Jump to content

நானும் என் ஈழமும் 12


Recommended Posts

நானும்%20என்%20ஈழமும்%2012.jpg

ஈழத்தோடான என் அனுபவங்களில் பல வலிகளையும், அதிர்ச்சிகளையும் கொண்டது. இவ்வலிகள் தினமும் இரவில் வந்து அழ வைப்பதுண்டு. சில வலிகள் தினசரி வாழ்வில் தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். சில வலிகளோ உணர்வுகளோடு அதிகமாகவே விளையாடும்.

இத்தனை வலிகளுக்கிடையில் கிடைத்த சில மகிழ்ச்சியான அனுபவங்கள் நினைத்து நினைத்து பார்க்க இனிமையானவை. இந்த சில இனிப்பான அனுபவங்களுக்கு, பல துன்பமான அனுபவங்களை மறக்கவைக்கும் சக்தி அதிகமாகவே உண்டு.

என்ன தான் ஒஸ்திரேலியாவில் வசதியும், பாதுகாப்பும் இருந்த போதும், ஈழமே எனக்கு பெரிதாக தோன்றும். ஈழத்தில் எனக்கு கிடைத்த அன்பும் அரவணைப்பும் இங்கு கிடைக்கவில்லை என்பதே முதன்மை காரணம். இங்கு காலை தொடக்கம் மாலை வரை தனியே இருக்க வேண்டும். ஆனால் ஊருக்கு சென்றால் என்னை சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். பல வருடங்களுக்கு பின்னர் பிறந்த பெண் என்பதால் கிடைத்த செல்லமும் சேரும். என் அண்ணன்களுக்கும், அக்காமாருக்கும் என்னைவிட வயது கொஞ்சம் அதிகமாகவே இருந்ததும் காரணம் எனலாம். இவை தவிர்த்து இன்னொரு காரணமும் இருந்தது.

ஊரில் விரும்பிய நேரம் கிடைக்கும் நெல்லிக்காய், மாங்காய், கொய்யாக்காய், விளாங்காய் தான். இவற்றுக்காகவே நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது சிலரை நண்பராக்கி கொண்டதாக இன்றும் பெரியம்மா சொல்லி சிரிப்பார்.

பெரியம்மா வீட்டில் கொய்யாக்காயும், மாங்காயும் நினைத்த நேரத்தில் எனக்கு கிடைத்துவிடும். நெல்லிக்காய்க்காகவே நான் எங்கள் வீட்டின் முன்னுக்கு இருந்த போராளிகள் பாசறையில் இருந்த அண்ணாக்களுடன் நட்பாக இருப்பேன். ஊருக்கு போன உடனேயே, இங்கு படித்த பாடல்களை பாடிக்காட்டுவேன், நான் அந்த வருடத்தில் எடுத்த பரிசில்களை கொண்டு போய் காட்டுவேன். என்ன ஒவ்வொரு வருடம் நான் போகும் போதும், அண்ணாக்கள் மாறி கொண்டேயிருப்பினம். "அந்த அண்ணாவோ? அவர் இன்னொரு பேஸுக்கு போய்ட்டார்" என சொல்வார்கள். நானும் நம்பினேன். பின்னர் தான் அறிந்தேன் நான் ஏமாற்றப்பட்டதை. பேஸ் மாறியவர்களில் பலர் மாவீரராகியிருந்தார்கள்.

