Jump to content

வவுனிக்குளத்தில் பாரிய மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 60 பேர் படுகாயம்- உடலங்கள் உட்பட படைப்பொருட்கள் மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் ஆடி அமாவசை வந்தால்..........

அதைப்பற்றி அறிவீர்கள் .

நானும் விரதம் பிடித்தேன்

ஆனால் அதற்கும் இதற்கும்?????????

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

யாழுக்கை ஓட்டுனராய் கொஞ்சப்பேர்... நடத்துனராய் கொஞ்சப்பேர்...!! இவையுக்கை இடிபட கொஞ்சப்பேர்...!!

சுதந்திரம் எண்டா தனது எண்ணத்தை மற்றவருக்கு சொல்ல உரிமை இருக்கு என்பார்கள்... தாங்கள் நினப்பது போல கருத்து எழுது எண்றோ இல்லை, தங்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப்ப கருத்து எழுது எண்று சொல்வது பாசிசம்...!! எனக்கு தெரிய புலிகள் அப்படி எதையும் வரை அறுப்பது கிடையாது... ஆனால் அவர்களின் பெயரை பாவித்து சில நாதாரிகள் செய்கிறார்கள்....!!

யாழையும் ஒரு பாசிச தளமாக காட்டும் முயற்சி போல...

எனக்கு தெரிய தமிழன் சுதந்திரமாய் மலசல மட்டும்தான் இருக்கலாம் போல...!!

வாழ்க சோசலீசம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதரே , நான் விரதம் இருந்தது இறந்த பெற்றோருக்காக

அதே நாழில் இந்த முறியடிப்பும் வெற்றிகரமாக முடிவடைந்ததை இட்டு தான் எனது சந்தோசத்தை வெளிப்படுத்தினேன் .

இங்கே யாருடைய ஆலோசனையும் எனக்கு வேண்டாம் .

இதையே முதலில் சொல்லியிருக்கலாமே

சும்மா ஏன் வம்பளப்பான்?????????

வந்திற்றினம் மற்றவ...........

ஓட்டுனர்.........

நடத்துனர்...........

என்று ஏதேதோ எழுதினம்..........

கேட்டகேள்விக்கு பதிலெழுத முன்னம்

உனக்கு வரும் பார் அதேகெதியென்பதற்கு முன்னர் ..........

கேட்டகேள்விக்கு சொல்லியிருக்கலாமே

கண்டகண்டதிற்கெல்லாம் முடிச்சுபோட்டுக்கொண்டு..........

எனக்கு யாரும் புத்திசொல்லவேண்டாம் என்று சொல்வதற்கு முன்....................

மற்றவருக்கு நீங்கள் புத்திசொல்லாதிருப்பீராக??????

அப்படிச்சொன்னால் .........அதற்கும் இங்கே நீங்கள் சொல்வதுபோல்

ஏகாஅதிபதி???????????என்றுதான் பேருங்கோ????????????.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா , தயவு செய்து பாசிசம் , சோசலிசம் என்றால் என்ன என்று விளங்கப்படுத்துவீர்களா ?

Link to comment
Share on other sites

ஓம் ஓம் புலிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை, ஒரு அய்ந்து சதவிகிதம் தான் புலிகளை ஆதரக்கினம் எண்டும் எழுதலாம், அதுவும் கருத்துச் சுதந்திரம் தான் ஆனால் அதில் எள்ளளவாவது உண்மை இருக்கிறதா?

அதே போல் நான் ஆடி அமாவசைக்கு விரதம் இருந்து தான் புலிகள் களம் ஆடி வென்றனர் என்று எழுதுவதில் எதாவது உண்மை இருக்கிறதா? அதில் எதாவது நியாயம் இருக்கிறதா?இந்தத் தலைப்பிற்க்கும் ஒருவர் ஆடி அமாவசைக்கு விரதம் இருப்பதற்க்கும் என்ன சம்பந்தம்?எல்லோரும் செய்ய வேண்டிய வேலைகளை விட்டு விட்டு விரதம் இருக்கலாமே, அதைப் போல் இலகுவான ஒரு வழி இருந்தால் இத்தினை பேர் போராடி தமது உயிரை இழக்க வேண்டியதில்லயே? இவ்வாறு பொறுப்பற்று எழுதுவது போராடி மரணித்தவர்களைக் கொச்சைப்படுத்துவதாகாதா?

