Jump to content

சுவையான பச்சைமிளகாய் சட்னி செய்வது எப்படி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவையான பச்சைமிளகாய் சட்னி செய்வது எப்படி.......

சமையல் குறிப்பு

தேவையான பொருட்கள்

4 - 7 பச்சை மிளகாய்

சின்ன வெங்காயமென்றால் 4 - 6, பெரிய வெங்காயமென்றால் பாதி

இஞ்சி துண்டு சிறிதளவு

புதினா இலை 3- 5

தேங்காய் பாதி

உப்பு சிறிதளவு

பாதி எலும்பிச்சம் பழம்

இவற்றை எல்லாம் சேர்த்து அடிக்க மிக்சி

குறிப்பு: உங்கள் மிக்சி தேங்காயை சொட்டாக வெட்டி போட்டால் அடிக்கும் அளவிற்கு பவரானதாக இருந்தால் தேங்காயை சொட்டாக வெட்டி போடலாம் அல்லது தேங்காயை திருவி போடவும்.

செய்முறை:

மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் மிக்சியில் போடவும். தேங்காயை மாத்திரம் சிறு துண்டாகவோ அல்லது திருவியோ போடவும். எலும்பிச்சம் பாதியையும் பிழிந்து மிக்சிக்குள் புளியையும் விடவும் அத்துடன் சிறிதளவு தண்ணீரும் விடவும். பின்னர் வழமைபோல் மிக்சியை மூடிவிட்டு நன்றாக அடிக்கவும். மிக்சியில் அடிக்கும் போது எல்லாம் நன்றாக அடிபட்டு களிப்பதமாகவோ அல்லது கட்டியாகவோ இருந்தால் தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து மீண்டும் நன்றாக அடித்துவிட்டு சுவை பார்த்து இறக்கிக் கொள்ளலாம். உங்கள் வாய் சுவைக்கு தகுந்த மாதிரி மிளகாயோ, உப்போ, எலும்பிச்சம் புளியோ, இஞ்சியோ சேர்த்துக்கொள்ளலாம். இந்த முறையில் ஒருதடவை செய்து பார்த்து அடுத்த தடவை செய்யும் போது உங்கள் சுவைக்கு ஏற்றாற்போல் தேவையானவற்றை சேர்த்தோ அல்லது நீக்கியோ செய்து கொள்ளலாம். சட்னியை மிக்சியில் இருந்து இறக்கியதும் வெங்காயம், செத்தல் மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம் கருவேப்பிளை எல்லாம் சேர்த்து தாழித்துப் போட்டு கலந்து பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை இட்டலி , தோசையுடன் சேர்த்து சாப்பிட அந்த மாதிரி இருக்கும் .

தகவலுக்கு நன்றி இளங்கவி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பிக்கு

இத்தெல்லாம் ஒன்னும் பெரிய விசயமில்லை இதுக்கெல்லாம் போய் நன்றி எல்லாம் சொல்லிகிட்டு...

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சிறிக்கு

நீங்களும் என்னை மாதிரி நல்ல சாப்பட்டு ரசிகர் போல் இருக்கிறது. இட்லி தோசையென்று போட்டு தாக்குங்க சிறி...

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புதினா இலையெண்டிறது கொத்தமல்லி இலையைத் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ragu

Mint Leaves தான் புதினா இலை என்று அழைப்பார்கள்.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதினா இலை வேறு :mellow:

கொத்தமல்லி இலைவேறுங்கோ :huh: நன்றிங்கோ இணைத்தமைக்கு...............இளம் கவி

Link to comment
Share on other sites

சுவையான தேநீர் பற்றி வாசித்தும் நான் தேநீர் பழக்கத்துக்கு அடிமையாய் விட்டேன். புதிதாக, பச்சைமிளகாய் சட்னி... நன்றி இளங்கவி. :huh:

வீட்டில் எல்லா பொருட்களும் உள்ளன... ஒன்றைத் தவிர. பட்டியலில் கடைசியாக உள்ள பொருள்: :mellow::(

4 - 7 பச்சை மிளகாய்

சின்ன வெங்காயமென்றால் 4 - 6, பெரிய வெங்காயமென்றால் பாதி

இஞ்சி துண்டு சிறிதளவு

புதினா இலை 3- 5

தேங்காய் பாதி

உப்பு சிறிதளவு

பாதி எலும்பிச்சம் பழம்

இவற்றை எல்லாம் சேர்த்து அடிக்க மிக்சி

Link to comment
Share on other sites

செய்முறைக்கு மிக்க நன்றி :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி.சட்னிக்கு பழப்புளி தான் நல்லாய் இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதினா இலை வேறு :lol:

கொத்தமல்லி இலைவேறுங்கோ :D நன்றிங்கோ இணைத்தமைக்கு...............இளம் கவி

முனிவருக்கு தெரியாத பச்சிலைகளா ....... :D

ஒருக்கால் அவருடைய ஆச்சிரமத்துக்குப் போய் கொஞ்சம் புடுங்கினால் அவர் ஒண்டும் சொல்லமாட்டார் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Mallikai vaasam

