Jump to content

அகரம் கவியாகி..!


Recommended Posts

அளவான புளுகோட கூடிய அழகான கவிதை. எனக்கு உங்களின் கவிதைகளை நன்கு ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. :rolleyes:

நன்றி நெடுக்ஸ். :lol:

நாகரீகமான வார்த்தைப்பிரயோகமும் கூட. :D

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply

the-full-moon-that-night.jpg

தீர்த்தக்கரையினிலே காத‌ல் க‌ளிப்பினிலே,

தீர்க்கம் அற்ற ஓர் இர‌வினிலே,

தீவுப் ப‌ந்தாக‌ நிலா நீந்தும் கோலம்,

தீப‌ங்க‌ள் ஊரில் அணைகின்ற‌ நேரம்.

தீயாக‌க் கொதிக்குத‌டி என் தேக‌ம்,

தீண்டாம‌ல் த‌ள்ளி நின்றால்,

தீட்டு என்றே எட்டி நின்றால்,

தீருமோடி என் மோக‌ம்.

தீங்கென்றே அஞ்சி ம‌றுத்தால்,

தீஞ்சுவை என்றே வெறுத்தால்,

தீராமல் வருத்துமேடி இத்தாகம்,

தீர்வு தான் என்ன‌டி என் மேக‌ம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணிந்த துடிப்பான வேங்கைகள் -- கடலின்

துள்ளியெழும் அலைகளை யெல்லாம்

துச்சமாய் மதித்து விரைந்து

துடுப்பெடுத்து துலாவிப் பாய்ந்து

துயருறும் மனதை துரத்தே வைத்து

துஞ்சி நிற்கும் அவன் கலத்தை

துலைவில் கண்டு வேகமாய் நெருங்கி

துடுக்குடன் பாய்ந்து உடைத்து -- எதிரிகளை

துடிதுடிக்க சாய்த்து துண்டு துண்டாக்கி விட்டு

துணிச்சலாய் தன்னுயிர் ஈந்து

துஞ்சாத தமிழர் வாழ்விலே தெய்வமாய்

துயிலுகின்ற வேங்கைகளுக்கு என்றும்

துணைவருடன் அணைவரும் விளக்கிடும் கார்த்திகை 27!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழமை..!

தூக்கணாங் குருவி ஒன்று

தூது கொண்டு போனது

தூய்மை அவள் மனத்திடலில்

தூக்கலான கோலம் ஒன்று போட்டது

தூதுமது தோதாக..

தூங்காத இரவுகளை பதிலாக்கி வந்தது.

தூரத்து உறவானவள்

தூரம் அதிகமில்லை எனும் நிலையானாள்.

தூதுவளையில் கூடிகட்டிய குருவியும்

தூக்கணங்கள் ஆடும் அவள் செவிகளில்..

தூய்மையான தோழமையும் பிறந்தது

தூர தேச தோழியரிடையே..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தெருவில் ஓர் நாள், இள‌ந்

தென்ற‌லாக‌ நீ வ‌ந்தாய்...

தெளிந்த‌ என் நெஞ்சில் அன்றுதொட்டு

தெப்ப‌மாக‌ மித‌க்கின்றாய்...

தென்பாண்டித் த‌மிழிற்கு

தெய்வீக‌ மெருகு பூசி

தெவிட்டாத‌ தேனையிங்கு

தெளித்தே தான் ப‌டைத்தானோ ?

தென்னை போல் வ‌ள‌ர்ந்துவிட்டேன்

தெம்பைத்தான் இன்னும் காணோம்.

தெரியாம‌லே போவாளோ? கோழையின்

தெரிவிக்கா காதல், ஊமை கண்ட‌ க‌னவோ ?

தென்பொதிகைக் காற்றால்

தெறிகெட்டுப் போனேனே

தெள்ளுத் த‌மிழ் கூட‌

தெளிவிழ‌ந்து பிச‌த்த‌க் காணாயோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசம் விட்டு தேசம் வந்து

தேகம் கெட்டு தேட்டம் தேடி

தேடி தேடியே நாடி தளர்ந்து

தேக்கு நிகர்த்த உடலும் மெலிந்து

தேடிய தேட்டமெல்லாம்

தேர்ந்த நல் வீடும் வாங்கி

தேர்போலொரு காரும் வாங்கி

தேவதாசி இல் தவிர்த்து

தேவதைபோல் இல்லாள் தேர்ந்தெடுத்து

தேன்நிலவு சென்று வந்து

தேமதுர வாழ்வு கொண்டு

தேர்ந்த அவள் கை மணத்தில் இழந்த

தேஜஸ்சை பெற்று தேறிவந்து

தேவகுமாரர் போல் சில பிள்ளைகள் பிறக்க

தேசாபிமானம் மனசில் ஒளிர

தேசத்துக்கும் காசு தந்து

தேங்கிய கடனுக்கும் வட்டி தந்து

தேங்காய்ப் பூவும் பிட்டும் போல் இணைந்து வாழும் புலம் பெயர்ந்தோர்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வோடு கலந்து கவி கொண்டு உலாவரும் ஈசனுக்கும் தேசத்தின் உணர்வோடு கவி புனைந்து வரும் சுவிக்கும்...பாராட்டுக்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

இனி, மாதமோ தை,

இங்கு மயங்குவதோ தத்தை

அவ‌ள் மயக்குவதோ மனத்தை

இவ‌ன் கொடுத்தான் மலர் கொத்தை

கட்டில் மேல் ஒரு மெத்தை

அதன் மேல் ஒரு வித்தை

விரித்தான் விரல் பத்தை

வாரினான் அவள் கேசக் கத்தை

விலை மதிக்கா தன் சொத்தை

விற்பனைக்கு வாரா ஒரு முத்தை

அதன் மேல் தனக்கு உள்ள பித்தை

சொல்லவே தேடினான் ஓர் வார்த்தை

அவ‌ள் அறிவாள் அவ‌ன் க‌ருத்தை

தனையே கொடுத்தாள் அவ‌ன் பக்தை

த‌டுப்ப‌த‌ற் இல்லை அவ‌ளிற்கு அக‌ந்தை

தித்திப்பு க‌ட‌லில் தேவையோ ம‌ம‌தை ?

