Jump to content

பாலை குறுந்தகடு = வ.ஐ.ச.ஜெயபாலன் New Message


Recommended Posts

இனித் தமிழர் அடிமையென தலை பணிவதில்லை என்ற பாடலை உங்களோடு சேர்ந்து பாடவேண்டுமென்று எனது மனம் விரும்புகிறது. பாலை இசை குறுந்தகட்டில் மிகவும் பிரபலமான 10வது படல் அது. வாசுகியுடன் சேர்ந்து பாலை இசை தட்டு வெளியிட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது. திரும்பிப் பார்க்கிறபோது பாலையாகிப்போன காலங்கள் வயிற்றினுள் பாம்புபோல நெழிகிறது. பழம்கனவாய்ப்போன இனத்தின் வாழ்வும் பாலையாகிவிட்டது. தனிப்பட என்னை அமுக்கிய பாலை கடன் சுமையை அடைக்க திரைத் துறைக்கு போக நேர்ந்ததது. என்னினும் 1996ல் ஆரம்பித்தது போலவே, ஜெயசுக்குறு தருணத்தில் தீவிரப் பட்டதுபோல எனது ஆய்வுப் பணிகளும் அறிக்கைகளும் தொடர்ந்தன. ஏனோ முன்போலலாமல் என் தோழர்கள் கேட்க்கவிம் பார்க்கவும் தவறிவிட்டனர். தைமாதமே தீப்பற்றிய புல்வெளியாய் என் தயகம் சாம்பல்மேடாகப் போவதை முன்னுணர்ந்து பாடுகமனமே http://www.yarl.com/forum3/index.php?showtopic=53138 கவிதையை எழுதினேன். மேற்படி கவிதை கலங்காதே தாய்மண்ணே என்ற தலைப்பில் இவ்வாரக் குமுதத்தில் வெளிவந்துள்ளது.

எனக்கு வாய்த்த ஒரே ஒரு புரவலரான எனது மனைவி வாசுகியும் தென் இந்திய பாடகர் அனந்துவும் பாடல்களைப் பாடி உள்ளனர். வாசுகியின் பேட்டியை பின்வரும் தளத்தில் கேட்கலாம்: http://www.radio.ajeevan.com/

நமது வாழ்வையும் போராட்டத்தையும் அதன் வரலாற்றுக் காவியத் தன்மை கெடாமல் எழுதுவதையே எனக்கு எங்சியுள்ள பணியாகக் காண்கிறேன். கடன்கள் அடைத்ததும் கலங்காதே தாய்மண்ணே என போராளிகளுக்கு அஞ்சலியும் அவர்களது கனவுகளுக்குக் கட்டியமுமாக இசைப் பேழை ஒன்று தயாரிக்கும் கனவு உள்ளது.

பாடலைக் கேட்பதற்க்கு இங்கே நெருடுங்கள்:

. http://voiceofthf.blogspot.com/2008_03_01_archive.html

அன்புடன்

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

visjayapalan@gmail.com

004722162235

அன்புடன்

.ஜெயபாலன்

Postbanken, Norway.