இப்படி பாட்டெல்லாம் பாடியதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் பாசறைக்குள் இருந்த ஒரு நெல்லிக்காய் மரம் தான்.( என் பாட்டை பொறுமையுடன் கேட்க அவர்களால் தான் முடியும் என்பதும் ஒரு காரணம் தான். ஒப்புக்கொள்கின்றேன்)இதுவரை அங்கு கிடைத்த நெல்லிக்காய் போல் நான் எங்கும் சாப்பிட்டதில்லை. பெரியம்மாவிடம் கேட்டு உப்பும் மிளகாய்தூளும் ஒரு சின்ன சட்டியில் எடுத்துகொண்டு அண்ணாக்களின் பாசறைக்கு போவேன். அங்கு முன்னுக்கு காவலுக்கு இருக்கும் அண்ணாவிற்கு தெரியும் நான் எதற்காக வருவேன் என. எனக்காகவே நெல்லிக்காய் ஒரு பையில் வைத்திருப்பார்கள். சுத்தமாக நீரில் கழுவி வைத்திருப்பார்கள். நான் எங்கள் வீட்டிற்கும்,அண்ணாக்கள் வீட்டிற்கும் இடையில் இருக்கும் ஒரு கல்லில் இருந்து அத்தனை நெல்லிக்காயையும் சாப்பிட்டு விட்டு தான் மூச்சே விடுவேன். ஆனால் சாப்பிடும் போது அங்கு காவல் அரணுக்குள் இருக்கு அண்ணாக்கு கதை கதையாக சொல்வேன். ஒரு வருடத்தில் நடந்தது அனைத்தையும் சொல்லிவிடுவேன். அந்த நேரத்தில் எனக்கு பாடல்களும் சொல்லித்தருவார்கள். ஈழப்பாடல்கள் மேல் எனக்கு காதல் வர ஒரு காரணம் அங்கு காவலரணில் இருந்த அண்ணாக்கள் தான். நெல்லிக்காய்க்கு நெல்லிக்காயாச்சு, பாட்டுக்கு பாட்டுமாச்சு. நான் சின்னனிலேயே பயங்கர கெட்டிக்காரியாக்கும்.

அடுத்து கொஞ்சம் அபூர்வமாக கிடைப்பது விளாங்காய். ஆனால் அதற்கும் நான் ஒரு வழி கண்டுபிடித்திருந்தேன். எங்கள் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் பற்றை போன்ற ஒரு இடம் இருக்கு. அங்கு தான் விளாங்காய் மரங்கள் இருந்தன. ஆனால் அங்கு என்னை போகவிட மாட்டார்கள். ஆனால் போராளி அண்ணாக்கள் அந்த பக்கத்தால் அடிக்கடி இன்னொரு ஊருக்கு சென்று வருவார்கள். அவர்களிடம் கேட்டால் இல்லை என சொல்ல மாட்டார்கள். அவர்கள் தந்து சாப்பிட்டால் வீட்டிலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். இதுவே வேறு யாராவது தந்து சாப்பிட்டால் பெரியம்மாவின் அர்ச்சனையை நிறுத்த முடியாது. அதனால் எனக்கு எது வேணும் என்றாலும் முன்னுக்கு இருந்த போராளி அண்ணாக்களை தான் கேட்பேன். விளாங்காயில் சம்பல் போட சொல்லி தந்ததும் எனக்கு ஒரு அண்ணா தான். இன்று மாவீரராகிவிட்ட அந்த அண்ணன் நினைவாக என்னிடம் இருப்பது அவர் சொல்லித்தந்த அந்த சம்பல் செய்முறை தான்.

களவெடுத்து சாப்பிட்ட ஒரே பொருள் மாங்காய் தான். அதுவும் சொந்த பெரியம்மாவின் வீட்டிலேயே. பல வருடங்களுக்கு முன்னரே லண்டன் சென்றுவிட்ட இன்னொரு பெரியம்மாவின் வீட்டில் தான் நல்ல சுவையான மாங்காய் இருந்தது. விமான குண்டுவீச்சால் வீடு உடைந்து போயிருந்தது. அதனால் அங்கு போக கூடாது என எங்களுக்கு சொல்லியிருந்தார்கள். மதியம் அனைவரும் உறங்கும் நேரத்தில் அண்ணாக்களுடன் போய் அந்த வீட்டில் மாங்காய் திருடி கொண்டு வந்து சாப்பிடுவோம். "தம்பி. உங்கட மகள் வந்தா இவங்கள் சொல்லு கேட்க்கிறதே இல்லை" என அப்பாவிடம் பல பேர் சொல்வதுண்டு. இதுக்கெல்லாம் பயந்தால் என் பரம்பரைக்கே இழுக்காகிவிடாதா. தவிர என்னமோ நான் போய் தான் அண்ணாக்களை திருட வைத்த போல.

