Jump to content

கொஞ்சம் சிரிங்க


Recommended Posts

சரி கொஞ்சம் சிரிங்க.

சிரிக்க சிரிக்க - 2

அப்போது அதிகாலை பத்துமணி. மைக்கல் மிக வேகமாக தனது அலுவலகத்தை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரின் மனைவியின் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. " என்ன விசயம் " கேட்டார் மைக்கல். " நீங்கள் போற பாதை வழியாக ஒருவர் பக்கம் மாறி காரை செலுத்தி செல்வதை தற்போது ஐந்து நிமிடமாக நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

  • Replies 452
  • Created
  • Last Reply

புள்ளிவிபரம் என்பது சராசரியாக வருவது. முதல் 10000 இல் 2 விமானங்களில் குண்டு உள்ள சாத்தியக்கூறும் அடுத்த 10000 இல் குண்டுகளே இல்லாத சாத்தியமும் உள்ளது. இதை தயவுசெய்து தீயன்னாவுக்கு அறியத்தரவும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு படிப்பறிவற்ற பட்டிக்காட்டு கிராமத்திற்கு குடும்ப கட்டுப்பாட்டு மற்றும் எயட்ஸ் விழிப்புணர்வு அதிகாரிகள் போய் அங்குள்ள மக்களை அழைத்து அவர்களிற்கு விளக்கமளித்துவிட்டு பெட்டி பெட்டியாக பாதுகாப்பு உறைகளை கொடுத்து விட்டு ஒரு அதிகாரி ஒருபாதுகாப்பு உறையொன்றை எடுத்து அதை தனது கையின் பெரு விரலில் போட்டுகாட்டி ஆண்களே இனி நீங்கள் மனைவிமாருடன் உறவு கொள்ளும்போது இப்படி போட்டு கொண்டு உறவு கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு போய் விட்டனர்.சில வருடங்களின் பின்னர் அந்த கிராமத்திற்கு வந்த அதிகாரிகள் தாங்கள் இவ்வளவு பாதுகாப்பு உறைகள் கொடுத்தும் எந்த மாற்றமும் இல்லாததை பார்த்து ஏமாந்து போய் அங்த கிராம தலைவனை கூப்பிட்டு நாங்கள் சொன்னபடி யாரும் செய்யவில்லையா என கேட்டனர்.அதற்கு அவன் ஐயா நாங்கள் எந்த தவறும் விடவில்லை நீங்கள் காட்டியது போலவே எல்லோரும் கை பெருவிரலில் போட்டுகொண்டுதான் உறவு கொண்டோம் என்றான் அதிகாரிகள் தலையிலடித்து கொண்டனர்.(எங்கோபடித்தது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாய் இருக்கு.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டும் நன்றாக இருக்கிறது நன்றிகள்.

அங்கிள் கூட இருந்தே பின்லாடனுக்கு குழிபறிக்கிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் பின்லேடன். விழுந்தாப்பிறகு தான் ஓ ஓ என்றார். அனுபவம் காணாது. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி எல்லாம் நன்றாக இருகின்றது

Link to comment
Share on other sites

ஒரு கடையில் அதிமுக்கியமான வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. என்னவென்று யோசிக்கறீங்களா? அதுதான் மூளை வியாபாரம். அங்கு டொக்ரர், இஞ்சினியர் தொடக்கம் சாதாரண எங்களைப்போன்றவர்களின் மூளைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ரகத்தினரின் மூளைகளும் வெவ்வேறு விலைகளை கொண்டிருந்தன. அது எதிர்பார்க்க கூடியதுதானே.

