Jump to content

Google Chrome (New browser)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல். நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் பல தகவல்கள் எளிதாக விளங்ககூடிய வகையில்

http://books.google.com/books?id=8UsqHohww...ntcover#PPT1,M1

Link to comment
Share on other sites

இதில் தமிழ் எழுத்துக்கள் தெரிய ஏதோ பிரச்சனை இருப்பதாக சொல்கின்றார்களே...அது பற்றி ஏதும் தெரியுமா?

Link to comment
Share on other sites

அவுஸ்திரெலியாவில் இருப்போர் Google map ல் உங்கட வீடுகளைப் பார்க்கலாம். உ+ம் கோம்புஸ்ஸில் இருக்கும் ஜனனி உணவகத்தினைப் பார்க்க வேண்டுமென்றால்

http://maps.google.com.au/maps?hl=en&q...sa=N&tab=wl

32,Burlington Road, Homebush

Search Mapனை அழுத்தவும்

இலக்கம் , வீதி, இடம் என்று எழுதினால் நீங்கள் பெரும்பாலான இடங்களைப் பார்க்கலாம். சில மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரெலியாவில் பெரும்பாலான வீதிகளை படம் பிடித்து Google map ல் இணைத்திருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தமிழ் எழுத்துக்கள் தெரிய ஏதோ பிரச்சனை இருப்பதாக சொல்கின்றார்களே...அது பற்றி ஏதும் தெரியுமா?

நான் இந்த மென்பொருளை நிறுவி இருக்கிறேன். ஆனால் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. குறிப்பாக்க வலைப்பூக்களில் பரிசோதித்துப் பார்த்தேன். :rolleyes:

படங்கள்.. வீடியோ எக்ஸ்புளோரரை விட மிகத் தெளிவாக.. காட்டப்படுகின்றன. மிகவும் வசதியாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

நன்றி கந்தப்பு தகவலுக்கு, உங்கள் வீட்டை பார்த்தேன், நீங்கள் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு BMW ல் ஏறுவது தெரிகிறது.

Link to comment
Share on other sites

நான் இப்போது Google Chrome ஐ தான் பயன்படுத்துகிறேன். படங்கள் முதலியன தெளிவாகதான் இருக்கின்றன. ஆனால், முதலில் யாழ் களத்தின் முகப்பு பக்கம் ஒழுங்கு குலைந்தது போல தென்பட்டது. இப்போது சரியாகிவிட்டது. ஏன் என்று தெரியவில்லை...

Link to comment
Share on other sites

தேடுதல், மெயில் என சகல மேட்டர்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் கூகுள், அடுத்து பிரெளசரையும் ஆரம்பிக்கவுள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.

இன்டர்நெட் பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது, அடிப்படையானது பிரெளசர்.

தற்போது பல வகையான பிரெளசர் வலையுலகில் உலவிக் கொண்டுள்ளன. அதில் அதிகம் பிரபலமானது இன்டர்நெட் எக்ஸ்புளோரர்தான். ஆகஸ்ட் மாத சந்தை நிலவரப்படி இன்டர்நெட் பயன்பாட்டாளர்களில் 73 சதவீதம் பேர் இதைத்தான் பயன்படுத்துகின்றனர்.

இதுதவிர பயர்பாக்ஸ் (19.73%), சஃபாரி (6.73%), ஒபேரா (0.74%) ஆகிய பிரவுசர்களும் புழக்கத்தில் உள்ளன.

முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பங்கு 90 சதவீதமாக இருந்தது. ஆனால் பயர்பாக்ஸ் வந்த பின்னர் எக்ஸ்புளோரரின் பங்கு குறைந்து விட்டது.

இந் நிலையில் மைக்ரோசாப்ட்டுக்கு இன்னொரு அடியாக கூகுளும் பிரெளசர் உலகில் கால் எடுத்து வைக்கிறது. தனது பிரவுசருக்கு குரோம் என பெயரிட்டுள்ளது கூகுள்.

இதுதொடர்பான அனைத்து விவரங்களும் கூகுள்குரோம் இணையதளத்தில் உள்ளன (http://www.gchrome.com/). இந்த பிரெளசர் பல விசேஷங்கள் உள்ளடங்கியுள்ளன.

தேடுதல், வீடியோ ஸ்ட்ரீமிங், இமேஜ் சர்ச், இமெயில் உள்ளிட்ட பல பயன்பாடுகளை தற்போது கூகுள் தன் பக்கம் வைத்துள்ளது. இந் நிலையில் தனது 'குரோம் பிரெளசர்' மூலம் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளது கூகுள்.

