Jump to content

தமிழருக்கு நடுவிரல் காட்டிய சனத் ஜெயசூரியா!


Recommended Posts

எனினும் நம்மில் சிலர் இன்னமும் சிங்களவர்களோடு சேர்ந்து இலங்கைத் தீவை மீண்டும் சொர்க்க புரியாக மாற்றலாம் என்று கனவு காண்கின்றார்கள்.

மேலே ஒரு பக்கம் சபேசனும் தன் பங்கிற்கு ஏதோ விளையாட்டை நேரில் பார்த்தவர் போலவும், ஜெயசூரியா நடுவிரல் காட்டும் விதத்திற்கு இல்லாத ஒரு விபரத்தையும் புகுத்தி, வழமை போல் தனது இணையத்தளத்தை பரபரப்பாக்க பாடுபடுகின்றார். ஆதாரத்திற்கு தனது இணையத்தள முகவரியையே இணைத்து விடுவார். மேலும் இதில் வேடிக்கை என்னவென்றால் இதே செயல்முறையை புஸ்பவிஜி செய்யும் போது அவருக்கு பலமுறை எச்சரிக்கை விடும் நிர்வாகம் சபேசன் விடயத்தில் தாராளப் போக்கு.

மேலும் இங்கே எவரும் சிங்களவருடன் சேர்ந்து இலங்கையை சொர்க்கபுரி ஆக்கிவிடலாம் என்ற கனவுடன் வாழவில்லை. ஒருவேளை ஒன்றுபட்ட இலங்கையினுள் தான் தீர்வு என்ற நிலை வந்தால் நீங்கள் எல்லோரும் அதனை ஏற்காது ஒதுங்கி விடுவீர்களா?? தேவையில்லாத விடயங்களிலெல்லாம் கற்பனைக்் கதைகளை எல்லாம் பரப்பி நேரத்தை வீணாக்குவதை விட தேவையான விடயங்களில் இவற்றைப் பயன்படுத்தலாமே?? இதே தளத்தில் எத்தனை கட்டுக்கதைகள் பரப்பப்பட்டன.

ஒருமுறை சுவிசில் தமிழ்மொழி மூலமாக எல்லாப் பாடங்களும் படிப்பிக்கப் படுவதாகவும், அதில் வரலாற்றுப் பாடத்தில் விடுதலைப்புலிகளின் வரலாறு படிப்பிப்பதால், அதைத் தடை செய்யுமாறு இலங்கை அரசு சுவிஸ் அரசை கேட்டதன் பேரில், சுவிஸ் அரசும் வரலாற்றுப்பாடத்தை தடுக்கப் போவதாகவும் ஒருவர் செய்தி இணைத்தார். அந்தச் செய்தியையும் நம்பிப் பலர் அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று பதில்க் கருத்தும் பதிந்தனர். ஆனால் எவராவது ஒருவர் ஐரோப்பாவில் நாம் அகதியாகவுள்ள ஒரு நாட்டில், இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் எல்லாப் பாடத்தையும் தமிழ்மொழி மூலம் கற்பது சாத்தியமா என்று சிந்தித்தனரா?? எழுந்த மானத்திற்கு பதில்க் கருத்தினை மட்டும் எழுதினார்கள். பின்பு நான் இந்த விடயத்தை சுட்டிக் காட்டியவுடன் எவரும் பதில் எழுதவில்லை.. இதிலும் வேடிக்கை என்னவென்றால் நிர்வாகமும் இச்செய்தியை நம்பி விட்டு வைத்திருப்பது.

அதே போல் இலங்கை வங்கிகளில் இருக்கும் தமிழரின் பணங்கள் யாவும் அரசாங்கத்தால் யுத்தநிதிக்காக அபகரிக்கப் படப்போவதாக பலவருடங்களுக்கு முன்னரே கதையைக் கட்டி விட்டார்கள். ஆனால் இன்றுவரை எவரின் வங்கிக் கணக்கு அபகரிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாகவே ஒரு வங்கியிலிருக்கும் கணக்கை ஒருவர் பல வருட காலமாக பேணாத பட்சத்தில் அந்த வங்கிக் கணக்கை மூடி பணத்தை எடுப்பதற்கு வங்கிக்கு அதிகாரமுள்ளது. இது வங்கி விதிமுறைகளிலேயே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. அப்படியிருந்தும் தமது அறியாமைகளை காட்டுவது போல் கருத்தெழுதுவதிலேயே பலர் இருந்தது யாருக்கு அவமானம்.

சில வருடங்களுக்கு முன் சுவிஸ் தலைநகர் பேர்ணில் பொலிஸ் தலைமை அதிகாரி உள்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நலன்புரி அமைப்புகளின் உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் தமிழர்களுக்கான சந்திப்பு ஒன்று நடந்தது. அப்போ பொலிஸ் தலைமை அதிகாரி உட்பட வேறு சிலரும் சேர்ந்து சொன்ன விடயம் என்ன தெிரியுமா?? இங்கு ஆயிரக் கணக்கான சிங்கள மக்களும் இருக்கின்றார்கள். அவர்களால் எங்களுக்கு எந்தவித பிரைச்சினையும் இல்லை. சிங்கள மக்கள் எமது மக்களை அனுசரித்து எம்முடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்கின்றார்கள். ஆனால் இங்குள்ள பல தமிழ் மக்களால்த் தான் எமக்கு பிரைச்சினையே. சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிங்களமக்களால் தமிழ் மக்களுக்கு பிரைச்சினை என்பதை எம்மால் நம்ப முடியாமல் உள்ளது. எனவே தமிழ் மக்களாகிய நீங்கள் சுவிசில் பிரைச்சினை இல்லாது வாழ வேண்டுமாயின் மற்றவவர்களை அனுசரித்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. இதை ஏனைய தமிழ் உறவுகளுக்கும் தெரியப்படுத்தி விடுங்கள் என்பதே. ஆனால் இன்றுவரை இந்தநிலை இங்கு மாறவில்லை என்பது தான் வேதனையான விடயம்.