நான் என்ன சொல்வது, நீங்கள் ஒரு மிக்சி வாங்குவதற்கு ஏனைய யாழ் அங்கத்தவர்களுடன் நானும் சேர்ந்து இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இளங்கவி

sagevan

செத்தல் மிளகாய் சட்னிக்குத்தான் பளப்புளி நல்லாக இருக்கும். செத்தல் மிளகாய் சட்னி றெசிப்பி விரைவில் தருகிறேன்.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயாவிற்கு

சட்னி செய்து பார்த்து இட்லி சாப்பிட்டாச்சா. இந்தச் சட்னி உழுந்து வடைக்கும் மிகவும் நல்லாக இருக்கும். நீங்கள் யாழ்ப்பாணத்திற்குப்போய் இருந்தால் அங்கே ''மலாயன் கஃபே'' என்று ஒரு சாப்பாட்டுக் கடை உழுந்து வடைக்கும் பச்சை மிளகாய் சட்னிக்கும் மிகவும் பிரபல்யம் வாய்ந்த இடம்.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயாவிற்கு

சட்னி செய்து பார்த்து இட்லி சாப்பிட்டாச்சா. இந்தச் சட்னி உழுந்து வடைக்கும் மிகவும் நல்லாக இருக்கும். நீங்கள் யாழ்ப்பாணத்திற்குப்போய் இருந்தால் அங்கே ''மலாயன் கஃபே'' என்று ஒரு சாப்பாட்டுக் கடை உழுந்து வடைக்கும் பச்சை மிளகாய் சட்னிக்கும் மிகவும் பிரபல்யம் வாய்ந்த இடம்.

இளங்கவி

யாழ்ப்பாணத்தில் இட்டலி என்று தான் சொல்வார்கள் என்று நினைக்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சிறி

மன்னிக்கவும் சிறி சரியாய் சொன்னீங்கள், எங்கள் தமிழை மறக்கேல்லை, இட்டலி, அப்பளம், கருகப்புல்லை, ''Not கறிவேப்பில்லை'' போன்ற சொல்லுகள் இன்னும் மறகேல்லை. யாழில் இந்திய தமிழ் வாசகர்களும் இருப்பதனால் எங்கள் இட்டலி எனும் தமிழ் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே அந்தப்பதத்தை பாவித்தேன். மன்னிக்கவும்.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி

மன்னிக்கவும் சிறி சரியாய் சொன்னீங்கள், எங்கள் தமிழை மறக்கேல்லை, இட்டலி, அப்பளம், கருகப்புல்லை, ''னொட் கறிவேப்பில்லை'' போன்ற சொல்லுகள் இன்னும் மறகேல்லை. யாழில் இந்திய தமிழ் வாசகர்களும் இருப்பதனால் எங்கள் இட்டலி எனும் தமிழ் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே அந்தப்பதத்தை பாவித்தேன். மன்னிக்கவும்.

இளங்கவி

இதுக்கெல்லாம் நீங்கள் கண்டபடி யோசிக்க வேண்டாம் இளங்கவி , :lol::D

சும்மா முசுப்பாத்தி விட்டுப்பாத்தனான் . :lol:

Link to comment
Share on other sites

தூயாவிற்கு

சட்னி செய்து பார்த்து இட்லி சாப்பிட்டாச்சா. இந்தச் சட்னி உழுந்து வடைக்கும் மிகவும் நல்லாக இருக்கும். நீங்கள் யாழ்ப்பாணத்திற்குப்போய் இருந்தால் அங்கே ''மலாயன் கஃபே'' என்று ஒரு சாப்பாட்டுக் கடை உழுந்து வடைக்கும் பச்சை மிளகாய் சட்னிக்கும் மிகவும் பிரபல்யம் வாய்ந்த இடம்.

இளங்கவி

இதுவரை போனதில்லை

இனிமேல் ஊருக்கு போகும் போது போவேன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சைமிளகாய் சட்னியோட ஓட்டை வடை சாப்பிட நல்லாயிருக்கும் அதோட வெள்ளை புட்டு சாப்பிடவும் நல்லாயிருக்கும். நன்றி இளங்கவி பழையதை எல்லாம் ஞாபகப்படுத்தினதுக்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி காணும் காணும் இனிமலும் நாங்கள் கதைத்தமென்றால் சட்னி (பச்சை மிளகாய்) கூட மிஞ்சாது எல்லாத்துக்கும் சேர்த்து அரோகரா தான். :lol::):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி, சரி

சட்னியை செய்து இட்டலியும் தோசையும் சாப்பிடுவம். நன்றி சுப்பண்ணா

இளங்கவி

Link to comment
Share on other sites

சுவையான பச்சைமிளகாய் சட்னி செய்வது எப்படி.......

