Jump to content

எயார் திராவிடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் குண்டும் விழுந்தால் இங்கே அசைலம் கிடைக்கும் என்பது உங்களது பாடப்புத்தக அறிவாக இருக்கலாம். ஆகக் குறைந்தது 15 ஆயிரம் யுரோவைக் கொடுத்து ஒருவன் இங்கு வருகிறான். அவனுக்கு நாட்டில் இருக்கலாமென்றால்.. அந்தப் பணத்தை ஒரு வங்கியில் இட்டுவிட்டு.. மாதாமாதம் வட்டியிலேயே குடும்பம் நடத்தி சுகபோகமாக வாழ அவனால் முடியும்.. ஆகவே, உங்க பாடப்புத்தக அறிவின்படி.. அசைலம் அடிப்பவன் 15 ஆயிரம் யூரோ கொடுத்து வந்து.. கொழும்பில் குண்டு விழாதா என ஏங்குவதாக இருக்கலாம். அது ஏட்டுச்சுரக்காய்.. கொஞ்சம் கீழே இறங்கி வந்து, அவர்களுடைய அனுபவங்களை கேட்டுப் பாருங்கள்.. சிலவேளை அவர்கள் உங்களுக்கு சண்டித்தனக்காரர்களாகவோ, பழக்கவழக்கம் தெரியாதவர்களாகவோ அல்லது குழுக்களாகவோ தெரியலாம்.. ஏனெனில் தங்கள் பார்வை அப்படியாக இருப்பின்.. தாங்கள் உண்மையிலேயே அசைலம் அடிக்கும் தமிழர்களைப்பற்றி அறிய விரும்பினால், அவர்கள் உங்கள் கண்களுக்கு நிச்சயமாகத் தெரிவார்கள்!! :lol:

தமிழனை சிங்களவன் அடிக்க வெளிக்கிட்டது 1950 களிலேயே ஆரம்பிச்சிட்டுது. அப்ப எல்லாம் ஏன் எங்கட ஆக்கள் சிங்களவனுக்குப் பயந்து அசைலம் அடிக்க வரேல்ல.

1983 திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதலும் இனக்கலவரமும் பொன்னம்மானின் தியாகமும் தான் இன்று பல்லாயிரம் தமிழர்களின் அசைல - சொகுசு வாழ்வுக்குக் காரணம். அன்று அந்தச் சம்பவங்கள் நடந்திராவிட்டால்.. 15,000 யூரோவுக்கே வழியில்லாமல்.. காடு கரம்பை என்று வடலி வளவுக்குள் நொக்கு பொறுக்கிக் கொண்டிருந்திருப்பார்கள்.. இன்று றீமோக்கேச் செய்து சாமத்திய வீடு கொண்டாடும் புலம்பெயர் தமிழர்களில்.. பலர். இல்லை என்பீர்களா..??! :lol:

நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் விட்டாலும் எம்மவர்களில் அசைலம் அடிப்பவர்களில் பாதிப்பேருக்கு மேல் உண்மையான அரசியல் அகதிகள் அல்ல. அவர்கள் பொருளாதார அகதிகள். 15,000 யூரோவை செலவு செய்வது.. ஒரு முதலீடாகவே அன்றி உயிர் அச்சம் காரணமாக என்பது பலருடைய விடயங்களில் பொய். காசைக் கொடுத்து சிங்கள இராணுவ அதிகாரிகளை விலைக்கு வாங்கி வெளிநாட்டுக்கு பத்திரமாக வர கட்டுநாயக்கா வரை பயணிக்க முடிகிறது எனில் ஏன் தான் காசைக் கொடுத்திட்டு அங்கேயே இருக்க முடியாது..??!

கொழும்பில் குண்டு வெடிப்பதும் வன்னியில் போர் நடப்பதும் தான் இவர்களின் முதலீட்டுக்கான உத்தரவாதம். போரில் பாதிக்கப்படும் தரப்பாக வறிய மக்களே எப்போதும் விளங்குகின்றனர். அவர்கள் இப்போதும் அகதிமுகாம்களில் தான் வாழ்கின்றனர். இடைத்தர.. மேல்மட்ட குடும்பங்களே சாரி சாரியாக பரம்பரை பரம்பரையாக அசைலம் அடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு போரே முதலீடு. மனித உயிர்களின் காவு கொள்ளலே எதிர்பார்ப்பு. அப்பப்பப தமிழீழம் என்று கூவிக் கொண்டு விட்டெறியும் 1000 யூரோக்களும்.. தங்களின் அடுத்த சந்ததிக்கும் அசைலம் தேடவே அன்றி.. தமிழீழம் கிடைக்க வேண்டும் என்ற அக்கறையில் அல்ல.

நான் காதால் கேட்டிருக்கிறேன்.. தம்பி உவங்கள் இஞ்சையும் (புலம்பெயர் நாடுகளுக்கும்) வந்திட்டாங்கள் காசு புடுங்க. ஊரில என்ர சொந்தங்கள் கொஞ்சம் மிச்சம் என்ற படியால் எல்லோ காசு கொடுக்கிறன். ஏதேனும் செய்துபோடுவாங்கள்.. இல்ல பாஸ் கொடுக்காங்கள் எல்லோ. இல்ல இவைக்கு யார் காசு கொடுக்கிறது.. இப்படிச் சொன்ன பலரைக் கண்டும் இருக்கிறன்..! ஆனால் அவர்கள் வாய் கிழிய தமிழீழம்.. தமிழ் தேசியம் பற்றிக் கதைக்கிறதையும் கண்டிருக்கிறன்..!

போர் நின்று தமிழீழம் கிடைத்தால் கூட 15,000 யூரோ முதலீடு இட்டு.. மேற்குலகில் அரச நிவாரணங்களில் சுரண்டி வாழப்பழகிவிட்ட எம்மவர்கள்.. மீளத் தாயகம் போவார்கள் என்றா நினைக்கிறீர்கள். நிச்சயமாக இல்லை..! அப்படி ஒரு நிலையிருக்கும் என்றால்.. இன்று தமிழீழம் கிடைத்திருக்கும்.. அவ்வளவுக்கு ஒத்துழைப்பு வழங்கி இருப்பர். ஆனால்..???! :lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நானும் ஒரு கருத்தை சொல்லியே ஆக வேண்டும் ..........

எனது உறவினர்கள் சிலரும் வெளிநாட்டிலே தங்கியிருக்கார்கள் சமாதான காலத்தில் ஊருக்கு வருமாறு அழைத்திருந்தோம் ஆனால் அவர்கள் சொன்னது இப்போது சமாதானம் தானே அங்கு வந்து என்ன செய்வது என்று இழுத்துவிட்டார்கள் ...................

அடுத்து தற்போது அழைத்தால் அங்கு சரியான சண்டை நடக்குது எப்படி வாரது என்று கேட்கிறார்கள் பார்த்தீர்களா

இதுதான் இன்றைய நிலை

முனிவர் என்னிலை அப்பிடியென்ன கோபம் அந்தளவு நான் மோசமா???????? :lol::lol:

இல்லை சாத்திரி அண்ணே இருக்கிறத்தையும் பிச்சுக்கிறமாதிரி இருக்கு அல்லோ அதான் அந்த கிழடு என நினைத்துவிட்டேன் ச ...ச கோபம் இல்லை :lol:

Link to comment
Share on other sites

அப்படியானால் படிக்கவென்று வந்தவர்கள் படிப்பு முடிந்ததும், வேலை விசா அல்லது மேலும் படிக்க விசா என்று அலைந்து ஏன் மேலை நாடுகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. இன்று எமது போராட்டத்திற்கான அடிப்படைத் தேவைகள் எங்கிருந்து வந்தன? அந்த வரண்டு போன மண்ணிலுள்ள சுரங்கங்களிலிருந்தா வருகிறது? படிக்கவென்று வந்து.. நாட்டுக்குத் திரும்ப மனமின்றி காசு கொடுத்து கள்ள விசா எடுத்து இருக்கலாம்.. அல்லது வேலை விசாவுக்காக அலைந்து அதை எடுத்து இருக்கலாம்.. அல்லத தொடாநஇத படித்துக் கொண்டே காலத்தைக் கழிக்கலாம்.. ஆனால் இன்னொரு அசைலத் தமிழனின் காசிலோ அல்லது சொத்து சுகங்களை விற்றோ அல்லது கடன் பட்டோ அசைலத்துக்கு வந்தால்.. இந்த 'எழுத்துக்களை' இனிசலோடு பிசையும் கனவான்களுக்கு தவறாகத் தெரிகிறதாம்!! :lol: இனஇறு புகலிட நாடுகளில் தமிழ் வாழ்கிறது என்றால் அதுவும் அசைலத் தமிழனால்தான்.. :lol:

ஜேஆர் காலத்தில வேணுமானால் தமிழன் பொய் சொல்லி அசைலம் கேட்டிருக்கலாம்.. ஆனால் இன்று பொய் சொல்லும் நிலையில் அசைலத் தமிழன் இல்லை.. :lol: (ஆனால் பொய்யை ஏற்றுக் கொண்ட நாடுகள் இன்று உண்மையை ஏற்றுக் கொள்ளும் நிலையும் மிக அரிதாகவே உள்ளது..)

Link to comment
Share on other sites

போர் நின்று தமிழீழம் கிடைத்தால் கூட 15,000 யூரோ முதலீடு இட்டு.. மேற்குலகில் அரச நிவாரணங்களில் சுரண்டி வாழப்பழகிவிட்ட எம்மவர்கள்.. மீளத் தாயகம் போவார்கள் என்றா நினைக்கிறீர்கள். நிச்சயமாக இல்லை..! அப்படி ஒரு நிலையிருக்கும் என்றால்.. இன்று தமிழீழம் கிடைத்திருக்கும்.. அவ்வளவுக்கு ஒத்துழைப்பு வழங்கி இருப்பர். ஆனால்..???! :lol::lol:

நிச்சயமாக இல்லை. மீசை முளைத்த பிறகு மேல் படிப்புக்காக வந்தவரெல்லாம் போகத் தயாரில்லை. இங்கே வந்து இந்த மண்ணில் வாரிசுகளை உருவாக்கியவர்களால் எவ்வாறு திரும்பிச் செல்ல முடியும்.. வறுமையிலிருந்து வசதியாக முன்னேறியவனால் மீண்டும் வறுமையில் வாழ முடியும்.. ஆனால் இங்கே பிறந்தவர்களால் அங்கே வாழ முடியாது.. அதுதான் உண்மை!!

தமிழனை சிங்களவன் அடிக்க வெளிக்கிட்டது 1950 களிலேயே ஆரம்பிச்சிட்டுது. அப்ப எல்லாம் ஏன் எங்கட ஆக்கள் சிங்களவனுக்குப் பயந்து அசைலம் அடிக்க வரேல்ல.

எங்கடை தமிழ் தலைவர்கள் என்று இருந்தவையும் 83லதான் மொட்டாக்குப் போட்டுக் கொண்டு... தமக்கு வாக்குப்போட்ட சனங்களையும் மறந்து இந்தியாவுக்கு ஓடினவை.. அதுக்கு முந்தி ஓடேல்லை.. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இல்லை. மீசை முளைத்த பிறகு மேல் படிப்புக்காக வந்தவரெல்லாம் போகத் தயாரில்லை. இங்கே வந்து இந்த மண்ணில் வாரிசுகளை உருவாக்கியவர்களால் எவ்வாறு திரும்பிச் செல்ல முடியும்.. வறுமையிலிருந்து வசதியாக முன்னேறியவனால் மீண்டும் வறுமையில் வாழ முடியும்.. ஆனால் இங்கே பிறந்தவர்களால் அங்கே வாழ முடியாது.. அதுதான் உண்மை!!

சொகுசைக் கண்டிட்டம் எப்படிப் போறது என்று கேளுங்கோ அது நியாயம். ஆனால் பிள்ளையளை இஞ்ச வந்து பெத்திட்டம்.. எப்படி அதுகளை அங்க கொண்டு போய் கஸ்டத்தில தள்ளிவிடுறது என்று மட்டும் சொல்லாதேங்கோ.

தமிழீழம் என்றால் சோமாலியா என்று தீர்மானிச்சுக் கொண்டு.. தமிழீழம்.. விடுதலை என்று கூவிறதா எல்லோ இது இருக்குது. உங்களைச் சொல்லேல்ல உங்க பல பேரின்ர நினைப்பும் இப்படித்தான் இருக்குது.

எங்க நாட்டை நாங்கள் தான் கட்டி எழுப்ப வேணும். எங்கட பிள்ளையள்.. போன இடத்தில பிறந்திட்டுதுகள் என்றதுக்காக அதுகள் வெள்ளைக்காரன் வீட்டுப் பேரப்பிள்ளைகள் என்று உரிமை கொண்டாடுறது.. ரெம்ப ரெம்ப ரெம்ப ஓவர். உங்க பல பேரின்ர பேரன்களும் பூட்டன்களும் பேத்திகளும் பூட்டிகளும்.. ஊரில உவையள் வருவினம் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கினம்.. நீங்கள் என்னட்டான்னா.. பக்கத்து அப்பாட்மெண்ட் வெள்ளைக்காரக் கிழவிதான் என்ர பிள்ளைக்கு பேத்தி என்றீங்கள்..! :lol:

உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.. ஒரு காலத்தில மலேசியா சிங்கப்பூர் என்று போன எங்கட ஆக்கள் மலேயன் பெஞ்சனியர்களா திரும்பி வந்தவை. அங்க பிறந்த பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு.

அவையெல்லாம் வர முடிஞ்சிருக்குது.. ஆனால் வெள்ளைக்காரண்ட கோடிக்க போட்ட குட்டிகளுக்கு தமிழீழம் சூடாமோ..???! தமிழீழத்துக்கு திரும்பிப் போறதற்கு. எயார் கெண்டிசன் பூட்டி.. மக்டொலாசு.. கேவ்சியும்.. கிளப்புகளும்.. பப்புகளும்.. டிஸ்னி வேல்டுகளும்.. கட்டித்தந்தா.. ஐஸ்ஸில பிறந்த.. தமிழ்.. திராவிடக் குஞ்சுகள்.. வருவினமாமோ... தமிழீழத்துக்கு..??! :lol::lol:

சேகுவரா போன்ற போராளிகள் எங்கோ பிறந்து எங்கோ போராடவில்லையா. ஏன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கூட ஜேர்மனியில் வாழ்ந்து தானாக தாயகம் திரும்பி.. போராடி வீழ்ந்த மாவீரர்களையும் தமிழீழம் கண்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் படிக்கவென்று வந்தவர்கள் படிப்பு முடிந்ததும், வேலை விசா அல்லது மேலும் படிக்க விசா என்று அலைந்து ஏன் மேலை நாடுகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. இன்று எமது போராட்டத்திற்கான அடிப்படைத் தேவைகள் எங்கிருந்து வந்தன? அந்த வரண்டு போன மண்ணிலுள்ள சுரங்கங்களிலிருந்தா வருகிறது? படிக்கவென்று வந்து.. நாட்டுக்குத் திரும்ப மனமின்றி காசு கொடுத்து கள்ள விசா எடுத்து இருக்கலாம்.. அல்லது வேலை விசாவுக்காக அலைந்து அதை எடுத்து இருக்கலாம்.. அல்லத தொடாநஇத படித்துக் கொண்டே காலத்தைக் கழிக்கலாம்.. ஆனால் இன்னொரு அசைலத் தமிழனின் காசிலோ அல்லது சொத்து சுகங்களை விற்றோ அல்லது கடன் பட்டோ அசைலத்துக்கு வந்தால்.. இந்த 'எழுத்துக்களை' இனிசலோடு பிசையும் கனவான்களுக்கு தவறாகத் தெரிகிறதாம்!! :lol: இனஇறு புகலிட நாடுகளில் தமிழ் வாழ்கிறது என்றால் அதுவும் அசைலத் தமிழனால்தான்.. :lol:

ஜேஆர் காலத்தில வேணுமானால் தமிழன் பொய் சொல்லி அசைலம் கேட்டிருக்கலாம்.. ஆனால் இன்று பொய் சொல்லும் நிலையில் அசைலத் தமிழன் இல்லை.. :lol: (ஆனால் பொய்யை ஏற்றுக் கொண்ட நாடுகள் இன்று உண்மையை ஏற்றுக் கொள்ளும் நிலையும் மிக அரிதாகவே உள்ளது..)

