Jump to content

நிலாவோடு பேசும் படங்கள்....


Recommended Posts

  • Replies 124
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாவ் ...........

சண்டை போடுபவர்களாக தெரியவில்லையே ? கொஞ்ச வேண்டும் போல இருக்கு .

தூங்கும் போது கொஞ்ச கூடாது என்பார்கள் .எழும்பியதும் என்னிடம் தருவீங்களா ?

கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் .அக்கா

Link to comment
Share on other sites

ஏ... கதிரவனே...உதிக்காதே இன்னோர் விடியல் வேண்டாம்

தூங்கும் இவரை குழப்பாதே... மீண்டும் ஒருக்கால் உதிக்காதே

நாங்கள் இவரை ரசிப்பது உனக்கு தெரியாதா? ஆனாலும்,

இங்கே வந்து பார்க்காதே, ரசிப்பதற்காய் கூட

தாங்காதே என் மனம் இவர்கள் சண்டை போட்டால்

எனவே, உதிக்காதே... இன்னோர் விடியல் வேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீயும் நானும்

சின்ன வயதில்

சண்டை போட்டது

நீயும் நானும்

சின்ன வயதில்

எதிரும் புதிரும்

உனக்கும் எனக்கும்

சின்ன வயதில்

இடைவெளி தூரம்

ஆனால்....

தூக்கம் வந்தால்

நீயும் நானும்

என்றும்

அருகருகே

சின்ன வயதில்....

Link to comment
Share on other sites

ஆத்த ஓரம் பூத்த மரம்

ஆனை அடங்கும் மரம்

கிளை எல்லாம் கூடு கட்டி

கிளி அடையும் பூங்க மரம்

பூங்க மரத்தடியில்

பூ விழுந்த மணல் வெளியில்

பேன் பார்த்த சிறு வயசு

பெண்ணே நினைவிருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிந்தவரை பிரியாதிருப்போம்.

இந்த இருண்ட உலகை திறந்து பார்த்தால்

நாம் இலகுவில் பிரிந்துவிடுவோம்

எங்கள் கனவுலகில் நுழைந்திருந்தால்

எப்போதும் இப்படியே இருந்துவிடலாம்

ஆதலால்..

அன்பே...

முடிந்தவரை கண்களை மூடியபடியே இரு...!

எப்போதும் இப்படியே இருப்போம்...

மானிட எல்லைகளைத் தாண்டி

ஒளியின் வேகத்தில் எங்கள் பயணம் தொடர்வதால்

பருவமாற்றங்கள் எங்கள் உறவை என்றும் பாதிக்காது..

Link to comment
Share on other sites

நிலாவோடு பேசும் படங்களா..!!.. :D

ம்ம்..நிலாவோடு எந்த மொழியில் பேசுவது எண்டு தெரிந்திருந்தால் நானும் பேசி இருப்பன்..தொடருங்கோ நிலா அக்கா படத்திலையாவது பேசுறதை கேட்போம்..நிலாவுடன்..!!. :lol:

அது சரி இப்ப எண்ட கற்பனை கழுதை ஓட தொடங்குது..(ஏசுறதில்ல சொல்லிட்டன் அக்கா)..!! :D

nila2da2.jpg

:wub::):D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வாவ் ...........

சண்டை போடுபவர்களாக தெரியவில்லையே ? கொஞ்ச வேண்டும் போல இருக்கு .

தூங்கும் போது கொஞ்ச கூடாது என்பார்கள் .எழும்பியதும் என்னிடம் தருவீங்களா ?

கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் .அக்கா

:D அவர்களுக்கு கொஞ்சினால் பிடிக்காதாமே. என்ன செய்யலாம்? :wub:

அதுசரி ஆன்ரி ஏன் தூங்கும் குழந்தைகளை கொஞ்சம் கூடாது?

ஆனால் பலர் குழந்தைகளை ஏன் கணவன் மனைவி உவர்கள் கூட நித்திரையாக இருக்கும் கணவனையோ / மனைவியையோ கொஞ்சிக்கொள்கின்றனர் தானே, அதாவது ஒரு அன்பான முத்தம்.

