Jump to content

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!


Recommended Posts

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

http://www.worldtamilnews.com/ - Kural vadivam ingee. Kavithai Kelungal (new)-20.10.2008

உங்களைச் கொஞ்சம்

உலகம் தேடும்

முத்தமிழ் சிவப்பாகும்

போர் மேகங்கள் சூழும்

உங்களுக்கும் வலிகள் புரியும்

இயந்திரப் பறவைகள் எதிரியாகும்

ஆமிக்காரன் இயமன் ஆவான்

உயிர் வெளியேறிய

உடல்களை காகம் கொத்தும்

விழிகளிலே குருதி கசியும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

தொப்புள் கொடியில்

பலமுறை தீப்பிடிக்கும்

பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?

ஒரணியில் திரண்டு

ஒரே முடிவு எடுப்பீர்களா?

உங்கள் அரசியல் விளையாட்டில்

எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!

எந்த இனத்தவனும் உங்களை

மன்னிக்கமாட்டான்

சொந்த இனத்தவனைக்

நீங்கள் காத்திட மறந்துவிட்டால்

வாயிலே நுழைவதெல்லாம்

உங்கள் வயிற்றிலே செரிக்காது

சொந்த சகோதரன்

அங்கே பட்டினியில் சாகும்போது

இந்த தாகம் இந்தச் சோகம்

இந்த இன அழிப்பு

இந்த பேர் இழப்பு

எல்லாம் தமிழனுக்கே

வாய்த்த தலைவிதியா?

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

குருதியில் அடிக்கடி

நீ குளிப்பாய்

பெற்ற பிள்ளையை

படுக்கையில் நீ இழப்பாய்

நித்திரையில் நிம்மதியே இருக்காது

மரநிழலில் மனம் குமுறும்

நரம்புகள் வெடிக்கும்

நா வறண்டு போகும்

பெண்களின் ஆடைகள் தூக்கி

பேய்கள் வெறி தீர்க்கும்

ரத்த ஆறு வழிந்தோடும்

நடுவிலே நாய் நக்கும்

தலையில் செல்வந்து விழும்

தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே

பதுங்கு குழிகளில் வாழ

உங்களால் முடியுமா?

அகோரத்தின் உச்சத்தை

உணர்ந்தது உண்டா?

அழுது களைத்து மீண்டும்

எழுந்து நின்றது உண்டா?

உன்னைப் புதைக்கும் இடத்தில்

உயிர் வாழப் பழகியதுண்டா?

உலகம் எங்கும் சிதறி

தாயைப் பிரிந்து வாழும்

துயரத்தை அனுபவிக்க முடியுமா?

பனிக் குளிரில் பனியோடு

பனியாய்க் கரைந்து

உங்களால் உறைய முடியுமா?

சவப் பெட்டிக்குள் உறங்கி

நாடு விட்டு நாடு போய்

நரகத்தில் தொலையமுடியுமா?

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

பாண் துண்டோடு பருப்பு

பகலில் வயிறு பசியாறும்

பாதி வயிற்றோடு நெருப்பு

இருளில் குளிர் காயும்

சிறைச்சாலைக்கும் திறந்தவெளிச்

சிறைச்சாலைக்கும்

ஒரே ஒரு பொருள்தான்

எங்கள் யாழ்ப்பாணம்!

பாலைவனத்து ஒட்டகமாய்

பாம்புகளுக்கு நடுவில்

எங்கள் வாழ்க்கை ஓடும்

ஊரின் பெயரோ மட்டக்களப்பு!

தாய்மண் தேகத்தை சுவைத்து

ஆட்டுக்கறியாக பங்கு போடும்

நவீன மிருகஙக்ளை

யார் வேட்டையாடுவது?

ஆண்ட பரம்பரையின்

அடையாளத்தை அழிக்கமுடியுமா?

