Jump to content

ராகு காலம், எமகண்டம் என்பது என்ன?


Recommended Posts

சோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

சோதிடப்படி அவருடைய மகன் இவர், இவருடைய மகன் இவர் என்று சொல்வார்கள். ஆனால் அதைப் பற்றி சரியாகக் கூறுவதில்லை. இங்குள்ள ஆய்வாளர்களிடமும் அதற்கு சரியான பதிலில்லை.

ஜப்பானில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த காலங்களில் அவர்களது பணி சிறப்பாக இருக்காது என்பதை கண்டறிந்து அவ்வாறு செய்துள்ளனர்.

அதுபோல ராகுகாலம், எமகண்டத்திலும் பணியாளர்களின் நடவடிக்கையை கண்காணித்துள்ளனர். அந்த சமயங்களில் தான் வாக்குவாதம் வருவது, பிரச்சினைகள் பெரிதாவது என்று நேரிடுகிறது.

இதை வைத்துப் பார்க்கும்போது ராகுகாலம், எமகண்டம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரம். அதாவது திங்கட்கிழமை என்றால் ஆறு ஏழரை ராகு காலம் என்று கணித்து வைத்திருக்கிறார்கள்.

விஞ்ஞானப்படி, ராகு கேதுவிற்கு என தனியாக பாதை கிடையாது. நீள் வட்ட சுற்றுப்பாதையும் கிடையாது. மற்ற கிரகங்கள் வேகமாக செல்லும்போது அதில் இருந்து வரும் தூசுகள் தான் ஒன்று சேர்ந்து ராகுவும் கேதுவும் உண்டாகின்றன. அதாவது ஒவ்வொரு கிரகத்தில் இருந்து வெளிவரும் தூசுகள் ராகுவாகவும், கேதுவாகவும் மாறும் நேரத்தைக் கணித்துத்தான் ராகு காலம், கேது காலம் என்று சொல்கிறார்கள்.

மருத்துவர் செரியன் என்பவர் ராகு காலம், எமகண்டங்களில் எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்வதில்லை. மேலும் அந்த சமயங்களில் அவர் எதையும் பேசாமல் மெளனமாக இருந்துவிடுவாராம்.

அவர் ராகு காலம், எமகண்டங்களில் செய்த சில அறுவை சிகிச்சைகள் தோல்வி அடைந்ததை அவரே கண்காணித்து அந்த முடிவினை எடுத்துள்ளார். இத்தனைக்கும் அவர் கிறிஸ்துவர்தான்.

ராகு காலம், எமகண்டம் என்பது என்ன என்றால், அந்த நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

வாகனத்தை இயக்கும்போது கூட, ராகு கால, எமகண்ட நேரங்களில் அசுரத் தனமாக வண்டியை இயக்குவோம். சந்து பொந்துக்கு செல்வது போன்றவை நேரிடும். கட்டுப்பாட்டை மீறி செயல்படத் தூண்டும் நேரங்கள் அவை. அதனால் தான் அந்த நேரங்களில் பொறுமையாக செய்வது நல்லது, அமைதியாக இருப்பது நல்லது என்று கூறுவார்கள்.

வழக்கமான பணிகளை நாம் அந்த நேரங்களில் தொடரலாம். ஆனால் எந்த புதிய வேலையையும் அந்த நேரத்தில் துவக்குவது நல்லதல்ல. ஒரு நடிகர் தனது பட பூசையை ராகு காலத்தில் துவக்கி, பூனையை குறுக்கே போக விட்டு, விதவைப் பெண்ணை குத்துவிளக்கேற்றச் சொல்லி எல்லாம் செய்தார்.

ஆனால் அந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் பல்வேறு பிரச்சினைகள், வழக்குகள் என பலவற்றை அவர் சந்தித்தார்.

ஒவ்வொன்றும் அதற்கான பலனை நிச்சயம் அளிக்கும்.

ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை?

ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது கால‌ம் எ‌ன்பது இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்ல‌க் கூடாது. அதனை‌த்தா‌ன் எமக‌ண்ட‌ம் எ‌ன்று சொ‌ல்‌கிறோ‌ம்.

http://tamil.webdunia.com/religion/astrolo...080131032_1.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோதிடர் வித்யாதரன்

மருத்துவர்.செரியன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதையும் அதை இம்மாதிரியான மூடநம்பிக்கையின் விளைவே என்பதையும் குறிப்பிட்டு இருக்கலாம்

Link to comment
Share on other sites

ஓ...அப்படியோ நுணா அண்ணா..ணா டகவலிற்கு நன்றி..!!.. :D

உந்த கட்டுரையை வரைந்தவர் தானும் குழம்பி மற்றவையும் குழப்பிட்டார்..ர்..(அது தான் முடியல).. :lol: அது சரி உதில ஒரு வசனத்தில் உந்த கட்டுரையை வரைந்தவர் இவ்வாறு கூறுகிறார்..

