Jump to content

விடுதலை புலிகள் அழிந்தால் சந்தோசமாம் ?


Recommended Posts

நல்ல கேள்வி மின்னல் அவரும் இதை கேட்டார் (அவரை பற்றி சும்மா நினைக்காதேங்கோ எல்லா விடயமும் கேட்டார் ஆனால் நான் சிலவற்றை இங்கே குறிப்பிடவில்லை சில நோக்கங்களுக்காக) ஆனால் அவர்கேட்டது உங்கள் தமிழர்களும் சிங்கள அரசாங்கத்துக்கு உதவி செய்கிறார்கள் தானே அப்ப அவர்களுக்கு என்ன செய்தீர்கள் என்று. நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்.எங்கள் இனத்தில் துரோகிகளாக ஆடையாளம் காணப்பட்டவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போது உச்ச தண்டனை (உச்ச தண்டனை என்னவென்று தெரியும்தானே) வழங்கலாம் இதில் பெரிய சிக்கல்கள் இல்லை ஆனால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் முஸ்லீம் மக்களில் அரசாங்கத்துக்கு உதவி செய்பவர்களை இனம்கண்டு எங்களின் உச்ச தண்டனையை வழங்கமுடியுமா? அவர்களை இனங்கான்வது முதல் கடினம் அடுத்தது இனங்கன்டாலும் தண்டனை வழங்குவது பல சிக்கல்களை தோற்றுவிக்கும். ஒரு முஸ்லீம் நபராவது விடுதலை புலிகளால் கொல்லப்பட்டால் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை அழிக்கவும் தான் போராடுகிறார்கள் முஸ்லிம்களுக்கும் எதிரனவர்கள் என்ற ஒரு தோற்றப்பாடு உருவாகியிருக்கும் அதே நேரம் ஒரு முஸ்லீம் நபராவது கொல்லப்பட்டிருந்தால் அது தமிழ் முஸ்லீம் இன கலவரமாக மாறியிருக்கும். முஸ்லிம்களுககு எதிராக விடுதலை புலிகள் செயற்படுகின்றார்கள் என்ற தோற்றப்பாடு உருவாகியிருந்தால் முஸ்லீம் நாடுகளிடத்தே விடுதலைப்புலிகளை ஒழிக்கவேண்டும் என்ற தோற்றப்பாடும் அவர்கள் சிங்கள அரசாங்கத்துக்கு உதவிகள் செய்யக்கூடிய சந்தர்ப்பங்களும் அதிகமாக இருக்கின்றன இவை எல்லாவற்றையும் எங்கள் தலைவர் கணித்துத்தான் முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றுவது என்ற முடிவை எடுத்தார் ஒருவேளை அந்த முடிவை எடுத்திருக்காவிட்டால் இன்று பல அழிவுகளை மேலதிகமாக தமிழினம் சந்தித்திருக்கும்.

சுப்பண்ணை பல்லாயிரக்கணக்கில தமது சொந்த மண்ணிலிருந்து முஸ்லீம் மக்களை விரட்டியடிக்கிறது என்ன முஸ்லீம்களிற்கு எதிரான செயற்பாடு இல்லையோ? இதுக்கெல்லாம் முஸ்லீம் நாடுகள் கோவிக்காதோ? கிழக்கிலை முஸ்லீம்களிற்கு எதிராக 90களின் தொடக்கத்தில் நடந்த சில வன்முறைகள் எல்லாம் முஸ்லீம்களிற்கு எதிரான செயற்பாடோ?

தமிழர் தலைமையே முஸ்லீம் மக்களை வெளியேற்றியது தவறு என்று வருத்தம் தெரிவித்துவிட்டது. அதேவேளை இந்த நோக்கத்திற்காகத்தான் முஸ்லீம்களை நாங்கள் வெளியேற்றினோம் என்று புலிகள் எப்போதுமே தெரிவித்ததில்லை. எனவே நீங்கள் உங்கள் கற்பனையில் ஊறியவற்றை காரணமாக தெரிவித்து தலைவரின் தீர்க்கதரினமான முடிவென தலைவரை அசிங்கப்படுத்தாதீர்கள். நீங்கள் ஊகிக்கும் காரணம் என்னவோ அதனை உங்களின் கருத்தாகச் சொல்லுங்கள். தயவுசெய்து அதனை புலிகளினதோ அல்லது தலைவரினதோ கருத்தாக முன்வைக்காதீர்கள்.

அதிபன் நீங்கள் அவர்களால் என்ன துன்பம் அடைந்திருக்கிறீர்கள் ஆனால் நாங்கள் சொல்லவே முடியாது......

