Jump to content

நிலாவோடு பேசும் படங்கள்....


Recommended Posts

நிலவு முத்தம் இட்டு சென்று விட்டதோ..!! :)

பூவின் இதழ்தனை

வண்டு சுவாசித்த

போது

நாணம் கொண்ட

மலர்

பிறிதொரு வண்டினை

கண்டபோது

தலை குனிந்தது

தான்

ஏனோ..?? :)

nilapesujo0.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply

ஜம்மு,

//

"தூங்கிட்டு இருந்த

சிங்கத்தை

"இச்" என்று

சத்தமிட்டு எழுப்புவது

நியாயமா?

//

நியாயம் இல்லை தான்... நாங்க குழந்தை என்றெல்லோ நினைச்சம்... (குழந்தை இல்லையா அது? நிலா கவனிக்க...)

அதோட சத்தமிட்டு எழுப்பினா சிங்கமென்றாலும்... குழந்தை என்றாலும்... மிரளத்தான் செய்யும்....

ஆகவே இனி முத்தமிட்டு எழுப்புங்க... எதுவும் மிரளாது...

சரி என் கவிதை இதோ...

"தூங்கிட்டு இருந்த

ஜம்மு பேபியை

"இச்" என்று

முத்தமிட்டு எழுப்புவது

நிலாவா?

குறிப்பு : ஜம்மு பேபி - எங்கட பக்கத்து வீட்டு பேபி, நிலா - வான்நிலா அல்ல பேபியின் அக்கா... (அப்படா இப்ப தான் நிம்மதி...!)

அப்ப நானும் வரட்டா? (அட பாவி நீயுமா?..... உருப்பட்ட மாதிரி தான்...!!!)

Link to comment
Share on other sites

:( சொக்கா இல்லையேல் நித்தா இல்லை :)

நிலாக்காவின் பெரும் திட்டத்தை நம்பிவிட

மல்லிகைவாசம் எனக்கு எதுவுமே புரியலை :)

ஏன் தான் இப்படி எல்லாம் எழுதுறீங்களோ?

வழமையாக நிலா பேசிய படங்கள் 5வரை ஒழுங்காக படத்துக்கு தானே கவிதை எழுதினீர்கள். இதுக்கும் படத்துக்கு பொருத்தமாக எழுதாமால் என்னமோ நிலாக்கா சொக்கா மக்கா பிக்கா விக்கா என்ன இது ஆ? இதெல்லாம் படம் பார் கவிதை எழுதுவதற்கு பொருந்தக்கூடியதாகவா இருக்கின்றது............................................

. :) கருத்துச் சுதந்திரம் இருக்கின்றன என்பதற்காக எல்லாவற்றையும் கொட்டிட முடியாது சரியா.

சுதந்திரம் என்பது மற்றவர்களை பாதிக்காத வகையில் பயன்படுத்தணும். இதை முதலில் உள்வாங்கிக்கொண்டாலே போதும். மல்லிகை வாசம் என்றால் அது சேற்றில் விழாமல் இருக்கும் வரைக்கும் தான். (நானும் எழுத ஆரம்பித்தால்.....................)

உன் அருகில் வரும் போது

எத்தனை இன்பம்

என்னை இழக்கிறேன் நான்

என் உதடுகள் உன்

முகத்தில் மேயும் போது

நீ உறங்கும் காட்சி

கண்கொள்ளா காட்சியடா

உன்னை எங்கிருந்து எடுத்தாள்

என் அன்னை சொல்லடா?? :lol:

நன்றாக இருக்குது உங்கள் கவிதை :) நன்றிகள் முனிவரே உங்கள் கவிதைக்கு :(

ஆரம்பத்தில் அக்காவின் முத்தம் பின் மூர்க்கமான கட்டளையாகவும். வரும். சரி அக்காதானே .

:wub: அன்பான ஒரு அக்காவின் அன்பு மூர்க்கமாக வரலாம். முத்தம் மூர்க்கமாகாது இல்லையா அன்ரி :)

Link to comment
Share on other sites

நிலவு முத்தம் இட்டு சென்று விட்டதோ..!! :wub:

பூவின் இதழ்தனை

வண்டு சுவாசித்த

போது

நாணம் கொண்ட

மலர்

பிறிதொரு வண்டினை

கண்டபோது

தலை குனிந்தது

தான்

ஏனோ..?? :)

தூங்கிட்டு இருந்த

சிங்கத்தை

"இச்" என்று

சத்தமிட்டு எழுப்புவது

நியாயமா?

