Jump to content

பாலை குறுந்தகடு = வ.ஐ.ச.ஜெயபாலன் New Message


Recommended Posts

இனித் தமிழர் அடிமையென தலை பணிவதில்லை என்ற பாடலை உங்களோடு சேர்ந்து பாடவேண்டுமென்று எனது மனம் விரும்புகிறது. பாலை இசை குறுந்தகட்டில் மிகவும் பிரபலமான 10வது படல் அது. வாசுகியுடன் சேர்ந்து பாலை இசை தட்டு வெளியிட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது. திரும்பிப் பார்க்கிறபோது பாலையாகிப்போன காலங்கள் வயிற்றினுள் பாம்புபோல நெழிகிறது. பழம்கனவாய்ப்போன இனத்தின் வாழ்வும் பாலையாகிவிட்டது. தனிப்பட என்னை அமுக்கிய பாலை கடன் சுமையை அடைக்க திரைத் துறைக்கு போக நேர்ந்ததது. என்னினும் 1996ல் ஆரம்பித்தது போலவே, ஜெயசுக்குறு தருணத்தில் தீவிரப் பட்டதுபோல எனது ஆய்வுப் பணிகளும் அறிக்கைகளும் தொடர்ந்தன. ஏனோ முன்போலலாமல் என் தோழர்கள் கேட்க்கவிம் பார்க்கவும் தவறிவிட்டனர். தைமாதமே தீப்பற்றிய புல்வெளியாய் என் தயகம் சாம்பல்மேடாகப் போவதை முன்னுணர்ந்து பாடுகமனமே http://www.yarl.com/forum3/index.php?showtopic=53138 கவிதையை எழுதினேன். மேற்படி கவிதை கலங்காதே தாய்மண்ணே என்ற தலைப்பில் இவ்வாரக் குமுதத்தில் வெளிவந்துள்ளது.

எனக்கு வாய்த்த ஒரே ஒரு புரவலரான எனது மனைவி வாசுகியும் தென் இந்திய பாடகர் அனந்துவும் பாடல்களைப் பாடி உள்ளனர். வாசுகியின் பேட்டியை பின்வரும் தளத்தில் கேட்கலாம்: http://www.radio.ajeevan.com/

நமது வாழ்வையும் போராட்டத்தையும் அதன் வரலாற்றுக் காவியத் தன்மை கெடாமல் எழுதுவதையே எனக்கு எங்சியுள்ள பணியாகக் காண்கிறேன். கடன்கள் அடைத்ததும் கலங்காதே தாய்மண்ணே என போராளிகளுக்கு அஞ்சலியும் அவர்களது கனவுகளுக்குக் கட்டியமுமாக இசைப் பேழை ஒன்று தயாரிக்கும் கனவு உள்ளது.

பாடலைக் கேட்பதற்க்கு இங்கே நெருடுங்கள்:

. http://voiceofthf.blogspot.com/2008_03_01_archive.html

அன்புடன்

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

visjayapalan@gmail.com

004722162235

அன்புடன்

.ஜெயபாலன்

Postbanken, Norway.

