Jump to content

யாழ் மக்கள் லட்சக் கணக்கில் கூடி சிறிலங்கா இராணுவத்தின் மீதான தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர் - ஐலண்ட்


Recommended Posts

இன்றைய ஐலண்ட் தினசரியில் முன் பக்கத்தில் படத்துடன் வந்த செய்தி.

p1newssf4.jpg

வன்னியில் வெகுவாக முன் நேறி வரும் சிறிலங்காப் படையினரின் நடவடிக்கைகள் யாழ்க் குடா நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நல்லூர்க் கோவிற் திருவிழாவில் ஒரு லட்சம் மக்கள் கூடி பாதுகாப்புப் படையினர் மீதான தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.இத் திருவிழாவுக்குப் பாதுகாப்புப் படையினர் பலமான பாதுகாப்பை வழங்கினர்.

The rapid progress on the Vanni front has had a positive impact on the Jaffna peninsula where armed forces are gradually easing restrictions on the civilian community as a confidence building measure. The Nallur kovil festival has attracted a large section of the civilians living in the peninsula. A section of the crowd at Saturday’s ceremony held under heavy security forces presence. Jaffna Security Forces Headquarters estimated at least 100,000 devotees at the annual festival

http://www.island.lk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலையும் இப்பிடித் தேசிய முனைப்போட தேரிழுக்கிறவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கோவிலுக்கு சென்றாலும் அதை படையினர் சாதகமாக பயன் படுத்தி பிரச்சாரம் செய்து கொள்கின்றான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் நடக்கப் போகிறது என்று.. திருவிழா தொடங்கிய போதே சொல்லிவிட்டோமே யாழ் களத்தில். :lol:

சிங்கள இராணுவத்தின் பிரச்சார இயந்திரம் ஒன்றும் அதியசமானதல்ல. அவதானிப்புடன் இருந்தால் முறியடிக்கக் கூடியது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சுயமாகவே இயல்பாகவே தமிழீழ சுதந்திர தேச உணர்வு வரப் பெற்றவர்களாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

பிறவுண் வீதியிலும்.. கந்தர்மடத்திலும்.. பிணங்கள் வீழ்கின்றன.. அதைத் தாண்டி..

இதில் மக்களின் இறை நம்பிக்கை மீது குறை சொல்ல முடியாது. ஆனால் அது கண்மூடித்தனமாக இருப்பதுதான்.. கவலை அளிக்கிறது. :lol:

யாழ் குடாவில் 13 ஆண்டுகளாக சிங்கள இராணுவத்தின் இருப்பில் சுகம் கண்டவர்களும் உளர்.. உபத்திரம் கண்டவரும் உளர்.

மக்கள் தன்னுடன் என்று இராணுவம் வலிந்து காட்ட முனைவதே மக்கள் அதனுடன் இல்லை என்பதைக் காட்டுகிறது. இருந்தாலும் பிரச்சார ரீதியில் இது இராணுவத்தின் மனோபலத்தை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கான உயிர் விலையை இராணுவத்துக்குக் கொடுக்கப் போவதும்.. இதே மக்கள் கூட்டம் தான்..!

கழுத்தறுப்புக்கு முதல் கடாக்கள் களங்களில் தீனியிட்டு.. பூசைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன..! எப்போ இவற்றை சுயமாகப் புரியப் போகின்றன.. யாழ்ப்பாணத்துப்.. பனங்காய்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தியை யாழ் குடாநாட்டு மக்கள் அறிவார்களா ? ஒருவேளை அறியக்கூடியமாதிரி இருந்தால் நிச்சயம் அவர்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் இதையே அடுத்த முறை செய்யமாட்டார்கள் என்று கூறமுடியாது............. ஏனேன்றால் திருவிழாவுக்கு போகவிட்டால் கனபேருக்கு நித்திரையே வராது :lol::lol:

Link to comment
Share on other sites

இதுவே நாளைக்கு ஆரியகுளம் சந்தியில இருக்கிற புத்தரின்ர கோமணத்திற்கு சனத்தை சுத்தி வைளைச்சு கொண்டு போய் நடத்திக் காட்டுறதுக்கு எவ்வளவு நேரமமாகும்???