அப்ப நான் வரட்டா!!

:) பிறிதொரு வண்டின் மேல் மலருக்கு கோவமோ தெரியலை எல்லோ. அதனால் தான் தலையை குனிஞ்சுதோ என்னமோ எதுக்கும் ஒருக்கா மலர் கிட்ட கேட்கவா தம்பி? மலர் வாடாமல் இருக்குதோ னு ஒருக்கா பார்க்க முடியுமா :)

அட அட பேசும் படம் என்னமோ சொல்லுதே.

பாவம் அந்த படத்திலுள்ளபேபி தன் எதிர்காலத்தை நினைச்சிட்டு இருந்த வேளை அந்த பெண்பிள்ளை வந்து உம்மா கொடுத்து எழுப்பிட்டா. பாவம். ம்ம்ம்ம்ம்ம் தம்பி படம்தந்து உதவியமைக்கு நன்றிகள். :lol:

Link to comment
Share on other sites

நியாயம் இல்லை தான்... நாங்க குழந்தை என்றெல்லோ நினைச்சம்... (குழந்தை இல்லையா அது? நிலா கவனிக்க...)

அதோட சத்தமிட்டு எழுப்பினா சிங்கமென்றாலும்... குழந்தை என்றாலும்... மிரளத்தான் செய்யும்....

ஆகவே இனி முத்தமிட்டு எழுப்புங்க... எதுவும் மிரளாது...

சரி என் கவிதை இதோ...

"தூங்கிட்டு இருந்த

ஜம்மு பேபியை

"இச்" என்று

முத்தமிட்டு எழுப்புவது

நிலாவா?

குறிப்பு : ஜம்மு பேபி - எங்கட பக்கத்து வீட்டு பேபி, நிலா - வான்நிலா அல்ல பேபியின் அக்கா... (அப்படா இப்ப தான் நிம்மதி...!)

அப்ப நானும் வரட்டா? (அட பாவி நீயுமா?..... உருப்பட்ட மாதிரி தான்...!!!)

கவிரூபன் நிலா கூட லொள்ளு விடுறதுக்கு கொஞ்சம் கூட அளவே இல்லையா. பிச்சுப்போடுவன் பிச்சு ஆமா :):):wub:

நல்லாவே இல்லை கவிரூபன். கவிதை எழுத தெரிஞ்ச உங்களுக்கு அந்த படத்தை பார்த்து கவிதை தோன்றாமல் இபப்டி நக்கலடிக்க எப்படி தான் மனசு வந்திச்சோ?

நான் உங்க கூட டூ டூ டூ டூ.... :lol:

இனி போடுற படத்துக்கு ஏற்ப கவிதை எழுத தோன்றாது விடில் ........................ கவிரூபன் நிலாவையும் நிலாவின் கோபத்தையும் நேரில் அறிந்த ஒருவர் என்பதால் மீதி புரியும் :)

Link to comment
Share on other sites

மல்லிகைவாசம் எனக்கு எதுவுமே புரியலை icon_mrgreen.gif

ஏன் தான் இப்படி எல்லாம் எழுதுறீங்களோ?

முதலில் நான் சொல்ல விரும்புவது, இங்கு நான் கவிதை எழுதுவது மற்றவர்களை பாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. அப்படி கவிதை எழுதவேண்டிய தேவையும் எனக்கில்லை.

நான் இதுவரை நீங்கள் கொடுத்த படங்களுக்கு கவிதை எழுதும்போது, அதிலுள்ள மனிதர்களை நான் கற்பனை மனிதர்களாகவே எடுத்து எழுதியுள்ளேன். தலைப்பு 'நிலாவோடு பேசும் படங்கள்' தான். ஆனால், அதற்காக நான் எழுதிய கவிதைகள் எல்லாம் உங்களை விழித்து எழுதப்பட்டவையாக அல்ல.

சுதந்திரம் என்பது மற்றவர்களை பாதிக்காத வகையில் பயன்படுத்தணும். இதை முதலில் உள்வாங்கிக்கொண்டாலே போதும். மல்லிகை வாசம் என்றால் அது சேற்றில் விழாமல் இருக்கும் வரைக்கும் தான்.

