Jump to content

டிசே தமிழனுக்கு விருது


Recommended Posts

இளங்கோ: வலைப்பதிவூடாக "டிசே தமிழனாக" அறியப்பட்டவர். கனடாவில் வசித்து வருகிறார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த ஓரு அகதி இளைஞன். யாழ் இணையக் கருத்துக்களம் ஊடாகவும் அவரது கவிதைகளை பலரும் வாசித்திருப்பர். அண்மையில் "நாடற்றவனின்் குறிப்புகள்" என்ற ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதைத் தொகுப்புக்குத்தான் தமிழகத்தில் ஏலாதி இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.

விருதுகளையும் பட்டங்களையும் விலைகொடுத்து வாங்கி தங்கள் பெயருக்குப் பின்னால் போலியாகக் காவித் திரிகிற இன்றைய கேடுகெட்ட தமிழ்ச் சமூகச் சூழலில், தன்னுடைய படைப்பினூடாக, தன்னுடைய கவிதைகளினூடாக ஒரு இலக்கிய விருதைப் பெற்றிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விடயமாகும். சக ஈழத்து இளைஞனாக, புலம்பெயர்ந்து வாழும் ஒரு அகதியாக நானும் பெருமைகொள்கிறேன். அவரை வாழ்த்துகிறேன். தொடர்ந்தும் தனது உணர்வுகளையும் எண்ணங்களையும் படைப்புக்களாக அவர் வெளிக்கொணரவேண்டும்.

thatstaml இணையத்தளத்தில் இதுதொடர்பாக வந்த தகவலையும் இங்கே இணைக்கிறேன். உங்கள் வாழ்த்துக்களையும் இளங்கோவுக்கு (டிசே தமிழனுக்கு) தெரிவியுங்கள். முடிந்தால் அவருடைய கவிதைத் தொகுப்பை வாங்கிப் படியுங்கள்.

தமிழச்சி தங்கபாண்டியன், இளங்கோ நூல்களுக்கு ஏலாதி விருது

தக்கலை: 2007-08ம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூல்களுக்கான ஏலாதி இலக்கிய விருது, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கனடா கவிஞர் இளங்கோ ஆகியோரின் நூல்களுக்கு கிடைத்ததது.

2007 - 08 களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84 கவிதை நூல்கள் இப்போட்டிக்கு வரப் பெற்றன.இரண்டுஅடுக்கு தேர்வின் அடிப்படையில் தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி கவிதை நூல் மற்றும் புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ஈழத்து இளம் படைப்பாளியான இளங்கோவின் நாடற்றவனின் குறிப்புகள் கவிதை நூல் ஏலாதி இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன.

ஆகஸ்ட்15ம் தேதி தக்கலையில் நடைபெற்ற ஏலாதி இலக்கிய விருது விழாவிற்கு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தலைமை தாங்கினார். அறிமுக உரையை கவிஞர் நட.சிவகுமார் நிகழ்த்தினார்.

குமரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்கவிஞர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்ட கவிதைப் பயிலரங்கத்தை பணித்திரு.பி.எஸ்.அருள் தொடங்கி வைத்தார்.

ஏலாதி இலக்கிய விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு தன்னுடைய கவிதைப் பகிர்வை வெளிப்படுத்தினார்.

'கோட்பாடுகளுக்குள் கவிதையை தேடாமல்.வாழ்க்கை அனுபவங்களுக்குள் கவிதையை கண்டுபிடிக்க வேண்டும். உதிரத்தின் நிணத்துடனும், வியர்வையின் கசகசப்புடனும், உழுத மண்ணின் பிரசிவிப்பு மூச்சுடனும், நான் பிறந்த கிராமத்தின் சகதியுடனும், வெக்கையுடனும் என் எழுத்து ஞாபகங்களாக விரிகிறது. அலாவுதீனின் பூதத்தை சின்ன குப்பிக்குள் அடைக்கும் மாயவித்தையாகவும் கவிதை உருமாறும் என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஏலாதி இலக்கிய விருதுக்கான ரூபாய் இரண்டாயிரத்துக்கான நன்கொடையையும் நினைவுப் பரிசினையும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் ,ஜி.எஸ்.தயாளன் ஆகியோர் வழங்கினர்.