டொக்ரரின் மூளை ஒரு கிலோ - 7000 டொலர்கள், இஞ்சினியரின் மூளை ஒரு கிலோ - 7500 டொலர், வங்கி மனேஜரின் மூளை ஒரு கிலோ - 6000 டொலர் என இப்படியே பட்டியல் நீண்டுகொண்டு சென்றது. ஆனால் பெரியளவில் வித்தியாசம் இல்லை. ஒன்றின் விலை மட்டும் கோபுரமாய். அரசியல்வாதியின் மூளையின் விலைதான் அது. அரசியல்வாதியின் மூளையின் விலை - 15000 டொலர்கள் என்றது. ஏன் இப்படி? எல்லோரும் அறிந்துகொள்ள ஆவலில் வியாபாரியை கேட்டனர்.

" சாதாரணமாக, மற்றவங்கட மூளையை எடுக்கிறது போல, அரசியல்வாதியின் மூளை ஒரு கிலோ எடுக்கிறதுன்னா இலேசான காரியம் இல்லீங்க. இரண்டு மூண்டு மடங்கு கூட தலைவெட்ட வேண்டி இருக்கு." என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப டண்ணின்ரை மூளை விலை என்கிறியள் :lol:

Link to comment
Share on other sites

¬ðÎ Ó¨Ç À¢È£ ¿õÁ¼ Ìò¾¢Âýà Áñ¨¼ì¨¸ þÕìÌ ¬¨Çô§À¡ð¼¡ø ±Îì¸Ä¡õ :wink:  :wink:  :wink:  :wink:  :wink:  :wink:

«Ð ²ý ¬òà ÍÅ¢…¢Ä þÕì¸¢È ¾Á¢ú ¬ð¸û ±ø§Ä¡Õ§Á ±¨¾ ¯¾¡Ã½òÐìÌ ±Îò¾¡Öõ "¬Î" ±ñ¼ Å¡÷ò¨¾ æÍ ÀñÏáí¸û?? :evil: :oops:

«¨¾Å¢¼ ÍÅ¢…¤ìÌ ´ÕÓ¨È ¸ðº¢ ºõÀó¾Á¡¸ §À¡¸§ÅñÊ þÕó¾Ð «ô§À¡Ð ´Õ ¸¡ðº¢¨Â ¸ñ§¼ý.. Å£¾¢Â¢ø 2,3 ¾Á¢ú ¬ì¸û ¦ºýÚ¦¸¡ñÎ þÕó¾¡÷¸û «ô§À¡Ð ±¾¢§Ã Åó¾ 4,5 ÍÅ¢Š ¦ÀÊÂû «Å÷¸¨Ç ÌÈŠÀñ½¢Å¢ðÎ ´Õ º×ñ¨¼ ÌÎò¾¡÷¸û «¾ÅÐ "§Á §Á ±ñÎ" ¬Î ¸ò¾¢ÈÁ¡¾¢Ã¢,, ¸Ä¸ÄôÀ¡¸ ¾Á¢Æ¢ø ¸¨¾òÐ즸¡ñÎÅó¾ «ó¾ ¾Á¢ú ¬ì¸û «ó¾ Å¡÷ò¨¾¨Â §¸ð¼×¼ý ¸ôº¢ô.. :roll: :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறைச்சி வகைகளை விற்கும் கடைப்பகுதிக்கு ஒருவர் சென்றார் ஒரு கடையின் வாசலில் அங்கே விற்கப்படும் இறைச்சி வகைகளின் விலைப்பட்டியல் போடப்பட்டிருந்தது அதனை வாசித்து பார்த்தார் அதில் ஒரு கிலோ ஆட்டு மூளை 100 ருபா . 1கிலோ மாட்டு மூளை 80 ரூபா 1 கிலோ மனித மூளை 1000 ருபா என எழுதப்பட்டிருந்தது

சென்றவருக்கு அந்த விலைப்பட்டியலை பார்த்து ஆச்சரியம் அருகே இருந்த கடைக்காரரிடம் இது பற்றி விசாரித்தார் ஐயா உங்களஇ விலைப்பட்டியலில் ஆட்டு மூளை 100 ரூபா மாட்டு மூளை 80ரூபா என்று போட்டிருக்கின்றீர்களே மனித மூளைக்கு மட்டும் 1000 ரூபா போட்டு வைத்திருக்கின்றீர்களே ..ஏனஇ மனித மூளைக்கு மட்டும் இவ்வளவு விலை என கேட்டார்

