Jump to content

எமது வீட்டுத் தோட்டம் 2008


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க பழுதாகிப் போனாலும் பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் இணைக்கின்றேன்.

http://img149.imageshack.us/my.php?image=s...rof08012yt3.jpg

http://img149.imageshack.us/my.php?image=s...rof08011pw1.jpg

http://img150.imageshack.us/my.php?image=s...rof08010fn7.jpg

பழைய தோட்டத்தைப் பார்வையிட

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27138&hl=

Link to comment
Share on other sites

இப்பவும் நல்லாயிருகிற போல தானே இருக்கு...இங்கு குளிர்காலத்தில்மரங்கள் இருப்பது போலுள்ளது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் இருக்கு! எவ்வளவுதான் கடையில் வாங்கினாலும் வீட்டுத் தோட்டத்திலிருந்து பிடுங்கி ஆக்கும்போது ஒரு சந்தோசம்தான் இல்லையா நன்பரே!!! :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை எரிச்சல் ஊட்டுகின்றீர்களா சுவி?? அவரே நொந்து போய் இருக்கின்றார். ஏக்கர் கணக்கில் தோட்டம் போட்டுவிட்டு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு பொழுது போக்கு ஈழப்பிரியன் ,

ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் அந்த பயிர்களுடன் நேரத்தை செல்விடும் போது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் நல்லாயிருகிற போல தானே இருக்கு...இங்கு குளிர்காலத்தில்மரங்கள் இருப்பது போலுள்ளது..

ஆரம்பத்தில் பயிர் செய்யலாம் போல உள்ளது என்று விதைகளை நட்டால் திரும்ப குளிர்.இப்படி இரண்டு மூன்று தடவைகள் நடந்ததால் என்னவாவது வரட்டும் என்று விட்டுவிட்டோம்.விதைத்த விதைகளில் இருந்து பின்னர் தானாகவே முளைத்தவை தான் இவைகள்.படம் சரியாக இணைக்காததால் வடிவாக தெரியவில்லை.இப்போ கொஞ்சம் தெளிவாக தெரிகிறது.

நல்லாத்தான் இருக்கு! எவ்வளவுதான் கடையில் வாங்கினாலும் வீட்டுத் தோட்டத்திலிருந்து பிடுங்கி ஆக்கும்போது ஒரு சந்தோசம்தான் இல்லையா நன்பரே!!! :):)

இங்கு பழங்கள் மரக்கறி எல்லாமே மெழுகு அல்லது ஏதோ ஒன்றினால் பூசப்பட்டிருக்கும்.நாங்களே உண்டாக்கி சாப்பிடும் போது இதன் வித்தியாசத்தை சுவையில் காணலாம்.

அவரை எரிச்சல் ஊட்டுகின்றீர்களா சுவி?? அவரே நொந்து போய் இருக்கின்றார். ஏக்கர் கணக்கில் தோட்டம் போட்டுவிட்டு....

தம்பி எங்கையப்பு படச் சுருள் எல்லாம் கவனமப்பு

நல்ல ஒரு பொழுது போக்கு ஈழப்பிரியன் ,

ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் அந்த பயிர்களுடன் நேரத்தை செல்விடும் போது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் .

இந்த பயிர்ச் செய்கையால் கோடை காலத்தில் எங்கும் போகவும் மனம் வராது.போனாலும் நண்பர்களிம் சொல்லிவிட்டு தான் போவோம்.இருந்தும் வந்து பார்க்கும் வரை மனதுக்கு கஸ்டமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