அடுத்தவனை அவமானப்படுத்துவதாக நினைத்து ஆதாரமில்ா விடயங்களில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வதால் எம்மை நாமே மற்றவர்களின் பார்வையில் தரம் தாழ்த்திக் கொள்கின்றோம். சிங்கள அரசின் கொடுமைகளை ஆதாரத்தடன் வெளிக்கொணர எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அதைச் செய்யலாம். கனடாவில் கிரிக்கெட் போட்டி நடந்தபோது வெளியில் இருந்து எமது மக்கள் தமது எதிர்புக்களைத் தெிரிவித்தார்கள் . அது சரியானதே. ஆனால் மைதானத்தில் நின்று மற்ற கிரிக்கெட் இரசிகர்களுக்கும் இடைஞ்சலாக எமது மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபடும் போது, அது ஏனைய நாட்டு இரசிகர்களுக்கு எரிச்சலைத் தான் உண்டு பண்ணும். பல விடயங்களில் எமது போராட்டத்திற்கு ஏனையவர்களின் ஆதரவை திரட்டுவதற்குப் பதிலாக, அவர்களின் ஆத்திரத்தை தான் எமது தவறான பல நடவடிக்கைகளால் திரட்டியுள்ளோம். இதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு செயற்பட்டால் எமக்கும் விடிவு நிச்சயம்.

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

ஜெயசூரியா தனது இனவாதத்தைக் காட்டும்போது அதனை ஒரு தமிழன் படமெடுத்து வெளிக்கொண்டுவர இங்கே கிரிக்கெட் மோகத்தில் இலங்கை கிரிக்கெட் அணிமீது இருக்கும் மோகத்தில் உள்ள எம்மவர்களிற்கு அது பொறுக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடியடா சக்கை , அம்மன் கோயில் புக்கை எண்டானாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை தான் பெரும் தன்மை என்று கூறுவார்கள் , ரகுநாதன் . :rolleyes:

சிறி, நீங்கள் எதைப் பெருந்தன்மை என்று கூறுகிறீர்கள் ? புரியவில்லையே ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயசூர்யா ஓய்வு பெறும் வயதுக்கு வந்து விட்டார் அதனால் அவர் அடுத்த பஸ்(அரசியல்)பிடிக்கப்பாக்கிற

ார்!

Link to comment
Share on other sites

அடியடா சக்கை , அம்மன் கோயில் புக்கை எண்டானாம் .

எங்கை...... எங்கை........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பெருந்தன்மை

புக்கைக்கு அடுத்த பொங்கல் மட்டும் பொறுக்கவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பெருந்தன்மை

புக்கைக்கு அடுத்த பொங்கல் மட்டும் பொறுக்கவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இங்கே எவரும் சிங்களவருடன் சேர்ந்து இலங்கையை சொர்க்கபுரி ஆக்கிவிடலாம் என்ற கனவுடன் வாழவில்லை. ஒருவேளை ஒன்றுபட்ட இலங்கையினுள் தான் தீர்வு என்ற நிலை வந்தால் நீங்கள் எல்லோரும் அதனை ஏற்காது ஒதுங்கி விடுவீர்களா?? தேவையில்லாத விடயங்களிலெல்லாம் கற்பனைக்் கதைகளை எல்லாம் பரப்பி நேரத்தை வீணாக்குவதை விட தேவையான விடயங்களில் இவற்றைப் பயன்படுத்தலாமே?? இதே தளத்தில் எத்தனை கட்டுக்கதைகள் பரப்பப்பட்டன.

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு எப்படியான தீர்வு கிடைத்தால் அமைதியாக வாழலாம் என்பதையும் கூறிவிட்டால் நல்லது.

1. அதிக அதிகாரங்கள் கூடிய வட-கிழக்கு இணைந்த மாகாண சபை

2. உள்ளக சுயநிர்ணய உடைய (விரும்பினால் பிரியக்கூடிய உ+ம்: கியூபெக்) அதிகாரங்கள் நிறைந்த மாநில சுயாட்சி

3. ஒரு நாடு, இரு தேசங்கள் என்ற அமைப்பு முறை (இராணுவ, பொருளாதார, வெளியுறவு தவிர்ந்த அனைத்தும் தனித்தனியான தேசங்களில்)

தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்கக்கூடிய எந்தவோர் தீர்வையும், சர்வதேச நாடுகள் வற்புறுத்தினால் கூட, சிங்கள அரசு தரப்போவதில்லை. எனவே ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் கண்ணியமான முறையில், அமைதியாக சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை. சிலவேளை மலையகத் தமிழர்கள் போல் உரிமைகள் அற்று சாதாரண மக்கள் வாழும்போது, அரசியல் தலைவர்கள் பணம் பெருக்கி வாழக்கூடிய நிலை வரலாம். அப்படியான நிலையில் இலங்கைத் தீவு சொர்க்கமாகத் தோன்றலாம்.

பி.கு. சனத் ஜெயசூரியா நடு விரலைக் காட்டினாரா, இல்லையா என்பது கிறிக்கெற் பார்க்கப் போனவர்களுக்குத்தான் தெரியும். சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைக் காட்ட, காசு கொடுத்துக் கிறிக்கெற் பார்க்கப் போவதும் ஒரு வழிதான் போலுள்ளது.

Link to comment
Share on other sites

கருத்தெழுதின அனைத்து உறவுகளுக்கும் நன்றி. நான் எல்லா சிங்களவர்களும் நல்லவர்கள் எண்டோ அல்லது அவர்களுடன் இணைந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு எண்டோ கூற வரவில்லை. ஆனால் தமிழ்த்தேசியத்தலைமை கூட முன்னர் நடந்த சமாதானப் பேச்சுக்களின் போது சமஸ்டி முறைத் தீர்விற்கு இணங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது :rolleyes: .