அதற்கு கடைக்காரர் சொன்னார் ஐயா ஒரு ஆட்டினஇ தலையை வெட்டினால் 500 கிராம் மூளையை எடுக்கலாம் ஒரு மாட்டின் தலையை வெட்டினால் 1 கிலோ மூளை எடுக்கலாம் ஆனால் 500 மனிதர்களின் தலையை வைட்டினால் தான் 1கிலோ மூளையை எடுக்க முடியும்.அதனால் தான் இந்த விலை என்றார் கடைக்காரர்

Link to comment
Share on other sites

தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நேரடி ஒளிபரப்பு... 'கப்ஸா உங்கள் சாய்ஸ்'!

இதோ நிகழ்ச்சி ஆரம்பம்...

p1810oz.jpg

கலைஞர்: ''ஹலோ! ஹாய்... வணக்கம்... வெல்கம்! உடன்பிறப்பே உனக்கு என் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 'கண்ணம்மா' பார்த்து ரசித்திருப்பாய், 'மண்ணின் மைந்தன்' கண்டு மலைத்திருப்பாய். உன்னை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடிக்க இதோ இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தவும் வந்துவிட்டேன். நானும் சகோதரி ஜெயலலிதாவும் சேர்ந்து தேனினும் இனிய பாடல்களை உன் காதுகளில் ஊற்றப்போகிறோம். தமிழினமே தயாரா?''

ஜெயலலிதா (குறுக்கிட்டு): ''நமஸ்தே ஃப்ரம் இட்ஸ் மீ ஜெயலலிதா! எங்களுக்கு ஓட்டுப் போட்ட உங்களுக்கு பாட்டுப் போடுறோம்... ஓகே, நிகழ்ச்சிக்குப் போலாமா? முதல் 'காலர்' யாருனு பார்க்கலாம். ஹலோ டூப் டி.வி... கப்ஸா உங்கள் சாய்ஸ். யார் பேசறீங்க?''

எதிர்முனை: ''சம்போ... சிவசம்போ. நான் ரஜினி பேசறேன்ங்க. அஷ்ட லட்சுமியும் உங்ககிட்டே இருக்கு. அதனால நீங்க தைரிய லட்சுமி. கலைக் குடும்பத்துக்கு இஷ்ட லட்சுமி. ஐ மீன் மதர்!''

கலைஞர் (கடுப்பாகி): ''என்ன ரஜினி தம்பி. பக்கத்தில் நானும் இருக்கேன். என்னை ஞாபகமிருக்கா?''

ரஜினி (ஜெர்க்காகி): ''அய்யா, நீங்க பெரியவங்க. நாங்க சின்னவங்க. உங்க ஆசி வேணும். அப்டி இப்டினு கைடு பண்ணணும். சந்திரமுகி பாருங்கய்யா, உஷ்ஷ்... சிவ சிவா!''

ஜெயலலிதா: ''ஓகே ரஜினி! உங்க கிட்டே ஒரு கேள்வி. நதி நீர் இணைப்புன்னா என்னனு ஞாபகம் இருக்கா?''

ரஜினி (பதற்றமாகி): ''வாட்டர் பிராப்ளம்... வாட் பிராப்ளம்..? சந்திரமுகி ரிலீஸ் சம்போ சிவசம்போ! எனக்கு என் மருமகன் தனுஷ் நடிச்ச 'தேவதையைக் கண்டேன்' படத்திலே இருந்து ஒரு பாட்டு போடுங்க! இந்தப்பாட்டை தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா அரசியல் தலைவருங்களுக்கும் டெடிகேட் பண்றேன்!''

