Jump to content

இது தான் புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்த்தேசியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே

நானும் பார்க்கிறேன்

இந்து மதம் மட்டும்தான் இடிவாங்குகிறது??????

ஏனோ???

இந்தப்பாட்டியெல்லாம் வேறுயாரும் செய்வதில்லையோ???

இந்தப்பாட்டியெல்லாம் வேறு மதத்தினர்தான் கூடுதலாகச்செய்வதை நான் கண்டிருக்கின்றேன்

ஆனால் படங்களை வெளியிட்டு நான்மாட்டிக்கத்தயாரில்லை

அதேபோல் இதில் படங்களை இணைத்ததையிட்டும் எனக்கு உடன்பாடு இல்லை..........???

Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

வணக்கம்!

ஏன்னையும் சேர்த்துக் கூறவில்லை. அப்படியென்றால் நான் இதைக் கூறி இருக்கமாட்டேன். ஒருவன் உதாரணமாக இருக்கவேண்டுமே தவிர மற்றவர்களை பிழை கூறலாகாது. தமிழீழ விடுதலைக்கும் சமயத்துக்கும் சம்பந்தமே இல்லை. நான் ஒரு சைவ சமயத்தவன். இந்து சமயத்தை இழிவு படுத்த வில்லை. ஆனால் மூட நம்பிக்கைகளில் ஊறியவன் அல்ல. களியாட்ட விழாக்களில் நான் பங்கு பற்றுவதை விட்டு இன்றோடு 25 வருடத்திற்கு மேலாகிவிட்டது. புலம் பெயர்ந்த நாடுகளில் ஒவ்வொரு வார இறுதியில் ஏதாவது ஒரு களியாட்ட நிகழ்ச்சி இன்றும் நடை பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இருநூறு, நூறு டாலர்கள் என்று மக்கள் கொடுத்துப் பார்க்கின்றார்கள். எமது மூதாதையர் விட்ட பிழைகளால்தான் இன்று தமிழினம் அழிந்து கொண்டிருக்கின்றது. ஆமாம் பிள்ளை பிறந்தால், 11, 31, என்று கொண்டாட்டங்கள். அதன் பின்பு பிறந்த நாள் விழாக்கள். அரங்கேற்றங்கள். பூப் புனித நீராட்டு விழாக்கள். இப்படி பல. புலம் பெயர்ந்த நாடுகளில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து அன்னதானங்கள். இவைகளுக்கு நான் பணம் கொடுக்க வில்லை. ஆனபடியால் என்னைக் கேள்வி கேட்பதை விட்டு தாங்கள் தமிழினத்தைக் கேளுங்கள். அத்தோடு கொண்டாட்டங்கள் வைப்பது தனிப்பட்ட விடயம் என்று கூறுவார்கள். கேட்கும் பொழுது இதற்கு விடையும் தேவை!

நீங்கள் எல்லோரும் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். புறநகருக்கு புறநகர் ஆலயங்கள் தேவையா? ஆயிரக்கணக்கில் தெருவில் தேங்காய்களை உடைக்கலாமா? ஆலயங்களைக் கட்டி அதன் பின்பு நீதி மன்றங்களில் சரணடையலாமா?. ஒரு நாட்டில் ஆலயத்தைக் கட்டி விட்டு அதன் தர்மகத்தா காவலோடு உறங்குவாராம். ஏன் போட்டி பொறாமை. சண்டை சச்சரவு. ஈழ விடுதலையில் ஒற்றுமையோடு போராடுகின்றார்களா? எத்தனை இயக்கங்கள். அன்றய அரசியல் வாதிகள் தங்களுக்கென்று தொடங்கி வைத்த கூட்டங்கள் இன்று இனவாத அரசின் கூலிப் படைகளாகிவிட்டது.

தமிழினத்தையோ இந்து மதத்தையோ இழிவு படுத்துவது எனது நோக்கமல்ல. ஏனெனில் நானும் ஒரு தமிழன். அதிலும் சைவ சமயத்தவன். மூட நம்பிக்கைகள் போராட்டத்தைத் தாமதப்படுத்தும். சிந்திக்க வைப்பதுதான் எமது நோக்கம். தலைவரைச் சுப்பண்ணை சந்திக்க வில்லை என்றால், மற்றவர்கள் சந்திக்க வில்லையென்று எப்படி ஆதங்கத்தோடு கூறலாம். தமிழீழப் போராட்டத்திற்கும், பிராமணரர்களுக்கும், தேங்காய் உடைப்பதற்கும் முடிச்சுப் போடுவது தவறானது.