நான் எழுதியது உங்களை பாதிப்பதாக நீங்கள் கருதுவதால், அந்த கவிதையை நீக்கிவிட்டேன். ஆனாலும் உங்களை புண்படுத்த எழுதவில்லை என மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

கடைசியாக நீங்கள் கொடுத்த படத்துக்கு நான் கவிதை எழுதும் போது, அதிலுள்ள சிறு பையன் தனது சகோதரியிடம் பேசுவது போல எழுதியுள்ளேன். சிறு வயதில் Chocolates / biscuitsஆக சண்டை போடுவது சகஜம் தானே. அந்த ரீதியில் தான் நான் குழந்தை என்னென்ன வார்த்தைகள் பாவிக்குமோ, எப்படி சண்டை போடுமோ என்பதை மனதில் வைத்து தான் எழுதினேன். மீண்டும் சொல்கிறேன், இது உங்களை புண்படுத்த அல்ல. அதற்கான அவசியமும் எனக்கில்லை.

(நானும் எழுத ஆரம்பித்தால்.....................)

இந்த வசனம் ஏன் என்று புரியவில்லை. இங்கு நான் ஏட்டிக்கு போட்டி போட வரவில்லை. :)

நான் எழுதியது உங்களை புண்படுத்துவதாக உங்களுக்கு தெரிவதால், அந்த கவிதையை நான் இப்போதே நீக்கிவிட்டுள்ளேன். ஆனாலும், உங்களை புண்படுத்த எதுவும் எழுதவில்லை என்பதை மீண்டும் கூற விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

கடைசியாக நீங்கள் கொடுத்த படத்துக்கு நான் கவிதை எழுதும் போது, அதிலுள்ள சிறு பையன் தனது சகோதரியிடம் பேசுவது போல எழுதியுள்ளேன். சிறு வயதில் Chocolates / biscuitsஆக சண்டை போடுவது சகஜம் தானே. அந்த ரீதியில் தான் நான் குழந்தை என்னென்ன வார்த்தைகள் பாவிக்குமோ, எப்படி சண்டை போடுமோ என்பதை மனதில் வைத்து தான் எழுதினேன். மீண்டும் சொல்கிறேன், இது உங்களை புண்படுத்த அல்ல. அதற்கான அவசியமும் எனக்கில்லை.

:) இதுதான் உங்கள் எண்ணக்கரு எனில் அக்கவிதையில் நிலாக்கா புத்துமாமா சுப்புமாமா ஜம்முபேபி இதெல்லாம் வர வேண்டிய அவசியம் இருக்காதே.

சிறுவயதில் சொக்லேட் / பிஸ்கட் க்கு சண்டை போடுவதை இப்பெயர்கள் கொண்டு வர்ணிப்பது தேவையற்றதே. நீங்கள் எழுதியதை எவ்வாறாக கவிதை என எடுக்க முடியும்? யாழில் தான் புரிய முடியும் என. வெளியில் அதை கவிதை என காட்டிப்பாருங்க முடியுமா...................

Link to comment
Share on other sites

ஜம்மு,

//

"தூங்கிட்டு இருந்த

சிங்கத்தை

"இச்" என்று

சத்தமிட்டு எழுப்புவது

நியாயமா?

//

நியாயம் இல்லை தான்... நாங்க குழந்தை என்றெல்லோ நினைச்சம்... (குழந்தை இல்லையா அது? நிலா கவனிக்க...)

அதோட சத்தமிட்டு எழுப்பினா சிங்கமென்றாலும்... குழந்தை என்றாலும்... மிரளத்தான் செய்யும்....

ஆகவே இனி முத்தமிட்டு எழுப்புங்க... எதுவும் மிரளாது...

சரி என் கவிதை இதோ...

"தூங்கிட்டு இருந்த

ஜம்மு பேபியை

"இச்" என்று

முத்தமிட்டு எழுப்புவது

நிலாவா?

குறிப்பு : ஜம்மு பேபி - எங்கட பக்கத்து வீட்டு பேபி, நிலா - வான்நிலா அல்ல பேபியின் அக்கா... (அப்படா இப்ப தான் நிம்மதி...!)

அப்ப நானும் வரட்டா? (அட பாவி நீயுமா?..... உருப்பட்ட மாதிரி தான்...!!!)