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளும் கட்சிகள்

ஆட்சி இழந்தாலும்

அனைத்துக் கட்சிகள்

கூட்டம் நடந்தாலும்

தமிழகம் முழுவதும்

கடைகள் மூடப்பட்டாலும்

திரையுலகமும் திரண்டு

பேரணியில் சென்றாலும்

இலக்கியத் தோப்பினில்

எரிமலை எழுந்தாலும்

தனித் தனியாக நீங்கள்

உண்ணாவிரதம் இருந்தாலும்

எப்போதும் உங்களை

நெஞ்சிலே சுமக்கின்றோம்

தணியாத தாகமாய்

விடுதலை கேட்கிறோம்!

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்கள் எழுச்சியால்

எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!

நீட்டியுள்ள நேசக்கரத்தை

உறுதியாய்ப் பற்றுகின்றோம்!

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

-தமிழன், நோர்வே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வைரமுத்துவின் 'காதலித்துப் பார்" என்ற கவிதையின் யதியில் 'ஈழத்தமிழனாய் வாழ்ந்துபார்" என்ற உங்கள் படைப்பு நெளிவு சுழிவு இன்றி பரவி உள்ளங்களை வியாபிக்கிறது. வாசிக்கத் தூண்டுகிறது. மெல்ல இழுத்து இதமாய் வருடி அழச் சொல்லிக் கொடுக்கிறது. தொடருங்கள். பாராட்டுகளும் நன்றியும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை வாழ்த்துக்கள்

தமிழ் நாட்டு சஞ்சிகைகளிலும் முடிந்தால் இணைத்திவிடுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamizhvaanam

ஈழத் தமிழரின் வலிகளை வரிகளில் சொல்லி கண்களில் நீர் வழிய வைத்து விட்டீர்கள். தாய் நாட்டில் இவ்வளவு நடந்து கொண்டிருந்தாலும் ஒன்றுமே நடக்காதது போல இருக்கும் ஒவ்வொரு தமிழனின் கண்களையும் திறக்கும் படியான வரிகளைத் தந்ததற்கு வாழ்த்துக்கள்.

இளங்கவி

Link to comment
Share on other sites

அன்பு நண்பர்கள், வல்லைசகாரா, ஈசன், முனிவர் அனைவருக்கும் எனது நன்றிகள். நான் கவிதை எழுதத் தொடங்கிய காலத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதைகளும், அவர் எழுதுகின்ற வடிவங்களும் எனக்குப் பிடிக்கும். ஆகவேதான் அவருடைய காதலித்துப் பார் என்னும் கவிதை வடித்தினைப் பாவித்தேன். எங்களுடைய வலிகளை எந்தெந்த வடிவங்களில் எல்லாம் மக்களுக்குச் சொல்ல முடியுமோ அதையெல்லாம் முயற்சிக்கின்றேன்.

எங்கள் தாயகத்தில் ஏற்பட்டு இருக்கின்ற பேரவலத்தின் உச்சத்தை எந்த வடிவங்களில் எல்லாம் இந்த உலகிற்குச் சொல்ல முடியுமோ, அந்த வடிவங்களில் எல்லாம் பதிவு செய்து இந்த உலகை உலுக்க வேண்டும். தமிழினத்திற்கு விரைவான விடுதலை கிடைக்க, எங்கள் தொப்புள் கொடி உறவாக தமிழக உறவுகள் புறப்பட்டுவிட்டார்கள்.

அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியது புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஒவ்வொரு ஈழத் தமிழனின் கடமையாகும். என் உணர்வின் பதிவுகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். தமிழ்நாட்டில் உள்ள இணையத்தளங்கள் பலவற்றில் இந்தக் கவிதை வெளிவந்துள்ளது. இது எனக்கும் மகிழ்வைத் தருகின்றது. தமிழக முதல்வர் கலைஞர் ஐயா அவர்களுக்கும் இக் கவிதையை அனுப்பி வைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக அருமையான வரிகள்.

இந்தக் கவிதையை குமுதத்துக்கோ, விகடனுக்கோ அனுப்பிவையுங்கள்.