Shanmugampillai Jayapalan

Bank Account number. 0532 51 18328

Payment from abroad,

use the IBAN number : NO 6105325118328,

My paypal is : visjayapalan@gmail.com

பாடல்களை தரவேற்றம் செய்துகொள்ளுங்கள்

http://voiceofthf.blogspot.com/2008_03_01_archive.html

தயாரிப்பு வாசுகி ஜெயபாலன் + ஜெயபிரகாஸ் எரீம்

Link to comment
Share on other sites

பாலை குறுந்தகடு = வ.ஐ.ச.ஜெயபாலன்

அன்புக்குரிகுரிய யாழ்க்கள கவிதை ஆர்வலர்களுக்கு. கடந்த 4ம் திகதி சென்னைப் பல்கலைக் களகத் தமிழ் இலக்கிய துறையினரால் என்னுடைய பாலை குறுந்தகடு வெளியிடப் பட்டது. குறுந்தகட்டை பாலுமகேந்திரா வெளியிட்டுவைத்தார். பாடல்கள்பற்றியும் வாசுகியின் குரல் வளம்பற்றியும் பலுமஹேந்திராவும் கவிஞர் மேத்தாவும் கவிஞர் நா முத்துக்குமாருவும் சென்னைப் பல்கலைக்க் களக் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் டாக்டர் வி அரசுவும் பேசினார்கள். இசை இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் என்று சிலர் கருத்துரைத்தார்கள். இந்த தயரிப்புக்கு இந்தியப் பணம் 150000 ஒன்றரை இலட்சம் ருபா செலவாகிற்று. ஆனந்த விகடனில் பாலை விமர்சனக் குறிப்பு இடம்பெற்றுள்ளது. குறுந்தகட்டை யாழ் களம ஊடாக என்னரும் ஈழத்து மக்களுக்குச் சமர்ப்பிக்கிறதில் நானும் வாசுகியும் மகிழ்ச்சி அடைகிறோம். பாடல்கள் பிடித்து வசதியும் இருந்தால் மட்டும் உங்கள் அன்பளிப்பை எனது வங்கிக் கணக்கிற்க்கு அனுப்புங்கள் நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் - 1