தமிழீழத்தில இருந்து வந்து படிச்சிட்டுப் போய்த்தான் இன்று விமானப்படை அமைச்சிருக்கிறாங்க தமிழீழ மாணவர்கள். அவர்களுக்கு அசைலம் அடிக்கத் தெரியாமலோ.. போயிரிக்கினம்..!

உங்க அசைலம் அடிச்ச பல பேர் ஊரில காணியை பூமியை வித்திட்டு.. அதில வந்த காசில ஒரேயடியா ஓடிடுவம் என்று களவாய் ஓடி வந்தவை.. இல்லை என்பீங்களா..??! பயத்தில வந்தவை எத்தனை பேர்..??! :lol:

தாய் மண்ணில இவைக்கு எப்படி பற்று வரும். ஆயிரக்கணக்கான சிங்கள மாணவர்களும் வாறாங்க படிக்கிறாங்க போறாங்க. ஏன் தாயகத்தில உள்ள தமிழ் பேராசிரியர்கள் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில படிச்சுப் பட்டம் பெற்றவைதான்.

நாளைய தமிழீழத்தின் சிற்பிகளாக வேண்டிய இன்றைய புலம்பெயர் இளைய சமூகம்.. தமிழீழம் "ரூ.. கொட்" என்றதுதான்.. வேதனையாக இருக்கிறது..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரியப்பா உங்கை லண்டனிலை பொலிஸ்காரர் எங்கடை ஆக்களுக்கு காப்பு கட்டிவிடுறாங்களாம் உண்மையே :unsure:

பிள்ளையள் செய்த குற்றத்துக்கும் தாய் தேப்பன்மார்தான் காப்போடை திரியினமாம் :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரண்டு பேரும் ஏதோ மாறி மாறி வெள்ளைக்காரனிட்ட ஏதோ இல்லையென்று புலம்புறதுபோல தெரியுது.. நீங்க வீடு வாசலோடை சொகுசா இருக்குற வெள்ளையளோடை பழகேலை எண்டு நினைக்குறன்.. :o அவங்கள் ஒருவேளை தின்னுறதுக்கு செலவழிக்குற காசில நாங்கள் ஒரு கிழமைக்காவது தின்னுவம்.. இப்பிடிக் கணக்குப் பாத்தியளெண்டால்.. எப்பிடி சொந்த வீடு கார் வந்ததெண்டு கொஞ்சமாலும் புரியும்.. எடுக்குற காசில தண்ணியடிச்சுட்டு.. டிஸ்கோவில கிடந்து.. வாறவளவைக்கு ஹோட்டலில கேக்குறதுகளையெல்லாம் வாங்கிக் கொடுத்தால்.. கையில சல்லிக் காசுகூட நிக்காதுதான்.. :unsure::o

(நான் நெடுக்காலபோவனின் கருத்துக்கும் சும்மாவின் கருத்துக்கும் பதில் சொன்னனான்.. மற்றவை கண்டுகொள்ளாதீங்க!!)

சோழியன் குடும்பி சும்மா ஆடாது... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிய பல நண்பர்கள் மிகத் திறமைசாலிகளாக இருந்தும்... 200 மேற்பட்ட நேர்முகப் பரீட்சைகளுக்குப் போயும் வேலையின்றி வேறு நாடுகளுக்கு தொழில்பெறச் சென்றுள்ளனர்.

200 நேர்முக தேர்வுக்கு போயும் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் யாரில் பிழை என்று நீங்களே தெரிந்து கொள்ள வேண்டியதானே...எத்ற்க்கும் ஒரு சாட்டு சொல்வது நமக்கு பழக்கமாகிவிட்டது... உங்கள் நண்பர்களை கிட்டத்தட்ட 200 நிறுவனங்கள் தேர்வுக்கு கூப்பிட்டு இருந்தார்கள் ஆனால் வேலை கிடைக்கவில்லை...உண்மை என்ன என்றால் உங்கள் நண்பர் நேர்முகத்தேர்வில் தன்னை நிருபிக்க தவறி விட்டார் அல்லது அவருக்கு அந்த வேலைக்குரிய தகுதி இல்லாமலிருக்கலாம்...

எனக்குத்தெரிந்த தமிழர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை இது தான்.... ஒரு நேருமுக தேர்வுக்கு முன்னர் ஏதாவது எழுத்து பரீட்சை இருந்தால் 100 க்கு 100 எடுத்து அடுத்த கட்டத்துக்கு போவார்கள்.. ஆனால் நேர்முக தேர்வில் தெரிவு செய்யப்பட மாட்டார்கள்... காரணம் உங்கள் விவாதத்துக்கு..

இன்னும் சிலர் வேலைகளில் இருந்து திடீர் ஆட்குறைப்புக்களால் பாதிக்கப்பட்டு வேலையிழந்துள்ளனர்.

திடீர் வேலை நிறுத்தங்களால் தமிழர்களை மட்டும் தான் நிப்பாட்டுகின்றார்களா? அவன் அவன் திடீரென்று நிப்பாட்ட மாட்டாங்களா என்று பார்க்கிறாங்கள் நீங்கள் வேற.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை அது மனிதர்களை ஏஊ, ஏஏஆ மற்றும் ணொநேஊ என்று வகைப்படுத்தித்தான் வேலை வழங்குகிறது. விசாக்களையும் வழங்குகிறது. அதாவது வெள்ளைத்தோலுக்கு ஒரு விதிமுறை வெள்ளைத்தோல் அல்லாதோருக்கு இன்னொரு விதிமுறை. அடிப்படையில் இதுதான் நடைமுறை யதார்த்தமாக இருக்கிறது.

பிரித்தானியாவில் உயர் கல்வி கற்கும் நீங்கள் இதை சொல்வதை கேட்க ஆச்சரியமாக இருக்கின்றது...தோல் நிறத்தை வைத்து எதுவும் நடப்பதில்லை...பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருக்கும் கந்தசாமியும், டங்கனும் ஒரே மாதிரி தான் நடத்தப்படுகின்றார்கள்... வகைப்படுத்தித்தான் வேலை கொடுக்கப்பட்டது காரணம் இல்லாமலா? காரணம் உங்களுக்கு தெரியாதா? Non-EU என்று சொல்லி உங்களை வீட்டுக்கா அனுப்புகின்றார்கள்...படிக்க வந்தால் படித்து முடிய மேலே படிக்கணுமா? பணம் இல்லையா? இரண்டு வருடம் வேலை செய்து விட்டு படி என்று விசா குடுக்கின்றார்கள்.. வேலை செய்ய வந்தாயா? இங்கே நிரந்தரமாக தங்கணுமா.... அதற்கும் முறைகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள்...Tier 1,2,3 (PSW, Investors, HSMP etc..) என்று இருப்பது உங்களுக்கு தெரியாதா? இதை வெள்ளைக்கு ஒரு நிலை எமக்கு ஒரு நிலை என்று எப்படி நீங்கள் சொல்லலாம்? இந்த வெள்ளை தோல் உடையவர்கள் கறுப்புத்தோல் இருக்கும் நாட்டில் சும்மா போய் குடியேற முடியாது... எமக்கு இங்கு இருக்கும் கட்டுப்பாடுகள் போல அவர்களும் கறுப்புத்தோல் நாட்டுக்கு போய் குடியேறும் போது பல விசாக்களை பெற வேண்டியே உள்ளது...

