Jump to content

நல்லூர் கந்தன் கொடியேற்றத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!


Recommended Posts

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில், கொடியேற்ற உற்சவத்தின்போது, குடாநாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

கொடியேற்றத்தின் போது பக்தர்கள் முண்டியடித்ததால் அந்நேரத்தில் சன நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது.

உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட போதும் குற்றச் செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடந்தவருடத்தை விட இம்முறை ஆலய வளாகப் பகுதிகளில் அதிக பந்தல்கள் போடப்பட்டுள்ளதுடன் தாகசாந்தியும் வழங்கப்பட்டன.

தெல்லிப்பழை துர்க்கா மணிமண்டபம், நல்லை திருஞானசம்பந்தர் மடம் ஆகியவற்றில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை இந்துசமய விவகாரக் குழுவினரால் வருடாவருடம் வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர், நல்லூர்க் கந்தசுவாமி கோவில், மஞ்சத்திருவிழா தினமான எதிர்வரும் 15 ஆம் திகதி காலை வெளியிடப்படவுள்ளது.

http://www.tamilseythi.com/srilanka/nallur...2008-08-07.html

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அங்கால வன்னில மக்கள் இருக்கவும் இடமில்லாமல் அலையுதுகள்... இவை.. இராணுவக் கட்டுப்பாட்டுக்க தாங்கள் சுகமா இருக்கினம் என்று அரசாங்கம் வெளி உலகத்துக்குச் சொல்ல.. நடந்து காட்டினமோ..! திருந்தாத ஜென்மங்கள்..!

உந்தத் திருவிழாக்களை அரச படைகளின் பிரசன்னத்தை.. யாழ் குடாவில் நடக்கும் அரச படைகளின் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்க.. என்று பகிஸ்கரித்தால்.. முருகன் கோவிச்சிடுவாரோ. :mellow::unsure:

முருகா.. நீயாவது உதுகளின்ர அறிவுக்கண்ணைத் திறந்து விடப்பா..! :mellow::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லூர் கந்தனுக்கு அரோகரா அரோகரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால வன்னில மக்கள் இருக்கவும் இடமில்லாமல் அலையுதுகள்... இவை.. இராணுவக் கட்டுப்பாட்டுக்க தாங்கள் சுகமா இருக்கினம் என்று அரசாங்கம் வெளி உலகத்துக்குச் சொல்ல.. நடந்து காட்டினமோ..! திருந்தாத ஜென்மங்கள்..!

உந்தத் திருவிழாக்களை அரச படைகளின் பிரசன்னத்தை.. யாழ் குடாவில் நடக்கும் அரச படைகளின் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்க.. என்று பகிஸ்கரித்தால்.. முருகன் கோவிச்சிடுவாரோ. :mellow::unsure:

முருகா.. நீயாவது உதுகளின்ர அறிவுக்கண்ணைத் திறந்து விடப்பா..! :mellow::lol:

உங்கள் ஆதங்கம் புரிகிறது

ஆனால் கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்வது ????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கம் புரிகிறது

ஆனால் கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்வது ????????????

கோவிலுக்குப் போகக் கூடாது என்று சொல்லவில்லை. அரசாங்கத்தைப் பொறுத்தவரை மடுவாகட்டும்.. நல்லூராகட்டும்.. மக்கள் அங்கு பெருந்தொகையில் கூடுவதை வைத்து.. தனது படைகளின் செயற்பாட்டை மக்கள் அங்கீகரித்து நிற்பதாகவும்.. தனது கட்டுப்பாட்டின் கீழ் மக்கள் சுதந்திரமாக உள்ளதாகவும் காட்டப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில்.. மக்கள் இவ்வாறு பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடுவது அவசியம் தானா..???!

இதே அரச படைகளும் அதன் கூலிக்குழுக்களும் தினமும் ஒருவரையாவது யாழ் குடாவில் கொல்கிறது அல்லது கைது செய்கிறது. வன்னியில் பெருமெடுப்பில் போர் செய்கிறது. இந்த நிலைகளில்.. இவ்வாறான ஒன்றுகூடல்களை அரசு தனக்குச் சாதகமான பிரச்சாரங்களுக்காக பாவிக்கத் தவறாது. இதற்கு தெரிந்து கொண்டும் மக்கள் இடமளிக்கத்தான் வேண்டுமா..??!

