Jump to content

அவன் தான் மனிதன் ...........?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவன் தான் மனிதன் ............

நாற்புறமும் கடலால் சூழபட்ட அந்த தீவினிலே .ஒரு ஒதுக்கு புறமான ,சிறு கிராமம் .காலத்தின் கோலம் , அரக்கர் ஆட்சியில் ,அக்கிராமத்தில் இருந்தவர் எல்லோரும் வெளியேறி விட்டார்கள் , ஒரு விறகு வெட்டியும் குடும்பத்தினரும் , வாழ்ந்தார்கள் .கிராமத்தவர் எல்லாம் போய்விட ,அவனுக்கு போகிடமும் இல்லை ,அருகிலிருந்த சிறு கொட்டிலில் அமைக்க பட்ட வைரவர் சிலைக்கு தினமும் பூசை செய்து வருவதால் அதை விட்டு போகவும் மனமில்லை , கடவுள் காப்பாறுவார் என்ற அசைக்காத நம்பிக்கை .அவன் எங்கும் போகவில்லை .

காலமும் ஓடிக்கொண்டு இருந்தது ,ஒருநாள் அவர்கள் வீட்டு நாய் ,சிறுசல சலப்பு கண்டு குரைக்க தொடங்கியது .இரவானதால்..... அவன் இரு சிறு குழந்தைகளுடன் ,வெளியில் செல்ல அஞ்சி ,பயத்துடன் இருந்தான் . விடிய எழும்பி பார்த்த பொது சில சப்பாத்து கால் தடயங்கள் தெரிந்தன .மறுநாள் வழக்கம் போல அவன் விறகு வெட்ட சென்றான். மனைவியும் ,தன் வீட்டு வேளையில் இருந்தாள்சிறுசுகள் இரண்டில் ,ஒன்று ஏணையில் ( தொட்டிலில்) மற்றையது முற்றத்து மணலில் .விளையாடிக்கொண்டு இருந்தது . மீண்டும் நாய் குறைக்கவே அவள் எட்டி பார்த்தாள் , இரு படை வீரர் , நின்றனர் . தண்ணீர் கேட்டனர் அவளள உள் செல்லவே தொடர்ந்து சென்று , வீட்டில் யாரும் இல்லையா ? கணவன் எங்கே என்று கேட்டு ,வீடின் அறைக்கதவை திறக்க சொனார்கள் . அவள் திறந்ததும் , ஒருவன் அவள் வாயை துணியால் அடைத்தான்மற்றவன் .அவளை சீரழித்தான், இப்படியே அவர்கள் வெறி தீர்ந்தும் , ,யாருக்கும் சொல்ல கூடாதென எச்சரித்து சென்று விட்டனர்

. சற்று நேரத்தில் விறகு வெட்டி வந்த போது சில அடையாளங்களை கண்டு ,மனைவியை கூப்பிடான் ,அவள் அழுதுகொண்டு ,கலைந்த தலையும் ,கிழிந்த ஆடைகளுடனும் விசும்பிக்கொண்டு இருந்தாள் ,அவனுக்கு விளங்கி விட்டது . அவளை தர தரவென்று இழுத்து சென்று வீட்டின் எல்லையிலுள்ள கிணற்றில் , நீரை அள்ளி கொட்டினான் . நடந்ததை மறந்துவிடு ,அரக்கர்கள் ஆட்சி செய்தால் ,மனிதம் வாழாது என்று கூறி ,வீட்டு சாமி படத்தின் குங்குமத்தை நெற்றியில் இட்டான் .இந்த கடவுள் கூட காப்பாற்ற வில்லையே .என்று வீடின் முகட்டை வெறித்த படியே இருந்தான் .

பின்பு அவன் வைரவ சாமிக்கு பூசை செய்வதே இல்லை . அவள் யோசித்தாள் தான் அவமானத்தால் இறந்தால் பிஞ்சுகள் ,ஏங்கி விடுவார்கள் ,அவன் நடைபிணமாகி விடுவான் ,பிள்ளைகளை வளர்க்க கஷ்டபடுவான் . ஒரு தாய் வளர்ப்பது போல வருமா ? அவனை எப்படி தேற்றுவது .என்று எண்ணியவாறு கண்னயர்ந்தவள், தூரத்தே சேவலின் கூவல் கேட்டு ,இயற்கையுடன் போராட புறப்படாள் . ...பிஞ்சுகளுக்கும் அவனுக்கும் ,காலை தேநீர் வைக்க ..............அவன் தான் மனிதன் . அவள் ?................. .