ரகு அண்ணை, உங்களுக்கு அப்பிடிப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம், மற்றவர்களுக்கும் அப்பிடி நடந்திருக்கு. அது உங்களுக்கு வாய்த்த நண்பர்களால் எர்த்பட்டது துரதிர்ச்ச்டமானது எண்டும் சொல்லலாம் :D . ஆனால் என்ன பொறுத்த வரையில என்னோட படித்த பழகிய சிங்கள மாணவர்கள், நண்பர்கள் மிகவும் நல்லவர்கள். நான் ஏன் தமிழர்கள் ஆயுதம் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், தமிழர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டார்கள் என அனைத்து பின்புலங்களையும் அவர்களுக்கு தெளிவாக விளக்கியிருக்கிறேன். அவ்வாறான விளக்கங்களைக்க் கேட்ட பின்னர் எத்தனையோ பேர் எம்முடைய போராட்டம் உண்மையிலேயே நியாயமானதுதான் எனக்கூறியிருக்கிறார்கள். சிலர் அவர்கள் கேட்பதை நியாயப்படி அவர்களுக்கு கொடுத்துவிட்டு நாம் தெற்கை முன்னேற்றுவோம் அவர்கள் தமது ஈழத்தை முன்னேற்றடும் எண்டு கூடக்கூறி இருக்கிறார்கள். சிங்களவர்கள் பார்க்கும், வாசிக்கும், கேட்கும் செய்தி ஊடகங்கள் அனைத்துமே தமிழர் விரோத போக்கைக் கடைப்பிடிப்பவை. அவர்களுக்கு எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை, தேவையை எடுத்துக் கூறும் போது நிச்சயம் மாற்றம் தெரியும். உதாரணத்திற்கு அண்மையில் ஜனக பெரேரா கொல்லப்பட்ட போது இவர் ஏன் இலக்கு வைக்கப்பட்டார் என இங்குள்ள பலரும் யோசித்தார்கள், காரணம் அவரின் மகன் எனது பல்கலையில் தான் முதலாவது வருடம் படிக்கிறார். அப்போது என்னைக் கேள்விகேட்ட பலருக்கும், யார் செய்தார்கள் எனத்தெரியாது ஆனால் அவர் யாழ் குடாநாட்டிற்குப் பொறுப்பாக இருந்த காலகட்டத்திலேயே தான் பாடசாலை மாணவி கிருஷாந்தி உட்பட பல குடாநாட்டு இளைஞர் யுவதிகளுக்கு செம்மணியில் நடந்ததையும் அதற்க்கு காரணமாக இருந்தவர் அவர் என்பதையும் தெளிவு படுத்தினேன். செம்மணி என ஒரு இடம் இருந்ததோ அங்கு நடந்ததோ பலருக்குமே தெரியவில்லை. இவ்வாறான விளக்கத்திற்குப் பின்னர் அப்பாவித் தமிழர்களைக் கொல்லும் அரசிற்கு சிங்கள மக்கள் ஏன் ஆதரவளிக்கிறார்கள் எனக் கேட்டபொழுது அவர்கள் சொன்ன பதிலின் மூலம் உண்மையை அவர்கள் ஒருபோதும் கேட்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகியது. எனது கருத்தின் படி அநேக சிங்கள மக்களுக்கு தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தன்மை தெரியாது. விசேடமாக வளர்ந்து வரும் இளையதலை முறையினர் ஏன் தமது அரசு இவ்வளவு செலவில் போரை நடத்துகிறது என்ற கேள்விக்குக் கூட விடை தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இப்படியானவர்கள் உண்மையை அறியும் போது அவர்களே தமது இனவாத அரசுகளுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி விடுவார்கள் என்பது ஆனது நம்பிக்கை. சமாதான காலத்திலே எத்தனையோ நண்பர்கள் வாகனம் ஒழுங்கு செய்து விடுமுறையில் யாழ் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான போரின் கொடிய முகத்தினையும் அதனால் இழக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட சொத்துக்களையும் காட்டியபோது அவர்களும் போரின் கொடுமையை உணரக் கூடியதாக இருந்தது. இவ்வாறு உண்மையை காண அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் போது நிச்சயம் அவர்களும் எமது தரப்பு நியாயங்களை நிச்சயம் அறிவர். எத்தனையோ பேர் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பைப் பார்த்து வியந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு வன்னியிலே மலசலகூடம், தண்ணீர்த்தொட்டி, காரியாலயம் என எல்லாவற்றிக்கும் மூன்று மொழிகளிலும் அறிவிப்புப் பலகை போடப்படிருந்ததைக் கண்டு வியந்தார்கள். அதிலும் சிங்களத்திலே எழுதப்பட்டவற்றில் ஒருவித தவறும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். நானும் தென்பகுதி அரச அலுவலகங்களில் தமிழ் படும் பாட்டைச் சொல்லத்தவறவில்லை.

நீங்கள் சொன்னதுபோல பஸ்சிலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் என்னையும் "கொட்டித" எண்டு கேட்டிருகிறாங்கள். நானும் சமாளிதுப்போட்டு எண்ட பாட்டில போனதுதான். ஆனால் அதைவைத்துக்கொண்டு அனைவரையும் இனவாதிகள் எண்டு முத்திரை குத்துவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணத்திற்கு பல தமிழர்கள், நான் அறிய பிரித்தானியாவில் கடனட்டை மோசடியில் ஈடுபட்டிருக்கீனம். அதவச்சுக்கொண்டு தமிழர் எல்லாரும் மோசடி பேர் வழிகள் எண்டு சொல்ல ஏலாதுதானே :( .

இறுதியா, நான் உங்கள நிரூபிக்கச் சொல்லிக் கேட்டது ஏன் எண்டால் முதல் பதிவில நீங்கள் நிரூபிக்கப்பட்டு விட்டது எண்டு சொல்லியிருந்தீர்கள் அதோட பல ஊடகங்களில வெளிவந்த செய்தி எண்டும் போடிருந்தீங்கள் அதுதான் :D . நான் நம்பாட்டில் அந்த செய்தி பிழை எண்டும் இல்லை நீங்கள் நம்பிறதுதான் சரி எண்டும் இல்லை. எனக்கு இலங்கை அணியின் மீது எந்தவித மோகமும் இல்லை நான் சனத்தின் பெரிய விசிறியும் இல்லை :D .

எனது கருத்துப்படி சனத் விரலைக் காட்டியிருக்கலாம் அல்லது காட்டாமல் விட்டும் இருக்கலாம் ஆனால் அதைப் படம் எடுக்க வேண்டுமாயின் வீரர்கள் ஐம்பது அல்லது நூறு அடித்த பின்னர் மட்டையைத் தூக்கிகாட்டுவது போல விரலையும் தூக்கிக் காட்டியிருக்க வேண்டும் :rolleyes: . அப்படி படம் எடுக்க வேண்டி இருப்பின் அதற்க்கு சரியான நிறுத்தி (stand) மற்றும் தரமான வில்லைதொகுதி (lence), சரியான கோணம் right angle) அவசியம். அத்துடன் சனத்தின் களத்தடுப்பு வியுகமும் (fielding position) கவனிக்கப் பட வேண்டும் :lol: . புகைப்படதுறையிலே ஈடுபாடு இருந்தால் விளங்கும் என நினைக்கிறேன். இந்த ஏற்பாடுகளோடு யாரும் அங்கே சென்றிருப்பர்களா என்பது கேள்விக்குறியே. அத்துடன் இவாறு சென்றிருப்பினும் முழு விளையாடையும் அவதானத்துடன் கேமராவும் கையுமாகப் பாத்திருக்க வேண்டும்.

