Jump to content

காதல் எங்கே போனது?


Recommended Posts

காதல் எங்கே போனது?

88160692wr1.png

தீஷ் - ரேகா இருவரும் இப்போது பிரிந்துவிட்டார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. குடும்ப நீதிமன்றத் தீர்ப்பின்படி குழந்தை இப்போது ரேகாவிடம் வளர்கிறது. இருவரும் காதல் கல்யாணம் செய்துகொண்டவர்கள்.

''என் தலையெழுத்துடி, உன்னைப் போய் கல்யாணம் செய்துகொண்டேன் பார்'' - இப்படி ஆரம்பித்தது ஆரம்பக் கசப்பு. ''ஓடி ஓடி வந்து காதலிச்சுட்டு, இப்படிப் பேசுறீங்களே!'' - ரேகாவுக்கு அதிர்ச்சி!

காதல் எங்கே போனது? ஆசை ஆசையாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் பிரிவது எதனால்?

லியோ புஸ்காக்லியா (Leo puscaglia) என்கிற மனநல மருத்துவர், காதலைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். 'காதல் என்பது-நம்பிக்கை, அப்படியே ஏற்றுக்கொள்ளுதல், அக்கறையும் பகிர்வும்கொள்ளுதல் போன்றவற்றை உள்ளடக்கியது. காதல்-சந்தோஷம், மனஅழகு, உண்மை, கண்ணீர் போன்ற உணர்வுகளாக வெளிப்படும்' என்றார்.

ஒவ்வொரு கணமும் அந்த உணர்வு தொடர வேண்டும். உளப்பூர்வமான திருப்தி (gratifying) ஏற்படுவதனால்தான் காதலை, காதலர்கள் விரும்பி ஏற்கிறார்கள். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் பல பிரச்னைகள் தோன்றும். இன்றைய அவசர உலகில் பலவற்றைக் கடந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. இதை எல்லாம் மீறி காதல் வேண்டும்.

காதலர்களாக இருக்கிற பலர்-கல்யாணத்துக்குப் பிறகு தங்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர். வாழ்வின் எல்லாத் துளியிலும் இருக்க வேண்டிய உணர்வு, ஏனோ பின்னுக்குத் தள்ளப்படுவதுதான் பிரச்னை.

கல்யாணத்துக்குப் பிறகும் காதலர்களாக இருக்க இவர்கள் என்ன செய்ய வேண்டும்?

காதலும் பிசினஸ்தான். எமோஷனல் பிசினஸ். தொடர்ந்து ஒழுங்காக, முறையாகத் தொடர வேண்டும். அப்போதுதான் லாபம் பார்க்க முடியும்.

காதலர்கள்-தங்களுக்குள் பர்ஃபெக்ஷன் எதிர்பார்க்கக் கூடாது. குறை-நிறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கறார் பேர்வழிகள் காதலிக்கவே கூடாது. காதலன் உயர் அதிகாரியும் அல்ல; காதலி அவருக்குக் கீழ் வேலை பார்ப்பவளும் அல்ல.

தான் ஒரு காதலன் என்கிற நினைப்பு மாறி, தான் ஓர் ஆண் என்கிற எண்ணம் வரும்போதெல்லாம் சிக்கல் தலைதூக்க ஆரம்பித்துவிடும்.

காதலுக்கு ஒவ்வொரு நிமிஷமும் போஷாக்கு தேவை. இல்லையெனில் காதலர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்... காதல் சவலைப் பிள்ளையாகிவிடும்

நன்றி ஆனந்தவிகடன்

Link to comment
Share on other sites

ஓ..அப்படியோ வசபண்ணா..ணா..இணைப்புக்கு நன்றி..றி.. :( இப்ப பாருங்கோ புதுசா பார்க்காக என்னத்த பார்த்தாலும் ஆசை வருமென்ன..கொஞ்ச நாள் போக இன்னொன்டை பார்கையில அது நன்னா இருக்கும்..ம்..என்ன நான் சொல்லுறது சரியோ..?? :D

அப்படி தான் காதலும் இப்ப...(பிறகு என்ன தப்பா நினைக்கிறதில்ல சொல்லிட்டன்)...இப்படியான காதல் எல்லாம்..ம் கல்யாணம் ஆகினா..அம்முட்டு தான்...பாருங்கோ..!! :(

இப்ப நான் என்ன சொல்ல வாறன் எண்டா..டா..

இப்பத்தையான் காதல் எல்லாம் தொப்பி வியாபாரியும் கொரங்கும்..ம் போல தான் கொஞ்சம் அசந்து தூங்கினா இன்னொரு..கொரங்கு தொப்பியை போட்டு கொள்ளும்..பிறகு எங்களுக்கு..அதை வெற நான் சொல்லனுமா என்ன உங்களுக்கே விளங்கும் தானே..னே.. :o

அதுக்காக..க காதலிக்க வேண்டாம் எண்டும் சொல்லல்ல...காதலியுங்கோ ஆனா அது தான் வாழ்க்கை எண்டு நினைத்திடாதையுங்கோ என்ன..ன..ஏன் சொல்லுறன் எண்டா வானத்தில முகில்கள் நிலையா தங்கிறதில்ல பாருங்கோ அதை மாதிரி..தான்..ன்..