குமாரசெல்வா,ஆர்.பிரேம்குமார்

,செல்சேவிஸ்,சிவசங்கர்,ஹாமீம் முஸ்தபா ஆன்டெனி ராஜாசிங், தர்மசிங் சிவராமன், விஜயகுமார், ஜே.ஆர்.வி.எட்வர்டு, சிறப்புவிருந்தினர் கே.ஏ.குணசேகரன், உள்ளிட்டவர்கள் கவிதை உரையாடலில் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவினரின் கிராமிய இசை, நிகழ்ச்சிக்கு அழகூட்டியது. தவில் நாயன கலைஞர்களுக்கு அரங்குக்கு வெளியே விளம்பரம் எதுவுமின்றி கவிஞர் தமிழச்சி நிதி உதவிகள் வழங்கினார்.

விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மல்லாங்கிணறு கிராமத்தை சார்ந்தவர். சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளரான தமிழச்சி இலங்கை புலம்பெயர் தமிழர்களின் படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் குறித்த முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.

இவரின் முதல் கவிதை தொகுப்பு எஞ்சோட்டுப் பெண். ஏலாதி விருது பெற்ற வனப்பேச்சி கவிதை தொகுப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதுபோல் ஏலாதி விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட ஈழத்துப் படைப்பாளியான நாடற்றவனின் குறிப்புகள் நூலாசிரியர் இளங்கோ யாழ்பாணம் அம்பனையில் பிறந்தவர். போர் மூர்க்கமாய் எழுந்தபோது உள்நாட்டிலேயே அகதியாக அலைந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர்.

போர்க்கால அவலங்களும் புலம்பெயர் வாழ்வின் அலைக்கழிதல்களும் இவரது நாடற்றவனின் குறிப்புகள் கவிதை நூலில் மெளன சாட்சியாய் பதிவாகி உள்ளன. இத் தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கவிஞர் இளங்கோ கனடாவிலிருந்து அனுப்பியிருந்த மின்னஞ்சல் உரை மிகவும் உருக்கமாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் இருந்தது.ஏலாதி இலக்கிய விருது விழாவில் வாசிக்கப்பட்ட அதன் ஒரு பகுதியை இங்கு தருகிறோம்

'சிறுவயதிலேயே உயிருக்காய் தப்பியோடி அகதி வாழ்க்கை பழக்கமாயிற்று விட்டது. பதினொரு வயதுக்குப் பிறகு முற்றாக நான் வாழ்ந்த ஊருக்கு போக முடியாத அளவுக்கு போர் மிக உக்கிரமாயிருந்தது.

இன்றைய காலகட்டத்தில் போர் நான் ஈழத்தில் வாழ்ந்த காலகட்டத்தைவிட இன்னும் பலமடங்கு உக்கிரமாய் பல நூர்றுக்கணக்கானவர்களை பலி கொண்டும், இடம் பெயரவும் செய்து கொண்டிருக்கும் போது எனக்காய் விதிக்கப்பட்ட அகதிவாழ்க்கையில் நான் 'ஆசீர்வதிக்கப்பட்டவன்'' என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் ஆகக் குறைந்தது உயிருக்காவது உத்திரவாதமளிக்கும் ஒரு நாட்டிலாவது வாழ்ந்து கொண்டிருக்க முடிகிறது. எறிகணை வீச்சினதோ, விமானத்தாக்குதலினதோ அச்சமில்லாது விரும்புகின்ற போது அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்க முடிகின்றது.

ஒரு புதியவனுக்கு அவன் யாரென்று அவனது பின்புலங்கள் அறியாது அவனது படைப்பை மட்டுமே முன்னிறுத்தி வழங்கப்படும் ஒரு விருது என்ற வகையில் ஏலாதி இலக்கிய விருதை மனமுவந்து ஏற்றுக் கொள்கின்றேன்.