ஏன் குழந்தைகளை கொஞ்சக்கூடாது என்கின்றனர் ஏதாவது காரணங்கள் உள்ளனவா? :)

Link to comment
Share on other sites

அது வெண்ஸ் திருமணமே ஒரு தொற்றுநோய்தானே...

அதற்கு பிறகு கணவன் மனைவிக்கு என்ன பெரிசா வியாதி வந்துவிடப்போகிறது...

குழந்தைகளளுக்கு மென்மையான சரீரம்..ஏதாவது வியாதி...தோல் ஒவ்வாமை வந்துவிடும் என்றுதானாக்கும்...அலர்ஜி

Link to comment
Share on other sites

நிலாவோடு பேசும் படங்களாஇ பார்த்து பேசிய விகடகவி, மல்லிகை வாசம், சாரணி, பொன்னி, காயத்ரி ஆகியோருக்கு நன்றிகள்.

ஜம்முத்தம்பிக்கு எப்பவும் என் கூட லொள்ளு தான். அச்சோ நிலாவோடு பேச மொழி தெரியா? மெளனம் தான் நிலாவுக்கு புரியுமாம். ஒருக்கா முயற்சித்து பாருங்கோவன்.

அச்சோ தம்பி அக்கா அக்கா அந்த படத்தை தாங்கோ என கேட்ட போதே நினைச்சேன் என்னமோ மாட்டிவிட போறீங்க என.

பரவால்லை நிலாக்காவின் நினைப்பை உங்கள் கற்பனை குதிரை நன்னாகவே புரிஞ்சு வைச்சிருக்கு.

Link to comment
Share on other sites

அது வெண்ஸ் திருமணமே ஒரு தொற்றுநோய்தானே...

அதற்கு பிறகு கணவன் மனைவிக்கு என்ன பெரிசா வியாதி வந்துவிடப்போகிறது...

குழந்தைகளளுக்கு மென்மையான சரீரம்..ஏதாவது வியாதி...தோல் ஒவ்வாமை வந்துவிடும் என்றுதானாக்கும்...அலர்ஜி

முதலில் விகடகவி உங்கள் அவதாரை மாற்றிவிடுங்கோ :D

அட தொற்றுவியாதியா? நீங்கள் சொல்வதும் சரிதான் விகடகவி. ஆனால் நான் கேட்டது அது இல்லையே.

குழந்தைகளின் மென்மையான சரீரத்தில் முத்தமிட தோல் ஒவ்வாமை என்றால்...................அது ஏன் தூங்கும் குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்க கூடாது என்கிறார்கள்.? :)

நான் அறிந்தேன்................ தூங்கும் குழந்தையை முத்தமிட்டால் குழந்தை ஊமாஇயாகிப் போக வாய்ப்புள்ளது என. உது உண்மையா?

யாராவது தெரிந்த ஆட்கள்...............சொல்லுங்களன். :wub:

Link to comment
Share on other sites

போர்வைக்குள்

தூங்கும்

இரு மலர்கள்

இங்கே கண்டேன்

போரோடு வேரோடு

அறுபடும் மலர்கள்

அங்கே கண்டேன்!

படைத்தவன்

விடையளிப்பானா?

பகுத்தறிவுக்கு விளங்கா

இவ் முரண்பாட்டுக்கு!

Link to comment
Share on other sites

பசும் புல்வெளி இருந்தென்ன...

வீசும் தென்றல் இதம் தந்தென்ன...

வெண்புறாக்கள் சிறகடிக்கும் இசையென்ன...

பெண்புறாவே, பேரழகே... நீ இங்கிருக்கயிலே

இயற்கையின் எழிலை நயக்கத் தோன்றிடுமா? இந்தப்

பயலின் கண்கள் உன்னை விட்டு விலகிடுமா?? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் ....தாயகத்தில் இருந்து வீசிய காற்றுக்கு அவுசில் இருந்து பதில் வருகிறது , கவனம் .....கிளையை சொன்னேன் . விழுந்து விடாதீங்க .

Link to comment
Share on other sites

காவலுடைத்து..

களவாடி வந்தவனே...