அதிபன் நீங்கள் ஒருக்கா[கிழக்கு மாகாணத்திலுள்ள] முஸ்லீம்களின் தேநீர்கடைக்கு சென்று பாருங்கள் அவர்களுக்கு அதுதான் பாராழுமன்றம் தமிழர்களுக்கு என்ன சொல்லுவார்கள் என்று தெரியுமா பீ தமிழன் தான் என்று அண்ணே சொன்னாரு இல்லை என்று மறுக்கவில்லை ஆனால் பாதிப்படைந்தது யாரு?? உங்களுக்கு தெரியுமா

அதோ மேல் இறைவன் ஒரு கிழக்கு மாகாண நபரை சந்தித்த தாகவும் அவர்கள் அடைந்த துன்பம் பற்றியும் எழுதியிருக்கார் பாருங்கோ

அந்த இணைப்பு நூணாவிலன் இணைத்திருக்கார்

சும்மா வெளியேற்றினது வெளியேற்றினது தவறு சொல்லாமல் தமிழர்கள் அடைந்த துன்ப துயரத்தை நோக்குங்கள்

என்னை பொறுத்த வரைக்கும் சுப்பண்ணை சொன்னது சரியென்பேன் சும்மா அவர்களால் ஒரு எள்ளளவும் பாதிக்கப்படாமல் வெளியேற்றினது தவறு என்றால்_______________தான்

இதை பற்றி வசம்பு ,மின்னல் நீங்களும் கூறுங்களன் தெரியாத நாங்கள் தெரிந்து கொள்வோம்

முனிவா

ஒண்டு தெரியுமா?

தமிழ் மக்களிற்கு எதிராகவும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் முஸ்லீம்கள் செயற்பட்டதைவிட பன்மடங்கள் தமிழர்களே செய்துள்ளார்கள். இதற்கெல்லாம் வெளியேற்ற தண்டனை கொடுத்தால் தமிழீழத்தின் எந்த ஒரு மாவட்டத்திலும் தமிழர்களே இருக்க மாட்டினம். ஏனென்றால் எல்லா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்களும் போராட்டத்திற்கு எதிரான செயற்பாட்டிலை சிறப்பாகச் செயற்பட்டிருக்கினம்.

Link to comment
Share on other sites

தமிழர்கள் பிழை விட்டால் திருத்தலாம் ,திருந்துவதற்கு சந்தர்ப்பம் ஒன்றும் கொடுக்கலாம் ஆனால் முஸ்லிம்களை பொறுத்தவரை______________________ :) ?

எத்தனையோ துன்பங்கள் அனுபவித்தார்கள் கிழக்கு மக்கள் ,வடக்கு மக்கள் எவனாவது ஒரு முஸ்லீம் அரசியல் வாதி அவர்களும் எங்களை போலவே தமிழ் பேசுகிறார்கள் அவர்களை விடுங்கோ உதவி செய்யுங்கோ என்று ஆர்ப்பாட்டமோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராக ஏதாவது செய்திருப்பார்களா இல்லை மாறாக அவர்களுடன் சேர்ந்து நில ஆக்கிரமுப்புக்கள் ,ஆள் கடத்தல்கள் துன்புறுத்துதல் போன்றவற்றிலே அதிகம் கவனம் செலுத்தினார்கள்

சிறிலங்கா அரச படைகள் தமிழ் மக்களைக் கொல்கின்றன. அதற்கு தமிழர்கள் ஒத்துழைக்கிறார்கள். தமிழர்களைக் கடத்தி சிங்களவன் பணம் பறிக்க உதவுகிறார்கள் தமிழர்கள். போராட்டத்திற்கு ஆதரவான தமிழர்களை சுட்டுக்கொல்கிறார்கள் தமிழர்கள்.

இதுபோதாதென்று, புலிகளே தமிழ் மக்களை அழிக்கிறார்கள். மனிதக் கேடயங்களை மக்களைப் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளைப் படையில் சேர்க்கிறார்கள். புலிகளிடமிருந்து தமிழ் மக்களை அரச படையினர் காப்பாற்ற உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமென்று தமிழர்கள் உலக நாடுகளை நோக்கி பரப்புரை செய்கிறார்களே! இதைவிடவா முஸ்லீம்கள் பெரிதாகச் செய்து போட்டார்கள்?