இறுதியில் நான் சிறுவயதில் அகதியாய் அலைந்ததைவிட மிகக் கொடுமையான சூழ்நிலைக்குள் இன்று ஈழத்திலும் உலகெங்கிலும் சிறார்கள் அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அச்சிறார்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன். இன்னும் இவ்விருதுடன் வழங்கும் நன்கொடையை தமிழகத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஏதாவதொன்றுக்கு வழங்குமாறு என் சார்பில் இதைப் பெற்றுக் கொள்ளும் சாதிக்கிடம் கேட்டுக் கொள்கிறேன்'

ஏலாதி விருது வழங்கும் விழாவை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தக்கலை ஏற்பாடு செய்திருந்தது.

நன்றி: http://thatstamil.oneindia.in/art-culture/...et.html#cmntTop

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருதுகளையும் பட்டங்களையும் விலைகொடுத்து வாங்கி தங்கள் பெயருக்குப் பின்னால் போலியாகக் காவித் திரிகிற இன்றைய கேடுகெட்ட தமிழ்ச் சமூகச் சூழலில்,

திறமையை விட காசுக்கு.. புகழுக்கு.. அரசியலுக்கு.. பின்னணிக்கு அடிபணிந்து விருது வழங்குதல் தமிழகத்திலும் ஏராளம்..!

ஒரு ஈழத்தமிழனுக்கு கவித் துறையில் இலக்கிய விருது என்பது பாராட்டத்தக்கதே..! :rolleyes:

Link to comment
Share on other sites

புலம்பெயர்ந்து வாழும் ஒரு அகதியாக நானும் பெருமைகொள்கிறேன். அவரை வாழ்த்துகிறேன்

ஓம்

இந்த சின்னக்குட்டியும் வாழ்த்துகிறான்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல் வாழ்த்துக்கள் இளங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல படைப்புக்களை படைத்து பாராட்டுக்களை பெற வாழ்த்துகிறோம்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இளங்கோவுக்கு.

பட்டங்கள் கொடுப்பதும் வாங்குவதுமாக தமிழ்ப்படைப்பாளர்கள் என சொல்லிக்கொள்வோர் விழாவெடுத்து பட்டங்களை கௌரவிக்க சிறந்தொரு படைப்பை தந்துவிட்டு மௌனமாக தனது எழுத்துக்களை தந்து கொண்டிருக்கும் இளங்கோவுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைப்புத் தொடர்பாகப் பாராட்டுங்கள்.. அடுத்தவன் என்ன செய்யுறான்.. இவர் என்னத்தில வேறுபடுறார் என்ற கற்பனைகளை விட்டிட்டு.. படைப்புத் தொடர்பில்.. அவரைப் பாராட்டுங்கள். இவரும் நாளைக்கு.. ஏன் இன்றைக்கே உந்த விருதுகளுக்கு அடிமையாகக் கூடும்...!

எனவே அடுத்தவையோட ஒப்பிடுறதை விட்டிட்டு.. விருது பெற்ற இருவரும்..(ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் எனினும்.. புலம்பெயர் தமிழ் மக்களின் இலக்கியப் படைப்புக்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்தவர்) புலம்பெயர் தமிழ் மக்களின் வாழ்வியல் பற்றிய இலக்கியப்படைப்புக்களுக்காக விருது பெற்றுள்ளனர் என்பதை அதுவும் தமிழக கவிஞர்களால் தெரிவாக்கப்பட்டுள்ளனர் என்பதை முன்னிலைப்படுத்தி வாழ்த்துங்கள். அப்படியான படைப்புக்களை வெளியிட இன்னும் ஊக்குவியுங்கள்.

அதைவிடுத்து.. அடுத்தவன் எப்படி விருதுவாங்கினான்.. பட்டம் வாங்கினான் என்று ஒவ்வொருவரும் தமக்குள் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப அடுத்தவர்களை குறைத்துக் காட்டி மகிழும் கீழ்த்தரமான வகையில் பாராட்டுக்களைச் செய்வதைத் தவிருங்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இளங்கோ.தொடரட்டும் உங்கள் படைப்புகள்

Link to comment
Share on other sites

போற்றுவார் போற்றினாலும் தூற்றுவார் தூற்றினாலும் தரமான படைப்புக்களும் அவற்றைப் படைக்கும் படைப்பாளிகளையும் என்றோ ஒரு நாள் உலகம் கண்டு கொள்ளும்.