Shanmugampillai Jayapalan

Bank Account number. 0532 51 18328

Payment from abroad,

use the IBAN number : NO 6105325118328,

My paypal is : visjayapalan@gmail.com

பாடல்களை தரவேற்றம் செய்துகொள்ளுங்கள்

http://voiceofthf.blogspot.com/2008_03_01_archive.html

தயாரிப்பு வாசுகி ஜெயபாலன் + ஜெயபிரகாஸ் எரீம்

Link to comment
Share on other sites

பாலை குறுந்தகடு = வ.ஐ.ச.ஜெயபாலன்

அன்புக்குரிகுரிய யாழ்க்கள கவிதை ஆர்வலர்களுக்கு. கடந்த 4ம் திகதி சென்னைப் பல்கலைக் களகத் தமிழ் இலக்கிய துறையினரால் என்னுடைய பாலை குறுந்தகடு வெளியிடப் பட்டது. குறுந்தகட்டை பாலுமகேந்திரா வெளியிட்டுவைத்தார். பாடல்கள்பற்றியும் வாசுகியின் குரல் வளம்பற்றியும் பலுமஹேந்திராவும் கவிஞர் மேத்தாவும் கவிஞர் நா முத்துக்குமாருவும் சென்னைப் பல்கலைக்க் களக் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் டாக்டர் வி அரசுவும் பேசினார்கள். இசை இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் என்று சிலர் கருத்துரைத்தார்கள். இந்த தயரிப்புக்கு இந்தியப் பணம் 150000 ஒன்றரை இலட்சம் ருபா செலவாகிற்று. ஆனந்த விகடனில் பாலை விமர்சனக் குறிப்பு இடம்பெற்றுள்ளது. குறுந்தகட்டை யாழ் களம ஊடாக என்னரும் ஈழத்து மக்களுக்குச் சமர்ப்பிக்கிறதில் நானும் வாசுகியும் மகிழ்ச்சி அடைகிறோம். பாடல்கள் பிடித்து வசதியும் இருந்தால் மட்டும் உங்கள் அன்பளிப்பை எனது வங்கிக் கணக்கிற்க்கு அனுப்புங்கள் நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் - 1