Link to comment
Share on other sites

வசம்பு முஸ்லீம் மக்கள் எல்லோரும் அராபியர் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை ஆனால் அவர்களின் தேசம் அதாவது மத்திய கிழக்கில் இருந்துதான் முஸ்லீம் மதத்தவர்கள் உலகம் முழுவதும் பரவினார்கள் என்று குறிப்பிட்டேன். தவறாக நீங்கள் புரிந்துவிட்டு அதை எனது தலையில் போடாதீர்கள்.வேறு மதங்களில் இருந்தும் முஸ்லீம் மதத்துக்கு மாறினார்கள்தான் ஆனால் முதல் முஸ்லீம் எங்கிருந்து வந்தார் ? அப்படி ஒரு சிலபேர் மதம் மாறி முஸ்லீம் ஆனதுக்காக எல்லா முஸ்லிம்களுக்கும் உரிமையை வழங்கலாமா? நிச்சயமாக முடியாது.இன்று ஈழத்தமிழர் மலையகத்தமிழர் என்று ஏன் தமிழர்களை இரு பெயர்கள் கொண்டு அரசாங்கமும் சரி நாமும் சரி அழைக்கின்றோம்? எல்லா தமிழரும் தமிழர் தானே. யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு என்ன உரிமை இருக்கு என்று கூறமுடியுமா வசம்பு? நான் வழங்கியது சரியான விளக்கமே அப்படி உங்களால் இன்னும் விளக்கம் கொடுக்கமுடியும் என்றால் உங்கள் தொலைபேசி இலக்கத்தை தாங்கோ யாராவது என்னோடு இப்படி கதைத்தால் அவர்களுக்கு உங்கள் தொலைபேசி இலக்கத்தை கொடுக்கிறேன் உங்களோடு தொடர்புகொள்ளசொல்லி.இலங்கையி
Link to comment
Share on other sites

அதிபன் நீங்கள் அவர்களால் என்ன துன்பம் அடைந்திருக்கிறீர்கள் ஆனால் நாங்கள் சொல்லவே முடியாது......

அதிபன் நீங்கள் ஒருக்கா[கிழக்கு மாகாணத்திலுள்ள] முஸ்லீம்களின் தேநீர்கடைக்கு சென்று பாருங்கள் அவர்களுக்கு அதுதான் பாராழுமன்றம் தமிழர்களுக்கு என்ன சொல்லுவார்கள் என்று தெரியுமா பீ தமிழன் தான் என்று அண்ணே சொன்னாரு இல்லை என்று மறுக்கவில்லை ஆனால் பாதிப்படைந்தது யாரு?? உங்களுக்கு தெரியுமா

அதோ மேல் இறைவன் ஒரு கிழக்கு மாகாண நபரை சந்தித்த தாகவும் அவர்கள் அடைந்த துன்பம் பற்றியும் எழுதியிருக்கார் பாருங்கோ

அந்த இணைப்பு நூணாவிலன் இணைத்திருக்கார்

சும்மா வெளியேற்றினது வெளியேற்றினது தவறு சொல்லாமல் தமிழர்கள் அடைந்த துன்ப துயரத்தை நோக்குங்கள்

என்னை பொறுத்த வரைக்கும் சுப்பண்ணை சொன்னது சரியென்பேன் சும்மா அவர்களால் ஒரு எள்ளளவும் பாதிக்கப்படாமல் வெளியேற்றினது தவறு என்றால்_______________தான்

இதை பற்றி வசம்பு ,மின்னல் நீங்களும் கூறுங்களன் தெரியாத நாங்கள் தெரிந்து கொள்வோம்

முனி

ஏதோ தமிழர்களுக்குத் தான் முஸ்லிம்களால் பாதிப்பு வந்ததாக நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். ஏன் முஸ்லிம்களை தமிழர்கள் கொல்லவில்லையா அவர்களுக்கு பாதிப்புக்கள் இன்றுவரை செய்யவில்லையா?? ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு கண்ணால் மட்டும் பார்க்காதீர்கள். சிலர் செய்யும் தவறுகளுக்கு மொத்த இனத்தையே குறைசொல்வது தவறு. நான் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுடன் பழகியிருக்கின்றேன். சில முஸ்லிம் நண்பர்கள் எனக்கு தேவாரம் கூட பாடிக் காட்டியிருக்கின்றார்கள். அவர்கள் யாழ் இந்துவில் பயின்றவர்கள். சமயபாடம் நடக்கும் போது தம்மை வாசிகசாலைக்கு செல்லுமாறு சமய ஆசிரியர் கூறினாலும் தாம் அவ்வாறு செல்லாமல் எமது மதம் பற்றி அறிந்து கொண்டோம் என்று சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால் அவர்கள் பற்றி நிறைய தெரியும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களில் மதவாதிகளாகவும் அரசியல்வாதிகளாக இருப்பவர்கள் தான் பிரைச்சினையானவர்கள். மற்றவர்கள் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை கொண்டவரே.