பிழையான வழியில் தயவு செய்து திசை திருப்பவேண்டாம்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

1. இந்தத் திரியின் தலைப்பே "இது தான் புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்த்தேசியம்". நீங்கள் இதில் பங்கேற்று இந்து மத நடைமுறைகள் சிலவற்றை குறை சொல்லும் பொழுது நீங்கள் போராட்ட அரசியலில் மதத்தை கலப்பதில் பங்கெடுக்கிறீர்கள். எவருடைய மத உனர்வுகளை புன்படுத்துதளும் எந்த வழியிலும் போராட்டத்திற்கு உதவப் போவதில்லை.

2. பிராமன சமுதாயத்த நேரிடையாகவே குறை சொல்கிறீர்கள். ஒரு சமூகத்தை ஒட்டு மொத்தமாகவே குறை சொல்தல் நாகரீகமன்று. சிங்களவரின் இனவெறிக்கு அவர்கள் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமில்லை. போராட்டத்திற்கும் அவர்கள் பின் நிற்கவில்லை. நாம் மிகச் சிருபான்மையினர். மேலும் பிரிவுகள் தேவையில்லை.

3. மூட நம்பிக்கை போராட்டத்தை தாமதப்படுத்தும் என்கிறீர்கள். கடந்த 30 வருடங்களில் மூட நம்பிக்கை போராட்டத்தை எந்த அளவிற்கு பின் தள்ளியது என்று சொல்லமுடியுமா?

4. புலம்பெயர்ந்தவர்களின் போராட்டத்திற்கான பாரிய பங்களிப்பு, கோவில் தேங்காய் அடிப்பை நிறுத்தியது தான் என்று முடிந்து விடக்கூடாதல்லவா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. புலம்பெயர்ந்தவர்களின் போராட்டத்திற்கான பாரிய பங்களிப்புஇ கோவில் தேங்காய் அடிப்பை நிறுத்தியது தான் என்று முடிந்து விடக்கூடாதல்லவா?

அப்படியா???

புலம்பெயர்ந்தவர்கள் கேம் விளையாடுவதுபோல் அல்லவா போர் தொடரவேண்டும் என்று மல்லுக்கட்டுகின்றனர் என இங்கு யாழ் களத்தில் இருப்போர் எண்ணுகின்றனர் எழுதுகின்றனர்??????????

Link to comment
Share on other sites

அண்ணைமார் உதுகளுக்கு எதிராய் எதிரி எப்பிடி எல்லாம் ரேடியோ வைத்தும், தனியாகவும் பிரச்சாரம் செய்தவன் செய்கிறான் எண்டதை கேட்டுப்போட்டு அதுக்கான பதில்களையும் சொல்லினீங்கள் எண்டால் பார்க்கிற எங்களுக்கும் சுவாரசியமாய் இருக்கும்....!!!

அதுகளை கேக்கிறவை ஏதாவது கேள்வி கேட்டா பேந்த பேந்த முளிக்கிறதை தவிர வேற வளி இல்லாமல் கிடக்கு...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவனின் தேசியம் என்ன என்பது பற்றி யாராவது சொல்லுங்களேன்?

Link to comment
Share on other sites

குறுக்காலபோவனின் தேசியம் என்ன என்பது பற்றி யாராவது சொல்லுங்களேன்?

அது பற்றி எல்லாம் சொல்ல வெளிக்கிட்டா வெட்டி போடுவாங்க வெட்டி...!!

மோகன் சாரிடம் சந்தேகம் கேட்டு மடல் எல்லாம் போட்டு காத்து இருக்கன் பதில் தான் இன்னும் இல்லை...!!! ஆனால் அவர் மௌனமாக இருப்பதால் நோக்கம் என்ன என்பதை ஓரளவு அறியக்கூடியதாக இருக்கிறது...!!

பிரச்சார ரீதியில் இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மோகன் சார் மட்டுமே பொறுப்பு என்பதை அறிய தந்துவிடுகிறேன்...!!

Link to comment
Share on other sites

குறுக்காலபோவானின் தமிழ் தேசியம் மீதான பற்று என்னை அவர் மீது பொறாமை கொள்ள வைக்கிறது. இது போன்ற உங்கள் தேசியச்சேவை எங்களுக்கு தேவை.