முன்னர் ஒரு தடவை டிசேயின் கவிதை ஒன்றை யாழ்க்களத்தில் இணைத்த போது அது பெரும் சர்ச்சையைக் கிழறி விட்டது.கவிதையைப் பிழையாக விளங்கிக்கொண்ட பெண்கள் சிலர் என்னோடு மல்லுக்கு நிண்றனர்.அதற்கு வேறு காரணக்களும் இருந்திருக்கலாம்.இப்போது அவர்களைக் காணவில்லை, டிசேயின் கவிதைகளுக்கு விருது கிடைத்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஒரு தடவை டிசேயின் கவிதை ஒன்றை யாழ்க்களத்தில் இணைத்த போது அது பெரும் சர்ச்சையைக் கிழறி விட்டது.கவிதையைப் பிழையாக விளங்கிக்கொண்ட பெண்கள் சிலர் என்னோடு மல்லுக்கு நிண்றனர்.அதற்கு வேறு காரணக்களும் இருந்திருக்கலாம்.இப்போது அவர்களைக் காணவில்லை, டிசேயின் கவிதைகளுக்கு விருது கிடைத்திருக்கிறது.

இது முகவும் தவறான அர்த்தப்படுத்தல். ஒரு விருதின் அடிப்படையில் படைப்பாளியின் மொத்தப் படைப்புக்களும் தரமானவை.. இலக்கிய நயமானவை என்பது ஏற்கக் கூடியதல்ல.

எத்தனையோ தடவை விருதுகள் வென்ற பெருங் கவிஞர்கள் கூட கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். எனவே ஒரு விருதைக் காட்டி.. படைப்புக்கள் எல்லாம் தரமானவை என்ற அர்த்தப்படுத்தல்.. படைப்பாளி பற்றி தவறான எடை போடலுக்கே வகை செய்யும்..!

இளங்கோவுக்கு இந்த விருது.. வெறும் படைப்பை வழங்க மட்டும் சொல்லவில்லை.. அவரின் இலக்கியப் பணியில் அவருக்கு கூடிய பொறுப்பை உண்டு பண்ணி இருக்கும் என்று நம்பலாம்..! எனி படைப்புக்கள் மென்மேலும் மெருகூறும் என்றும் கருதலாம்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் சொன்னது சரியே (ஆதங்கம்)

நாரதர் சொன்னதும் சரியே (பாரட்டினது)

நெடுக்ஸ் சொன்னதும் சரியே (மாற்றுகருத்து)

நான் ஜால்ரா போடுறதும் சரியே. :icon_idea:

Link to comment
Share on other sites

ஓ..அப்படியோ டகவலிற்கு நன்றி..றி இளைஞன்.. :D அது சரி இவர் யாழில வாற இளங்கோமாமாவா அல்லாட்டிக்கு பிறிதொரு நபரா..??.(யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கோ)..

ம்ம்..எங்கள் சகோதரன் ஒருவருக்கு விருது கிடைத்திருக்கிறது மகிழ்ச்சியான விடயம்..ம்.. :D

மற்றது..

சக ஈழத்து இளைஞனாக, புலம்பெயர்ந்து வாழும் ஒரு அகதியாக நானும் பெருமைகொள்கிறேன்.

மேலே குறிப்பிட்டிருந்தீர்கள் "புலம் பெயந்து வாழும் ஒரு அகதியாக நான் பெருமைபடுகிறேன்" என்று சந்தோஷமான விசயம்..அது சரி இப்போது "ஈழத்து அகதி" என்று சுயதம்பட்டதிற்காக சிலர் அதனை சேர்ந்த்து கொள்கிறார்கள் போல் தெரிகிறது.. :lol:

நான் உங்களை குறை கூறவில்லை!!..பலரை உற்றுநோக்கிய பிரகாரம் இந்த கருத்தை தெரிவிக்கிறேன்..!!