Link to comment
Share on other sites

சும்மா இவர் எதுக்கோ இங்கு சும்மா சும்மா விளக்கமளித்து கருத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார் என நினைக்கிறேன்.. :unsure: அப்பா நெடுக்ஸ்! உண்மையைச் சொன்னால் இங்கு பிறந்த பலரது கருத்து என்னவென்றால்.. தங்கள் அறிவை தாயகத்துக்கு பயன்படுத்துவது.. தமது மூலதனத்தை

தாயகத்தில் முதலிடுவது.. தாயகத்துக்கு சுற்றுலா செல்வது.. இதிலே சம்மதம்தான்.. ஆனால்.. இலையான், நுளம்பு, எறும்பு, கொசுகு இருக்குமட்டும் அங்கே போய் நிரந்தரமாக இருக்கமாட்டோம் என்பதுதான் அவர்களில் பெரும்பாலோரது கூற்று.. இந்த நிலையை மாற்றாம பெற்றோர் என்ன செய்கிறாங்கள் என்று நீங்க கேட்பது புரிகிறது.. தமிழை படிங்கப்பா.. தமிழ்ல கதையுங்கப்பா.. அதுக்கு மேலால தமிழ் விழாக்களில மேடைக்கு ஏறுங்கப்பா.. அதுக்கும் மேலால வானொலிகளில விளாசுங்கப்பான்னு அவங்க தலையை சிதைச்சே அவங்களுக்கு வெறுப்பேத்துற நாங்க.. இதுக்கு மேலையும் வெறுப்பேத்தினா.. வீட்டைவிட்டு ஓடிப் போனாலும் போயிடுவாங்க.. :o அதுக்குப் பிறகு நம்ப கெளரவம் என்னாவது??? :lol::o

உங்க அசைலம் அடிச்ச பல பேர் ஊரில காணியை பூமியை வித்திட்டு.. அதில வந்த காசில ஒரேயடியா ஓடிடுவம் என்று களவாய் ஓடி வந்தவை.. இல்லை என்பீங்களா..??! பயத்தில வந்தவை எத்தனை பேர்..??! biggrin.gif

என்னையும் நம்ப மாமா ஒருநாள் 'மருமேனே.. நான் மண்டையப்போட்டா எங்கடை சொத்தெல்லாம் பாழாப் போப்போது.. என்ன செய்ய?' எண்டு போனில கேட்டாரு.. சுத்தி மதிலைக் கட்டி.. 'சோழியான் நினைவாலயம்' என்று பெயர்ப்பலகை மாட்டச் சொல்லீட்டன்.. ^_^:D

Link to comment
Share on other sites

அப்போ எங்கட ஆட்கள் சாப்பிடாமல் இருந்து வீடு கார் எல்லாம் வாங்குகின்றார்களா? இது தெரியாமல் போய்விட்டது.... வீடு வாசலோட வசதியாக இருக்கின்ற அனேக மேற்கத்தியர்களின் கடன் அட்டை நிலுவையை அறிய வாய்ப்பில்லை தான்...

நாங்கள் பேச வந்த விடயம் என்னவென்றால், அகதியாக இங்கு வந்து ஒரு வருடத்தில் கடைகள் வீடுகள் சொந்தமாக எப்படி என்று....வருடம் முழுதும் உண்ணாவிரதம் இருந்தால் கூட சேமிக்க முடியாதே?

நீங்கள் இருக்கும் நாட்டில் நிலைமைகள் வேறு...

உங்க நாட்டுக்கு அகதியாக வந்தவன் இன்னொரு நாட்டில் அகதியாக இருந்து அந்நாட்டு பிரஜா உரிமை பெற்று, அந்நாட்டில் சேமித்த பணத்துடன் வந்திருப்பான்.. :unsure: யூ நோ.. நெள வீ ஆர் நொட் றிவூயீஸ்.. வீ ஆர் யூரோப்பியனாக்கும்.. :o

(ஆண்டவா.. இந்த வசனம் தப்பிப் பிழைக்க கருணைகாட்டப்பா.. :D:o )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிய பல நண்பர்கள் மிகத் திறமைசாலிகளாக இருந்தும்... 200 மேற்பட்ட நேர்முகப் பரீட்சைகளுக்குப் போயும் வேலையின்றி வேறு நாடுகளுக்கு தொழில்பெறச் சென்றுள்ளனர்.

200 நேர்முக தேர்வுக்கு போயும் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் யாரில் பிழை என்று நீங்களே தெரிந்து கொள்ள வேண்டியதானே...எத்ற்க்கும் ஒரு சாட்டு சொல்வது நமக்கு பழக்கமாகிவிட்டது... உங்கள் நண்பர்களை கிட்டத்தட்ட 200 நிறுவனங்கள் தேர்வுக்கு கூப்பிட்டு இருந்தார்கள் ஆனால் வேலை கிடைக்கவில்லை...உண்மை என்ன என்றால் உங்கள் நண்பர் நேர்முகத்தேர்வில் தன்னை நிருபிக்க தவறி விட்டார் அல்லது அவருக்கு அந்த வேலைக்குரிய தகுதி இல்லாமலிருக்கலாம்...

எனக்குத்தெரிந்த தமிழர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை இது தான்.... ஒரு நேருமுக தேர்வுக்கு முன்னர் ஏதாவது எழுத்து பரீட்சை இருந்தால் 100 க்கு 100 எடுத்து அடுத்த கட்டத்துக்கு போவார்கள்.. ஆனால் நேர்முக தேர்வில் தெரிவு செய்யப்பட மாட்டார்கள்... காரணம் உங்கள் விவாதத்துக்கு..

இன்னும் சிலர் வேலைகளில் இருந்து திடீர் ஆட்குறைப்புக்களால் பாதிக்கப்பட்டு வேலையிழந்துள்ளனர்.

திடீர் வேலை நிறுத்தங்களால் தமிழர்களை மட்டும் தான் நிப்பாட்டுகின்றார்களா? அவன் அவன் திடீரென்று நிப்பாட்ட மாட்டாங்களா என்று பார்க்கிறாங்கள் நீங்கள் வேற.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை அது மனிதர்களை ஏஊ, ஏஏஆ மற்றும் ணொநேஊ என்று வகைப்படுத்தித்தான் வேலை வழங்குகிறது. விசாக்களையும் வழங்குகிறது. அதாவது வெள்ளைத்தோலுக்கு ஒரு விதிமுறை வெள்ளைத்தோல் அல்லாதோருக்கு இன்னொரு விதிமுறை. அடிப்படையில் இதுதான் நடைமுறை யதார்த்தமாக இருக்கிறது.

பிரித்தானியாவில் உயர் கல்வி கற்கும் நீங்கள் இதை சொல்வதை கேட்க ஆச்சரியமாக இருக்கின்றது...தோல் நிறத்தை வைத்து எதுவும் நடப்பதில்லை...பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருக்கும் கந்தசாமியும், டங்கனும் ஒரே மாதிரி தான் நடத்தப்படுகின்றார்கள்... வகைப்படுத்தித்தான் வேலை கொடுக்கப்பட்டது காரணம் இல்லாமலா? காரணம் உங்களுக்கு தெரியாதா? Non-EU என்று சொல்லி உங்களை வீட்டுக்கா அனுப்புகின்றார்கள்...படிக்க வந்தால் படித்து முடிய மேலே படிக்கணுமா? பணம் இல்லையா? இரண்டு வருடம் வேலை செய்து விட்டு படி என்று விசா குடுக்கின்றார்கள்.. வேலை செய்ய வந்தாயா? இங்கே நிரந்தரமாக தங்கணுமா.... அதற்கும் முறைகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள்...Tier 1,2,3 (PSW, Investors, HSMP etc..) என்று இருப்பது உங்களுக்கு தெரியாதா? இதை வெள்ளைக்கு ஒரு நிலை எமக்கு ஒரு நிலை என்று எப்படி நீங்கள் சொல்லலாம்? இந்த வெள்ளை தோல் உடையவர்கள் கறுப்புத்தோல் இருக்கும் நாட்டில் சும்மா போய் குடியேற முடியாது... எமக்கு இங்கு இருக்கும் கட்டுப்பாடுகள் போல அவர்களும் கறுப்புத்தோல் நாட்டுக்கு போய் குடியேறும் போது பல விசாக்களை பெற வேண்டியே உள்ளது...

