Jump to content

மெளனங்கள் கலைகின்றன -2


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மௌனங்கள் கலைகின்றன - 2

1-1445640-4552-t.jpg

முட்டிய விழிகளும், முதல்வலியும்

வெண்ணிலவும், விண்மீன்களும் வெட்கமின்றிப் பார்க்கக் கூரை ஆடையின்றி, அம்மணமாகவும்,

கரிய அழுக்குடனும் தங்கமண் தாம்பாளத்தில் என்வீடு.

அப்பப்போ மேகங்கள் வடிக்கும் கண்ணீரில்,

வானம் பார்த்த என்னில்லம் இல்லாத ஒட்டடையையும், தன்மேல் படிந்திருக்கும் கரியையும் கழுவிக் கொள்ளும்.

எரிகாயங்கள் வடுக்களாக காலடியில் மேடுபள்ளமாக நவீன ஓவியங்கள்போல் சிந்தனைகள் பலவற்றைத் தூண்டும்.

அதே நேரம் மேகத்தின் கசிவை இந்தப்பள்ளங்கள் நான், நீ என்று போட்டிபோட்டு ஏந்தி ஜதியிடும்.

கதிரவனுக்குக் கோபம் வந்தால் பாதங்களைத் தொப்பளிக்கவே படைக்கப்பட்டதுபோல்

நான் தவழ்ந்த அந்த உள்வீட்டுத் தரை சூரிய அடுப்பாக மாறிவிடும்.

ஒரு ஆறுதல் இன்னும் இடியாமல் வெடிப்புகளுடன் நிமிர்ந்து நிற்கும் பிளாட்,

கொஞ்சம் இயற்கையிடம் இருந்து எல்லா நேரமும் என்றில்லாவிடினும்

பல சமயங்களில் பாதுகாப்புத்தரும் தேவதையாகத் இன்று வரைக்கும் திகழ்கிறது.

அன்றிரவு மட்டும் அந்தக் காலநிலைக் குழப்பம் அந்த பெருமழையைத் தோற்றுவிக்காது விட்டிருந்தால்

என்னினத்தின் வலியை நான் முதன்முதலாக உணரும் காரணி வேறு ஏதாவதாக இருந்திருக்கும்.

ஏப்போதுமே வாழ்வில் ஏற்படும் முதல் அனுபவம் என்பது பசுமரத்தாணிபோல் மனக்கூட்டுக்குள் பதிந்துவிடும்.

இதுவும் அப்படித்தான்...

முதல் காதல், முதல் முத்தம் என்று இன்பியல் பக்கம் போவதற்கு முன் நிறையவே விடயங்களை இங்கு எழுத இருக்கிறது.

கிளுகிளுப்புக் கதைகளை வாசித்த பலர் இங்கு வாசிக்கக்கூடும். இவ்வனுபவப் பகிர்வில் கிளுகிளுப்புத் தேடவேண்டாம்.

பெண்மையின் பருவமாற்றங்கள்கூட இன்றைய தமிழீழப் பெண்களுக்கு

எவ்வளவு சோதனையாக அமைகிறது என்பதற்கு ஒரு சாட்சியம் அவ்வளவுதான்.

இது அந்நாள் வலி. இந்நாளில் இதன் வடிவம், வலி எல்லாம் பேசப்படாப் பொருளாக

ஒவ்வொருவருக்குள்ளும் ஆழப்புதையுண்டபடி, எம்மினம் வாழ்விற்கான யாசிப்பையே பிரதானமாகக் கொண்டதாக நகர்கிறது.

ஆகாயம் பார்த்துக்கிடந்த என்வீட்டின்மேல், அந்த நடுச்சாமத்து மழை அனுமதியின்றி நுழைய

நடுவீட்டில் குளம் ஒன்று தன்னை உருவமைக்க, அடங்கமாட்டேன் என்று நாலாபக்கமும் தண்ணீர் கட்டுடைத்துப் பாய,

அப்பப்போ பாதுகாப்புத்தரும் பிளாட் பகுதியின் நிலமெல்லாம் புனல் விரிந்து பரவி வழிதேடி ஓடியது.

