Jump to content

யோகக் கலை


Recommended Posts

இனிய நண்பர்களே !!

இந்தத் திரியில், நோய்தீர்க்கும் அரிய யோகாசனங்கள் பற்றி இலகு தமிழில் என் அனுபவங்களையும் சேர்த்து எழுதலாம் என நினைக்கிறேன். யோகாசனங்கள் பயிலுவதற்கு வயது ஒரு தடையல்ல. இளையோர் முதல் முதியோர் வரை வீட்டில் தாங்களாகவே பயில முடியும்.

உடலையும் உள்ளத்தையும் அழகாக வைத்திருக்க பெரிதும் உதவுவது யோகாசனம். இந்நாளில், இது ஒரு நாகரீக, பணம் செய்யும் ஒரு கலையாக மேற்குலகத்தில் கருதப்பட்டாலும் கூட, ஆன்மீக முன்னேற்றத்திற்காக யோகிகளும் சித்தர்களும் கீழைத்தேயத்தில் இக்கலையை பயன்படுத்தினர்.

இருந்தபோதிலும், நோயற்ற வாழ்வை கருத்தில் கொண்டு நாமிதை பயிலலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் சொல்லுங்கோ கேட்பம், எனக்கும் வயசு போகுது உதுகளை செய்தாவது இளமையாக இருப்பம் :)

Link to comment
Share on other sites

இந்தத் திரியில், நோய்தீர்க்கும் அரிய யோகாசனங்கள் பற்றி இலகு தமிழில் என் அனுபவங்களையும் சேர்த்து எழுதலாம் என நினைக்கிறேன். யோகாசனங்கள் பயிலுவதற்கு வயது ஒரு தடையல்ல. இளையோர் முதல் முதியோர் வரை வீட்டில் தாங்களாகவே பயில முடியும்.

நல்ல முயற்சி தொடருங்கள்... காத்திருக்கிறோம்...

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தினசரி யோகாசனம் செய்பவன்.நல்ல முயற்சி ஈழத்திருமகன் :)

Link to comment
Share on other sites

மிகவும் நல்லது நண்பர்களே. உங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது. :)

இந்த பதிவை எழுத உதவியாக அமைந்த நூல்கள்:

1. யோகி சுந்தரம், "சுந்தர யோக சிகிச்சை", The Yoga Publishing House, Bangalore, 1957.

2. சிதானந்த யோகி, "சிதானந்த யோக உடற்பயிற்சி", Vasthiyan Press, Jaffna, 1970.

3. Yogi Ramacharaka, "Science of Breath", L.N.Fowler & Co. Ltd, London, 1903.

Link to comment
Share on other sites

அறிமுகம்.

பொதுவாகவே "யோகம்" எனப்படுவது "அட்டாங்க யோகம்" ஆகும். யோகாசனம் எனப்படுவது "ஹடயோகம்". எமது உடலில் நோய்களை எதிர்க்கும் மருந்துப் பெட்டகங்கள் இருக்கின்றன. இவை நாளமில்லாத சுரப்பிகள் என்றும் அறியப்படும். உடலை வளைத்தும் முறுக்கியும் இந்த குழலற்ற சதைக்கோளங்களில் இருந்து ரசத்தை பிழிய வைப்பதுதான் ஹடயோகம். பிழியப்படும் இந்த ரசங்கள், உடலை நோய்கள் அண்டவிடாது பாதுகாப்பன.

யோகாசனம் பயில்வதால் எலும்புக் கூடுகள், தசைநார்கள், சமிபாட்டு கருவிகள், சுவாசக் கருவிகள், மூளை, நரம்புத் தொகுதி, இருதயம், நாடி நாளங்கள், கழிவகற்றும் கருவிகள், இனப் பெருக்கக் கருவிகள் அனைத்தும் புத்துணர்வு பெற்று தத்தம் இயக்கங்களை சரிவரச் செய்யும். மூச்சுப் பயிற்சி (ப்ராணாயாமம்) உடலில் உள்ள உயிர்வாயு (பிராணவாயு) அளவை மிக அதிகமாக உயர்த்துகிறது. நரம்புகளை இயக்குவது பொறிகள். பொறிகளை இயக்குவது மனம். மனதை இயக்குவது புத்தி. உடலையும் மனதையும் இணைப்பது உயிர் (பிராணன்). பிராண சக்தியை வளர்த்தால் மனம் தூய்மையடையும். உடல் தெய்வப் பொலிவு பெறும்.

