Jump to content

சமையலறையில் காத்திருக்கும் பொறிகள்


Recommended Posts

பொதுவாகவே சமையல் என்பது மிகவும் இலகுவான வேலை போலவும், சமைப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் போன்றதொரு மாயையும் உலாவுகின்றது. இதை சமையல் செய்யும் ஒருவரால் ஒத்துக்கொள்ள முடியாது.

ஒரு வீட்டில்,கிராமத்தில்,நகரத்தி

ன்,நாட்டின் பாரம்பரியத்தையோ/கலாச்சாரத்தையோ அறிந்து கொள்ள சிறந்த இடம் சமையல் தான் என்பது என் கருத்து.

இப்படிப்பட்ட சமையல் என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. ஒரு உணவை சமைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை எனும் பட்சத்தில் ஒரு தற்கொலையோ,பல கொலைகளோ நிகழ வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த பதிவில் எப்படி தற்கொலையை தவிர்க்கலாம் என பார்ப்போம். கொலைகள் பற்றி பின்னர் யோசிக்கலாம்.கிகிகிகி

* சமைக்கும் போது சமையலை மட்டும் பார்க்கவும். கவனம் இல்லாவிடில் களத்தில் பலமாக காயம் அடையும் சாத்தியம் அதிகம்.

* காய்கறி வெட்டும் போது வெட்டுப்பலகையை உபயோகிக்கவும்.

* வெதுப்பியை போடும் போது தேவையான சூட்டிற்கு வைத்தல் அவசியம். வெதுப்ப வேண்டியதும் கருகி, கையும் கருகும் வாய்ப்பு அதிகம். (சொந்த அனுபவம்)

* வெதுப்பியில் வேலை செய்யும் போது மறக்காமல் கைகவசம் அணியுங்கள். வேலை முடிந்ததும் வெதுப்பியை மறக்காமல் நிறுத்துங்கள்.

* சமைக்கும் போது நீரை சமையல்கட்டில் கீழே ஊற்றுவதையோ,தெளிப்பதையோ தவிருங்கள். வீணாக காலையோ இடுப்பையோ உடைப்பதில் இருந்து தப்பிக்கலாம்.

* கத்திகளை கண்ட இடத்தில் போட்டு வைக்காதீர்கள். அதற்கென ஒரு இடத்தில் வையுங்கள். முடிந்தால் கத்தி கவசங்களை வாங்கி, மாட்டி வையுங்கள்.

* சமைக்கும் போது முடியை மடித்து கட்டி வையுங்கள். நீளமுடி இருப்பவர்கள் அதிகம் கவனமாக இருக்க வேண்டும்.

* சுடு எண்ணெயில் சமையல் செய்யும் போது, நீண்ட கைபிடி கொண்ட அகப்பைகளை பயன்படுத்துங்கள்.

*சுடு நீரை கையாளும் போது மிகவும் கவனமாக இருங்கள்.

* சமைத்த உடன் எதையும் சுட சுட வாயில் போடாதீர்கள்.

இவற்றையெல்லாம் பின்பற்றி சமையல் செய்யும் தருணத்தில் ஒரு தற்கொலையை தவிர்க்கலாம் என்பது என்னால் உறுதிப்படுத்தப்படுகின்றது. (சொந்த அனுபவம்). அடுத்த பதிவில் எப்படி கொலைகளை தவிர்க்கலாம் என்பதை பார்ப்போம்..

இணைப்புகள்:

சுவையருவி

தூயாவின்ட சமையல்கட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவில் எப்படி தற்கொலையை தவிர்க்கலாம் என பார்ப்போம். கொலைகள் பற்றி பின்னர் யோசிக்கலாம்.கிகிகிகி

தூயா சமைக்கிற சாப்பாட்டைச் சாப்பிடாது விடல். :lol:

Link to comment
Share on other sites

தூயா சமைக்கிற சாப்பாட்டைச் சாப்பிடாது விடல். :lol:

எனக்கு எதிரி வெளியே அல்ல என்பது தெளிவாகிவிட்டது..மிக்க நன்றி கந்தப்பு :lol: :lol: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றையெல்லாம் பின்பற்றி சமையல் செய்யும் தருணத்தில் ஒரு தற்கொலையை தவிர்க்கலாம் என்பது என்னால் உறுதிப்படுத்தப்படுகின்றது. (சொந்த அனுபவம்). அடுத்த பதிவில் எப்படி கொலைகளை தவிர்க்கலாம் என்பதை பார்ப்போம்

என்ன சிங்காரி தூயா சமையலை பற்றி சொல்லுங்கோ

கொலைகளை பற்றி சொல்லாதிங்கோ பயமாக இருக்கிறது உங்கள் சமையலை பார்த்தால் நிட்சயம் கொலை விழும் போல கிடக்கு :rolleyes::D:rolleyes:

Link to comment
Share on other sites

என்ன சிங்காரி தூயா சமையலை பற்றி சொல்லுங்கோ

கொலைகளை பற்றி சொல்லாதிங்கோ பயமாக இருக்கிறது உங்கள் சமையலை பார்த்தால் நிட்சயம் கொலை விழும் போல கிடக்கு :rolleyes::D:rolleyes:

ம்ம் இதுவரை என் முயற்சி பலிக்கவில்லை.. கிகிகி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் செய்பவருக்கும் பிழையாக சமைத்த உணவை உண்பவருக்கும் பலவழிகளில் உயிராபத்து ஏற்படலாம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் தற்கொலை, கொலை என்பவற்றுடன் சமையல்கலையையும் உணவையும் முடிச்சுப்போடுவதை ஏற்கமுடியாது. சமையல் செய்யும்போது ஏற்படும் ஆபத்துகள் பற்றி குறிப்பிடும்போது அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான தற்காப்பு உபகரணங்கள் எவையென்பதையும் குறிப்பிட்டால் நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.