கடை பொன்ஸ் மாமாவிற்கு ஓகஸ்ட் முதல் நாளே புலிகள் முகத்திலை குத்தி ரத்தம் வளிய விட்டிருக்கிறதைப்பற்றி என்ன சொல்ல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக இருக்கும் மின்னல்,

நிச்சயம் புலிகள் கள விபரங்களை வெளியிடுவார்கள். அப்போதுதான் நடைபெற்ற சமரின் தீவிரம் தெரியும். புலிகளின் இறுதி அனுமதிக் கோட்டுக்கு மிக அருகில் ராணுவம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இதனால் இனி ராணுவம் முன்னேறவே முடியாது என்று சொல்ல வரவில்லை, ஆனால் இதுவரை முன்னேறியது போலல்லாமல் கடினமாக அது இருக்கப்போகிறது, குறைந்தது புலிகள் இன்னொருமுறை தந்திரோபாய பின்னகர்வை மேற்கொள்ளும்வரையிலுமாவது ராணுவம் கடும் இழப்பைச் சந்திக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலையடியில் பாரிய முறியடிப்புத் தாக்குதல்-முப்பது படையினர் பலி - பல கனரக ஆயுதங்கள் கைப்பற்றப்படுள்ளன.

- புலிகளின் குரல்

இது உண்மையா நாரதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: உண்மைதான் சிறி,

ராணுவமும், தங்கட பாதுகாப்பு அமைச்சின்ர இணையத்தளத்தில தங்கட ஆக்கள் பலர் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளனர் எண்டு கன காலத்துக்குப் பிறகு உண்மை சொல்லியிருக்கினம் எண்டால் அடியின்ர அகோரம் விளங்குதுதானே? ஆனால் எத்தினை எண்டு மட்டும் தெரியாதாம்! எண்ணிக்கொண்டிருக்கினம் போல?!!!!!

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த மோதல்களின் போது 11 படையினர் கொல்லப்பட்டும் 20பேர் காயமடைந்துமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில் இருக்கும் மகா ஆச்சரியம் என்னவென்றால் இந்த மோதல்களில் கொல்லப்பட்டதாகப் படையினர் தெரிவிக்கும் புலிகளின் எண்ணிகை 09. அதாவது படையினரின் சாவைவிட புலிகளின் சாவு குறைவு என்று எப்போதுமில்லாதவாறு படைத்தரப்பு தெரிவித்திருக்கிறது.

இதோ அந்தச் செய்தி

Nine terrorists killed and 27 injured in heavy fighting in Mallavi area

2 Aug 2008 - 10:17

MULLAITIVU: Nine (09) LTTE terrorists were killed and 27 were reported injured during confrontations on Friday (01) in the MALLAVI area, MULLAITIVU while eleven (11) soldiers were killed and 20 soldiers were also reported wounded in action during the confrontations in the same area on Friday (01).

A soldier was also reported killed due to terrorist mortar fire around 8.50 on Friday morning in the area of MALLAVI South .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: அடிடா சக்கை எண்டானாம். அவையே பதினொண்டு எண்டு சொல்லீனம் எண்டால் இழப்பு இன்னும் பெரிசா இருக்கும்போல கிடக்கு.

பொன்ஸு மாமா, உனக்கு இனி சங்குதாண்டி.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: உண்மைதான் சிறி,

ராணுவமும், தங்கட பாதுகாப்பு அமைச்சின்ர இணையத்தளத்தில தங்கட ஆக்கள் பலர் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளனர் எண்டு கன காலத்துக்குப் பிறகு உண்மை சொல்லியிருக்கினம் எண்டால் அடியின்ர அகோரம் விளங்குதுதானே? ஆனால் எத்தினை எண்டு மட்டும் தெரியாதாம்! எண்ணிக்கொண்டிருக்கினம் போல?!!!!!

சந்தோசம் ரகுநாதன் ,

நேற்று தான் ஆடி அமாவசைக்கு விரதம் பிடித்தேன் . கை மேல் பலன் கிடைத்து விட்டது . :)

Link to comment
Share on other sites

எல்லாக் களங்களும் தமக்குச் சாதகமானவை என்ற தப்பெண்ணம் மாறிவிடும். கிளிநொச்சி எல்லையில் புகுந்தவர்களுக்கும் பாடம் புகட்டுவார்கள் புலிகள்.

Link to comment
Share on other sites

இது ஒரு துளிதான்... இன்னும் எத்தனையோ வெற்றிகள் விட்டுக்கொடுப்புக்கள் இருக்கு...