ஈழப்பிரியன் தோட்டம் செய்யிற அளவுக்கு வசதியேடை இருக்கிறதை நினைச்சால் வயித்தெரிச்சலாய் இருக்கு . நானும் வீட்டு பல்கனியிலை ஒரு சாடிக்குள்ளை கொஞ்ச மிளகாய் கொட்டை போட்டு கனக்க முளைத்து அதிலை இரண்டுமட்டும் வளந்து பூ பூத்தபொழுது ஒவ்வொரு நாளும் காலையில் எழும்பினதும் ஏதோ என்ரை குழந்தையை பாக்கிறது போல ஓடிப்போய் பாத்து மகிழ்ந்து . அதிலை வந்த சில மிளகாய்களை பிடிங்கி சாப்பாட்டோட கடிச்சு சாப்பிட்டபடி மனிசியிட்டை எடியேய் எங்களிட்டை ஊரிலை முத்தையன்கட்டிலை ஏக்கர் கணக்கிலை மிளகாய் தோட்டம் இருந்தது எண்டு பெருமை பேச . மனிசியும் என்னட்டை"" நீ மிகாயை ரசிச்சு தின்னிறதை பாத்தால் ஊரிலை தோட்டம் இருந்தது எண்டிறது புலுடா விடமாதிரி இருக்கெண்டுற மாதிரி பார்வையோடை சாப்பாட்டை போடும். இதெல்லாம் சுகமான சுமைகள் :)

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில் பயிர் செய்யலாம் போல உள்ளது என்று விதைகளை நட்டால் திரும்ப குளிர்.இப்படி இரண்டு மூன்று தடவைகள் நடந்ததால் என்னவாவது வரட்டும் என்று விட்டுவிட்டோம்.விதைத்த விதைகளில் இருந்து பின்னர் தானாகவே முளைத்தவை தான் இவைகள்.படம் சரியாக இணைக்காததால் வடிவாக தெரியவில்லை.இப்போ கொஞ்சம் தெளிவாக தெரிகிறது.

நாங்களும் இந்த முறை மிளகாய், பாகற்காய், பூசணி போட்டிருக்கோம். வேறு என்ன போடலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க இந்த முறை மிளகாய், பாகற்காய், கத்தரி, வெண்டி, முளைக்கீரை போட்டுள்ளோம். சுண்டங்காய் மரம் மறுபடி தளைத்து வருகிறது போல் உள்ளது அப்ப சுண்டங்காயும் கிடைக்கும் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தக்காளி , சுகினி , போஞ்சி போன்றவற்றை பயிரிடுங்கள் . தூயா .

போஞ்சியில் கொடி மாதிரி வளராமல் ஒரு அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய இனம் ஒன்று உண்டு .அதில் பராமரிப்பு குறைவு .ஆறு கிழமையில் பலன் கிடைக்கும் .

Link to comment
Share on other sites

சுண்டங்காய் மரம் மறுபடி தளைத்து வருகிறது போல் உள்ளது அப்ப சுண்டங்காயும் கிடைக்கும் :icon_idea:

எப்படி செடி கிடைத்தது??

தக்காளி , சுகினி , போஞ்சி போன்றவற்றை பயிரிடுங்கள் . தூயா .

போஞ்சியில் கொடி மாதிரி வளராமல் ஒரு அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய இனம் ஒன்று உண்டு .அதில் பராமரிப்பு குறைவு .ஆறு கிழமையில் பலன் கிடைக்கும் .

எப்படி அதை அறிந்து கொள்வது..நாங்கள் நேர்சரியில் வாங்கும் விதைகளை தான் போடுவோம்..நீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி செடி கிடைத்தது??

இங்கு விவசாயிகளின் சந்தை ஒன்று நடக்கும் அங்கு தான் ஒரு இந்தோனேசிய விவசாயியிடமிருந்து இந்த செடியை வாங்கினோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி அதை அறிந்து கொள்வது..நாங்கள் நேர்சரியில் வாங்கும் விதைகளை தான் போடுவோம்..நீங்கள்?

இங்குள்ள பெரிய கடைகளில் , தோட்டம் சம்பந்தமான பகுதியில் நாற்று விதைகளை சிறிய பைகளில் போட்டு விற்பனைக்கு வைத்திருப்பார்கள் .

அந்த பைகளிலேயே எல்லாம் விபரமாக எழுதியிருக்கும் . உதாரணத்துக்கு எப்போ நட வேண்டும் , வெய்யில் கூடுதலாக பிடிக்குமிடம் , வாரத்திற்கு எத்தனை முறை நீர் விடவேண்டும், பயன் தரும் காலங்கள் போன்றவை .