பிராணாயாமமும் குண்டலினி பற்றியும் பிறகு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

ம்ம்..ஈழதிருமுருகன்..ன் மாமா..மா..!!.. :wub:

வடிவா காட்டி தாங்கோ நானும் செய்து பார்க்கிறன்..ன்..ஆனா என்ன எனக்கு பொறுமை கொஞ்சம் கொறைய கூட நேரம் எல்லாம் ஒரு இடத்தில இருந்து என்னால செய்ய ஏலாது..து.. :(

ஏன் எண்டா நான் ஒரு இடத்தில இருந்தாலும்..ம்..மனசு பல இடங்களிள நிற்குது அது தான் எண்ட பிரச்சினை இதுக்கு ஏதாச்சும் தீர்வு இருந்தா சொல்லுறியளோ..ளோ..!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆவலுடன் இத்திரியை படிக்கு காத்திருக்கின்றேன்.

தொடர்ந்து எழுதுங்கள்...

Link to comment
Share on other sites

பொது விதி

யோகாசனம் பயிலும் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கடுகு, காரம், புகைத்தல், மது, கோப்பி, தேனீர் விலக்க வேண்டும். (பிராணாயாமம் செய்பவர்கள் கட்டாயம் இதை கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால், பிராணாயாமம் செய்யும் போது உடலில் மிகவும் அதிகமாக சூடு ஏறுவதை காணலாம். தினமும் தலைக்கு குளிப்பதும், பால், இளநீர், தேசிக்காய் சாறு என்பன பருகுதல் மிக்க பயன் தரும்)

அதிகாலையில் எழுந்து, காலைக்கடன்களை முடித்தபின்பு 10 மிடறு தண்ணீர் அருந்தியபின் ஆசனம் பயில்வது சாலச் சிறந்தது. சுத்தமான தரையில் தடித்த படுக்கை விரிப்பை (bed sheet) விரித்து அதன்மேல் இருந்து பயிற்சி செய்யலாம்.

பிற்பகலில் ஆசனம் செய்ய விரும்புவோர் மதிய உணவருந்தி குறைந்தது 5மணி நேரத்தின் பின் பயிற்சிகளை தொடங்கலாம். அல்லதுபோனால், உடலை வளைத்து முருக்கும்போது குடலில் நோவு அல்லது வெடிப்பு உண்டாகலாம்.

18 வயதிற்கு குறைந்தவர்கள் தலைகீழ் ஆசனம் செய்யக் கூடாது. பெரியவர்கள் எடுத்த எடுப்பில் சிரசாசனம் செய்யக்கூடாது. குறைந்தது 1மாதமாவது மற்றைய ஆசனக்களை செய்துதான் சிரசாசனம் செய்ய வேண்டும்.

இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் (High BP) ஒரு யோகியின் ஆலோசனைப்படி பயில்வது நல்லது.

பெண்கள் வயிற்றில் நோவு உள்ள காலப் பகுதியில் ஆசனங்கள் செய்யக்கூடாது.

Link to comment
Share on other sites

யோகாசனம் பயிலும் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கடுகு, காரம், புகைத்தல், மது, கோப்பி, தேனீர் விலக்க வேண்டும். (

இதில் கடுகு, காரம் எடுக்காமல் இருப்பது தான் கஸ்டம்..

எங்கள் சமையலில் கடுகும் உறைப்பும் இருக்குமே :)

Link to comment
Share on other sites

பிராணாயாமம்

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை

கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்

விருத்தரும் பாலராவர், மேனியும் சிவந்திடும்

அருட்டரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே !!

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை

நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்

வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மானிடர்

கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே. !!

ம்.. :)

எமது சுவாசம் சரியாக அமைந்தாலே பல நோய்கள் அண்டாது. சுவாசம் எப்பொழுதும் ஒன்றில் இடது நாசித்துவாரம் வழியே அல்லது வலது நாசித் துவாரம் வழியே நடைபெறுவதை அவதானித்திருப்பீர்கள்.