ஏனெண்டா களயதார்த்தம் அப்பிடித்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

இனி எல்லாரும் நான் விரதம் இருந்தனான், நான் யாழ்க் களத்தில ஆலோசனை சொன்னானான் எண்டு வெற்றிக்கு உரிமைகொண்டாடுவியள்.ஒரு சமர் என்பது படைத் தரப்புக்குச் சாதமாகாவும் இருக்கலாம் புலிகளுக்கு சாதமாகாவும் இருக்கலாம்.இறுதி வெற்றியைத் தீர்மானிப்பது இராணுவ அரசியல் இராஜதந்திர மூலோபாயமே.ஆகவே ஒரு சமரின் வெற்றியைக் கண்டு துள்ளிக் குதிப்பதையும் தோல்வியைக் கண்டு துவண்டு போவதையும் மாற்றிக் கொண்டு.போராட்டத்திற்க்கு நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் அரசியல் ரீதியாகா நாங்கள் எவ்வாறு எம்மைத்த் தயார் செய்ய வேண்டும்.என்ன தடை வந்தாலும் போராடுவதில் எவ்வாறு நாம் தொடர்ந்து நம்பிக்கை வைத்து புலிகளின் பின்னால் அணி திரள்வது பற்றிச் சிந்திப்போம்.

மல்லாவி போட்டுதா மன்னார் போட்டுதா என்பதல்ல முக்கியமானது எமது இறுதி இலக்கை அடைவதேஎ முக்கியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி எல்லாரும் நான் விரதம் இருந்தனான், நான் யாழ்க் களத்தில ஆலோசனை சொன்னானான் எண்டு வெற்றிக்கு உரிமைகொண்டாடுவியள்.ஒரு சமர் என்பது படைத் தரப்புக்குச் சாதமாகாவும் இருக்கலாம் புலிகளுக்கு சாதமாகாவும் இருக்கலாம்.இறுதி வெற்றியைத் தீர்மானிப்பது இராணுவ அரசியல் இராஜதந்திர மூலோபாயமே.ஆகவே ஒரு சமரின் வெற்றியைக் கண்டு துள்ளிக் குதிப்பதையும் தோல்வியைக் கண்டு துவண்டு போவதையும் மாற்றிக் கொண்டு.போராட்டத்திற்க்கு நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் அரசியல் ரீதியாகா நாங்கள் எவ்வாறு எம்மைத்த் தயார் செய்ய வேண்டும்.என்ன தடை வந்தாலும் போராடுவதில் எவ்வாறு நாம் தொடர்ந்து நம்பிக்கை வைத்து புலிகளின் பின்னால் அணி திரள்வது பற்றிச் சிந்திப்போம்.

மல்லாவி போட்டுதா மன்னார் போட்டுதா என்பதல்ல முக்கியமானது எமது இறுதி இலக்கை அடைவதேஎ முக்கியமானது.

நாரதரே , நான் விரதம் இருந்தது இறந்த பெற்றோருக்காக

அதே நாழில் இந்த முறியடிப்பும் வெற்றிகரமாக முடிவடைந்ததை இட்டு தான் எனது சந்தோசத்தை வெளிப்படுத்தினேன் .

இங்கே யாருடைய ஆலோசனையும் எனக்கு வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசம் ரகுநாதன் ,

நேற்று தான் ஆடி அமாவசைக்கு விரதம் பிடித்தேன் . கை மேல் பலன் கிடைத்து விட்டது . :lol:

அதுசரி

நீங்கள் ஆடிஅமாவாசை விரதம் பிடித்ததற்கும்............

அடிவிழுந்ததற்கும்...............என்ன சம்பந்தம்...........

அங்கே போராடிய போராளிகளில் எத்தனைபேர் ஆடிஅமாவாசை விரதம் பிடிக்காமல் போராடினார்களோ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தக் கப்பை தூக்கினால் என்ன போகேக்க வைச்சுபோட்டுத்தானே போறாங்கள் நாணயஸ்தன்கள்!

வந்த செலவுகள் வரவேற்புச் செலவுகள் எல்லாவற்றுக்கும் கணக்கு கொடுத்துவிட்டும்தானே போறாங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி

நீங்கள் ஆடிஅமாவாசை விரதம் பிடித்ததற்கும்............

அடிவிழுந்ததற்கும்...............என்ன சம்பந்தம்...........

அங்கே போராடிய போராளிகளில் எத்தனைபேர் ஆடிஅமாவாசை விரதம் பிடிக்காமல் போராடினார்களோ?????

உங்களுக்கும் ஆடி அமாவசை வந்தால்..........

அதைப்பற்றி அறிவீர்கள் .

Link to comment
Share on other sites

இப்ப என்ன சொல்ல வருகின்னம்...?? இந்த பகுதிகளுக்கை யாரும் கருத்து எழுத கூடாதா.? இல்லை அழுமூஞ்சியாக இருக்க வேண்டுமா...??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.