ஜெயலலிதா: ''ஓ '' என்றதும் உங்க அப்பாவைப் பார்த்தாலும் பயம் பாட்டு அதே டியூனில் வரிகள் மட்டும் மாறி வருகிறது

'போயஸ் அம்மாவைப் பார்த்தாலும் பயம்

கலைஞர் அய்யாவைப் பார்த்தாலும் பயம்

ராமதாஸ் அண்ணனைப் பார்த்தாலும் பயம்

எனக்கு நல்லா ஓடுமா புதுப் படம்?'

கலைஞர்: ''சூப்பர் தம்பிக்காகப் போட்ட அந்த சூப்பர் பாடலை எல்லோரும்கேட்டீங்க...'' என்று சொல்லும்போதே, அடுத்த அழைப்பாளர்...

கலைஞர்: ''வணக்கம். யார் பேசுவது..?''

எதிர்முனை: ''நான் ஜெயலட்சுமி பேசறேன். அன்னிக்கு வீட்ல நான் டி.வி. பார்த்துட்டிருந்தேனா... இளங்கோவன் போன் பண்ணி மெரட்டுனாரு. அதுக்கடுத்தது ஏட்டு கண்ணன் போன் பண்ணி வீட்டுக்கு வரவாÕனு கேட்டாரு. வேண்டாம்னு சொல்லி வெச்சதும் மலைச்சாமிகிட்டே இருந்து போனு. அந்த நேரம் பார்த்து, வக்கீல் அழகர்சாமி உள்ளே நுழைஞ்சான். ஆங்... இங்கே தொடரும்...''

கலைஞர்: ''ஐயகோ... போதும் ஜெயலட்சுமி, போதும். உங்களுக்காக காற்றிலே வருகிறது 'காதல்'படத்தில் இருந்து ஒரு பாடல்.இதை கல்லீரல் கெட்டுப்போன காவல் துறைக்கு டெடிகேட் செய்கிறோம்'' என்றதும் பாடல் ஒலிக்கிறது.

'தொட்டுத் தொட்டு என்னை

எம்.எல்.எம். களிமண்ணை

சி.பி.ஐயில் யார் சேர்த்ததோ?

தொட்டுத் தொட்டு என்னை

பப்ளிமாஸ் பெண்ணை

பாப்புலராய் யார் செய்ததோ?'

ஜெயலலிதா: ''ஜெயலட்சுமிக்காக ஒரு கருத்துள்ள பாட்டைக் கேட்டோம். அடுத்ததா லைன்ல யார்னு பார்ப்போம்'' சொல்லும் போதே போன் அழைக்கிறது. எடுத்தால்,

எதிர்முனை: ''மதுரையிலிருந்து விஜயகாந்த். கூடிய சீக்கிரமே கோட்டையிலிருந்து விஜயகாந்த்'' என்ற குரல் கேட்கிறது.

ஜெ (மெதுவாக): ''வி.சி.டியை தடை பண்ணினப்பவே இந்த விஜயகாந்த்தையும் தடை பண்ணி இருக்கணும். (சத்தமாக) ஹலோ விஜயகாந்த்... வெல்கம் டு அரசியல். கூடிய சீக்கிரமே நீங்க 'பெரிய இடத்துக்குப்' போகணும். அதுக்கு என்னால முடிஞ்ச உதவியைக் கண்டிப்பாசெய்வேன்.''

விஜயகாந்த்: ''தமிளன்னு சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடானு நான் சொன்னா நெட்டுக்குத்தா நிக்கறதுக்கு என் ரசிகருங்க 27 லட்சம் பேர் இருக்காங்க. அதுல ஆம்பளைங்க 15 லட்சத்து 19 ஆயிரம், பொம்பளைங்க 9 லட்சத்து 8 ஆயிரம் பேருங்க, குழந்தைங்க...''