கோவிலுக்கு செவ்வாயோ.. வெள்ளியோ போய் கும்பிடலாம் தானே. முருகன் வேண்டாம் என்றாரா...! இப்படி பல்லாயிரக்கணக்கில் கூடி வரச் சொன்னாரா..???! தேவையின்றி ஏன் அரசுக்கு பிரச்சாரத்துக்கு உதவி அளிக்கிறீர்கள்.

ஏற்கனவே மடு விவகாரத்தை தனக்குச் சாதமாக்கிக் கொள்ள அரசு கங்கணம் கட்டி நிற்கும் நிலையில்.. இது.

ஒரு தூய்மையான மக்களின் உரிமைகளை மதிக்கின்ற அரசின் பிரச்சாரத்துக்காக... இவ்வாறு கூடின் பறுவாயில்லை. இனப்படுகொலையை திட்டமிட்டு செய்து நில வன்பறிப்பு மூலம் தமிழரின் இருப்பையே கேள்விக்குறியாக்கத் துடிக்கும் ஒரு அரசுக்கு மக்கள் மந்தைகள் போல செயற்பட்டு.. உதவி அளிக்க வேண்டுமா..??! :unsure::mellow::mellow:

---------------------

Traditional August Madhu feast cancelled

The traditional Madhu feast scheduled to be staged this month has been canceled, Mannar Bishop Rayappu Joseph said in a press statement.

He said that the Sacred Statue of Our Lady of Madhu will be taken to its original place of Madhu Church and enthroned after due penitential and purification service.

dailymirror.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த காரணம் சரியாகப்படவில்லை

உலகம் இப்படியெல்லாம் பார்க்குமாக இருந்தால் பொங்குதமிழோடு தமிழீழத்தை தந்திருக்கவேண்டும்....

அதிலும் தற்போது அங்குள்ள மக்களுக்கு இதுவே துணை....பொழுதுபோக்கு...........கொண்ட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த காரணம் சரியாகப்படவில்லை

உலகம் இப்படியெல்லாம் பார்க்குமாக இருந்தால் பொங்குதமிழோடு தமிழீழத்தை தந்திருக்கவேண்டும்....

அதிலும் தற்போது அங்குள்ள மக்களுக்கு இதுவே துணை....பொழுதுபோக்கு...........கொண்ட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலிலேயே குறிப்பிட்டேன்

உங்கள ஆதங்கம் புரிகிறது என்று..........

ஆனால் மக்களை அங்க போகாதே.......இங்க போகாதே ............என்று சொல்லி................

கடைசியாக கோயிலுக்கும் போகாதே............???????????என்று..........????????????

நன்றாக இல்லை என்பதே என் கருத்து

மற்றது பொங்கு தமிழ் பற்றி எனக்கு விளக்கம் தேவைப்படவில்லை

மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலிலேயே குறிப்பிட்டேன்

உங்கள ஆதங்கம் புரிகிறது என்று..........

ஆனால் மக்களை அங்க போகாதே.......இங்க போகாதே ............என்று சொல்லி................

கடைசியாக கோயிலுக்கும் போகாதே............???????????என்று..........????????????

நன்றாக இல்லை என்பதே என் கருத்து

மற்றது பொங்கு தமிழ் பற்றி எனக்கு விளக்கம் தேவைப்படவில்லை

மன்னிக்கவும்

மக்கள் களியாட்டத்துக்கும் மகிழ்ச்சிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட எதிரியானவனை சொந்த மண்ணில் இருந்து விரட்டி அடிக்க என்னென்ன வகைகளில் தாம் செயற்பட வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியவர்களாகவே தற்போதைய காலக்கட்டம் இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பங்களை அற்ப களியாட்டங்களிற்காக இழப்பின்.. அது இந்த இனம் இத்தனை இழந்து நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தையே அர்த்தமில்லாமல் ஆக்கிவிடும்.