எனது கருத்துப்படி

1)படம் சனத் சக வீரருக்கு களத்தடுப்பு ஆலோசனை சொல்லும் போது எடுக்கப் பட்டிருக்கலாம்.

2)வர்ணனையாளருடன் கதைத்திருக்கலாம்

3)கன்னத்திலே கை வைத்ததை தம்மைப் பார்த்து விரலைக் காட்டுவதாக பார்க்கப்போனவர்கள் நினைத்திருக்கலாம்

4)விரலைக் கூடக் காட்டியிருக்கலாம்

ஆனால் எதுவுமே நிரூபிக்கப்படாமல் ஒரு படத்தினை மட்டும் வைத்துக்கொண்டு எந்த முடிவுக்கும் வர முடியாது :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தமிழ்த்தேசியத்தலைமை கூட முன்னர் நடந்த சமாதானப் பேச்சுக்களின் போது சமஸ்டி முறைத் தீர்விற்கு இணங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு திருத்தம்.

சமஸ்டி முறைத் தீர்வை ஆராயத்தான் இணங்கியிருந்தனர்.

Norwegian Deputy Foreign Minister Vidar Helgesen said the parties had decided to explore a political solution founded on internal self-determination based on a federal structure within a united Sri Lanka.
Link to comment
Share on other sites

5) நடுவர் பார்க்காமல் இரண்டு நடுவருக்கும்.. மைதானம் முழுவமுத் சுற்றியிருக்கின்ற ஒளிப்பதிவுக்கருவிகளுக்கும் கருவிகளுக்கும் மறைத்து அவர் இனங்கண்டுகொண்ட ஆர்ப்பாட்ட நோக்கத்தோடு கட்டணம் செலுத்தி உட்புகுந்த தமிழ் இளைஞர்களை நோக்கி அவர் செய்த ஆபாச சைகையாக இருக்கலாம்..

6) தாங்கமுடியாத காதுக்குடைச்சலை நாகரீகமாக..குடைந்திருக்கலாம்

..

இப்படி ஆயிரம் ஊகங்கள் செய்வதல்ல ஊடகதர்மம் உள்ளத்தால் முழுமையான தமிழ்உணர்வாளன்தான் நானும்..

நான் இல்லை அப்படியான புகைப்படமாக இது இருக்க சாத்தியமில்லை என்று சொன்னேன்.. அதை மறுத்து சொல்ல யாராலும் எந்த சான்றையும் பெற முடியவில்லை. இல்லை நான் நேரே பார்த்தேன் என்று யாராலும் நிச்சயமாக ஊடகத்திற்கு சொல்லமுடியவில்லை. இந்த புகைப்படத்தை வைத்து குற்றசாட்டை மேற்கொள்வது எந்தவகையில் சாத்தியமென்று எனக்கு புரியவில்லை. உண்மையில் அவ்வாறு நடந்து கொண்டிருந்தால் அவர் செயல் கண்டனத்துக்கு மட்டுமல்ல விளையாட்டுத்துறைக்கு விளைவிக்ககூடிய களங்கத்துக்குரியது. ஐ.சி.சி மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கூட அவருக்கு அபதாரம் விதிதி;திருக்கும். வேறு ஒருவரும் இதைப் பார்க்க சந்தர்ப்பமில்லை நாங்கள் மட்டும்தான் பார்த்தோம் என்று யாரும் சொன்னால் நான் ஏற்றுக்கொள்கிறேன். இது வாதமல்ல கருத்து. இது கருத்துக்களம்தானே என் கருத்தை சொல்லியிருக்கிறேன்.உண்மையில

Link to comment
Share on other sites

1)படம் சனத் சக வீரருக்கு களத்தடுப்பு ஆலோசனை சொல்லும் போது எடுக்கப் பட்டிருக்கலாம்.

2)வர்ணனையாளருடன் கதைத்திருக்கலாம்

3)கன்னத்திலே கை வைத்ததை தம்மைப் பார்த்து விரலைக் காட்டுவதாக பார்க்கப்போனவர்கள் நினைத்திருக்கலாம்

4)விரலைக் கூடக் காட்டியிருக்கலாம்

பேசாமல் வாக்கெடுப்பு நடத்தி முடிவுசெய்வமா?? அதுதான் சனநாயகம்

2)வர்ணனையாளருடன் கதைத்திருக்கலாம்

போட்டி நடக்கேக்கில வர்ணனையாளருடன் கதைக்கலாமோ அண்ண? நான் அறிய போட்டி நடக்கமுதலும் , முடிஞ்சாபிறகும் தானே மைக்க கோண்டே நீட்டுறவ?

3)கன்னத்திலே கை வைத்ததை தம்மைப் பார்த்து விரலைக் காட்டுவதாக பார்க்கப்போனவர்கள் நினைத்திருக்கலாம்

என்ர கண்ணுக்கு கன்னத்தில விரல் பட்டதா தெரியல

Link to comment
Share on other sites

ஒரு திருத்தம்.

சமஸ்டி முறைத் தீர்வை ஆராயத்தான் இணங்கியிருந்தனர்.

ஆராய இணங்கி இருக்கினம் எண்டால், அந்தத் தீர்வில அவர்களுக்கு ஒரு விருப்பம் இருந்திருக்கத்தானே வேணும்? :( இல்லாவிட்டால் மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ரீதியில நடந்த பேச்சுவார்த்தைகளில் அப்படிக் கூறியிருக்க மாட்டினம் தானே? உங்களுக்கு ஒரு விஷயத்தில விருப்பம் இருந்தாத்தானே அதைப்பற்றி ஆராய வெளிகிடுவியல்? :)

5) நடுவர் பார்க்காமல் இரண்டு நடுவருக்கும்.. மைதானம் முழுவமுத் சுற்றியிருக்கின்ற ஒளிப்பதிவுக்கருவிகளுக்கும் கருவிகளுக்கும் மறைத்து அவர் இனங்கண்டுகொண்ட ஆர்ப்பாட்ட நோக்கத்தோடு கட்டணம் செலுத்தி உட்புகுந்த தமிழ் இளைஞர்களை நோக்கி அவர் செய்த ஆபாச சைகையாக இருக்கலாம்..

6) தாங்கமுடியாத காதுக்குடைச்சலை நாகரீகமாக..குடைந்திருக்கலாம்

..

இப்படி ஆயிரம் ஊகங்கள் செய்வதல்ல ஊடகதர்மம் உள்ளத்தால் முழுமையான தமிழ்உணர்வாளன்தான் நானும்..