, ,

. l

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

எங்கள் நாட்டில் உண்மையாகவே நடந்த, நடந்து கொண்டிருக்கும் இது போன்ற சம்பவங்களில் ஒன்றை சிறுகதையாக்கி சொன்னதற்கு வாழ்த்துக்கள். மேலும் அவன் போன்ற பல மனிதர்கள் நிறைய இருப்பதால்தான் இன்றும் எங்கள் தாய் நாடு இன்றும் பாசம் நிறைந்த பூமியாக உள்ளது. தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை.......

இளங்கவி

Link to comment
Share on other sites

ம்ம்..நிலா(மதி) அக்கா..காவின் "அவன் தான் மனிதன்" மனதை கனக்க வைக்கும் நெசம்..ம்..தொடர்ந்தும் எழுதுங்கோ நிலா(மதி) அக்கா..கா..

எனகொரு சந்தேகம்..ம் அது தான்..ன்.. :)

மனிசன் எண்டா எப்படி இருக்கனு..ம்..நானும் நன்னதா ஒரு மனிசனை தேடி கொண்டு தான் இருக்கிறன் என்னும் அப்படி ஒருத்தரும் மாட்டுபடுறாங்க இல்ல..எல்லாமே முகதிற்குள் இன்னொரு முகமூடியை அணிந்து தான் பழகிறார்கள் நிலா(மதி) அக்கா.. :wub:

உங்களுக்கும் இப்படி அனுபவம் இருக்கோ..கோ..?? :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை யதார்த்தம் தொடரட்டும் அக்கா

Jamuna Posted இன்று, 09:43 AM

மனிசன் எண்டா எப்படி இருக்கனு..ம்..நானும் நன்னதா ஒரு மனிசனை தேடி கொண்டு தான் இருக்கிறன் என்னும் அப்படி ஒருத்தரும் மாட்டுபடுறாங்க இல்ல..எல்லாமே முகதிற்குள் இன்னொரு முகமூடியை அணிந்து தான் பழகிறார்கள் நிலா(மதி) அக்கா..

என்ன ஜமுனா முகமூடியோ இதுக்குத்தான் பேபிகள் எல்லாம் வரப்படாது பெரிய மனிசன்கள் இருக்கும் இடத்தில் பயந்து போட்டுது போல பாவம் பேபி ஒருக்கா ஆச்சிரம் வாங்கோ பேபிக்கு திருநீறும் போடப்படும்,பாப்பாவுக்கு ஒரு முகமூடியும் கொடுக்கப்படும் :):wub::wub::wub:

Link to comment
Share on other sites

அவன் தான் மனிதன் . அவள் ?................. .

நல்ல கதை அக்கா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை வாசித்து கருத்து சொன்ன இளங்கவி ,முனிவர்,ஜம்மு பேபி , மல்லிகை வாசன் யாவருக்கும் நன்றி .

கருத்து எனும் போது உங்கள் அபிப்ராயமும் சொல்லலாமே . மீண்டும் நன்றி .

Link to comment
Share on other sites

என்ன ஜமுனா முகமூடியோ இதுக்குத்தான் பேபிகள் எல்லாம் வரப்படாது பெரிய மனிசன்கள் இருக்கும் இடத்தில் பயந்து போட்டுது போல பாவம் பேபி ஒருக்கா ஆச்சிரம் வாங்கோ பேபிக்கு திருநீறும் போடப்படும்,பாப்பாவுக்கு ஒரு முகமூடியும் கொடுக்கப்படும்

அது சரி "பெரிய மனுசங்கன்னா" என்ன முனி மாமு..மு நாம எப்ப பெரிய மனுசன் ஆகிறது..அத ஒருக்கா எனக்கு சொல்லுறியளோ..??. :lol:

இல்ல..இல்ல என்ன விடுங்கோ..!! :lol:

நான் வரவே மாட்டன் உந்த ஆச்சிரமபக்கம்..ம் அங்க வந்தவை எல்லாரும் திருப்பி ஒழுங்கா வந்ததா சரித்திரமே இல்ல எண்டு எனக்கு தெரியும்..ம்..வேண்டும் எண்டா எனக்கு தாற முகமூடியை மட்டும் யாரிட்டையும் கொடுத்து அனுப்புங்கோ அது சரி முகமூடியை போட்டு கொண்டு.. :lol:

லோகத்தில நடிக்க எனக்கு தெரியாதே..எனி அத யாரிட்ட நான் படிக்கிறது..!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாய் இந்த நேரத்தில் இந்தக் கதையும்ஞாபகத்துக்கு வருகுது சகோதரி!!!

ஒரு கிராமத்தில் ஒரு ஞானியார்உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். உனக்குள்ளும், எனக்குள்ளும்,மிருகங்கள்,பறவை

கள், புல், பூண்டு யாவற்றினுள்ளும் இறைவன் நீக்கமற நிறைந்துள்ளார் என்ற ரீதியில் அவரது உரை அமைந்திருந்தது. இதை எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தபோது கோவில் யானைக்கு மதம் பிடித்து தெருவால் ஓடி வந்து கொண்டிருந்தது. அதன் பாகன் 'யானைக்கு மதம் பிடித்து இருக்கிறது. எல்லோரும் விலகிப் போங்கள்" எனக் கத்தியபடி யானையை அடக்குவதில் ஈடுபட்டிருந்தான். எல்லோரும் சிதறி ஓடுகிறார்கள். அப்போது ஒருத்தர் மட்டும் பயமின்றி வழியில் நிக்க யானை அவரை இடறிவிட்டு ஓடுகிறது. அவர் காயங்களுடன் இரத்தம் ஒழுக ஞானியாரிடம் வந்து நீங்கள்தானே சொன்னனீங்கள் எல்லா உயிரிலும் கடவுள் இருக்கிறதென்று ஆனால் அந்த யானை என்னைக் காயப்படுத்திவிட்டதே என்றான். அதற்கு அந்த ஞானி சொன்னார் அப்பனே! யானைக் கடவுள் கோபத்தில் வரும்போது அதன் பாகனாகிய கடவுளின் எச்சரிக்கையை நீ ஏன் அலட்சியம் செய்தாய் என்று கேட்டார். அம் மனிதனும் யோசித்துக்கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி "பெரிய மனுசங்கன்னா" என்ன முனி மாமு..மு நாம எப்ப பெரிய மனுசன் ஆகிறது..அத ஒருக்கா எனக்கு சொல்லுறியளோ..??. :lol:

இல்ல..இல்ல என்ன விடுங்கோ..!! :D

நான் வரவே மாட்டன் உந்த ஆச்சிரமபக்கம்..ம் அங்க வந்தவை எல்லாரும் திருப்பி ஒழுங்கா வந்ததா சரித்திரமே இல்ல எண்டு எனக்கு தெரியும்..ம்..வேண்டும் எண்டா எனக்கு தாற முகமூடியை மட்டும் யாரிட்டையும் கொடுத்து அனுப்புங்கோ அது சரி முகமூடியை போட்டு கொண்டு.. :lol:

லோகத்தில நடிக்க எனக்கு தெரியாதே..எனி அத யாரிட்ட நான் படிக்கிறது..!! :)

அப்ப நான் வரட்டா!!

என்ன ஜமுனா நீங்கள் இன்னும் வயதுக்கு வரவில்லை உங்களுக்கு சொன்னால் புரியாது :(

ஏற்கனவே உங்களுக்கு முரளி சாமத்திய கல்யாணம் நடத்தியதாக கேள்விப்பட்டேன் உன்மையோ :(

முகமூடி நீங்கள் வந்தால் மட்டுமே கொடுக்கப்படும் வேறு யாரிடமும் கொடுக்கப்படமாட்டது .பேபிக்கு நடிக்க தெரியாத என்ன நன்னா அழுங்கள் அதுவும் நடிப்புத்தான் :(:D

போதாவிட்டால் என்னிடமே கற்றுக்கொள்ளலாமே நடிப்பை :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.