200 தடவைகள் வேலைக்கு முயற்சித்த எனது நண்பன் இலங்கையில் எல்லாப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றவன். பேராதனைப் பல்கலைக்கழக முதல் வகுப்பு பட்டதாரி. கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சி டாக்டர் பட்டம் பெற்றவன். இன்று அவன் அமெரிக்க ஜி ஆர் ஈ நுழைவுத் தேர்வில் அதிக புள்ளிகள் பெற்று அமெரிக்காவில் சிறப்பான வேலை செய்கிறான். ஆனால் அவனுக்கு.. இங்கிலாந்தில் வேலை வாய்ப்பில்லையாம்.. திறமை போதாதாம்..???! நியாயமா சும்மா இது உங்களுக்கே அடுக்குமா...??! :o

Non- EU மாணவன் என்ற வகையில் நானே இரண்டு விடயங்களில் பிந்தள்ளப்பட்டிருக்கிறேன்.

1. எனக்கு ஆராய்ச்சி டாக்டர் பட்டப்படிப்புக்கு என்று பிரேரிக்கப்பட்ட நிதி வசதி எனது Non-EU மாணவ நிலை கருதி நிராகரிக்கப்பட்டது. அதனால் அந்த அரிய வாய்ப்பை நான் இழந்தேன்.

2. அதன் பின் மருத்துவத்துறைசார் படிப்பில் எனக்குத் தரப்பட வேண்டிய Hospital Placement இல் எனது திறமையை முன்னிலைப்படுத்தாமல் எனது Non-EU மாணவ நிலையை முன்னிலைப்படுத்தி என்னை waiting list இல் கடைசியில் போட்டு வைத்திருக்கிறார்கள்..???! இதனால் எனக்கான மருத்துவ நிலைப்பயிற்சி பிந்தங்கிப் போகிறது. வேலை வாய்ப்பு பிந்தங்கிப் போகிறது.

உள்ளூர் மற்றும் EU மாணவர்களை விட பலமடங்கு பணம் செலுத்திப் படித்தும் எமக்கு இவ்வாறு செய்யப்படுவது பக்கச் சார்பான சட்டங்களின் கீழாகும். இவ்வாறு மாணவர்களை பிராந்திய ரீதியில் பிரித்து பாரபட்சமாக நடத்துவது discrimination இல்லையா..??! :o:unsure:

கறுப்பு வெள்ளை என்று வாயால் பேசினால் தான் discrimination னா..??!

இது எனக்கு தனிப்பட ஏற்பட்ட அனுபவம். இப்படிப் பலர்..! :D

Link to comment
Share on other sites

நெடுக்கர்,

இங்க Australia இல் மருத்துவர்களுக்கு நல்ல தட்டுப்பாடு உள்ளது. தலை நகரங்களில் இருந்து சிறிது தள்ளி உள்ள Hospitals இல் வேலை இலகுவாக எடுக்கலாம். தலை நகர Hospitals இல் வேலை எடுப்பதன்றால் AMC Exams pass பண்ணி இருக்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை தான் இந்த Exams வரும். Post grads இருக்குமானால் இன்னும் திறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

இங்க Australia இல் மருத்துவர்களுக்கு நல்ல தட்டுப்பாடு உள்ளது. தலை நகரங்களில் இருந்து சிறிது தள்ளி உள்ள Hospitals இல் வேலை இலகுவாக எடுக்கலாம். தலை நகர Hospitals இல் வேலை எடுப்பதன்றால் AMC Exams pass பண்ணி இருக்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை தான் இந்த Exams வரும். Post grads இருக்குமானால் இன்னும் திறம்.

அப்படித்தான் எனது அவுஸ்திரேலிய நண்பனும் சொன்னான். ஆனால் அங்கு வேலை பெற வேண்டின் குறித்த துறையில் குறைந்தது 2 வருட அனுபவம் தேவை. அதை placement இல்லாமல் பெறுவது மிகக் கடினமானது.

எனக்கு placement ஐ பின்னடிப்பதால்.. சர்வதேச அங்கீகாரமுள்ள வகைக்கு எனது துறைசார் சான்றிதழைப் பெற முடியவில்லை. இவர்களின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப இவர்கள் தான் தர வேண்டும். ஆனால் Non-EU என்று சொல்லி எனது பல்கலைக்கழகமும் (இங்கேயே வேறு சில பல்கலைக்கழகங்கள் இவ்வாறு பாரபட்சம் காட்டுவதில்லை.) இங்குள்ள சுகாதார சேவையினரோடு இணைந்து மோசமாக நடந்து கொள்கிறது. placement கொடுத்தால் ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி நிராகரிக்கிறார்கள். அரசு அதை உள்ளூர் மற்றும் EU மாணவர்களுக்கே அதிகம் வழங்கக் கோருவதாகவும் காரணம் சொல்கின்றனர். தமக்கு நிதிப்பற்றாக்குறை என்றும் சொல்கின்றனர்.

இப்படி வேறு சில பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நடந்துதான் இருக்கிறது. :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

நல்ல ஒரு விவாதம், நானும் இடையில புகுந்து எண்ட கருத்துகளையும் சொல்லுவமெண்டு பார்த்தன். :icon_mrgreen: அசைலம் அடிச்சு வார ஆக்களில பாதிபேருக்கு மேல பாதிக்கப்படாத ஆக்கள் தான். உதாரணத்துக்கு சுனாமியால பாதிக்கப்பட்ட ஆக்களுக்கு கனடாவும் ஆஸ்திரேலியாவும் விசா குடுத்த போது நான் அறிய பாதிக்கப்படாத கன ஆக்களும் வந்து சேந்திடினம். நான் யாரையும் குறை சொல்லயில்லை, உண்மையாதான் சொல்லுறன். எங்கட ஆக்கள் வெளியில வாறது பொருளாதார ரீதியில ஒரு பலம் தான். இப்பிடி வெளியால வராட்டி, வெள்ளவத்தயில இவ்வளவு பிளட் முளைச்சிருக்குமே? ஊரில கூட வெளிநாடுக்காசு எவ்வளவோ வேலையள செய்திருக்கு. இங்கு சிலர் சொல்லுற கருத்துக்கு நானும் உடன் படுறன். வெளிநாட்டில எவ்வளவு தான் உழைச்சாலும் காசு தங்காது எண்டு தான் நான் சொல்லுவன். பொருளாதார ரீதியில, கடின உழைப்பாலயும் நன்கு திட்டமிடுறதாலையும் முன்னேறலாம், இல்லை எண்டு சொல்லவில்லை ஆனால் கனகாலம் தேவை. ஊரில கனபேர் நினைக்கிறது வெளிநாட்டில இலகுவா உழைக்கலாம் எண்டு, ஆனால் நிஜம் என்ன எண்டு உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை. எங்கட ஆக்களில கனபேர் skilled migrationல வந்து இருக்கீனம் தான்.