படித்த, தேசியத்தை குத்தகைக்கு எடுத்த மக்கள் தமது தேசியத்துக்கன உழைப்பின் களைப்பை போக்க ஒன்று கூடி மகிழ்வதையும், உடல் நலத்துக்கான திராட்சை ரசம், பார்லி ரசம் குடிப்பதையும் தேசியத்தை பாதிப்பதாக சொல்லி இங்கு படங்களை இணைத்த நெடுக்காலபோவானுக்கு எனது கடுமையான கண்டனக்களை தெரிவிக்க விரும்புகிறேன். அத்துடன் இப்படி படத்தை இணைப்பதால் களத்தில் உள்ள ஒரு சிலரின் தெர்ந்தெடுத்த மறதி நோயை (Selective Amnesia ) பற்றி மற்றவர்கள் அறியும்படி செய்ததையும் வன்மையாக கண்டிக்கிறென். படித்த அறிவுள்ளவர்கள் தமதுஇ பயண களைப்பு போக பல நாட்டு எல்லைகளை கடந்து குடிபானங்களை வாங்கியதை இங்குள்ள சிலர் தொடர்ந்து குத்திக்காட்டுவது தொடர்பாகவும் எனது அதிருப்தியை தெரிவித்து கொள்கிறேன்.

இறுதியாக ஒரு பொன்மொழி

"மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகல் உடைத்தால் பொன் குடம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி மதம் என்பது நம்பிக்கை சார்ந்த விடயம். இலகுவில் மக்களால் மாறிவிட முடியாது.

ஆனால் ஒரு பெண் பருவமடைவதை ஊருக்கு தம்பட்டம் அடிக்கும் கீழ்த்தரமான சாமத்திச் சடங்கையாவது புலம்பெயர் மக்களால் நிறுத்தமுடியாதா?

Link to comment
Share on other sites

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறன்??னுமின்றி

வஞ்சனை செய்வாரடி கிளியே

வாய்சொல்லில் வீரர் அடி...

இப்படித்தான் இருக்கு யாழ்பகுத்தறிவாளாகள் சங்கம்.. தாங்கள் ஒன்டும் புடுங்குறேல.... மற்றவை ஒன்டும் செய்யிறேல என்டு ஓரே ஒப்பாரி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டோர் தமிழீழத்கை விட்டு புலம் பெயர்ந்துவிட்டனர். கணிசமானோர் வளம் கொழிக்கும் மேற்கு நாடுகளில் குடியமர்ந்துவிட்டனர். மேற்கு நாடுகளுக்கு புலம் பெயர முடியாத சற்று வசதி குறைந்தவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையாக வேலை செய்து தமது குடும்பங்களின் செலவுகளைச் சமாளிக்கின்றனர். வசதி வாய்ப்புக்கள் இல்லாதோர் உயிர் தப்ப தமிழகம் சென்று அவல வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.

நாட்டிலும் சற்று வசதி படைத்தோர், அல்லது மேற்கு நாடுகளில் உறவினர்கள் உள்ளோர் சிங்களப் பகுதிகளில் (கொழும்பு உட்பட) தங்கியுள்ளனர். தாயகப் பகுதிகளில் எஞ்சியோரே இன்னும் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் வசதி வாய்ப்புக்கள் கிடைத்தால் இந்தியா, கொழும்பு, மத்திய கிழக்கு நாடுகள் அல்லது மேற்கு நாடுகளுக்கு வந்துவிடுவர். எனவே புலம்பெயர் தமிழீழ மக்கள் தமது தேசியக் கடமையாக எஞ்சியுள்ள இம்மக்களை மேற்கு நாடுகளுக்கு வரவழைக்க முயலலாம்.

  • இரத்த உறவினர்களை ஸ்பொன்சர் செய்யலாம்
  • மாணவர்களாக இருக்கும் உறவுக்காரச் சிறுவர்களை மேற்கு நாடுகளில் உள்ள பாடசாலைகள்/பல்கலைக் கழகங்களுக்கு வந்து படிக்க பொருளாதார உதவிகள் செய்யலாம்.
  • தாயகத்தில் திருமணங்கள் முடிப்பதன் மூலம் இளைஞர்கள்/இளைஞிகளை மேற்கு நாடுகளுக்கு புலம் பெயரப் பண்ணலாம்.