புலிப் போராளிகள் இரத்தமும் சதையுமாயைப் போராடி வெற்றி ஈட்டினால் அதற்கு உரிமை கொண்டாட இங்கு பல பேர்.ஆனால் களத்தில் பின்னடைவுகளைச் சந்திக்கும் போதெல்லாம் புலிகள் என்ன புடுங்கின்றனரா என இங்கு வரைபடம் கீறி விளக்கம் கேட்க பல பேர்.

உண்மை என்பது என்ன? களத்தில் நிற்பவனுக்குத் தான் போராட்டத்தின் வலியும் சுமையும் தெரியும்.அவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்பதற்க்கு உங்களுக்கு நிச்சயமகக் கருத்து உரிமை இருக்கிறது.ஆனால் அப்படிக் கேட்பதற்க்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்பதையும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

பாசிசப் பூச்சாண்டி காட்டுபவர்கள் கருத்துகளை கருத்துகளால் வெல்ல முடியாதவர்கள்.மாற்றுக் கருத்துக்களை எழுதுபவர்கள் எவ்வாறு புலிகளைப் பாசிஸ்ட்டுக்கள் என்று சொல்லி தமது பலவீனக்களை மறைக்கிறர்களோ அவ்வாறே இவர்களும்.சொல்லப்பட்ட கருதுக்களின் நியாயங்களை விட்டு விட்டு கருத்துச் சொலபவர்களைப் பெயர் கூவித் தாக்குவதே சிலரின் கருதியல் வாடிக்கை.

புலிகளுக்கு எனத் தனிதுவமான ஒரு அரசியல் இருக்கிறது போராட்டம் பற்றிய பார்வை இருக்கிறது.

அதனைப் புலிகளின் அரசியற் பிரிவு மேற் கொண்டு வருகிறது.இவை பல்வேறு வடிவங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது.இவற்றை மக்களிட்ம எடுதுச் செல்லாமால் வெறும் இராணுவ வெற்றி தோல்விகளில் ஸ்கோர் கேட்டு பொப் கோன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் விசிலடிச்சான் குன்ச்சுகளாக இருப்பவர்கள் அரசியல் ரீதியாக ஊசலாட்டமானவர்களாக இருப்பார்கள்.மக்களின் ஆதரவு என்பது இவ்வாறான் ஒரு செயற்கையான உணர்வினூடாக தக்க வைக்கப்படுவது என்பது நீண்டகாள நோக்கில் போராட்டதிற்க்கு ஆபாத்தனாது.ஏனெனில் இந்த ஆதரவு என்பது இராணுவா ரீதியான் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது போராட்டத்தின் மீதான ஊசலாட்டத்தையே உண்டு பண்ணும்.

ஆகவே எல்லோருக்கும் தமது கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது.சொல்லப்படும் கருதுக்களுக்கு இங்கே எதிர்க் கருதுக்களை நீத் நீயாயம் உண்மைகளின் அடிப்படையில் விமர்சிக்கவும் இங்கே கருத்து உரிமை இருக்கிறது.அவ்வாறக விமர்சிப்பவர்களைப் பாசிஸ்ட்டுக்கள் என்பதன் மூலம் அவ்வாறான விமர்சனக்களை கருதுக்களால் எதிர்க் கொள்ள முடியாதவர்களே கருதியல் ரீதியில் பலவீனமானவர்களாக கருத்துக்களை முன் வைப்பவர்கள் மீதான தனி நபர் தாக்குதலைத் தொடுக்கும் பாஸிட்டுக்களாக இருக்கின்றனர் என்பதே உண்மை ஆகும்.

Link to comment
Share on other sites

ரம்புக்கெல தாடி வெளிநாட்டு ஊடகவியலாளரிடம் புலிகளுக்கும் அல் கொய்தாவுக்கும் தொடர்புபென்று இன்று கூறியிருக்கின்றான்.ஆனால் அங்கு சண்டை நடக்குது.இதுக்கும் உஎன்னிடம் கேட்க வேண்டாம் என்ன சம்பந்தம் என்று ஏன் என்றால் எனக்கு பதில் சொல்ல தெரியாது.