பிராணாயாமம் இந்த ஒழுங்கை சீர்படுத்துகிறது. இதில் பூரகம் (சுவாசத்தினை உள்ளிழுப்பது), ரோசகம் ( சுவாசத்தை வெளிவிடுவது), கும்பகம் (சுவாசத்தை உள்ளே அடக்கி வைப்பது) என மூன்று படிமுறைகள் இருக்கின்றன. ஒரு முழுச் சுற்றில் (complete cycle of pranayaama) இந்த மூன்று படிநிலைகளுக்கும் குறிப்பிட்ட கால அளவுகள் இருக்கின்றன (இதைப்பற்றி விரிவாக இறுதியில் எழுதுகிறேன்). ஆசனங்கள் செய்து உடல் உறுதிபெறும்வரை "சாதாரண பிராணாயாமம்" செய்வது நல்லது. ஆசனம் பயில முடியாதவர்கள் கூட இதைப் பயிலலாம்.

உங்கள் முதுகெலும்பு நேராக இருக்கும் வண்ணம் அமர்ந்து கொள்ளுங்கள். வலதுகை கட்டைவிரலை வலது நாசியை பக்கவாட்டால் அமத்திய படியும், மோதிர விரல் இடது நாசியை பக்கவாட்டால் அமத்திய படியும் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது கட்டைவிரலை சிறிது விலக்கி, வலது நாசியினால் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள். அவசரப்படாமல், எவ்வளவு முடியுமோ அவ்வளவு (steady stream ஆக) உள்ளெழுங்கள். அப்படியே கட்டை விரலால் வலது நாசியை மூடி, சிறிது நேரம் சுவாசத்தை வெளிவிடாது உள்ளேயே வைத்திருக்கவும். இதில் கால அளவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களால் முடிந்தளவு முயற்சிக்கவும். பின், மோதிர விரலை உயர்த்தி மிக நிதானமாக இடது நாசியின் வழியே சுவாசத்தை வெளிவிடவும். மீண்டும் இடது நாசியால் இழுத்து, உள்ளடக்கி, வலது நாசியால் வெளிவிடவும். இது ஒருமுறை (one cycle) எனப்படும். ஆரம்ப காலத்தில் தினமும் 10 முறை செய்யலாம்.

பலன்கள்:

சுவாசப்பையும் இரத்தமும் சுத்திகரிக்கப் படுகின்றன. குழலற்ற கோளங்கள் வீரியம் பெறுகின்றன. பீனிசம், கசம், அஸ்மா போன்ற நோய்கள் வராது தடுக்கும். முகம் அழகுபெறும். விந்து இறுக்கமடையும். மலட்டுத்தன்மை விலகும். ஞாபகசக்தி அதிகரிக்கும். அறிவு வளரும். மனவடக்கம் உண்டாகும்.

குறிப்பு:

1. காற்றோட்டமுள்ள இடத்தில் அமர்ந்து இதனை பழக வேண்டும். தாவர உணவு நன்மை தரும். இல்லற வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது பிராணாயாமம்.

2. உடலில் பிசுபிசுவென வியர்வை அரும்பினாலோ அல்லது வெப்பம் ஏறினாலோ பயப்பட வேண்டாம்.

Link to comment
Share on other sites

உங்கள் முதுகெலும்பு நேராக இருக்கும் வண்ணம் அமர்ந்து கொள்ளுங்கள். வலதுகை கட்டைவிரலை வலது நாசியை பக்கவாட்டால் அமத்திய படியும், மோதிர விரல் இடது நாசியை பக்கவாட்டால் அமத்திய படியும் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள்.

இது எனக்கு கொஞ்சம் புரியவில்லை..யாராவது விளங்கப்படுத்துவீர்களா?

Link to comment
Share on other sites

இதில் கடுகு, காரம் எடுக்காமல் இருப்பது தான் கஸ்டம்..