புலரும் வேளையில் யன்னல் ஓரமாய்

கவிதை பாடுகின்ற தாரோ

பூக்கள் சிந்திடும் முல்லைப் பந்தரில்

பாக்கள் சூடுகின்றதாரோ - குயிலே

துயரம் தீயெனச் சுட்டபோதிலும்

சுடரும் பொன் உந்தன் வாழ்வு

பொழுது புலர்ந்தது எழுக கவிஞனே

என்று பாடுகின்றதாரோ - குயிலே

வசந்தம் உன்னிடம் சொன்ன சேதிகள்

எனக்கு சொல்லலாகாதா

கசந்த போர்க்களம் நாண மானிடம்

சேர்ந்து பாடக் கூடாதா - குயிலே

பாடல் - 2

கண்ணம்மா இந்த பனிகொட்டும் இரவினிலே

இலையற்ற தனிமரமாய் உன்னையே நினைத்திருந்தேன்

என்று உன் பூவிரல்கள் தீண்டிடுமோ என்று

ஏங்கிடும் வீணையைப் போல் துயருறுதே நெஞ்சம்

பூத்திடும் கனவினில் கானகங்கள் என்றும்

புலர்ந்திடும் வசந்தத்தின் கற்பனைகள்

தேற்றும் உன் காதலில் பாரதியின்

சிந்துகள் பாடிடும் ராத்திரிகள்

பாடல் -3

வெண்பனி மீது பொன்மலர் சூடும்

செங்கதிரோனை வாழ்த்துகிறோம்

கண்பனி சூடி எம் நினைவோடு

ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம்

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே

பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று

பாசத்தில் வாடும் நெஞ்சங்களே

பனியையும் மீறி பசுமையில் நிமிரும்

பைன்மரம் போன்ற சிங்கங்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே

பூமியில் என்றும் அகதிகள் என்று

புழுதி மண் போல சுழலுவதோ

தாயகம் மீண்டு துயர்களை வென்று

தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே

பாடல் - 4

மேலை அணைகளிலே கிழிந்து

மெலிந்த காவேரியாய்

ஏழைக் கவிமனசு ஒடிய

உன்மத்தம் கொண்டதென்ன

ஈழக்கரைகளிலே நலிந்து

ஏங்கிடும் அகதிகள் போல

வாழத்துடிக்குதடி நெஞ்சு வா

எனும் மந்திரச் சொல் கேட்டு

கண்ணில் மனசு உதிர உனது

காதலில் நான் எரிந்தேன்

உன்னில் உயிர் படர அதனை

உரித்துரித்தே எறிந்தாய்

ஐம்புல சிப்பியுள்ளே தைத்து

அறுத்திடும் விழிச்சுடரே

செம்புலப்பெயல் நீராய் நாங்கள்

சேர்ந்திடல் தர்மமடி

பாடல் - 5

வெண்பனி கொட்டும் காலையில் நாங்கள்

பள்ளிக்குப் போகையிலே

சின்னமுயல் என் அருகினில் வந்து ஹாய்

என்று சொல்லியது

ஹாய் ஹாய் ஹாய் ஹாய்

சின்ன முயலே சின்ன முயலே

பள்ளிக்கு போகலையா

முயல்களின் பள்ளி புல்வெளி தானே

உனக்கிது தெரியலையா

ஐயையோ புரியலையா

புல்வெளி எங்கும் வெண்பனி போர்வை

சாப்பிட ஏதும் இல்லை

அம்மா தந்த ரொட்டியில் பாதி

தந்திட தடையும் இல்லை

எமக்கினி கவலை இல்லை

பாடல் - 6

மாரி மழைக்கரத்தால்

பாய் விரிச்ச பச்சைப்புல்லு

பச்சைப்புல்லு சூடிக்கொண்டு

பவுசு காட்டும் வண்ணப்பூவு

சிட்டாகப் பறந்து வந்து

சிந்து பாடத் துடிக்குதடி

நீ எட்டாது போன பின்பும்

உன்னை நெஞ்சு நினைக்குதடி

கூதலாம் குழவிக் கூடு

குலைந்து போன வாடைக்காலம்

காதலாம் தங்கத் தோணி

கவிழ்ந்து போன வாழ்க்கைக் கோலம்

வண்டாகப் பறந்து வந்து

மலர்ச் சோலை நடுவினிலே

உன்னை எண்ணி உபவாசம்

இருக்கிறதே இன்பம் கண்ணே

நாளை ஒரு நாளையிலே

நடை வரம்பில் கோல மயில்

ஏழை என்னைக் காணக் கூடும்

இதயம் கொஞ்சம் நோகக் கூடும்

யார் மீதும் குற்றம் இல்லை

கோபம் கொள்ள ஞாயமில்லை

ஆலாய் விழுது விட்டு

அறுகாக வேர் பரப்பி

மூங்கிலாய்த் தோப்பாகி

வாழ வேண்டும் எந்தன் கண்ணே

பாடல் - 7

பொன்னாய் உருகும் மாலையிலே - முடி

புனைந்து அரசாளும் சூரியனே

தென்றல் காற்றின் மோகனமாய் - ஒரு

சிறு குயில் அழைப்பது கேட்கலையா

வானவில் கிண்ணத்தில் மது ஏந்தும் -இள

வாசமலர்களின் கனவுகளோ

வண்ணங்களாலே விண் திரையில் - நீ

வார்க்கிறதெல்லாம் கவிதைகளோ

பாடல் - 8

பயிரோ மழைக்கேங்கும் -கொடும்

பாலையோ நதியிடம் யாசிக்கும்

ஏழையின் காவியங்கள்

உயிர்த்திட உன்னிடம் கையேந்தும்

உயிரினில் இனித்திடவும்

உருக்கிடும் துயரெல்லாம்

அன்பே காதலால்

கருகிடவும்

யாழினை எடுத்தேனடா கண்ணா கண்ணா

இனி நதியென பெருகட்டும்

கவிதை என்றாய்

என் வாழ்க்கையின் தவப்பயனே -சொன்ன

மந்திர வார்த்தைகள் மறந்தனையோ

வானுக்குள் மதிபோல - அந்த

மதியினுள் சுடரும் செங்கதிர்போல

உன் யாழுக்குள் தேன்போல