தெரியாத விடயத்தை சொல்லுங்கள் கேட்க என்கின்றீர்கள் ஆனால் நீங்கள் தான் எல்லாம் தெரிந்தவர்கள் என்பது போல் நீங்களும் சுப்பண்ணையும் நினைத்துக் கொண்டிருக்கும் போது நாங்கள் எதைச் சொன்னாலும் உங்களுக்குப் புரியப் போவதில்லை. ஆனால் பெருண்பான்மையான தமிழ் மக்கள் தெளிவாகவே இருக்கின்றார்கள் என்பது அவர்களின் கருத்துப் பகிர்விலிருந்து தெரிகின்றது. அது போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு நடந்தது பிழை தான். அதையெல்லாம் தாண்டி ரவூப் ஹக்கீம் இடையிடையேயாவது தமிழர் துன்பங்கள் பற்றிப் பேசுவது (ஆறுமுகன் மூச்சே விடாமல் இருக்கும் போது) முஸ்லிம் மக்கள் தமிழர்களுடன் நல்லுறவு கொள்ள விரும்புகிறார்கள் என்பதற்கான அடையாளம் தான். தலைவர்களை விடுங்கள். இலங்கையில் பல முஸ்லிம் நண்பர்கள் புலிகள் மீது கோபம் இருந்தாலும் தமிழர்கள் மீது சிங்களவர்கள் காட்டும் சந்தேக மனப் பான்மை இல்லாமல் நடந்து கொள்வதைக் கண்டிருக்கிறேன்.அவர்களுடைய கோபம் மற்றும் தமிழர் பிரச்சினையிலிருந்து தூர விலகி நிற்கும் போக்கு என்பன கடந்த கால வரலாறு மற்றும் அவர்களது மத அடையாளம் என்பவற்றின் அடிப்படையில் நோக்கப் பட வேண்டும். கோபம், அவர்களுக்கு நேர்ந்த பாரிய இழப்பினால் வந்தது. அந்நியமாதல்: எங்கே வாழ்ந்தாலும் என்ன மொழி பேசினாலும் மதத்தின் பெயரால் ஒன்று சேர்ந்திருப்பது முஸ்லிம் மக்களின் பண்பு. இதனால் எமக்கென்ன தீங்கு வந்தது? அவர்களின் தனித்துவத்தோடு அவர்களை விட்டு விடுவது தான் எங்களுக்கு நல்லது என நினைக்கிறேன். காரசாரமாக சொல்லாடி தமிழர் விரோதப் போக்கில்லாத முஸ்லிம்களையும் எதிரிகளாக மாற்றி விட வேணாம். கொஞ்சம் முன்னோக்கி யோசித்துப் பாருங்கள், சிங்களவன் எங்களுக்குச் செய்ததை நாங்கள் தமிழீழம் என்ற தேசமாகும் போது சிங்களவருக்கோ முஸ்லிம்களுக்கோ திருப்பிச் செய்தால் நமது விடுதலை அர்த்தமுள்ளதாகுமா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை பல்லாயிரக்கணக்கில தமது சொந்த மண்ணிலிருந்து முஸ்லீம் மக்களை விரட்டியடிக்கிறது என்ன முஸ்லீம்களிற்கு எதிரான செயற்பாடு இல்லையோ? இதுக்கெல்லாம் முஸ்லீம் நாடுகள் கோவிக்காதோ? கிழக்கிலை முஸ்லீம்களிற்கு எதிராக 90களின் தொடக்கத்தில் நடந்த சில வன்முறைகள் எல்லாம் முஸ்லீம்களிற்கு எதிரான செயற்பாடோ?

தமிழர் தலைமையே முஸ்லீம் மக்களை வெளியேற்றியது தவறு என்று வருத்தம் தெரிவித்துவிட்டது. அதேவேளை இந்த நோக்கத்திற்காகத்தான் முஸ்லீம்களை நாங்கள் வெளியேற்றினோம் என்று புலிகள் எப்போதுமே தெரிவித்ததில்லை. எனவே நீங்கள் உங்கள் கற்பனையில் ஊறியவற்றை காரணமாக தெரிவித்து தலைவரின் தீர்க்கதரினமான முடிவென தலைவரை அசிங்கப்படுத்தாதீர்கள். நீங்கள் ஊகிக்கும் காரணம் என்னவோ அதனை உங்களின் கருத்தாகச் சொல்லுங்கள். தயவுசெய்து அதனை புலிகளினதோ அல்லது தலைவரினதோ கருத்தாக முன்வைக்காதீர்கள்.

முனிவா

ஒண்டு தெரியுமா?

தமிழ் மக்களிற்கு எதிராகவும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் முஸ்லீம்கள் செயற்பட்டதைவிட பன்மடங்கள் தமிழர்களே செய்துள்ளார்கள். இதற்கெல்லாம் வெளியேற்ற தண்டனை கொடுத்தால் தமிழீழத்தின் எந்த ஒரு மாவட்டத்திலும் தமிழர்களே இருக்க மாட்டினம். ஏனென்றால் எல்லா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்களும் போராட்டத்திற்கு எதிரான செயற்பாட்டிலை சிறப்பாகச் செயற்பட்டிருக்கினம்.

