Jump to content

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி?


தமிழர்கள் எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்?  

42 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

தமிழர்கள் திருமணம் செய்ய எப்படி வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

1) சாதகம் பார்த்து

2) காத்லித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்

3) காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல்

4) வேறு வழிகளில்

இதெல்லா வழிகளிலும் நடந்தே

சரிவராததுகளும் இருக்கு

சரி வந்ததும் இருக்கு

எல்லாம் விதி?

Link to comment
Share on other sites

சாதகம் பார்த்து திருமணம் செய்யிற காலம் எல்லாம் மலையேறிப்போச்சு. காதலித்துச் சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல் என்பது நல்ல திட்டம் தான் ஆனால் இது நடைமுறையில் சாத்தியப் படாத மற்றும் எங்கள் கலாச்சாரத்துக்கு ஒத்துவராத விடயம். அதால சிறந்த வழி காதலித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலை நீங்கள் கூறியது எல்லோருடைய வாழ்க்கையிலும் அமையுமா??? சந்தேகம் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல்

இதென்ன மதன் புதிசாய் இருக்கு..?? :wink:

Link to comment
Share on other sites

கலை நீங்கள் கூறியது எல்லோருடைய வாழ்க்கையிலும் அமையுமா??? சந்தேகம் தான்
சந்தேகம் தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம். அதால அதைக் கொஞ்சம் தள்ளி வைச்சிட்டு. நடக்குமென்று நம்புவோம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை

Link to comment
Share on other sites

வாழ்க்கைக்கு துணை...அதாவது நீங்க கருதிற... பெடியனுக்கு பெட்டை... பெட்டைக்கு பெடி... அவசியம் தானா... ஏன் ஒரு மனிதன் தனித்து இந்த உலகி வளமாக தொந்தரவுகள் இல்லாம வாழுறது கஸ்டமா...இல்ல உங்களுக்குப் பிடிக்கவில்லையா... சின்னனில இருந்து என்ன துணையாவா வந்தம் பூமிக்கு வாழ...தனியத்தனியத் தானே வந்தம்...! இடை நடுவில... ஏன் இந்தத் துணை என்று சுமையை ஏத்துறீங்க... அது அவசியம் தானா சொல்லுங்க...! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

வாழ்க்கைக்கு துணை...அதாவது நீங்க கருதிற... பெடியனுக்கு பெட்டை... பெட்டைக்கு பெடி... அவசியம் தானா... ஏன் ஒரு மனிதன் தனித்து இந்த உலகி வளமாக தொந்தரவுகள் இல்லாம வாழுறது கஸ்டமா...இல்ல உங்களுக்குப் பிடிக்கவில்லையா... சின்னனில இருந்து என்ன துணையாவா வந்தம் பூமிக்கு வாழ...தனியத்தனியத் தானே வந்தம்...! இடை நடுவில... ஏன் இந்தத் துணை என்று சுமையை ஏத்துறீங்க... அது அவசியம் தானா சொல்லுங்க...! :wink: :P :idea:

ஊருக்கு மட்டும் உபதேசமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவி சொல்லுறதும் சரிதான் இப்ப பெடியனுக்கு பெடியனெண்டும் பெட்டைக்கு பெட்டையெண்டும் வாழுகினம் இங்கு எனக்கு தெரந்த பல வெள்ளையள் இருக்கினம் ஆரம்பத்திலை எனக்கு ஆச்சரியமாகதான் இருந்தது இப்பசாதாரணமாய் போச்சு :twisted:

Link to comment
Share on other sites

குருவி சொல்லுறதும் சரிதான் இப்ப பெடியனுக்கு பெடியனெண்டும் பெட்டைக்கு பெட்டையெண்டும் வாழுகினம் இங்கு எனக்கு தெரந்த பல வெள்ளையள் இருக்கினம் ஆரம்பத்திலை எனக்கு ஆச்சரியமாகதான் இருந்தது இப்பசாதாரணமாய் போச்சு :twisted:

அட இதுவேற கண்றாவிகள் இருக்கல்ல.. நாங்க மனிதர்களுக்கான...உயிரினங்களு

Link to comment
Share on other sites

ஊருக்கு மட்டும் உபதேசமா?