விருதுகளையும்,பட்டங்களையும் பெயருக்கு பின்னால் விலை கொடுத்து காவி திரிவதும் ஒன்று தான் இப்படி "ஈழத்து அகதி" என்று கூறி சுயதம்பட்டம் அடிப்பது என் பார்வையில் ஒன்று தான்..ன். :D

சரி..இளைஞன் கண்டிப்பா அவரின்ட புத்தகத்தை வாங்கி படிக்கிறன் மற்றது தாங்கள் அவரை வாழ்த்த சொன்னபடியால் என்னுடைய வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்.. :icon_idea:

ஆனால் பாருங்கோ..!!

யாழ்களத்திள் கூட..ட எத்தனையோ நல்ல..ல படைப்பாளிகள் இருக்கீனம்..ம்..(உங்கள் பார்வையில் படைப்பாளிகாக அர்த்தம் எனக்கு புரியவில்லை)..நாலு பேர் மத்தியில ஏற்கனவே பிரபலயமான ஆட்கள் தான் உங்கள் பார்வைக்கு படைப்பாளியாக தெரியுமோ நான் அறியேன்.. :(

முடிந்தால்..யாழ்களத்திள் இருக்கும் படைப்பாளிகளுக்கு..கு உங்களாள் ஆன உற்சாகத்தையும்..ம் வாழ்த்துகளையும் தெரிவியுங்கோ..

ஏன் சொல்லுறன் எண்டால்..இங்க இருக்கிறவைக்கு நாளைக்கு விருது கிடைத்து அதுக்கு பிறகு நீங்க வந்து பாராட்டுறதில பிரயோசனமில்லை தானே இளைஞன்..ன்.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில விருதும்..விருந்தும் ஒன்னு தான்..இரண்டாலையும் மற்றவனுக்கு பிரயோசனமில்ல"

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்திள் கூட..ட எத்தனையோ நல்ல..ல படைப்பாளிகள் இருக்கீனம்..ம்..

முடிந்தால்..யாழ்களத்திள் இருக்கும் படைப்பாளிகளுக்கு..கு உங்களாள் ஆன உற்சாகத்தையும்..ம் வாழ்த்துகளையும் தெரிவியுங்கோ..

என்னை சொல்ல இல்லை தானே... :D. இல்லை சும்மா கேட்டனான்...... :icon_idea::D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிசே தமிழன் யாழ்களத்தில் எழுதுபவரா?.

புலம்பெயர் தமிழ் மக்களின் வாழ்வியல் பற்றிய இலக்கியப்படைப்புக்களுக்காக விருது பெற்ற திரு.இளங்கோ அவர்களுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை சொல்ல இல்லை தானே... :D. இல்லை சும்மா கேட்டனான்...... :icon_idea::D

:D எனக்கும் இப்படி ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்று ஆசையாக தான் இருக்குது :D:lol::(:D

Link to comment
Share on other sites

இளங்கோ: வலைப்பதிவூடாக "டிசே தமிழனாக" அறியப்பட்டவர். கனடாவில் வசித்து வருகிறார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த ஓரு அகதி இளைஞன். யாழ் இணையக் கருத்துக்களம் ஊடாகவும் அவரது கவிதைகளை பலரும் வாசித்திருப்பர். அண்மையில் "நாடற்றவனின்் குறிப்புகள்" என்ற ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதைத் தொகுப்புக்குத்தான் தமிழகத்தில் ஏலாதி இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.

வாழ்த்துகள் இளங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தமிழன்.

Link to comment
Share on other sites

வாழ்த்துகள்..!

அதுசரி, டிசே எண்டால் என்ன? :D

Link to comment
Share on other sites

என்னை சொல்ல இல்லை தானே... :lol:. இல்லை சும்மா கேட்டனான்...... :D :D

நான் உங்களையெண்டெல்லோ நினைச்சனான். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.