மின்னல் நான் புலிகள் எடுத்த முடிவை சரியோ அல்லது பிழையோ என்று வாதிடவில்லை நடந்த உண்மையைத்தான் அவருக்கு கூறினேன். புலிகள் முஸ்லிம்களை ஒருபோதும் நிரந்தரமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றவில்லை ஒரு தற்காலிகமான ஏற்பாடே அது நானும் அதை பற்றி குறிப்பிட்டுள்ளேன் யாழ்ப்பாணத்திலும் மண்கும்பான் என்ற இடத்திலும் முஸ்லீம் பள்ளிவாசல்கள் இருக்கின்றன அங்கு சில முஸ்லிம்களும் வாழுகின்றார்கள் புலிகள் முஸ்லீம் மதத்துக்கு அல்லது முஸ்லீம் மக்களுக்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை அவருக்கு தெளிவுபடுத்தினேன்.முஸ்லிம்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை

முஸ்லிம்களுககு யாழ்ப்பாணத்தில் என்ன உரிமை என்று கேட்பதன் அர்த்தம் என்ன?? அவர்களுக்கு உரிமையில்லை என்று சொல்ல நீங்கள் யார்?? முஸ்லிம்களுக்கு இலங்கையில் எவ்வித உரிமையும் இல்லை என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதன் அர்த்தம் என்ன?? அவர்கள் எல்லோரும் வந்தேறு குடிகள் என்ற உங்கள் கணிப்பில் தானே?? இடையில் முஸ்லிம்ளாக மாறிய மக்கள் பற்றி நீங்கள் எங்கே குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் தவறான விளக்கம் கொடுத்திருப்பதை சுட்டிக் காட்டிய என்னிலேயே தவறு காண முயல்கின்றீர்கள்.

தற்போது இலங்கையில் மத்திய கிழக்கிலிருந்து வந்து குடியேறிய முஸ்லிம்களை விட இடையில் முஸ்லிம்களாக மாறிய மக்களே அதிகம். மத்திய கிழக்கிலிருந்த வந்து குடியேறிய முஸ்லிம்களைத் தான் நாம் (B)பாய் என்று குறிப்பிடுகின்றோம். அவர்களில் ஆண்கள் குர்தாவும் பெண்கள் உடம்பு முழுக்க மூடி கண் மட்டும் தெரியும் உடைதான் இன்றும அணிகின்றார்கள். பல தலைமுறைகளை கடந்த வாழும் அவர்களுக்கு உரிமையில்லை எனக் கூறும் நீங்கள் தான், இந்தியா தமிழகத்திலுள்ள 1983 இற்கு பின் இந்தியா சென்ற இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ஏன் உரிமை தரவில்லையெனவும் கோசம் போட்டீர்கள். ஆனால் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் இலங்கைப் பிரஜா உரிமை பெற்றவர்கள் தான். அவர்கள் எங்கும் வாழ்வதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. அப்படிப் பார்த்தால் இன்று எமது தமிழ் மக்கள் கொழும்பிலோ, மலையகப் பகுதிகளிலோ எப்படி வாழ முடியும்.

உங்களைப் போன்றவர்களால் தான் முஸ்லிம் மக்கள் பலர் தமிழ் மக்களை நம்ப மறுக்கின்றார்கள். மேலும் இலங்கையில் எல்லா மக்களும் தெளிவாக இருந்த போது சில அரசியல்வாதிகள் தான் தமது அரசியல் இலாபத்திற்காக் துவேசத்தை வளர்த்து விட்டார்கள். முன்பு தமிழ் புத்திஜீவிகள் பலர் தமது வீட்டு வேலைக்காரர்களாக சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களையே வைத்திருந்தார்கள் என்பது கூட தங்களுக்குத் தெரியுமா தெரியாது?? அரசியல்வாதிகள் செய்யும் குளறுபடிகளுக்காக மக்களை குறை சொல்வது சரியில்லை.

இறுதியாக தாராளமாக எனது வீட்டுத் தொலைபேசி இலக்கத்தை தங்களுக்கு தர நான் தயார். முதலில் உங்களது வீட்டுத் தொலைபேசி இலக்கத்தை எனக்கு தனிமடலில் அனுப்புங்கள். அந்த இலக்கத்தில் உங்களை அழைத்து எனது விட்டுத்தொலைபேசி இலக்கத்தை நான் தருகின்றேன். காரணம் முன்பு களத்திலுள்ள சிலர் என்னிடம் எனது விட்டுத்தொலைபேசி இலக்கத்தை தனிமடலில் கேட்டு வாங்கினார்கள். ஆனால் அவர்களது இலக்கத்தை நான் கேட்டபோது தங்களது வீட்டுத்தொலைபேசி இலக்கம் கேட்க வேண்டாமாம். வேண்டுமாயின் கைத்தொலைபேசி இலக்கம் தருகின்றோம் என்றார்கள். இப்படிப்பட்டவர்கள் பிறகு ஏன் அடுத்தவரின் வீட்டுத்தொலைபேசி எண்ணைக் கேட்கின்றார்கள்??

