Jump to content

பயம் – மதம் – பகுத்தறிவு – பரிணாமம்


Recommended Posts

ச.சச்சிதானந்தம்

“உலகமும் உயிரினமும் மனிதனும் கடவுளின் படைப்பு” என்பது கடவுள் கோட்பாட்டு மதங்கள் எல்லாவற்றினதும் கருத்து. ஆனால் பலகோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உயிரினங்கள் தோன்றின என்பது அறிவியல் முடிவு. “ ஏன்” என்ற கேள்விக்கு சிந்தனை பகுத்தறிவு, ஆராய்ச்சி போன்ற வழிகள் மூலம் பெற்ற விடை அறிவியல் முடிவுக்கும், “ அப்படித்தான்” என்று அறியாமையின் விளைவான நம்பிக்கையில் உண்டான மதக் கருத்துக்கும் அடிப்படைகள் ஆகின்றன.

மனிதக் குரங்கிலிருந்து வந்த காட்டு மனிதன் வேட்டையாடுவதும், உணவைத் தேடுவதுமாக வாழ்ந்து கொண்டிருந்தான். திறமையும், திட்டமிடுதலும் வேட்டையாடுவதற்கு வேண்டுவனவாக இருந்தன. அவன் தனது அனுபவத்தில் பெற்ற அறிவினால் ஆயுதங்களையும், சிறு கருவிகளையும் கண்டறிந்தான். அவன் சிறு சிறு குழுக்களாக அமைந்து வேட்டையாடிய பின்னர், உணவை குழுவினருடன் பகிர்ந்து கொண்டான். இவ்வாறு கூட்டு வாழ்வாகத் தொடங்கிய வாழ்வு காலப்போக்கில் சமூக வாழ்வாக மாறியது. கூட்டு வாழ்க்கையின் பொருட்டு மனிதர் பரிமாற்றம் இடம் பெற்றது. காலம் செல்ல செல்ல கருத்துப் பரிமாற்றங்களால் கூட்டு வாழ்க்கை வலுப்பெற்றது. வேட்டையாடுதலைத் தொடர்ந்து பயிர்த் தொழில் நடைமுறைக்கு வந்தது.

கடவுள் மனிதனை படைத்தான் என்று கூறிக்கொ்ண்டே மனிதன் கடவுள்களை படைப்பது இன்னமும் முற்றுபெறவில்லை

மனிதன் இவ்வாறு வளர்ச்சி அடைந்து வாழத்தொடங்கியதும் தனக்கு ஆச்சரியமாகவும், புதுமையாகவும் தோன்றியவற்றை எல்லாம் தனக்கும் இயற்கைக்கும் அப்பாற்பட்ட சக்திகளால் உண்டாக்கப்பட்டவை என்று நம்பினான். மனிதன் மீது இயற்கை செலுத்திய ஆதிக்கம் அவனது உணர்வில் பயத்தை உண்டாக்கியது. இவ்வாறு உண்டான நம்பிக்கை, பயம் போன்றவை மனிதனது உணர்வில் ஏதோ ஓர் சக்தி கடவுள் பற்றிய எண்ணங்களைத் தோற்றுவித்து விட்டன. சூரியன், மழை, காற்று, நெருப்பு முதலானவற்றைக் கடவுள் எனக் கருதினான். இயற்கையின் ஆற்றல்மிகு வெளிப்பாடுகளின்போது துணிவிழந்து துணை அற்றவன் ஆனான். வழக்கத்துக்கு மாறான புயலால் அவன் வாழ்வு மற்றும் உடமைகளின் அழிவுகளைக் கண்டபோது, காணும்போது காற்று, மழை முதலியவற்றை கடவுளின் சீற்றத்தால், வெறுப்பால் விளைந்த விளைவுகள் என்று நினைத்தான்.

எனவே அவன் தன்னைத் தானே கடவுளை திருப்திப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொண்டான். வழிபாடுகள் தோன்றின. இவ்வாறுதான் அறிவின் பலவீனத்தால், அறியாமையால் காரண காரியம் தெரியாததால் எழுந்த பயத்தின் அடிப்படையில் கடவுள் நம்பிக்கை உருவானது. கடவுள் நம்பிக்கையினால் மதம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறான எண்ணங்களே பின்னர் உண்டாக்கபட்ட மதக் கோட்பாடுகளுக்கு முன்னோடியாக அமைந்தன.

இவ்வாறாக தோன்றிய மதத்தின் பேரால் சிலர் சமூகத்தில் மதிப்பும், பெருமையும் பெற்று தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இதனால் மனிதனை சுரண்டி வாழும் சுகபோக வாழ்வு அந்த சிலருக்குக் கிடைக்கப்பெற்றது. இக்கொள்கைகளை ஆதரிக்கின்ற கூட்டம் பெருகியதனால் சுரண்டி ருசி கண்ட வர்க்கம் இவற்றைப் பேணிக் காத்து வந்தன

மனிதன் தன்னால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளில் அவன் இயற்கைக்கு மேலான சக்திகளிடம் திரும்பினான். தன் விருப்பு, வெறுப்பு முயற்சிகளில், சிலவேளைகளில் சில இயலாமைகளின் போது தன் உறுதியான எண்ணத்தாலும், எண்ண ஒருமைப்பாட்டாலும் “ முடிக்க முடியும்” என்ற தீர்மானத்திற்கு வந்தான். மனிதன் தன் வாழ்வின் முக்கிய நிலை மாற்றங்களான பிறப்பு, பருவமடைதல், திருமணம், இறப்பு ஆகியவை கடவுளின் விருப்பத்தால் நிகழ்பவை எனவும் நினைத்தான். எனவே, கடவுளது அனைத்து செயல்களும் தூய்மையாக கொண்டாடப்படப் பட வேண்டும் என எண்ணினான். இப்படியான எண்ணங்கள், கருத்துக்களின் விளைவான கடவுள் நம்பிக்கையும், மதக்கோட்பாடுகளும் இயற்கையை விளங்கிக் கொள்ளாமல் தன்னில் நம்பிக்கை இல்லாமல் இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளின் மீதுள்ள நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டவை.

இவ்வாறாக தோன்றிய மதத்தின் பேரால் சிலர் சமூகத்தில் மதிப்பும், பெருமையும் பெற்று தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இதனால் மனிதனை சுரண்டி வாழும் சுகபோக வாழ்வு அந்த சிலருக்குக் கிடைக்கப்பெற்றது. இக்கொள்கைகளை ஆதரிக்கின்ற கூட்டம் பெருகியதனால் சுரண்டி ருசி கண்ட வர்க்கம் இவற்றைப் பேணிக் காத்து வந்தன.

இதனால் மதம் சமூகத்தில் வலிமையான ஆதரவையும் ஆதாரத்தையும் பெற்றது. இவ்வர்க்கத்தினர் மடலாயத் தலைவர்களாகவும், மதத் தலைவைர்களாகவும் ஆனார்கள். இத்தலைவர்கள் சமூகத்தில் செல்வாக்கு பெற்றிருந்தமையால் அரசியலில் ஈடுபடவும், அரசுகளை தம் வசப்படுத்தவும் வலிமை பெற்றிருந்தார்கள். இன்னும் இவ்வாறான நிகழ்வுகள் பரவலாக உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றன.

மனிதனின் ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒவ்வொரு கடவுள் இருக்கிறார் என நினைத்து பல கடவுள்களை வணங்கினான். மடலாயத் தலைவர்களும், மதத் தலைவர்களும் தங்கள் அபிப்பிராயங்கள், சுயநலங்கள் காரணமாகவும் கடவுள்களுக்குள் பிரிவுகளை உண்டாக்கினார்கள். கடவுள் மனிதனைப் படைத்தார் என்று கூறிக்கொண்டு மனிதன் கடவுள்களைப் படைப்பது முற்றுப்பெறவில்லை.

காட்டு மனிதனை தேவை, கூட்டு மனிதன் ஆக்கியது. கூட்டு மனிதனை சிந்தனை, பகுத்தறிவு, துணிவு ஆகியன விஞ்ஞான மனிதன் ஆக்கின. மனிதனின் முன்னேற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் விஞ்ஞான அறிவின் பங்கு அளப்பரியது. விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத நிலையில் மதங்கள் போன்ற சமுதாய இயக்கங்கள் இயற்கை அமைப்புக்களை நிகழ்ச்சிகளை அதாவது உலகம், உயிர் தோன்றியது பற்றி தன்னுடைய வளர்ச்சிக்கு சாதகமாக பல கற்பனைகளைப் பிறப்பித்து விட்டன. இதனால் அறிவுக்கு ஒவ்வாத விஞ்ஞானத்திற்கு எதிரான, மனித வாழ்க்கைக்கு முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்ற எத்தனையோ மூடப்பழக்க வழக்கங்கள், குருட்டு நம்பிக்கைச் செயல்கள், நம்முடைய அறிவு, ஆராய்ச்சி, பணம், நேரம், முயற்சி, முற்போக்கு வளர்ச்சி முதலியவற்றை எல்லாம் அடியோடு கெடுத்துவிடுகின்றன.

மதங்கலவரங்கள் இடம்பெறும் போது இழக்கபட்ட உயிர்களின் எண்ணிக்கையும், அழிக்கபட்ட சொத்துக்களின் அளவும் மனிதனுக்கு மதவெறி வந்தால் மனிதத் தன்மைக்கும் மனித உயிருக்கும் கொடுக்கும் மதிப்பு எவ்வளவு என்பது விளங்கும். “பக்தி வந்தால் புத்தி போய்விடும், புத்தி வந்தால் பக்தி போய்விடும்.