புலரும் வேளையில் யன்னல் ஓரமாய்

கவிதை பாடுகின்ற தாரோ

பூக்கள் சிந்திடும் முல்லைப் பந்தரில்

பாக்கள் சூடுகின்றதாரோ - குயிலே

துயரம் தீயெனச் சுட்டபோதிலும்

சுடரும் பொன் உந்தன் வாழ்வு

பொழுது புலர்ந்தது எழுக கவிஞனே

என்று பாடுகின்றதாரோ - குயிலே

வசந்தம் உன்னிடம் சொன்ன சேதிகள்

எனக்கு சொல்லலாகாதா

கசந்த போர்க்களம் நாண மானிடம்

சேர்ந்து பாடக் கூடாதா - குயிலே

பாடல் - 2

கண்ணம்மா இந்த பனிகொட்டும் இரவினிலே

இலையற்ற தனிமரமாய் உன்னையே நினைத்திருந்தேன்

என்று உன் பூவிரல்கள் தீண்டிடுமோ என்று

ஏங்கிடும் வீணையைப் போல் துயருறுதே நெஞ்சம்

பூத்திடும் கனவினில் கானகங்கள் என்றும்

புலர்ந்திடும் வசந்தத்தின் கற்பனைகள்

தேற்றும் உன் காதலில் பாரதியின்

சிந்துகள் பாடிடும் ராத்திரிகள்

பாடல் -3

வெண்பனி மீது பொன்மலர் சூடும்

செங்கதிரோனை வாழ்த்துகிறோம்

கண்பனி சூடி எம் நினைவோடு

ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம்

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே

பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று

பாசத்தில் வாடும் நெஞ்சங்களே

பனியையும் மீறி பசுமையில் நிமிரும்

பைன்மரம் போன்ற சிங்கங்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே

பூமியில் என்றும் அகதிகள் என்று

புழுதி மண் போல சுழலுவதோ

தாயகம் மீண்டு துயர்களை வென்று

தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே

பாடல் - 4

மேலை அணைகளிலே கிழிந்து

மெலிந்த காவேரியாய்

ஏழைக் கவிமனசு ஒடிய

உன்மத்தம் கொண்டதென்ன

ஈழக்கரைகளிலே நலிந்து

ஏங்கிடும் அகதிகள் போல

வாழத்துடிக்குதடி நெஞ்சு வா

எனும் மந்திரச் சொல் கேட்டு

கண்ணில் மனசு உதிர உனது

காதலில் நான் எரிந்தேன்

உன்னில் உயிர் படர அதனை

உரித்துரித்தே எறிந்தாய்

ஐம்புல சிப்பியுள்ளே தைத்து

அறுத்திடும் விழிச்சுடரே

செம்புலப்பெயல் நீராய் நாங்கள்

சேர்ந்திடல் தர்மமடி

பாடல் - 5

வெண்பனி கொட்டும் காலையில் நாங்கள்

பள்ளிக்குப் போகையிலே

சின்னமுயல் என் அருகினில் வந்து ஹாய்

என்று சொல்லியது

ஹாய் ஹாய் ஹாய் ஹாய்

சின்ன முயலே சின்ன முயலே

பள்ளிக்கு போகலையா

முயல்களின் பள்ளி புல்வெளி தானே

உனக்கிது தெரியலையா

ஐயையோ புரியலையா

புல்வெளி எங்கும் வெண்பனி போர்வை

சாப்பிட ஏதும் இல்லை

அம்மா தந்த ரொட்டியில் பாதி

தந்திட தடையும் இல்லை

எமக்கினி கவலை இல்லை

பாடல் - 6

மாரி மழைக்கரத்தால்

பாய் விரிச்ச பச்சைப்புல்லு

பச்சைப்புல்லு சூடிக்கொண்டு

பவுசு காட்டும் வண்ணப்பூவு

சிட்டாகப் பறந்து வந்து

சிந்து பாடத் துடிக்குதடி

நீ எட்டாது போன பின்பும்

உன்னை நெஞ்சு நினைக்குதடி

கூதலாம் குழவிக் கூடு

குலைந்து போன வாடைக்காலம்

காதலாம் தங்கத் தோணி

கவிழ்ந்து போன வாழ்க்கைக் கோலம்

வண்டாகப் பறந்து வந்து

மலர்ச் சோலை நடுவினிலே

உன்னை எண்ணி உபவாசம்

இருக்கிறதே இன்பம் கண்ணே

நாளை ஒரு நாளையிலே

நடை வரம்பில் கோல மயில்

ஏழை என்னைக் காணக் கூடும்

இதயம் கொஞ்சம் நோகக் கூடும்

யார் மீதும் குற்றம் இல்லை

கோபம் கொள்ள ஞாயமில்லை

ஆலாய் விழுது விட்டு

அறுகாக வேர் பரப்பி

மூங்கிலாய்த் தோப்பாகி

வாழ வேண்டும் எந்தன் கண்ணே

பாடல் - 7

பொன்னாய் உருகும் மாலையிலே - முடி

புனைந்து அரசாளும் சூரியனே

தென்றல் காற்றின் மோகனமாய் - ஒரு

சிறு குயில் அழைப்பது கேட்கலையா

வானவில் கிண்ணத்தில் மது ஏந்தும் -இள

வாசமலர்களின் கனவுகளோ

வண்ணங்களாலே விண் திரையில் - நீ

வார்க்கிறதெல்லாம் கவிதைகளோ

பாடல் - 8

பயிரோ மழைக்கேங்கும் -கொடும்

பாலையோ நதியிடம் யாசிக்கும்

ஏழையின் காவியங்கள்

உயிர்த்திட உன்னிடம் கையேந்தும்

உயிரினில் இனித்திடவும்

உருக்கிடும் துயரெல்லாம்

அன்பே காதலால்

கருகிடவும்

யாழினை எடுத்தேனடா கண்ணா கண்ணா

இனி நதியென பெருகட்டும்

கவிதை என்றாய்

என் வாழ்க்கையின் தவப்பயனே -சொன்ன

மந்திர வார்த்தைகள் மறந்தனையோ

வானுக்குள் மதிபோல - அந்த

மதியினுள் சுடரும் செங்கதிர்போல

உன் யாழுக்குள் தேன்போல