வசம்பு அவர் யாழ்ப்பாணத்தில் உரிமை என்று கேட்டது யாழ்ப்பான ஆட்சியில் உரிமை.அவர்களுக்கு அங்கு வாழும் உரிமை இருக்கின்றது அதை மறுப்பதற்கில்லை.அவர்களுக்கு யாழ்ப்பான ஆட்சியில் உரிமையில்லை என்பதை யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழன் என்ற வகையில் கூறுகிறேன் எத்தனையோ துன்பங்களை சுமந்தும் எத்தனையோ உயிர்களை விலையாக கொடுத்தும் எவ்வளவோ சொத்துக்களை இழந்தும் பலபேர் தங்கள் வாழ்க்கையையே விடுதலைக்காக அர்ப்பணித்தும் தமிழ் மக்கள் பெறப்போகும் தமிழீழத்தில் யாருக்கு ஆட்சி உரிமை கொடுக்கவேண்டும்? ஏன் கொடுக்கவேண்டும்? எங்களோடு சேர்ந்து போராடினார்களா? நாங்கள் பட்ட துன்பங்களை அனுபவித்தார்களா? எங்களுக்கு எந்தவகையில் ஆதரவாக செயற்பட்டார்கள்? (சில மிகச்சில பேர்களை தவிர) . நான் இலங்கையில் எவ்வித உரிமையும் இல்லை என்று குறிப்பிடவில்லையே நான் குறிப்பிட்டது யாழ்ப்பாணத்தில் அதுவும் ஆட்சி செய்ய உரிமை இல்லை என்று தான்.நான் முஸ்லிம்கள் எல்லோரும் மத்திய கிழக்கில் இருந்துதான் வந்தார்கள் என்றும் குறிப்பிடவில்லை அங்கிருந்து தான் எல்லா இடங்களுக்கும் பரவினார்கள் என்று குறிப்பிட்டுள்ளேன் தவறாக விளங்கிக்கொள்ளாதீர்கள்....

மத்திய கிழக்கு முஸ்லிம்கள் மட்டும்தான் குர்தாவும் பர்தாவும் அணியவேண்டும் என்று இல்லை முஸ்லீம் ஒவ்வொருவனும் அதை கடைப்பிடிக்கவேண்டும் என்பதே அவர்களின் கோட்பாடு. நபி அவர்கள் தான் அல்ஹாவின் கடைசி தூதுவன் அவர் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தான் மக்களோடு சேர்ந்து வாழ்ந்ததன் மூலம் உணர்த்தி சென்றிருக்கிறார் அதையே முஸ்லீம் மக்கள் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டும்.முஸ்லீ

Link to comment
Share on other sites

வசம்பு அவர் யாழ்ப்பாணத்தில் உரிமை என்று கேட்டது யாழ்ப்பான ஆட்சியில் உரிமை.அவர்களுக்கு அங்கு வாழும் உரிமை இருக்கின்றது அதை மறுப்பதற்கில்லை.அவர்களுக்கு யாழ்ப்பான ஆட்சியில் உரிமையில்லை என்பதை யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழன் என்ற வகையில் கூறுகிறேன் எத்தனையோ துன்பங்களை சுமந்தும் எத்தனையோ உயிர்களை விலையாக கொடுத்தும் எவ்வளவோ சொத்துக்களை இழந்தும் பலபேர் தங்கள் வாழ்க்கையையே விடுதலைக்காக அர்ப்பணித்தும் தமிழ் மக்கள் பெறப்போகும் தமிழீழத்தில் யாருக்கு ஆட்சி உரிமை கொடுக்கவேண்டும்? ஏன் கொடுக்கவேண்டும்? எங்களோடு சேர்ந்து போராடினார்களா? நாங்கள் பட்ட துன்பங்களை அனுபவித்தார்களா? எங்களுக்கு எந்தவகையில் ஆதரவாக செயற்பட்டார்கள்? (சில மிகச்சில பேர்களை தவிர) . நான் இலங்கையில் எவ்வித உரிமையும் இல்லை என்று குறிப்பிடவில்லையே நான் குறிப்பிட்டது யாழ்ப்பாணத்தில் அதுவும் ஆட்சி செய்ய உரிமை இல்லை என்று தான்.நான் முஸ்லிம்கள் எல்லோரும் மத்திய கிழக்கில் இருந்துதான் வந்தார்கள் என்றும் குறிப்பிடவில்லை அங்கிருந்து தான் எல்லா இடங்களுக்கும் பரவினார்கள் என்று குறிப்பிட்டுள்ளேன் தவறாக விளங்கிக்கொள்ளாதீர்கள்....