எங்கள் சமையலில் கடுகும் உறைப்பும் இருக்குமே :)

ஆமாம். இவை எங்கள் சமையலில் அதிகம்தான். சிறிது சிறிதாக குறைத்தால் நல்லது. ஒருசில வழிகளில் முன்னேற வேண்டுமாயின் சில விடயங்களை கைவிட்டுத்தான் ஆகவேண்டி இருக்கிறது. :wub:

ஆரோக்கியமானவர்கள் உடல் வனப்பை பெற யோகாசனத்தை பயில்வார்கள். அப்படியானவர்கள் இவற்றை முற்றாக நீக்கத்தேவையில்லை என நினைக்கிறேன். ஆனால், நோய்தீர்வதற்காக ஆசனங்கள் பழகுபவர்கள் இதை கண்டிப்பாக விடவேண்டும்.

Link to comment
Share on other sites

ஆமாம். இவை எங்கள் சமையலில் அதிகம்தான். சிறிது சிறிதாக குறைத்தால் நல்லது. ஒருசில வழிகளில் முன்னேற வேண்டுமாயின் சில விடயங்களை கைவிட்டுத்தான் ஆகவேண்டி இருக்கிறது. :wub:

ஆரோக்கியமானவர்கள் உடல் வனப்பை பெற யோகாசனத்தை பயில்வார்கள். அப்படியானவர்கள் இவற்றை முற்றாக நீக்கத்தேவையில்லை என நினைக்கிறேன். ஆனால், நோய்தீர்வதற்காக ஆசனங்கள் பழகுபவர்கள் இதை கண்டிப்பாக விடவேண்டும்.

பதிலுக்கு மிக்க நன்றி..:)

Link to comment
Share on other sites

1. வச்சிராசனம்

பழகுவதற்கு மிகவும் இலகுவானது. விரிப்பில் இருந்து கால்களை பின்னால் மடக்கி, பிருஷ்ட பக்கமாக இடுப்புக்கு கீழ் பகுதியில் இருக்க வேண்டும். (அதாவது, நீங்கள் குதிக்கால் மேலே பார்க்கும் வண்ணம் காலை மடக்கி இரண்டு உள்ளங்கால் மேலும் உங்கள் பிருஷ்ட்ட பாகம் அமையும்வண்ணம் இருப்பீர்கள்). கைகளை நீட்டி முழங்கால் மேல் வைக்கவும். முதுகுத்தண்டு தரைக்குச் செங்குத்தாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

வச்சிராசனத்தில் இருந்தவாறே பிராணாயாமமும் செய்யலாம்.

இந்த ஆசனம் அனேக நன்மைகளை தரவல்லது. பசியை உண்டுபண்ணும், அஜீரணம் இருக்காது, குதிவாதம் மற்றும் முழங்கால் வாதம் என்பன வரவிடாது தடுக்கும்.

2 தொடக்கம் 4 நிமிடங்கள் வரை இருக்கலாம்.

Link to comment
Share on other sites

2. பத்மாசனம்

உடல் பருத்தவர்கள் இதை பழகச் சிரமப்பட்டாலும் விடாமுயற்சி பலனளிக்கும். விரிப்பின் மேல் கால்களிரண்டையும் நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள். முதலில் வலது காலை மடக்கி இடது தொடையின்மேல் (குதிக்கால் வயிற்றில் முட்டும்படி) வைக்கவும். பின் இடது காலை மடக்கி வலது தொடையின் மேல் வைத்து நிமிர்ந்து கம்பீரமாக இருக்கவும். கண்களை மூடி நெற்றி புருவ மத்தியில் உங்கள் கவனத்தை செலுத்தவும். மூச்சை உள்ளிழுக்கும் போது "ஸோ" என்றும் வெளிவிடும்போது "ஹம்" என்றும் மனதில் உச்சரிக்க வேண்டும். 5 முதல் 10 நிமிடம் வரை இருக்கலாம்.

பயன்:

சுவாசப்பையை நேராக வைக்கிறது. அதிகளவு பிராணவாயுவை உள்ளிழுக்க உதவுகிறது.முதுகு எலும்பும் அதனுடன் சேர்ந்த தசை, நரம்புகள் வலுப்பெறுகின்றன. நல்ல ஞாபக சக்தியை அளிக்கிறது. சுழுமுனை நாடியை வலுவடைய செய்கிறது. பெருந்தொடைகளை கரைக்கின்றது.