என் ஊனுக்குள் உயிரானாய்

உள்ளத்தில் ஒளிர்கின்ற கவியானாய்

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

பாடல் -9

கள்ளெனக் கொட்டுதடி வள்ளி

கால வெளியினில் போதைநிலா

அள்ளுது வா வா என

அழைத்திடும் பூங்குயில் கவிமனசை

வாழ்வென்னும் இனிப்பையெல்லாம் அள்ளி

வார்க்குதே வசந்தத்தின் தேன் இரவு

மூழுதே மேனி எங்கும் தாபமாம்

இன்ப வேள்வியின் மோகனத்தீ

நினைவென்னும் நெருஞ்சி முள் பாலையிலே

நில்லென்று சொல்லி நீ போனதெங்கே

துணை வரும் நிலவுக்கே தெரியுமடி

என் நெஞ்சத்தில் நீயன்றி யாருமில்லை

பாடல் - 10

இனித் தமிழர் அடிமையென தலைபணிதல் இல்லை

இனித் தமிழர் கோழைகளின் வழிதொடர்தல் இல்லை

இனித் தமிழர் மானுடத்தின் விடுதலை என்றெழுந்தார்

இனித் தமிழர் உலகத்தின் விலங்குகளும் தகர்ப்பார்

சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ

சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்

பண்டாரவன்னியன் படை நடந்த காடு

பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

ஜாதி மத பேதமின்றி

செந்தமிழர் கூடி

நீதி நெறியோடு என்றும்

வெற்றி வாகை சூடி

பாங்கொலிக்கும் பள்ளி

பாடும் கோவில் மணிகள்

மங்களமாய் எங்களது

மண்ணில் வாழ்வு எழுக

சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ

சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்

பண்டாரவன்னியன் படை நடந்த காடு

பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே,

சில பாடல்களை இராஜ் இராஜரட்ணம் அவர்களின் குரலில் கேட்ட ஞாபகம்.

அப்படி ஏற்கனவே இவை(ஒரு சில) ஆண் குரலில் வெளிவந்தவையா?

Link to comment
Share on other sites

கவிஞரே,

சில பாடல்களை இராஜ் இராஜரட்ணம் அவர்களின் குரலில் கேட்ட ஞாபகம்.

அப்படி ஏற்கனவே இவை(ஒரு சில) ஆண் குரலில் வெளிவந்தவையா?

நன்றி பிரபா, கண்ணம்மா பாடல் இராஜ் இராஜரட்ணம் பாட கேட்டிருப்பீர்கள். உணர்வு சிந்தும் அவருடைய குரலை மறக்கமுடியுமா? இந்த தொகுப்பு வாசுகி சென்னையின் நின்ற கடைசி ஒருவாரத்தில் அவசரம் அவசரமாக எங்கள் திருமண 21ம் வருட நினைவாக உருவாக்கியது. குறுந்தட்டை வெளியிட்ட சென்னைப் பல்கலைக் களக தமிழ் இலக்கியத்துறை அரங்கில் வாசுகி என்னை 21 வருடங்கள் வத்திருப்பதன் நினைவாக என்று குறிப்பிட்டேன். உண்மை அதுதானே.

யாழ்க்கள நண்பர்கள் யாரும் word ஊனிக்கோட்டில் எழுதக்கூடிய எழுத்துரு font அனுப்பி உதவமுடியுமா.

Link to comment
Share on other sites

பாலை இசைத் தொகுப்பின் குறுந்தககட்டுப் பிரதி வேண்டுகிறவர்கள்மின்னஞ்சல்ம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைத்தொகுப்பு வாசித்தேன். நன்றாக இருக்கின்றது.பாடலுடன் மலர்ந்த கவிதை இலகுநடையில் யாரும் புரிந்து கொள்ளும் தக்கனவாக அமைந்திருப்பது சிறப்பைத்தருகிறது.

உன் யாழுக்குள் தேன்போல

என் ஊனுக்குள் உயிரானாய்

உள்ளத்தில் ஒளிர்கின்ற கவியானாய்

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

மாரி மழைக்கரத்தால்

பாய் விரிச்ச பச்சைப்புல்லு

பச்சைப்புல்லு சூடிக்கொண்டு

பவுசு காட்டும் வண்ணப்பூவு

சிட்டாகப் பறந்து வந்து

சிந்து பாடத் துடிக்குதடி

நீ எட்டாது போன பின்பும்

உன்னை நெஞ்சு நினைக்குதடி

அழகான வரிகள்.

வாழ்த்துகள்......

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

Link to comment
Share on other sites

உங்கள் கவிதைத்தொகுப்பு வாசித்தேன். நன்றாக இருக்கின்றது.பாடலுடன் மலர்ந்த கவிதை இலகுநடையில் யாரும் புரிந்து கொள்ளும் தக்கனவாக அமைந்திருப்பது சிறப்பைத்தருகிறது.

உன் யாழுக்குள் தேன்போல

என் ஊனுக்குள் உயிரானாய்

உள்ளத்தில் ஒளிர்கின்ற கவியானாய்

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

மாரி மழைக்கரத்தால்

பாய் விரிச்ச பச்சைப்புல்லு

பச்சைப்புல்லு சூடிக்கொண்டு

பவுசு காட்டும் வண்ணப்பூவு

சிட்டாகப் பறந்து வந்து

சிந்து பாடத் துடிக்குதடி

நீ எட்டாது போன பின்பும்

உன்னை நெஞ்சு நினைக்குதடி

அழகான வரிகள்.