உலக வரலாற்றில் மதங்களின் தோற்றத்தை நோக்கும் போது, பழைய மதங்களின் மறு மலர்ச்சியாகவே புதிய மதங்கள் தோன்றியதைப் பார்க்கலாம். மேலும் மனிதர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து அபிப்பிராய வேறுபாடுகளினால் மதங்களில் பல பிரிவுகள் ஏற்படலாயின. ஒவ்வொரு மதக்காரனும் தன் மதம் மூலமாகத்தான் மக்கள் முழுவதும் மோட்சத்திற்கு போக முடியும் என்றும், தன் தன் மதத்தலைவைர் தான் கடவுள் மகன், கடவுள் தூதன், கடவுள் அவதாரம் என்றும் சொல்லித் திரிகின்றான். இவர்களில் யார் உண்மையானவர்களாக இருக்க முடியும் என்று கண்டு பிடிக்க முடிவதில்லை. ஒவ்வொரு மதக்காரனும் அவனவன் மதத்தை நம்பாதவனுக்கு பாவம் என்றும், மோட்சம் இல்லை என்றும் சொல்லக்கேட்கிறோம். மனிதனாகப் பிறந்தவன் இந்த மதங்களுக்காக எத்தனை நரகத்திற்குப் போய் வருவது?

மக்களின் நலத்திற்காக ஒழுக்கத்தைப் போதிப்பதற்காகவும், உலகத்தில் நியாயத்தை நிலை நாட்டவும் மதம் உருவானதாகவும், அவற்றிற்கு கடவுள் ஒருவர் இருக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகின்றது. பல இனிப்பான, அழகான, செல்வாக்கான வார்த்தைகளை எடுத்துக் காட்டுகிறார்கள். மதவாதிகளை கூறுவதுபோல் சொல்கின்ற ஒழுக்க விதிகளின்படி யார் ஒழுகுகிறார்கள்?

கடவுள் சொன்னபடி மதக் கோட்பாடுகளின்படி யார் நடந்து கொள்கிறார்கள்?

மதங்களைப் போதிக்கின்றவர்களாவது அவர்கள் கூறும் ஒழுக்க விதிகள், கட்டுப்பாடுகளின் படி வாழ்ந்திருப்பார்களா?

“அன்பே சிவம்” என்பவர்களும்

“ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு” என்பவர்களும்

“அன்பே கடவுள்” என்று சொல்பவர்களும்

“கடவுள் இல்லை” என்று சொன்னதும் தன்னை இல்லை என்று சொன்னமாதிரியான கோபத்தில்

“ஊருக்குபதேசம் உனக்கில்லையடி பெண்டாட்டி” என்பது போல் சீறாமல் ஆத்திரப்படாமல் இருக்கிறார்களா?

“ஒரு மனிதனின் நல்ல பண்புகள் அவன் கொண்டுள்ள மத நம்பிக்கையின் அளவுக்கு எதிர் விகிதத்தில் மாறும்” தத்துவ மேதை பேர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறியது நடைமுறையில் பலரிடம் காணக்கூடியதே.வாழ்க்கையில் இருந்து வரும் பழக்க வழக்கங்கள், மூட பக்தி, குருட்டு நம்பிக்கைகள் போன்றவைகள் எல்லாம் மதம், கடவுள், பாவபுண்ணியம், மோட்ச நரகம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டே நடைபெற்று வருகின்றன. எந்த ஒரு காலத்திலும் எவ்வளவுக்கெவ்வளவு மத உணர்ச்சி அதிக தீவிரமாகவும், மதத்தில் மக்களுடைய பிடிவாதமான நம்பிக்கை அதிகமாகவும் இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு உலகில் கொடுமையும் மிகவும் மோசமான நிலையும் இருந்திருக்கின்றன. இதற்கது மதக் கலவரங்களைக் கூறலாம். மதங்கலவரங்கள் இடம்பெறும் போது இழக்கபட்ட உயிர்களின் எண்ணிக்கையும், அழிக்கபட்ட சொத்துக்களின் அளவும் மனிதனுக்கு மதவெறி வந்தால் மனிதத் தன்மைக்கும் மனித உயிருக்கும் கொடுக்கும் மதிப்பு எவ்வளவு என்பது விளங்கும். “பக்தி வந்தால் புத்தி போய்விடும், புத்தி வந்தால் பக்தி போய்விடும் என பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை.

ஒரு காலத்தில் மத்தலைவர்கள் கூறுவதுதான் வேதம். அவர்கள் கூறும் வேதம் தான் அறிவியல் என்றிருந்தது. ஆனால் காலப்போக்கில் மதத்தலைவர்களின் கற்பனைக் கட்டுப்பாட்டுக் கதைகள் துணிவான சில சிந்தனையாளர்களால் பொய்யாக்கபட்டன. பூமித்தட்டையானது என பைபிளில் சொல்லப்பட்டிருகின்றது. ஆனால் பூமி உருண்டையானது. பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று கோபெர்னிக்கசும் பிறகு வாதிட்ட கலிலியோவுக்கு வயதான கிழவர் என்றுகூட இரக்கப்படாமல் சிறைத்தண்டனை வழங்கியது இங்குயிஸிஸன் (Inguisition) திருச்சபை.

மனிதனின் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும் காரணம் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கடவுள் என்றும், சக்தி என்றும் , கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், அவற்றிற்கு காரணகாரியம் தோன்றிய பின்பு அந்த நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் நோய்கள் என்றும், சூரிய கிரகணம் சூரியனை விழுங்குவது என்றும், பெண்களுக்கு மாதவிலக்கு வருவது கடவுளின் சினத்தால் என்றெல்லாம் என்றெல்லாம் பல மாதிரியான நம்பிக்கை வைத்திருந்தார்கள். (இன்னும் அவ்வாறு நம்பி வருபவர்களும் உண்டு)அம்மை போடும் நோய்கள் வைரசுகளால் வரும் தொற்று நோய்கள் என அறிகிற போது அம்மனுக்கு செய்யும் படையல் பொங்கல் குறைந்து விட்டன.

மனிதனின் நல்ல பண்புகள் கொண்டுள்ள மத நம்பிக்கையின் அளவுக்கு எதிர் விகிதத்தில் மாறும் - தத்துவமேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்

பூமி சூரியன் அவற்றின் இயக்கம், அதன் கால அளவுகளைக் கண்டு பிடித்தது தெரியவந்தபின்னர் சூரியன் கடவுள்களும் இல்லை சூரியனை இராகு பாம்பு கடிப்பதில்லை எனவும் ஒரு தெளிவு ஏற்பட்டது. மாதவிலக்கானது பெண்கள் பருவமடைந்த பின்னர் இரு சூலகங்களிருந்தும் ஒன்று விட்ட 28 நாட்களுக்கு ஒரு முறை விடும் சூல், கருக்கட்டலுக்கு உட்படாததால் அச்சூலும் அதன் கூட காணப்பட்ட பகுதிகளிலிருந்து சில கலங்களும் சிதைவடைந்து இரத்தத்துடன் வெளியேறுகிறது. இதனால் மாதவிலக்கு ஏற்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளப்பட்டது

அறிவும் ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சி குறைந்து கொண்டே போகும்.எதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் எனவே, அண்டத்திற்கும் ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்தக் கர்த்தாவே கடவுள் என்றும், கடவுள் எல்லாவற்றுக்கும் மேலான சக்தி என்றும் பல காலமாக பரவலாக காரணம் காட்டப்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் இந்த உலகில் நாம் வாழ்வதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்டிருக்கிறது. எனும் அமைப்பு திட்ட வாதத்தையும் கடவுள் நம்பிக்கைக்காரர்களும் வாதிடுகின்றார்கள். இந்த வாதம் மூக்குக்கண்ணாடி போட்டுக்கொள்ளவே மூக்கு என்று சொல்வது போல் வேடிக்கையானது. உயிரினங்களுக்கு ஏற்றதாக இடத்தில் நிலைமைகள் அமைவதில்லை. ஆனால் உயிரினங்கள் இடத்திற்கு தக்கவாறு வளருகின்றன. உயிரினங்கள் அவை வாழும் இடத்திற்கேற்ப உடலமைப்பு பெற்றிருக்கின்றன.

இந்த அண்டத்தில் பெருஞ் சக்திகளாக அணுக்கருச்சக்தி (Nuclear Energy) ஈர்ப்புச்சக்தி, (Cravitional Energy) , மின் காந்த சக்தி,(Electro Magnectic) கதிரியக்கச்சக்தி,(Radio Activity) என்பனவற்றை விஞ்ஞானத்தில் குறிப்பிடுவர். மேலும் பொருளின் நிலையைப் பொறுத்து இயக்கப்பண்புச்சக்தியாகவும், நிலைப்பண்புச்சக்தியாகவும் ஒவ்வொரு வடிவில் ஒவ்வொரு சக்தியும் செயற்படுகின்றன.

படைப்பு என்பது இன்மையிலிருந்து உண்டாக்கபடல் என்ற பொருளை உடையது. ஆனால் இல்லாத ஒன்றிலிருந்து எதுவும் உண்டாக முடியாது என்றும், உள்ள பொருளிலிருந்தே எதுவும் காலப்போக்கில் உருமாறி உருமலர்ச்சி (Evolution) பெற்றுத் தோற்றம் அளிக்கும் என்பதே அறிவியல். சார்ல்ஸ் டாவினின் பரிணாமக்கொள்கையின் படி ஒரு கல உயிர் கால ஓட்டத்தில் பல கலமுள்ள உயிராகிப் பெருகி வளர்ந்து மென்மேலும் உயர்ந்த நிலைகளுக்கு மாறிக் கடைசியில் மனித உருவம் தோன்றியுள்ளது.

சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மாபெரும் பெருவெடிப்பின் (Big Bang) காரணமாகப் இப்பேரண்டம் (Universe) தோன்றியது. எங்கும் பரவியிருந்த நைதரசன் நெருப்புக்கோளமாக ஆகி பல இலட்சக்கணக்கான கிலோமீற்றர் விட்டம் கொண்டதாக அமைந்து வெப்பம் தாங்க முடியாமல் பேரொலியுடன் வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய துண்டங்கள் அண்டங்கள் (Galaxy) ஆகியன, இவ்வண்டங்களின் நட்சத்திரக்கூட்டங்களாகவும் ஆகின. சூரியன் 5500 c பாகை வெப்பநிலை உடைய ஒரு நட்சத்திரமே. சூரியனை விட பலமடங்கு பெரிய நட்சத்திரங்களாக அந்தரேல் (Antares) பெரேல்கூஸ் (Betegeuse) ஆர்க்துருஸ் (Arctturus) ஆகியன உள்ளன.