சா..சா இப்படியுமா..??..ஏன் விதவைகள் மனிசர் இல்லையா..யா ஏன் அவை குத்து விளக்கு ஏத்த கூடாது..??..உப்படி மத்தவையின் மனசை புண்படுத்தி ஏதாச்சையும் ஆரம்பித்தால்..ல் அது உறுபட்ட மாதிரி..ரி தான்..ன்..!! :(

செய்யிற வேலயை ஒழுங்கா செய்தா எல்லாம் நன்னா நடக்கும் அதை விடுத்து உதுகளை பார்த்து கொண்டிருந்தா நடக்கிற வேலையும் நடக்காது..து பாருங்கோ..(சா நான் கூட உதை வாசித்து எண்ட நேரத்தை அநியாயமாக்கிட்டன் எண்டா பாருங்கோவன்).. :)

இதை தான் ராகுகாலம் எண்டு சொல்லுறது..!!

இன்னொரு சந்தேகம் நாங்க தானே உந்த ராகுகாலம் பார்க்கிறோம் உந்த வெள்ளைகள் ராகுகாலம் எல்லாம் பார்த்தோ செய்யீனம் அவையளுக்கு ஒன்னும் நடக்கல..ல தானே அவை நிலாவிற்கு "ரொக்கட்டும்" விட்டிட்டீனம் நாங்க உதுகளை பார்க்கிறதால.. :o

என்னும் பக்கத்து வீட்டு நிலாவிற்கு தான் "ரொக்கட்" விடுறோம் அதுவும் கடதாசியால..(நானும் உந்த கருத்தை எமகண்டத்தில எழுத்திட்டன் போல).. :)

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில பூனை குறுக்கால போனா தப்பில்ல நீங்க குறுக்கால போனா தான் தப்பு" :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராகுக்கும் எமனுக்கும் நாங்கள் வந்தால் தான் கண்டம் என்ன ஜம்மு :):(

Link to comment
Share on other sites

ராகுக்கும் எமனுக்கும் நாங்கள் வந்தால் தான் கண்டம் என்ன ஜம்மு :(:D

ஆமா..மா சரியா சொன்னியள்..போக போறன் போக போறன் எண்டு படம் காட்டிட்டு வருவோம் களதிற்கு முடியல இதை யாரிட்ட சொல்லி அழுறது.. :lol:

எங்க கோர்கிறன் எண்டு விளங்குது தானே சித்தப்பு..பு..!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா..மா சரியா சொன்னியள்..போக போறன் போக போறன் எண்டு படம் காட்டிட்டு வருவோம் களதிற்கு முடியல இதை யாரிட்ட சொல்லி அழுறது.. :(

எங்க கோர்கிறன் எண்டு விளங்குது தானே சித்தப்பு..பு..!! :)

அப்ப நான் வரட்டா!!

எங்கே கோர்க்குது என்று எனக்கு நல்லா விளங்குது ஆனால் நீங்கள் கோர்த்த நேரம் ரெண்டு பேருக்கு கோர்பட்டுட்டு மகனே :D:lol::) .வானிலை அறிக்கையில இன்று முகில் கூட்டமா இருக்கு மழைவரும் என்றால் கட்டாயம் மழை வருமா மகனே? வரலாம் வராமல் போகலாம் வந்தும் வராமலும் இருக்கலாம் அங்கால எனக்கே தலை சுத்துது வேண்டாம் :)

Link to comment
Share on other sites

எங்கே கோர்க்குது என்று எனக்கு நல்லா விளங்குது ஆனால் நீங்கள் கோர்த்த நேரம் ரெண்டு பேருக்கு கோர்பட்டுட்டு மகனே .வானிலை அறிக்கையில இன்று முகில் கூட்டமா இருக்கு மழைவரும் என்றால் கட்டாயம் மழை வருமா மகனே? வரலாம் வராமல் போகலாம் வந்தும் வராமலும் இருக்கலாம் அங்கால எனக்கே தலை சுத்துது வேண்டாம் :lol:

ஓ..விளங்கிச்சோ சித்தபுவிற்கு..கு..(விளங்கின மாதிரி காட்டி கொள்ளாதையுங்கோ என்ன)..யார் அந்த இரண்டு பேர் சித்தப்பு நான் கோர்த்தது ஒருவருக்கு தானே..னே..!! :D

இடையில் யாரப்பா செருகினது..?? :(

கடசியா கிடைத்த வானிலை அறிக்கை படி..டி வானிலை மப்பும் மந்தாரமாகவும் இருக்குமாம் சித்தப்பு..பு..ஆனபடியா குடையோட வெளியாள போங்கோ எப்ப இடி விழும் எண்டு யாருக்கும் தெரியா தானே..!! :)

மழை ஏன் பெய்ந்தது எண்டு சற்று நேரத்தில சொல்லுவீனம் அதையும் கேட்போம்..ம்..அதுவரைக்கும் நீங்க குழம்பாதையுங்கோ என்ன சித்தப்பு..பு..! :) !

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இப்ப தான், 9 கிரகங்கள் இல்லை, 8 தான் இருக்கு என்று விஞ்ஞானிகள் சொல்லிப்போட்டினம். அப்ப எந்த கிரகம் உந்த சாத்திரத்தில இல்லாம போட்டுது என்று உந்த சாத்திரிமாரை (யாழ் கள சாத்திரியை அல்ல) கேளுங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.