என் ஊனுக்குள் உயிரானாய்

உள்ளத்தில் ஒளிர்கின்ற கவியானாய்

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

பாடல் -9

கள்ளெனக் கொட்டுதடி வள்ளி

கால வெளியினில் போதைநிலா

அள்ளுது வா வா என

அழைத்திடும் பூங்குயில் கவிமனசை

வாழ்வென்னும் இனிப்பையெல்லாம் அள்ளி

வார்க்குதே வசந்தத்தின் தேன் இரவு

மூழுதே மேனி எங்கும் தாபமாம்

இன்ப வேள்வியின் மோகனத்தீ

நினைவென்னும் நெருஞ்சி முள் பாலையிலே

நில்லென்று சொல்லி நீ போனதெங்கே

துணை வரும் நிலவுக்கே தெரியுமடி

என் நெஞ்சத்தில் நீயன்றி யாருமில்லை

பாடல் - 10

இனித் தமிழர் அடிமையென தலைபணிதல் இல்லை

இனித் தமிழர் கோழைகளின் வழிதொடர்தல் இல்லை

இனித் தமிழர் மானுடத்தின் விடுதலை என்றெழுந்தார்

இனித் தமிழர் உலகத்தின் விலங்குகளும் தகர்ப்பார்

சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ

சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்

பண்டாரவன்னியன் படை நடந்த காடு

பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

ஜாதி மத பேதமின்றி

செந்தமிழர் கூடி

நீதி நெறியோடு என்றும்

வெற்றி வாகை சூடி

பாங்கொலிக்கும் பள்ளி

பாடும் கோவில் மணிகள்

மங்களமாய் எங்களது

மண்ணில் வாழ்வு எழுக

சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ

சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்

பண்டாரவன்னியன் படை நடந்த காடு

பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே,

சில பாடல்களை இராஜ் இராஜரட்ணம் அவர்களின் குரலில் கேட்ட ஞாபகம்.

அப்படி ஏற்கனவே இவை(ஒரு சில) ஆண் குரலில் வெளிவந்தவையா?

Link to comment
Share on other sites

கவிஞரே,

சில பாடல்களை இராஜ் இராஜரட்ணம் அவர்களின் குரலில் கேட்ட ஞாபகம்.

அப்படி ஏற்கனவே இவை(ஒரு சில) ஆண் குரலில் வெளிவந்தவையா?

நன்றி பிரபா, கண்ணம்மா பாடல் இராஜ் இராஜரட்ணம் பாட கேட்டிருப்பீர்கள். உணர்வு சிந்தும் அவருடைய குரலை மறக்கமுடியுமா? இந்த தொகுப்பு வாசுகி சென்னையின் நின்ற கடைசி ஒருவாரத்தில் அவசரம் அவசரமாக எங்கள் திருமண 21ம் வருட நினைவாக உருவாக்கியது. குறுந்தட்டை வெளியிட்ட சென்னைப் பல்கலைக் களக தமிழ் இலக்கியத்துறை அரங்கில் வாசுகி என்னை 21 வருடங்கள் வத்திருப்பதன் நினைவாக என்று குறிப்பிட்டேன். உண்மை அதுதானே.

யாழ்க்கள நண்பர்கள் யாரும் word ஊனிக்கோட்டில் எழுதக்கூடிய எழுத்துரு font அனுப்பி உதவமுடியுமா.

Link to comment
Share on other sites

பாலை இசைத் தொகுப்பின் குறுந்தககட்டுப் பிரதி வேண்டுகிறவர்கள்மின்னஞ்சல்ம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைத்தொகுப்பு வாசித்தேன். நன்றாக இருக்கின்றது.பாடலுடன் மலர்ந்த கவிதை இலகுநடையில் யாரும் புரிந்து கொள்ளும் தக்கனவாக அமைந்திருப்பது சிறப்பைத்தருகிறது.

உன் யாழுக்குள் தேன்போல

என் ஊனுக்குள் உயிரானாய்

உள்ளத்தில் ஒளிர்கின்ற கவியானாய்

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

மாரி மழைக்கரத்தால்

பாய் விரிச்ச பச்சைப்புல்லு

பச்சைப்புல்லு சூடிக்கொண்டு

பவுசு காட்டும் வண்ணப்பூவு

சிட்டாகப் பறந்து வந்து

சிந்து பாடத் துடிக்குதடி

நீ எட்டாது போன பின்பும்

உன்னை நெஞ்சு நினைக்குதடி

அழகான வரிகள்.

வாழ்த்துகள்......

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

Link to comment
Share on other sites

உங்கள் கவிதைத்தொகுப்பு வாசித்தேன். நன்றாக இருக்கின்றது.பாடலுடன் மலர்ந்த கவிதை இலகுநடையில் யாரும் புரிந்து கொள்ளும் தக்கனவாக அமைந்திருப்பது சிறப்பைத்தருகிறது.

உன் யாழுக்குள் தேன்போல

என் ஊனுக்குள் உயிரானாய்

உள்ளத்தில் ஒளிர்கின்ற கவியானாய்

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

மாரி மழைக்கரத்தால்

பாய் விரிச்ச பச்சைப்புல்லு

பச்சைப்புல்லு சூடிக்கொண்டு

பவுசு காட்டும் வண்ணப்பூவு

சிட்டாகப் பறந்து வந்து

சிந்து பாடத் துடிக்குதடி

நீ எட்டாது போன பின்பும்

உன்னை நெஞ்சு நினைக்குதடி

அழகான வரிகள்.