நான் இல்லை அப்படியான புகைப்படமாக இது இருக்க சாத்தியமில்லை என்று சொன்னேன்.. அதை மறுத்து சொல்ல யாராலும் எந்த சான்றையும் பெற முடியவில்லை. இல்லை நான் நேரே பார்த்தேன் என்று யாராலும் நிச்சயமாக ஊடகத்திற்கு சொல்லமுடியவில்லை. இந்த புகைப்படத்தை வைத்து குற்றசாட்டை மேற்கொள்வது எந்தவகையில் சாத்தியமென்று எனக்கு புரியவில்லை. உண்மையில் அவ்வாறு நடந்து கொண்டிருந்தால் அவர் செயல் கண்டனத்துக்கு மட்டுமல்ல விளையாட்டுத்துறைக்கு விளைவிக்ககூடிய களங்கத்துக்குரியது. ஐ.சி.சி மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கூட அவருக்கு அபதாரம் விதிதி;திருக்கும். வேறு ஒருவரும் இதைப் பார்க்க சந்தர்ப்பமில்லை நாங்கள் மட்டும்தான் பார்த்தோம் என்று யாரும் சொன்னால் நான் ஏற்றுக்கொள்கிறேன். இது வாதமல்ல கருத்து. இது கருத்துக்களம்தானே என் கருத்தை சொல்லியிருக்கிறேன்.உண்மையில

Link to comment
Share on other sites

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு எப்படியான தீர்வு கிடைத்தால் அமைதியாக வாழலாம் என்பதையும் கூறிவிட்டால் நல்லது.

1. அதிக அதிகாரங்கள் கூடிய வட-கிழக்கு இணைந்த மாகாண சபை

2. உள்ளக சுயநிர்ணய உடைய (விரும்பினால் பிரியக்கூடிய உ+ம்: கியூபெக்) அதிகாரங்கள் நிறைந்த மாநில சுயாட்சி

3. ஒரு நாடு, இரு தேசங்கள் என்ற அமைப்பு முறை (இராணுவ, பொருளாதார, வெளியுறவு தவிர்ந்த அனைத்தும் தனித்தனியான தேசங்களில்)

தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்கக்கூடிய எந்தவோர் தீர்வையும், சர்வதேச நாடுகள் வற்புறுத்தினால் கூட, சிங்கள அரசு தரப்போவதில்லை. எனவே ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் கண்ணியமான முறையில், அமைதியாக சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை. சிலவேளை மலையகத் தமிழர்கள் போல் உரிமைகள் அற்று சாதாரண மக்கள் வாழும்போது, அரசியல் தலைவர்கள் பணம் பெருக்கி வாழக்கூடிய நிலை வரலாம். அப்படியான நிலையில் இலங்கைத் தீவு சொர்க்கமாகத் தோன்றலாம்.

பி.கு. சனத் ஜெயசூரியா நடு விரலைக் காட்டினாரா, இல்லையா என்பது கிறிக்கெற் பார்க்கப் போனவர்களுக்குத்தான் தெரியும். சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைக் காட்ட, காசு கொடுத்துக் கிறிக்கெற் பார்க்கப் போவதும் ஒரு வழிதான் போலுள்ளது.

ஒன்றுபட்ட இலங்கையினுள் தான் தீர்வு என்ற நிலை வருமாயின் குறைந்த பட்சம் மாநிலங்களுக்கான அதிக அதிகாரங்கள் கொண்டதும் அனைத்து மக்களிற்கும் சமமான உரிமைகளுடனான தீர்வை ஏற்றுக் கொள்ளலாம். அது போல் தற்போதய நிலையில் வெளிநாடுகளின் பரிந்துரைகளை இலங்கை அரசு தொடர்ந்து நிராகரித்துக் கொண்டேயிருப்பதும் முடியாத விடயம். அதனால் ஒரு கட்டத்தில் இலங்கை அரசு தமிழருக்கு உரிய உரிமைகளை வழங்கியே தீர வேண்டிய கட்டாயத்தினுள் வந்தே ஆக வேண்டும். இல்லையேல் நாடு சில வெளிநாடுகளின் உதவியோடு துண்டாடப்படுவதற்கு அரசே வழி சமைத்தது போல் ஆகிவிடும். இதைப் பல சிங்கள புத்திஜீவிகள் புரிந்தே வைத்திருக்கின்றார்கள்.

போட்டி நடக்கேக்கில வர்ணனையாளருடன் கதைக்கலாமோ அண்ண? நான் அறிய போட்டி நடக்கமுதலும் , முடிஞ்சாபிறகும் தானே மைக்க கோண்டே நீட்டுறவ?

போட்டி நடக்கும் போது குறிப்பிட்ட சில வீரர்களுடன் வர்ணனையாளர் கருத்துப் பரிமாறுவது வழமையான ஒன்று. இதை நீங்கள் அறியாமல் இருந்திருக்கலாம். அதுபோல் போட்டிகள் முடிந்த பின் மைக்கை நீட்டிப் பிடித்தபடி வீரர்களை அணுகுபவர்கள் ஊடகவியலாளர்கள் அவர்கள் வர்ணனையாளர்களல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணியில் பலரிருக்க ஏன் ஜெயசூர்யாவில் மட்டும் இந்த குற்றச்சாட்டு? அதுவும் இவ்வளவு காலமும் இல்லாமல் இப்போது ஏன்?

இதைத்தான் நெருப்பு இல்லாமல் புகையாது என்பார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:( தும்பளையான்,

அருமையான கருத்து. நாங்கள் புலிகளை சிறிதுகாலத்துக்கு பேசாமல் இருக்கச் சொல்லுவோம். நீங்கள் உங்களின் நல்ல நண்பர்கள் மூலமும், இன்னமும் நீங்கள் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் சிங்களவர்களையும் முயற்சித்து ஈழத்தை வென்றெடுக்கப் பாருங்கள்.

இந்த யோசனையை நாங்கள் முன்னமே விளங்கியிருந்தால் 56, 77, 83 கலவரங்களையோ, அல்லது அதுக்குப் பின் விடாது நடந்துவரும் இனப்படுகொலையையோ தடுத்திருக்கலாம் !!!

