Jump to content

மெளனங்கள் கலைகின்றன -2


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மௌனங்கள் கலைகின்றன - 2

1-1445640-4552-t.jpg

முட்டிய விழிகளும், முதல்வலியும்

வெண்ணிலவும், விண்மீன்களும் வெட்கமின்றிப் பார்க்கக் கூரை ஆடையின்றி, அம்மணமாகவும்,

கரிய அழுக்குடனும் தங்கமண் தாம்பாளத்தில் என்வீடு.

அப்பப்போ மேகங்கள் வடிக்கும் கண்ணீரில்,

வானம் பார்த்த என்னில்லம் இல்லாத ஒட்டடையையும், தன்மேல் படிந்திருக்கும் கரியையும் கழுவிக் கொள்ளும்.

எரிகாயங்கள் வடுக்களாக காலடியில் மேடுபள்ளமாக நவீன ஓவியங்கள்போல் சிந்தனைகள் பலவற்றைத் தூண்டும்.

அதே நேரம் மேகத்தின் கசிவை இந்தப்பள்ளங்கள் நான், நீ என்று போட்டிபோட்டு ஏந்தி ஜதியிடும்.

கதிரவனுக்குக் கோபம் வந்தால் பாதங்களைத் தொப்பளிக்கவே படைக்கப்பட்டதுபோல்

நான் தவழ்ந்த அந்த உள்வீட்டுத் தரை சூரிய அடுப்பாக மாறிவிடும்.

ஒரு ஆறுதல் இன்னும் இடியாமல் வெடிப்புகளுடன் நிமிர்ந்து நிற்கும் பிளாட்,

கொஞ்சம் இயற்கையிடம் இருந்து எல்லா நேரமும் என்றில்லாவிடினும்

பல சமயங்களில் பாதுகாப்புத்தரும் தேவதையாகத் இன்று வரைக்கும் திகழ்கிறது.

அன்றிரவு மட்டும் அந்தக் காலநிலைக் குழப்பம் அந்த பெருமழையைத் தோற்றுவிக்காது விட்டிருந்தால்

என்னினத்தின் வலியை நான் முதன்முதலாக உணரும் காரணி வேறு ஏதாவதாக இருந்திருக்கும்.

ஏப்போதுமே வாழ்வில் ஏற்படும் முதல் அனுபவம் என்பது பசுமரத்தாணிபோல் மனக்கூட்டுக்குள் பதிந்துவிடும்.

இதுவும் அப்படித்தான்...

முதல் காதல், முதல் முத்தம் என்று இன்பியல் பக்கம் போவதற்கு முன் நிறையவே விடயங்களை இங்கு எழுத இருக்கிறது.

கிளுகிளுப்புக் கதைகளை வாசித்த பலர் இங்கு வாசிக்கக்கூடும். இவ்வனுபவப் பகிர்வில் கிளுகிளுப்புத் தேடவேண்டாம்.

பெண்மையின் பருவமாற்றங்கள்கூட இன்றைய தமிழீழப் பெண்களுக்கு

எவ்வளவு சோதனையாக அமைகிறது என்பதற்கு ஒரு சாட்சியம் அவ்வளவுதான்.

இது அந்நாள் வலி. இந்நாளில் இதன் வடிவம், வலி எல்லாம் பேசப்படாப் பொருளாக

ஒவ்வொருவருக்குள்ளும் ஆழப்புதையுண்டபடி, எம்மினம் வாழ்விற்கான யாசிப்பையே பிரதானமாகக் கொண்டதாக நகர்கிறது.

ஆகாயம் பார்த்துக்கிடந்த என்வீட்டின்மேல், அந்த நடுச்சாமத்து மழை அனுமதியின்றி நுழைய

நடுவீட்டில் குளம் ஒன்று தன்னை உருவமைக்க, அடங்கமாட்டேன் என்று நாலாபக்கமும் தண்ணீர் கட்டுடைத்துப் பாய,

அப்பப்போ பாதுகாப்புத்தரும் பிளாட் பகுதியின் நிலமெல்லாம் புனல் விரிந்து பரவி வழிதேடி ஓடியது.