வாழ்த்துகள்......

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

வணக்கம் கறுப்பி,

வணிக கலைஞர்களை மட்டுமே பேணுகிற இலங்கைத் தமிழர் மத்தியில் உங்களைப் போன்ற ஒரிருவர் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. வணிக வட்டத்துக்கு வெளியில் வாழும் கலைஞர்களின் செல்வாக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. நம்மவர் நிலை அதுவல்ல. என் இசைத் தொகுப்புப் பற்றி இரண்டு கருத்துக்கள் மட்டுமே எழுதப் பட்டாலும் அவை எனக்கு மிகவும் முக்கியமான கருத்துக்கள். உலகம் முழுவதும் கப்பல்களில் சுற்றினாலும் தங்கள் பாலையில் தங்கள் பாலையுடனேயே அரேபியர்கள் வாழ்ந்தார்கள் என் மனசும் அத்தகையதுதான். கலச்சாரப் பாலைதான். ஆனாலும் என்னுடைய பாலை.

Link to comment
Share on other sites

முரண்பாடுகளுன் நாம் வாழ்ந்தாலும் கவிதைவரிகளிற்கு நான் அடிமை. ஆழ்ந்த அனுபவம் வரிகளில் தெறிக்கின்றது. இசை பாடலை விழுங்கும் காலத்தில் பாடல் வரிகள் தெளிவாக செவிவழியே நுழைவது அருமை. . வாழ்த்துக்கள் கவிஞரே. . தற்போதைய இளைய சமுதாயத்தை கவர்வாதாயின் அவர்களிற்கு ஏற்ற வகையிலும் சில பாடல்களை நீங்கள் வெளியிட்டால் நன்று . .

கலைக்கு நான் என்றுமே அடிமை. . தாங்கள் நோர்வே வரும் சமயத்தில் தொடர்புகொள்ளுங்கள் தங்களுடைய இறுவட்டை நான் பெற்றுக்கொள்கின்றேன். . கலைக்கு விலை இல்லை. . கவிஞர்களிற்கும்தான் . . தொடரட்டும் உங்கள் பணி. . .

Link to comment
Share on other sites

நன்றி பரணி.

முரண்பாடுகள் எல்லம் பனிச் சுவர்கள்தனே. கூதிர்காலத்தில் மலைபோல வழி மறிக்கும். வசந்ததில் உருகிக் காணாமல் போய்விடும் இல்லையா. நோர்வேயில் வாழும் உங்களுக்கு இதெல்லாம் நான் சொல்லியா தெரிய வேண்டும்.

Link to comment
Share on other sites

முதற்கண் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்

நல்லதொரு முயற்சி.

பாடல்களை கேட்டேன்.

நன்றாக இருக்கிறது

இனியும் காலம் கடந்துவிடலாகாது எனும்

ஆதங்கத்தோடு

ஒலி வட்டுகளை அக்கா அனுப்பியிருந்தார்.

எம்மால் முடிந்ததை செய்கிறோம்.

செய்த பின் என்ன செய்தோம் என பார்ப்போம்.

தூக்க முடிந்தது துரும்பாக இருந்தாலும்

அதை செய்யுங்கள்....

அது பலன் தரும்.

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம் ஜெயபாலன் ; பாடலை எழுதியவனிற்கே விளங்காமல் இசை என்கிற பெயரில் இரைச்சல்கள் விழுங்கிக் கொண்டு இசைக்கு பின்னணியாக பாடல் என்கிற காலத்தில் . மீழ்கலவை என்று(றீ மிக்ஸ்) பல பழைய பாடல்களில் வெட்டி ஒட்டி. பிச்சைக்காரனின் சட்டையைப்போல இருக்கின்ற இன்றை பாடல்களில் உங்கள் முயற்சி நன்றாக இருக்கிறது. உங்களிற்குத்தான் பல தரப்பட்ட துறைகளிலும் ஆட்களைத்தெரியுமே. எனவே யாரவது இறுவட்டு வெளியீட்டாளர் ஒருவருடன் ஒப்பந்தம் போட்டு உங்கள் பாடல்களை வெளியிட்டால் உங்களிற்கும் தொடர்ச்சியாக இப்படியான முயற்சிகளிற்கு பணம் கிடைக்குமே. எனவே முயற்சித்துப்பாருங்கள் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கவிஞரே.