சமையல் குறிப்பு

தேவையான பொருட்கள்

4 - 7 பச்சை மிளகாய்

சின்ன வெங்காயமென்றால் 4 - 6, பெரிய வெங்காயமென்றால் பாதி

இஞ்சி துண்டு சிறிதளவு

புதினா இலை 3- 5

தேங்காய் பாதி

உப்பு சிறிதளவு

பாதி எலும்பிச்சம் பழம்

இவற்றை எல்லாம் சேர்த்து அடிக்க மிக்சி

குறிப்பு: உங்கள் மிக்சி தேங்காயை சொட்டாக வெட்டி போட்டால் அடிக்கும் அளவிற்கு பவரானதாக இருந்தால் தேங்காயை சொட்டாக வெட்டி போடலாம் அல்லது தேங்காயை திருவி போடவும்.

செய்முறை:

மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் மிக்சியில் போடவும். தேங்காயை மாத்திரம் சிறு துண்டாகவோ அல்லது திருவியோ போடவும். எலும்பிச்சம் பாதியையும் பிழிந்து மிக்சிக்குள் புளியையும் விடவும் அத்துடன் சிறிதளவு தண்ணீரும் விடவும். பின்னர் வழமைபோல் மிக்சியை மூடிவிட்டு நன்றாக அடிக்கவும். மிக்சியில் அடிக்கும் போது எல்லாம் நன்றாக அடிபட்டு களிப்பதமாகவோ அல்லது கட்டியாகவோ இருந்தால் தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து மீண்டும் நன்றாக அடித்துவிட்டு சுவை பார்த்து இறக்கிக் கொள்ளலாம். உங்கள் வாய் சுவைக்கு தகுந்த மாதிரி மிளகாயோ, உப்போ, எலும்பிச்சம் புளியோ, இஞ்சியோ சேர்த்துக்கொள்ளலாம். இந்த முறையில் ஒருதடவை செய்து பார்த்து அடுத்த தடவை செய்யும் போது உங்கள் சுவைக்கு ஏற்றாற்போல் தேவையானவற்றை சேர்த்தோ அல்லது நீக்கியோ செய்து கொள்ளலாம். சட்னியை மிக்சியில் இருந்து இறக்கியதும் வெங்காயம், செத்தல் மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம் கருவேப்பிளை எல்லாம் சேர்த்து தாழித்துப் போட்டு கலந்து பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்.

இளங்கவி

இவற்றோடு கொஞ்சம் பட்டாணிக்கடலையையும் சேர்த்து அரைத்தால் சுவை சூப்பராக இருக்கும். தேங்காய்ப்பூவையும் பட்டாணிக்கடலையையும் தவிர்த்து ஏனையவற்றை முதலில் நன்றாக அடிக்கவும். பின்னர் பட்டாணியைச் சேர்த்து அடிக்கவும். கடைசியில் தேங்காய்ப்பூவைச் சேர்த்து ஓரிரு முறை மட்டுமே மிக்சியைச் சுழலவிடவேண்டும். முதலிலேயே அரைத்தால் தேங்காய்ப்பூவின் சுவை மாறிப் பாலில் செய்த சட்னி போலாகிவிடும். கடைசியில் அரைத்தால்தான் தேங்காய்ப்பூவின் சுவையிருக்கும்.

பட்டாணிக் கடலை:

PICT0005-5.jpg

dsc_0147chutney.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழச்சிக்கு

பட்டாணிக்கடலையை பொட்டுக்கடலை என்றும் சொல்வதுண்டு, நீங்கள் குறிப்பிட்டது போல பொட்டுக்கடலையையும் சேர்த்து அடித்தால் மிகவும் ருசியாக இருக்கும். இந்த முறை கூடுதலாக சென்னையில் தான் பாவிப்பார்கள் ஆனால் நானும் அந்த முறையில் செய்து சாப்பிட்டிருக்கிறேன் அது வித்தியாசமான சுவைதான்.

இளங்கவி

Link to comment
Share on other sites

தமிழச்சிக்கு

பட்டாணிக்கடலையை பொட்டுக்கடலை என்றும் சொல்வதுண்டு, நீங்கள் குறிப்பிட்டது போல பொட்டுக்கடலையையும் சேர்த்து அடித்தால் மிகவும் ருசியாக இருக்கும். இந்த முறை கூடுதலாக சென்னையில் தான் பாவிப்பார்கள் ஆனால் நானும் அந்த முறையில் செய்து சாப்பிட்டிருக்கிறேன் அது வித்தியாசமான சுவைதான்.

இளங்கவி

யாழ்ப்பாணத்தில் பொட்டுக்கடலை பாவிப்பது மிகவும் குறைவுதான். எனக்கும் தமிழகத்தில்தான் சட்னி அறிமுகமாகியது. அதற்கு முன்னர், சம்பல் மட்டும்தான் தெரியும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழிச்சிக்கு

தகவல் பரிமாற்றத்திற்கு நன்றி

சரியாகச் சொன்னீர்கள், யாழ்ப்பாணத்தில் இதை என்றைக்குமே சம்பல் என்றுதான் அழைப்போம் வெளி நாடு வந்த பின்னர்தான் இந்த சட்னி, அது, இது என்றெல்லாம் பெயர் பாவிக்கத்தொடங்கியது.

இளங்கவி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.