எங்கள் உணர்வின் உறுதியை வலிகளின் நேரத்திலும் மறையாத தமிழ் வைராக்கியத்தை அழகாகக் கோர்வையாக்கி இருக்கின்றீர்கள்..

Link to comment
Share on other sites

நல்ல கவிதை..

Link to comment
Share on other sites

அன்புள்ள யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மீண்டும் வணக்கம். உங்களுடைய கருத்துகள், பாராட்டுக்கள் அனைத்திற்கும் எனது நன்றிகள்.

இந்தக் கவிதை தமிழகத்தில் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது. நான் அறிந்த வரையில் கிட்டத்தட்ட ஐந்து இணையத் தளங்கள் இக்கவிதையினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து இயங்குகின்ற தமிழ்குரல் எனும் இணைய வானொலி என் கவிதையின் குரல் வடிவம் ஆக்கியுள்ளது. நீங்களும் கேட்டுப் பாருங்கள். இக் கவிதையினை முத்தமிழ் கூகிள் குழுமத்தில் இணைத்த சோழியான் அவர்கட்கு என் இதயபூர்வமான நன்றிகள். ஈழத் தமிழனின் வலிகள் இனி இந்த உலகினை அதிர வைக்கட்டும். தொடர்ந்து எழுதுவோம். கவிதையின் ஒலிவடித்தைக் கேட்பதற்கு தொடக்கத்தில் உள்ள கவிதையருகே செல்லுங்கள். கேட்டுக் கொண்டே மீண்டும் ஒருமுறை கவிதையைப் படிக்கலாம். இந்தக் கவிதையின் ஒலிவடிக் குரலுக்குச் சொந்தகாரர் அப்துல் ஐபார் அவர்கள். அவருக்கும் எம் ஈழத் தமிழர்கள் சார்பில் ஆயிரம் நன்றிகள்

Link to comment
Share on other sites

வலைப்பூ உலகத்திற்கும் எடுத்து சென்றுள்ளோம்.....இது போல் பல ஆக்கங்கள் வர வேண்டும்...

Link to comment
Share on other sites

தங்கள் எழுது்துக்களும் எண்ணங்களும் மேலும் பலம் சேர்க்க வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலியை எழுத உங்களால் முடிகிறது.

வலிகளை எழுத உங்களால் முடியவில்லை.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளும் கட்சிகள்

ஆட்சி இழந்தாலும்

அனைத்துக் கட்சிகள்

கூட்டம் நடந்தாலும்

தமிழகம் முழுவதும்

கடைகள் மூடப்பட்டாலும்

திரையுலகமும் திரண்டு

பேரணியில் சென்றாலும்

இலக்கியத் தோப்பினில்

எரிமலை எழுந்தாலும்

தனித் தனியாக நீங்கள்

உண்ணாவிரதம் இருந்தாலும்

எப்போதும் உங்களை

நெஞ்சிலே சுமக்கின்றோம்

தணியாத தாகமாய்

விடுதலை கேட்கிறோம்!

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்கள் எழுச்சியால்

எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!

நீட்டியுள்ள நேசக்கரத்தை

உறுதியாய்ப் பற்றுகின்றோம்!

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

-தமிழன், நோர்வே

உணர்ச்சிபூர்வமான கவிதை.

உரியவர்கள் உணர்வார்கள் என நம்புவோம்.

Link to comment
Share on other sites

வாசகி உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்கின்றேன்.

உங்கள் கருத்துக்கு நன்றிகள்

மண் மணம் வீசும் மல்லிகை வாசத்திற்கு எனது நன்றிகள்.

தமிழ்சினிமா இணையத்தளமும் எனது கவிதையை தங்கள் தளத்தில் இணைத்துள்ளது.

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...ber/201008d.asp

Link to comment
Share on other sites

வலியை எழுத உங்களால் முடிகிறது.

வலிகளை எழுத உங்களால் முடியவில்லை.

வாழ்த்துக்கள்.

'வலியை எழுத உங்களால் முடிகிறது.

வழிகளை எழுத உங்களால் முடியவில்லை.' என்கிறாரா?

