Jump to content

தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?!


தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?  

22 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...அவுஸ்ரேலியா-----50 லச்சத்திகு மேல...

அப்படியா....!!

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முகத்தாரின் டயரியைப் பாத்தால் உங்களுக்கு வடிவா விளங்கும் எண்டு நினைக்கிறன் (இது தொழில் இரகசியம் இருந்தாலும் தாரன் பாருங்கோவன்

முதலில் வெளிநாட்டு மாப்பிளைகளின் ரேட்.................

கனடா . அமெரிக்கா ...அவுஸ்ரேலியா-----50 லச்சத்திகு மேல...

அய்ய்ய்ய்ய்...... கனடா 1 ஆவது....... :P :P :P :lol:

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியா . கனடா பெடியளின்ரை சிரிப்பை பாத்தியளே........

இப்பதன்னும் உங்களுக்கு விளங்களையோ உவை என்னத்துக்கு படிக்கினம் எண்டு...(படிச்சு 1ஆவதா வா எண்டால் ?????)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளை இது என்ரை ரேட்....வேறை புரோக்கர்மாரின் ரேட்டுகள் வித்தியாசப்படும் சண்டைக்கு வந்துடாதை

இதில நாங்க சண்டைக்கு வாறதுக்கு என்ன முகத்தார் இருக்கு. லண்டன் மா..ப்பிள்ளைகள் தான் சண்டைக்கு வரணும். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் மாடுகள் சே மாப்பிள்ளைகள் 2 வது இடத்திலையா இருக்கினம். :wink: :lol::lol:

தமிழ் உங்களுக்கு ஆறு பாய குதிரையும்வேணும் ஆறுபணத்திற்கும் வேணுமெண்டால்.

எங்கடை திருமணத்தின் அடிப்படை கருத்து மாறவேண்டும். ஒரு பேச்சுக்கு பெண்கள் டொக்டர் எஞ்சினியர் வெளிநாட்டு மாப்பிள்ளையளைத்தான் கட்டுவம் எண்டால் அங்கை இருக்கிற மாடுகள் சீ மாப்பிள்ளையள் என்ன செய்கிறது? முதிர் மாடுகளாகத்தான் இருக்க வேண்டும் . எந்தப் பெற்றோர் தங்கள் பெண்பிள்ளைகளுக்கு வருமானம் குறைந்த மாப்பிள்ளைகளை கட்டவிரும்புவினம். எங்கடை பெரியவர்கள் திருந்த வேணும். சீதனம் என்ற பிரச்சனையால்தான் சிறிய தொழில் செய்கின்ற ஆண்களுக்கும் திருமணம் நடக்கிறது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் உங்களுக்கு ஆறு பாய குதிரையும்வேணும் ஆறுபணத்திற்கும் வேணுமெண்டால்.

எங்கடை திருமணத்தின் அடிப்படை கருத்து மாறவேண்டும். ஒரு பேச்சுக்கு பெண்கள் டொக்டர் எஞ்சினியர் வெளிநாட்டு மாப்பிள்ளையளைத்தான் கட்டுவம் எண்டால் அங்கை இருக்கிற மாடுகள் சீ மாப்பிள்ளையள் என்ன செய்கிறது? முதிர் மாடுகளாகத்தான் இருக்க வேண்டும் . எந்தப் பெற்றோர் தங்கள் பெண்பிள்ளைகளுக்கு வருமானம் குறைந்த மாப்பிள்ளைகளை கட்டவிரும்புவினம். எங்கடை பெரியவர்கள் திருந்த வேணும். சீதனம் என்ற பிரச்சனையால்தான் சிறிய தொழில் செய்கின்ற ஆண்களுக்கும் திருமணம் நடக்கிறது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?

சே நமக்கு குதிரைகள் எல்லாம் வேண்டாம். என்ன லண்டன் மாப்பிளைகள் 2வதில வந்திட்டமே என்று பாத்தம்.