கவிரூபன் அண்ணா,

ம்ம்..அது தானே நீங்களே சொல்லிட்டியள் கொழந்தை எண்டாலும் சிங்கம் எண்டாலும் மிரளச் தான் செய்யும் எண்டு அப்புறம் ஜம்மு பேபி எந்த மூளைகுள்ள பாருங்கோ :D ..ஆனா நான் சொன்னது முத்த சத்ததை பாருங்கோ ஏன் எண்டா கேட்காத சத்தம் கேட்டா ஜம்முவும் மிரளும் ஏன்..

யானை கூட மிரளும் விளங்கிச்சோ..!!.. :D

சரி என் பதில் கவிதை இதோ..!!

மெல்லிய தென்றல்

வருடிய போது

சயனத்தில் என்னை

வானிலா

வானில்

இருந்து

முத்தமிட

யாழ் நிலா

யாழில்

கவிதையால்

பேசி

கொண்டிருந்தாள்..!! :lol:

இப்ப அண்ணாவின்ட சந்தேகம் தீர்ந்துச்சோ..(எனியும் சந்தேகம் ஏதாச்சும் வந்தா என்னட்ட கேட்காதையுங்கோ நான் அழுதிடுவன் சொல்லிட்டன்).. :)

ம்ம்..நான் பக்கத்து வீட்டு பேபியா இருக்கலாம் எந்த வீட்டிற்கு பக்கத்தில பல நிலாக்கள் எந்த நிலாவை நீங்க சொல்லுறியள் எண்டு சொல்லவே இல்ல பாருங்கோ :icon_mrgreen: ..சரி போயித்து வாங்கோ என்ன போறதிற்குள்ள கொழந்தை என்ன செய்யும் எண்டு பாருங்கோவன்..(அண்ணிக்கு தகவல் சொல்லிடும்)..

வாங்கி கட்டுங்கோ..!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

////கவிரூபன் நிலா கூட லொள்ளு விடுறதுக்கு கொஞ்சம் கூட அளவே இல்லையா. பிச்சுப்போடுவன் பிச்சு ஆமா

நல்லாவே இல்லை கவிரூபன். கவிதை எழுத தெரிஞ்ச உங்களுக்கு அந்த படத்தை பார்த்து கவிதை தோன்றாமல் இபப்டி நக்கலடிக்க எப்படி தான் மனசு வந்திச்சோ?

நான் உங்க கூட டூ டூ டூ டூ....

இனி போடுற படத்துக்கு ஏற்ப கவிதை எழுத தோன்றாது விடில் ........................ கவிரூபன் நிலாவையும் நிலாவின் கோபத்தையும் நேரில் அறிந்த ஒருவர் என்பதால் மீதி புரியும்

///

சரி இனி நிஜமாவே என் கவிதை...

வண்டொன்று சிரிக்குது

மலரொன்று

ஏனென்று கேட்குது?

அதற்கு வண்டு

இப்படிப்

பதில் சொன்னது!

நம் நிலை

பிறிதொரு நாளில்

மாறும்...

அப்போது...

மலரொன்று சிரிக்கும்

வண்டொன்று

ஏனென்று கேட்கும்!

புரிந்ததா?

(புரியாதவர்கள் நிலாவிடம் விளக்கம் கேட்கவும்...)

Link to comment
Share on other sites

மெல்லிய தென்றல்

வருடிய போது

சயனத்தில் என்னை

வானிலா

வானில்

இருந்து

முத்தமிட

யாழ் நிலா

யாழில்

கவிதையால்

பேசி

கொண்டிருந்தாள்..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

:):(:)

(புரியாதவர்கள் நிலாவிடம் விளக்கம் கேட்கவும்...)

:):) உது நல்லாவே இல்லை. :unsure:

நிஜமாக நிலா பேசிய படத்தோடு பேசிய கவிரூபனுக்கு நன்றிகள் :D

Link to comment
Share on other sites

நிலாவோடு பேசும் படத்தில் இறுதி கவிதை படித்தேன்.குறுங்கவிதை நன்று.படம் அதை விட அழகாக இருக்கிறது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானத்தில் உள்ள

ஒரு வழி பாதையால்

வலம் வருகிறேன் ...நான்

வஞ்சியவள் யாரோ!!.