உங்களுடைய பாடல்கள் மிகவும் பிடித்திருக்கிறது. மனதை வசீகரிக்கும் மெல்லிசை. இலக்கியச் சுவைஞர்களுக்கு நல்ல விருந்தாகவும், படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாக அமையப்போகிறது என்பதில் எச்சந்தேகமும் இல்லை. கவிஞரே, உங்களுடைய இப்படைப்பை இறுவட்டாக கனடாவில் பெற்றுக் கொள்ள முடியுமா? அறியத் தாருங்கள்.

இங்கு பாராட்டப்படவேண்டியவர்கள் கவிஞர் மட்டுமல்ல, இசைஞர்களும், இசையமைப்பாளரும்.

சின்னக்குரலில் வெண்பனி கொட்டும் காலையிலே.. என்று ஆரம்பிக்கும் போது தொலைந்துபோன கடந்த காலங்கள் கண்ணெதிரே துள்ளி வருகிறது.... உறவுகளே பாடல்களைக் கேட்டுப்பாருங்கள். பிரமித்துப் போவீர்கள்.

வாழ்த்துகள் கவிஞரே.

நம்மவர் படைப்புகள் எல்லைகளின்றி விரியும்போது மனதிற்குள் மத்தாப்பூச் சிரிக்கிறது. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கவிஞரே .தொடரட்டும் உங்கள் பணி

Link to comment
Share on other sites

கவிஞருக்கு வாழ்த்துகள்.

ippathan Chennai vanthen. malai pathil ezuthukiRen.

My Teliphone : 00919941484253

Link to comment
Share on other sites

கவிஞரே, உங்களுடைய இப்படைப்பை இறுவட்டாக கனடாவில் பெற்றுக் கொள்ள முடியுமா? அறியத் தாருங்கள். valvaizagara

தோழர்கள் அஜீவன், சாத்திரி, வல்வைசாகரா, புத்தன், கந்தப்பு, ஈசன் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். உங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சி தருகிறது. ஈசன் உங்களைப் பற்றி ஞாபகப் படுத்தி எழுதுங்கள்.

தோழமைமிக்க வல்வை சாகராவுக்கு, நலம். கனடாவிலோ வேறு மேற்க்கு நாடுகளிலோ எனக்கு வர்தகர் தொடர்பு கிடைக்காது. ஆர்வமுள்ள வர்த்தகர்கள் யாரும் தொடர்புகொள்ளவில்லை. பணம்தீர்ந்துவிட்டதால் அதிகம் பிரதிகள் போட இயலவில்லை. வர்த்தகம் தெரிந்தவனுமல்ல. பணம் அனுப்பும் ஆர்வலர்களுக்குப் பிரதி எடுத்து அனுப்ப ஏற்பாடுள்ளது. பல்வேறு இணைய வாயில்களூடாக சில ஆயிரம்பேருக்கு என் இசைத்தொகுப்புச் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி. அதுதான் என் முதல் எதிர்பார்ப்பும்.

இந்த இணையத்தில் வெளியிடும் முயற்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு யாழ்க் கள தோழர் ஒருவர் இறக்கம்செய்து கேட்டுவிட்டு பணம் அனுப்ப தமிழர்கள் யாரும் முன்வரமாட்டார்கள் என்று சொன்னார். நான் வணிகக் கவிஞன் அல்ல. வாசுகிக்கும் எனக்கும் முதல் விருப்பு பாடல்கள் இசைத் தமிழை வேட்பவர்களுக்குக் கிட்ட வேண்டும் என்பதுதான். நண்பரிடம் ஒரு 5% லிருந்து 10% பேர் குறுந்தகடு வாங்க முன்வரக்கூடும் என்று சொன்னேன். இன்றுவரை அப்படி யாருமே முன்வரவில்லை என்றாலும் இசைத்தொகுப்பு பலரைச் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியே.