அண்ணை நம்மப்பொறுத்தவரை பெண்ணாய் இருந்தாலும் சரி ஆணாய் இருந்தாலும் சரி முடிந்தளவு தங்கள் படிப்புக்கு ஏற்ற மாதிரி சோடியைத்தேடிக்கிறது தான் நல்லது என்று சொல்லவம். இப்ப பாருங்க நாங்க O/L கூடச்சரியாய் முடிக்கல இப்ப நாங்க ஒரு டொக்டர் மாப்பிளையைத்தேட முடியுமா இல்லை ஒரு என்ஜினியரைத்தான் தேட முடியுமா..?? சரி அப்படிக்கிடைத்துவிட்டாலும் பிறகு. நீ படிக்கல நான் படிச்சன் என்று குத்திக்குத்தி முடக்கிறதிலையே காலம் போய்விடும். அதெல்லாம் வேண்டாம் விரலுக்கேத்த வீக்கம். எங்களுக்கு ஏற்ற மாதிரித்தானே தேடப்பாப்பம். :P

Link to comment
Share on other sites

முந்தின காலத்தில பேருக்கும் புகழுக்கும் படித்தார்கள். இடைக்காலத்தில வளமான வாழ்வு தேடப் படித்தார்கள். தற்போதைய நிலையிலை திருமணத்தின் போது சீதனம் வாங்கப் படிக்கிறார்கள். ஆனால் எங்களது இளம் தலைமுறையின் மனப்போக்கில் பாரிய மாற்றங்கள் காணப்படுகிறது என்று நான் நினைக்கிறன். இவர்கள் அறிவைப் பெருக்கி தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு உதவ வேணும் என்று நினைக்கிறார்கள். இதனை நான் கூறுவதற்கு காரணம் - சுனாமியின் பின்னர் பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டக நிகழ்ச்சியொன்றில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் சிறுமியொருவரிடம் உன்னால என்ன செய்ய முடியும் என்று கேட்டார்கள். அவள் சொன்னாள் - நான் நல்லாய் படிப்பன் நல்லாய் படிச்சுப்போட்டு என்ரை நாட்டுக்குப் போய் சேவை செய்வன்.

என்ன ஏற்றுக்கொள்கிறீர்களா? நான் எதுக்கு வாக்குப்போட?

கவனியுங்கள் சொன்னது சிறுமி...எங்களில எத்தினை பேர் பாலர் வகுப்பில் ரீச்சர் கேட்க டாக்குத்தர் இஞ்சினியர் ஆகி எங்க ஊருக்கு சேவை செய்வம் என்று சொல்லி இருப்பம்.....ஆனா இப்ப...என்ன கனவில இருக்கம்.....! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

சே நமக்கு குதிரைகள் எல்லாம் வேண்டாம். என்ன லண்டன் மாப்பிளைகள் 2வதில வந்திட்டமே என்று பாத்தம்.

அண்ணை நம்மப்பொறுத்தவரை பெண்ணாய் இருந்தாலும் சரி ஆணாய் இருந்தாலும் சரி முடிந்தளவு தங்கள் படிப்புக்கு ஏற்ற மாதிரி சோடியைத்தேடிக்கிறது தான் நல்லது என்று சொல்லவம். இப்ப பாருங்க நாங்க O/L கூடச்சரியாய் முடிக்கல இப்ப நாங்க ஒரு டொக்டர் மாப்பிளையைத்தேட முடியுமா இல்லை ஒரு என்ஜினியரைத்தான் தேட முடியுமா..?? சரி அப்படிக்கிடைத்துவிட்டாலும் பிறகு. நீ படிக்கல நான் படிச்சன் என்று குத்திக்குத்தி முடக்கிறதிலையே காலம் போய்விடும். அதெல்லாம் வேண்டாம் விரலுக்கேத்த வீக்கம். எங்களுக்கு ஏற்ற மாதிரித்தானே தேடப்பாப்பம். :P

சீ..கேவலம்..நீங்க எல்லாம் பெண்கள்.... சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று எழுதுகிறீர்களே தவிர நினைக்கிறீர்களே தவிர சாதிக்க முயலவில்லை...!