நான் படுத்திருந்த பாயை நனைத்து ஓடிய நீரில் மட்டும் செம்மை தன்னை கரைத்தோடி

சற்றுத் தள்ளிப் படுத்திருந்த என் தாய், தந்தையையும் நனைத்து நகர்ந்தது.

பூப்படைந்த இருநாள் பருவமகளாக அனுபவமில்லா அணிகளுடன்

அந்த எரிந்தவீட்டின் ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த என்னை நனைத்த மழைநீர்

என் பருவமாற்றத்தின் உதிரத்துளிகளைக் கரைத்து என் பெற்றேரை நனைத்த அந்தப் பொழுது,

அவமானம் பிடுங்கித் தின்ன முட்டிய விழிகளுடன் முதன்முதல் என்னினத்தின் வாழ்வை எண்ணி என்னுள்ளம் முதல்வலி ஏந்தியது.

Link to comment
Share on other sites

கதையை வாசித்து மெளனிக்க வைத்து விட்டியள் சகாரா அக்கா..கா..தொடரட்டும் தங்களின் மெளனங்கள் கரைகின்ற அத்தியாங்கள்.. :o

வெண்ணிலவும், விண்மீன்களும் வெட்கமின்றிப் பார்க்கக் கூரை ஆடையின்றி, அம்மணமாகவும்,

கரிய அழுக்குடனும் தங்கமண் தாம்பாளத்தில் என்வீடு.

கதையில் இந்த வரிகள்..மிக அழகு சகாரா அக்கா..கா..!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனம் படும் வலிகளுக்கு ஒரு எல்லையே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான பதிவு வாழ்த்துக்கள். எத்தனையோ எம் ஈழத்து பெண்கள் அளவில்லா துன்பத்தை அனுபவிக்கிறார்கள் அதுக்கு எல்லாம் விடிவு வரும் காலம் வெகு தூரமில்லை.

Link to comment
Share on other sites

அவமானம் பிடுங்கித் தின்ன முட்டிய விழிகளுடன் முதன்முதல் என்னினத்தின் வாழ்வை எண்ணி என்னுள்ளம் முதல்வலி ஏந்தியது.

சொல்லெணா துயரங்களை நெஞ்சில் சுமந்து வாழும் எமது மக்களின் விடிவு வெகு தூரத்தில்ல் இல்லை. நன்றி, சகாறா பதிவுக்கு. மேலும் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமுனன், புத்தன், சுப்பண்ணை, நுணாவிலான் உங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி உரைத்தேன்.

இச்சம்பவம் இரு தசமங்களுக்கு முந்தையகாலம்... பிற்பட்ட காலத்தில் பெண்கள் என்ற நிலையில் எங்கள் பெண்கள் சந்தித்த வலிகளும் அவமானங்களும் ஏராளம். மலை நிகர்த்த பெண்மையின் துன்பத்தில் ஒரு மண்ணின் அளவே இப்பதிவு.

எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்குதல் வேண்டும். காலம் எங்கள் கைகளில்கூட சில கடமைகளை திணித்திருக்கிறது. பெண்படைப்பாளிகளே! உங்களை வெளியே கொண்டு வாருங்கள். சந்திக்கு வராத சங்கதிகள் உங்கள் சிந்தைக்குள் அடையுண்டு கிடக்கும். அவையெல்லாம் வெளிக் கொணரவேண்டும்

Link to comment
Share on other sites

யமுனன், புத்தன், சுப்பண்ணை, நுணாவிலான் உங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி உரைத்தேன்.

இச்சம்பவம் இரு தசமங்களுக்கு முந்தையகாலம்... பிற்பட்ட காலத்தில் பெண்கள் என்ற நிலையில் எங்கள் பெண்கள் சந்தித்த வலிகளும் அவமானங்களும் ஏராளம். மலை நிகர்த்த பெண்மையின் துன்பத்தில் ஒரு மண்ணின் அளவே இப்பதிவு.

எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்குதல் வேண்டும். காலம் எங்கள் கைகளில்கூட சில கடமைகளை திணித்திருக்கிறது. பெண்படைப்பாளிகளே! உங்களை வெளியே கொண்டு வாருங்கள். சந்திக்கு வராத சங்கதிகள் உங்கள் சிந்தைக்குள் அடையுண்டு கிடக்கும். அவையெல்லாம் வெளிக் கொணரவேண்டும்

சகாரா சும்மா பகிடிக்குத்தானே இதை எழுதினனீங்கள் :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைக்காத மௌனங்கள் என்றும் ஆறாத காயங்கள்தான்.