கூழ் குடித்துக்கொண்டிருந்த கிரேக்க ஞானி டஜோஜீனசை (பெயர் சரியென நம்புகிறேன்) பார்த்து அவரது நண்பர் கவலைப் பட்டாராம். நீ அரசவைக்குச் சென்றால் அலக்சாண்டர் புகழ்பாடினால் இப்படிக் கூழ் குடிக்க வேண்டியதில்லையே என்று அந்த நண்பன் அறிவுரை கூறினாராம். சிரித்தபடியே டயோஜீனஸ் சொன்ன என் மனம் கவர்ந்த பதில் இதுதான். "நண்பரே கூழ்குடிக்கப் பழகிவிட்டால் அரசர் புகழ்பாட வேண்டியதில்லை" இருக்கவே இருக்கிறது கூழ். ஆனாலும் கடன்வாங்கி இன்னுமொரு இசைத் தொகுப்பு என்கிற விசப் பரீட்சையில் இறங்கமுடியாது என்கிற கவலை நிரந்தரமானதுதான்.

அன்புடன்

ஜெயபாலன்

Link to comment
Share on other sites

Poet,

Australian $ 100 உங்கள் A \ C இற்கு அனுப்பி வைக்க இருக்கிறேன். It will take two working days to set up my Internet banking for international telegraphic transfer. அதன் பின்பே அனுப்பிவைப்பேன். இது எறக்குறைய உங்கள் செலவின் 2.5%.

கிடைத்தவுடன் அறியத்தாருங்கள்.

songs are very pleasant. good luck with your endeavour. :rolleyes:

நல்வாழ்த்துக்கள் ஈசன். உங்கள் முகவரியை ஈமெயிலில் அனுப்பிவையுங்கள் குறும்தகட்டுப் பிரதி அனுப்பிவைப்பேன். இதுதான் இணையத்தில்

பாலை இசைத் தொகுபிற்ககுக் கிடைத்த முதல் கரிசனையாகும். காட்டாறு நாவலை எழுதி முடிக்க எனக்கு உதவவென்று வாசுகி வைத்திருந்த பணத்தை இசைத் தொகுப்புள் முடக்ககிவிட்டாள். இது என் பணிகலை முடக்கியிருந்தது. இசைத்தொகுப்புமீதான உங்கலைப்போன்றவர்கள் காட்டும் கரிசனை உண்மையில் வேண்டிய ஆய்வுகளோடு காட்டாறு நாவலை எழுதிமுடிப்பதையும் என்பணிகளைத் தொடர்வதையும் சாத்தியமாக்கும். உங்கள் மனைவி பிள்ளைகளுக்கும் என் நல்வாழ்த்தைச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

யாழ்க்கள நண்பர்களுக்கு,

CD பதுகாப்பாக அஞ்சலில் அனுப்புவதற்க்கு கடைப்பிடிக்கவேண்டிய இலகுவான நடைமுறைகள் என்ன. உடையாத பிளாற்ரிக் சிடி கவரில் வைத்து அனுப்பினால் போதுமா. தயவுசெய்து அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

யாழ்க்கள நண்பர்களுக்கு,

CD பதுகாப்பாக அஞ்சலில் அனுப்புவதற்க்கு கடைப்பிடிக்கவேண்டிய இலகுவான நடைமுறைகள் என்ன. உடையாத பிளாற்ரிக் சிடி கவரில் வைத்து அனுப்பினால் போதுமா. தயவுசெய்து அறியத்தாருங்கள்.

இனித் தமிழர் அடிமையென தலை பணிதல் இல்லை. என்கிற பாடல்பற்றி யாராவது எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். யாரும் ஒன்றும் குறிப்பிடவில்லையே. இந்திய நிலமையில் சென்னைப் பல்கலைக்களக இலக்கியபீடம் வெளியிட்ட இசைத்தொகுப்பில் இப்பாடல் இடம்பெற்றதும் இப்பாடலை வாசுகியும் அநந்தும் தியாகராஜனும் மேடையில் பாடியதும் மகிழ்ச்சி.