Link to comment
Share on other sites

சிறி தமிழ் நெட்றில படங்கள் வந்திருக்கின்றது யாராவது இணைத்து விடுங்கள்.எனக்கு இணைக்க தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

02_08_08_sladeadbodies_05.JPG

02_08_08_sladeadbodies_04.JPG

02_08_08_sladeadbodies_06.jpg

02_08_08_sladeadbodies_01.jpg

tamilnet

பச்சை நிறத் தொப்பியைப் பார்த்தால், துணைப்படையினரும் இவ்முறியடிப்பில் பங்குபற்றினர் போலும்.

Link to comment
Share on other sites

சங்கதியில் மேலும் படங்கள் இருக்கின்றது.நீங்கள் சொல்வது போல் தான் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

யாழ் உறவுகளே விதண்டாவாதம் போதும், தமிழ் நெட்டில் களத்தின் படங்கள் வெளியிட்டுள்ளார்கள் சென்று பாருங்கள்.

www.tamilnet.com/art.html?catid=13&artid=26517

ஜானா

Link to comment
Share on other sites

மற்றப் பகுதிகளில்தான், சம்பந்தா சம்பந்தமில்லாமல் கருத்தாடுகிறீர்கள் என்றால், இங்கேயுமா???? தயவுசெய்து, இவ்வாறான செய்திகளில் இப்படிக் கருத்தாடுவதை தவிர்ப்பது நல்லது என நினைக்கிறேன். எமது போராட்டம் புனிதமான ஒரு போராட்டம். இப்போராட்டத்திற்காக நாம் இழந்தது, இழந்துகொண்டிருப்பது அதிகம். நீங்கள் எழுதப்போகும் கருத்து, இத்தலைப்பிற்கு ஏற்புடையதாஅல்லது தலைப்பைத் திசை திருப்பி விடுமா எனக் கொஞ்சம் சிந்தித்த பின்பு எழுதலாமே!!!

உங்களின் இந்தக் கருத்தாடல்களினால், அங்கு தம் உன்னத உயிர்களை இழந்த மாவீரர்களின் தியாகங்கள் திசை திருப்பப்பட்டுவிட்டது. கார்த்திகை 27ஆம் நாள் மட்டும் நாம் அவர்களை நினைக்காமல், இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் அவர்களை நினைவில் வைத்துக் கொள்வோமே. அதுமட்டுமின்றி, ஏற்கனவே மக்கள் ஓரளவு தளர்வடைந்திருக்கிறார்கள். அவர்களை மேலும் தளர்வடைய வைக்காமல், எழுச்சி கொள்ளும் வகையில் உங்கள் கருத்தாடல்களை முன்னெடுங்கள்.

(மேலே கூறப்பட்ட கருத்திற்காக, என்னுடனும் சண்டைக்கு வந்துவிடாதீர்கள். அதைச் சமாளிக்கும் மனநிலை என்னிடம் இல்லை.)

களமாடி மரணித்த வேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: எதுக்கு இவ்வளவு தர்க்கம்? சரி , விடுங்கள். தொடங்கப்பட்ட தலைப்பைத் துலைத்துப் போட்டு எங்களுக்குள் அடிபாடு ?!

எவராச்சும் இப்படி நடக்க வேண்டும் எண்டு நினைத்துக்கொண்டு இங்கு வருவார்களா? விட்டுத் தொலையுங்கள். வந்திருக்கிற படங்களைப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: ஒரு சின்னச் சந்தேகம், புலிகளின் தாக்குதல் படையணிகளில் ஒருவர் வைத்திருக்கும் இயந்திரத் துப்பாக்கி நேட்டோ நாடுகளில் மட்டுமே பவிக்கப்படும் ஒரு போராயுதம். அதுபற்றித் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். நெடுக்கு, மின்னல்...எங்கே ஐய்யா போய் விட்டீர்கள் ? படங்கள் வந்திருக்கு, வந்து ஒரு கருத்து எழுதுறது ?!!!!!!!!
Link to comment
Share on other sites

நாரதருக்கு நடுங்குது குடையுது என்று எழுதுவதை விட்டு விட்டு உந்தப் புது முகமூடியிலையாவது கருத்தாளத்துடன் கருதுக்களை நிதானமாக எழுதப் பழகவும் பிறகு உதையும் கழட்டி விட்டுடுட்டு வேற முகமூடி போட வேண்டி இருக்கும். நெடுக்காலபோவான் துணை இல்லாம தனித்துக் கருதுக்களை எழுத முடியாதோ?