Link to comment
Share on other sites

3. சித்தாசனம்

வலதுகாலை மடக்கி அதன் குதிப்பகுதி மூலத்திற்கும் மர்மஸ்தானத்திற்கும் இடையில் (கருவாயின் கீழ் இரண்டங்குலம், எருவாயின் மேல் இரண்டங்குலம் என இந்த இடத்தை திருமூலர் குறிப்பிடுவார்) இடித்து வைக்கவும். இப்பொழுது இடது காலை மடக்கி அதன் மேற்பாதம் வலது குதியின்மேல் இருக்குமாறு உடலை நிமிர்த்தி அமர்ந்து கொள்ளவும். சிந்தனையை சிதறவிடாமல் அமர்ந்திருக்கவும்.

பயன்:

இல்லறத்திற்கும், பிரம்மச்சாரியத்திற்கும் நன்மை அளிக்கிறது. விந்து இறுக்கமடையும் (அத்துடன் தன் இஷ்ட்டத்துக்கு வெளியேறுவதையும் குறைக்கும்) . ஆன்ம முன்னேற்றம் காணலாம்.

குறிப்பு:

1. இந்த ஆசனம் seminal energy யை உடலில் கலக்கச் செய்கிறது. எந்நேரமும் உற்சாகமாக இருக்கலாம். ( மனக் கட்டுப்பாடற்றவர்கள் தீய வழியில் செல்லவும் இடமுண்டு).

2. இல்லறத்தில் இருப்பவர்கள் 2 நிமிடத்துக்கு மேல் இந்த ஆசனத்தில் இருக்க வேண்டாம்.

3. யோகிகளும் சந்நியாசிகளும் முதலில் பழகுவது இந்த ஆசனமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசனங்களை படங்களுடன் விளக்கின் கூடிய பயனுள்ளதாக இருக்கும்..! :unsure:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

யோகாசனத்தை ஆசானுடன் பழகுவதே சிறந்தது. யோகாசனம் எமது உள்ளுறுப்புக்களைப் பலப்படுத்ததச் செய்யும் ஆசனங்களாகும். அதோடு, பல ஆசனங்கள் மிகவும் கடினமானவை. அவற்றை நாம் சிறிதளவேனும் தவறாகச் செய்தாலும் பின்விளைவுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமின்றி, ஆசனங்கள் செய்யும்போது, நாம் எமது மூச்சைக் கட்டுப்படுத்தல், மற்ற உறுப்புக்களை உரிய முறையில் வைத்திருத்தல் எனப் பல சின்னச் சின்ன விடயங்கள் உண்டு. நாம் ஆசனங்கள் செய்யும்போது, அவற்றையும் சரியாகச் செய்தால்தான் ஆசனத்தின் பலன் கிட்டும். முதலில், ஓரிரு மாதங்களாவது ஆசானுடன் யோகாசனத்தைப் பழகிவிட்டு அதன்பின்னர் செய்வதே சிறந்தது.

பல வருடங்களாக, நானும் புத்தங்களை வைத்தும், ஜிம்களில் நடத்தப்படும் யோகாசன வகுப்புகளுக்குப் போயும் யோகாசனம் செய்தேன். ஆனால், நான் எதிர்பார்த்த பலனோ திருப்தியோ கிடைக்கவில்லை. அதன்பின்னர், ஓர் தமிழ் ஆசானிடம் சென்று பழகினேன். அங்குதான் மூச்சைக் கட்டுப்படுத்தல், ஒவ்வொரு ஆசனம் செய்யும்போதும், எவ்வாறான மூச்சுப் பயிற்சியைச் செய்யவேண்டும், எந்த ஆசனங்களை எவ்வளவு காலத்திற்குப் பின்னர் செய்யவேண்டுமெனப் பல தகவல்களை அறிந்தேன். சில ஆசனங்களை நாம் எடுத்த எடுப்பிலேயே செய்ய முடியாது. மற்ற ஆசனங்களின் பயிற்சிகளின் பின்னரே நாம் அதனைச் செய்யவேண்டும். எனது அனுபவத்தின்படி, ஆசான் மூலம் பயிலும்போதுதான் எமக்கு முழுப்பலனும் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • 1 year later...

நீண்ட காலத்திற்கு பிறகுஇ இந்த தொடரை நண்பர்கள் விரும்பி கேட்டதற்காக தொடர்ந்து எழுதவுள்ளேன். யாராவது பயன் பெற்றால் நல்லது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.