Jump to content

பருவத்தே செய்யும் பயிர் .............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பருவத்தே செய்யும் பயிர் ..............

அன்று ஞாயிறுமாலை ஆதவன் கடற்கரையோரமாய் அமர்ந்திருந்தான் .எண்ண அலைகள் தாயகம் நோக்கி செல்ல தொடங்கியது கல்வியின் உயர் தரம் முடித்து பெறுபேறுகளுக்காக காத்திருந்த நேரம் .ராணுவ அடகாசங்கள் கட்டு மீறி செல்ல தொடங்கியிருந்தது .. ஆதவனின் அப்பாவும் அம்மாவும் இவனை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்தனர் .அதற்கான ஒழுங்குகள் ஏற்கனவே அங்கு இருந்த மாமாவால் செய்யபட்டு ,காணி பூமி ,அக்கா கெளசலா திருமணத்திற்கென வைத்திருந்த உடமை இ எல்லாம் பணமாகி ,அவன் லண்டனை அடைந்தான் . மூன்று மாதங்கள் மாமாவீடின் சுகம் பிரிவை கொஞ்சம் தணித்து .மெல்ல மெல்ல வேறிடம் பார்கவேண்டியதேவை ,மாமா உணர்த்த ,அவன் இடம் மாறினான் .

சிலமாதங்கள் ஆக பெற்றவரிடமிருந்து இருந்து கடன் பத்திரத்தை மீட்க பணம் அனுப்பும் படி கடிதம் வந்தது ,இவ்வாறு அவன் அனுப்பும் செலவை மீத படுத்த மூன்று மாத காசை ஒரே தடவையில் அனுப்பினான் .காசை எப்படி உழைத்தான் என்பது வேறுகதை ,படிப்பில் ஆர்வமுள்ள அவன கஷ்டத்தின் மத்தியிலும் படித்தான் ,இரவில் வேலையும் ,பகலில் படிப்பும் ,ஆகி ,நித்திரை குறைய உடல் சோர தொடங்கியது ,இதற்கிடையில் கேளசலாவின் கலியாணம நடந்து முடிந்தது ,தம்பியின் காசில் கோலாகலமாக் கலியாணத்துக்கு மாறிய கடன் கட்ட இரண்டாவது வேலை தொடங்கினான் . காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடியது .

தகப்பனும் இளைப்பாறி ,தாயக கெடுபிடியால் அவர்கள் மருமகனின் துணையுடன் கொழும்புக்கு இடம் மாறினார்கள். அதற்கும் ஒரு பெரிய தொகை நண்பர்களிடமும் ,முதலாளியிடமும் உருட்டி பிரட்டி அனுப்பி வைத்தான் , காலம் தன் கடமையை செய்ய அவனும் முப்பது வயதானான் . தந்தையின் ஓய்வு ஊதியா பணம் போதாது என்றும் மாதம் மாதம் அனுப்பும் படியும் கடிதம் மேல் கடிதம் வரும் சிலசமயம் மேசையில் உள்ள கடிதம் திறக்க படாமலே இருக்கும் .கேளசலாவும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகி ,வாழும் காலத்தில் , ஆதவனை பற்றி , அவன் உணர்வுகளை பற்றி சிறிதும் எண்ணவில்லை ,தந்தையாரும் காலமானார் . பதின் மூன்று வருடங்காளாகின.... ஒரு நாள் அதிகாலை , டெலிபோன் (தொல்லை பேசி ) சிணுங்கியது ,உடன் தங்களுக்கு அழைக்கும் படி .... சேதி இது தான் ............ அக்கா மகள் பெரியவளாகி விடாள் . ஆதவன் மனம் வேதனையால் துடித்தது. இவர்களுக்கு எந்நேரமும் காசு .....காசு என்று ,நான் என்ன காசு காய்க்கும் மரமா ? கோடியில் வெட்டி அள்ளியா காசு வரும் . எதோ கடமைக்காக அனுப்பி வைத்தான். மறு மாத மடலில் அவனது ,முகம் தெரியா மருமகளின் வித விதமான் போட்டோக்கள் (நிழல்படம் ) அன்றைய தபாலில் வந்திருந்தன . இன்னும் காலம் கடமையை செய்யா ,அவன் வந்து பதினாறு வருடங்கள் ஆயின .வயதும் முப்பதியாறானது . இப்போதெலாம் சாராசரி வாழ்கை காலம் அறுபது என்பார்கள் .அதில் முப்பத்தி ஐந்தில் மாரடைப்பு வருவது ,விதி விலக்கு .வாழ்கையின் மூன்றில் இரண்டு பகுதியை ,இழந்து விட்டான் .அக்காவோ அம்மாவோ அவனை பற்றி சிந்திபதாயில்லை .i ,உறவினர் கேட்டாலும் ,கடன் பிரச்சனை என்று சமாளித்து விடுவான் .