வரவை எண்ணி...வாசலில்

நிற்க கண்டேண்

என்னை விட அழகானவள்

என் எதிரே நிற்க

அசையாமல் நின்று பார்க்கிறேன்

அவளை நான் .என்னை சுற்றி

எத்தனை விண்மீன்கள் இருந்தாலும்

அவளின் இரு கண்களும்

விண்மீனை மிஞ்சிடும்...அழகும்

ஒளியும் அந்த தேவதையிடம்

மெல்லிய சிரிப்பு மின்னலாய் ....தோன்ற

அழகிய கன்னத்தில் அதிசய குழிகள்

கறுப்பு கூந்தல் வாசம் வீச

கன்னி அவள் வாசலில்....

இவளை பார்க்கவே வருகிறேன்........நான்

என்னை விட்டு யாரை தேடுகிறாள்?

இவள் நான் தேய்ந்து விடுவேன்

என்பதற்காகவா சொல்லுங்கள்?

Link to comment
Share on other sites

வான்நிலாவே உன்னில் கறையில்லா? எவர் சொன்னார்?

அன்று உன்னை அந்த ஆம்ஸ்ற்றோங் தொட்டான் - அதன்

பின்னர் இன்னும் சிலர் உன் மேனி தொட்டனர் - ஆனால்

கன்னி என் மனதை தொட்ட என் கண்ணன் அன்றி

ஆண்மகன் வேறெவரும் என்னைத் தொட்டிலர் - எனவே

பெண்நிலா நான் தான் களங்கமில்லாதவள் நீயுணர்க

கார்முகில் நீங்கிய வானத்து நிலா தன்னை - மிக்க

ஆர்வத்துடன் ரசிக்கும் என்னவனே கேள் - எனை

மறைத்த கார்குழலை உன் கரம் கொண்டு நீக்கிய பின்

பாராய் என் முகத்தை. பேரழகி நான் தான் என்பாய் நீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கமின்றி தொலைக்கும் வெண்ணிலாவே

மனதை ,தீய சக்தியில் நின்று விலகி கொள்

சந்தேகம், கோபம் , அழுக்காறு, எரிச்சல்

போன்ற தீய பழக்கங்கள் உன்னை அணுகாது

தூர ,திரையை விலக்கி பார் அழகான வான்நிலா

பால் போல ,காயும், அழகே தனி அழகு

இயற்கை அழகானது , நிலா கூட வளரும் தேயும்

மனித வாழ்கை போல ,துன்பம் நிலையற்றது

மனது அழகாக் இருந்தால் நிலாவும் அழகு

Link to comment
Share on other sites

நிலவு வானிலாவை ரசிக்கின்றதோ..!! :unsure:

நிலவுகுள் உள்ள

பெண்மையை

யாரறிவார்..??

நிலவின்

மனதினை

யாரறிவார்..??

நிலவினை

பலர்

ரசித்தண்டு.

ஆனால்

காதல்

கொள்ளவிள்ளையே

அந்த ஏக்கத்தில்

விண்மினியின்

கண் சிமிட்டலில்

தன்னை....

தொலைத்து

காதல்

கொள்ள

காத்திருக்கும்

இந்த

வானிலாவின்

காதல்

கை கூடுமா..??

இதை சற்றும்

அறியாமல்

திரை விலத்திய

காதலன்..

தன் காதலியை

நிலவுடன்

ஒப்பிடுகிறான்...!! :unsure:

nilaveeeensd8.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நிலவு வானிலாவை ரசிக்கின்றதோ..!! :(

நிலவுகுள் உள்ள

பெண்மையை

யாரறிவார்..??

நிலவின்

மனதினை

யாரறிவார்..??

நிலவினை

பலர்

ரசித்தண்டு.

ஆனால்

காதல்

கொள்ளவிள்ளையே

அந்த ஏக்கத்தில்

விண்மினியின்

கண் சிமிட்டலில்

தன்னை....

தொலைத்து

காதல்

கொள்ள

காத்திருக்கும்

இந்த

வானிலாவின்

காதல்

கை கூடுமா..??

இதை சற்றும்

அறியாமல்

திரை விலத்திய

காதலன்..

தன் காதலியை

நிலவுடன்

ஒப்பிடுகிறான்...!! :(

அப்ப நான் வரட்டா!!

நிலவு

ஒரு நாள்

களவு

போகக் கூடாதா?