இப்ப காதலும்..கத்தரிக்காயும்,கத்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட...அட...அட! இவர்கள் உன்னதமான காதலர்கள். காதலை மட்டும் காதலிக்கத் தெரிந்தவர்கள். அதனால்தான் கல்யாணம் இவர்கள் வாழ்வில் தடையாக வந்தபோது அந்தக் கல்யாணத்தையே உதறிவிட்டு மீண்டும் காதலிக்கச் சென்றுவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ காதலிப்பது எதற்காக? :rolleyes:

Link to comment
Share on other sites

காதலும்..காதலும்..

heart-large.jpg

'காதல்' இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும். சொல்ல இயலாத பல உணர்வுகளை மனதில் எழுதிச் செல்லும் இந்த் ஒற்றை வார்த்தை. அதிலும் துணை உடன்இருந்துவிட்டாலோ சொர்க்கம் தான். எத்துணை கஷ்டங்கள், வேதனைகள் இருப்பினும் அத்தனையும் தூசு போல் ஆகிவிடும்.

உண்மையான ஆத்மார்த்தமான காதல் எதையும் எதிர்பார்க்காது, அன்பைக் கூட. நீ அன்பு காட்டாவிட்டால் என்ன? நான் அன்பு காட்டுகிறேன், அக்கறை காட்டுகிறேன், காதலிக்கிறேன் இப்படித்தான் சொல்லும் அந்த பிரதிபலன் பார்க்காத காதல் உள்ளம். என் கண்ணின் இமைகளில் வைத்துத் தாங்கிக் கொள்வேனடி(டா) இவ்வாறாக உருக வைக்கும் காதல்.

ஆனால், தற்போதைய காதல்'கள்' (ஒரு சில காதல் தவிர்த்து) இப்படித்தான் உள்ளனவா? காதல் மாதம், மயிலிறகு மாதம் எல்லாம் சரிதான். காதல் காதலாக இருக்கிறதா இப்போது??

காதலின் அடிப்படையே பிறழ்ந்து போயிருக்கும் இக்காலத்தில் எங்கு போய்காதலைத் தேடுவது? கடற்கரையிலா? இல்லை பூங்காக்களிலா? அங்கெல்லாம் போனால் காதல் கிடைக்காது. கண்றாவிதான் கிடைக்கும். போதாக்குறைக்கு இந்த மீடியாக்கள் வேறு. உங்க காதலன்/காதலிக்கு என்ன பரிசு தரப்போறீங்கன்னு 'கொஞ்சும் தமிழ்'ல தொ(ல்)லைபேசுவாங்க. அப்புறம் இந்தக் கலர் உடைஅணியுங்க, இப்படி பேசுங்க உங்க 'அவங்க' கிட்டன்னு இலவசமா அறிவுரை வேறகிடைக்கும்.

அணியும் உடைகளின் நிறத்தில் தானா காதல் வாழ்கிறது. அப்படி என்றால், அதேகலரில் வருஷம் பூராவும் போட்டுட்டு இருக்கலாமே. ஏதோ அந்த ஒருநாள் மட்டும்தான் காதலை தூக்கி நிறுத்தப் போவதாகப் பேசிக்கொள்வார்கள் எல்லாரும். 'எங்கு காணினும் காதலடா' என்று கையில் ஒரு ரோஜாப்பூவை தூக்கிக் கொண்டு (அது ஏங்க ரோஜா? ஏன் வேற பூ கொடுத்தா ஒத்துக்க மாட்டாங்களா) தனக்கான ஜோடியைத் தேடிக் கிளம்பிடுவார்கள் பையன்களும் பொண்ணுங்களும். கேட்டால் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தத்தான் இப்படி என்பார்கள். அந்த அன்பை ஒவ்வொரு நிமிஷமும் வெளிப்படுத்தணும். அதுக்குன்னு ஒரு தனிநாள் தேவை இல்லையே. அந்தநாளில் காதல்ங்கற பேர்ல செய்யும் அட்டகாசங்கள் இருக்கிறதே அப்பப்பா! தாங்காது.

பார்ப்பவர்களிடம், பேசுபவர்களிடம் எல்லாம் காதல் வராது. அது யாராவது ஒருத்தர் மேல வரும். அவங்க ஏத்துக்கிட்டாலும் சரி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி. அந்த அன்பு, பாசம், நேசம், காதல் எல்லாம் அப்படியேதான் இருக்கும்.

இந்த நிமிஷம் கோபப்பட்டு அடுத்த நிமிடம் மெழுகாய் உருகிக் கரைவது தான்காதல். காத‌ல‌ர்க‌ள் சேர்ந்திருந்தாலும் ச‌ரி, பிரிந்தாலும் ச‌ரி.உண்மைக்காத‌ல் என்றும் உயிர்ப்புட‌ன் இருக்கும். காத‌லும் தாய்மையும்ஒன்றுதான். அடித்தாலும் அணைத்துக் கொள்ளும்.

காத‌ல‌ர்தின‌ம் என்று அந்த‌ ஒரு நாளில் ம‌ட்டும் காத‌லுக்கு முக்கிய‌த்துவ‌ம் த‌ராம‌ல், வாழும் ஒவ்வொரு நொடியும் காத‌லை உயிர்ப்பிக்க‌லாமே.

- சகாரா.

http://saharathendral-kathaigal.blogspot.c...og-post_14.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.