460 கோடி ஆண்டுகளுக்கு முன் நட்சத்திரங்களுக்கு இடையிலான வாயுவும், தூசியும் சுருங்கி, செறிந்து இயக்க விளைவினால் பூமி தோன்றியது. “பிரம்மா பூமியைப் படைத்தர் “ என்றும் ஆதி நிலைத் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்றும் சொல்லப்பட்டும் வருபவை பொய்யாகின்றன. பூமியின் போர்வையான வளி மண்டலத்தில் நைதரசன், அமோனியா, மிதேன், நீராவி முதலான மூலக்கூறுகள் ஓயாது பெய்த பெருமழையின் வாயிலாக புவியின் பரப்பில் இருந்த கடல்களில் கரைந்து கலந்தன. இவ்வாறு கல்லில் கரைந்த மூலக்கூறுகள் சூரிய வெப்பம், மின்னல் புற ஊதா கதிர் வீச்சு முதலியவற்றால் இரசாயனத்தாக்கத்திற்கு உள்ளாகி அவற்றிலிருந்து அமினா அமிலங்களும் , அமினோ அமிலங்களிலிருந்து புரதங்களும் உருவாகி அவை பின் கலவுருவாகி (Protoplasm) காலப்போக்கில் ஒரு கல் (monocell) உயிர்கள் ஆகின. உயிரினங்களின் உடலமைப்பியல், தொழிலியல் அடிப்படை அலகு கலம் (Cell) ஆகும். கலங்களில் சுவாசம் நிகழ்வதால் பல இரசாயனத்தாக்கங்கள் கலங்களில் நிகழ்கின்றன. தொடரும் இரசாயனத்தாக்கங்களால் உயிரினங்கள் வாழுகின்றன. வளருகின்றன. பெருகுகின்றன.

எளிமையான அமைப்புடன் தோன்றிய உயிரினங்களில் படிப்படியாக ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகவே புதிய உயிரினங்கள் தோன்றியுள்ளன. தற்போது காணப்படுகின்ற உயிரினங்கள் பல தொடக்க காலத்தில் இருந்திருக்கவில்லை. இவையெல்லாம் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியால் உருவானவையே. பரிணாம வளர்சியின் உச்ச நிலையே மனிதன்.

(மார்ச் 1997 ல் வெளிவந்த "பாலம்" சஞ்சிகையில் பிரசுரிக்கபட்ட இக்கட்டுரை கட்டுரையின் முக்கியத்துவத்தையொட்டி முரசத்தில் மீள்பிரசுரமாகிறது. பாலம் சஞ்சிகைக்கும் கட்டுரையாளர்

ச. சச்சிதானதந்த்திற்கும் எமது நன்றிகள்.)

http://swissmurasam.info/content/view/9513/31/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மாபெரும் பெருவெடிப்பின் (Big Bang) காரணமாகப் இப்பேரண்டம் (Universe) தோன்றியது. எங்கும் பரவியிருந்த நைதரசன் நெருப்புக்கோளமாக ஆகி பல இலட்சக்கணக்கான கிலோமீற்றர் விட்டம் கொண்டதாக அமைந்து வெப்பம் தாங்க முடியாமல் பேரொலியுடன் வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய துண்டங்கள் அண்டங்கள் (Galaxy) ஆகியன, இவ்வண்டங்களின் நட்சத்திரக்கூட்டங்களாகவும் ஆகின. சூரியன் 5500 c பாகை வெப்பநிலை உடைய ஒரு நட்சத்திரமே. சூரியனை விட பலமடங்கு பெரிய நட்சத்திரங்களாக அந்தரேல் (Antares) பெரேல்கூஸ் (Betegeuse) ஆர்க்துருஸ் (Arctturus) ஆகியன உள்ளன.

மதவாதிகள் எதை மையமாக வைத்துக் கடவுளை உருவகிக்கிறார்களோ.. அங்கேதான் அறிவியலும் தேடிக் கொண்டிருக்கிறது. விடைதான் கிடைக்கவில்லை..??!

சச்சிதானந்தம் அறிவியலூடாக ஏதோ பெருவெடிப்பு பேரண்டம் நைதரசன்.. மெதேன்.. என்று அழகாக எழுதிய திருப்தியில் ஏதோ புதுவித கண்டுபிடிப்பை கண்டுபிடித்துவிட்டு கடவுளின் இருப்புக்கான மனிதனின் காரணப்படுத்தலை முறியடித்த சந்தோசத்தில் நிம்மதியாக உறங்கி இருக்கக் கூடும். ஆனால் கேள்வி ஒன்று இன்னும் நிலைத்திருக்கிறது.. அந்தப் பிரபஞ்சம் உருவாக நடந்த வெடிப்புக்கான காரணிகள் எங்கிருந்து வந்தன.. யார் உருவாக்கினார்கள்..??! என்பதே அந்தக் கேள்வி..!

அறிவியல் பெருவெடிப்புப் பற்றிப் பேசுகிறது.. பேரண்டம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அந்தப் பேரண்டத்தை ஆக்க நடந்த வெடிப்பு ஏன் நடந்தது... அது நடக்கக் காரணமாக இருந்த கூறுகள் எப்படி உருவாகின.. பலவிதமான சக்திகள்.. இங்கு வியாபித்திருக்கின்றனவே.. அவற்றின் ஆதிமுதல் எது..???! என்பது போன்ற கேள்விகள்.. இன்னும் விடைகாண முடியாமல்..???!

அந்த வகையில்.. மதவாதத்தை வெறும் பெரு வெடிப்பு.. பேரண்ட அறிவியலை வைச்சு.. முடிவு கட்டலாம் என்பது சச்சிதானந்தத்தின் அறியாமை என்றே கொள்ள வேண்டும்.

மனிதன் பகுத்தறிய இயற்கையின் எல்லை என்பது இன்னும் பல மடங்கு பரந்து விரிந்தே கிடக்கிறது. அறிவியலில் ஆகட்டும் அங்கும் இதுவே உண்மை..!

எவ்வளவோ கணணிகள் தொழிற்பட.. நுட்பமாக திட்ட்மிட்டு மனிதன் வடிவமைத்த பெருவெடிப்புச் சோதனை என்பது கூட.. இயற்கையின் கூறை மோதவிடுதலில் தான் தங்கி இருக்கிறது. அதிலிருந்து பிறக்கும்.. அறிவியல் கூட இயற்கையைப் பற்றியதானதாகத்தான் இருந்திருக்கும். ஆனால்.. அதைக் கூட மனிதனால் திருத்திகரமாகச் செய்ய முடியவில்லை. பெருவெடிப்புச் சோதனை தொழில்நுட்பக் கோளாறால்.. பல மாதங்களுக்கு பின்போடப்பட்டுள்ளன..??!

மனிதனே திக்குமுக்காடும் இவ்வளவு நுட்பமான அறிவியல்.. எப்படி.. 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பால் வெளிப்பட்டது..??! அந்த அறிவியலின் மூலகர்த்தா யார்..???! யார் இந்த இயற்கையின் ஆரம்ப அலகின் மூலம்.. அந்த மூலத்தின் மூலம் யார்..???! கேள்வி சங்கிலிக் கோர்வையாகிறதே தவிர.. விடை..???!

இடைநிலையில் இருந்தும் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது.. பெருவெடிப்பு.. பேரண்டம்.. ஒரே ஆரம்பக் கூறில் இருந்து பிறத்தன என்ற கருதுகோளின் கீழ்.. அதேன் பரினாம வளர்ச்சி பூமியை மையப்படுத்தி மனிதனோடு மட்டும் நின்று கொள்கிறது. கோடான கோடி நடச்சத்திரங்களையும் கோள்களையும் பிரசவித்த அந்தப் பெருவெடிப்புக்குப் பின்னான உயிரியல் பரினாம வளர்ச்சி ஏன் பூமியில் மட்டும்.. இனங்காணப்படுகிறது.. வேறேங்கும் ஏன் மனிதன் போன்ற திறன்மிக்க அல்லது அவனை விடத்திறன் மிக்க பரினாம வளர்ச்சி இனங்காணப்படவில்லை..??! அல்லது அதை இனங்காணும் அளவுக்கு மனிதன் பரினாம வளர்ச்சியடையவில்லையா..??! அப்படி இருக்க இதுதான் பரினாம வளர்ச்சி என்று முடிவை எப்படி முன் வைக்கிறார்கள்... இந்த பந்தி எழுத்தாளர்கள்.

அறிவியலாளர்களே ஒரு தீர்க்கமான முடிவை எட்ட முடியாத நிலையில் உள்ள விடயத்துள் சச்சிதானந்த்தம் போன்றவர்கள் அரைகுறை விளக்கங்களோடு நுழைந்து கட்டுரை படைப்பதிலும்.. மக்களுக்கு சரியான அறிவியல் பாதையை இனங்காட்டுவதே மதக் கோட்பாடுகளை மனிதன் தேடிச் செல்வதிலின்றும் ஓரளவுக்கு அவனை அறிவியல் மயப்படுத்தும்..! :lol:

Link to comment
Share on other sites

மதவாதிகள் எதை மையமாக வைத்துக் கடவுளை உருவகிக்கிறார்களோ.

மதவாதிகள் எதை மையமாக வைத்து கடவுளை உருவாக்கினார்கள்?

. அங்கேதான் அறிவியலும் தேடிக் கொண்டிருக்கிறது.

எங்கே தான் அறிவியல் தெடிக் கொண்டிருக்கிறது?

அப்படி இருக்க இதுதான் பரினாம வளர்ச்சி என்று முடிவை எப்படி முன் வைக்கிறார்கள்... இந்த பந்தி எழுத்தாளர்கள்.

பரிணாமம் என்ன்னும் கோட்பாட்டை பந்தி எழுத்தாளர் முன் வைக்கவில்லை, டார்வினின் பரிணமக் கோட்பாடு முன் வைக்கிறது.அதற்கான பல ஆதாரங்கள் அறிவியலின் எல்லாத் துறையிலும் இருக்கின்றன.

அறிவியலாளர்களே ஒரு தீர்க்கமான முடிவை எட்ட முடியாத நிலையில் உள்ள விடயத்துள் சச்சிதானந்த்தம் போன்றவர்கள் அரைகுறை விளக்கங்களோடு நுழைந்து கட்டுரை படைப்பதிலும்..