இந்தவேளையில் ஒன்றைச் சொல்லிக் கொள்ள வேண்டும்.. 2000ம் ஆண்டு புலிகள் யாழ் கச்சேரி வரை முன்னகர்ந்த போது.. மக்கள் கிளர்ச்சி ஒன்று அரசபடைகளுக்கு எதிராக அன்று துணிச்சலுடன் முன்னெடுக்கப்பட்டிருப்பின் தனது படைகள் அங்கு தோற்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்று அப்போதைய யாழ் குடாவுக்கான சிறப்புத்தளபதி ஜானக பெரேரா குறிப்பிட்டிருந்தார். ஆனால் யாழ் குடா மக்கள் அதைச் செய்யவில்லை என்று அதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

ஆக யாழ் குடாவை மீட்கக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தை நாம் ஏலவே இழந்திருக்கிறோம். எமது அறியாமைகளால். அதையே இன்னும் தொடரும் நிலை இருக்கக் கூடாது. களியாட்டங்களையும் சிறு இன்பங்களையும் பெரிதுபடுத்தி இருந்தால் இன்று வன்னியில் போராட வேண்டிய நிலையில் எமது இளைஞர்கள் யுவதிகள் இருக்க வேண்டிய தேவை எழுந்திராது. அவர்கள் அவற்றை எல்லாம் உதறித் தள்ளி எதிரியானவன் எமது போராட்டத்தின் முதுகெலும்பையே முறியடிக்க கங்கணம் கட்டி நிற்கும் இவ்வேளையில்.. அவனை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச சக்திகள் எல்லாம் எதிரிக்கு உதவி அளித்துக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில்.. களத்தில் வாழும் மக்களே.. களியாட்டம் வேண்டும் என்பது... ரோம் எரிந்து கொண்டிருந்த போது.. நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக இருக்கிறது உங்கள் வாதம்...!

இது மக்களுக்கான போராட்டம். மக்களாகவே உணர்ந்து சில உறுதியான தீர்மானங்களை எடுத்து எதிரிக்கு எதிராக செயற்பட வேண்டிய வேளை தான் இதுவே தவிர.. அதைத் தவற விடக் கூடாது என்பதைச் சொல்வதே எமது நோக்கம். தவிர போராட்டம் முடியும் வரை நல்லூரில் முருகனைக் கும்பிட வேண்டாம் என்றோ.. மடுவில் திருவிழாச் செய்ய வேண்டாம் என்பதோ எமது கோரிக்கையல்ல. காலத்துக்கு ஏற்ற வகையில் அவர்களாக உணர்ந்து சிலவற்றைப் பகிஸ்கரிக்க வேண்டும். அரச படைகளின் இருப்புக்கு தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும். நாம் அதை இன்னும் சரிவரச் செய்யவில்லை என்றே நான் நினைக்கிறேன்..!

மீண்டும் மீண்டும் நாம் எம்மையே ஏமாற்றி வாழ வகை செய்து கொண்டிருப்பது மட்டுமன்றி எதிரியின் கரங்களையும் பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்காகப் போராளிகளைத் திட்டிக் கொள்கிறோம்.. அவர்கள் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது..! அவர்களின் பின்னடைவுகளுக்கு மக்கள் எங்களின் சரியான ஒத்துழைப்பின்மையும் முக்கிய காரணம் என்பதை நாம் ஏனோ இன்னும் அறிய மறுக்கின்றோம்..! :mellow: :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளிலை மூலைக்குமூலை கோயில்களை கட்டிப்போட்டு தேர்திருவிழா கொண்டாடலாம்.பறவைகாவடி எடுக்கலாம்.

தென்னிந்தியாவிலை கலைச்சேவை செய்யுற அம்மணிகளை கூப்புட்டு ஆட்டம் பாட்டம் போடலாம்.

இஞ்சை நாங்கள் மூக்குமுட்ட திண்டு போட்டு வீரதீர கருத்துக்களை கணணிக்கு முன்னாலை சுழல் கதிரையிலை இருந்துகொண்டு அள்ளி வீசுவம்.

அங்கை இருக்கிறசனம் செத்தவீடும் ஒப்பாரியும் அழுதகண்ணீரும்சோறும் எண்டு இருக்கட்டும்.

வெளிநாட்டிலை இருக்கிற ஈழத்துதமிழன்ரை கூத்துக்களை கவனிக்கவேண்டிய பெரியதலைகள் கவனிச்சுக்கொண்டு தானிருக்கினம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளிலை மூலைக்குமூலை கோயில்களை கட்டிப்போட்டு தேர்திருவிழா கொண்டாடலாம்.பறவைகாவடி எடுக்கலாம்.

தென்னிந்தியாவிலை கலைச்சேவை செய்யுற அம்மணிகளை கூப்புட்டு ஆட்டம் பாட்டம் போடலாம்.