வாழ்த்துகள்......

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

வணக்கம் கறுப்பி,

வணிக கலைஞர்களை மட்டுமே பேணுகிற இலங்கைத் தமிழர் மத்தியில் உங்களைப் போன்ற ஒரிருவர் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. வணிக வட்டத்துக்கு வெளியில் வாழும் கலைஞர்களின் செல்வாக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. நம்மவர் நிலை அதுவல்ல. என் இசைத் தொகுப்புப் பற்றி இரண்டு கருத்துக்கள் மட்டுமே எழுதப் பட்டாலும் அவை எனக்கு மிகவும் முக்கியமான கருத்துக்கள். உலகம் முழுவதும் கப்பல்களில் சுற்றினாலும் தங்கள் பாலையில் தங்கள் பாலையுடனேயே அரேபியர்கள் வாழ்ந்தார்கள் என் மனசும் அத்தகையதுதான். கலச்சாரப் பாலைதான். ஆனாலும் என்னுடைய பாலை.

Link to comment
Share on other sites

முரண்பாடுகளுன் நாம் வாழ்ந்தாலும் கவிதைவரிகளிற்கு நான் அடிமை. ஆழ்ந்த அனுபவம் வரிகளில் தெறிக்கின்றது. இசை பாடலை விழுங்கும் காலத்தில் பாடல் வரிகள் தெளிவாக செவிவழியே நுழைவது அருமை. . வாழ்த்துக்கள் கவிஞரே. . தற்போதைய இளைய சமுதாயத்தை கவர்வாதாயின் அவர்களிற்கு ஏற்ற வகையிலும் சில பாடல்களை நீங்கள் வெளியிட்டால் நன்று . .

கலைக்கு நான் என்றுமே அடிமை. . தாங்கள் நோர்வே வரும் சமயத்தில் தொடர்புகொள்ளுங்கள் தங்களுடைய இறுவட்டை நான் பெற்றுக்கொள்கின்றேன். . கலைக்கு விலை இல்லை. . கவிஞர்களிற்கும்தான் . . தொடரட்டும் உங்கள் பணி. . .

Link to comment
Share on other sites

நன்றி பரணி.

முரண்பாடுகள் எல்லம் பனிச் சுவர்கள்தனே. கூதிர்காலத்தில் மலைபோல வழி மறிக்கும். வசந்ததில் உருகிக் காணாமல் போய்விடும் இல்லையா. நோர்வேயில் வாழும் உங்களுக்கு இதெல்லாம் நான் சொல்லியா தெரிய வேண்டும்.

Link to comment
Share on other sites

முதற்கண் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்

நல்லதொரு முயற்சி.

பாடல்களை கேட்டேன்.

நன்றாக இருக்கிறது

இனியும் காலம் கடந்துவிடலாகாது எனும்

ஆதங்கத்தோடு

ஒலி வட்டுகளை அக்கா அனுப்பியிருந்தார்.

எம்மால் முடிந்ததை செய்கிறோம்.

செய்த பின் என்ன செய்தோம் என பார்ப்போம்.

தூக்க முடிந்தது துரும்பாக இருந்தாலும்

அதை செய்யுங்கள்....

அது பலன் தரும்.

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம் ஜெயபாலன் ; பாடலை எழுதியவனிற்கே விளங்காமல் இசை என்கிற பெயரில் இரைச்சல்கள் விழுங்கிக் கொண்டு இசைக்கு பின்னணியாக பாடல் என்கிற காலத்தில் . மீழ்கலவை என்று(றீ மிக்ஸ்) பல பழைய பாடல்களில் வெட்டி ஒட்டி. பிச்சைக்காரனின் சட்டையைப்போல இருக்கின்ற இன்றை பாடல்களில் உங்கள் முயற்சி நன்றாக இருக்கிறது. உங்களிற்குத்தான் பல தரப்பட்ட துறைகளிலும் ஆட்களைத்தெரியுமே. எனவே யாரவது இறுவட்டு வெளியீட்டாளர் ஒருவருடன் ஒப்பந்தம் போட்டு உங்கள் பாடல்களை வெளியிட்டால் உங்களிற்கும் தொடர்ச்சியாக இப்படியான முயற்சிகளிற்கு பணம் கிடைக்குமே. எனவே முயற்சித்துப்பாருங்கள் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கவிஞரே.