நோர்வே தமிழனிடம் ஒரு கேள்வி! :)

'தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!'

இந்த பகுதியில் உள்ள முதலாவதுது வரி சரியா? அப்படித்தான் எல்லா தளங்களிலும் உள்ளது. ஆனால் எனக்குத்தான் தென் பொருள் புலப்படவில்லை. ஆகவே, கீழ்க் கண்டவாறு சிறு திருத்தம் செய்தேன்.. பொருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் எது சரி என்பதை எழுதியவர்தான் சொல்லணும்.

'தட்டிவீட்டு வேலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'வலியை எழுத உங்களால் முடிகிறது.

வழிகளை எழுத உங்களால் முடியவில்லை.' என்கிறாரா?

இப்பிடி உசுபேத்தி உசுப்பேத்தியே சோலியை முடிச்சிடுவீங்க போல. :)

Link to comment
Share on other sites

சோழியான் அண்ணா, உங்களுக்கு ஒரு குழப்பமும் வேண்டாம். நான் எழுதியிருப்பது சரியானதே.

நோர்வே தமிழனிடம் ஒரு கேள்வி! :)

'தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!'

தலையில் செல் வந்து விழும்

தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும். :blink:

இந்த பகுதியில் உள்ள முதலாவது வரி சரி அப்படித்தான் எல்லா தளங்களிலும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்வானம்! சில நாட்களுக்கு முன் நான் ஒரு நன்பர் வீட்டில் இருந்தபொழுது ஐ.பி.சியில் அப்துல்ஜபாரின் உரை போய்க்கொண்டிருந்தது. இறுதியில் அவர் இப் பாடலைக் கூறிமுடித்தார். நன்றாயிருக்கிறதேயென நினைத்தேன். இங்குதான் அதன் நதிமூலம் அறிந்தேன். தொடருங்கள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்......தமிழ்வானம் நன்றிகள்,.........

Link to comment
Share on other sites

வலிகள் உன்னையும் வல்லவனாக்கும்

வாழ்க்கையும் உன்னைத் தேடி நோக்கும்

உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்கும்

உதவாதவன் என்ற சொல்லைப் போக்கு.

வீழ்வது மட்டும் வாழ்க்கையில்லை

மீள்வதும் எமக்கு உரிமைதானே.

சாவதைக் கண்டு பதைபதைத்தால்

வாழ்வதற்கேது உரிமை நமக்கு

சோர்வது எல்லோரின் உணர்வுதான்

சேர்த்;திடாதே உந்தன் உணர்வில்தான்.

காலங்கள் மாற்றத்தின் ஒழுக்கு

கலங்காதே வாழ்க்கை நம்மிடமே,

வலியைப் பொறு

வாழப் பழகு

வாழ்ந்துபார் நீயும்

ஈழத்மிழனாய்.

Link to comment
Share on other sites

அன்புள்ள, ஜெயபாலன் அண்ணா, சுவி, புத்தன் மற்றும் இறைவனுக்கும் எனது நன்றிகள். நான் என்ன காரணத்திற்காக இக் கவிதையினை எழுதினேனோ அதற்கான பலன் தமிழ்நாடு எங்கும் கிடைத்திருப்பது மகிழ்வாக இருக்கின்றது.

நான் தொடர்ச்சியாக எம் மக்களினுடைய வாழ்க்கை தொடர்பான வலிகளின் தேடல்களை நோக்கிப் பயனித்துக் கொண்டிருப்பதால் உடனடியாக இங்கே உங்களுடைய பதிவுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் உள்ளது. புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.

இறைவன்:

வலிகள் தாங்கும் வலிமை வளர்ப்போம்

வெடிகள் கேட்கும் பூமியை வெல்வோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு நல்ல சேதி..

தோழரில் இந்தக்கவிதை இவ்வார ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. கேள்வியும் நானே பதிலும் நானே என்ற பகுதியில் ஈழம்? என்ற கேள்விக்கு பதிலாக இந்தக்கவிதை இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன் தோழரே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.