சச்சிதானந்தம் அவர்களின் கட்டுரையில் இருக்கும் அரை குறை விளக்கங்கள் என்ன என்ன?

அறிவியலாளர்கள் இதுவரை கண்டு அறிந்தவற்றை அடிப்படையாக வைத்தே சச்சிதானந்தம் அவர்கள் தனது கட்டுரையை எழுதி உள்ளார்.

மக்களுக்கு சரியான அறிவியல் பாதையை இனங்காட்டுவதே மதக் கோட்பாடுகளை மனிதன் தேடிச் செல்வதிலின்றும் ஓரளவுக்கு அவனை அறிவியல் மயப்படுத்தும்..! :lol:

மக்களிற்கான சரியான அறிவியற் பாதை என்ன?

மக்கள் மதங்களைத் தேடிச் செல்லாதிருக்க அவர்களை அறிவியல் மயப்படுதப்பட வேண்டும் என்றால் மதங்களுக்கும் அறிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் ,மக்கள் மதங்களை நோக்கிச் செல்லாதிருக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். நல்ல வரவேற்கத்தக்க நோக்கம் தான் ஆனால் உங்கள் அனேகமான கருத்தாடல்கள் மதங்களுக்கு அறிவியற் சாயம் பூசி போலியான அறிவியலாக இருந்து வந்துள்ளது.இப்போது அவ்வாறு இல்லை என்றால் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதவாதிகள் எதை மையமாக வைத்து கடவுளை உருவாக்கினார்கள்?

இயற்கையை மையமாக வைத்துக் கடவுளை உருவாக்குகிறார்கள். இயற்கைக்கு அப்பால் அல்ல..!

எங்கே தான் அறிவியல் தெடிக் கொண்டிருக்கிறது?

அறிவியலும் அதே இயற்கைக்குள் தான் விளக்கம் தேடிக் கொண்டிருக்கிறதே தவிர அறிவியல் இயற்கை தொடர்பில் எதனையும் புதிதாக ஆக்கிக் காட்டிடவில்லை..! உள்ளதையே வேறு வேறு வடிவங்களுக்கு மாற்றியுள்ளது..!

பரிணாமம் என்ன்னும் கோட்பாட்டை பந்தி எழுத்தாளர் முன் வைக்கவில்லை, டார்வினின் பரிணமக் கோட்பாடு முன் வைக்கிறது.அதற்கான பல ஆதாரங்கள் அறிவியலின் எல்லாத் துறையிலும் இருக்கின்றன.

கேள்வியே அடிப்படையில் ஒரு பெருவெடிப்பில் உருவான அகிலத்தில் டார்வினின் கோட்பாடு.. பூமிக்குள் மட்டும் சரி வந்ததா என்பதுதான். ஏன் இதே கூர்ப்பு.. பிற இடங்களில்.. இல்லாமல்.. போனது..???! அறிவியல் லாமார்க்கின் கொள்கையையும் தான் கொண்டிருக்கிறது. கோட்பாடுகள் விதிகள் அல்ல. முடிந்த முடிவுகளும் அல்ல. டார்வினைக் கட்டிக்கொண்டே இருப்பதற்கு. அதைக் கடந்தும் போக வேண்டிய நிலை இருக்கிறது.

சச்சிதானந்தம் அவர்களின் கட்டுரையில் இருக்கும் அரை குறை விளக்கங்கள் என்ன என்ன?

அறிவியலாளர்கள் இதுவரை கண்டு அறிந்தவற்றை அடிப்படையாக வைத்தே சச்சிதானந்தம் அவர்கள் தனது கட்டுரையை எழுதி உள்ளார்.

சச்சிதானந்தம் அறிவியல் பதங்களைப் பாவித்திருக்கிறாரே தவிர அவருடைய விளக்கங்கள் தவறானவை.

ஒரு சிறிய உதாரணம்:

இந்த விளக்கம் அறிவியல் மயமாக இதைப் பற்றி அறிவியல் ரீதியாக அறியாதவர்களுக்குத் தெரியலாம். ஆனால் உண்மையில் சாதாரண விஞ்ஞான அறிவுள்ள மாணவனுக்கே தெரியும்.. சூல் ஒரு தனிக்கலம் என்பதும்.. அதனுடன் வேறு கலங்கள் காணப்படுவதில்லை என்பதும்.. உண்மையில் சூல் அழிவடைவதால் இரத்தம் வருவதில்லை. மாறாக கருப்பையின் அக மேலணி அழிவடைந்து அடுத்த வட்டத்துக்கு தயார் ஆவதால்.. தான் அவ்வாறு நிகழ்கிறது என்பதும் அறிவியல் உண்மை. இந்த எளிமையான விடயத்திலேயே திரிபுகள்.. இவ்வாறு பல..!

இவ்வாறே சச்சிதானந்தம் அழகாக அறிவியல் சொற்களைக் கொண்டு புனையிடல் செய்திருக்கிறார். குறிப்பிட்ட சச்சிதானந்தம் பகிரங்கமாக இதற்கு ஆதாரம் சமர்ப்பிப்பாரா. எந்த அறிவியல் நூலில் சூல்களும் அதனுடன் கூடிய கலங்களும் சிதைவடைவதால் தான் மாதவிடாயில் இரத்தப் போக்கு ஏற்படுகிறது என்பதற்கு..??! :lol::lol:

மக்களிற்கான சரியான அறிவியற் பாதை என்ன?

மக்கள் மதங்களைத் தேடிச் செல்லாதிருக்க அவர்களை அறிவியல் மயப்படுதப்பட வேண்டும் என்றால் மதங்களுக்கும் அறிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் ,மக்கள் மதங்களை நோக்கிச் செல்லாதிருக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். நல்ல வரவேற்கத்தக்க நோக்கம் தான் ஆனால் உங்கள் அனேகமான கருத்தாடல்கள் மதங்களுக்கு அறிவியற் சாயம் பூசி போலியான அறிவியலாக இருந்து வந்துள்ளது.இப்போது அவ்வாறு இல்லை என்றால் மகிழ்ச்சி.

அறிவியலையே சரியாக இனங்காட்டாத இக்கட்டுரை... எவ்வாறு மிக ஆழமான அறிவியலால் காணப்பட்ட வேண்டிய கடவுள் நம்பிக்கைக்கு எதிரான வலுவான கருத்துக்கு வலுச்ச்சேர்க்கும். எனவே கடவுள் நம்பிக்கையை கட்டுரையால் வெட்டி வீழ்த்துகிறேன் என்று விட்டு மக்களுக்கு அறிவியலைக் கூட தவறாக இனங்காட்டுதல்.. சரியான அறிவியற்பாதையன்று..! :lol:

இவ்வளவ்வற்றையும் விளங்கிக் கொள்ளத் தகுதியற்று கேள்வி கேட்பதில் பிரயோசனமில்லை. :lol:

Link to comment
Share on other sites

//இயற்கையை மையமாக வைத்துக் கடவுளை உருவாக்குகிறார்கள். இயற்கைக்கு அப்பால் அல்ல..!//

இயற்கை என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன? இயற்கைக்கு அப்பால் என்றால் என்ன?

//

கேள்வியே அடிப்படையில் ஒரு பெருவெடிப்பில் உருவான அகிலத்தில் டார்வினின் கோட்பாடு.. பூமிக்குள் மட்டும் சரி வந்ததா என்பதுதான். ஏன் இதே கூர்ப்பு.. பிற இடங்களில்.. இல்லாமல்.. போனது..???! //

கூர்ப்பு பூமியில் நிகழ்ந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் இருக்கின்றன.வேறு இடங்களிலும் அவ்வாறே நிகழ்ந்துள்ளதா இல்லையா என்று தெரியாத போது வேறு இடங்களில் நிகழவில்லை என்று சொல்ல முடியாது.பெரு வெடிப்பின் பின் உருவான ஒவ்வொரு கோளும் மண்டலங்களும் ஏன் வெவ்வேறானவையாக இருக்கின்றன? வேவ் வேறானவற்றில் இருந்து வெவ்வேறான விளைவுகளே வெளி வரும்.எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான தொடர் நிகழ்வுகள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு.பூமியில் ஏற்பட்ட சூழல் உயிரிகள் உருவாவதற்குத் தகுந்ததாக இருந்தது.

//அறிவியல் லாமார்க்கின் கொள்கையையும் தான் கொண்டிருக்கிறது. கோட்பாடுகள் விதிகள் அல்ல. முடிந்த முடிவுகளும் அல்ல. டார்வினைக் கட்டிக்கொண்டே இருப்பதற்கு. அதைக் கடந்தும் போக வேண்டிய நிலை இருக்கிறது. //

டார்வினைக் கடந்து போவதற்கான அறிவியல் சான்றுகளோ கோட்பாடுகளோ இன்று வரை இல்லை.அப்படி இருந்தால் கடந்து போகலாம்.

//சூல் ஒரு தனிக்கலம் என்பதும்.. அதனுடன் வேறு கலங்கள் காணப்படுவதில்லை என்பதும்.. உண்மையில் சூல் அழிவடைவதால் இரத்தம் வருவதில்லை. மாறாக கருப்பையின் அக மேலணி அழிவடைந்து அடுத்த வட்டத்துக்கு தயார் ஆவதால்.. தான் அவ்வாறு நிகழ்கிறது என்பதும் அறிவியல் உண்மை//

மேலே சொன்னதற்க்கும்,

//அச்சூலும் அதன் கூட காணப்பட்ட பகுதிகளிலிருந்து சில கலங்களும் சிதைவடைந்து இரத்தத்துடன் வெளியேறுகிறது.//

என்று சச்சிதனந்தம் எழுதியதற்குமான வேறு பாடு என்ன என்பது எனக்கு விளங்கவில்லை? சூலும் அதன் கூட காணப்பட்ட சில கலங்களும் சிதைவடைந்து என்று சொல்வதற்கும், கருப்பையின் அக மேலணி அழிவடைவதற்கும் என்ன வேறு பாடு? அழிவடையும் அக மேலணி சூலுடன் வெளியேறுவது இல்லையா? அக மேலணி கலங்களால் ஆனது இல்லையா?