நெடுக்கலபோவான் உருப்படியாகப் பிரியோசனமாக நிதானமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.அவரை உசுப்பேத்தி முருக்கையில ஏத்தி வேடிக்கை பார்க்க வேண்டாம். :lol:

இனி வேறு எதையும் இங்கே எழுதப் போவதில்லை.தமிழ்ச்சியின் கருத்துடன் உடன் படுகிறேன்.

Link to comment
Share on other sites

களத்தில் செருப்புடன் நின்று போராளிகள் சண்டை பிடிக்கின்றார்கள்.

இங்கு எப்போது பார்த்தாலும் சண்டை தான் நடக்கின்றது.என்ன மனிதர்கள் நாங்கள்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ற கடவுளே...எல்லாரும் எப்பதான் திருந்த போறியளோ தெரியாது... என்னைய இங்க நடக்குது.. பேச்சு சுதந்திரம், ஆய்வறிக்கை , நக்கல் நளினம்....இதில்லாம் வேணாமப்பு இப்ப... அடிப்பட பெடியள் எவ்வளவு கஷ்டப்பட்டான்களோ , எத்தினை வீடுகள்ல 'மோட்ட சைக்கில்' சத்தம் கேக்க நெஞ்சில கைய வைத்துக்கொண்டு இருகுதுகளோ... இப்படி உயிர் , ரத்தம் , உறவிகளை வச்சு நடக்கிற போராட்டத்தை தயவு செய்து விளையாட்டோ அல்லது மேல்லுற அவல் மாதிரி ஆக்கதீங்கோ...வாசிக்க உண்மையிலையே கஷ்டமாய் இருக்கு...

Link to comment
Share on other sites

:lol: ஒரு சின்னச் சந்தேகம், புலிகளின் தாக்குதல் படையணிகளில் ஒருவர் வைத்திருக்கும் இயந்திரத் துப்பாக்கி நேட்டோ நாடுகளில் மட்டுமே பவிக்கப்படும் ஒரு போராயுதம். அதுபற்றித் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். நெடுக்கு, மின்னல்...எங்கே ஐய்யா போய் விட்டீர்கள் ? படங்கள் வந்திருக்கு, வந்து ஒரு கருத்து எழுதுறது ?!!!!!!!!

Rifle_Type_95.jpg

படத்தில் போராளி வைத்திருக்கும் துப்பாக்கி சீனத்தயாரிப்பான கியூ.பி.சற் 95. சீனா, கம்போடியா மற்றும் சிறிலங்கா (வான்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை) நாடுகளே இவற்றபை; பயன்படுத்துவதாக விகிப்பீடியாவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வகைத்துப்பாக்கிகள் அனுராதபுர வான்படைத் தள அழிப்பிற்கு கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

http://en.wikipedia.org/wiki/QBZ-95

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் செருப்புடன் நின்று போராளிகள் சண்டை பிடிக்கின்றார்கள்.

இங்கு எப்போது பார்த்தாலும் சண்டை தான் நடக்கின்றது.என்ன மனிதர்கள் நாங்கள்......

அவர்களது வெற்றிகளைக்கொண்டாடும் நாம் அவர்கள் எவர்கள் சுமக்கும் பிரச்சினைகள் குறித்து கதைக்க மறுக்கின்றோம்

நானும் கவனித்தேன்

அவர்கள் வெறும்காலுடனும் மார்பில் எந்தவித பாதுகாப்பு கவசமுமின்றி போராடுவதை............

தயவு செய்து இவற்றை ஏற்படுத்தி இழப்பைக்குறைக்க முயற்சிக்கலாமே????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rifle_Type_95.jpg

படத்தில் போராளி வைத்திருக்கும் துப்பாக்கி சீனத்தயாரிப்பான கியூ.பி.சற் 95. சீனா, கம்போடியா மற்றும் சிறிலங்கா (வான்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை) நாடுகளே இவற்றபை; பயன்படுத்துவதாக விகிப்பீடியாவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வகைத்துப்பாக்கிகள் அனுராதபுர வான்படைத் தள அழிப்பிற்கு கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

http://en.wikipedia.org/wiki/QBZ-95

Users

People's Republic of China

Cambodia - Use by the 911 Special Forces, QBZ-97 and QBZ-97A[5].

Sri Lanka - Used by the Sri Lanka Air Force, and the Special Task Force so far.