ஜெ: ''ஹலோ மிஸ்டர் இன்டர்நெட்ல ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கிறதுக்கு பொதுத் தேர்தல் ஒண்ணும் மீனாட்சி அம்மன் கோயில் இல்லை. ஓகே, ஓகே... உங்களுக்காக 'ஆட்டோகிராஃப்' படத்திலயிருந்து ஒரு பாட்டு வருது. இந்தப் பாட்டை உங்க டெபாஸிட்டுக்கு டெடிகேட் பண்றோம்'' என்றதும் பாடல் வருகிறது,

'மனசுக்குள்ளே அரசியல் ஆசை

வந்துச்சோ வந்துச்சோ...

மதுரையிலே மாநாடு நடத்தச்

சொல்லுச்சோ சொல்லுச்சோ

கரை வேட்டி கட்ட ஆசை

வந்துச்சோ வந்துச்சோ

கட்சி ஆரம்பிக்க பட்சி

சொல்லுச்சோ சொல்லுச்சோ

அட போலீஸ் வேஷம்

போரடிச்சி சி.எம். வேஷம் கட்டச்

சொல்லி செவந்த கண்ணில்

கனவு வந்துச்சோ''

பாடல் முடியும்போதே, அடுத்த அழைப்பாளர் லைனில்!

ஜெ: ''ஹலோ திஸ் இஸ் டூப் டி.வி... கப்ஸா யுவர் சாய்ஸ்...''

''அம்முனையில் அன்பு அண்ணன் கலைஞர். இம்முனையில் தங்கத் தம்பி தைலாபுரம் தம்பி ராமதாஸ்'' என்கிறது எதிர்முனை.

கலைஞர்: ''தம்பீ... என் அன்புத் தும்பீ. மொழிப் போருக்கு வாளோடு புறப்பட்டுவிட்டாய். இதோ உங்களுக்காக 'அட்டகாசம்' படத்திலிருந்து அட்டகாசமான பாடல் வருகிறது. இதை உங்கள் சார்பாக கமலுக்கும் ரஜினிக்கும் டெடிகேட் பண்ணுகிறோம்.''

''உனக்கென்ன உனக்கென்ன

நான் பேர் மாத்தச் சொன்னால் உனக்கென்ன

நான் படப்பொட்டி தூக்கினால் உனக்கென்ன

தம்பி திருமாவோடு சேர்ந்தால் உனக்கென்ன

அன்புமணியை மந்திரி ஆக்கினால் உனக்கென்ன

உனக்கென்ன உனக்கென்ன''

ஜெ: ''ஆமா உனக்கென்ன...உனக்கென்ன? என்னைப் பார்த்து அமைச்சர்கள் ஆடினா உனக்கென்ன? நான் காம்பியர் ஆனா உனக்கென்னன்னுட்டு? ஓகே இப்ப நெக்ஸ்ட் காலர் யாருனு பார்க்கலாம்...''

போன் சிணுங்க... எடுத்தால் ஒரு சோகமான குரல், ''யம்மா யம்மா... நான்தாம்மா சுதாகரன் பேசறேன்'' என்கிறது.

ஜெ: ''சுதாகரனா... யாரு, கிழக்கே போகும் ரயில் படத்தில் 'மாஞ்சோலைக் கிளிதானோ''னு பாடுவாரே அந்த சுதாகரனா?''

எதிர்முனை (அலறி): ''அய்யய்யோ! யம்மா, நான் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன். கோர்ட்டு கேஸ§னுஅலைஞ்சி கால் பழுத்துருச்சும்மா... ம்ம்ம்...'' என அழ ஆரம்பிக்கிறார்.

கலைஞர்: ''கலங்காதே தம்பீ! உனக்காக ஒரு சொத்துப் பாட்டு ச்சீ குத்துப் பாட்டு. இது திருப்பாச்சி ஸ்பெஷல்!'' என்றதும் பாடல் ஆரம்பிக் கிறது.

'வெள்ளசொள்ள கோட்டு போட்டு

நக நட்டு மாட்டிக்கிட்டு

குவி சொத்தைய்யா

ஸ்டேட்டுவிட்டு ஸ்டேட்டுவிட்டு

கோர்ட்டுவிட்டு கோர்ட்டுவிட்டு

அலை முத்தைய்யா

வாடா... வாடா... வாடா... வாடா...