இஞ்சை நாங்கள் மூக்குமுட்ட திண்டு போட்டு வீரதீர கருத்துக்களை கணணிக்கு முன்னாலை சுழல் கதிரையிலை இருந்துகொண்டு அள்ளி வீசுவம்.

அங்கை இருக்கிறசனம் செத்தவீடும் ஒப்பாரியும் அழுதகண்ணீரும்சோறும் எண்டு இருக்கட்டும்.

வெளிநாட்டிலை இருக்கிற ஈழத்துதமிழன்ரை கூத்துக்களை கவனிக்கவேண்டிய பெரியதலைகள் கவனிச்சுக்கொண்டு தானிருக்கினம்!

உங்கள் ஆதங்கம்தான் எனக்கும்

ஆனால் எத்தனை வருடமாக அந்தச்சனம் திறந்தவெளிச்சிறையில் படும்பாடு???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளிலை மூலைக்குமூலை கோயில்களை கட்டிப்போட்டு தேர்திருவிழா கொண்டாடலாம்.பறவைகாவடி எடுக்கலாம்.

தென்னிந்தியாவிலை கலைச்சேவை செய்யுற அம்மணிகளை கூப்புட்டு ஆட்டம் பாட்டம் போடலாம்.

இஞ்சை நாங்கள் மூக்குமுட்ட திண்டு போட்டு வீரதீர கருத்துக்களை கணணிக்கு முன்னாலை சுழல் கதிரையிலை இருந்துகொண்டு அள்ளி வீசுவம்.

அங்கை இருக்கிறசனம் செத்தவீடும் ஒப்பாரியும் அழுதகண்ணீரும்சோறும் எண்டு இருக்கட்டும்.

வெளிநாட்டிலை இருக்கிற ஈழத்துதமிழன்ரை கூத்துக்களை கவனிக்கவேண்டிய பெரியதலைகள் கவனிச்சுக்கொண்டு தானிருக்கினம்!

கு.சா இதை நீங்கள் என்னைப் பார்த்துச் சொன்னால் அது எனக்கு ஏற்புடையதல்ல.

நான் புகலிடத்தில் கோவில்களுக்குப் போவதில்லை. அவற்றை நான் கோவில்களாகவே பார்ப்பதில்லை. வியாபாரக் கூடங்களாகத்தான் பார்க்கிறேன். எந்த ஆகம விதிக்கும் உட்படாமல் அமைக்கப்பட்டுள்ள வியாபாரக் கூடங்கள் அவை..! இது எனது பார்வைக்கு. மற்றவர்கள் எப்படியும் பார்க்கட்டும்.. அதில் எனக்குப் பிரச்சனையில்லை.

இரண்டு மூன்று தடவை.. வெண்புறாவுக்கு காசு சேர்க்கவும்.. வள்ளிபுனம் பாடசாலை சிறுவர் சிறுமியர் படுகொலை தொடர்பில் அறிவூட்டவும் கோவில்களில் மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். அதில் எம்மவர்கள் கோவில் கும்பிட வருவதன் தார்ப்பரியத்தை அறிந்து கொண்டேன். சனம் கோவில் கும்பிடுதோ இல்லையோ ஏதோ சாப்பாட்டுக்கு வழியில்லாத மக்கள் போல.. மணிக்கணக்கில் கியூ கட்டி.. இலவச சாப்பாடு வாங்கிறதில காட்டிற அக்கறையைக் கண்டு அசந்து போனன்.

கோவில் நிர்வாகங்கள் இத்தனை பவுண் ரிக்கட் எடுத்தால் தான் அர்ச்சனை என்று கட்டாயப்படுத்தும் அளவுக்கு இருக்கின்றன சில இடங்களில்..! :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எதுவும் தங்களை குறித்து விடப்படுபவையல்ல

ஏனெனில் தங்களின் நோக்கு... அறிவேன்

ஆனால் .......????

நான் கோயிலுக்கு போயிருக்கின்றேன்

அது நிச்சயமாக எமது கோயிலாக இருந்ததனால்..........???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கம்தான் எனக்கும்

ஆனால் எத்தனை வருடமாக அந்தச்சனம் திறந்தவெளிச்சிறையில் படும்பாடு???????

திறந்த வெளிச் சிறைச்சாலை என்று நீங்கள் தான் கூப்பாடு போடுகிறீர்கள். அரசோ.. தான் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து.. மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடி திருவிழாச் செய்கின்றனர்.. முத்தமிழ் நிகழ்வு நடத்துகின்றனர்.. அரச படைகளின் களியாட்ட நிகழ்வுகளுக்கு வருகின்றனர் என்று.. அதன் ஆக்கிரமிப்பு நோக்கத்தை பக்காவா நிறைவு செய்கிறதே..!!