டாக்குத்தர் ஆனால் என்ன இஞ்சினியர் ஆனால் என்ன அவரவருக்கு அந்தந்த துறையில் ஏதோ ஓரளவு தெரியும் என்பதுதான் அர்த்தமே ஒழிய அவர்கள் அனைத்தும் அறிந்த ஞானிகள் அல்ல...!

இபப்டித்தான் பெண்கள் ஒன்றில் தங்களைத் தாங்களே தாழ்த்தி வாழ்ந்து ஆண்கள் அவர்கள் முதுகில் ஏறிச் சவாரி செய்ய அனுமதிக்கிறார்கள்..! அன்றில் உயர்த்தோ உயர்த்தென்று உயர்த்தி தாங்கள் ஆண்கள் முதுகில் சவாரி செய்கின்றனர்...!

உன் படிப்பு உன்னோடு...என் படிப்பு என்னோடு...அன்புக்குப் படிப்பும் பட்டமும் தேவையில்லை....அது தானாக வருவது...அதுதான் இதயங்களை இனைத்து வைத்து நிம்மதியான வாழ்வை அளிப்பது....! :wink: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா குருவிகள் இது கேவலம் என்றில்லை உண்மையைச்சொன்னம். இப்ப வாழ்க்கையில சாதாரனமாய் நடக்கிறதை சொல்லுறம். ஆண் ஒரு A/L பாஸ் பண்ணியிருப்பார் பெண் 9 ம் வகுப்பு முடிச்சிருக்க மாட்டா அந்த குடும்பத்தில பாவம் பெண்ணைப்படுத்துவினம். படிப்பறிவில்லாதவள் அது இது என்று.

இப்ப டொக்கடரோ இன்சினியரோ அந்த துறையில அவைக்கு கொஞ்சம் ஏனும் தெரியும் இல்லையா..?? ஒன்றும் தெரியாது என்பது கொஞ்சம் கஸ்டமான விடயம் தானே.

எங்களை விட றொம்ப படிச்சவர்களுடன் படிப்பறிவில்லாமல் நமக்கு ஒன்றும் தெரியாதே என்று கவலைப்படுவதை விட. எங்கள் தகமைக்கு ஏற்ற மாப்பிளையைப்பாத்துவிட்டால் அந்த ஏற்றத்தாழ்வு என்று விடயத்திற்கு இடமே இல்லை இல்லையா..?? அங்கும் சமநிலை பேனப்படுது. நான் உனக்கு எந்தவிதத்திலும் குறைந்தவள் இல்லை என்று வாழலாம். அன்புதான் முக்கியம் என்று சொல்லுவினம் பிறகு. சம்பளத்தில் இருந்து ஓய்வெடுப்பது வரை இதைத்தான் சொல்லுவினம். பெரிய கவுன்டக்கிளாக் உத்தியோம் என்று நமக்கு தெரியாதா இந்த ஆணாதிக்க சமூகம் பற்றி. அதுவும் அரைவாசிக்கு மேலானவர்களிற்கு பெண்களை மதிக்கவே தெரியிறதில்லை. பிறகு மிதிக்க இலகுவாக இருக்கும். இப்படி குட்டுப்பட்டு வாழ்வதை பெண் தவிர்க்கலாம் தானே. எல்லாருக்கும் டாக்டரும் என்ஜினியரும் தானே வேணும் என்றால் மாடு மேய்ப்பவர்கள் விவசாய் செய்பவர்கள் கதி என்ன ஆகிறது. அவர்களும் வாழத்தானே வேணும் அங்கு தான் நீ படிச்சவன் நான் படிக்காதவன் என்கிற வேற்றுமையிருக்காது. :wink:

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் டாக்டரும் என்ஜினியரும் தானே வேணும் என்றால் மாடு மேய்ப்பவர்கள் விவசாய் செய்பவர்கள் கதி என்ன ஆகிறது. அவர்களும் வாழத்தானே வேணும் அங்கு தான் நீ படிச்சவன் நான் படிக்காதவன் என்கிற வேற்றுமையிருக்காது.