எனக்குக் கிடைத்த நண்பர்கள் ?! நீங்கள் சொல்லுவதுபோல நான் துரதிஷ்ட்டக்காரந்தான்.நீங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராய இணங்கி இருக்கினம் எண்டால், அந்தத் தீர்வில அவர்களுக்கு ஒரு விருப்பம் இருந்திருக்கத்தானே வேணும்? :( இல்லாவிட்டால் மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ரீதியில நடந்த பேச்சுவார்த்தைகளில் அப்படிக் கூறியிருக்க மாட்டினம் தானே? உங்களுக்கு ஒரு விஷயத்தில விருப்பம் இருந்தாத்தானே அதைப்பற்றி ஆராய வெளிகிடுவியல்? :icon_mrgreen:

இராஜதந்திரிகளின் பாஷையை விளங்கினால் உண்மை எதுவென்று விளங்கும். அன்ரன் பாலசிங்கம் இராஜதந்திர ரீதியில் கூறியதின் தார்ப்பரியத்தை விளங்காமல் தேசியத் தலைமை சமஸ்டிக்கு இணங்கிவிட்டதாக அர்த்தம் கொடுக்கக் கூடாது. அப்படியே இணங்கி இருந்தால் அதற்குப் பிந்தைய பேச்சுவார்த்தைகளில் சமஸ்டித் தீர்வை ஆராய்ந்து தற்போது சமஸ்டி ஆட்சியும் வந்திருக்கும். கருணா கூட புலிகளுடன் இருந்திருக்கலாம். ஏன் இப்படியெல்லாம் நடக்கவில்லை?

சிங்களவர்கள் சமஸ்டியைக் கூட தரமாட்டார்கள் என்பது அவர்கள் இணைந்த வடகிழக்கைப் பிரித்தபோது விளங்கியிருக்க வேண்டும். இப்போதும் ஒரு சில நல்ல சிங்கள நண்பர்கள் நமக்கு இருப்பதால் (உ+ம்: பிரையன் செனவிரத்தினா) சிங்களவர்கள் எமது பிரச்சினையினை உளப்பூர்வமாகத் தீர்க்க முயல்வார்கள் என்று நம்புவதும், அவர்களுடன் ஒரே நாட்டில் அன்னியோன்யமாக வாழலாம் என்று நம்புவதும் மடைமைத்தனம்............

Link to comment
Share on other sites

நீங்க கிரிக்கெட் பார்த்து கனகாலமோ பல்லவன் அண்ணை? :( இந்தியாவில நடந்த IPL 20/20 போட்டி பார்த்திருகிரிங்கலோ? முக்கியமான வீரர்களின் உடலில் தொலைத்தொடர்பு சாதனம் பொருத்தப்பட்டு அவரோட கள நிலைமைகளை நேரடியா ஆராய்வினம். பந்து வீசுவதற்க்கிடயிலும் ஓவர்களின் இறுதியில் கள இடங்களை வீரர்கள் மாற்றும்போதும் கதைப்பினம். கதைக்கும் போது பந்து போட வெளிக்கிட்டால் கதைப்பதை நிறுத்திவிட்டு பந்து போட்ட பின்னர் தொடர்வீனம். வேணும் எண்டால் கிரிக்கெட் விளையாடுற, பாக்கிற ஆராயும் கேட்டுப்பாருங்கோ...

ஓமண்ணை , நான் கிரிக்கட் பார்க்கிறல , ஆர்வமும் இல்ல. எங்கட போராளிகள் களத்தில தொலைத்தொடர்பு சாதனத்தோட நிக்கிறத பாத்திருக்கிறன் ? ஆனா கிரிக்கட் களத்தில வீரர்கள் தொலைத்தொடர்பு சாதனத்தோட நிக்கிறத இப்ப தான் கேள்விப்படுகிறன் ?

தகவலுக்கு நன்றி அண்ணை

கள நிலைமைகளை நேரடியா ஆராய்வினம் :icon_mrgreen: கள நிலைமைகளை நேரடியா ஆராய்வினம் :)

Link to comment
Share on other sites

ரகுனாதன்,

உங்களின் சிங்களவர்களுடனான அனுபவங்களில் 90% என்னுடன் ஒத்து போவன. சரியாக சொன்னீர்கள் நான் 25 வருடம் அவர்களுடனேயே இருந்து, கல்வி கற்று, ஒன்றாக வேலை பார்த்தவன்.

சிங்களவர்களின் கலை: தமிழ் இன எதிர்பின் வடிவம்

அவர்களின் கல்வி: எம் இன அழிப்பின் கருத்தியல்

அவர்களின் வரலாறு: எம்மை அழிக்க துணை போகும் ஆவணங்கள்

அவர்களின் விளையாட்டு: எம்மை அழிக்கும் அரசின் முக மூடி நாடகம்

அவர்களின் இருப்பை: எம் உயிர் வாழ்தலை கேள்விக்குட்படுத்தும் தர்க்கம்

பிரசன்ன விதானகே, சுனந்த தேச பிரிய, பிறையன் செனிவிரட்ன. விக்கிரமபாகு கருணாரட்ன போன்ற விரல் விட்டு எண்ண கூடியவர்களை தவிர்தால், அனைவரும் இனவாத அரசுக்கு துணையாகவும் அதாகவும் போகின்றவர்களே

Link to comment
Share on other sites

ஓமண்ணை , நான் கிரிக்கட் பார்க்கிறல , ஆர்வமும் இல்ல. எங்கட போராளிகள் களத்தில தொலைத்தொடர்பு சாதனத்தோட நிக்கிறத பாத்திருக்கிறன் ?

போட்டி நடக்கேக்கில வர்ணனையாளருடன் கதைக்கலாமோ அண்ண? நான் அறிய போட்டி நடக்கமுதலும் , முடிஞ்சாபிறகும் தானே மைக்க கோண்டே நீட்டுறவ?

:(:):icon_mrgreen::(

Link to comment
Share on other sites

தற்போது கொழும்பிலும், பிற பகுதிகளிலும் தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே பலர் சிறைபிடிக்கப்படுகின்றார்கள???. அவமானத்திற்கு உள்ளாகின்றார்கள். நல்ல இதயம் கொண்ட சிங்களவர்கள் ஏன் கட்சி பேதமின்றி இவற்றை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராட்டம் நடாத்தாமல் இருக்கின்றார்கள்? ஏன் நண்பர்களையே சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றார்கள்?

தமிழர்களை சமனாக நடாத்த பெரும்பான்மையான சிங்களைவர்களுக்கு சம்மதமில்லை.. பல நூற்றாண்டுகளாக விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட "இலங்கைத் தீவு சிங்கள பெளத்த மக்களுக்கே உரியது" என்ற கோட்பாட்டை புலிகள் மாத்திரமே கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்கள். அதனால்தான் புலிகளை அழிப்பதன் மூலம் தமிழர்களை உரிமையற்ற பிரஜைகளாக தமது காலடியில் போட்டு நசுக்கலாம் என்று படித்த/படிக்காத சிங்களவர்கள் நம்புகின்றார்கள்.