நீங்கள் சொல்லும் திறந்த வெளிச் சிறை என்பதை தமிழ் ஊடகங்கள் தவிர எந்த சர்வதேச ஊடகம் தொடர்சியாக உச்சரித்து வருகிறது. மேற்குலகத் தூதுவர்களும் குடாநாட்டுக்கு அடிக்கடி போய் நிலைமையை கண்காணிச்சிட்டு வந்து கப் சிப் என்றிருந்திடுறார்களே. எவருமே சொல்லவில்லையே.. அங்கு திறந்த வெளிச் சிறை இருப்பதாக மக்கள் போராடுகின்றார்கள் என்று.. அப்புறம் என்ன..??!

மக்கள் போராடாமல்.. தங்கள் எதிர்ப்பை அரச படைகளுக்குக் காட்டாமல்.. எதையும் வெளி உலகுக்கு உணர வைக்க முடியாது. இப்படித் திருவிழாக் கொண்டாடுவது அரச படைகளுக்கும் அரசுக்குமே அதிகம் சாதகமாக அமையும். அந்த வகையில் மக்கள் இவற்றைத் தவிர்த்து அரச படைகளின் பிரச்சார நோக்கங்களை முறியடிக்கும் வகையில் செயற்பட வேண்டும்.. அதற்கு துணிந்து முன் வர வேண்டும்.

இதைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்ய முடியாது. களங்களில்.. அரசபடைகளின் நெருக்குவாரங்களின் கீழ் வாழும் மக்கள் தான் வெளிப்படுத்த வேண்டும். பேசாமடைந்தங்களாக.. அடிமைகளாக.. அரசு அளிக்கும் சலுகைகளோடு திருப்தி கொண்டு வாழப் பழகின்.. விடிவு என்பது எட்டாக் கனியே..! :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிசில் மக்கள்கடையைத்தவிர வேறு கடை தெரியாது எனக்கு........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது கொஞ்சம் கூடுதலாகப்படுகிறது எனக்கு???

ஏனெனில் அந்த மக்கள் எல்லாவற்றிற்கும் உதாரணமாக திகழ்ந்தவர்கள்

அதில் முக்கியமானவர்கள் எல்லோரும் இனம் காணப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டார்கள்

எஞ்சியிருப்போர் தருணம் காத்து இருக்கின்றார்கள்

சும்மா இங்கிருந்து கொண்டு புடுங்குங்கோ என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது

அவர்கள் செய்தார்களா

செய்யக்கூடியவர்களா

என்பதையும் பார்க்கவேண்டும்????????

எனக்கு முக்கியமானவர் ஒருவர் அங்கிருக்கிறார்

அவருடன் அடிக்கடி நான் கதைப்பதுண்டு

அவர் சொல்வார்

மக்கள் எல்லோரும் முகமாலைக்குள்ளால எப்ப வருவினம் என்று பார்த்தபடிதான் உள்ளது

ஆனால் இப்ப எல்லா இடமும் கண்கள் காதுகள்???????

அதனால் சனம் அமைதியாக இருக்கு

சனம் நல்லா பட்டுட்டுதுகள்

இனி ஆமியை கல்லால் அடித்தே கொன்றுபோடுங்கள்

அதற்கு உடைப்பு??????????????இ வேணும் என்று........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கி வச்சிருக்கிற நகை நட்டுகளை கொண்டு போய் பறி கொடுக்கிறதுக்கும் ஒரு இடம் வேண்டும் தானே :mellow::mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கி வச்சிருக்கிற நகை நட்டுகளை கொண்டு போய் பறி கொடுக்கிறதுக்கும் ஒரு இடம் வேண்டும் தானே :mellow::unsure:

வாங்கி வச்சிருக்கிற நகை நட்டுகளை கொண்டு போய் பறி கொடுக்கிறதுக்கும் ஒரு இடம் வேண்டும் தானே :mellow::lol:

இப்படியும் சிந்திக்கலாமா????

Link to comment
Share on other sites

உப்புடி கூட்டம் கூடுவது எங்கட கூட்டப்பற்றை கூட்டும்...... அரோகரா.