காலம் கரைந்து கொண்டாயிருந்தது .கடற்கரை இருள் சூழ்ந்து கொண்டது . தாயக சேதிகளை கேட்கும் அவன் மீண்டும் தாயகத்தில் ,தனது அயல்வீடு நண்பனை ....,இரண்டு மாதங்களுக்கு முன் மாவீரனான கேசவனை நினைத்து கொண்டது .அவர்களின் குடும்பம் தற்போது வவனியாவில் .இருந்தனர். . தன்வீடு நோக்கி செல்லும் அவனின் எண்ணத்தில் ,கேசவனின் அக்காவையும் குடும்பத்தினரையும் ,இந்தியாவுக்கு வரும்படி தொலை பேசியில் அழைத்து சொல்லவேண்டும் ........,கேசவனின் அக்காவுக்கு வாழ்கை கொடுக்கவேண்டும் என்று சிந்தித்தவாறு வீட்டு தொலை பேசியை சுழற்றினான் . காலம் இனிதாக கை கொடுக்க இன்று அவன் ஒரு வழி காட்டியாக ......................

யாவும் கற்பனை ..............

l

Link to comment
Share on other sites

நல்ல கதை அக்கா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை தான்.. ஆனால் இப்போ எல்லாம் பெண் பிள்ளைகளே வயதாகித்தானே திருமணம் செய்யினம். படிப்பு.. வேலை.. வீடு.. வாகனம் என்று...!

மேற்குலக நாடுகளில கூட அனேக ஆண்கள்.. 20பதுகளில் திருமணம் செய்வதை விரும்புவதில்லையே...! இப்போ மனிதனின் ஆயுட்காலம்.. நீண்டு விட்டதால்.. திருமணம் என்பதும் தள்ளிப் போகிறது வழமையாகிவிட்டது.

ஆனால் பெண்களுக்கு அதிகம் தள்ளிப் போவது நல்லதல்ல என்பது இயற்கையின் விதிப்பு. அது ஆயுட்காலம் கூடியதற்காக மாறாத விதி..! :)

Link to comment
Share on other sites

கேசவனின் அக்காவுக்கு வாழ்கை கொடுக்கவேண்டும் என்று சிந்தித்தவாறு வீட்டு தொலை பேசியை சுழற்றினான் . காலம் இனிதாக கை கொடுக்க இன்று அவன் ஒரு வழி காட்டியாக

முடிவு நன்றாக உள்ளது. நன்றி நிலாமதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகைவாசன் ........,நெடுக்ஸ் ......நுனாவிலான் ,யாவருக்கும் என் நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

தாய் நாட்டிலிருந்து புலம்பெயர் நாடுகளுக்கு வந்து தங்களது குடும்பங்களுக்காகவே தமது வாழ்க்கைகளைத் தியாகம் செய்யும் இளைஞர் யுவதிகளின் வாழ்கையை மிகவும் யதார்த்தமாகச் சொன்னதுக்கு....வாழ்த்துக்கள்.... நிலாமதி அக்கா

இளங்கவி

Link to comment
Share on other sites

ஓ..நம்ம நெலா(மதி) அக்காவின்ட கதையோ..யோ..!!.. :D

கதையோட்டம் மிக நன்றாக இருந்தது வாழ்த்து(கள்) நெலா(மதி) அக்கா..கா.. :unsure: எல்லோருக்கும் பருவத்தே பயிர் செய்ய தான் விருப்பம்..ம் ஆனா மழை பெய்யாது விடில்..ல் கடினம் தானே..னே.. :)

இவ் கதை நாயகனும் அவ்வாறு தான்..ன் போல..ல....கதையின் முடிவில் அவனின் முடிவும் அழகு..கு..!.. :D

அப்ப நான் வரட்டா!!