எனினும் நம்மில் சிலர் இன்னமும் சிங்களவர்களோடு சேர்ந்து இலங்கைத் தீவை மீண்டும் சொர்க்க புரியாக மாற்றலாம் என்று கனவு காண்கின்றார்கள்.

சிங்களவர்கள் சமஸ்டியைக் கூட தரமாட்டார்கள் என்பது அவர்கள் இணைந்த வடகிழக்கைப் பிரித்தபோது விளங்கியிருக்க வேண்டும். இப்போதும் ஒரு சில நல்ல சிங்கள நண்பர்கள் நமக்கு இருப்பதால் (உ+ம்: பிரையன் செனவிரத்தினா) சிங்களவர்கள் எமது பிரச்சினையினை உளப்பூர்வமாகத் தீர்க்க முயல்வார்கள் என்று நம்புவதும், அவர்களுடன் ஒரே நாட்டில் அன்னியோன்யமாக வாழலாம் என்று நம்புவதும் மடைமைத்தனம்............

மிகச்சரியான கருத்துக்கள்! பாராட்டுக்கள்!!!

ஒரு சிறு திருத்தம்!

சிங்களவர்கள் சமஷ்டியைக் கூட தரமாட்டார்கள் என்று சொல்வதை விட சமஷ்டியை தர தாமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லலாம்.

விடுதலைபுலிகளின் கை இராணுவரீதியாக ஓங்கும் போது சில நாடுகளின் தலையீட்டாலும் நிர்ப்பந்தத்தாலும் சிங்களம் சமஷ்டி முறையை அளிக்க முன்வரும்.

ஆனால் அப்போது அது மிகவும் காலம் கடந்த முடிவாக இருக்கக்கூடும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் கலை: தமிழ் இன எதிர்பின் வடிவம்

அவர்களின் கல்வி: எம் இன அழிப்பின் கருத்தியல்

அவர்களின் வரலாறு: எம்மை அழிக்க துணை போகும் ஆவணங்கள்

அவர்களின் விளையாட்டு: எம்மை அழிக்கும் அரசின் முக மூடி நாடகம்

அவர்களின் இருப்பை: எம் உயிர் வாழ்தலை கேள்விக்குட்படுத்தும் தர்க்கம்

பிரசன்ன விதானகே, சுனந்த தேச பிரிய, பிறையன் செனிவிரட்ன. விக்கிரமபாகு கருணாரட்ன போன்ற விரல் விட்டு எண்ண கூடியவர்களை தவிர்தால், அனைவரும் இனவாத அரசுக்கு துணையாகவும் அதாகவும் போகின்றவர்களே

:( மிக்க நன்றி நிழல்,

நீங்கள் சொல்லிய அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய சிங்களவர்களை விட வேறு எவருமே எமது போராட்ட நியாயத்தை ஏற்றுக்கொள்ளவோ அல்லது தாம் செய்வது ஒரு இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை. அண்மைக்கால தேர்தல்களில் சிங்களவர்கள் வக்களித்த விதத்தைப் பார்க்கும் போது இது தெட்டத் தெளிவாகப் புரியும்.

எனது 25 வருடகால சிங்களவருடனான அனுபவத்தில் எவருமே எமது போராட்ட நியாயத்தை ஏற்றுக்கொண்டதாக என்னிடம் சொல்லவில்லை. ஆனால் தேவையில்லாமல் நீங்கள் சண்டை பிடிக்கிறீர்கள். உங்களால் தனிநாடு பெறமுடியாது. இது எமது நாடு என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனையிறவுத் தாக்குதல் நடந்த நாட்களிலும், முல்லைச்சமர் நடந்த நாட்களிலும், சீ.வீ.குணரத்திண கொல்லப்பட்ட நாட்களிலும் ஒற்றுமொத்த மொரட்டுவைப் பல்கலைக்கழகமே தமிழ் மாணவர்களைப் புலிகளாகப் பார்த்து நடந்து கொண்ட விதத்தை "எனக்குக் கிடைத்த துரதிஷ்ட்டவசமான சில நண்பர்கள்" என்று சொல்லிவிட்டு என்னல் இருக்க முடியாது.

சிங்கள இனவாதம் என்பது இன்று நன்கு பராமரிக்கப்பட்ட, அரச மயப்படுத்தப்பட்ட, செவ்வணே எண்ணெய் ஊற்றி வளர்க்கப்பட்ட ஒரு விருட்சம் என்பதை எம்மில் சிலர் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

வரலாற்றுத் திரிபு படுத்தல் என்பது பாலர் பாடசாலைப் புத்தகங்களினூடே ஆரம்பிக்கப்பட்டு எல்லாள துட்ட கைமுனு போரை சிங்கள இனத்தின் தமிழர் மீதான வெற்றியக நிறுவ முயலும் ஒரு சமூகம் தமிழர் சிலரின் "விளக்கப்படுத்தல்களால்" திருந்துமா என்று என்னால் சொல்லத் தெரியவில்லை.

எதுவுமே தெரியாத இந்தத் தலைமுறை என்று ஒன்றில்லை. அவர்களும் மிக தெளிவாகவே இனவாத சிந்தனையூட்டப்பட்டிருக்கிற

Link to comment
Share on other sites

எனது 25 வருடகால சிங்களவருடனான அனுபவத்தில் எவருமே எமது போராட்ட நியாயத்தை ஏற்றுக்கொண்டதாக என்னிடம் சொல்லவில்லை. ஆனால் தேவையில்லாமல் நீங்கள் சண்டை பிடிக்கிறீர்கள். உங்களால் தனிநாடு பெறமுடியாது. இது எமது நாடு என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனையிறவுத் தாக்குதல் நடந்த நாட்களிலும், முல்லைச்சமர் நடந்த நாட்களிலும், சீ.வீ.குணரத்திண கொல்லப்பட்ட நாட்களிலும் ஒற்றுமொத்த மொரட்டுவைப் பல்கலைக்கழகமே தமிழ் மாணவர்களைப் புலிகளாகப் பார்த்து நடந்து கொண்ட விதத்தை "எனக்குக் கிடைத்த துரதிஷ்ட்டவசமான சில நண்பர்கள்" என்று சொல்லிவிட்டு என்னல் இருக்க முடியாது.