இவ்வாறு பல வழிகளிலும் தமிழர்கள் மேற்கு நாடுகளுக்கு வந்து சேர்ந்துவிட்டால், இங்கு கோயில்களில் தேங்காய் உடைப்பதும், களியாட்டாங்கள் வைப்பதும், டின்னர் - டான்ஸ் வைப்பதுமாக புலம் பெயர் தேசியத்தை எல்லோரும் சேர்ந்து வளர்க்கலாம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட.. வேலை சொக்கில குத்தாமல் வாயில ஸ்ரைலா கவ்விப் பிடிச்சிருக்கினம்..! :Dஅதுசரி மேக்கப்புக்கு முன்னால பக்தி பேக்கப் தானே..! :(

குத்தினால் வலிக்காதா? :(:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்குள் இருக்கின்ற சில நம்பிக்கைகளைச் சிதைப்பதன் மூலம், அல்லது அவர்களின் விருப்ப்ததிற்கு மாறாக நடப்பதன் மூலம் எதிரிகளை என்னமும் சம்பாதித்துக் கொடுக்கின்ற ஒரு வேலையைத் தான் இங்கு சிலர் செய்கின்றனர். நாம் இந்து என்பதற்காகச் சொல்லவில்லை. ஆனால் எந்த சமயத்திலும் எம்மக்களின் ஒவ்வொருபிரிவும் எம் போராட்டத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டியதில்லை. அது எதிரிக்கு வாய்ப்பாக போய்விடும். சம்பந்தப்பட்ட அனைவரும் இதை உண்ர்ந்து பொறுப்புடன் இங்கு கருத்தெழுத வேண்டும்.

கோவில்கள், களியாட்டாங்கள், உல்லாசப் பணங்கள், ஊர்க் கொண்டாட்டாங்கள் என்று அநியாயமாகச் செலவு செய்வதைத் தவிர்த்து, தமிழீழப் போராட்டத்திற்கு உதவிட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

எல்லோருக்கும் இதே மனது தான் உள்ளது என நம்புகின்றேன். ஆனால் அது எப்போது விவாதமாகின்றது என்றால், தவறான வேறு கருத்துக்களை உட்புகுத்துவது தான். இங்கே திரும்பத் திரும்ப இந்துக்களையே சாடுவது கூட, சிலருடைய மனவெறியின் வெளிப்பாடோ, இஸ்லாமிய மிதவாதப் பற்றோ என்று நான் அறியேன்.

ஆனால் மக்களுக்குள் பிளவுகளை உண்டு பண்ணி, அந்தக் கட்டமைப்பைச் சிதைப்பது புத்திசாலித்தனமான ஒன்றல்ல. அது போராட்டத்தை தெரிந்தோ, தெரியாமலே மலினப்படுத்துவது போலாகும். இப்படி எரிச்சல் ஊட்டி வெறுப்பை உண்டாக்குவதை விட, பொறுப்போடு நட்பாhகச் சொன்னால் பெறும் வெற்றி அதிகம்.

Link to comment
Share on other sites

குறுக்காலபோவனின் தேசியம் என்ன என்பது பற்றி யாராவது சொல்லுங்களேன்?

தே+++++++++++++சி++++++++++++++++ய+++++++++++++++++++ம் :(

Link to comment
Share on other sites

காலமடா சாமி. எல்லாம் எங்கட தலைவர் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கப் போய்.. அசைலத்தால வந்த மவுசுதாங்க. ஈழம் கிடைச்சுதோ இல்லையோ.. எங்கட ஆக்கள் வெள்ளக்காரனை தோற்கடிச்சு.. அங்கேயே ஈழத்தை உருவாக்கிடுவினம் போல எல்லோ இருக்குது..! :(:(

நெடுக்கு... நீங்கள் பாட்டுக்கு தண்ணியை நிப்பாட்ட சொன்னால் நாளைக்கு தமிழீழ மக்கள் படும் அவலத்தை, கோயில் ஐயர் மார் அடிக்கிற காசுகளின் தொகையை நினைத்து வாற கவலையை எப்பிடி மறக்கிறது....??

குறிப்பா தமிழீழ மக்களுக்காக உழைத்த அலுப்பை எப்பிடி போக்கிறதாம்...???

புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்ற வேணும்... அது மாதிரி, தமிழர் பேரவலத்தீயை தண்ணி ஊத்திதான் அணைக்க வேணும்...!! :D

புறக்கணி சிறீலங்கா மாதிரி புதுசு புதுசா சிந்திக்கிறீயள்...!! அதுமாதிரி இதுவும் வெற்றி அடையட்டும்...!!

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் இதே மனது தான் உள்ளது என நம்புகின்றேன். ஆனால் அது எப்போது விவாதமாகின்றது என்றால், தவறான வேறு கருத்துக்களை உட்புகுத்துவது தான்.

ஆனால் மக்களுக்குள் பிளவுகளை உண்டு பண்ணி, அந்தக் கட்டமைப்பைச் சிதைப்பது புத்திசாலித்தனமான ஒன்றல்ல. அது போராட்டத்தை தெரிந்தோ, தெரியாமலே மலினப்படுத்துவது போலாகும். இப்படி எரிச்சல் ஊட்டி வெறுப்பை உண்டாக்குவதை விட, பொறுப்போடு நட்பாhகச் சொன்னால் பெறும் வெற்றி அதிகம்.

உண்மை தான்... தேவையற்ற வீண் விவாதங்களால் பயனில்லை. இது எமது சமுதாயத்தையே பலவீனப்படுத்தும். ஆக்கபூர்வமான வழியில் கருத்துகளை தெரிவிப்பதே பயனுள்ளது.

அத்துடன், மற்றவரது கருத்தை அவருடைய நிலையில் இருந்து விளங்க முற்பட்டால் தேவையற்ற விவாதங்களை குறைத்துக்கொள்ளலாம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் சனம் ஒருவேளைச் சாப்பாட்டுகே அல்லபடும்போது புலம்பெயர்ந்த நம்மவர்கள் செய்யும் களியாட்டக் கூத்துக்கள் அநியாயமானவை. மத நம்பிக்கை தேவைதான், அதுக்காக அதை ஒரு விளம்பர விடயமாகவோ அல்லது சிலரின் பணவளத்தைக் கூட்டும் நிகழ்வாகவோ ஆக்கிவிடுவது தவறு.

டின்னர் டான்ஸுகளும், கூத்துக்களும் இப்போது எல்லா புலம் பெயர்ந்த நாடுகளிலும் நடைபெறுகின்றன. அங்கங்கு இருக்கும் இந்தியர்களோடு சேர்ந்து இவர்களும் தமது தமிழர் என்கிற அடையாளத்தைத் தொலைத்து விட்டு இந்தியர்களாக ஆடுவதும் பாடுவதும் அருவருக்கிறது.

ரெண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்களாக இருக்கட்டும் ரஷ்ஷியர்களாக இருக்கட்டும், அல்லது வியட்நாமியப் போரில் அந்நாட்டு மக்களின் தியாகமாக இருக்கட்டும் இவை எவையுமே எம்மை கவலைப்பட வைக்கப் போவதில்லை.

வன்னியில் நடக்கும் எந்தச் சம்பவமும் எம்மை சலனப்பட வைக்கப் போவதில்லை. யார் சாப்பிட்டால் என்ன விட்டால் என்ன? யார் செத்தாலென்ன விட்டாலென்ன? ராணுவம் எங்கு போனால்த்தான் என்ன? எமக்கு தேவையானதெல்லாம் எமது சந்தோஷமும், களியாட்டமும்தான்.

இண்டைக்குக் குசேலன் படம், நாளைக்கு எச்.பி.பாலசுப்ரமணியத்தின்ர இசை நிகழ்ச்சி, நாளண்டைக்கு கரிகரனின்ர இசை நிகழ்ச்சி( டிக்கெட் வித்தவரிட்டயஏ கழிவும் எடுத்து)எண்டு பாத்துக்கொண்டிருப்பம். ஏதும் பெரிசெண்டால் செய்தியில பாக்கலாம் தானே?????????

Link to comment
Share on other sites

குறுக்கு

இது ஒரு பகுதிதான், மிச்சச்சத்தையும் போட்டா... இந்த யாழ்க்களம் தாங்காது. ஈழவிடுதலைப்போராட்டத்தின் தீர்க்கமான காலம் இது... இதை நழுவவிட்டால் மீண்டுமொரு சந்தர்ப்பம் வருமோ தெரியாது...