எனது சாதி ஒழிப்பு போராட்ட காலத்துத்துத் தோழன் புதுவை இரத்தின துரைக்கு 60 வயது ஆகிறவேழையில் ஈழத்து மண்ணும் வாழ்வும்பற்றிய ஒரு இசைத்தொகுதியை அவனுக்கு சமர்ப்பணமாக வெளியிடவும் விரும்பினேன். பாலை பொருளாதர ரீதியாக தோற்றுப்போனதால் எதுவும் சாத்தியமாகவில்லை. பாலை 1000 பேர் இறக்கம் செய்வார்கள் ஏறக்குறைய 50ல் இருந்து 100 கொள்வனவு செய்வார்களென மதிப்பிட்டேன். எனது இலக்கான 1000 எட்டப்பட்டாலும் இதுவரை ஒருவர் மட்டுமே கொள்வதாக முன்வந்திருக்கிறார். யாழ் நண்பர்கள் யாராவது புதுவையை வாழ்த்துவது தொடர்பாக முன்னெடுக்கும் செயல்பாடுகளில் நானும் சேர்ந்துகொள்ள முன்வருகிறேன்.

Link to comment
Share on other sites

அஞ்சலி உரை. பாலை இசைத்தொகுப்பு

............... இனி நின் ஊர்க்

கடிமரம் வருத்தத் தந்துயாம் பிணித்த

நெடுநல் யானை எம் பரிசில்.

கடுமான் தோன்றல்! செல்வல் யானே.

- சங்கப் புலவர் பெரும்சித்திரனார்.

புறம் 162

நான் யாழில் எனது குறுந்தகட்டை வெளியிட்டதையும் பின்விழைவுகலையும் அறிந்த இந்திந்தியத் தமிழரான பிரபல கலை விமர்சகரும் இசை ஆர்வலருமான நண்பர் எழுதிய கடிததில் இருந்து.ஒரு பகுதி.

"அன்பின் ஜெயபாலன்:

கவிஞர்கள் என்றால் வெகுளிகளாகத்தான் இருக்க வேண்டுமென்ற நியாயமா? இவ்வளவு

கஷ்டப்பட்டு ஒரு அழகான, தரமான இசைப்பேழை கொண்டு வந்துவிட்டு அதை அப்படியே

வலைத்தானம் செய்துவிட்டீர்கள்! வாழ்த்துவதா? வருந்துவதா என்று

தெரியவில்லை."

அவரதும் ஏனைய நண்பர்களதும் வசவு உண்மைதான், எதிர்பார்த்ததுபோல 1000 மேல் நேரடியாக தரவிறக்கம் செய்தபோதும் விலை தருவதாக ஒரே ஒரு வாக்குறுதி மட்டுமே வந்தது. நான் குறைந்தது 5% ஆர்வலர்களையாவது எதிர்பார்த்தேன். இணையத்தில் போட்டதால் வினியோகஸ்தர்களும் பின்வாங்கிவிட்டனர். எதிர்காலத்தில் எனது வழியைப் முனைகிறவர்கள் மேலுள்ள கடிதத்தை ஒருமுறை வாசிக்கவும்.

இப்பொழுது புலம் பெயர்ந்த இந்திய தமிழர்களின் தளம் ஒன்று கேட்டிருக்கிறது. பார்ப்போம். பொதுவாக இலங்கைத் தமிழர்கள் தமிழக வணிகக் கலைஞர்களைத் தவிர்த்து, இலங்கைக் கலஞர்களின் உழைப்பையும் முதலீடுகளையும் மதித்ததில்லை. கலைசார்ந்த தாழ்வு மனப்பாண்மை எங்கள் இனத்துவ முழுமையின் ஆழுமையின் ஒரு பிரச்சினைதான். சர்வதேச அரங்கில் முன்னணியில் இருக்கும் இலங்கைத் தமிழ்க் கலைஞர்கள் அனைவருமே தமிழகத்தவர்களாலோ அல்லது அயல் நாட்டவர்களாலோ கண்டுகொள்ளப் பட்டவர்கள்தான் என்கிற உண்மையும் சுடுகிறது. எனினும் இது நானே எடுத்த முடிவு. இனி யாரையும் குறை கூற முடியாது.

இத்துடன் இந்த விவாதங்களைப் புறந்தள்ளிவிட்டு சங்கப் புலவன் பெருஞ்சித்திரனாரைப் போல "செல்வல் யானே" என விட்டு விலகிச் செல்கிறேன்.

வ.ஐ.ச.ஜெயபாலன்

Link to comment
Share on other sites

Dear poet,

Since i had viral infection last few days could not go out. Only today i got my internet banking enabled for TT.

I was trying to send the money i promised.

unfortunately, they need your bank address. Can you please provide the details. thanks.

-Esan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.