Jump to content

தில்லையில் சமஸ்கிரத சாதி ஒழிப்புப் போராட்டம்-காணொளி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி நாரதரே!

செத்துச் சுடுகாட்டிற்குப் போன இழவு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனக் குடுமிகளுக்கே இவ்வளவு திமிரும் தினவும் இருக்கும் என்றால் தமிழர்களுக்கு இருக்காதா?

நந்தனை தீயில் தள்ளிக் கொன்றார்கள், வடலுர் வள்ளலார் இராமலிங்க அடிகள் வடலூரிலிருந்து மேட்டுக்குப்பம் சென்று கொண்டிருந்த போது அடித்துக் கொன்று விட்டு சோதியோடு ஐக்கியமானார் என்று கட்டுக்கதை பரப்பினார்கள். பார்ப்பன வெறியர்களின் சாதிவெறிக்கு பலியான இறையியலாளர்கள் எத்தனையோ ! சிதம்பர ரகசியம் என்றாலே இதுதான்!

தமிழர்கள் விழ்த்துக் கொண்டதால் ஆறுமுக ஓதுவார் தப்பினார்.

ஆறுமுக ஓதுவாரின் நெஞ்சுறுதிக்கும் அவரோடு தோள் நின்ற தமிழுணர்வாளர்களுக்கும் பாராட்டுக்கள். அவர்களின் உறுதி பார்ப்பனியத்தை கருவறுக்கட்டும்

வெல்லட்டும் தமிழ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை வேண்டாம் இளங்கோ, எல்லாம் அருகதேவர் பார்த்துக் கொள்வார்

இரண்டு தரப்புமே இந்துக்கள். இடையில் நரிகளுக்கு என்ன வேலை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருகதேவரின் அடியாட்கள் பத்தாயிரம் பேரை ஞானசம்பந்தப் பெருமான் ஒரே இரவில் தூக்கி அலவாங்குகளில் வைத்தார். அருகதேவர் அந்த நேரம் கண்ணைத் திறந்து பார்க்கவில்லை. கிட்டடியில கமலகாசனைக் கடலுக்குள் தூக்கிக் கல்லோடு போட்டபோது பாற்கடலில் பள்ளி கொண்ட ரங்கராஜனும் கண் திறந்து பார்க்கவில்லை. உவையளெல்லாம் கண் திறந்து பார்ப்பிமெண்டு நம்பினால் அதோ கெதிதான் போலகிடக்குது.

thamilarivu.com

thamilarivu .co.uk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் பகுத்தறிவுவாதியான என் மீது அதே பட்டத்தை தேவையற்று தர முற்படுகிறார்

தமிழனின் உரிமைப் பிரச்சனையில் நாம் நாத்திகம் ஆத்திகம் பார்ப்பதில்லை!

கொல்லப் பட்ட நந்தனிலிருந்து தாக்கப்பட்ட ஆறுமுக ஓதுவார் வரை பார்ப்பன இந்துத்துவ வெறிக்கு பலியானவர்கள் தமிழர்கள். எங்களுக்கு கொதிக்கும் ரத்தம் ஆரிய அடிவருடிகளுக்கு கொதிக்காததில் வியப்பேதுமில்லை.

சைவம் வேறு இந்துத்துவம் வேறு என்பது பல அறிஞர்களின் கருத்து. அதற்காக சைவத்தில் குறைகள் இல்லாமல் இல்லை.

ஓரே ஒரு கேள்வி எல்லோரும் இந்துக்கள் என்றால் சிதம்பரம் தீட்சிதர் பொறுப்பிற்கு மாரியம்மன் கோவில் பூசாரியை நியமிப்பார்களா???????

சங்கர மடத்தின் தலைவராக பண்டார சன்னதியையோ மதுரை ஆதீனத்தையோ நியமிப்பார்களா???

இவைகள் நடந்தால் எல்லோரும் இந்துக்கள் என்பதை நாமும் ஒத்துக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

சைவம் வேறு இந்துத்துவம் வேறு என்பது பல அறிஞர்களின் கருத்து. அதற்காக சைவத்தில் குறைகள் இல்லாமல் இல்லை.

அதுதான் உண்மை... !!

சமதர்மத்தை சுடலையில் சாம்பலில் இருந்து ஆரம்பித்து , அன்பை கடவுள் எனும் மட்டும் சொன்னதில் சக்தியின் தன்மையே கடவுள் எண்றது சைவம்... ஆனால் வட இந்தியாவில் இருந்து வைனவ அந்தணர்களின் மதமாற்றும், எல்லா மதங்களையும் ஒண்றிணைத்து இந்து எனும் புரட்டும்தான் தமிழர்களுக்குள் பிரிவினையை கொண்டுவந்தது...!!

தமிழர்களின் சித்தர்கள் அருளிய சித்தாந்தங்கள் எல்லாம் இந்து சிந்தாந்தங்களாகவும், உபநிடதங்களாவும் ஆக்க பட்டன...!!

சைவ பூசாரிகள் இண்றும் இந்திய தமிழக கிராமங்களில் காணலாம், அவர்கள் பிறப்பால் பூசாரிகள் இல்லாமல் எல்லா ( பொருளாதார தள) மக்களில் இருந்து வருவதையும் இண்றும் காணக்கூடியதாக இருக்கும்...!!

(அவர்களில் சிலர் கூட போலியானவர்கள் எண்று மக்களின் கண்டனங்களுக்கு உள்ளாவதும் இருக்கிறது)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.