இப்படித்தான் ஒரு தடவை வன்னிக்கு மாமாவை பார்க்க போன நேரத்தில் பாலைப்பழ மரம் ஒன்றை பார்த்தேன். கூட வந்திருந்த சின்ன அண்ணா தான் மரத்தில் ஏறி பறித்து தருவதாக சொன்னார். அருகில் இருந்த ஒரு மாமா, "தம்பி மரம் பெலமில்லை. படக்கென்று முறியும் ஏறிப்போடாதிங்கோ" என சொன்னார். என்னை போலவே சின்ன அண்ணாவிற்கும் சொல் பேச்சு கேட்கும் பழக்கம் அவ்வளவாக இல்லை. மரத்தில் ஏறி ஒரு கொப்பில் இருந்து பழத்தை பறித்து கொண்டிருக்கும் போது தான் அது நடந்தது. முருகன் மயிலில் பறப்பார் என படித்திருக்கின்றேன். அன்று தான் அதை நேரில் பார்த்தேன். அன்றிலிருந்து சின்ன அண்ணா "மயிலேறிய முருகன்" என அன்போடு அழைக்கப்படுகின்றார்.

"சாப்பாட்டை வாயில வைக்க விட மாட்டா..இப்படி கண்டதையும் குடுத்தா காணும்" என பல தடவை பெரியம்மாவிடம் பேச்சு வாங்கினாலும், நான் இன்று வரை ரசிப்பது அங்கு எனக்கு கிடைத்த நெல்லிக்காயையும், மாங்காயையும் தான். அன்று எனக்கு அவை புளித்திருந்தாலும்....இன்று இனிக்கின்றது...நினைக்க நினைக்க இனிக்கின்றது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் நடப்பதெல்லாம் என்றும் இதயத்தில்

என்றாலும் பேய்க்கதை போல் இல்லாமல் காய்க்கதையாக இருக்கிறது தூயா :):wub::wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயாவின் கதையை ரசித்தேன் ,என் சிறு வயது நினைவுகள் படமாக ......,நினைவில் ஓடுகிறது.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ..... நெல்லி ,மாங்காய் ,கொய்யாக்காய் போல . நன்றாக உள்ளது. விளாங்காய் சாப்பிட பயம் தொண்டைக்குள் அடைக்கும் என்று ,,,,,,சுவையோ சுவை ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயாவிற்கு

இந்த நாட்டில் இருக்கும் எங்கள் எல்லோரையும் இயக்கிக்கொண்டிருப்பது எங்கள் தாய் நாட்டின் நினைவுகள் தான். உங்கள் சொந்த அனுபவம் மிக நன்று.

இளங்கவி

Link to comment
Share on other sites

. விளாங்காய் சாப்பிட பயம் தொண்டைக்குள் அடைக்கும் என்று ,,,,,,சுவையோ சுவை ........

உப்பில் ஊற வைத்து கழுவி எடுத்தால் அந்த பிரச்சனை இருக்காது நிலாமதி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலந்தைப் பழம் துவைத்துச் சாப்பிட்டிருக்கிறீர்களா?

சரத்தின் சன்டிக்கட்டு நிறைய அவற்றைக் கொண்டு வந்து தொட்டித் தண்ணீருக்குள் கொட்டி மிதப்பதெல்லாம் புழு தாழுறதெல்லாம் நல்லம் என்று அள்ளியெடுத்து அப்படியே உரலுக்குள் போட்டு மிளகாய், உப்பெல்லாம் சேர்த்துத் துவைத்துச் சாப்பிட .... சொல்லி வேல யில்ல!!! :):lol:

Link to comment
Share on other sites

இலந்தைப் பழம் துவைத்துச் சாப்பிட்டிருக்கிறீர்களா?