நான் படுத்திருந்த பாயை நனைத்து ஓடிய நீரில் மட்டும் செம்மை தன்னை கரைத்தோடி

சற்றுத் தள்ளிப் படுத்திருந்த என் தாய், தந்தையையும் நனைத்து நகர்ந்தது.

பூப்படைந்த இருநாள் பருவமகளாக அனுபவமில்லா அணிகளுடன்

அந்த எரிந்தவீட்டின் ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த என்னை நனைத்த மழைநீர்

என் பருவமாற்றத்தின் உதிரத்துளிகளைக் கரைத்து என் பெற்றேரை நனைத்த அந்தப் பொழுது,

அவமானம் பிடுங்கித் தின்ன முட்டிய விழிகளுடன் முதன்முதல் என்னினத்தின் வாழ்வை எண்ணி என்னுள்ளம் முதல்வலி ஏந்தியது.

Link to comment
Share on other sites

கதையை வாசித்து மெளனிக்க வைத்து விட்டியள் சகாரா அக்கா..கா..தொடரட்டும் தங்களின் மெளனங்கள் கரைகின்ற அத்தியாங்கள்.. :o

வெண்ணிலவும், விண்மீன்களும் வெட்கமின்றிப் பார்க்கக் கூரை ஆடையின்றி, அம்மணமாகவும்,

கரிய அழுக்குடனும் தங்கமண் தாம்பாளத்தில் என்வீடு.

கதையில் இந்த வரிகள்..மிக அழகு சகாரா அக்கா..கா..!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனம் படும் வலிகளுக்கு ஒரு எல்லையே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான பதிவு வாழ்த்துக்கள். எத்தனையோ எம் ஈழத்து பெண்கள் அளவில்லா துன்பத்தை அனுபவிக்கிறார்கள் அதுக்கு எல்லாம் விடிவு வரும் காலம் வெகு தூரமில்லை.

Link to comment
Share on other sites

அவமானம் பிடுங்கித் தின்ன முட்டிய விழிகளுடன் முதன்முதல் என்னினத்தின் வாழ்வை எண்ணி என்னுள்ளம் முதல்வலி ஏந்தியது.

சொல்லெணா துயரங்களை நெஞ்சில் சுமந்து வாழும் எமது மக்களின் விடிவு வெகு தூரத்தில்ல் இல்லை. நன்றி, சகாறா பதிவுக்கு. மேலும் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமுனன், புத்தன், சுப்பண்ணை, நுணாவிலான் உங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி உரைத்தேன்.

இச்சம்பவம் இரு தசமங்களுக்கு முந்தையகாலம்... பிற்பட்ட காலத்தில் பெண்கள் என்ற நிலையில் எங்கள் பெண்கள் சந்தித்த வலிகளும் அவமானங்களும் ஏராளம். மலை நிகர்த்த பெண்மையின் துன்பத்தில் ஒரு மண்ணின் அளவே இப்பதிவு.

எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்குதல் வேண்டும். காலம் எங்கள் கைகளில்கூட சில கடமைகளை திணித்திருக்கிறது. பெண்படைப்பாளிகளே! உங்களை வெளியே கொண்டு வாருங்கள். சந்திக்கு வராத சங்கதிகள் உங்கள் சிந்தைக்குள் அடையுண்டு கிடக்கும். அவையெல்லாம் வெளிக் கொணரவேண்டும்

Link to comment
Share on other sites

யமுனன், புத்தன், சுப்பண்ணை, நுணாவிலான் உங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி உரைத்தேன்.

இச்சம்பவம் இரு தசமங்களுக்கு முந்தையகாலம்... பிற்பட்ட காலத்தில் பெண்கள் என்ற நிலையில் எங்கள் பெண்கள் சந்தித்த வலிகளும் அவமானங்களும் ஏராளம். மலை நிகர்த்த பெண்மையின் துன்பத்தில் ஒரு மண்ணின் அளவே இப்பதிவு.

எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்குதல் வேண்டும். காலம் எங்கள் கைகளில்கூட சில கடமைகளை திணித்திருக்கிறது. பெண்படைப்பாளிகளே! உங்களை வெளியே கொண்டு வாருங்கள். சந்திக்கு வராத சங்கதிகள் உங்கள் சிந்தைக்குள் அடையுண்டு கிடக்கும். அவையெல்லாம் வெளிக் கொணரவேண்டும்

சகாரா சும்மா பகிடிக்குத்தானே இதை எழுதினனீங்கள் :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைக்காத மௌனங்கள் என்றும் ஆறாத காயங்கள்தான்.