*** ந‌ன்றி நெடுக்ஸ் :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொங்கட்டான் சதிராட --கோயில்

தொழுது வரும் மச்சாளை

தொலைவினில் கண்டு இடையசைவில்

தொங்கு பாலமாய் மனசசைய

தொட்டதெற்கெல்லாம்

தொட்டாற் சுருங்கும் செடியாய்

தொட்டவுடன் சினுங்குவதை நினைந்து

தொங்கிடும் சேலை -- சிறு

தொப்பையை மறைக்க -- ஊடே

தொப்புளும் சிறிதசைய

தொடர்ந்துவர மனம்நினைக்க

தொட்டுவிட விரல் துடிக்க -- பெருந்

தொனியில் அழைத்தாள், அஅஅத்தான்

தொண்ணையில் கஞ்சியுண்டு, உண்டு என்

தொங்கலில் துடைத்து விடுங்கள்.

தொட்டில் கனவு மீன்டும்

தொடர்கின்றது -- ஏனோ

தொடைமட்டும் நடுங்குகிறது!!!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தோட்டத்தின் ஓரத்திலே அழகிய

தோப்பொன்று செழித்திருக்க!

தோணித்துறை கணபதிக்கு

தோரணம் கட்டி பொங்கலிட்டு !

தோப்புக் கரணமும் போட்டுக் கொண்டு

தோழரும் தோழியரும் ஒன்றாக

தோத்திரம் பாடியாடி சேர்ந்திருக்க!

தோகை மயில்களும் கூரையிலே நடமாட!

தோணியிலே வந்த வல்லரக்கர்

தோட்டாக்களைப் பீச்சியே

தோட்டத்தில் கோர தாண்டவமாட!

தோள் மூட்டுகள் பொடிபட மேனியின்

தோற் சதைதான் கிழிந்து தொங்க, மயில்களின்

தோகைகள் அறுந்துவிழ குருதி கொப்பளிக்க!

தோப்பினுள் அலறல் கேட்டு ஆங்கே

தோன்றிய மறவர் கூட்டம் கொடியவரின்

தோள்பட்டை முறித்து துப்பாக்கியுடைத்து

தோற்றோடியவனை விரட்டிவிட்டு

தோப்புக்கரணம் போட்டவரைச் சிறைப்பிடித்து

தோழரும் நிலத்திலே குழி

தோண்டி மாண்டவரை புதைத்துவிட்டு

தோழியரும் வீடுநாடி சோகமுடன்ஏக

தோழர்களும் கவியைத் தெருவில் விட்ட

தோளுயர்ந்த நெடுக்கைத் தேடி நடக்கின்றாரே!!!

Link to comment
Share on other sites

ஐயகோ அழகு அழகு கவிவரிகள்

ஐ யில் தொடங்கி கவி ஒன்று எழுத

ஐயோ எனக்கு முடியவில்லை

ஐயமின்றி கற்றிடவும்

ஐய்யய்யோ அவனியில் அமைதியில்லை

ஐம்புலனையும் அடக்கி

ஐ யில் ஓர் கவிவரைய

ஐயா!, என் மனதில் நிம்மதியில்லை

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

அவலம் கண்டு சோர்ந்த கணப்பொழுதில்..

-------------------------------------------------------------------

நனவோ இது ? அதுவும்,

நமக்கோ ??

நந்தவன காட்சிகளும்,

நகை அலங்கார சோடனைகளும்,

நகல் ஏது என்றே,

நடை பயிலும் ஓவியங்களும் ..

நட்ட,

நடு நிசியில்,

நப்பாசை நாவூற..

நம்பு மனமே, இது

நனாவே !!

நஞ்சை பஞ்சாக,

நரம்பில்,

நட்டது நினைப்பு..

நடு நெற்றியில்,

நச்சென்று இடித்தது,

நவ உலக கணணிப் பொறி,

நண்பா, விழித்திடு !

நன்றே பார்! என்றது..

நதியாக ஓடும் உதிரத்தில்,

நங்கையரும் பிஞ்சுகளுமாய்,

நடவாக் கொடுமை,

நடந்தேறும் காட்சி..

நடு நெஞ்சு பிளந்தது..

நரகத்துயர் சூழ்ந்தது..

நமக்கு யாரோ ? இனி,

நடைபிண வாழ்வோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓராயிரம் கவிதை பாடினாலும்

ஓர் நினைவு நீங்காத நிழலாக

ஓடி வந்த தாயக நினைவில்

ஓராயிரம் துயர் கண்டு

ஓர் நாளும் துயிலவில்லை

ஓர்மத்துடன் வீரம் காட்டும்

ஓரணியாய் தலைவன் கீழ்

ஓடுகின்ற நம் வீரப்படை

ஓட வைக்கும் சிங்க படையை

ஓரடி நிலம் தானும் அவனை அடைய விடோம்

ஓர் நாள் வரும் சிங்க படை விழும்

ஓயாத அலையாக நம் வீரர் படை விரட்டி

ஓய்வு பெறும் நம் துயரம்

ஓய்விலா நம் வீரரே ,மீட்போம் நம் ஈழம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.