வளர்த்த கடாவே....

போடா... போடா.... போடா.... போடா...

திரும்ப வராதே...'

கலைஞர்: ''அடடா! தமிழர் புத்தாண்டும் அதுவுமாக மிகவும் பரபரப்பான பாட்டு நிகழ்ச்சியை உங்களுக்காக வழங்கிக்கொண்டு இருப்பவர்கள்...''

ஜெ: ''அண்ணன் கலைஞர்...''

கலைஞர்: ''தங்கச்சி ஜெயலலிதா... இதோ அடுத்த அழைப்பாளர்...''

''யாரடா பேசுவது தம்பி''

எதிர்முனை: ''பேசறது விஜய டி.ஆரு, அதை கேட்க நீ யாரு? ஸ்டாலினுக்குதான் அங்கே பவரு, மத்தவங்க எல்லாம் நகரு, டெலிபோன்ல போடு சாங்கு, சிம்புவுக்கு சேருது சூப்பர் கேங்கு, ஏய்... ஊய்...''

அதைக் கேட்டு போனை சைலண்டாக ஜெ கையில் கொடுக்கிறார் கலைஞர்.

ஜெ: ''உங்ககிட்டே ஒரு கொஸ்டின். சமீபத்துல கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொன்ன நடிகரு யாரு?''

விஜய.டி.ஆர்: ''சொல்றேம்மா... வெவரமா சொல்றேன். அவரு சங்கத்துக்குதான் கேப்டன். நான் சங்கத்தமிழுக்கே டாப் டென். அரசியல் இல்லை வெங்காய பஜ்ஜி, எல்லாரும் ஆரம்பிக்க முடியாது புதுக் கட்சி...''

ஜெ: ''ஓகே... ஓகே... உங்களுக்காக ஒரு சூப்பரான பாட்டு.''

'நடிச்சி நடிச்சி வந்தான் வீராசாமிடோய்

அடிச்சி அடிச்சி வந்தான் அடுக்கு மொழிடோய்

சிம்புவுக்கே டஃப் ஃபைட்டைக் குடுத்துப்புட்டாண்டோய்

அரசியல்ல அடுத்து என்ன முழிச்சிப்புட்டாண்டோய்'

கலைஞர்: ''இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியிலே உங்களையெல்லாம் சந்தித்து சிந்தித்து பல பாடல்களைப் போட்டதிலே...

அப்போது திரும்பவும் போன் அடிக்க எடுத்தால் மீண்டும் விஜய டி.ஆர்,

''அருவாள புடிக்கணும் சாணை, பாதியிலேயே கட் பண்ணிட்டீங்க போனை, இது திட்டமிட்ட சதி, விளையாடுது விதி, கலைஞரு அய்யா, ஜெயா அம்மா, விடமாட்டேன் சும்மா...'' விஜய டி.ஆர் ஆக்ரோஷமாகப் பேசும்போதே நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது.

நன்றி விகடன்.

Link to comment
Share on other sites

'போயஸ் அம்மாவைப் பார்த்தாலும் பயம்  

கலைஞர் அய்யாவைப் பார்த்தாலும் பயம்  

ராமதாஸ் அண்ணனைப் பார்த்தாலும் பயம்  

எனக்கு நல்லா ஓடுமா புதுப் படம்?'

ரஜனியின் உண்மையான மனநிலையை இந்த பாடல் சொல்கின்றது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி இருந்தவங்களை இப்படி ஆக்கிட்டாங்க.. :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி இருந்தவங்களை இப்படி ஆக்கிட்டாங்க.. :wink: :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரெயிலில் ஒரு பாகிஸ்தான்காரன், வங்காளதேச வாலிபன் ஒருவன் மற்றும் ஒரு இளம் பெண் அமர்ந்து பயணம் செய்தனர்.