இதுக்கெல்லாம் சனம் என்ன செய்ய முடியும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை யாழ் குடாநாட்டு மக்கள் அறிவார்களா ? ஒருவேளை அறியக்கூடியமாதிரி இருந்தால் நிச்சயம் அவர்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் இதையே அடுத்த முறை செய்யமாட்டார்கள் என்று கூறமுடியாது............. ஏனேன்றால் திருவிழாவுக்கு போகவிட்டால் கனபேருக்கு நித்திரையே வராது :lol::)

அப்படிச் சொல்ல முடியாது சுப்பையாண்ண.

இந்திய இராணுவம் ஆக்கிரமித்து நின்ற போது.. அதுவே ஒட்டுக்குழுக்களைக் கொண்டு நல்லூர் திருவிழாவை பகிஸ்கரிக்க என்று துண்டுப் பிரசுரத்தை விநியோகித்துவிட்டு.. புலிகளின் தலையில் அதைக் கட்டிவிட்டு.. பின்னர் மக்கள் திருவிழாவுக்கு புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி வர தான் பாதுகாப்பு வழங்குவதாகச் சொல்லிக் கொண்டு உள்ள வீதிகள் எங்கனும் முழத்துக்கு முழம் ஜவான் களையும் தமிழ் தேசிய இராணுவம் என்ற ஒட்டுக்குழுவினரையும் நிறுத்தி.. அதை பெருமெடுப்பில் பிரச்சாரம் செய்து கொண்டது. இப்போதும் அக்காட்சிகள் மனக்கண் முன் நிழலாடுகின்றன.

அப்போ சனமும் கொஞ்சம் குழம்பித்தான் போச்சுது. ஆனால் மக்கள் பலரிடம் அப்போதும் சரி இப்போதும் சரி போராட்டம்.. சுதந்திர வாழ்வு பற்றி சரியான சுயசிந்தனை இல்லை..! எமது மண்ணை எம்மை ஆக்கிரமித்து நிற்கும் எதிரிக்கு எதிராக ரகசியமாக.. சுயமாக போராடும் சக்தியை மக்கள் இன்னும் பெறவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். எதிரியின் இந்த வகையான ஈனத்தனமான பிரச்சாரங்களை முறியடிக்க கூடிய மக்கள் தாமாகவே ஒவ்வொருவருக்குள்ளும் தமிழீழ தேசப் பற்றை ஓங்கி வளர்த்துக் கொள்ள வேண்டும்..!

இராணுவத்தின் இச்செயற்பாட்டுக்காக.. மக்களின் இறை நம்பிக்கையை பழிக்கவோ.. அல்லது.. நாத்திகவாதத்தை விதைப்பதால் இதை தடுக்கலாம் என்பதோ பயனற்ற சிந்தனைகள். மக்கள் தாமாக முன் வந்து இவ்வாறான நிகழ்வுகளை ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இருப்புக்கு தமது எதிர்ப்பின் அடையாளமாகக் காட்ட பகிஸ்கரிக்க வேண்டும். காரணத்தை பகிரங்கப்படுத்த வேண்டும்.

அப்படி இன்றேல்.. இந்த நல்லூர் இல்லை என்றால்.. நாளை ஒரு காணிவேல் வைத்து இராணுவம் மக்களை அச்சுறுத்தி அழைக்கும். சனம் பயந்து போகும்..! வரதராஜப்பெருமாள் அடையாள அட்டைகளை.. குடும்ப அட்டைகளை பறித்து விட்டு கூட்டத்துக்கு வா என்று சொல்லவில்லையா. அது நடக்கும்..! எதிரி மக்கள் மத்தியில் தான் இருப்பது பலவீனமான நிலையில் என்பதை உணர்ந்துதான் இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறான் என்பது தெளிவாகின்ற போதும்.. அதைக் கூட அனுமதிப்பது தவறு.. என்பதை மக்கள் உணர வேண்டும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நல்லூர் திருவிழாவுக்கு பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இன்று நல்லூர் திருவிழாவுக்கு சென்ற மக்கள் தலையாட்டிகள் முன் நிறுத்தப்பட்டனர்

நாளை நல்லூரில் பலர் காணாமல் போய் உள்ளனர்

நாளை மறு நாள் இனம் தெரியாதோரால் ஜந்துக்கு மேற்பட்டோர் படுகொலை

பட்டுத்தான் திருந்த வேண்டும் -------------------------------------------

எல்லாம் அவனுக்கே வெளிச்சம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.