//இவ்வாறே சச்சிதானந்தம் அழகாக அறிவியல் சொற்களைக் கொண்டு புனையிடல் செய்திருக்கிறார்//

சச்சிதானதம் அவர்கள் எழுதியதில் சில தகவற் பிழைகள் இருக்கலாம், ஆனால் அந்தப் பிழைகளை வைத்துக் கொண்டு அவர் புனைவை எழுதுவதாக் கூறி விட முடியாது.ஏனெனில் அவரின் மையக்கருத்தை இந்த சிறு தகவற் பிழைகள் பாதிக்கப் போவதில்லை.

//அறிவியலையே சரியாக இனங்காட்டாத இக்கட்டுரை... எவ்வாறு மிக ஆழமான அறிவியலால் காணப்பட்ட வேண்டிய கடவுள் நம்பிக்கைக்கு எதிரான வலுவான கருத்துக்கு வலுச்ச்சேர்க்கும். எனவே கடவுள் நம்பிக்கையை கட்டுரையால் வெட்டி வீழ்த்துகிறேன் என்று விட்டு மக்களுக்கு அறிவியலைக் கூட தவறாக இனங்காட்டுதல்.. சரியான அறிவியற்பாதையன்று//

அறிவியலை எங்கே பிழையாக இனம் காட்டி உள்ளார்?

சரி சச்சிதானதால் மதத்தில் இருந்து மக்களை அறிவியலுக்கு அழைத்து வர முடியவில்லை, உங்களது சரியான அறிவியற் பாதை என்ன?

//இவ்வளவ்வற்றையும் விளங்கிக் கொள்ளத் தகுதியற்று கேள்வி கேட்பதில் பிரயோசனமில்லை.//

அரை குறையாக விளக்கம் இன்றி எழுதி விட்டுத் தப்பிக்க முடியாது.அரை குறைப் புரிதல்கள் கேள்வி கேட்டால் வெளி வந்து விடும். பூனை குட்டி வெளியில வரட்டும் என்பதற்காகத் தான் கேள்வி கேட்பது.

எனக்குத் தகுதி இருக்கா விளக்கம் இல்லையா என்பதை உங்களின் இனி வரும் பதில்களில் இருந்து கண்டு கொள்ளலாம்.

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூர்ப்பு பூமியில் நிகழ்ந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் இருக்கின்றன.வேறு இடங்களிலும் அவ்வாறே நிகழ்ந்துள்ளதா இல்லையா என்று தெரியாத போது வேறு இடங்களில் நிகழவில்லை என்று சொல்ல முடியாது.பெரு வெடிப்பின் பின் உருவான ஒவ்வொரு கோளும் மண்டலங்களும் ஏன் வெவ்வேறானவையாக இருக்கின்றன? வேவ் வேறானவற்றில் இருந்து வெவ்வேறான விளைவுகளே வெளி வரும்.எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான தொடர் நிகழ்வுகள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு.பூமியில் ஏற்பட்ட சூழல் உயிரிகள் உருவாவதற்குத் தகுந்ததாக இருந்தது.

ஒரே ஒரு பெரு வெடிப்பில் இருந்து பிரபஞ்சம் தோன்றியதாக சொல்லப்படும் நிலையில்.. பூமியில் மட்டும் கூர்ப்புகள்.. நிகழ்ந்துள்ளன. ஆனால் பல கோடி நட்சத்திரங்களையும் கோள்களையும் கொண்ட இதர இடங்களில் உயிரினம் தோன்றவும் இல்லை.. கூர்ப்பு நடக்கவும் இல்லை.. அதற்கு சான்றில்லை என்பது ??? :lol: பிரபஞ்ச வெடிப்புக்குப் பின்னரான நிகழ்வுகள் எல்லாம் வெவ்வேறானவை என்றால் எப்படி எரிகற்கள் விண்கற்களில் பெறப்பட்ட மாதிரிகளில் பூமியை ஒத்த இரசாயனங்கள் காணப்பட்டுள்ளன. உயிரின் பெரும்பான்மைக் கூறான நீர் கூட இனங்காணப்பட்டுள்ளன.

உயிரியல் கூர்ப்பு இரசாயனக் கூர்ப்பின் தொடர்ச்சி என்பதாகத்தானே ஒபாரினின் உயிரின் உற்பத்தி சொல்கிறது. அப்படி இருக்க.. பூமியில் மட்டும்.. தேர்ந்தெடுத்த கூர்ப்பா நிகழ்ந்துள்ளது..????! இதைத்தானே மதவாதிகளும் சொல்கின்றனர். கடவுள் பூமியில் மனிதனைப் படைத்தார் என்று. நல்ல விண்ணானம் தான்..???! விஞ்ஞானம் அல்ல சச்சிதானந்தம் எழுதிக் கொண்டதும்..??! அதற்கு வழங்கப்படும் வியாக்கியானமும்.

இன்னும் சரிவர நிறுவ முடியாத நிலையில் இருக்கும் கோட்பாடுகளை முழுமை என்பதாக மக்களுக்குக் காட்டுவதே மிகத்தவறான அறிவியல் அணுகுமுறை. அதைச் செய்யும் சச்சிதானந்தம்.. ஏனைய இடங்களில் அறிவியல் தெரியாமலே அறிவியற் சொல் கையாடல் செய்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது..! :lol::lol:

Link to comment
Share on other sites

ஏதோ விளங்காத பாசைல எல்லாம் கதைக்கிறீங்கள்? முதல்லை டாவின் கோட்பாடு என்றால் என்ன என்று விளங்குறமாதிரி சொல்லுங்கோவன்.. பிறகு எனக்குள்ள கிடக்குற சந்தேகங்களை ஒவ்வொண்டா கேக்கிறன்..!! :lol:

Link to comment
Share on other sites

மதங்களுக்கு அறிவியற் சாயம் ஏன் பூசவேண்டும். மதங்களை ஆராய வெளிப்பட்டுத்தான் பகுத்தறிவு என்ற விடயத்தை கண்டுபிடித்தள்ளார்கள். சிரிக்கவேண்டிய விடயம். இவ்வாறான முட்டிக் கொள்ளும் அறிவியல் இல்லாத காலத்திலும் மதங்கள் மக்களை வழிப்படுத்தின. இப்போதும் அதைச் செய்து கொண்டிருக்கின்றன. மதம் ஒரு சமூகச் சட்டம். அதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஆளையாள் மோதிக் கொள்கிறார்கள்.

அறிவியல் எங்கிருந்து தொடங்குகிறது? அதற்குத் தெளிவான விடைகளேதும் உண்டா? அறிவுதான் மதங்களையும் உண்டாக்கியது என்பது எனது கருத்து. மதங்களில் சொல்லப்படாத சமூக அறிவியற் கருத்துக்கள் ஏதும் உண்டா? தான் தெரிந்த அறிவு பற்றிச் சொல்லிவைத்தலைப் பின்பற்றாதவர்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? அப்படிப்பட்ட நிலையில்தான் பிரச்சினைகள் உருவாகின்றன.

அன்பே கடவுள் என்பதிலும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்பதிலும் என்ன குறையுண்டு.? அவைகள் பிழையானவை என்றால் என்ன விதத்தில் என்று விளங்கப்படுத்துங்கள்.

அறிவியல் என்று கூறிக் கொண்டு உண்மையான வாழ்க்கையின் நடவடிக்கைகளை இழக்க வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ விளங்காத பாசைல எல்லாம் கதைக்கிறீங்கள்? முதல்லை டாவின் கோட்பாடு என்றால் என்ன என்று விளங்குறமாதிரி சொல்லுங்கோவன்.. பிறகு எனக்குள்ள கிடக்குற சந்தேகங்களை ஒவ்வொண்டா கேக்கிறன்..!! :lol:

பூமியில் உயிர்கள் எல்லாம் ஒரே அடிப்படைக் கூறில் இருந்தே உருவாகின என்றும் அவை சிக்கல் தன்மை அடைந்தது என்பது இயற்கைத் தேர்வின் விளைவு என்றும் அதுவே உயிரினக் கூர்ப்பு என்றும் டார்வின் கூறியுள்ளார்.

அடிப்படையில் நாம் என்ன இப்பூமியில் உள்ள உயிரினங்கள் எல்லாமே காபன்.. நைதரசன்.. ஒக்சிசன்.. ஐதரசன் கொண்டு ஆக்கப்பட்ட இரசாயனப் பொருட்களே.

பூமியில் தோன்றிய இந்த இரசாயனங்கள் பிற கோள்களிலும் உள்ளன. விண்கற்களிலும் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் உயிரின் இருப்புக்கு இன்னும் சான்று கிடைக்கவில்லை. ஏன் இங்கு ஏற்பட்ட இரசாயனக் கூர்ப்பு.. (எளிமையான மூலகங்கள் சிக்கல் தன்மையான கூறுகளாகி.. அந்தக் கூறுகள் சேர்ந்து கட்டி உருவாக்கியதே ஓர் உயிரினமாகியுள்ளது.. பின்னர் அவையே சிக்கல் தன்மை வாய்ந்த உயிரினங்களாயின என்கிறார் பிரித்தானிய இயற்கையியலாளரான டார்வின்) பிற இடங்களில் ஏற்பட்டதற்கான சான்று இன்னும் கிடைக்கவில்லை.. இயற்கைத் தேர்வின் கீழ் ஏன் அச்சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் தேர்வு செய்யப்படவில்லை.. செய்யப்பட வாய்ப்பிருக்கவில்லை என்பது.. டார்வினின் கொள்கையின் முன் உள்ள கேள்வியும் கூட..??!