உங்கள் சில நூறு வார்த்தைகளில் ஒரு கோடி வேதனைகளை உணர்கிறேன்.

நல்ல கவிதை-வாழ்த்துகிறேன் வல்வைசகாரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமுனன், புத்தன், சுப்பண்ணை, நுணாவிலான் உங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி உரைத்தேன்.

இச்சம்பவம் இரு தசமங்களுக்கு முந்தையகாலம்... பிற்பட்ட காலத்தில் பெண்கள் என்ற நிலையில் எங்கள் பெண்கள் சந்தித்த வலிகளும் அவமானங்களும் ஏராளம். மலை நிகர்த்த பெண்மையின் துன்பத்தில் ஒரு மண்ணின் அளவே இப்பதிவு.

எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்குதல் வேண்டும். காலம் எங்கள் கைகளில்கூட சில கடமைகளை திணித்திருக்கிறது. பெண்படைப்பாளிகளே! உங்களை வெளியே கொண்டு வாருங்கள். சந்திக்கு வராத சங்கதிகள் உங்கள் சிந்தைக்குள் அடையுண்டு கிடக்கும். அவையெல்லாம் வெளிக் கொணரவேண்டும்

சகாரா சும்மா பகிடிக்குத்தானே இதை எழுதினனீங்கள் :):lol:

சாத்திரியாரே! எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசவேண்டும் என்றால் உங்களுக்குப் பகிடியாக தெரிகிறதா? கால்களுக்கு அடியில் முட்களின் விரிப்பு. அகற்ற நினைத்தல் பகிடி அல்லவே.... காலக்கடமையை உணர்ந்து நிமிர்தல் கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை. வாழ்க்கையின் ஒவ்வொரு விளிம்பிலும், ஈழப்பெண்களின் வாழ்வியல் உலகெங்கிலும் இல்லாத வேதனைகளைச் சுமந்ததாக உள்ள யதார்த்தநிலைகளைப் பேசத் தவறும் ஒவ்வொரு பெண்ணும் தன்னினத்தின் அழிவிற்கு தானும் உடந்தையாகிறாள் என்பதே உண்மை.

தோழியரே! எனக்குத் தனிமடலில் சொல்லத் துணியும் உங்கள் வலிகளை வெளியே எடுத்து வாருங்கள். நெஞ்சக் கூட்டிற்குள் வைத்துக் குமையும் ஒரு பொழுதை எழுதுகோல் முனைகளுக்குள் புகுத்துங்கள். வெளியே எங்கள் ஈழத் தமிழினத்தின் வலிகள் உணரப்படவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைக்காத மௌனங்கள் என்றும் ஆறாத காயங்கள்தான்.

உங்கள் சில நூறு வார்த்தைகளில் ஒரு கோடி வேதனைகளை உணர்கிறேன்.

நல்ல கவிதை-வாழ்த்துகிறேன் வல்வைசகாரா.

உண்மைதான் வணங்காமுடி கலைக்காத மெளனங்கள் ஆறாத ரணங்கள் என்பது முற்றிலும் உண்மையே. எனக்காகிலும் எழுதுகோல் இருக்கிறது என்வலிகளை, என் சுமையை இறக்கி வைக்க ஒருசில நண்ப,நண்பியர் உள்ளனர் ஆனால் பலருக்கு அப்பாக்கியம் கிடையாது. வேதனைகளை, இழப்புகளை வெளியோ சொல்லவும் முடியாமல், மனதோடும் சுமக்க முடியாமல் திண்டாடுவோரைப் பார்த்திருக்கிறேன். சிலரோடு உரையாடி அவர்களின் சுமைதாங்கியாகவும் இருந்திருக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி வணங்காமுடி.

