Jump to content

விந்தையாய் இருக்கிறது நீங்கள் புலிக்கூட்டம் என்பது


Recommended Posts

பட்டும் படாமல் இருப்போரை எல்லாம்

தட்டிக் கொடுத்து தன் பக்கம் ஈர்க்காமல் - தலைகனத்து

கொட்டிடும் தேல் எனவே கொட்டி கொட்டி

வெட்டி விடுவதுதான் விடுதலைக்கு பங்களிப்பா?

பெயருக்கு தலைவராக இருப்போரெல்லாம்

பெரிய தலைவர்களை எல்லாம்

சரியாக பகைத்து கொண்டே இருந்தால்

யார் பக்கம் சாய்வார் அவர்?

பட்ட மரமென்று ஒன்று இருந்தால்

விட்டு வெட்டினால், வேர் விட்டு வெட்டினால்

சட்டெனெ பெய்யும் மழையில் சடுதியில் துளிர்த்துவிடும்

ஒட்ட வெட்டினால் நட்டம் நமக்கல்லவா?

உயிர் காக்கும் பிரச்சனைகள் இருக்கும் போது

மயிர் காட்டி கட்டுரை வரைவதும் - பதிலுக்கு

வயிற்று பிழைப்பிற்க்கெ வக்காலத்து வாங்குகிறார் என்பதும்

உயிர் காக்குமா? நம் தமிழர் உயிர் காக்குமா?

எலி கூட்டமல்ல கலைஞரே - அது

புலிக் கூட்டம்தான் - புவனியில் எதிரிகள்

கிலி பிடித்திட படை நடத்தும் புலிக்கூட்டம்தான்

பழிப்பதுபோல் சொல்லாமல்; பக்குவமாய் சொல்லுங்கள்.

விந்தையாய் இருக்கிறது நீங்கள் புலிக்கூட்டம் என்பது

தந்தை பெரியாரால் திரட்டபட்ட தமிழர் கூட்டத்தை

சந்தையாக்கி சாமர்தியமாக அரியனை ஏறியதை

சிந்தையில் கொள்வீர்! சிறுமைப் படாதீர்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .

சிவராஜா , உங்களது நாசூக்கான கவிதையை நன்றாக ரசித்தேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் குயில் - தமிழகம்

பாராட்டுகிறோம்!

கருணாநிதி என்றும் தன்னை விடத்தலைவர் வேறு ஒருவரை வர விரும்பாதவர்., தன் மகனைத் தவிர.

தமிழ் மக்களின் தேசியத்தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் புகழ் கூட தன்னை விட வளர்ந்து விடக்கூடாது என்பதில்அவருக்கு ஒரு மறைமுக ஆசை உண்டு.

பழ.நெடுமாறன், வை.கோ., ஏன் தொல். திருமாவளவன் போன்றோர் கூட தன் பேச்சை மட்டுமே (ஈழ விடுதலையாகட்டும், உலகத்தமிழின ஒருங்கிணைப்பாகட்டும்) கேட்டு நடக்க வேண்டுமென்று விரும்புகிறவர்.

அதற்கு நல்ல எடுத்துக்காட்டு உலக தமிழ் வணிகர் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை முன்னின்று நடத்துபவர் யாரென்று பார்த்தால் தெலுங்கை கைவிட மறுக்கும் ஆற்காடு வீராசாமியாக இருக்கிறார்.

ஆக இவர்கள் திராவிடர் என்ற வார்த்தையை தங்களது அரசியல் வியாபாரத்திற்கும், தமிழர் என்ற சொல் கட்டுரை, கதைகள் போன்றவற்றை எழுதுவதற்கும் வைத்திருக்கும் ஒரு அற்ப, சுயநல மனிதர்களாகவே அறிந்து கொள்ள முடிகிறது.

பகுத்தறிவு வாதம் மஞ்சள் துண்டாகவும்

பெரியார் அவர்களின் கொள்கை பா.ச.க. பார்ப்பன கும்பல்களோடு கூட்டாகவும் இருக்கிறது.

அண்ணாவின் ஆரியமாயை செயலலிதா எதிர்ப்புக்கு மட்டும்

அவ்வப்போது தமிழர்கள் புல்லரிக்க கவிதை வரைவது பிற்பாடு

அதற்கு சப்பைக்கட்டு கட்டுவது

தமிழென்று சொல்லடா! தலைகுனிந்து நில்லடா!! கலைஞர் உள்ளவரை......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி Posted இன்று, 01:04 PM

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .

சிவராஜா , உங்களது நாசூக்கான கவிதையை நன்றாக ரசித்தேன் .

அரசியல் நாடகம் நடத்தும் அரக்கர்களுக்கு.. உறைக்கவேண்டும்

நல்ல கவிதை சிவராஜா

Link to comment
Share on other sites

சிறந்த ஒரு கவியாக்கம் சிவராஜா..! நன்றிகள்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவராஜனுக்கு

சொல்லிலும் சரி பொருளிலும் சரி ஓர் அருமையான கவிதையால் தமிழுக்கும் தமிழனுக்கும் குரல் கொடுக்கும் உங்களை போன்றோர் இருக்கும் வரை நம் தமிழீழம் அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

p சிவறாஜா ஆரோக்கியமான கருத்தை கவிதையாக சொல்லி இருக்கின்றீர்கள் பாராட்டுக்கள்!

உயிர் காக்கும் பிரச்சனைகள் இருக்கும் போது

மயிர் காட்டி கட்டுரை வரைவதும் - பதிலுக்கு

வயிற்று பிழைப்பிற்க்கெ வக்காலத்து வாங்குகிறார் என்பதும்

உயிர் காக்குமா? நம் தமிழர் உயிர் காக்குமா?

விந்தையாய் இருக்கிறது நீங்கள் புலிக்கூட்டம் என்பது

தந்தை பெரியாரால் திரட்டபட்ட தமிழர் கூட்டத்தை

சந்தையாக்கி சாமர்தியமாக அரியனை ஏறியதை

சிந்தையில் கொள்வீர்! சிறுமைப் படாதீர்!!

சொற்றொழில் நுட்பம் சிறப்பாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

நன்றி சிவராஜா அவர்களே. கவிதை பிரமாதம். கருத்து ஆழம் மிக்க கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கருத்துடனான கவிதை சிவராஜா அண்ணா

நன்றி கலந்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

அவசியமான நேரத்தில் எளிமையாகவும் ஆழமாகவும் ஆக்கப்பட்ட கவிதை. மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "உனக்கு தலை குனியும் !"     நேற்று:   "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!"   இன்று:   "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!"   நாளை:   "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.