மத்திய கிழக்கு முஸ்லிம்கள் மட்டும்தான் குர்தாவும் பர்தாவும் அணியவேண்டும் என்று இல்லை முஸ்லீம் ஒவ்வொருவனும் அதை கடைப்பிடிக்கவேண்டும் என்பதே அவர்களின் கோட்பாடு. நபி அவர்கள் தான் அல்ஹாவின் கடைசி தூதுவன் அவர் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தான் மக்களோடு சேர்ந்து வாழ்ந்ததன் மூலம் உணர்த்தி சென்றிருக்கிறார் அதையே முஸ்லீம் மக்கள் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டும்.முஸ்லீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு இப்ப நேரம் போட்டுது அப்புறம் வந்து விளக்கம் தருகிறேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவா

ஒண்டு தெரியுமா?

தமிழ் மக்களிற்கு எதிராகவும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் முஸ்லீம்கள் செயற்பட்டதைவிட பன்மடங்கள் தமிழர்களே செய்துள்ளார்கள். இதற்கெல்லாம் வெளியேற்ற தண்டனை கொடுத்தால் தமிழீழத்தின் எந்த ஒரு மாவட்டத்திலும் தமிழர்களே இருக்க மாட்டினம். ஏனென்றால் எல்லா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்களும் போராட்டத்திற்கு எதிரான செயற்பாட்டிலை சிறப்பாகச் செயற்பட்டிருக்கினம்.

அண்ணன் நான் அதை மறுக்கவில்லை சில தமிழர்கள் இப்போதும் அதைதான் செய்கிறார்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.இதனால் தான் இன்று தமிழீழம் நமக்கு எட்டாக்கனியாக இருக்கின்றது.

தமிழ்ர்கள் உலக நாடுகளை நோக்கி பரப்புரை செய்கிறார்கள் என்றால் அவர்களும் எதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கலாம் உதாரணம் வெளிநாட்டில் இருந்து வந்த குடும்பம் ஒன்று ஈழத்திற்கு வந்தால் ஒழுங்காகவும் கலாச்சாரமாகவும் நடந்து கொள்ள வேண்டும் மாறாக அவர்கள் தங்கள் விருப்பதுக்கு நடக்க முடியாது உடை விசயத்தில் மட்டக்களப்பு மாகாணத்தில் அன்று இருந்த அரசியல் துறை பெண்களால் எச்சரிக்கை விடப்பட்டது ஆனால் தண்டனை வழங்கப்படவில்லை ஆனால் அது பிடிக்காதாவர்கள் வெளியேறி விட்டார்கள் இன்று அவர்களுடன் சேர்ந்து கொண்டுள்ள சில பேர்தான் புலிகள் சிறுவர்களை கடத்துகிறார்கள் ,கப்பம் அறவிடுகிறார்கள் ,மக்களை மனித கேடயங்களாக பயன் படுத்துகிறார்கள் என்று பரப்புரை செய்கிறார்கள்.இதற்கு பின் புலமாக இலங்கை அரசின் ஒட்டுண்ணிகளும் துணை

Vasampu Posted நேற்று, 09:19 PM

இதை பற்றி வசம்பு ,மின்னல் நீங்களும் கூறுங்களன் தெரியாத நாங்கள் தெரிந்து கொள்வோம்

முனி

ஏதோ தமிழர்களுக்குத் தான் முஸ்லிம்களால் பாதிப்பு வந்ததாக நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். ஏன் முஸ்லிம்களை தமிழர்கள் கொல்லவில்லையா அவர்களுக்கு பாதிப்புக்கள் இன்றுவரை செய்யவில்லையா?? ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு கண்ணால் மட்டும் பார்க்காதீர்கள். சிலர் செய்யும் தவறுகளுக்கு மொத்த இனத்தையே குறைசொல்வது தவறு. நான் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுடன் பழகியிருக்கின்றேன். சில முஸ்லிம் நண்பர்கள் எனக்கு தேவாரம் கூட பாடிக் காட்டியிருக்கின்றார்கள். அவர்கள் யாழ் இந்துவில் பயின்றவர்கள். சமயபாடம் நடக்கும் போது தம்மை வாசிகசாலைக்கு செல்லுமாறு சமய ஆசிரியர் கூறினாலும் தாம் அவ்வாறு செல்லாமல் எமது மதம் பற்றி அறிந்து கொண்டோம் என்று சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால் அவர்கள் பற்றி நிறைய தெரியும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களில் மதவாதிகளாகவும் அரசியல்வாதிகளாக இருப்பவர்கள் தான் பிரைச்சினையானவர்கள். மற்றவர்கள் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை கொண்டவரே.