உங்களுடைய பாடல்கள் மிகவும் பிடித்திருக்கிறது. மனதை வசீகரிக்கும் மெல்லிசை. இலக்கியச் சுவைஞர்களுக்கு நல்ல விருந்தாகவும், படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாக அமையப்போகிறது என்பதில் எச்சந்தேகமும் இல்லை. கவிஞரே, உங்களுடைய இப்படைப்பை இறுவட்டாக கனடாவில் பெற்றுக் கொள்ள முடியுமா? அறியத் தாருங்கள்.

இங்கு பாராட்டப்படவேண்டியவர்கள் கவிஞர் மட்டுமல்ல, இசைஞர்களும், இசையமைப்பாளரும்.

சின்னக்குரலில் வெண்பனி கொட்டும் காலையிலே.. என்று ஆரம்பிக்கும் போது தொலைந்துபோன கடந்த காலங்கள் கண்ணெதிரே துள்ளி வருகிறது.... உறவுகளே பாடல்களைக் கேட்டுப்பாருங்கள். பிரமித்துப் போவீர்கள்.

வாழ்த்துகள் கவிஞரே.

நம்மவர் படைப்புகள் எல்லைகளின்றி விரியும்போது மனதிற்குள் மத்தாப்பூச் சிரிக்கிறது. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கவிஞரே .தொடரட்டும் உங்கள் பணி

Link to comment
Share on other sites

கவிஞருக்கு வாழ்த்துகள்.

ippathan Chennai vanthen. malai pathil ezuthukiRen.

My Teliphone : 00919941484253

Link to comment
Share on other sites

கவிஞரே, உங்களுடைய இப்படைப்பை இறுவட்டாக கனடாவில் பெற்றுக் கொள்ள முடியுமா? அறியத் தாருங்கள். valvaizagara

தோழர்கள் அஜீவன், சாத்திரி, வல்வைசாகரா, புத்தன், கந்தப்பு, ஈசன் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். உங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சி தருகிறது. ஈசன் உங்களைப் பற்றி ஞாபகப் படுத்தி எழுதுங்கள்.

தோழமைமிக்க வல்வை சாகராவுக்கு, நலம். கனடாவிலோ வேறு மேற்க்கு நாடுகளிலோ எனக்கு வர்தகர் தொடர்பு கிடைக்காது. ஆர்வமுள்ள வர்த்தகர்கள் யாரும் தொடர்புகொள்ளவில்லை. பணம்தீர்ந்துவிட்டதால் அதிகம் பிரதிகள் போட இயலவில்லை. வர்த்தகம் தெரிந்தவனுமல்ல. பணம் அனுப்பும் ஆர்வலர்களுக்குப் பிரதி எடுத்து அனுப்ப ஏற்பாடுள்ளது. பல்வேறு இணைய வாயில்களூடாக சில ஆயிரம்பேருக்கு என் இசைத்தொகுப்புச் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி. அதுதான் என் முதல் எதிர்பார்ப்பும்.

இந்த இணையத்தில் வெளியிடும் முயற்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு யாழ்க் கள தோழர் ஒருவர் இறக்கம்செய்து கேட்டுவிட்டு பணம் அனுப்ப தமிழர்கள் யாரும் முன்வரமாட்டார்கள் என்று சொன்னார். நான் வணிகக் கவிஞன் அல்ல. வாசுகிக்கும் எனக்கும் முதல் விருப்பு பாடல்கள் இசைத் தமிழை வேட்பவர்களுக்குக் கிட்ட வேண்டும் என்பதுதான். நண்பரிடம் ஒரு 5% லிருந்து 10% பேர் குறுந்தகடு வாங்க முன்வரக்கூடும் என்று சொன்னேன். இன்றுவரை அப்படி யாருமே முன்வரவில்லை என்றாலும் இசைத்தொகுப்பு பலரைச் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியே.