நான் சொல்ல விரும்பிய இன்னொரு கருத்து என்னவென்றால், தமிழீழம் கிடைச்சாலும் அநேகமான புலம்பெயர்ந்த ஆக்களும் போகவிரும்பாயினம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து முன்போருக்காலும் இந்த தலைப்பில ஒரு விவாதம் நடந்தது உங்கலேலருக்கும் நினைவிருக்கும். இதற்க்கு முக்கிய காரணம் எம்முடைய புலம்பெயர் இளைய தலை முறை வளர்க்கப்பட்ட விதமும் சூழலும். இதற்க்கு நல்ல உதாரணம் எனக்கு மிகவும் நெருக்கமான உறவினர்களுக்கு ரெண்டு பிள்ளையளும் இங்கவந்துதான் பிறந்தவங்கள். முதல் நல்லா தமிழ் கதைச்சவங்கள் இப்ப தமிழ்ல கேள்வி கேட்டாலும் ஆங்கிலத்தில்தான் திருப்பிகதைக்கிறாங்கள். இவ்வளத்துகும், அவ்வங்களிண்ட தேப்பன், தாயில இருந்து எல்லாரும் தமிழில தான் கதைக்கிறது. அவயல கேட்டால், இவங்கள் கதைக்கிறாங்கள் இல்ல தம்பி நாங்கள் என்னத்த செய்ய எண்டுவீனம். அந்த பெடியளுக்கு நான் அத்தான் முறை, அவங்களுக்கும் 8, 6 வயதுதான் ஆகுது. இப்பிடி எத்தினையோ கதை இருக்கும். இது இப்பிடியே போனால், அவங்கட தலைமுறைக்கு பிறகு, தமிழ் தெரியாத தமிழ் தலைமுறை ஒண்டு கட்டாயம் உருவாகும். அதேவேளை தமிழகத்தை சேர்ந்த எனக்கு தெரிந்த ஒரு குடும்பமும் உள்ளது. அவேயளிண்ட மகனுக்கும் எண்ட சின்ன மச்சான்ட வயதுதான். அவன் அமெரிக்கால பிறந்த பிள்ளை ஆனால் தமிழ் நல்லா கதைப்பான். தமிழகத்தை சேர்ந்தவர்களின் வெளிநாட்டு இளைய தலைமுறை எப்பவுமே தமிழ்ல பேசினதைதான் நான் பாத்திருகிறான். அவர்களால் முடியுமாயின் எங்கட இளைய தலைமுறையால ஏன் முடியாது? :D

இன்னொரு விஷயம் என்னெண்டா, இங்க பிறந்து வளந்த பெடி, பெட்டயள் இருக்கினமே, அவேலுக்கு பட்டிக்கவாற, வேலைநிமித்தம் வாற தங்கட வயது ஆக்களில ஒரு இது. அது என்னெண்டா தங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும், தாங்கள் தான் பெரிய ஸ்டைல்லான ஆக்களாம். கிட்டடியில வந்தவேல் FOBஆம் (Fresh Off the Boat). படிக்க வந்த ஆக்கள பஞ்சத்தில அடிபட்டுவந்தவெயல் மாதிரித்தான் நடத்துவீனம். :lol: உங்களில ஆருக்கும் நடந்திருந்தா சொல்லுங்கோ. எனக்கு இப்பிடி எத்தினயோதரம் நடந்திருக்கு. கண்டாலும் எதோ பாக்ககூடாத ஒண்ட பாத்தமாதிரி தலைய திருப்பிக்கொண்டு போவீனம், ஆனால் அங்கால நிக்கிற வெள்ளை பெடியள் பெட்டயளோட எண்டால் கதைப்பினம். இதால நானும் இப்பிடியான் ஆக்கள கண்டாலும் காணாதமாதிரித்தான் போறது. :D நாங்கள் ஏன் வீணா எங்கட கொவ்ரவத்த குறைப்பான்? என்னை பொறுத்தவரைக்கும் படிக்கவந்த என்னைப்போல பெடியள் எவ்வளவோ மேல். வெளிநாட்டில படிக்கிறதுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு எவ்வளவு செலவகுமேண்டு உங்களெல்லாருக்கும் தெரியும். நாங்களே ரெண்டு மூண்டு இடத்தில நித்திரைகொல்லாமல் வேலைசெய்து, படிச்சு, வாயைகட்டி வயிதைகட்டித்தான் கலாசாலை கட்டணம், வாடகை அது இது எண்டு எல்லா செலவையும் சமாளிக்கவேனும். அப்பிடி இருக்கைகுல எங்களால திறமான கார் ஓடவோ, அவயளிண்ட தரத்துக்கு உடுக்கவோ ஏலாதுதான் ஆனால் இவர்களில் பலர் பெற்றாரின் காசில சீவிக்கிறதா விட எவ்வளவோ திறம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசைலம் அடிச்சவர்கள் படிக்க வந்தவர்கள் எல்லோருக்கும் ஒரு பொதுவான நோக்கம் இருக்கின்றது...வெளி நாட்டிலே நிரந்தரமாக தங்குவது.... நாட்டில் பிரச்சனை முடியும்(?) வரையாவது... எனக்கு தெரிந்த பலர் மாணவர் விசா குடுக்க வில்லை என்று களவாக வந்து அசைலம் அடிச்சு படிச்சு முடித்தவர்களும் இருக்கின்றார்கள்...(இலவசமாக)

இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் இருந்து இங்கு வந்து பணம் கட்டி படித்து விட்டு படித்து முடித்தவுடன் ஊருக்கு திரும்பி போனவர்கள் ஒருவரையும் நான் அறியேன். இங்கு இருக்க அனுமதி மறுக்கப்பட்டால் ஊருக்கு போகின்றார்கள் ஆனாலும் உடனேயே வேறு நாட்டுக்கு போய் விடுகின்றார்கள்...

எனக்கு இங்கே பிறந்து வளர்ந்தவர்களுடனோ அல்லது இலங்கையில் இருந்து வந்த பல மாணவர்களுடனோ படித்த அனுபவம் இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விஷயம் என்னெண்டா, இங்க பிறந்து வளந்த பெடி, பெட்டயள் இருக்கினமே, அவேலுக்கு பட்டிக்கவாற, வேலைநிமித்தம் வாற தங்கட வயது ஆக்களில ஒரு இது. அது என்னெண்டா தங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும், தாங்கள் தான் பெரிய ஸ்டைல்லான ஆக்களாம். கிட்டடியில வந்தவேல் FOBஆம் (Fresh On Board). படிக்க வந்த ஆக்கள பஞ்சத்தில அடிபட்டுவந்தவெயல் மாதிரித்தான் நடத்துவீனம். உங்களில ஆருக்கும் நடந்திருந்தா சொல்லுங்கோ.

அவை மட்டுமல்ல.. உங்க வந்து அப்பர்மார் அசைலம் அடிக்க பின்னால குடும்பமா வந்து குந்தினவையலும் கொஞ்சப் பேர் அப்படித்தான்.

நானும் உந்தக் கூட்டங்களோட சேர்ந்து படிக்கல்ல. காரணம்.. நான் படிச்சதுகளுக்கு உந்தக் கூட்டங்களைக் காண்பது அரிது. அதுகள் படிக்கிறதெல்லாம்.. இலகுவான (கணணி.. சமூகக்கல்வி.. உளவியல்.. தகவல்தொழில்நுட்பம்.. சட்டம்) பாடங்களா இருக்கும் அல்லது.. வழமையான தமிழ் பெற்றோருக்குத் தெரிந்த... இஞ்சினியர்.. டாக்டர்.. எக்கவுண்டனா இருக்கும்..!

அதுமட்டுமன்றி.. உவையள் (பெடியள் பெட்டைகளையும் பெட்டைகள் பெடியளையும்) தங்கட கலரை விட்டு தூர வராயினம். குறிப்பாக லண்டனுக்க தான் சுத்துவினம். நாங்கள் அதைவிட்டு தூரப் போனதால.. உவையளைச் சந்திக்க முடியல்ல..! அங்கால வெள்ளையள் தானே..! லண்டனுக்குள்ள வெள்ளையள் குறைவு. வெள்ளை நிறத்தில உள்ளதுகளும் ஆங்கிலேயர்களாக இருப்பது வெகு அரிது..! மத்திய லண்டனுக்குள்ள இருக்கிறார்கள். அங்கு எங்கட கலருகள் வாறது குறைவு. ஏனெனில் போட்டி அதிகம்..! :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

200 தடவைகள் வேலைக்கு முயற்சித்த எனது நண்பன் இலங்கையில் எல்லாப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றவன். பேராதனைப் பல்கலைக்கழக முதல் வகுப்பு பட்டதாரி. கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சி டாக்டர் பட்டம் பெற்றவன். இன்று அவன் அமெரிக்க ஜி ஆர் ஈ நுழைவுத் தேர்வில் அதிக புள்ளிகள் பெற்று அமெரிக்காவில் சிறப்பான வேலை செய்கிறான். ஆனால் அவனுக்கு.. இங்கிலாந்தில் வேலை வாய்ப்பில்லையாம்.. திறமை போதாதாம்..???! நியாயமா சும்மா இது உங்களுக்கே அடுக்குமா...??!