சரத்தின் சன்டிக்கட்டு நிறைய அவற்றைக் கொண்டு வந்து தொட்டித் தண்ணீருக்குள் கொட்டி மிதப்பதெல்லாம் புழு தாழுறதெல்லாம் நல்லம் என்று அள்ளியெடுத்து அப்படியே உரலுக்குள் போட்டு மிளகாய், உப்பெல்லாம் சேர்த்துத் துவைத்துச் சாப்பிட .... சொல்லி வேல யில்ல!!! :):lol:

ம்ம்ஹிம் இது எனக்கு தெரியாதே....

படிக்கவே சாப்பிடணும் போல இருக்கு.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது வீட்டில் உங்களை சின்ன வயசில் அண்ணமாரின் இடட்திற்க்கு போக அனுமதித்திருக்கிறார்கள் .ஆனால் எங்கள் வீட்டில் போகவிடமாட்டினம் காரணம் அண்னமாரின் ஆயுதங்களை எடுது தவறுதலாக சுட்டுப்போடுவன் எண்று......

ஆக்கத்திற்க்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

உங்களது வீட்டில் உங்களை சின்ன வயசில் அண்ணமாரின் இடட்திற்க்கு போக அனுமதித்திருக்கிறார்கள் .ஆனால் எங்கள் வீட்டில் போகவிடமாட்டினம் காரணம் அண்னமாரின் ஆயுதங்களை எடுது தவறுதலாக சுட்டுப்போடுவன் எண்று......

ஆக்கத்திற்க்கு பாராட்டுக்கள்

அப்படியா..

பொதுவாக நாங்கள் எடுத்து சுடும் அளவிற்கு அசட்டையா வைக்கமாட்டார்களே..

நானும் ஒரு தடவையாவது எடுப்பம் என பார்த்தேன்...ம்ம்ஹிம் இதுவரை முயற்சி பயனளிக்கவில்லை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் விரும்பிய நேரம் கிடைக்கும் நெல்லிக்காய், மாங்காய், கொய்யாக்காய், விளாங்காய் தான். இவற்றுக்காகவே நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது சிலரை நண்பராக்கி கொண்டதாக இன்றும் பெரியம்மா சொல்லி சிரிப்பார்.

உண்மை தான் தூயா , இதனை வாசித்த போது வாயில் உமிழ் நீர் சுரந்தது . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலந்தைப் பழம் துவைத்துச் சாப்பிட்டிருக்கிறீர்களா?

சரத்தின் சன்டிக்கட்டு நிறைய அவற்றைக் கொண்டு வந்து தொட்டித் தண்ணீருக்குள் கொட்டி மிதப்பதெல்லாம் புழு தாழுறதெல்லாம் நல்லம் என்று அள்ளியெடுத்து அப்படியே உரலுக்குள் போட்டு மிளகாய், உப்பெல்லாம் சேர்த்துத் துவைத்துச் சாப்பிட .... சொல்லி வேல யில்ல!!! :):wub:

ஆனால் சுவி தாழுததுக்குள்ளும் புழு இருக்கும் நல்லா பாருங்கோ சாப்பிட்டால் என்ன அங்கால உவாக் ...தான் :(:):)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

நான் சின்னனிலேயே பயங்கர கெட்டிக்காரியாக்கும்.

இப்பொழுது? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

இப்பொழுது? :lol:

:icon_mrgreen: அப்பு என்ன திடிர் சந்தேகம்....சின்ன..பெரிசு...கிழச

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இப்பொழுது?

சின்னனிலேயே என சொல்லியிருக்கேனே கந்தப்பு ;)

:rolleyes: அப்பு என்ன திடிர் சந்தேகம்....சின்ன..பெரிசு...கிழச
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.