அதுமட்டுமன்றி.. இன்றும் பூமியில் எளிமையான உயிரிகள் வெற்றிகரமாக வாழுகின்றன. 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான அதே நிலையில் பக்ரீரியாக்கள் இன்றும் வாழ்கின்றன. அப்படி இருக்க எப்படி இயற்கைக்கு சிக்கல் தன்மையைக் கட்டி வளர்க்க.. தேர்வுகள் செய்ய.. தேவை ஏற்பட்டது..??! எளிமையாக 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் இயற்கையால் தெரிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக வாழ முடிந்த பக்ரீரியாக்கள் இருக்க.. டார்வின் இனங்காட்டும் அந்த அடிப்படை உயிரி ஏன் மனிதனாக சிக்கல் தன்மை அடைய வேண்டி வந்தது..????? பல தனிக்கல உயிரினங்கள் வெற்றிகர வாழ்க்கையை வாழும் நிலையில்.. அவற்றுக்கு ஏன் சிக்கல் தன்மையை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது..??! அதற்கான தூண்டல் என்ன..???! ஏன் அந்தச் சிக்கல் தன்மை இன்று அந்த எளிமையான அங்கிகளில் இருந்து இன்னொரு புதிய வகை மனிதனை உருவாக்க இயற்கை தேர்வு செய்யுதில்லை..??!

தக்கன பிழைக்கும் அல்லன மடியும் என்பதன் கீழ்.. இவ்வாறு எழுந்தமானமாக இயற்கைத் தேர்வின் கீழ் எளிமையான கூறுகளில் இருந்து சிக்கலான உயிரினங்கள் உருவானதாக டார்வினின் கோட்பாடு சொல்கிறது. ஆனால்.. அக்கோட்பாட்டுக்குப் பின்னால் பல துலங்க முடியாத கேள்விகள் மறைந்தே இருக்கின்றன. :lol:

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் முதலில் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

அதன் பின் டார்வினின் பரினாமக்கோட்பாட்டு பற்றிய கேள்விகளுக்குத் தாவலாம்.

இடையில் வந்து தலைப்புக்குச் சம்பந்தம் அற்ற விடயங்களை எழுதுபவர்கள் இவ்வாறான கருதாடல்களில் எந்தவிதப் பயனும் அற்ற விதத்தில் எழுதி தங்களது பொன்னான் நேரத்தை வீணாக்காமால், வன்னி பங்கருக்க நிக்கிற தங்கட லைனைக் கவனமாகப் பாதுக் கொள்ளும் படி கேட்கப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் Tamilsvoice

இந்தக்கட்டுரையை யாழில் பிரசுரித்ததிற்கு தங்களுக்கு வாழ்த்துக்கள். இப்படியான கட்டுரைகள் எமக்குத்தேவை. எதற்காக? இருட்டில் இருந்து வெளி வருவதற்கு. விஞ்ஞான வழியில் சிந்திப்பதற்கு.

மிகவும் சிறப்பான, அருமையான, உண்மைகளை வெளிக்குக் கொண்டு வந்து சிந்திக்க வைக்கும் கட்டுரை. மேலும் தொடர் இருந்தால் தயவு செய்து இத்தளத்திற்கு அளியுங்கள்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன? இயற்கைக்கு அப்பால் என்றால் என்ன?

இயற்கை என்பது அனைத்தும்..!

(மனிதன் வடிவமைத்துள்ள கணணி கூட இயற்கையின் கூறுகளின்றுதான் ஆக்கப்பட்டுள்ளது. மனிதனாக ஒரு அணுவை உருவாக்கியது கிடையாது. இயற்கையில் உள்ள அணுக்களையே கலந்தடித்து மனிதன் தனக்கு உபயோகமாக்கிக் கொள்கிறான். அது அவனின் திறமை. ஆனால் அவனால் இயற்கைக்குள் நின்றுதான் இன்று வரை செயற்பட முடிகிறது.)

கடவுள் என்பது இயற்கை..!

இயற்கைக்கு அப்பால் எதுவும் இல்லை. சூனியம்..! :lol:

சச்சிதானந்தம்.. பிரமாவை மனிதனாக சிந்தித்து வைத்துக் கொண்டு பிரமா படைக்கவில்லை என்று சொல்லிக் கொள்கிறார். நான் அவரிடம் கேட்கிறேன்.. பெருவெடிப்பு நிகழ்வதற்குரிய காரணிகள் எவ்வாறு எங்கிருந்து உருவாகின. அவ்வெடிப்புக்குரிய கூறுகள் எவ்வாறு தோன்றின..???! நைதரசன் அது இது என்று புலம்புகிறார்.. அந்த நைதரசன் எவ்வாறு உருவானது.. அதை உருவாக்கிய கூறுகளை உருவாக்கியது எது.. கூறுகளை உருவாக்கிய கூறை உருவாக்கியது எது..??! சக்தி என்றால் அந்தச் சக்தியை உருவாக்கியது எது..??!

அறிவியல் என்பது மரத்தின் உச்சியில் இருந்து ஆணி வேரைத் தேடிச் செல்வது போன்றது. மனிதன் இன்னும் மரத்தின் கிளைகளிலேயே தான் அறிவியல் ரீதியாக இயற்கையை விளங்கும் நிலையில் உள்ளான். இயற்கையின் ஆணி வேரை மனிதன் அறிவியல் கொண்டு இன்னும் விளங்க முடியவில்லை.

அடிப்படையில் சக்திதான் திணிவை ஆக்குகிறது என்றால்.. அந்தச் சக்தியின் மூலம் எது..???! எப்படி அந்த மூலச் சக்தி உருவானது..???! அதையே கடவுள் எங்கின்றனர் ஒரு பகுதியினர்.. இன்னொரு பகுதியினரோ சக்தி என்கின்றனர். ஆனால் அடிப்படையில் இருவருக்குமே அது எப்படி உருவானது.. சக்தி என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு இல்லை..!

இதற்குள் சச்சிதானந்தம்.. அரைகுறை அறிவியலால்.. அவியல் செய்வது.. அறிவியல் அல்ல..! அறிவியல் என்ற உச்சரிப்பின் கீழ் அவர் செய்யும் அறிவியல்லாத பித்தலாட்டம்.

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் முதலில் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

அதன் பின் டார்வினின் பரினாமக்கோட்பாட்டு பற்றிய கேள்விகளுக்குத் தாவலாம்.

இடையில் வந்து தலைப்புக்குச் சம்பந்தம் அற்ற விடயங்களை எழுதுபவர்கள் இவ்வாறான கருதாடல்களில் எந்தவிதப் பயனும் அற்ற விதத்தில் எழுதி தங்களது பொன்னான் நேரத்தை வீணாக்காமால், வன்னி பங்கருக்க நிக்கிற தங்கட லைனைக் கவனமாகப் பாதுக் கொள்ளும் படி கேட்கப்படுகிறார்கள்.

வன்னி பங்கருக்குள்ள மக்கள் அவதியுறுகிறார்கள் என்பதற்காக, எழுதப்படும் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமில்லையே.. அங்க வன்னியில் சனம் பரிதவிக்கையில் இந்தக் கருத்தாடலுக்கே அவசியமில்லையே.. டார்வின் கோட்பாட்டை முன்வைத்து இங்கே கருத்தாடல் நிகழ்கிறதென்றால்.. முதலில் அந்த டார்வின் கோட்பாடு என்றால் என்ன என்பதை விளங்கப்படுத்திவிட்டு கருத்தாடலைத் தொடர்வதுதான் முறை.. அல்லது டார்வின் கோட்பாடு தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் இக் கருத்தாடல் என தலைப்பிலேயே குறிப்பிட்டிருந்தால்.. என்னைப் போன்ற கோட்பாடு தெரியாதவர்கள் இதில் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்படாது. :lol:

Link to comment
Share on other sites

வன்னி பங்கருக்குள்ள மக்கள் அவதியுறுகிறார்கள் என்பதற்காக, எழுதப்படும் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமில்லையே.. அங்க வன்னியில் சனம் பரிதவிக்கையில் இந்தக் கருத்தாடலுக்கே அவசியமில்லையே..

டார்வின் கோட்பாட்டை முன்வைத்து இங்கே கருத்தாடல் நிகழ்கிறதென்றால்.. முதலில் அந்த டார்வின் கோட்பாடு என்றால் என்ன என்பதை விளங்கப்படுத்திவிட்டு கருத்தாடலைத் தொடர்வதுதான் முறை.. அல்லது டார்வின் கோட்பாடு தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் இக் கருத்தாடல் என தலைப்பிலேயே குறிப்பிட்டிருந்தால்.. என்னைப் போன்ற கோட்பாடு தெரியாதவர்கள் இதில் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்படாது. :lol:

வன்னியில் மக்கள் பரிதவிகிறார்கள் என்பதால் நீங்கள் யாழ்க் களத்திற்க்கு வராமால் படிக்கமால் எழுதாமல் இருகிறீர்களா? இங்கே பகுத்தறிவைப் பற்றி எழுதப்படும் கருத்துக்களுக்கு மட்டும் வந்து ஏன் வன்னியில் சனம் கஸ்ட்டப்படுதாம் என்று எழுதுவதன் உண்மையான் நோக்கம் என்ன? வன்னியில் சனம் கஸ்ட்டப்படுகிறதாம் என்று பதை பதைப்பவர் உண்மையில் அந்த மக்கல் பற்றிச் சிந்திப்பார் எனில் அதற்க்கான நடவடிக்களைச் செய்வதற்க்கு வன்னிக்குச் செல்ல வேண்டும்.யாழ்க் களத்தில் வந்து மினக் கடக்கூடாது.அவ்வறு மினக் கெட்டுக் கொண்டு இவ்வாறு எழுதுபவர்களின் கரிசனை என்பது போலியானது.

டார்வினின் கோட்பாடு பற்றி நெடுக்கலபோவான் விளக்கி உள்ளார்.அது பற்றி மேலும் தகவல்கல் அறிய இணையத்தை நாடலாம்.

இந்தத் தலைப்பில் திரு சச்சிதானந்தம் எழுதிய கட்டுரையில் அறிவியற் புனைவுகள் இருப்பதாக நெடுக்கலபோவான் எழுதினார் .முதலில் அது உண்மைதான் என்று பார்த்து விடுவோம்.அதன் பின்னர் வேறு கருதாடலுக்குச் செல்லலாம். நான் நெடுக்கலபோவானுக்குச் சொன்னதை உங்களுக்கானதாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

டார்வினின் கோட்பாடு பற்றிய பல நியாயமான கேள்விகளை நெடுக்கலபோவான் எழுதி உள்ளார்.இவற்றிற்கான பதில்கள் இருக்கின்றன ஆறுதலாகவும் விரிவாகவும் எழுத நேரம் வேணும்.அலுவலகத்தில் இருப்பதால் இப்போது எழுத முடியாது.ஆதாரங்களுடன் எழுத நேரம் வேணும்.