அந்த ரெயில் சுரங்கப்பாதை வழியாக சென்றபோது `கும்' இருட்டு ஏற்பட்டது.

அப்போது முத்தம் கொடுக்கும் சத்தமும், அதைத்தொடர்ந்து கன்னத்தில் அறையும் சத்தமும் கேட்டது.

ரெயில், சுரங்கப்பாதையை விட்டு வெளியே வந்தபோது பாகிஸ்தான் காரன் கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்து இருந்தான். மற்ற இரண்டு பேரும் எதுவுமே நடக்காதது போல இருந்தனர்.

அப்போது பாகிஸ்தான்காரன், "இந்த பெண்ணை வங்காளதேசக் காரன் முத்தமிட்டு இருக்கவேண்டும். அவள் அவனை அறைவதற்கு பதில் நம்மை அறைந்துவிட்டாள் போல இருக்கிறது" என்று நினைத்துக்கொண்டான்.

ஆனால் அந்த இளம் பெண், "பாகிஸ்தான்காரன் நம்மை முத்தமிடுவதற்கு பதில் வங்காளதேசத்துக்காரனை முத்தமிட்டு அறை வாங்கி இருக்கவேண்டும்" என்று நினைத்தாள்.

வங்காளதேசக்காரனோ, "ரெயில் மறுபடியும் ஒரு சுரங்கப்பாதை வழியாக போகும்போது முத்தம் கொடுப்பது போல சத்தத்தை எழுப்பி, பாகிஸ்தான்காரனை ஓங்கி அறைய வேண்டும்" என்று நினைத்துக்கொண்டான்.

Link to comment
Share on other sites

நீண்ட நாள் பழகிய வயதான விதவையிடம் ஒரு முதியவர், "என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?" என்று கேட்டார்.

உடனே, "சரி" என்றாள் அந்த விதவை.

மறுநாள் தூங்கி எழுந்த அந்த முதியவருக்கு அந்தப் பெண்மணி என்ன பதில் சொன்னார் என்பது மறந்து போயிற்று. உடனே அந்த பெண்மணியை போனில் தொடர்பு கொண்டு, தாங்கள் நம் கல்யாண விஷயமாக என்ன பதில் சொன்னீர்கள் என்பது எனக்கு மறந்து போயிற்று என்றார்.

சம்மதம் என்று ஒருவரிடம் சொன்னேன். ஆனால் அது யாரென்றுதான் எனக்கு நினைவில்லை என்றாள் வயதான பெண்மணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

8) :( :?

Link to comment
Share on other sites

ஒரு பெண், தன் குழந்தையுடன் பஸ்சில் ஏறினாள்.

அந்த குழந்தையை பார்த்த பஸ் கண்டக்டர், "நான் பார்த்த குழந்தைகளிலேயே மிக அசிங்கமான குழந்தை இதுதான்" என்றார்.

இதனால் கொதித்துப்போன அந்தப் பெண், கோபத்துடன் போய் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அப்போது அவள் அருகில் வந்து அமர்ந்த ஒருவர், "ஏன் இவ்வளவு கோபமாக இருக் கிறீர்கள்" என்று அந்த பெண்ணிடம் கேட்டார்.

"இந்த பஸ் கண்டக்டர் என்னை அவமானமாக பேசி விட்டார். இருங்கள் அவருக்கு பாடம் கற்பித்து விட்டு வருகிறேன்" என்று கூறியபடி அந்தப்பெண் எழுந்தார்.

"அரசு ஊழியர் ஒருவர் உங்களை எப்படி கேவலமாக பேசலாம். போய் இரண்டில் ஒன்று பார்த்து வாருங்கள். அதற்கு முன் உங்கள் கையில் உள்ள அந்த குரங்கு குட்டியை இங்கே விட்டுச் செல்லுங்கள்" என்றார், அந்த வாலிபர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:evil: :evil: :evil: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. இது நகைச்சுவையா.. :cry: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.