சரியாச் சொன்னாய் பிள்ளை..உங்கை யாரவது மாடு மேக்கிறவனை கட்ட ரெடி எண்டால் சொல்லு.என்னட்டை 3 அப்பிடி வேலை செய்யிற பெடியங்களின்ரை சாதகம் கிடக்கு..சட்டு புட்டு எண்டு விசயத்தை முடிப்பம்........கிடைக்கிற கொமிசனிலை உனக்கும் ஒரு பங்குதாறன் பயப்படாதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் எங்களுக்கு அதுக்கு அவசியம் இல்லை எங்களை மாதிரி O/L முடிக்காத ஒரு ஆளை ஏற்கனவே பாத்திட்டம். பாவம் ஏன் வீணாய் தரகருக்கு காசு கொடுக்கவேணும் என்று தான். :P :wink:

Link to comment
Share on other sites

எங்களை மாதிரி O/L முடிக்காத ஒரு ஆளை ஏற்கனவே பாத்திட்டம்.

எங்கடை பிழைப்பிலை மண்ணை போட எண்டே ஒரு கூட்டம் காத்திருக்கிது என்ன செய்வம்............பிள்ளை உந்தக் கதையை கேட்டா கனசனத்துக்கு நாடி விழுந்திருக்கும் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் உங்கள் பிழைப்பில மண்ணைப்போடுவது எங்கள் நோக்கம் அல்ல ஒரு முன்றாவது நபர் அறிமுகம் செய்து நமது பந்தம் உருவாக வேண்டாமே என்ற எண்ணம் தான். இங்க யாருக்கும் நாடிவிழாது ஏன் என்றால் இந்தக்கதை எல்லாருக்கும் எப்பவோ தெரியும். இது புதிய விடயம் இல்லை நீங்கள் புதிசா அது தான் சொன்னம். :wink: :P

Link to comment
Share on other sites

ஆகா குருவிகள் இது கேவலம் என்றில்லை உண்மையைச்சொன்னம். இப்ப வாழ்க்கையில சாதாரனமாய் நடக்கிறதை சொல்லுறம். ஆண் ஒரு A/L பாஸ் பண்ணியிருப்பார் பெண் 9 ம் வகுப்பு முடிச்சிருக்க மாட்டா அந்த குடும்பத்தில பாவம் பெண்ணைப்படுத்துவினம். படிப்பறிவில்லாதவள் அது இது என்று.

இப்ப டொக்கடரோ இன்சினியரோ அந்த துறையில அவைக்கு கொஞ்சம் ஏனும் தெரியும் இல்லையா..?? ஒன்றும் தெரியாது என்பது கொஞ்சம் கஸ்டமான விடயம் தானே.

எங்களை விட றொம்ப படிச்சவர்களுடன் படிப்பறிவில்லாமல் நமக்கு ஒன்றும் தெரியாதே என்று கவலைப்படுவதை விட. எங்கள் தகமைக்கு ஏற்ற மாப்பிளையைப்பாத்துவிட்டால் அந்த ஏற்றத்தாழ்வு என்று விடயத்திற்கு இடமே இல்லை இல்லையா..?? அங்கும் சமநிலை பேனப்படுது. நான் உனக்கு எந்தவிதத்திலும் குறைந்தவள் இல்லை என்று வாழலாம். அன்புதான் முக்கியம் என்று சொல்லுவினம் பிறகு. சம்பளத்தில் இருந்து ஓய்வெடுப்பது வரை இதைத்தான் சொல்லுவினம். பெரிய கவுன்டக்கிளாக் உத்தியோம் என்று நமக்கு தெரியாதா இந்த ஆணாதிக்க சமூகம் பற்றி. அதுவும் அரைவாசிக்கு மேலானவர்களிற்கு பெண்களை மதிக்கவே தெரியிறதில்லை. பிறகு மிதிக்க இலகுவாக இருக்கும். இப்படி குட்டுப்பட்டு வாழ்வதை பெண் தவிர்க்கலாம் தானே. எல்லாருக்கும் டாக்டரும் என்ஜினியரும் தானே வேணும் என்றால் மாடு மேய்ப்பவர்கள் விவசாய் செய்பவர்கள் கதி என்ன ஆகிறது. அவர்களும் வாழத்தானே வேணும் அங்கு தான் நீ படிச்சவன் நான் படிக்காதவன் என்கிற வேற்றுமையிருக்காது. :wink:

ஏங்க ஒரு விவசாயம் பண்ணுற பையன ஒரு டாக்குத்தர் பொண்ணு கட்டிக்கிட்டா என்ன நடந்திடும்...அப்படிச் செய்வதுதான் அவர்களின் குழந்தைகள் சமூகத்தில் தகுந்த கல்வி அறிவு பெற வழிவகுக்கும்...உங்களப் போல் ஓல் ஓல் ஓட நின்றால் வரும் வாரிசுகள் 8 ஓட நிக்குங்கள்...ஆக தராதரம் என்பது குடும்பத்துக்கல்ல...தேவைக்கு எங்க அவசியமோ அங்க பாவிக்கிறத்திற்கே அன்றி...வேறிற்கில்லை...! :wink: :idea:

கல்வி அறிவில் பிந்தங்கிய நிலை என்பது களையப்பட வேண்டின் கல்வி அறிவு பெற்றவர்கள்...அதற்கான சந்தர்ப்பத்தை இழந்தவர்களைத் திருமணம் செய்வதே மேல்....! அதற்கேற்ற மனமாற்றங்கள் சமூகத்தில் அவசியம்...! ஆண்கள் அதைப் பலகாலமாகச் செய்கிறார்கள்...பெண்கள் தான் இப்படியான நிலைகளுக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள முனைய வேண்டும்..! :wink: :idea:

Link to comment
Share on other sites

சந்தோசம் பிள்ளை எப்ப சாப்பாடு போடப் போறாய்......நான் உன்னைக் கேக்கேலை உன்ரை சினேகிதப் பெட்டைகள் யாராச்சும் இருந்தாலும் சொல்லன் ஆனாலும் நல்ல காரியகாரிதான் போ.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இப்ப பாக்கிறது எங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வைத்திருக்கிறதற்கு வழி. ஒரு டாக்டர் பெண் ஒரு விவசாயியை மணம் முடிக்கலாம் தப்பில்லை. ஆனால் பின்பு அந்த டாக்டர் பெண் செய்வது கதைப்பது எல்லாம் அந்த விவசாயியை பல பல இடங்களில் பாதிக்கலாம் அதனால் அவள் உயர்ந்தவள் நான் படிக்காதவன் என்கிற எண்ணம் தோன்றலாம் இதால பல பின்விளைவுகளை ஏற்படலாம்.

இப்ப நாங்கள் ஓல் படிச்சம் என்றால் ஒரு டாக்கடர் மாப்பிளை வந்தால் தான் எங்கள் சந்ததி முன்னேறும் என்கிறது தப்பு. அப்படிப்பாத்தா நாங்கள் ஓல் மட்டும் எனினும் படிச்சிருக்க முடியாது. ஒராள் பெரிய பட்டதாரியாய் இருந்து மற்றவர் குறைவாய் இருந்து குடும்பத்தில் ஏற்படுகின்ற பல விடயங்கள் வருகிற சந்ததியையும் பாதிக்கலாம்.

ஊரில் விவசாயம் செய்தவர்கள் இங்க வந்து கொஞ்சம் ஆங்கிலத்தைப்படிச்சிட்டு பின்னர் வந்த மனைவியவையை படுத்திற பாடு அதிகம். இப்ப பாருங்கள் ஆண்கள் கூடுதலாய் தங்களை விட அதிகம் படிச்ச பெண்களை மணம் முடிக்க முன்வரமாட்டார்கள் அப்படிச்செய்வது குறைவு. அப்படித்தான் பெண்கள் ஏன் நினைக்கக்கூடாது. பூந்தோட்டமாய் அமைய வேண்டிய வாழ்வில் ஏன் இந்தப்பிரச்சனையில் முட்கள் முளைக்க வேண்டும்.