Link to comment
Share on other sites

வன்னியில் மக்கள் பரிதவிகிறார்கள் என்பதால் நீங்கள் யாழ்க் களத்திற்க்கு வராமால் படிக்கமால் எழுதாமல் இருகிறீர்களா? இங்கே பகுத்தறிவைப் பற்றி எழுதப்படும் கருத்துக்களுக்கு மட்டும் வந்து ஏன் வன்னியில் சனம் கஸ்ட்டப்படுதாம் என்று எழுதுவதன் உண்மையான் நோக்கம் என்ன? வன்னியில் சனம் கஸ்ட்டப்படுகிறதாம் என்று பதை பதைப்பவர் உண்மையில் அந்த மக்கல் பற்றிச் சிந்திப்பார் எனில் அதற்க்கான நடவடிக்களைச் செய்வதற்க்கு வன்னிக்குச் செல்ல வேண்டும்.யாழ்க் களத்தில் வந்து மினக் கடக்கூடாது.அவ்வறு மினக் கெட்டுக் கொண்டு இவ்வாறு எழுதுபவர்களின் கரிசனை என்பது போலியானது.

டார்வினின் கோட்பாடு பற்றி நெடுக்கலபோவான் விளக்கி உள்ளார்.அது பற்றி மேலும் தகவல்கல் அறிய இணையத்தை நாடலாம்.

இந்தத் தலைப்பில் திரு சச்சிதானந்தம் எழுதிய கட்டுரையில் அறிவியற் புனைவுகள் இருப்பதாக நெடுக்கலபோவான் எழுதினார் .முதலில் அது உண்மைதான் என்று பார்த்து விடுவோம்.அதன் பின்னர் வேறு கருதாடலுக்குச் செல்லலாம். நான் நெடுக்கலபோவானுக்குச் சொன்னதை உங்களுக்கானதாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

டார்வினின் கோட்பாடு பற்றிய பல நியாயமான கேள்விகளை நெடுக்கலபோவான் எழுதி உள்ளார்.இவற்றிற்கான பதில்கள் இருக்கின்றன ஆறுதலாகவும் விரிவாகவும் எழுத நேரம் வேணும்.அலுவலகத்தில் இருப்பதால் இப்போது எழுத முடியாது.ஆதாரங்களுடன் எழுத நேரம் வேணும்.

வன்னி பங்கர் கதையை இங்கு கொண்டு வந்ததே தாங்கள்.. அதற்குப் பதில் எழுதியிருக்கிறேன்.. ஏதாவது ஒரு கருத்தாடல் தங்களுக்கு எதிராக திசை திரும்புகிறதென்றவுடன் தாயகத்தையும் அந்த போட்ட விளைவுகளையும் புகுத்தி கருத்தை திசை திருப்புவது எனது செயலல்ல.. மேலே நான் கட்டம் போட்டுத்தான் பதில் எழுதியுள்ளேன்.. அந்தக் கட்டத்துக்குள் தாங்கள் எழுதிய கருத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.. நீங்கள்தான் பங்கர் லைனுக்கு இங்கே லைன் கொடுத்திருக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

வன்னி பங்கர் கதையை இங்கு கொண்டு வந்ததே தாங்கள்.. அதற்குப் பதில் எழுதியிருக்கிறேன்.. ஏதாவது ஒரு கருத்தாடல் தங்களுக்கு எதிராக திசை திரும்புகிறதென்றவுடன் தாயகத்தையும் அந்த போட்ட விளைவுகளையும் புகுத்தி கருத்தை திசை திருப்புவது எனது செயலல்ல.. மேலே நான் கட்டம் போட்டுத்தான் பதில் எழுதியுள்ளேன்.. அந்தக் கட்டத்துக்குள் தாங்கள் எழுதிய கருத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.. நீங்கள்தான் பங்கர் லைனுக்கு இங்கே லைன் கொடுத்திருக்கிறீங்கள்.

ஓ இப்ப விளங்குது பிரச்சினை.

வழக்கமா பகுத்தறிவு என்று எதாவது தலைப்பை கண்டதும் இல்லை நாரதர் என்று கண்டதும் இடையில வந்து சம்பந்தா சம்பந்தம் அற்று எழுதும் இருவர் வந்து எழுதினார்கள்.அதற்கான பதில் தான் வன்னி பங்கர் லையின் கதை.இபோது அந்தக் கருதுக்கள் இரண்டும் தூக்கப்பட்டு விட்டதால் உங்களுக்கு நான் எழுதினதன் அர்த்தம் விளங்கவில்லை. :lol:

Link to comment
Share on other sites

இயற்கை என்பது அனைத்தும்..!

(மனிதன் வடிவமைத்துள்ள கணணி கூட இயற்கையின் கூறுகளின்றுதான் ஆக்கப்பட்டுள்ளது. மனிதனாக ஒரு அணுவை உருவாக்கியது கிடையாது. இயற்கையில் உள்ள அணுக்களையே கலந்தடித்து மனிதன் தனக்கு உபயோகமாக்கிக் கொள்கிறான். அது அவனின் திறமை. ஆனால் அவனால் இயற்கைக்குள் நின்றுதான் இன்று வரை செயற்பட முடிகிறது.)

கடவுள் என்பது இயற்கை..!

கடவுள் என்பது இயற்கை என்று எங்கே கூறப்படுள்ளது? கடவுள் தான் இயற்கை என்று எவ்வாறு வரையறை செய்கிறீர்கள்?

சச்சிதானந்தம்.. பிரமாவை மனிதனாக சிந்தித்து வைத்துக் கொண்டு பிரமா படைக்கவில்லை என்று சொல்லிக் கொள்கிறார். நான் அவரிடம் கேட்கிறேன்.. பெருவெடிப்பு நிகழ்வதற்குரிய காரணிகள் எவ்வாறு எங்கிருந்து உருவாகின. அவ்வெடிப்புக்குரிய கூறுகள் எவ்வாறு தோன்றின..???! நைதரசன் அது இது என்று புலம்புகிறார்.. அந்த நைதரசன் எவ்வாறு உருவானது.. அதை உருவாக்கிய கூறுகளை உருவாக்கியது எது.. கூறுகளை உருவாக்கிய கூறை உருவாக்கியது எது..??! சக்தி என்றால் அந்தச் சக்தியை உருவாக்கியது எது..??!

நீங்கள் அப்படியாயின் இவை எங்கிருந்து வந்தது என்று சொல்கிறீர்கள்? பிரம்மாவா இவற்றைப் படைத்தார்?

அறிவியல் என்பது மரத்தின் உச்சியில் இருந்து ஆணி வேரைத் தேடிச் செல்வது போன்றது. மனிதன் இன்னும் மரத்தின் கிளைகளிலேயே தான் அறிவியல் ரீதியாக இயற்கையை விளங்கும் நிலையில் உள்ளான். இயற்கையின் ஆணி வேரை மனிதன் அறிவியல் கொண்டு இன்னும் விளங்க முடியவில்லை.

அடிப்படையில் சக்திதான் திணிவை ஆக்குகிறது என்றால்.. அந்தச் சக்தியின் மூலம் எது..???! எப்படி அந்த மூலச் சக்தி உருவானது..???! அதையே கடவுள் எங்கின்றனர் ஒரு பகுதியினர்..

இன்னொரு பகுதியினரோ சக்தி என்கின்றனர்.

நீங்கள் எழுதியதை மீள வாசிதுப் பாருங்கள், மூலச் சக்தியைக் கடவுள் எங்கின்றனர் ஒரு சாரார், மறு சாரார் சக்தி என்கின்றனர்.இரண்டு பேரும் ஒன்றையல்லவா சொல்கின்றனர்? இங்கே சக்தி என்று நீங்கள் சொல்வது எதை அதனை முதலில் வரயறை செய்யுங்கள்.

ஆனால் அடிப்படையில் இருவருக்குமே அது எப்படி உருவானது.. சக்தி என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு இல்லை..!

இதற்குள் சச்சிதானந்தம்.. அரைகுறை அறிவியலால்.. அவியல் செய்வது.. அறிவியல் அல்ல..! அறிவியல் என்ற உச்சரிப்பின் கீழ் அவர் செய்யும் அறிவியல்லாத பித்தலாட்டம்.

சச்சிதானந்தம் செய்யும் அரைகுறை அறிவியல் என்ன என்று கேட்டேன்.அதற்க்கு சூலகங்கள் பற்றிய உதாரணத்தைக் கூறினீர்கள்.அதில் அவர் ஒன்றும் தவறாகச் சொல்லவிலையே என்று சுட்டிக் காட்டினேன் .அது பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை.மீண்டும் சச்சிதானந்தம் அரை குறை அறிவியல் என்று சொல்கிறீர்கள்.

ஒருவர் சொல்வது பிழையென்றால் அது எங்கே எது பிழை என்று சொல்ல வேண்டும்.எழுத மாற்றாக ஆதராம் அடிப்படை எதுவுமற்று குற்றச் சாட்டுக்களை வீசுவது அவதூறு எனப்படும்.

Link to comment
Share on other sites

மதங்களுக்கு அறிவியற் சாயம் ஏன் பூசவேண்டும். மதங்களை ஆராய வெளிப்பட்டுத்தான் பகுத்தறிவு என்ற விடயத்தை கண்டுபிடித்தள்ளார்கள். சிரிக்கவேண்டிய விடயம். இவ்வாறான முட்டிக் கொள்ளும் அறிவியல் இல்லாத காலத்திலும் மதங்கள் மக்களை வழிப்படுத்தின. இப்போதும் அதைச் செய்து கொண்டிருக்கின்றன. மதம் ஒரு சமூகச் சட்டம். அதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஆளையாள் மோதிக் கொள்கிறார்கள்.