இளைய காதலனே...

இரவாகிறதே...

முதன்முறை பசி

உணர்கிறேனே...

அழைத்து வந்த முதல் நாளே

அழவிடுவாயாடா அன்பே...

பஞ்சணை தூங்கிய இளவரசி..

உனக்காய் பட்டமரத்தை

பாயாக்கி...உன்

அழகியைப் பார்க்கவேனும்...

வந்துவிடமாட்டாயா சீக்கிரமாய்?

Link to comment
Share on other sites

சிறுக்கி மக பாவாடை சீக்கிரமா அவிருதேன்னு,

இறுக்கி முடி போட்டு எங்காத்த கட்டிவிட

பட்டு சிறு கயிறு பட்ட இடம் புண்ணாக

இடுப்பு தடத்தில் நீ எண்ணை வச்சா நினைவீருக்கா?

மருதாணி வைச்ச விரல் மடங்கமால் நான் இருக்க

நாசமான போன நடு முதுகு தான் அரிக்க

சுருக்காய் நீ ஓடி வந்து சொறிந்த கதை நினைவீருக்கா?

வைரமுத்துவின் தோழிமார் கதையிலிருந்து......

Link to comment
Share on other sites

கவனம் ....தாயகத்தில் இருந்து வீசிய காற்றுக்கு அவுசில் இருந்து பதில் வருகிறது , கவனம் .....கிளையை சொன்னேன் . விழுந்து விடாதீங்க .

!!!!!!!!!!! :huh::(:D:mellow:

Link to comment
Share on other sites

ஓ..மறுபடி நிலவு பேசி விட்டதோ..??.. :huh:

ஓ..எனக்கு தெரியுமே சொல்லட்டே நிலா..அக்கா..கா..(சரி சொல்லிட்டு போறன் பிறகு ஏசுறதில்ல அத்தோட நான் படம் போட்டு உங்க கவிதையை குழப்புறன் எண்டா சொல்லனும் என்ன அக்கா..கா..!!).. :mellow:

pesumpadam2bg3.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் உள்ளங்கையில்

உறங்கிட நினைக்கிறேன்

உன்னைதேடி

பசுமையான புல்வெளியும்

அடர்ந்த காடும்

மனதுக்கு இதமளிக்க

என் மொனத்தை

இந்த புறாக்கூட்டம் கலைக்க

மரத்தில் சாய்கிறேன்

என் மன்னவனை தேடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் அவனுக்கே வெளிச்சம்….!

பல இளைஞர்களின் தூக்கம் கலைத்து

உன் இனம் செய்யும் பாவத்திற்கெல்லாம்

நீ மட்டும் ஏனிந்த

தூக்கத் தண்டனையை அனுபவிக்கின்றாய்?

தெரியலையே…..?

ஒரு வேளை முற்பிறப்பிலும் நீ

என்னைப் போல்

பெண்ணாய் தான் பிறந்திருந்தாயோ?

Link to comment
Share on other sites

கவனம் ....தாயகத்தில் இருந்து வீசிய காற்றுக்கு அவுசில் இருந்து பதில் வருகிறது , கவனம் .....கிளையை சொன்னேன் . விழுந்து விடாதீங்க .

என்ன கவனம்......?

நிலாமதி ஆன்ரி நீங்கள் தேவையற்ற விடயங்களுக்கு முடிச்சு போட்டு கதைக்க்கிறீங்க? தாயகத்தில் இருந்து வீசிய காற்றுக்கு அவுசில் இருந்து பதில் வருகிறது என்று சொன்ன உங்கள் வசனத்தை விளங்கிக்கொள்ளாமல் இருக்க நான் பேபி இல்லை ஓகே.