பெண்கள் படித்து பட்டதாரிகளாய் இருக்கலாம் தங்களுக்கு எற்ற பட்டதாரிகளைத்தெரிவு செய்யலாம். ஆனால் தேவையில்லாமல் டாக்டர் என்சினியர் தான் வேணும் என்று ஒற்றைக்காலில நிண்டுவிட்டு பிறகு. கண்ணீர் வடிச்சு பிரியோசனம் இல்லை. :wink: ஆரம்பத்திலையே சரியாய் முடிவெடுத்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பிற்காலத்தில் தட்டுத்தடுமாறிக்கூட வார்த்தைகள் விளையாட வாய்ப்பில்லை அல்லபா :wink: :mrgreen:

Link to comment
Share on other sites

புரிந்துணர்வும் அன்பும் பாசமும் இருந்தால் யாரும் யாரோடும் சேர்ந்து வாழலாம்...பிறக்கும் போதே மனிதனை யாரும் தரப்படுத்தி உலகத்துக்கு அனுப்பி வைப்பதில்லை..உங்க கருத்து மனிதனை மனிதன் தரப்படுத்தித் தாழ்த்துவது உயர்த்துவதும்...அதன் மூலம் சமூகத்துள் மனிதப் பிரிவினையைத் தூண்டி சமூக ஒற்றுமையை குடும்ப ஒற்றுமையைக் குலைப்பதையுமே சொல்கிறது...! தமிழர்கள் மற்றும் தெற்காசிய ஆண்கள் தான் தங்களிலும் படிப்பில் குறைந்த பெண்ணைத் தேடுவது...காரணம்..அவர்களுக்குள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் வாழ்கின்ற இந்த சமுதாயம் இப்பொழுதும் ஆணாதிக்க வெறிபிடித்ததாய் தான் இருக்கு முழுதாய் மாறிவிடவில்லை. எங்களது கருத்து பெண்கள் தன்னைவிட படித்த ஒரு ஆடவனை மணம்முடித்த பின்னர் எல்லாத்திற்கும் அவனில தான் சார்ந்திருக்க வேண்டிய நிலை வரலாம். ஒரு டாக்கடர் கண்டிப்பா தன் மனைவி சாதாரன தொழில் செய்ய விடமாட்டார் காரணம். கெளரவம் அது இது என்று. அந்தப்பெண்ணின் வாழ்வு அங்கு சார்ந்து வாழ வேண்டிய நிலையில போய் முடிகிறது. எங்களது படிப்பு தகுதிக்கு ஏற்ற வாறு ஒருவனை மணம் முடித்தால் அவனிற்கு நிகராய் பெண் வேலைக்கு போகலாம் சம்பாதிக்கலாம் அவனில சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதைவிட படித்த ஒருவர் என்றால் பிழைகள் செய்யும் போது சமநிலையில் இல்லாத ஒரு பெண் அதைத்தட்டிக்கேட்கிற வேளை கூட பிரச்சனைகள் உருவாகிறது. நீ என்ன என்னைக்கேக்கிறது நான் என்ன உனக்கு சொல்கிறது என்று. இப்படிப்பல. வருகிற சந்ததிகள் துறைசார் முறையில் இருவரது அறிவையும் பெறுவதற்காய் வாழ்கிற சந்ததி இன்னல்களை அனுபவிக்க முடியாது.

பெண்கள் படித்து தமக்கு சரிசமமாய் மாப்பிள்ளையைத்தேடலாம் அது வேறு. இன்றைய சூழ்நிலையில் ஆண் எப்படி தன்னைவிடப்படித்த ஒரு பெண்ணை மணம் முடிக்க தயங்குகிறானோ அப்படி பெண்ணும் யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.