தெரியாத விடயத்தை சொல்லுங்கள் கேட்க என்கின்றீர்கள் ஆனால் நீங்கள் தான் எல்லாம் தெரிந்தவர்கள் என்பது போல் நீங்களும் சுப்பண்ணையும் நினைத்துக் கொண்டிருக்கும் போது நாங்கள் எதைச் சொன்னாலும் உங்களுக்குப் புரியப் போவதில்லை. ஆனால் பெருண்பான்மையான தமிழ் மக்கள் தெளிவாகவே இருக்கின்றார்கள் என்பது அவர்களின் கருத்துப் பகிர்விலிருந்து தெரிகின்றது. அது போதும்.

தமிழர்கள் முஸ்லீம்களை கொல்ல வில்லையா

அன்றைக்கு அந்த நிலமை யார் முதலில் தமிழர்களை சீண்டியது சிங்களவன் அவர்களுடன் துணை யுடன் அன்று இறங்கியது யார்??[கிழக்கு மாகாணத்தில்] அன்று இருந்த இளைஞர்கள் கட்டு துப்பாக்கியுடன் ,பொல்லுகள் தடிகள் கிராமங்களின் எல்லை யோரங்களில் நிற்காவிட்டால் இன்று அம்பாரையில் ,மட்டக்களப்பில் தமிழர்கள் இருந்திருப்பார்களா??

நீங்கள் முஸ்லிம் மாணவர்களுடன் பழகியிருப்பீர்கள் நல்லவர்கள் ஏற்று கொள்கிறேன் ஆனால் மூதூரில் நடந்தது என்ன மூதூர் நண்பர் சொன்னது புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது முஸ்லீம்கள் எப்படி தமிழர்களுடன் ஒட்டி உறவாடியிருந்தார்கள் புட்டும் தேங்காய் பூவையும் போல என்று சொல்வார்கள் கிழக்கு மாகாணத்தவர்கள் அதையே ராணுவம் கைப்பற்றிய போது அதே முஸ்லீம்கள் எந்த வொரு பகுதியும் அரசாங்கத்தின் பகுதியாக இருந்தால் தான் சந்தோசம் என்று பேட்டியும் கொடுத்திருந்தார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது இவர்களின் வாய்க்கு பூட்டா போட்டிருந்தார்கள் இல்லையே நல்ல படியாகதானே வாழ்ந்தார்கள் ஆனால் அதையே ராணுவம் கைப்பற்றிய போது பார்த்தீர்களா கொள்கையை அதே நிலைதான் அன்று யாழ் பாணத்தில் இருந்து புலிகள் வெளியேற்றியிருக்காவிட்டால் இதே பேட்டி கொடுக்கப்பட்டிருக்கும் இன்னும் பல அழிவுகளுடன்

இப்படி சொல்லி கொண்டே போகலாம்

வசம்பு ,மின்னல் அண்ணே நான் தெரியாததை தெரிந்து கொள்ளலாம் என்பதற்காகவே கேட்டேன் ஆனால் நக்கல் அடிப்பதற்காக இல்லை மன்னிக்கவும் ஆகையால் இந்த விவாதத்திலிருந்து விலகி கொள்கிறேன் நன்றி

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை நீங்க என்ன பதில்தான் சொன்னீர்கள் சொல்லுங்கோ மறந்தீட்டிங்கள் போல இந்த தலைப்பை மீண்டும் கிளறுவதை மன்னிக்கவும் :):rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை நீங்க என்ன பதில்தான் சொன்னீர்கள் சொல்லுங்கோ மறந்தீட்டிங்கள் போல இந்த தலைப்பை மீண்டும் கிளறுவதை மன்னிக்கவும் :(:lol::unsure:

எதற்கு பதில் சொல்வதை பற்றி கேட்கிறீர்கள் :) ? சற்று விளக்கமாக கூறுங்கள்.

இதை எழுத வேண்டியதை எழுதிமுடிக்கவேண்டும் என்பது தான் எனது விருப்பம் ஆனால் சில வேண்டுகோள்களினாலும் சில புறக்காரனிகளாலும் எழுவது தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது ஆனாலும் எழுதுவேன்.தற்போது எழுதினால் நான் எழுத நினைப்பவற்றை எழுதாமல் சிலவற்றை தவிர்த்து எழுதவேண்டிய கட்டாயம் ஏற்படும் அதை விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.