நீங்கள் எழுதுஇம் ஒரு பதிவுக்கு வேறோர் நாட்டில் இருந்து பதில் எழுதினால் உடனே தப்பாக நினைப்பியளா? ஏன் தான் இப்படி எல்லாம் சிந்திக்கிறியளோ புரியலை :mellow:

நிலாமதி ஆன்ரி நானும் எழுத வெளிக்கிட்டால் நிறைய எழுதுவேன். உங்களுக்கு மட்டும் தான் கதைக்க தெரியும் என்றூ நினைக்காதீங்க. நீங்கள் இப்படி கதைப்பதால் எனக்கும் பிரச்சினை வரலாம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் பிரச்சினை வரலாம். என்னை சார்ந்தோருக்கும் பிரச்சினை வரலாம். ஓகே

காமெடியாக பதில் எழுதுவது என்று நினைச்சு இப்படி எழுதுவது வீண்விவாதங்களுக்கு வழிகோலும் என்பதை தெரியப்படுத்துகின்றேன்....

கிளை முறியும் கவனம் என்று சொன்ன உங்கள் நக்கலுக்கு நன்றிகள் :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
    • முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு March 28, 2024   பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தனை (ஆனந்தவர்மன்) மூன்று நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்கப் பாதுகாப்பு அமைச்சால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு நேற்றுமுன் தினம் வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவரைப் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் மூன்று நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்கப் பாதுகாப்பு அமைச்சால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் வகையில் முகநூலில் அரவிந்தன் பதிவிட்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டியே அவரைப் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.   https://www.ilakku.org/ex-militant-detained-for-3-days-and-ordered-to-be-interrogated/  
    • ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் – அல் – ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் March 28, 2024   உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் – ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மட்டுமல்லாது இருதரப்பிலும் இலங்கையர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அல் – ஜசீரா அறிக்கை யொன்றையும் தயார்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டதில் குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர். டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த சக இலங்கையர் ஒருவரால் அவர் அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்காக போராடிய மூன்று இலங்கையர்களுடன் இந்த இரண்டு இறப்புகளும் சேர்ந்துள்ளன என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இப்போது உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். குறித்த இலங்கையர்கள் ரஷ்யாவில் மாதாந்தம் 3,000 டொலர் சம்பளம் மற்றும் ரஷ்ய குடியுரிமையை எதிர்பார்த்து ஆயுதமேந்தி போராடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பெரும்பாலும் ஓய்வுபெற்ற இலங்கைப் படையினர் – ரஷ்ய இராணுவத்தில் சேர தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், இலங்கையில் உள்நாட்டில் கடுமையான வறுமையின் மத்தியில் மொஸ்கோவின் பணத்திற்கு ஈடாக உக்ரேனியப் படைகளின் கைகளில் மரணத்தைப் பணயம் வைக்கத் தயாராக இருப்பதாகவும் அல் ஜசீரா மேலும் தெரிவித்துள்ளது. டிசெம்பரில், சிறப்புப் போராளிகள் பிரிவுக்கு தலைமை தாங்கிய கப்டன் ரனிஷ் ஹேவகே மற்றும் எம்.எம். பிரியந்த மற்றும் ரொட்னி ஜெயசிங்க ஆகிய இரு இலங்கையர்களும் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு கொல்லப்பட்டனர். டிசெம்பர் 15 அன்று பல உக்ரேனிய வீரர்களுடன் கீவ் நகருக்கு கிழக்கே 400 கி.மீ. (240 மைல்) தொலைவில் உள்ள மிலினோவ் என்ற இடத்தில் ஹேவகே புதைக்கப்பட்டார், ஆனால் மற்ற இரண்டு இலங்கையர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. உக்ரேனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையணியில் பணியாற்றிய சுமார் 20 இலங்கையர்கள் ஹேவகேவின் மரணத்திற்குப் பிறகு அப்பகுதியை விட்டு வெளியேறினர், 25 வயதான லஹிரு ஹத்துருசிங்க, காயமடைந்த ரனிஷ் ஹேவகேவை பல கிலோமீற்றர்கள் தாண்டி பாதுகாப்புக்காக அழைத்துச் சென்றனர். ஆனாலும் அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். உக்ரேனுக்காகப் போரிடுவதற்காக இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறிய ஹத்துருசிங்க, ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பக்கம் இன்னும் இணைந்திருக்கும் ஒரே இலங்கையர் என நம்பப்படுகிறது. https://www.ilakku.org/sri-lankans-participating-in-the-russo-ukraine-war/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.