கூழ் குடித்துக்கொண்டிருந்த கிரேக்க ஞானி டஜோஜீனசை (பெயர் சரியென நம்புகிறேன்) பார்த்து அவரது நண்பர் கவலைப் பட்டாராம். நீ அரசவைக்குச் சென்றால் அலக்சாண்டர் புகழ்பாடினால் இப்படிக் கூழ் குடிக்க வேண்டியதில்லையே என்று அந்த நண்பன் அறிவுரை கூறினாராம். சிரித்தபடியே டயோஜீனஸ் சொன்ன என் மனம் கவர்ந்த பதில் இதுதான். "நண்பரே கூழ்குடிக்கப் பழகிவிட்டால் அரசர் புகழ்பாட வேண்டியதில்லை" இருக்கவே இருக்கிறது கூழ். ஆனாலும் கடன்வாங்கி இன்னுமொரு இசைத் தொகுப்பு என்கிற விசப் பரீட்சையில் இறங்கமுடியாது என்கிற கவலை நிரந்தரமானதுதான்.

அன்புடன்

ஜெயபாலன்

Link to comment
Share on other sites

Poet,

Australian $ 100 உங்கள் A \ C இற்கு அனுப்பி வைக்க இருக்கிறேன். It will take two working days to set up my Internet banking for international telegraphic transfer. அதன் பின்பே அனுப்பிவைப்பேன். இது எறக்குறைய உங்கள் செலவின் 2.5%.

கிடைத்தவுடன் அறியத்தாருங்கள்.

songs are very pleasant. good luck with your endeavour. :rolleyes:

நல்வாழ்த்துக்கள் ஈசன். உங்கள் முகவரியை ஈமெயிலில் அனுப்பிவையுங்கள் குறும்தகட்டுப் பிரதி அனுப்பிவைப்பேன். இதுதான் இணையத்தில்

பாலை இசைத் தொகுபிற்ககுக் கிடைத்த முதல் கரிசனையாகும். காட்டாறு நாவலை எழுதி முடிக்க எனக்கு உதவவென்று வாசுகி வைத்திருந்த பணத்தை இசைத் தொகுப்புள் முடக்ககிவிட்டாள். இது என் பணிகலை முடக்கியிருந்தது. இசைத்தொகுப்புமீதான உங்கலைப்போன்றவர்கள் காட்டும் கரிசனை உண்மையில் வேண்டிய ஆய்வுகளோடு காட்டாறு நாவலை எழுதிமுடிப்பதையும் என்பணிகளைத் தொடர்வதையும் சாத்தியமாக்கும். உங்கள் மனைவி பிள்ளைகளுக்கும் என் நல்வாழ்த்தைச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

யாழ்க்கள நண்பர்களுக்கு,

CD பதுகாப்பாக அஞ்சலில் அனுப்புவதற்க்கு கடைப்பிடிக்கவேண்டிய இலகுவான நடைமுறைகள் என்ன. உடையாத பிளாற்ரிக் சிடி கவரில் வைத்து அனுப்பினால் போதுமா. தயவுசெய்து அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

யாழ்க்கள நண்பர்களுக்கு,

CD பதுகாப்பாக அஞ்சலில் அனுப்புவதற்க்கு கடைப்பிடிக்கவேண்டிய இலகுவான நடைமுறைகள் என்ன. உடையாத பிளாற்ரிக் சிடி கவரில் வைத்து அனுப்பினால் போதுமா. தயவுசெய்து அறியத்தாருங்கள்.

இனித் தமிழர் அடிமையென தலை பணிதல் இல்லை. என்கிற பாடல்பற்றி யாராவது எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். யாரும் ஒன்றும் குறிப்பிடவில்லையே. இந்திய நிலமையில் சென்னைப் பல்கலைக்களக இலக்கியபீடம் வெளியிட்ட இசைத்தொகுப்பில் இப்பாடல் இடம்பெற்றதும் இப்பாடலை வாசுகியும் அநந்தும் தியாகராஜனும் மேடையில் பாடியதும் மகிழ்ச்சி.