Link to comment
Share on other sites

சாத்திரியாரே! எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசவேண்டும் என்றால் உங்களுக்குப் பகிடியாக தெரிகிறதா? கால்களுக்கு அடியில் முட்களின் விரிப்பு. அகற்ற நினைத்தல் பகிடி அல்லவே.... காலக்கடமையை உணர்ந்து நிமிர்தல் கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை. வாழ்க்கையின் ஒவ்வொரு விளிம்பிலும், ஈழப்பெண்களின் வாழ்வியல் உலகெங்கிலும் இல்லாத வேதனைகளைச் சுமந்ததாக உள்ள யதார்த்தநிலைகளைப் பேசத் தவறும் ஒவ்வொரு பெண்ணும் தன்னினத்தின் அழிவிற்கு தானும் உடந்தையாகிறாள் என்பதே உண்மை.

தோழியரே! எனக்குத் தனிமடலில் சொல்லத் துணியும் உங்கள் வலிகளை வெளியே எடுத்து வாருங்கள். நெஞ்சக் கூட்டிற்குள் வைத்துக் குமையும் ஒரு பொழுதை எழுதுகோல் முனைகளுக்குள் புகுத்துங்கள். வெளியே எங்கள் ஈழத் தமிழினத்தின் வலிகள் உணரப்படவேண்டும்

சகாரா இப்ப சண் ரி வி இலவசமாய் போகுது அதைவிட கலைஞர் ரிவி வேறை இலவசமாய் போகுது அதிலை மானாட மயிலாட எண்டொரு நிகழ்ச்சி போகுது சும்மா சொல்லக்கூடாது பெடியள் பெட்டையள் என்னமாய் ஆடுகினம் அதைவிடஅதிலை லக்சுமி எண்டொரு சீரியல் வேறை போகுது அதிலை எங்கடை மீனாதான் நாயகி இதுவரை சினிமா சின்னத்திரையிலை சொல்லாத ஒரு புதுவிதமான கதை அதாவது அவா ஒருத்தரை லவ் பண்ணுறா அது அவாவின்ரை தகப்பனுக்கு பிடிக்காமல் அவர் வேறை ஒரு கலியாணம் பேசுறார் ஆனால் அவா யாரை கலியாணம் செய்யப்போறா எண்டதுதான் இப்ப பிரச்சனை முடிவு தெரிய எப்பிடியும் ஒரு இரண்டு வருசமாகும்.இதுகளை விட்டிட்டு பெண்களை எங்கடை பிரச்சனையை எழுதுங்கோ எண்டால் அது பகிடி எண்டாமல் வேறை என்னத்தை சொல்லுறது. முடிஞ்சால் நீங்கள் ஒரு பத்து பெண்களை வேண்டாம் ஒரு 5 பெண்களையாவது எங்கடை பிரச்சனை பற்றி வெளியாலை கதைக்க எழுதப் பண்ணுங்கோ நான் உங்களிட்டை பகிங்கமாய் மன்னிப்பு கேட்டு நான் ஒதுங்கிறன். முடியாட்டி இனிமேல் நீங்கள் இந்தப் பக்கம் வரக்கூடாது. அப்பிடியே ஓடிடவேணும். <_<:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா இப்ப சண் ரி வி இலவசமாய் போகுது அதைவிட கலைஞர் ரிவி வேறை இலவசமாய் போகுது அதிலை மானாட மயிலாட எண்டொரு நிகழ்ச்சி போகுது சும்மா சொல்லக்கூடாது பெடியள் பெட்டையள் என்னமாய் ஆடுகினம் அதைவிடஅதிலை லக்சுமி எண்டொரு சீரியல் வேறை போகுது அதிலை எங்கடை மீனாதான் நாயகி இதுவரை சினிமா சின்னத்திரையிலை சொல்லாத ஒரு புதுவிதமான கதை அதாவது அவா ஒருத்தரை லவ் பண்ணுறா அது அவாவின்ரை தகப்பனுக்கு பிடிக்காமல் அவர் வேறை ஒரு கலியாணம் பேசுறார் ஆனால் அவா யாரை கலியாணம் செய்யப்போறா எண்டதுதான் இப்ப பிரச்சனை முடிவு தெரிய எப்பிடியும் ஒரு இரண்டு வருசமாகும்.இதுகளை விட்டிட்டு பெண்களை எங்கடை பிரச்சனையை எழுதுங்கோ எண்டால் அது பகிடி எண்டாமல் வேறை என்னத்தை சொல்லுறது. முடிஞ்சால் நீங்கள் ஒரு பத்து பெண்களை வேண்டாம் ஒரு 5 பெண்களையாவது எங்கடை பிரச்சனை பற்றி வெளியாலை கதைக்க எழுதப் பண்ணுங்கோ நான் உங்களிட்டை பகிங்கமாய் மன்னிப்பு கேட்டு நான் ஒதுங்கிறன். முடியாட்டி இனிமேல் நீங்கள் இந்தப் பக்கம் வரக்கூடாது. அப்பிடியே ஓடிடவேணும். :D:huh:

ஆ... சாத்திரியாரே!...சவாலா? :lol:

எங்கள் பெண்களில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா? <_<

இப்படிப் பகிரங்க மன்னிப்புக் கேட்பேன் என்று எழுதி இருக்கிறீர்கள்....

சாத்திரியாரே, எதற்கும் ஒரு நாள் அவகாசம் தாருங்கள். சவாலை ஏற்றுக் கொள்ளுமுன் யாழ்க்களத்தோழியர் யாரேனும் கை கொடுப்பார்களா என்று பார்த்து வருகிறேன். என்னைப் பார்த்தால் ரொம்பப் பாவமா...... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... சாத்திரியாரே!...சவாலா? :lol:

எங்கள் பெண்களில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா? <_<

இப்படிப் பகிரங்க மன்னிப்புக் கேட்பேன் என்று எழுதி இருக்கிறீர்கள்....

சாத்திரியாரே, எதற்கும் ஒரு நாள் அவகாசம் தாருங்கள். சவாலை ஏற்றுக் கொள்ளுமுன் யாழ்க்களத்தோழியர் யாரேனும் கை கொடுப்பார்களா என்று பார்த்து வருகிறேன். என்னைப் பார்த்தால் ரொம்பப் பாவமா...... :D

எழுதவும் கதைக்கவும் வேண்டாம் ,எமது பிரச்சனைகளைப்பற்றி கதைக்கிற புருசன்மாரை திட்டாமல் இருந்தாலே பெரிய உபகாரமாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதவும் கதைக்கவும் வேண்டாம் ,எமது பிரச்சனைகளைப்பற்றி கதைக்கிற புருசன்மாரை திட்டாமல் இருந்தாலே பெரிய உபகாரமாக இருக்கும்

புத்தன் உங்கள் வீட்டில் இப்படி வேறு பிரச்சினையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முதல் வலி எமது இனத்தின் விதி.ஆணால் இங்கு வேறும் பல வலிகள் இருக்ின்றனவே அதுவும் எம்மினத்தின் விதிதான் <_<

எழுதவும் கதைக்கவும் வேண்டாம் ,எமது பிரச்சனைகளைப்பற்றி கதைக்கிற புருசன்மாரை திட்டாமல் இருந்தாலே பெரிய உபகாரமாக இருக்கும்

புத்து, புரட்ச்சி வீட்டில அதுவும் புருசனிட்ட இருந்து தான் ஆரம்பிக்க வேனும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... சாத்திரியாரே!...சவாலா? :lol:

எங்கள் பெண்களில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா? :)

இப்படிப் பகிரங்க மன்னிப்புக் கேட்பேன் என்று எழுதி இருக்கிறீர்கள்....

சாத்திரியாரே, எதற்கும் ஒரு நாள் அவகாசம் தாருங்கள். சவாலை ஏற்றுக் கொள்ளுமுன் யாழ்க்களத்தோழியர் யாரேனும் கை கொடுப்பார்களா என்று பார்த்து வருகிறேன். என்னைப் பார்த்தால் ரொம்பப் பாவமா...... :D

சாத்திரியாரே! நான் வெற்றிகரமாக சவாலுக்கு வரவில்லை என்று ஒதுங்கிக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

சாத்திரியாரே! நான் வெற்றிகரமாக சவாலுக்கு வரவில்லை என்று ஒதுங்கிக் கொள்கிறேன்.

போய் பேசாமல் மானாட மயிலாட வை பாருங்கோ :):lol:

Link to comment
Share on other sites

  • 10 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/23/2008 at 5:19 PM, sathiri said:

 

போய் பேசாமல் மானாட மயிலாட வை பாருங்கோ :):lol:

?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.