இந்த பிரெளசரின் 'பீட்டா வெர்சன்' நாளை அறிமுகமாகவுள்ளது.

இன்டர்நெட் உலகம், குரோம் 'பேட்டை' ஆகுமா, கூகுள் சவாலை எக்ஸ்புளோரரும், பயர்பாக்ஸும் சமாளிக்குமா என்பதை என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=105

Link to comment
Share on other sites

கூகுள் 'குரோம்'- அசத்தலான ப்ரெளசர்!

பெங்களூர்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூகுள் குரோம் ப்ரெளசர், விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று ரிலீஸானது. மற்ற ப்ரெளசர்களில் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் இதில் இருப்பதால், விரைவில் குரோம், ப்ரெளசர் உலகில் புரட்சி படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ப்ரெளசர் குரோம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ் ஆகியவற்றுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ், ஆப்பிள் சஃபாரி, ஓபேரா ஆகிய ப்ரெளசர்களில் இல்லாத பல அருமையான அம்சங்கள் குரோமில் உள்ளன.

1. இணையதளங்களுக்கான 'டாஸ்க் மேனேஜர்':

கூகுள் குரோமுக்குள் போன பின்னர், 'Shift+esc' கீயை அழுத்தினால், 'டாஸ்க் மேனேஜர்' திறக்கும். அதில், குரோம் ப்ரெளசரில் திறந்திருக்கும் அனைத்து இணையதளங்களின் பட்டியலும் காணப்படும்.

இதன் மூலம் பல்வேறு வகையான இணையதளங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் 'மெமரி'யின் அளவை நாம் அறிந்திட முடியும். ஏதாவது ஒரு இணையதள பக்கத்தில் சிக்கல் ஏற்பட்டால், டாஸ்க் மேனேஜரிலிருந்தபடியே அதை மூடவும் வசதி உண்டு.

2. விஷூவல் ப்ரெளசர் ஹிஸ்டரி (Visual Browser History):

'Ctrl+H' கீயை அழுத்தி 'ப்ரெளசர் ஹிஸ்டரி'யை திறந்து அதில் தேவைப்படும் பக்கங்களைத் தேடலாம்.

பொருத்தமான பக்கங்களைத் தேடுவதோடு, சம்பந்தப்பட்ட இணைய தள பக்கங்களின் 'தம்ப்நெய்ல்'களையும் இந்த ஆப்ஷன் நமக்குக் காட்டும்.

3. சூப்பர் க்ளீன் கன்டெக்ஸ்சுவல் மெனு (Super Clean Contextual Menu):

ஏதாவது ஒரு இணையதளத்தின் 'ஹைப்பர்லிங்கில்' ரைட் கிளிக் செய்தால், ஐந்து 'ஆப்ஷன்கள்' மட்டுமே அதில் இருக்கும். 'இமேஜ்' மீது 'ரைட் கிளிக்' செய்தால், நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இது பயர்பாக்ஸில் குழப்பமானதாக இருக்கும்.

4. அட்ரஸ் பாரிலிருந்து 'சைட்' தேடலாம்:

இது பிரில்லியன்ட் ஆன ஆப்ஷன். இணையதளத்தை தேடக் கூடிய வசதியுடன் கூடிய இணையதளத்திற்குப் போகும்போது - குரோம் அதை தானாகவே உணர்ந்து கொண்டு, அந்த தளத்தை 'அட்ரஸ் பாரில்' பதிவு செய்து விடும். அடுத்த முறை அந்த சைட்டுக்குப் போக விரும்பினால் 'அட்ரஸ் பாருக்குப்' போனால் போதும்.

5. பயன்படுத்தப்பட்ட 'மெமரி'யை அறிய..

இந்த ஆப்ஷன் மூலம் ப்ரெளசர்களில் பயன்படுத்தப்பட்ட மெமரியை அறிந்து கொள்ளலாம்.

குரோம் ப்ரெளசருக்குள் போய், ஒரு புதிய 'டேப்' (Tab) பை திறந்து, அதில் about:memory என்று டைப் செய்யவும். அப்போது ப்ரெளசருக்கு மேல், உங்களது கம்ப்யூட்டரில் எந்தெந்த ப்ரெளசர் பயன்பாட்டில் உள்ளது என்பது தெரிய வரும். அதில் எவ்வளவு மெமரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலும் கூடவே இருக்கும்.

6. தவறாக மூடிய 'வெப்சைட் டேப்'களை திறக்க..

பயர்பாக்ஸ்-3 ப்ரெளசரில் "Undo Closed Tab" ஆப்ஷன் உள்ளது. அதேபோல ஓபேராவில், Ctrl+Z கீயை அழுத்தினால் மூடிய டேப்களை திறக்கலாம்.