புரிந்துணர்வு இருந்தால் போதும் என்று. சொல்லில மட்டும் சொல்லலாம். இப்படிப்பட்ட பிரச்சனைகளை தாங்கியவாறு நிறையப்பெண்கள் வாழ்கிறார்கள். இவை களையப்படவேணும் என்றால். பெண்கள் இவைகளை சிந்திக்கவேணும். டாக்டர் மாப்பிளை நல்ல காசுவரும். நல்லாய் வழலாம் என்று எண்ணுறவை கடைசியில நின்மதி சந்தோசம் தொலைத்துவிட்டு நிண்டு பிரியோசனம் இல்லை. :wink: :mrgreen: :P

Link to comment
Share on other sites

முந்தின காலத்தில பேருக்கும் புகழுக்கும் படித்தார்கள். இடைக்காலத்தில வளமான வாழ்வு தேடப் படித்தார்கள். தற்போதைய நிலையிலை திருமணத்தின் போது சீதனம் வாங்கப் படிக்கிறார்கள். ஆனால் எங்களது இளம் தலைமுறையின் மனப்போக்கில் பாரிய மாற்றங்கள் காணப்படுகிறது என்று நான் நினைக்கிறன். இவர்கள் அறிவைப் பெருக்கி தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு உதவ வேணும் என்று நினைக்கிறார்கள். இதனை நான் கூறுவதற்கு காரணம் - சுனாமியின் பின்னர் பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டக நிகழ்ச்சியொன்றில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் சிறுமியொருவரிடம் உன்னால என்ன செய்ய முடியும் என்று கேட்டார்கள். அவள் சொன்னாள் - நான் நல்லாய் படிப்பன் நல்லாய் படிச்சுப்போட்டு என்ரை நாட்டுக்குப் போய் சேவை செய்வன்.

என்ன ஏற்றுக்கொள்கிறீர்களா? நான் எதுக்கு வாக்குப்போட?

ஆமாம் புலம் பெயர்ந்து வாழும் இளம் சமுகத்தினரிடையே ஒரு பரந்த அறிவு வளர்ந்து வருவது தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?

* அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ

* வளமான வாழ்வு தேட மட்டும்

* திருமணத்தின் போது சீதனம் வாங்க

* பெருமைக்கும் புகழுக்கும்

கேள்வியை தமிழ் ஆண்கள் உயர்கல்வி கற்பது ஏன்....? என்று மாற்றினால் கொடுத்த விடைகள் பொருத்தமாக இருக்கும். திருமணத்தின் போது தமிழ் சமூகத்தில் பெண் சீதனம் வாங்கியதாகக் கேள்விப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?

* அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ

* வளமான வாழ்வு தேட மட்டும்

* திருமணத்தின் போது சீதனம் வாங்க

* பெருமைக்கும் புகழுக்கும்

கேள்வியை தமிழ் ஆண்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?

கொழுந்து... அறிவுக்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் மாடுகள் சே மாப்பிள்ளைகள் 2 வது இடத்திலையா இருக்கினம். :wink: :lol::lol:

இப்ப இங்க மட்டை போடுவதில் பிரச்சனை அதனால் கொஞ்சம் குறைச்சிருக்கினம் போல....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் என்ற ரீதியில் எனது அபிப்பிராயங்கள்

* அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ

அறிவை வளர்க்கலாம்தான். என்றாலும் உயர் கல்வி கற்றுத்தான் அறிவு வரும் என்று நான் நம்பவில்லை. தமிழர்கள் மத்தியில் பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் அறிவாளிகள், அவர்கள் சொல்லுவது எல்லாம் சரி என்ற பிழையான கருத்துருவாக்கம் உள்ளது.

சமூகத்திற்கு உதவ வேண்டும் என்று உயர் கல்வி கற்போர் மிக அரிது. தாயகத்தில் சமூகம் என்பது ஓரளவேனும் தற்போதும் உள்ளது. புலத்தில் சமூகம் என்று பொதுவான ஒரு கட்டமைப்பை நான் காணவில்லை. ஒன்றில் தனது ஊராருடன் தங்களை அடையாளப் படுத்துவார்கள், அல்லது தமது வேலைத்தள, கல்வியிட, விளையாட்டு நண்பர்களுடன் தங்களை அடையாளப்படுத்துவார்கள்.

இருக்கும் சமூகத்திற்கு ஏதாவது சேவை செய்ய யாராவது முயல்கிறார்களா? பணத்தைச் சுருட்டவே பலர் சமூக சேவை செய்கிறார்கள். இதில் உயர்கல்வி கற்றவர்கள், கல்லாதோர் என்ற பேதமில்லை.