இதற்குரிய பதிலை நான் முன்னர் எழுதிய ஒரு கருத்திலே எழுதி விட்டு பின்னர் நீக்கி விட்டேன்... நீக்க முதல் வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கும்...

நான் எழுதியது "இலங்கைத்தமிழர்களிடம் எதையாவது எழுதி சித்தியடைய சொன்னால் எல்லோரை விடவும் சிறந்த முறையில் சித்திய்டைவார்கள்.. அதையே வாயால் விபரிக்க சொன்னால் தடு மாறுவார்கள்..

உங்கள் நண்பருக்கு திறமை இல்லை என்று நான் சொல்லவில்லை...பிரித்தானியாவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியான் அண்ணா... நீங்கள் சொல்கின்றீர்கள்... அசைலம் அடிச்ச தமிழன் தான் தமிழை வாழ வைக்கின்றான் என்று..... ( பிரித்தானியாவில் வடக்கில் ஆஆஆஆக மேல இருக்கின்ற.... அப்போது ஒரு தமிழரும் இல்லாத இடத்திலே கூட . XXXXX பல்கலைக்கழகம் வரவேற்க்கின்றது என்று தமிழில் எழுத்தி அனுமதியோடு ஒட்டிய ஆட்கள் நானும :icon_mrgreen:

இந்த அசைலம் அடிச்சு கடை வைத்து தொழில் பண்ணிக்கொண்டு ஊரில மக்களுக்கு உதவி செய்கின்றோம் என்ற தமிழர்கள் உண்மையிலே தமிழர்கள் மேல் அக்கறையில் உதவி செய்கின்றார்களா? அந்த விழா இந்த விழா என்று தமிழை வளர்க்க்கின்றார்களே (?)..... கூட இருக்கும் தமிழனை வளர்க்கின்றார்களா? ஒரு தமிழ் கடையிலாவது ஒரு தமிழன் வேலை செய்தால் சராசரி வேலையாளாக நடத்தப்படுகின்றானா? ஒழுங்காக சம்பளம் கொடுக்கின்றார்களா? எனக்கு தெரிந்த ஒரு மாணவன் ..... படிக்கும் போது ஒரு தமிழருடைய கடையில் வேலைக்கு போனார் மிட்லன்ஸ் என்ற இடத்தில... கேட்டால் தான் தமிழை வளர்க்கின்றேன் என்பார்.. .ஆனால் அந்த மாணவன் மாதக் கடைசியில் சம்பளம் கேட்கும் போது அவர் சொன்னது உம்மடை வேலை சரியில்லை.. .கன நாள் ரில் ல காசு குறைச்சு போனது என்று மனிசி சொன்னவா.... இந்தாரும் என்று சொல்லி 500 பவுண்ஸ் குடுத்துப்போட்டு.. அடிக்கடி வீட்ட சாப்பிடுறனீர்.. சொ தட்ஸ் ஆல்... நீர் ஒரு தமிழ் பெடியன் படிக்கின்றனீர் என்ற படியா தான் நான் 500 தாரன் இல்லாட்டி 400 தான் என்று சொல்லி அனுப்பி விட்டார்... கிழமைக்கு 300 பவுண்ஸ் தாற என்று சொல்லித்தான் அவனை வேலைக்கு சேர்த்தவர்... இப்படியான் தமிழர்கள் தமிழை வளர்க்கின்றார்களா? அல்லது தமிழை காட்டி தம்மை வளர்க்கின்றார்களா?

உண்மையில் தமிழை வளர்க்க தமிழனை வளர்க்க அரவணைக்கும் தமிழர்களும் ஏராளம் உண்டு.....

கூட இருக்கும் தமிழனை அடிமையாக வைத்துக்கொண்டு சிங்களவனே அவனே இவனே என்டுறதில என்ன பிரியோசனம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. எனக்கு ஆராய்ச்சி டாக்டர் பட்டப்படிப்புக்கு என்று பிரேரிக்கப்பட்ட நிதி வசதி எனது ணொநேஊ மாணவ நிலை கருதி நிராகரிக்கப்பட்டது. அதனால் அந்த அரிய வாய்ப்பை நான் இழந்தேன்.

அண்ணா நீங்கள் எதிர்பார்பது எந்த வகையில் நியாயம்? அந்த நிதி EP ஆல் ஜரோப்பியர்களுக்காக ஜரோப்பிய நலனுக்காக ஒதுக்கப்பட்டது... அதை உங்களுக்கு தர வேண்டும் என நீங்கள் எதிர் பார்ப்பது எந்த வகையில் நியாயம்? நீங்கள் இலங்கை/தமிழீழத்திற்கு உங்கள் திறமை /ஆராய்ச்சியால் இலங்கை/தமிழீழம் அடைய போகும் நன்மை என்ன என்று கூறி அவர்களை கட்ட சொல்லுங்கள். NON-EUஎன்று கூறுகின்றீர்கள்... எதற்கு அவர்கள் அப்படி பிரிக்கின்றார்கள்..... உங்களால அவர்களுக்கு ஏதாவது பிரயோசனம் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு தடையாக இருக்க மாட்டார்கள்... ஆனால் உங்களுக்கு வருடத்திற்கு 30000 பவுண்ஸ் கு மேலே செலவழித்து உங்கள ஆராய்ச்சிக்கு உதவி செய்ய.. நீங்கள் ஆராய்ச்சி முடிய உங்கள் சொந்த நாட்டுக்கு சென்றால் அவர்கள் 30000 பவுண்ஸ் படி 3 - 4 வருடங்களிற்கு செலவிட்டு என்ன பயன்? இதே நெடுக்கால போவான் ஒரு ஜரோப்பிய ஒன்றிய கடவுச்சீட்டை வைத்திருந்து ஜரோப்பாவில நிரந்தரமாக தங்கி இருந்தால்.. இப்படி செய்திருப்பார்களா? சொல்லுங்கள்? படிக்க போகின்றேன் என்று விசா அனுமதி கேட்கும் போது என்னிடம் இத்தனை இலச்சம் பணம் இருக்கின்றது.. இல்லை என்றால் மாமா கட்டணம் கட்டுவார் மாமி கட்டுவார் என்று சொல்லி தானே விசா எடுக்கின்றீர்கள்... இங்கு வந்த பின் எப்படி இப்படி சொல்லலாம்?

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்.. நாங்கள் காசு கட்டி செய்யும் ஒரு ஆராய்ச்சிப் பெறுபேறை வர்த்தக அல்லது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பல ஆயிரம் பவுன்களுக்கு விற்று பல்கலைக்கழகங்கள் எங்களால் காசு பார்க்கின்றனவே அது நியாயமா..??! அது நியாயம் என்றால் ஏன் இது ஆகாது.

முதுமானி நிலை ஆய்வுகளை நாம் தாமே எமது பணத்தில் செய்கின்றோம். அது வெற்றியடையும் போது.. அதை அடிப்படையாக வைத்து மேலும் ஆய்வுகளை பிரேரிக்கும் போது.. வர்த்தக தொழில்நுட்ப நிறுவனங்கள்... மேலும் ஆய்வை விரும்பும் நிறுவனங்கள் காசை அள்ளி வழங்குகின்றன தானே. அதைப் பேராசிரியர்களும்.. பல்கலைக்கழகங்களும் பிரித்தானிய அரசும் சுருட்டிக் கொள்வது.. நியாயமில்லையா..??!

ஆனால் எமக்கு ஒரு ஆய்வுக்கான வாய்ப்பை அளிப்பதால் அவர்களுக்கு அதனால் பேரிழப்பு ஏற்படாது. அந்த ஆய்வு வெற்றியடையவில்லை என்றால் நாம் சித்தி பெற முடியாது. ஆய்வு சரிவர செய்யப்படவில்லை என்றால் கூட இடைநடுவில் நிதியை நிறுத்தி விடுவார்கள். அவர்கள் எல்லா விதத்திலும் தம்மை பாதுகாத்துக் கொண்டுதானே பணத்தை முதலிடுகிறார்கள்.