Link to comment
Share on other sites

முருகா உன் பெயரை சொன்னாலே பிரச்சனைதானப்பா வருகின்றது.வந்து நிப்பாட்டப்பா?

Link to comment
Share on other sites

திறந்த வெளிச் சிறைச்சாலை என்று நீங்கள் தான் கூப்பாடு போடுகிறீர்கள். அரசோ.. தான் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து.. மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடி திருவிழாச் செய்கின்றனர்.. முத்தமிழ் நிகழ்வு நடத்துகின்றனர்.. அரச படைகளின் களியாட்ட நிகழ்வுகளுக்கு வருகின்றனர் என்று.. அதன் ஆக்கிரமிப்பு நோக்கத்தை பக்காவா நிறைவு செய்கிறதே..!!

நீங்கள் சொல்லும் திறந்த வெளிச் சிறை என்பதை தமிழ் ஊடகங்கள் தவிர எந்த சர்வதேச ஊடகம் தொடர்சியாக உச்சரித்து வருகிறது. மேற்குலகத் தூதுவர்களும் குடாநாட்டுக்கு அடிக்கடி போய் நிலைமையை கண்காணிச்சிட்டு வந்து கப் சிப் என்றிருந்திடுறார்களே. எவருமே சொல்லவில்லையே.. அங்கு திறந்த வெளிச் சிறை இருப்பதாக மக்கள் போராடுகின்றார்கள் என்று.. அப்புறம் என்ன..??!

மக்கள் போராடாமல்.. தங்கள் எதிர்ப்பை அரச படைகளுக்குக் காட்டாமல்.. எதையும் வெளி உலகுக்கு உணர வைக்க முடியாது. இப்படித் திருவிழாக் கொண்டாடுவது அரச படைகளுக்கும் அரசுக்குமே அதிகம் சாதகமாக அமையும். அந்த வகையில் மக்கள் இவற்றைத் தவிர்த்து அரச படைகளின் பிரச்சார நோக்கங்களை முறியடிக்கும் வகையில் செயற்பட வேண்டும்.. அதற்கு துணிந்து முன் வர வேண்டும்.

இதைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்ய முடியாது. களங்களில்.. அரசபடைகளின் நெருக்குவாரங்களின் கீழ் வாழும் மக்கள் தான் வெளிப்படுத்த வேண்டும். பேசாமடைந்தங்களாக.. அடிமைகளாக.. அரசு அளிக்கும் சலுகைகளோடு திருப்தி கொண்டு வாழப் பழகின்.. விடிவு என்பது எட்டாக் கனியே..! :mellow:

சனம் கொந்தளிக்க தொடங்கினால் சிங்களவன் சகட்டுமேனிக்கு போட்டுத்தள்ளுவான்.... ஒரு நாயும் கேக்காது. கேக்க வேண்டிய அவசியமும் எந்தநாயுக்கும் கிடையாது... இந்த பிரச்சினையை சீர் செய்யவேண்டிய பொறுப்பு ''ஆயுதம் ஏந்தியவர்களின்'' கைகளில்தான் இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனம் கொந்தளிக்க தொடங்கினால் சிங்களவன் சகட்டுமேனிக்கு போட்டுத்தள்ளுவான்.... ஒரு நாயும் கேக்காது. கேக்க வேண்டிய அவசியமும் எந்தநாயுக்கும் கிடையாது... இந்த பிரச்சினையை சீர் செய்யவேண்டிய பொறுப்பு ''ஆயுதம் ஏந்தியவர்களின்'' கைகளில்தான் இருக்கு...

யாழ் குடாவில் பொங்கு தமிழ் நடந்தது. அதற்காக எல்லோரையும் பிடிச்சு கொல்லத்தான் முடியுமா..??!

மக்கள் தமக்குரிய வகைகளில் சந்தர்ப்பங்களில் எதிர்ப்புக்காட்ட வேண்டும். ஒட்டுமொத்தமாக திரண்டு எதிர்க்கும் போது.. பகிஸ்கரிப்புப் போன்றவற்றை.. அரசும் படைகளும் எதுவும் செய்ய முடியாது போகும். ஓரிருவர்.. குழு என்று செயற்பட்டால் தான் பிரச்சனை..!