கவிஞர்களின்

தொல்லை

தாங்க முடியலை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலவு பகலில் தூங்கி இரவில் வருகிறது போலும் .....

Link to comment
Share on other sites

நிலவு

ஒரு நாள்

களவு

போகக் கூடாதா?

கவிஞர்களின்

தொல்லை

தாங்க முடியலை! :lol:

ரூபன் அண்ணா..ணா..!!

பரவால்ல என்னையும் கவிஞர் எண்டு சொன்னதிற்கு..(எங்க கொண்டு போய் தலையை மோதுறதோ)..நிலவு களவு போனா கூட நிலவு புன்னகை வானில் விணிமினியா மின்னும் அல்லோ..லோ.. :D

மறந்திட்டியளே..!! :D

அப்ப நான் வரட்டா!!

நிலவு பகலில் தூங்கி இரவில் வருகிறது போலும் .....

நிலவு எப்படி நிலா(மதி) அக்கா பகலில் தூங்கும்..ம் ஆதவன் சுட்டெறித்து விடாதோ..தோ..??..அது சரி நீங்களும் தூங்கிற மாதிரி தெரியல.. :(

எப்படி நிலா(மதி) அக்கா..கா..!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நிலாவோடு பேசும் படத்தில் இறுதி கவிதை படித்தேன்.குறுங்கவிதை நன்று.படம் அதை விட அழகாக இருக்கிறது. :lol:

பட அழகை ரசித்தீர்களா? நல்லது. :lol:

Link to comment
Share on other sites

இவளை பார்க்கவே வருகிறேன்........நான்

என்னை விட்டு யாரை தேடுகிறாள்?

இவள் நான் தேய்ந்து விடுவேன்

என்பதற்காகவா சொல்லுங்கள்?

:lol::lol: அட அட என்ன ஒரு கற்பனை :D

நன்றி முனிவா

Link to comment
Share on other sites

வெள்ளாவி வேக வைத்து வெளுத்த துணி நீ தான் பிள்ளை.

கச்சிதாமாய் கஞ்சி வைத்து துவைத்த துணி நீ தான் பிள்ளை.

வெண்ணிலா, வெள்ளாவி வேக வைத்து வெளுத்த துணி நீ தான் பிள்ளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<_<:unsure: அட அட என்ன ஒரு கற்பனை :lol:

நன்றி முனிவா

நன்றி வெண்ணிலா :unsure::lol::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓவியங்களும் அவற்றுக்காகப் பிரசவிக்கப்படும் கவிதைகளும் அபாரம். நன்றி வெண்ணிலா!!!

Link to comment
Share on other sites

கவிதைக்கு ஏன் இந்த தாமதம் என்று யாரேனும் கேட்டால் (யாரடா கேட்கப் போகினம்...) அவர்களுக்கு என் பதில்: "இவள் ஏன் காத்திருக்கிறாள் என்று அறிய அடியேன் பல முறை முயன்றதால் ஏற்பட்ட காலச் செலவு இது..."

-----------------------------------

திரை விலத்தக்

குறைவில்லாது

காற்று வரும்...

காதலும் வந்ததெப்படி

காதலனே?

பிறை போலிருந்த

அம்புலி வளர்ந்து

முழு நிலவானது போல்...

சிறு

கறை போலிருந்த

உன் உருவம்

ஓங்கி வளர்ந்து

என்னுள்ளம் நிறைத்த

விந்தையென்ன

சொல்...!

தினமும் திரை விலத்திச்

சிலை போல்

காத்திருக்கிறேன்...

உனக்காய்...

மனச்சாட்சி மறக்கும்

மனிதச் சாட்சிகளை விட

மகத்தான இயற்கையே

இதற்குச் சாட்சி!

நான் காத்திருக்கின்ற

இரவுகளில்

பார்த்துவிட்டுப் போகும்

நிலவைக் கேள்...

அவ்வப்போது நிலவைக்

கொற்றித் தின்பதாய்

பறக்கும் பட்சிகளைக்

கேள்...

அவை சொல்லும்

என் காத்திருப்பின்

நீண்ட இரவுகள் பற்றி! (இவ்வளத்தோடு முடிக்க ஆசை இல்லை தான்.... ஆனாலும்...)

-----------------------

(ம்... பெரிய காரணம் இது... :) )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.