* வளமான வாழ்வு தேட மட்டும்

படிக்கும்போது ஏன் படிக்கிறோம், அல்லது பெற்றோர் பிள்ளைகளை படி என்று சொல்லும்போது ஏன் சொல்லுகிறார்கள் என்று சிந்தியுங்கள். படிக்காவிட்டால் பிற்கால வாழ்வு சிறப்பாக இராது, கஸ்டப்படுவாய், பிறர் உன்னை ஏமாற்றிவிடுவார்கள், பெற்றோரை வயதான காலத்தில் நன்றாகப் பார்க்க வேண்டும் என்று சொல்லத்தான் கேட்கிறோம்.

எனவே வளமான வாழ்வுக்குக் கல்வி அவசியம். உயர்கல்வி என்றால் மேலும் வளமாக்கலாம்.

* திருமணத்தின் போது சீதனம் வாங்க

பரீட்சை வரும்போது யாராவது பரீட்சையில் நன்றாகச் செய்து சித்தி எய்தினால் 50 லட்சம் வாங்கலாம் என்று எண்ணிப் படிக்கிறார்களா?

சீதனம் வாங்க வேண்டும் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு யாரும் கல்வி கற்பதில்லை (அப்படி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கடைசி மட்டும் சித்தியடைய மாட்டார்கள்). படித்து முடித்தபின்னரே பலர் திருமணத்தை பற்றி ,கூடவே சீதனத்தைப் பற்றியும், சிந்திக்கிறார்கள்.

எனவே சீதனத்தை வாங்கவேண்டும் என்பது முதற்காரணியாக இருக்காது.

சீதனம் வாங்குவதைவிட தன்னளவு படித்த, தன்னளவு சம்பாதிக்கக் கூடிய பெண்ணை ஆண் தெரிவு செய்தால், நீண்டகால நோக்கில் நன்மை பயக்கும். என்றாலும் நம்வர்கள் அதைச் செய்ய முன்வரமாட்டர்கள். காரணம் பலவாக இருக்கும். சிலவேளை, சீதனம் வாங்கா விட்டால், தன்னை வியாதிக்காறன் என்று எண்ணிவிடுவார்களோ என்ற பயம், சிலவேளை படித்த பெண் என்றால் சொல்வழி கேட்கமாட்டாள் என்ற பயம் (படித்த பெண் என்றால் கொஞ்ச விஷயங்கள் தெரியத்தானே செய்யும்), சிலவேளை பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்ற நோய், சிலவேளை அவசரம் பெருந்தொகை தேவைப்படலாம் (கல்யாண வயதி ஒரு தங்கை, படித்ததால் வந்த கடன் சுமை) இப்படிப் பல காரணங்கள்.

* பெருமைக்கும் புகழுக்கும்

பெருமையும் புகழும் யாருக்குத்தான் கசக்காது. இவை உயர்கல்வி கற்றால் மட்டும் கிடைக்காது. மனித நேயமும், சமூகத்திற்கு உதவும் குணமும், அல்லது மனித குலத்திற்கே நீண்டகாலத்திற்கு உதவக்கூடிய எதையாவது கண்டுபிடிக்கக் கூடிய திறமையும் இருக்க வேண்டும். அல்லாவிடில் திருமண அழைப்பிதழில் மட்டும்தான் தான் படித்ததை பறைசாற்ற முடியும். இது குறுகியகால சந்தோஷத்தை மாத்திரம்தான் தரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னைப் புரிந்துகொள்ளுமளவிற்கு அறிவு உள்ளது. சிலருக்கு நீ இப்படி என்று மற்றவர்கள் சொல்ல வேண்டியுள்ளது. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இங்க மட்டை போடுவதில் பிரச்சனை அதனால் கொஞ்சம் குறைச்சிருக்கினம் போல....?

அப்ப மட்டை தான் தரத்தை தீர்மானிக்குதோ.. சரி சரி :|

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.