அல்லது விற்பனையாளரிடம் கேட்டீர்கள் என்றால் அவர் மகிழ்ச்சியுடன் சொல்லித்தருவார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் இந்த முறை மிளகாய், பாகற்காய், பூசணி போட்டிருக்கோம். வேறு என்ன போடலாம்?

தக்காளி வெண்டி நிறையவே அவரை வகை இருக்கிறது மற்றும் கோவா இலை.இவைகள் செய்வது சுலபம்.

Link to comment
Share on other sites

தக்காளி வெண்டி நிறையவே அவரை வகை இருக்கிறது மற்றும் கோவா இலை.இவைகள் செய்வது சுலபம்.

தக்காளியில் சென்ற தடவை பச்சை நிற தக்காளி போட்டோம்..சாடியிலேயே நன்றாக வந்தது. கத்தரி போட ஆசையுண்டு..

அவரை வகை எல்லாமே கொடி தானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் தோட்டம் செய்யிற அளவுக்கு வசதியேடை இருக்கிறதை நினைச்சால் வயித்தெரிச்சலாய் இருக்கு . நானும் வீட்டு பல்கனியிலை ஒரு சாடிக்குள்ளை கொஞ்ச மிளகாய் கொட்டை போட்டு கனக்க முளைத்து அதிலை இரண்டுமட்டும் வளந்து பூ பூத்தபொழுது ஒவ்வொரு நாளும் காலையில் எழும்பினதும் ஏதோ என்ரை குழந்தையை பாக்கிறது போல ஓடிப்போய் பாத்து மகிழ்ந்து . அதிலை வந்த சில மிளகாய்களை பிடிங்கி சாப்பாட்டோட கடிச்சு சாப்பிட்டபடி மனிசியிட்டை எடியேய் எங்களிட்டை ஊரிலை முத்தையன்கட்டிலை ஏக்கர் கணக்கிலை மிளகாய் தோட்டம் இருந்தது எண்டு பெருமை பேச . மனிசியும் என்னட்டை"" நீ மிகாயை ரசிச்சு தின்னிறதை பாத்தால் ஊரிலை தோட்டம் இருந்தது எண்டிறது புலுடா விடமாதிரி இருக்கெண்டுற மாதிரி பார்வையோடை சாப்பாட்டை போடும். இதெல்லாம் சுகமான சுமைகள் :lol:

சாத்து ஞாபகம் இருக்கா சிறிமாவின் காலத்தில் எல்லோர் வீட்டு பூச்சாடிகளிலும் பூக்கன்றுகள் எல்லாம்பிடுங்கி எறிந்துவிட்டு மிளகாய் கன்றுகளாக காட்சியளித்ததை.அப்படி தொடங்க வேண்டியது தானே.

நாங்க இந்த முறை மிளகாய், பாகற்காய், கத்தரி, வெண்டி, முளைக்கீரை போட்டுள்ளோம். சுண்டங்காய் மரம் மறுபடி தளைத்து வருகிறது போல் உள்ளது அப்ப சுண்டங்காயும் கிடைக்கும் :icon_idea:

இன்னிசை புடலை விதை அனுப்பவா?

Link to comment
Share on other sites

இங்குள்ள பெரிய கடைகளில் , தோட்டம் சம்பந்தமான பகுதியில் நாற்று விதைகளை சிறிய பைகளில் போட்டு விற்பனைக்கு வைத்திருப்பார்கள் .

அந்த பைகளிலேயே எல்லாம் விபரமாக எழுதியிருக்கும் . உதாரணத்துக்கு எப்போ நட வேண்டும் , வெய்யில் கூடுதலாக பிடிக்குமிடம் , வாரத்திற்கு எத்தனை முறை நீர் விடவேண்டும், பயன் தரும் காலங்கள் போன்றவை .

அல்லது விற்பனையாளரிடம் கேட்டீர்கள் என்றால் அவர் மகிழ்ச்சியுடன் சொல்லித்தருவார் .

நேர்சரியில் (தமிழ் சொல் என்ன?) அப்படி சொல்லிதருவார்கள்..அதன் படி தான் போடுவோம்..