இதைப் பாவிப்பவர்களில் சிறிலங்கா இராணுவத்தினரும் உள்ளன என இருக்கின்றது. எனவே அவர்களிடம் இருந்து கைப்பற்றியதாகவும் இருக்கலாம். கம்போடியா, சீனா கூடப் தொடர்பாம் என்று கண்மண் தெரியாமல் எழுதமாட்டீர்கள், வெட்டி விளாசமாட்டீர்கள் என நம்புகின்றோம்.

Link to comment
Share on other sites

இன்றைக்கு 30 ராணுவம், நாளைக்கு இந்த எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம், ஏன் நாம் கூட இளைஞர்களை இழக்கலாம்...

இதெல்லாம் பெரிதல்ல.... முடிவான இலக்கை அடைவதே இறுதிவெற்றி.... இறுதி வெற்றிக்கு எங்களின் பங்கு அளப்பரியது..

ஆனால் உங்களின் கெடுபுடிச்சண்டை கவலையளிக்கிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

ஏனெனில் என்னைப்பொறுத்தவரை தமிழர் இதுவரை இழந்ததுடன் ஒப்பிடும்பொழுது இது எதிரிக்கு அதில்0;000000001வீதம்கூட இல்லை

உண்மையைச்சொல்லுங்கள் 1லடசத்து60 இராணுவத்திற்கு 100 ஆமியின் இழப்புடன் மண்டியிடுவானா????

ஆனால் போராளிகளால் இத்தாக்குதல் ஏதோ காரணத்திற்காக செய்யப்பட்டுள்ளது

அது வெற்றி அளித்துள்ளது

அதற்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லலாமே தவிர இதை கொண்டாட முடியாது

அப்போ நீங்கள் கேட்கலாம் எது கொண்டாடக்கூடிய வெற்றியென்று..........

ஆம்

அது யாழ் வீழ்வது

அதுவும் நான் பலாலியில் போய் இறங்குமாப்போல் இருக்கவேண்டும்

மதவாச்சியில் புலிக்கொடி நிரந்தரமாகப்பறப்பது

திருகோணமலை துறைமுகத்தில் எமது கப்பல்கள் புலிக்கொடியுடன் தரித்து நிற்பது

Link to comment
Share on other sites

அண்ணே பொன்னையா

சீனா கம்போடியா போன்ற நாடுகளுடன் தொடர்பு எழுதி விளாசாட்டிலும் குறித்த நாடுகளிடமிருந்து வாங்கியிருக்கலாம் எண்டு எழுதலாம்தானே. இந்த வகைதுப்பாக்கி பி.எப்.89 கவச எதிர்ப்பு ஆயுதம் போன்றவை 2006ம் ஆண்டின் பின்பே புலிகளிடமிருப்பது தெரியவந்தது. கியூபிசற்85 துப்பாக்கி படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்டதென்று வைத்தாலும் பி.எப்.89 ஆயுதம் படையினரிடம் இருக்கவில்லை. புலிகள் பயன்படுதத் தொடங்கிய பின்னரே படையினரும் அவற்றைக் கொள்வனவு செய்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிடம் வாங்கினது, புடுங்கினது என்ற கட்டுரைகள் இந்த நிலமையில் தேவையா? இதில் என்ன சாதிக்கப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள். வாங்காட்டிலும் சிறிலங்கா அரசு 4 தரம் போய் அங்கே அந்த நாடுகளுக்குப் பிரச்சனை கொடுக்கும். இதைத் தான் பலநாடுகளில் சிறிலங்கா அரசு செய்தது.

புலிகள் மல்ரிபரல் பாவிக்கின்றார்கள்என்று எழுதினார்கள் எங்களின் கட்டுரையாளர்கள். இது வரை புலிகள் அதை நிருபிக்கவில்லை. மட்டகளப்பில் சிறிலங்கா அரசு காட்டியது மிகச் சிறியது. ஆனால் கட்டுரையாளர்கள் எழுதிய பின் சிறிலங்கா அரசுக்கு அது பற்றிய எண்ணம் உதிர்த்து அதை வாங்கிப் பாவிக்கின்றது. தமிழரால் முடியவில்லை ஏனென்றால் அந்தளவு வசதி இல்லை.