நல்லூர் திருவிழா என்பது யாழ் குடாவைப் பொறுத்தவரை முக்கிய நிகழ்வு. அதற்கு அரசு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமன்றி விசேட ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறது. அதெல்லாம் மக்கள் மகிழ்ச்சியா இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தனது கட்டுப்பாட்டில் மக்கள் சுதந்திரமாக உள்ளனர் என்று உலகுக்குக் காட்ட..! அதற்கு இராணுவத்திற்கு பலிக்கடாவாகவுள்ள மக்கள் இடம்கொடுக்கத்தான் வேண்டுமா..??!

ஏன் சிந்திக்கிறார்கள் இல்லை இந்த மக்கள். பட்டும் தேறவில்லையா...??! :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோவில் நிர்வாகங்கள் இத்தனை பவுண் ரிக்கட் எடுத்தால் தான் அர்ச்சனை என்று கட்டாயப்படுத்தும் அளவுக்கு இருக்கின்றன சில இடங்களில்..! :mellow:

அர்ச்சனை சீட்டு எடுத்தவர்கள்தான் தீபம் தொட்டு கும்பிடலாம் எண்டும் சட்டமெல்லா போட்டிருக்கினம்... :mellow:

Link to comment
Share on other sites

யாழ் குடாவில் பொங்கு தமிழ் நடந்தது. அதற்காக எல்லோரையும் பிடிச்சு கொல்லத்தான் முடியுமா..??!

மக்கள் தமக்குரிய வகைகளில் சந்தர்ப்பங்களில் எதிர்ப்புக்காட்ட வேண்டும். ஒட்டுமொத்தமாக திரண்டு எதிர்க்கும் போது.. பகிஸ்கரிப்புப் போன்றவற்றை.. அரசும் படைகளும் எதுவும் செய்ய முடியாது போகும். ஓரிருவர்.. குழு என்று செயற்பட்டால் தான் பிரச்சனை..!

நல்லூர் திருவிழா என்பது யாழ் குடாவைப் பொறுத்தவரை முக்கிய நிகழ்வு. அதற்கு அரசு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமன்றி விசேட ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறது. அதெல்லாம் மக்கள் மகிழ்ச்சியா இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தனது கட்டுப்பாட்டில் மக்கள் சுதந்திரமாக உள்ளனர் என்று உலகுக்குக் காட்ட..! அதற்கு இராணுவத்திற்கு பலிக்கடாவாகவுள்ள மக்கள் இடம்கொடுக்கத்தான் வேண்டுமா..??!

ஏன் சிந்திக்கிறார்கள் இல்லை இந்த மக்கள். பட்டும் தேறவில்லையா...??! :mellow:

யாழ்ப்பாணத்தில் இந்தமுறை பொங்குதமிழ் நடந்ததா?

04 05 இல் சுறுசுறுப்பாய் நடத்திகாட்டினவைக்கெல்லம் என்ன நடந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சனை சீட்டு எடுத்தவர்கள்தான் தீபம் தொட்டு கும்பிடலாம் எண்டும் சட்டமெல்லா போட்டிருக்கினம்... :mellow:

கிழக்கு லண்டனில் ஒரு கோவிலுக்கு சிறீலங்கன் ஆட்கள் வரக் கூடாது என்றும் சட்டம் போட்டிருந்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நிர்வாகத்துள் நடந்த தில்லுமுல்லுகளுக்கு பிறகு சிறீலங்கன் ஆட்கள் தங்கள் கோவிலுக்குள் வரக் கூடாது என்று வாய் மூலம் அறிவித்திருந்தததாகவும் பின்னர் சில அழுத்தங்கள் காரணமாக சிறீலங்கன் ஆட்கள் வரலாம்.. சாமி கும்பிடுவதோடு நின்று விட வேண்டும்.. நிர்வாகத்துக்குள் தலைப்போடக் கூடாது என்று கோவில்காரர்களே பிரிட்டன் அரசுக்கு மேலால் சட்டம் இயற்றினராம்..! இப்படி இருக்குது..!

எங்கட சனங்களும் வாங்கின நகைகளையும் உடுபுடவைகளையும் காட்ட சமருக்கு கூட இடம் இல்லைத்தானே. வெட்கம் மானம் இல்லாத கூட்டம்.. கூடிக் கும்மாளிக்கிறதுதான்..! நாத்திகவாதிகளால் கோவில்கள் பரிகசிக்கப்பட இந்தக் கூட்டங்கள் தான் மூல காரணம்..!

இத்தனைக்கும் அந்தக் கோவில் ஒரு மரணச்சடங்கு செய்யும் நிலையத்துக்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ளது..! :mellow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.