சிங்கள இனவாதம் என்பது இன்று நன்கு பராமரிக்கப்பட்ட, அரச மயப்படுத்தப்பட்ட, செவ்வணே எண்ணெய் ஊற்றி வளர்க்கப்பட்ட ஒரு விருட்சம் என்பதை எம்மில் சிலர் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

வரலாற்றுத் திரிபு படுத்தல் என்பது பாலர் பாடசாலைப் புத்தகங்களினூடே ஆரம்பிக்கப்பட்டு எல்லாள துட்ட கைமுனு போரை சிங்கள இனத்தின் தமிழர் மீதான வெற்றியக நிறுவ முயலும் ஒரு சமூகம் தமிழர் சிலரின் "விளக்கப்படுத்தல்களால்" திருந்துமா என்று என்னால் சொல்லத் தெரியவில்லை.

சிங்களவர்களின் இனவாதம் என்பது அவர்களின் குழந்தைப்பருவத்தில் இருந்தே தஹம் பாசல்கள் ஊடாகவும் (விகாரைகளில் நடத்தப்படும் பௌத்தமதக் கல்வி) பிரிவேனாக்கள் ஊடாகவும் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. அவர்களின் பிஞ்சு வயதில் விதைக்கப்படும் அந்த நஞ்சு வளர்ந்து விருட்சமாகி அவர்களை மிக மோசமான இனவாதிகளாக ஆக்கி விடுகிறது.

எனக்கு மிக நெருங்கிய சிங்கள நண்பர்கள் உண்டு, பல்கலைக்கழகங்கள் வரை கல்விகற்ற அவர்கள் தனிப்பட்ட ரீதியாக மிக அந்நியோன்யமாக பழக கூடியவர்கள் தான். ஆனால் தமிழரின் உரிமைகள் என்று வரும் போது அவர்கள் அனைவரும் அரசியல் குருடர்கள் போல் கருத்து வைப்பதையே பார்த்திருக்கிறேன். எனது கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பலர் பல வேளைகளில் மழுப்புவதுண்டு. ஆனால் இத்தனை வருடங்களாக அவர்களில் எவரும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் இனவாதத்தை மாற்றிக்கொண்டதையோ, மனமாற்றம் அடைந்தததையோ நான் பார்க்கவில்லை

எனது தமிழ் நண்பர் ஒருவர் கொழும்பில் சிங்கள் மொழி மூலமாகவே உயர்தரம் வரை கல்வி கற்றவர். அவரின் பாடசாலையில் சிங்கள இனவவாதத்தால் அவருக்கு ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களை என்னிடம் சொன்னதுண்டு.

அந்த நண்பர் சொன்ன ஒரு மகாவம்சக்கதை.

ஒரு நாள் துட்டகைமுனு (The one who established a Sinhala kingdom in Anuradhapura later on) முழங்கால்களையும் தலையும் மடக்கிக்கொண்டு சுருண்டு படுத்திருந்தானாம் அப்போது போதிய அளவு இடம் இருக்கிறதே ஏன் இப்படி சுருண்டு படுக்கிறாய் என்று கேட்டதற்கு துட்டகைமுனு சொன்னானாம், ஒரு பக்கம் தமிழர்களும் இன்னொரு பக்கம் கடலும் இருக்கிறது, நான் எப்படி கால்களை நீட்டி படுப்பது என்று

சிங்களவர்கள் கால்களை நீட்டி படுப்பதற்கு கூட தமிழர்கள் இடையூறாக இருக்கிறார்கள் என்னும் மகாவம்ச நஞ்சை ஐந்து வயதில் இருந்தே சிங்கள குழந்தைகளுக்கு பௌத்த மதக்கல்வி என்னும் பெயரால் விதைக்கும் ஒரு நாடு (Sri Lanka) எப்படி உருப்படும் என்று கதையை சொல்லி முடித்துவிட்டு எனது நண்பர் கேட்டார்.

மேலும் இதே மகாவம்சத்தில், துட்டகைமுனுவின் தாயார் விகாரமாதேவி துட்டகைமுனுவை வயிற்றில் சுமந்து கர்ப்பிணியாக இருந்த வேளையிலே, வழமையாக கர்ப்பிணிகளிடம் கேட்பது போல் உண்பதற்கு விருப்பமாக ஏதேனும் பொருள் வேண்டுமா என்று கேட்ட பொழுது, தமிழர்களின் இரத்தம் வேண்டும் என்று சொன்னதாக ஒரு கதை உள்ளது.

இப்படி பௌத்த மதக்கல்வி என்னும் பெயரால் மகாவம்சத்தின் இனவாத நஞ்சை பல நூறு வருடங்களாக குடித்துக் கொண்டிருக்கும் சிங்கள இனம் சீக்கிரமே திருந்திவிடும் என்று எதிர்பார்த்தால் தமிழர்களை விட முட்டாள்கள் உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது!!!

Link to comment
Share on other sites

நண்பர்களே சனத் ஜெயசூரிய நடு விரலை காட்டியது எவ்வளவுக்கு உண்மையோ அவ்வளவுக்கு எமது பெடியள் களத்துக்கு உள் போய் மிகப்பெரிய அட்டகாசம் புரிந்து விளையாட்டை குழப்பியுள்ளார்கள். எமது சகோதரர்களின் அட்டகாசத்தால் தான் சனத் நடுவிரலை மீடியாவுக்கு தெரியாமலும் நாசுக்காக கையை காட்டினார் என்பது பல நண்பர்கள் ,உள்ளே சென்றவர்களின் நம்ப தகுந்த கருத்து. உள்ளே எம்மை விட பல சிங்களவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் உட்பட பேசாமடந்தைகளாக இருந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.ஜெய சூரியா இனவாதியா இல்லையா என யாழ் கள உறுப்பினர்கள் நிர்ணயிக்கட்டும்..

அருமையான கருத்துக்களை வழங்கிய கிருபன், வசம்பு ,நிழலி, பல்லவன், ரகுநாதன், வெற்றிவேல் , மற்றும் பல நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

ஒரே ஒரு ஆதங்கம்: ஒரு சில பிறயன்களோ, அல்லது ஒரு சில விக்கிரமாகு கருணா ரட்ணாவால் எதையும் சாதிக்க முடியாது. அவ்வளவுக்கு சிங்கள மக்களின் நிலை. உ+ம்: தமிழ் செல்வன் அண்ணா இறந்த போது வெடி கொழுத்திய மக்களை உதாரணம் காட்ட முடியும் இவர்கள் எவ்வளவுக்கு இனவாதம் ஊட்டப்பட்டுள்ளார்கள் என.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.