தலைவர் எல்லாம் பார்த்துக் கொள்ளுவார். உங்களின் பங்களிப்பைச் செய்யுங்கள் என்று ஏற்கனவே ஒரு தடவை அறிவுரை கூறியிருந்தீர்கள். இது தான் நீங்கள் செய்கின்ற பங்களிப்பின் இலட்சணமா?

உங்களின் பங்களிப்பு பிரமாதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடம் வாங்கினது, புடுங்கினது என்ற கட்டுரைகள் இந்த நிலமையில் தேவையா? இதில் என்ன சாதிக்கப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள். வாங்காட்டிலும் சிறிலங்கா அரசு 4 தரம் போய் அங்கே அந்த நாடுகளுக்குப் பிரச்சனை கொடுக்கும். இதைத் தான் பலநாடுகளில் சிறிலங்கா அரசு செய்தது.

புலிகள் மல்ரிபரல் பாவிக்கின்றார்கள்என்று எழுதினார்கள் எங்களின் கட்டுரையாளர்கள். இது வரை புலிகள் அதை நிருபிக்கவில்லை. மட்டகளப்பில் சிறிலங்கா அரசு காட்டியது மிகச் சிறியது. ஆனால் கட்டுரையாளர்கள் எழுதிய பின் சிறிலங்கா அரசுக்கு அது பற்றிய எண்ணம் உதிர்த்து அதை வாங்கிப் பாவிக்கின்றது. தமிழரால் முடியவில்லை ஏனென்றால் அந்தளவு வசதி இல்லை.

தலைவர் எல்லாம் பார்த்துக் கொள்ளுவார். உங்களின் பங்களிப்பைச் செய்யுங்கள் என்று ஏற்கனவே ஒரு தடவை அறிவுரை கூறியிருந்தீர்கள். இது தான் நீங்கள் செய்கின்ற பங்களிப்பின் இலட்சணமா?

உங்களின் பங்களிப்பு பிரமாதம்

உண்மைதான்

இது வேதனையளிக்கும் விடயம்

இன்னும் நேரமுள்ளது........

இப்போவது முயற்சிக்கலாமே......

Link to comment
Share on other sites

இதைப் பாவிப்பவர்களில் சிறிலங்கா இராணுவத்தினரும் உள்ளன என இருக்கின்றது. எனவே அவர்களிடம் இருந்து கைப்பற்றியதாகவும் இருக்கலாம். கம்போடியா, சீனா கூடப் தொடர்பாம் என்று கண்மண் தெரியாமல் எழுதமாட்டீர்கள், வெட்டி விளாசமாட்டீர்கள் என நம்புகின்றோம்.

அண்ணே பொன்னையா

சீனா கம்போடியா போன்ற நாடுகளுடன் தொடர்பு எழுதி விளாசாட்டிலும் குறித்த நாடுகளிடமிருந்து வாங்கியிருக்கலாம் எண்டு எழுதலாம்தானே. இந்த வகைதுப்பாக்கி பி.எப்.89 கவச எதிர்ப்பு ஆயுதம் போன்றவை 2006ம் ஆண்டின் பின்பே புலிகளிடமிருப்பது தெரியவந்தது. கியூபிசற்85 துப்பாக்கி படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்டதென்று வைத்தாலும் பி.எப்.89 ஆயுதம் படையினரிடம் இருக்கவில்லை. புலிகள் பயன்படுதத் தொடங்கிய பின்னரே படையினரும் அவற்றைக் கொள்வனவு செய்தனர்.

எழுதப்படும் கருத்துக்கள் எதற்காக எழுதப்படுகின்றன என்பதை புரிந்து கொண்டுவிட்டு உங்களின் பதில் கருத்துக்களை எழுதுங்கள். முதலில் நீங்கள் என்ன எழுதினீர்கள் என்பதைக்கூட மறந்து அல்லது தெரியாமல் அதற்கு மின்னல் கொடுத்த பதிலுக்கு ஏதோ ஏதோவெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.

நாங்கள் எங்களின் பங்களிப்பை தலைவர் எதிர்பார்க்கும் வரை செய்து கொண்டிருக்க வேண்டும். அவர் எல்லாவற்றையும் சரியாகச் செய்வார். இப்போதும் அதை மீளவும் சொல்கிறேன். இதற்கு முரண்பாடாகவா? அல்லது போராட்டத்தின் மீது நம்பிக்கையற்ற வகையிலா? மேலே எழுதப்பட்ட எனது கருத்து அமைந்திருக்கிறது? எதற்கு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.