மேற்குலக நாடுகளில கூட அனேக ஆண்கள்.. 20பதுகளில் திருமணம் செய்வதை விரும்புவதில்லையே...! இப்போ மனிதனின் ஆயுட்காலம்.. நீண்டு விட்டதால்.. திருமணம் என்பதும் தள்ளிப் போகிறது வழமையாகிவிட்டது.

ம்ம்..தாத்தா..தா ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவது இல்லை 20 வயதில் ஆனால்..ல் அவையளுக்கு கொழந்தையும் இருக்கும்..ம் என்ன..ன.... :D

ஆனா பாருங்கோ வெள்ளைகள் இருக்கீனம் அவையள் 20 வயசில திருமணம் செய்து போடுவீனம்..ம் பிறகு கழற்றி விடுறது வேற கதை..தை :) ஆனா எங்களிண்ட ஆட்கள் 45 வயசில கல்யாணத்தை கட்டி போட்டு பிறகு 50 தில பிள்ளையை பெற்று விட்டு..டு.. :(

பிறகு உவையள் முகம் கொடுக்கிற பெரச்சினைகள் இருக்கே..கே..(முடியல).. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா பாருங்கோ வெள்ளைகள் இருக்கீனம் அவையள் 20 வயசில திருமணம் செய்து போடுவீனம்..ம்

வெள்ளையள் 20 இல கட்டிறது வலு குறைவு. காதலிக்குங்கள்.. எல்லாம் செய்யுங்கள்.. ஆனால் கலியாணம் கட்டாதுகள். குறிப்பா "ஊத்தை" வெள்ளை என்றுற.. ஊதாரி வெள்ளைகள் தான் 14 வயசிலும் கலியாணம் கட்டிக்கிறது. அது எங்கட சமூகத்திலும் இருக்குத்தானே..! :)

Link to comment
Share on other sites

வெள்ளையள் 20 இல கட்டிறது வலு குறைவு. காதலிக்குங்கள்.. எல்லாம் செய்யுங்கள்.. ஆனால் கலியாணம் கட்டாதுகள். குறிப்பா "ஊத்தை" வெள்ளை என்றுற.. ஊதாரி வெள்ளைகள் தான் 14 வயசிலும் கலியாணம் கட்டிக்கிறது. அது எங்கட சமூகத்திலும் இருக்குத்தானே..! :)

இல்ல இப்ப அநேகாமன வெள்ளைகள் 20 வயசிலையே கல்யாணமும் கட்டீனம் எண்டு நெனைக்கிறன்..ன் :icon_idea: ஏன் சொல்லுறன் எண்டா யூனிக்கு..கு கூட பிள்ளைகளோட வருவீனம்..ம்

கேட்டா கல்யாணம் அகீடுச்சு எண்டு தான் சொல்லீனம்..ம்.. :rolleyes: (உண்மையோ,பொய்யோ எனக்கு தெரியாது)..ஆனாலும் கெதியில கல்யாணம் கட்டுறது நல்லது தானே..னே.. :D நான் சொல்லுற கெதியில என்பது ஒரு 26 - 28 குள்ள 30 பிறகு எல்லாம் கல்யாணம் கட்டுறது..து

பிரயோசனமே இல்ல எண்ட பார்வையில..ல... :lol: மற்றது ஊத்த வெள்ளைகள் பிள்ளைகள் பெற்று கொண்டா காசு கெடைக்கும் எண்டு செய்யிறதுகள் தனி ரகம்..அது சரி நீங்க எத்தனை வயசில கல்யாணம் கட்டுறதா உத்தேசம் தாத்தா..!!.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.