எனது சாதி ஒழிப்பு போராட்ட காலத்துத்துத் தோழன் புதுவை இரத்தின துரைக்கு 60 வயது ஆகிறவேழையில் ஈழத்து மண்ணும் வாழ்வும்பற்றிய ஒரு இசைத்தொகுதியை அவனுக்கு சமர்ப்பணமாக வெளியிடவும் விரும்பினேன். பாலை பொருளாதர ரீதியாக தோற்றுப்போனதால் எதுவும் சாத்தியமாகவில்லை. பாலை 1000 பேர் இறக்கம் செய்வார்கள் ஏறக்குறைய 50ல் இருந்து 100 கொள்வனவு செய்வார்களென மதிப்பிட்டேன். எனது இலக்கான 1000 எட்டப்பட்டாலும் இதுவரை ஒருவர் மட்டுமே கொள்வதாக முன்வந்திருக்கிறார். யாழ் நண்பர்கள் யாராவது புதுவையை வாழ்த்துவது தொடர்பாக முன்னெடுக்கும் செயல்பாடுகளில் நானும் சேர்ந்துகொள்ள முன்வருகிறேன்.

Link to comment
Share on other sites

அஞ்சலி உரை. பாலை இசைத்தொகுப்பு

............... இனி நின் ஊர்க்

கடிமரம் வருத்தத் தந்துயாம் பிணித்த

நெடுநல் யானை எம் பரிசில்.

கடுமான் தோன்றல்! செல்வல் யானே.

- சங்கப் புலவர் பெரும்சித்திரனார்.

புறம் 162

நான் யாழில் எனது குறுந்தகட்டை வெளியிட்டதையும் பின்விழைவுகலையும் அறிந்த இந்திந்தியத் தமிழரான பிரபல கலை விமர்சகரும் இசை ஆர்வலருமான நண்பர் எழுதிய கடிததில் இருந்து.ஒரு பகுதி.

"அன்பின் ஜெயபாலன்:

கவிஞர்கள் என்றால் வெகுளிகளாகத்தான் இருக்க வேண்டுமென்ற நியாயமா? இவ்வளவு

கஷ்டப்பட்டு ஒரு அழகான, தரமான இசைப்பேழை கொண்டு வந்துவிட்டு அதை அப்படியே

வலைத்தானம் செய்துவிட்டீர்கள்! வாழ்த்துவதா? வருந்துவதா என்று

தெரியவில்லை."

அவரதும் ஏனைய நண்பர்களதும் வசவு உண்மைதான், எதிர்பார்த்ததுபோல 1000 மேல் நேரடியாக தரவிறக்கம் செய்தபோதும் விலை தருவதாக ஒரே ஒரு வாக்குறுதி மட்டுமே வந்தது. நான் குறைந்தது 5% ஆர்வலர்களையாவது எதிர்பார்த்தேன். இணையத்தில் போட்டதால் வினியோகஸ்தர்களும் பின்வாங்கிவிட்டனர். எதிர்காலத்தில் எனது வழியைப் முனைகிறவர்கள் மேலுள்ள கடிதத்தை ஒருமுறை வாசிக்கவும்.

இப்பொழுது புலம் பெயர்ந்த இந்திய தமிழர்களின் தளம் ஒன்று கேட்டிருக்கிறது. பார்ப்போம். பொதுவாக இலங்கைத் தமிழர்கள் தமிழக வணிகக் கலைஞர்களைத் தவிர்த்து, இலங்கைக் கலஞர்களின் உழைப்பையும் முதலீடுகளையும் மதித்ததில்லை. கலைசார்ந்த தாழ்வு மனப்பாண்மை எங்கள் இனத்துவ முழுமையின் ஆழுமையின் ஒரு பிரச்சினைதான். சர்வதேச அரங்கில் முன்னணியில் இருக்கும் இலங்கைத் தமிழ்க் கலைஞர்கள் அனைவருமே தமிழகத்தவர்களாலோ அல்லது அயல் நாட்டவர்களாலோ கண்டுகொள்ளப் பட்டவர்கள்தான் என்கிற உண்மையும் சுடுகிறது. எனினும் இது நானே எடுத்த முடிவு. இனி யாரையும் குறை கூற முடியாது.

இத்துடன் இந்த விவாதங்களைப் புறந்தள்ளிவிட்டு சங்கப் புலவன் பெருஞ்சித்திரனாரைப் போல "செல்வல் யானே" என விட்டு விலகிச் செல்கிறேன்.

வ.ஐ.ச.ஜெயபாலன்

Link to comment
Share on other sites

Dear poet,

Since i had viral infection last few days could not go out. Only today i got my internet banking enabled for TT.

I was trying to send the money i promised.

unfortunately, they need your bank address. Can you please provide the details. thanks.

-Esan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.