குரோமில், Ctrl+T கீயை அழுத்த வேண்டும். அப்போது, Recently closed tabs என்ற ஆப்ஷன் வரும். அதில் போய் எந்த டேப் தவறுதலாக மூடப்பட்டதாக நினைக்கிறீர்களோ அதை திறக்கலாம்.

7. Start Menu / Quick Launch பாரிலிருந்து 'சைட்' திறக்கலாம்:

இணையதளங்களுக்கான 'டெஸ்க்டாப் ஷார்ட் கட்'கள் அனைத்து ப்ரெளசர்களிலும் உள்ளன. இது கூகுள் குரோமில் எளிமையாக உள்ளது.

ஏதாவது ஒரு தளத்தை திறந்து, அதில் 'பைல்' மெனுவிலிருந்து "Create application shortcut" என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். அந்த தளத்தின் ஷார்ட் கட் டெஸ்க் டாப்பில் உட்கார்ந்து கொள்ளும்.

இப்படி பல வசதிகள் குரோமில் கொட்டிக் கிடக்கின்றன. குரோம் நிகழ்த்தப் போகும் புரட்சி, ப்ரெளசர் உலகில் நிச்சயம் பெரிதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

http://thatstamil.oneindia.in/news/2008/09...r-browsers.html

Link to comment
Share on other sites

நானும் இம்மென்பொருளை நிறுவியிருக்கினறேன். அசத்தலாகவும் தெளிவாகவும் வேலைசெய்கின்றது. ஆரம்பத்தில் யாழ் இணையத்தை திறந்தபோது மல்லிகை வாசம் குறிப்பிட்டது போல் வந்தது. பின்பு சரியாகி விட்டது. நிச்சயம் இம்மென்பொருள் explor மென்போருளிற்கு பெரும் சவால் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி இணைய உலாவியை பயன்படுத்தி.. கீமானைக் கொண்டு நேரடியாக யாழில் தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை. தொடர்சியாக தட்டச்சுச் செய்யும் போது முன்னைய எழுத்துக்கள் இல்லாமல் போய் விடுகின்றன.

அதுமட்டுமன்றி படங்களோடு விபரம் சொல்லும் alt பொப் அப் வருகுதில்லை..!

உங்களுக்கு அப்படிப் பிரச்சனைகள் இருக்கிறதா. அல்லது ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா..??! :mellow::huh:

Link to comment
Share on other sites

மேற்படி இணைய உலாவியை பயன்படுத்தி.. கீமானைக் கொண்டு நேரடியாக யாழில் தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை. தொடர்சியாக தட்டச்சுச் செய்யும் போது முன்னைய எழுத்துக்கள் இல்லாமல் போய் விடுகின்றன.

அதுமட்டுமன்றி படங்களோடு விபரம் சொல்லும் alt பொப் அப் வருகுதில்லை..!

உங்களுக்கு அப்படிப் பிரச்சனைகள் இருக்கிறதா. அல்லது ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா..??! :mellow::huh:

நான் கீமானை பாவித்துத் தான் பதில் எழுதுகின்றேன். எனக்கு இதுவரை ஒரு பிரைச்சினையும் வரவில்லை.

எனக்கு alt பொப் உம் பிரைச்சினையில்லாமல் வருகின்றது. சிலவேளை நீங்கள் இந்த மென்பொருளை கணினியில் நிறுவும் போது ஏதாவது தடைகள் ஏற்பட்டதோ தெரியவில்லை. எனவே ஒருமுறை அழித்துவிட்டு மீண்டும் நிறுவிப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கீமானை பாவித்துத் தான் பதில் எழுதுகின்றேன். எனக்கு இதுவரை ஒரு பிரைச்சினையும் வரவில்லை.

எனக்கு alt பொப் உம் பிரைச்சினையில்லாமல் வருகின்றது. சிலவேளை நீங்கள் இந்த மென்பொருளை கணினியில் நிறுவும் போது ஏதாவது தடைகள் ஏற்பட்டதோ தெரியவில்லை. எனவே ஒருமுறை அழித்துவிட்டு மீண்டும் நிறுவிப் பாருங்கள்.

உங்கள் தகவலுக்கு நன்றிகள். :mellow:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் google toolbar இனைப்பது எப்படி யாருக்காவது தெரியுமா

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உலாவியில் எல்லாம் (Opera) ஓப்பரா'வின் பிரதி. ஆனால் ஒவ்வொரு (tab) ரப்'ம் ஒவ்வொரு (browser) மாதி இயங்குவது மட்டும் வித்தியாசம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.