உங்கள் சில நூறு வார்த்தைகளில் ஒரு கோடி வேதனைகளை உணர்கிறேன்.

நல்ல கவிதை-வாழ்த்துகிறேன் வல்வைசகாரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமுனன், புத்தன், சுப்பண்ணை, நுணாவிலான் உங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி உரைத்தேன்.

இச்சம்பவம் இரு தசமங்களுக்கு முந்தையகாலம்... பிற்பட்ட காலத்தில் பெண்கள் என்ற நிலையில் எங்கள் பெண்கள் சந்தித்த வலிகளும் அவமானங்களும் ஏராளம். மலை நிகர்த்த பெண்மையின் துன்பத்தில் ஒரு மண்ணின் அளவே இப்பதிவு.

எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்குதல் வேண்டும். காலம் எங்கள் கைகளில்கூட சில கடமைகளை திணித்திருக்கிறது. பெண்படைப்பாளிகளே! உங்களை வெளியே கொண்டு வாருங்கள். சந்திக்கு வராத சங்கதிகள் உங்கள் சிந்தைக்குள் அடையுண்டு கிடக்கும். அவையெல்லாம் வெளிக் கொணரவேண்டும்

சகாரா சும்மா பகிடிக்குத்தானே இதை எழுதினனீங்கள் :):lol:

சாத்திரியாரே! எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசவேண்டும் என்றால் உங்களுக்குப் பகிடியாக தெரிகிறதா? கால்களுக்கு அடியில் முட்களின் விரிப்பு. அகற்ற நினைத்தல் பகிடி அல்லவே.... காலக்கடமையை உணர்ந்து நிமிர்தல் கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை. வாழ்க்கையின் ஒவ்வொரு விளிம்பிலும், ஈழப்பெண்களின் வாழ்வியல் உலகெங்கிலும் இல்லாத வேதனைகளைச் சுமந்ததாக உள்ள யதார்த்தநிலைகளைப் பேசத் தவறும் ஒவ்வொரு பெண்ணும் தன்னினத்தின் அழிவிற்கு தானும் உடந்தையாகிறாள் என்பதே உண்மை.

தோழியரே! எனக்குத் தனிமடலில் சொல்லத் துணியும் உங்கள் வலிகளை வெளியே எடுத்து வாருங்கள். நெஞ்சக் கூட்டிற்குள் வைத்துக் குமையும் ஒரு பொழுதை எழுதுகோல் முனைகளுக்குள் புகுத்துங்கள். வெளியே எங்கள் ஈழத் தமிழினத்தின் வலிகள் உணரப்படவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைக்காத மௌனங்கள் என்றும் ஆறாத காயங்கள்தான்.

உங்கள் சில நூறு வார்த்தைகளில் ஒரு கோடி வேதனைகளை உணர்கிறேன்.

நல்ல கவிதை-வாழ்த்துகிறேன் வல்வைசகாரா.

உண்மைதான் வணங்காமுடி கலைக்காத மெளனங்கள் ஆறாத ரணங்கள் என்பது முற்றிலும் உண்மையே. எனக்காகிலும் எழுதுகோல் இருக்கிறது என்வலிகளை, என் சுமையை இறக்கி வைக்க ஒருசில நண்ப,நண்பியர் உள்ளனர் ஆனால் பலருக்கு அப்பாக்கியம் கிடையாது. வேதனைகளை, இழப்புகளை வெளியோ சொல்லவும் முடியாமல், மனதோடும் சுமக்க முடியாமல் திண்டாடுவோரைப் பார்த்திருக்கிறேன். சிலரோடு உரையாடி அவர்களின் சுமைதாங்கியாகவும் இருந்திருக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி வணங்காமுடி.