நீங்க வெங்கயம் போடுவதுண்டா? நாங்க, ஊரில் உள்ள சின்ன வெங்காயம் மறக்காமல் போடுவோம்...அந்த சுவை வேறு எதற்கும் இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை வகை எல்லாமே கொடி தானா?

இல்லையே பயறு மாதிரி நிலத்துடனே இருக்கும் அவரை இனம் இருக்கிறது.புடலை விதை வேண்டுமென்றால் சொல்லுங்கள் அனுப்புகிறேன்.இங்கு குளிர் தொடங்கிவிட்டது.இனி இலை உதிர் காலம்.எதுவுமே வராது.இனி அடுத்த வைகாசி முடிய தான்.

Link to comment
Share on other sites

இல்லையே பயறு மாதிரி நிலத்துடனே இருக்கும் அவரை இனம் இருக்கிறது.புடலை விதை வேண்டுமென்றால் சொல்லுங்கள் அனுப்புகிறேன்.இங்கு குளிர் தொடங்கிவிட்டது.இனி இலை உதிர் காலம்.எதுவுமே வராது.இனி அடுத்த வைகாசி முடிய தான்.

ஒஸ்திரேலியாவிற்கு அனுப்ப முடியுமா? :icon_idea:

இங்கு எதையும் விட மாட்டார்களே :lol:

சென்ற தடவை சென்னை சென்ற போது கூட, கனடாவிலிருந்து வந்திருந்த அக்கா வெற்றிலை கொடி கூட கொண்டு சென்றார்கள். நான் வெறும் கையோடு இங்கு வந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்திரேலியாவிற்கு அனுப்ப முடியுமா? :icon_idea:

இங்கு எதையும் விட மாட்டார்களே :lol:

சென்ற தடவை சென்னை சென்ற போது கூட, கனடாவிலிருந்து வந்திருந்த அக்கா வெற்றிலை கொடி கூட கொண்டு சென்றார்கள். நான் வெறும் கையோடு இங்கு வந்தேன்

லண்டனுக்கு அனுப்பியிருந்தோம்.கிடைக்குத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னிசை புடலை விதை அனுப்பவா?

வேண்டாம் ஈழபிரியன். கனடாவிலிருந்து மாமா அனுப்பின புடலை விதையை இங்கு சுங்க அதிகாரிகள் மறித்து வைத்து விட்டார்கள் அதனால் நீங்கள் அனுப்பினாலும் அதே தான் நடக்கும்.

கேட்டதுக்கு நன்றிகள் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்சரியில் (தமிழ் சொல் என்ன?) அப்படி சொல்லிதருவார்கள்..அதன் படி தான் போடுவோம்..

நீங்க வெங்கயம் போடுவதுண்டா? நாங்க, ஊரில் உள்ள சின்ன வெங்காயம் மறக்காமல் போடுவோம்...அந்த சுவை வேறு எதற்கும் இல்லை..

நேர்சரி - விவசாய பண்ணை அல்லது செடிகள் வளர்க்குமிடம் என்று சொல்லலாமா ?

நாங்கள் வெங்காயம் போடுவதில்லை , காரணம் அது விளைந்து வரும் நேரத்தில் கடையில் கிலோ 20 சென்ற்க்கு குறைய விக்கும் .

அந்த நேரம் 40 - 50 கிலோ என்று வாங்கி நில அறைக்குள் வைத்தால் அந்த குளிர்காலதுக்கு கூடிய விலை கொடுத்து வெங்காயம் வாங்க தேவையில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி நாங்கள் தோட்டம் செய்வது லாபத்துக்கல்லவே.சுவை உடம்புக்கு மனதுக்கு இதம்.மற்றும் படி கூட்டி கழித்து பார்த்தால் கடையில் வாங்குவது லாபமாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி நாங்கள் தோட்டம் செய்வது லாபத்துக்கல்லவே.சுவை உடம்புக்கு மனதுக்கு இதம்.மற்றும் படி கூட்டி கழித்து பார்த்தால் கடையில் வாங்குவது லாபமாகத்தான் இருக்கும்.

உண்மைதான் , ஈழப்பிரியன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.