அறிவியல் எங்கிருந்து தொடங்குகிறது? அதற்குத் தெளிவான விடைகளேதும் உண்டா? அறிவுதான் மதங்களையும் உண்டாக்கியது என்பது எனது கருத்து. மதங்களில் சொல்லப்படாத சமூக அறிவியற் கருத்துக்கள் ஏதும் உண்டா? தான் தெரிந்த அறிவு பற்றிச் சொல்லிவைத்தலைப் பின்பற்றாதவர்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? அப்படிப்பட்ட நிலையில்தான் பிரச்சினைகள் உருவாகின்றன.

அன்பே கடவுள் என்பதிலும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்பதிலும் என்ன குறையுண்டு.? அவைகள் பிழையானவை என்றால் என்ன விதத்தில் என்று விளங்கப்படுத்துங்கள்.

அறிவியல் என்று கூறிக் கொண்டு உண்மையான வாழ்க்கையின் நடவடிக்கைகளை இழக்க வேண்டுமா?

உண்மையான வாழ்க்கை என்றால் என்ன?

மதங்கள் எங்கனம் அதற்குத் துணை நிற்கின்றன?

அன்பே கடவுள் எனில் , அன்பு எவர் மேல் காட்டப்பட வேண்டியது?

கடவுளுக்குக் கோவிலும் வணக்கமும் பூசையும் புனஸ்காரமும் கொடியும் கோபுரமும் எதற்க்கு?.மதச் சண்டைகளும் மதத்தால் மக்களை அடக்குவதும் கொல்வதுவும் எதற்கு?

மதங்கள் மக்களை வழி நடாத்த கூடியன வென்றால் ஏன் அரசும் சட்டமும் போலிசும் நீதிமன்றங்களும் சிறையும் தண்டனையும்?

Link to comment
Share on other sites

நன்றி சாண்டில்யன்

நாரதர் நீங்கள் கல்லில் நார் உரிக்கிறீர்கள்

இவர்களைத் திருத்த முடியாது இவர்கள் தூங்குபவர் போல் நடிப்பவர்கள்

இங்கு ஒரு சிலர் எப்போதும் எந்த தலைப்புக்கும் எதிர்வினைக் கருத்தெழுதி மற்றவர்களை அறிவிலிகள் என்று சொல்லிக்கொண்டு

தாங்கள் பகுத்தறிவாதிகளாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சிதானந்தம் செய்யும் அரைகுறை அறிவியல் என்ன என்று கேட்டேன்.அதற்க்கு சூலகங்கள் பற்றிய உதாரணத்தைக் கூறினீர்கள்.அதில் அவர் ஒன்றும் தவறாகச் சொல்லவிலையே என்று சுட்டிக் காட்டினேன் .அது பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை.மீண்டும் சச்சிதானந்தம் அரை குறை அறிவியல் என்று சொல்கிறீர்கள்.

நான் உதாரணத்துக்காக ஒரு தவறை இனங்காட்டிய பின்னும்.. தவறாகச் சொல்லவில்லை என்று சொல்லும் போது.. உங்களிடம் சரக்கு இல்லை என்பது புலனாகிறது. நீங்கள் சச்சிதானந்தை நம்புவதே மேல். அதற்காக மக்கள் எல்லோரும் அவரின் புனை கட்டுரையை நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை.

சச்சிதானந்தம் குறிப்பிடுவது போல.. சூல்.. அதனைச் சூழ உள்ள கலங்கள் உடைந்து இரத்தப் போக்கு ஏற்படுகிறது என்பது.. அறிவியல் உலகில் மனித உயிரியலில் கண்டுபிடிக்கப்படாத சச்சிதானந்த கோட்பாடு என்று கொண்டு அதனை தமிழர்கள் படித்துப் பயன்பெறட்டும். அறிவியல் என்று அதனை இனங்காட்டாதீர்கள். அது தமிழர்களில் அறிவியல் அறிந்தவர்களையும் முட்டாள் ஆக்கிவிடும்..! :unsure:

உண்மையில் கருக்கட்டாத தனிக் கல முட்டை சிதைவடைந்து மீள அகத்துறிஞ்சப்பட.. கருப்பைச் சுவரின் அக மேலணி கருப்பையை அடுத்த மாதவிடாய் வட்டத்துக்கு ஏற்ப சீர் செய்யும் பொருட்டு சிதைவடைவதாலேயே அந்த மேலணிக்கு குருதி வழங்கும் குருதிக் கலங்கள் உடைவதால் இரத்தப் போக்கு ஏற்படுகிறது. மேலணியின் சிதைவடையும் கூறுகளும் வெளியேறுகின்றன. கருக்கட்டப்பதாட முட்டைக்கும் கருப்பை மேலணிக்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது..! :o

If the ovum is not fertilized within the period it dies and is reabsorbed by the woman’s body. The body prepares itself for the implantation of the fertilized egg with the change of the uterine lining and stays ready for about two weeks which is the maximum time for a fertilized egg to travel up the uterus and implant itself on it’s walls. If fertilization does not occur, the lining of the uterus is shed automatically, again beginning the process of the menstruation cycle.

http://www.meditests.com/understanding-menstrual-cycle.html

மேலும்.. இயற்கை.. இறைவன்.. சக்தி தொடர்பில் முன்னர் பல விவாதங்களில் உங்களுக்குப் போதிய அளவுக்கு விளக்கம் தந்திருக்கிறேன். அவற்றை மீளப் படியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாண்டில்யன்

நாரதர் நீங்கள் கல்லில் நார் உரிக்கிறீர்கள்

இவர்களைத் திருத்த முடியாது இவர்கள் தூங்குபவர் போல் நடிப்பவர்கள்

இங்கு ஒரு சிலர் எப்போதும் எந்த தலைப்புக்கும் எதிர்வினைக் கருத்தெழுதி மற்றவர்களை அறிவிலிகள் என்று சொல்லிக்கொண்டு

தாங்கள் பகுத்தறிவாதிகளாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

உண்மையான வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்வதென்பது இலகுவான விடயமல்ல. மனிதனுடைய வாழ்க்கை எந்த இடத்தில் திசை திருப்பப்படும் என்பதை ஒருவரும் அறியார். எத்தனையோ சந்தர்ப்பங்கள் மனிதனை வந்தடைந்தாலும் அவன் வெளியில்லிருந்து பெற்ற அறிவுதான் வாழ்க்கைப்பாதையை முடிவு செய்கிறது.

"இன்னா செய்தாரை ஒறுத்தற்கால் அவன் நாண

நன்னயம் செய்துவிடல்"

இதுதான் உண்மையான வாழ்க்கை " ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு " என்பதும் அதுதான்.

Link to comment
Share on other sites

மதங்கள் எங்கனம் அதற்குத் துணை நிற்கின்றன?

மதங்கள் கூறும் கருத்தக்களில் நின்று இன்றுவரை வெளிப்பட்ட நிற்பவர்கள் யார்? யேசு சொன்னார், நபிகள் சொன்னார், வாசகர் சொன்னார் என்றெல்லாம் நல்வழிப்படுத்தம் கருத்துக்கள் சமூக நன்மைக்காக வழங்கப்பட்டுள்ளதே. அது சரி அறிவியல் விஞ்ஙானக் கருத்துகள் சமூக நன்நடத்தைக்காக கூறியுள்ள கருத்துக்கள் என்ன வென்று ஒருக்கால் சொல்லுங்களேன்?

அன்பே கடவுள் எனில் , அன்பு எவர் மேல் காட்டப்பட வேண்டியது?

அன்பை மற்ற உயிர்களிடத்தில் காட்டுங்கள். அந்தக் கருத்தில் தவறில்லை. அதைப் பேணத் தவறுபவர்களிடமே தவறுண்டு. பகுத்தறி இதற்குத் துணை வராதோ?

Link to comment
Share on other sites

கடவுளுக்குக் கோவிலும் வணக்கமும் பூசையும் புனஸ்காரமும் கொடியும் கோபுரமும் எதற்க்கு?.மதச் சண்டைகளும் மதத்தால் மக்களை அடக்குவதும் கொல்வதுவும் எதற்கு?

மதங்கள் மக்களை வழி நடாத்த கூடியன வென்றால் ஏன் அரசும் சட்டமும் போலிசும் நீதிமன்றங்களும் சிறையும் தண்டனையும்?

அது தேவையில்லை என்பதும் தற்போதைய நிலையில் எனக்கம் உடன்பாடுதான். ஆனால் போலீசும் நீதிமன்றங்களும் இல்லாதிருந்த காலத்தினைச் சிந்தித்தப் பாருங்கள். கோயில்கள் இத்தனை பங்குகளையும் ஆற்றியுள்ளது. கோயில் சமூகத்திற்காக நிறுவப்பட்ட ஒன்றுதான். அது இன்று கள்ளப் புத்தி கொண்டவர்களின் இடமாக மாறிவிட்டது.

என்னிடமும் ஒரு கேள்வியுண்டு.

பகுத்தறிவு பேசுபவர்களால் ஒரு கோயில் கட்டுவதைக் கூட தடுத்த நிறுத்த முடிகிறதா? கோயில் என்ற சொன்னாலே வீட்டில் பகுத்தறிவு பேசும் கணவன் ஒருபுறம். கடவுள் என வழிபடும் மனைவி கணவனையும் மீறி கோயில் பக்கமே சாய்கின்றாள். மனைவிக்காக என்று கூறி கணவனும் பின் தொடர்கின்றான்.

Link to comment
Share on other sites

ஓ இப்ப விளங்குது பிரச்சினை.

வழக்கமா பகுத்தறிவு என்று எதாவது தலைப்பை கண்டதும் இல்லை நாரதர் என்று கண்டதும் இடையில வந்து சம்பந்தா சம்பந்தம் அற்று எழுதும் இருவர் வந்து எழுதினார்கள்.அதற்கான பதில் தான் வன்னி பங்கர் லையின் கதை.இபோது அந்தக் கருதுக்கள் இரண்டும் தூக்கப்பட்டு விட்டதால் உங்களுக்கு நான் எழுதினதன் அர்த்தம் விளங்கவில்லை. :unsure:

:o மன்னிக்கவும் நாரதர்!

அட தூக்குறதுதான் தூக்குறாங்க.. உருப்படியாய்த் தூக்குங்கப்பா.. அரைகுறையாத் தூக்கிக் காட்டி மனுசரை அந்தரப்பட வைக்கிறியள்.. :D:o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.