புலம்பேர்ந்த ********** கொஞ்சம் சிந்திக்கவேணும். வன்னில அடியாம் இஞ்ச அடியாம், 10 ஆமியாம் 100 ஆமியாம் எண்டு ஓடுப்பட்டு திரியாமல். செயல்வீரர்களாக இருப்பார்களா???????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தூக்கு காவடி எடுக்கிறதாய் நேத்தி வைக்கப் போறன் .ஒரு கட்டிலிலை நான் படுத்திருந்தபடி கட்டிலை கட்டித்தொங்க விட்டால் சரிதானே

:( :( :D:lol::D

Link to comment
Share on other sites

குத்தினால் வலிக்காதா? :(:(:D

பக்தி விசயம் அல்லோ??!! வலிச்சாலும் பரவாயில்லையெண்டு தாங்குவினம்..! :D ஆனால் சொக்கையில விழுற ஓட்டைக்கு என்ன செய்யுறது? அதாலதான் நாங்க கவ்வுறது..! :lol:

Link to comment
Share on other sites

மாறி மாறி குறைசொல்லி மனங்களைக் கனக்கச் செய்து கல்மனம் ஆக்கும் முயற்சிகளின் கச்சிதமான அரங்கேற்றம்......

இவ்விரு காட்சிகளிலும் இத்தள நிர்வாகி மோகன் அண்ணா உள்ளார் என வைத்துக்கொள்வோம்.

அவரின் கலந்து கொள்ளும் நிகழ்வு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவது அவசியமா?

பொதுப் பணிகளை அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையுடன் இணைத்து கதைத்து விமரிசித்து பொதுப்பணிகளையே தடுக்கும் கைங்கரியமாகவே இது தெரிகிறது.

அண்மைய உதாரணமாக...

மடு ஆக்கிரமிக்கப்பட்டு தான்தோன்றித்தனமான திருத்தவேலைகளால் அழிவுகள் வெளிவருவது மறைக்கப்பட்டு பின் அமைச்சர் குழாம் மன்னார் சென்று அழுத்தம் கொடுத்தும் விழா நடத்தப்படவில்லை. அரச ஆதரவுடன் தமிழ்மக்கள் செல்லாவிட்டாலும் சிங்கள கத்தோலிக்கரும் விடுப்புப் பார்க்கும் கூட்டமுமென வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு கூட்டம் கூட்டி பிரமாண்டமாகப் பிரசுரித்து விளம்பரப்படுத்தும் உத்தி விழா இல்லாததால் பிசுபிசுத்துப் போனது யாவரும் அறிந்ததே...

விழா நடத்தி "மடு விடுவிக்கப்பட்டது, பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு என பிரமாண்ட விளம்பரம் நடந்திருந்தால் எம் மனநிலை என்ன?

எதிலிருந்தும் நல்லனவற்றை எமக்காக்குவோம் தீயவற்றைத் தவிர்ப்போம்.

மற்றவருக்கு அறிவுரை கூறுவதை விட "நான் இதைத் தவிர்க்கத் தயார் நீங்கள் தயாரா?" என முன்னுதாரணமாகத் திகழ்வதே தற்காலத் அவசிய அவசரத் தேவையாக உள்ளது.

இதனை விடுத்து பல்லினைக் கிண்டி மற்றவர் மூக்கில் மாறி மாறிப் பூசுவோமானால்...........பதராகிப் போவோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலகளியாண்டங்களின் போது சேகரிக்கப்படும் நிதி தாயகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதுமுண்டு. உதாரணமாக இலண்டனில் வெண்புறாவினரால் நடக்கப்பட்ட இன்னிசை நிகழ்வு. சில கோவில்களில் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதி தாயகத்துக்கும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழங்ககூடிய வகையில் விழக்கம் கொடுத்து.... விழங்கிய பின்னரும் விழங்காதோர் போல் வேசமிட்டு

வெறும் மாயை மட்டுமே விதைக்க நினைக்கிறார் சில விசமிகள். ஒற்றுமையென்பது எங்கணம் சாத்தியம்?

எல்லாவற்றுக்கும் போராடி போரடித்து போனதால்த்தான்..... போத்தலுடன் போரடிக்கின்றாரோ என்னமோ?

அது குற்றமெனபடுது......... விந்தை இங்குதான் உள்ளது???

நண்பர்களே நான் உங்களின் வாசகன்..... தேவையற்றதை சேர்த்து வைக்க தேவையென்ன?

என்பதே என் கேள்வி....... தேவையானதை தொலையுங்கள் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை.... அதை மதியுங்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.