Link to comment
Share on other sites

சாத்திரியாரே! எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசவேண்டும் என்றால் உங்களுக்குப் பகிடியாக தெரிகிறதா? கால்களுக்கு அடியில் முட்களின் விரிப்பு. அகற்ற நினைத்தல் பகிடி அல்லவே.... காலக்கடமையை உணர்ந்து நிமிர்தல் கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை. வாழ்க்கையின் ஒவ்வொரு விளிம்பிலும், ஈழப்பெண்களின் வாழ்வியல் உலகெங்கிலும் இல்லாத வேதனைகளைச் சுமந்ததாக உள்ள யதார்த்தநிலைகளைப் பேசத் தவறும் ஒவ்வொரு பெண்ணும் தன்னினத்தின் அழிவிற்கு தானும் உடந்தையாகிறாள் என்பதே உண்மை.

தோழியரே! எனக்குத் தனிமடலில் சொல்லத் துணியும் உங்கள் வலிகளை வெளியே எடுத்து வாருங்கள். நெஞ்சக் கூட்டிற்குள் வைத்துக் குமையும் ஒரு பொழுதை எழுதுகோல் முனைகளுக்குள் புகுத்துங்கள். வெளியே எங்கள் ஈழத் தமிழினத்தின் வலிகள் உணரப்படவேண்டும்

சகாரா இப்ப சண் ரி வி இலவசமாய் போகுது அதைவிட கலைஞர் ரிவி வேறை இலவசமாய் போகுது அதிலை மானாட மயிலாட எண்டொரு நிகழ்ச்சி போகுது சும்மா சொல்லக்கூடாது பெடியள் பெட்டையள் என்னமாய் ஆடுகினம் அதைவிடஅதிலை லக்சுமி எண்டொரு சீரியல் வேறை போகுது அதிலை எங்கடை மீனாதான் நாயகி இதுவரை சினிமா சின்னத்திரையிலை சொல்லாத ஒரு புதுவிதமான கதை அதாவது அவா ஒருத்தரை லவ் பண்ணுறா அது அவாவின்ரை தகப்பனுக்கு பிடிக்காமல் அவர் வேறை ஒரு கலியாணம் பேசுறார் ஆனால் அவா யாரை கலியாணம் செய்யப்போறா எண்டதுதான் இப்ப பிரச்சனை முடிவு தெரிய எப்பிடியும் ஒரு இரண்டு வருசமாகும்.இதுகளை விட்டிட்டு பெண்களை எங்கடை பிரச்சனையை எழுதுங்கோ எண்டால் அது பகிடி எண்டாமல் வேறை என்னத்தை சொல்லுறது. முடிஞ்சால் நீங்கள் ஒரு பத்து பெண்களை வேண்டாம் ஒரு 5 பெண்களையாவது எங்கடை பிரச்சனை பற்றி வெளியாலை கதைக்க எழுதப் பண்ணுங்கோ நான் உங்களிட்டை பகிங்கமாய் மன்னிப்பு கேட்டு நான் ஒதுங்கிறன். முடியாட்டி இனிமேல் நீங்கள் இந்தப் பக்கம் வரக்கூடாது. அப்பிடியே ஓடிடவேணும். <_<:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா இப்ப சண் ரி வி இலவசமாய் போகுது அதைவிட கலைஞர் ரிவி வேறை இலவசமாய் போகுது அதிலை மானாட மயிலாட எண்டொரு நிகழ்ச்சி போகுது சும்மா சொல்லக்கூடாது பெடியள் பெட்டையள் என்னமாய் ஆடுகினம் அதைவிடஅதிலை லக்சுமி எண்டொரு சீரியல் வேறை போகுது அதிலை எங்கடை மீனாதான் நாயகி இதுவரை சினிமா சின்னத்திரையிலை சொல்லாத ஒரு புதுவிதமான கதை அதாவது அவா ஒருத்தரை லவ் பண்ணுறா அது அவாவின்ரை தகப்பனுக்கு பிடிக்காமல் அவர் வேறை ஒரு கலியாணம் பேசுறார் ஆனால் அவா யாரை கலியாணம் செய்யப்போறா எண்டதுதான் இப்ப பிரச்சனை முடிவு தெரிய எப்பிடியும் ஒரு இரண்டு வருசமாகும்.இதுகளை விட்டிட்டு பெண்களை எங்கடை பிரச்சனையை எழுதுங்கோ எண்டால் அது பகிடி எண்டாமல் வேறை என்னத்தை சொல்லுறது. முடிஞ்சால் நீங்கள் ஒரு பத்து பெண்களை வேண்டாம் ஒரு 5 பெண்களையாவது எங்கடை பிரச்சனை பற்றி வெளியாலை கதைக்க எழுதப் பண்ணுங்கோ நான் உங்களிட்டை பகிங்கமாய் மன்னிப்பு கேட்டு நான் ஒதுங்கிறன். முடியாட்டி இனிமேல் நீங்கள் இந்தப் பக்கம் வரக்கூடாது. அப்பிடியே ஓடிடவேணும். :D:huh:

ஆ... சாத்திரியாரே!...சவாலா? :lol:

எங்கள் பெண்களில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா? <_<

இப்படிப் பகிரங்க மன்னிப்புக் கேட்பேன் என்று எழுதி இருக்கிறீர்கள்....

சாத்திரியாரே, எதற்கும் ஒரு நாள் அவகாசம் தாருங்கள். சவாலை ஏற்றுக் கொள்ளுமுன் யாழ்க்களத்தோழியர் யாரேனும் கை கொடுப்பார்களா என்று பார்த்து வருகிறேன். என்னைப் பார்த்தால் ரொம்பப் பாவமா...... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... சாத்திரியாரே!...சவாலா? :lol:

எங்கள் பெண்களில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா? <_<

இப்படிப் பகிரங்க மன்னிப்புக் கேட்பேன் என்று எழுதி இருக்கிறீர்கள்....

சாத்திரியாரே, எதற்கும் ஒரு நாள் அவகாசம் தாருங்கள். சவாலை ஏற்றுக் கொள்ளுமுன் யாழ்க்களத்தோழியர் யாரேனும் கை கொடுப்பார்களா என்று பார்த்து வருகிறேன். என்னைப் பார்த்தால் ரொம்பப் பாவமா...... :D

எழுதவும் கதைக்கவும் வேண்டாம் ,எமது பிரச்சனைகளைப்பற்றி கதைக்கிற புருசன்மாரை திட்டாமல் இருந்தாலே பெரிய உபகாரமாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதவும் கதைக்கவும் வேண்டாம் ,எமது பிரச்சனைகளைப்பற்றி கதைக்கிற புருசன்மாரை திட்டாமல் இருந்தாலே பெரிய உபகாரமாக இருக்கும்

புத்தன் உங்கள் வீட்டில் இப்படி வேறு பிரச்சினையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முதல் வலி எமது இனத்தின் விதி.ஆணால் இங்கு வேறும் பல வலிகள் இருக்ின்றனவே அதுவும் எம்மினத்தின் விதிதான் <_<

எழுதவும் கதைக்கவும் வேண்டாம் ,எமது பிரச்சனைகளைப்பற்றி கதைக்கிற புருசன்மாரை திட்டாமல் இருந்தாலே பெரிய உபகாரமாக இருக்கும்

புத்து, புரட்ச்சி வீட்டில அதுவும் புருசனிட்ட இருந்து தான் ஆரம்பிக்க வேனும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... சாத்திரியாரே!...சவாலா? :lol:

எங்கள் பெண்களில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா? :)

இப்படிப் பகிரங்க மன்னிப்புக் கேட்பேன் என்று எழுதி இருக்கிறீர்கள்....

சாத்திரியாரே, எதற்கும் ஒரு நாள் அவகாசம் தாருங்கள். சவாலை ஏற்றுக் கொள்ளுமுன் யாழ்க்களத்தோழியர் யாரேனும் கை கொடுப்பார்களா என்று பார்த்து வருகிறேன். என்னைப் பார்த்தால் ரொம்பப் பாவமா...... :D

சாத்திரியாரே! நான் வெற்றிகரமாக சவாலுக்கு வரவில்லை என்று ஒதுங்கிக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

சாத்திரியாரே! நான் வெற்றிகரமாக சவாலுக்கு வரவில்லை என்று ஒதுங்கிக் கொள்கிறேன்.

போய் பேசாமல் மானாட மயிலாட வை பாருங்கோ :):lol:

Link to comment
Share on other sites

  • 10 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/23/2008 at 5:19 PM, sathiri said:

 

போய் பேசாமல் மானாட மயிலாட வை பாருங்கோ :):lol:

?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.