நான் அறிந்தேன்.. நான் செய்ய விரும்பிய ஆய்வு இன்னும் பல்கலைக்கழகத்தில் காத்திருப்பதாக. கொஞ்சம் கடினமான ஆய்வுத்தலைப்புக்களை ஐரோப்பிய மாணவர்கள் எடுப்பது குறைவு. இருந்தும்.. பல்கலைக்கழகங்கள் அரசின் கட்டாயத்துக்கு அடிபணிந்து செல்ல வேண்டி இருப்பதை.. எனது மேற்பார்வையாளரும் சுட்டிக் காட்டினார்..! பல்கலைக்கழகம் அதற்கு நிதி உதவி செய்ய முடியாத சூழலில் இருப்பதால் பல்கலைக்கழக நிதி உதவி கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவர்கள் வெளியாரிடமிருந்தான நிதி உதவியையே அவ்வாய்வுக்கு எதிர்பார்த்திருக்கின்றனர். :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதுமானி நிலை ஆய்வுகளை நாம் தாமே எமது பணத்தில் செய்கின்றோம். அது வெற்றியடையும் போது.. அதை அடிப்படையாக வைத்து மேலும் ஆய்வுகளை பிரேரிக்கும் போது.. வர்த்தக தொழில்நுட்ப நிறுவனங்கள்... மேலும் ஆய்வை விரும்பும் நிறுவனங்கள் காசை அள்ளி வழங்குகின்றன தானே. அதைப் பேராசிரியர்களும்.. பல்கலைக்கழகங்களும் பிரித்தானிய அரசும் சுருட்டிக் கொள்வது.. நியாயமில்லையா..??!

எங்க போனாலும் எங்களுக்கு பிழை பிடிக்க வேணுமப்பா... இல்லாட்டி நித்திரை வராது.... நீங்கள் ஆராய்ச்சியை காசை கட்டி முடித்து ஒரு பேராசிரியராக வந்து பின்னர் வரும் குட்டி நெடுக்குக்ளை வைத்து ஆராய்ச்சி பண்ண வைத்து நீங்களும் சுருட்டுங்களன்? யார் வேண்டாம் என்டது? விட்டால்... என்ட வருமான வரிப்பணத்தை பிரித்தானிய அரசு சுருட்டுது என்டுவீங்கள் போல இருக்கே... வீதி குப்பையாக இருந்தாலும் பிரச்சனை.... துப்புரவு செய்ய வரி கேட்டாலும் பிரச்சனை.... அவங்கள் என்னத்ததான் செய்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதுமானி நிலை ஆய்வுகளை நாம் தாமே எமது பணத்தில் செய்கின்றோம். அது வெற்றியடையும் போது.. அதை அடிப்படையாக வைத்து மேலும் ஆய்வுகளை பிரேரிக்கும் போது.. வர்த்தக தொழில்நுட்ப நிறுவனங்கள்... மேலும் ஆய்வை விரும்பும் நிறுவனங்கள் காசை அள்ளி வழங்குகின்றன தானே. அதைப் பேராசிரியர்களும்.. பல்கலைக்கழகங்களும் பிரித்தானிய அரசும் சுருட்டிக் கொள்வது.. நியாயமில்லையா..??!

எங்க போனாலும் எங்களுக்கு பிழை பிடிக்க வேணுமப்பா... இல்லாட்டி நித்திரை வராது.... நீங்கள் ஆராய்ச்சியை காசை கட்டி முடித்து ஒரு பேராசிரியராக வந்து பின்னர் வரும் குட்டி நெடுக்குக்ளை வைத்து ஆராய்ச்சி பண்ண வைத்து நீங்களும் சுருட்டுங்களன்? யார் வேண்டாம் என்டது? விட்டால்... என்ட வருமான வரிப்பணத்தை பிரித்தானிய அரசு சுருட்டுது என்டுவீங்கள் போல இருக்கே... வீதி குப்பையாக இருந்தாலும் பிரச்சனை.... துப்புரவு செய்ய வரி கேட்டாலும் பிரச்சனை.... அவங்கள் என்னத்ததான் செய்றது?

ஆனால் இதையே அண்டை நாடான நோர்வேயில் பாருங்கள்.. வெளிநாட்டு மாணவர்களுக்கு உள்நாட்டு மாணவர்களைப் போல கடன்வசதி அளிக்கின்றனர். வேலை வாய்ப்பு அளிக்கின்றனர். கூடிய அளவுக்கு சமனான வாய்ப்பை அளிக்கின்றனர்.

அமெரிக்காவில் கூட அப்படித்தான். வெளிநாட்டு மாணவர்களை இரண்டாம் நிலையாக நோக்குவதை இயன்றளவு தவிர்க்கின்றனர்.

பிரித்தானியா.. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளே மாணவர்களை பிராந்திய ரீதியாக வகைப்படுத்தி.. பிரிவினை காட்டி வருகின்றனர். ஆனால் ஒன்றுக்கு 5 மடங்காக பணத்தைப் புடுங்கிக் கொள்கின்றனர்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இதையே அண்டை நாடான நோர்வேயில் பாருங்கள்.. வெளிநாட்டு மாணவர்களுக்கு உள்நாட்டு மாணவர்களைப் போல கடன்வசதி அளிக்கின்றனர். வேலை வாய்ப்பு அளிக்கின்றனர். கூடிய அளவுக்கு சமனான வாய்ப்பை அளிக்கின்றனர்.

அமெரிக்காவில் கூட அப்படித்தான். வெளிநாட்டு மாணவர்களை இரண்டாம் நிலையாக நோக்குவதை இயன்றளவு தவிர்க்கின்றனர்.

பிரித்தானியா.. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளே மாணவர்களை பிராந்திய ரீதியாக வகைப்படுத்தி.. பிரிவினை காட்டி வருகின்றனர். ஆனால் ஒன்றுக்கு 5 மடங்காக பணத்தைப் புடுங்கிக் கொள்கின்றனர்..! :icon_mrgreen:

மாணவர் கடனையும் ஓவர் டாப்ற் ம் பட்டதாரிகள் கடன்களையும் எடுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தால் எவ்வளவு காலத்திற்கு தான் அவங்கள் தாறது...... எனக்கு தெரிந்த ஒரு இந்திய வைத்தியர் இங்கு மேற் படிப்புக்கு வந்தார்...போகும் போது கடன் அட்டை கடன் எதுவும் திரும்ப செலுத்தாமல் சென்று விட்டார்... நோர்வேயை விட அதிகமாக கடன் வசதிகளை கொடுத்தது தான் பிரித்தானியா.. கெடுத்தது நம்மாட்கள் தானே? இதுவே ஒரு 15 வருடங்களின் முன்னர் நீங்கள் படிக்க போகின்றீர்கள் என்று சொன்னால் .. வங்கிகள் குறைந்த வட்டியில் ஏன் வட்டி கூட இல்லாமல் கடன் கொடுத்திருப்பார்கள்... இப்போ??? யார் காரணம்???? எம்ம மக்களா பிரித்தானிய அரசாங்கமா? நான் அறிந்த அனைத்து இந்திய மாணவர்களும் திரும்ப போகும் போது கடன் அட்டை, கடன் எதையும் திரும்ம செலுத்தியதே இல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5 மடங்காக புடுங்குகின்றார்கள் என்றால்...புடுங்காத இடத்திற்கு போக வேண்டியது தானே.... 5 மடங்காக புடுங்குகின்றார்கள் என்றால.. நீங்கள் 5 மடங்கு அவர்களை பாவிக்க வேண்டியது தானே...

Link to comment
Share on other sites

FOB= fresh off the board அய் fresh on board எண்டு விளக்கம் கொடுக்கிற விழக்கெண்ணையளில ஒரு இது இருக்கிறதில தப்பே இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.