உபதேசமில்ல...யோசிக்க வந்ததைச் சொன்னம்...இதில தப்பிருந்தா என்ன தப்பு எதில தப்பு எப்படியான தப்பு...எது சரி...எது தேவை என்று சொல்லுங்க....! :wink: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஅப்ப அவைவேற்றுகிரக வாசிகளா என்ன கணறாவியோ நினைத்தாலே அருவருப்பா இருக்கு நான் வேலை செய்யிற இடத்திலை ஒருத்தர் என்னை காதலித்து தர்ம அடி வாங்கினவர்.அப்பமற்றவர்கள் பிடித்துவிட்டார்கள் பின்னர் உனக்கு விருப்பமில்லாட்டி நாகரீகமாக மறுத்திருக்கலாமே ஏன்காட்டான்மாதிரி அடித்தனி என்றனர் நான் சொன்னேன் எங்கள் சமுகத்தில் உப்பிடி கேட்பதே அனாகரீகம் அதில் பிறகென்ன நாகரீகம் வேண்டி கிடக்கு ஊராய் இருந்தால் நடக்கிறதே வேறை என்று.அன்றிலிருந்து அந்த வெள்ளை எட்நின்றுதான் வணக்கம் சொல்லுவார் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவி தனியாய் வாழலாம். யார் முடியாது என்றது. நாளைக்கு நாங்கள் தனித்துவிடப்பட்ட நிலையில். அன்பு பாசம் பரிவு இதுகளிற்கு ஏங்கும் போது தான் துணையின் அவசியம் புரியும். ஒரு காலத்தின் பின் அம்மா அப்பாவையைப்பிரிய வேண்டி வரலாம். எல்லாரும் ஒரே விதமாய் இருப்பார்களா..?? தளர்ந்து நிக்கும் போது தாங்கிக்கொள்ள ஒரு தோள் துணையாய் இருந்தால் அதில் சுகம் அதிகம். நண்பர்கள் உறவினர்கள் எத்தனை நாள் உங்களுக்காய் வாழ்வார்கள். எங்களுக்காய் ஒரு உயிர் எதையும் செய்யத்துணியுது என்றால் ஒன்றில் பெற்றவர்களாய் இருக்கவேணும் இல்லாவிட்டால் கூடிய துணையாய் இருக்கமுடியும். மற்றவை எப்பவும் எட்டத்தான். ஏக்கங்கள் வாழ்க்கையாகாமல் இருக்க வேணும் என்றால் துணை அவசியம். :wink: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி இங்கைநிறைய வயோதிபர்மடம் இருக்கு நல்லா வைச்சு பாப்பினம் கவலைபடாதையுங்கோ என்ன சொன்னாலும் உங்களிற்கு கடைசியிடம் அதுதான் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை அது தானே சொன்னன் வயோதிப மடத்தில் கடமை உணர்வு இருக்கும். உரிமையுடன் அன்பு பாசம் அரவணைப்புக்கிடைக்குமா..?? வயோதிப மடம் போய்பாருங்கள் எவ்வளவு மன அழுத்தத்தின் மத்தியல் இருக்கிறார்கள் என்பது புரியும். :? எங்கட கொள்கை இது தான். யாரும் எமக்கு சேவை செய்கிற நிலை வந்தால் உயிரை விடுறது தான். வாழ்ந்து தினம் தினம் உறவுகளை கஸ்டப்படுத்திறதை விட. செத்து என்றோ ஒரு நாள் நினைவில் வருவது மேல். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அண்ணை அது தானே சொன்னன் வயோதிப மடத்தில் கடமை உணர்வு இருக்கும். உரிமையுடன் அன்பு பாசம் அரவணைப்புக்கிடைக்குமா..?? வயோதிப மடம் போய்பாருங்கள் எவ்வளவு மன அழுத்தத்தின் மத்தியல் இருக்கிறார்கள் என்பது புரியும். :? எங்கட கொள்கை இது தான். யாரும் எமக்கு சேவை செய்கிற நிலை வந்தால் உயிரை விடுறது தான். :wink:
அதை உடைனை செய்யுங்கோ குருவிகள் ஆனந்தமாய் பறக்கும் :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளா..எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள். ஏன் குருவிகளை நாங்க என்ன பிடிச்ச வைச்சிருக்கிறம். :evil: :twisted:

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா..எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள். ஏன் குருவிகளை நாங்க என்ன பிடிச்ச வைச்சிருக்கிறம். :evil: :twisted:

அதுதானே... குருவிகள யாரும் பிடிச்சு வைச்சிருக்கத்தான் முடியுமா... அதுகள் பறந்திடாதுகள்...! :wink: :lol:

Link to comment
Share on other sites

அண்ணை அது தானே சொன்னன் வயோதிப மடத்தில் கடமை உணர்வு இருக்கும். உரிமையுடன் அன்பு பாசம் அரவணைப்புக்கிடைக்குமா..?? வயோதிப மடம் போய்பாருங்கள் எவ்வளவு மன அழுத்தத்தின் மத்தியல் இருக்கிறார்கள் என்பது புரியும். :? எங்கட கொள்கை இது தான். யாரும் எமக்கு சேவை செய்கிற நிலை வந்தால் உயிரை விடுறது தான். வாழ்ந்து தினம் தினம் உறவுகளை கஸ்டப்படுத்திறதை விட. செத்து என்றோ ஒரு நாள் நினைவில் வருவது மேல். :wink:

அப்படியெல்லாம் சொல்லாதேங்க... மற்றவர்களுக்கு சேவை செய்ய வேணும் தங்கள் அன்பைக் கொடுக்க வேணும் என்று வயோதிப மடங்களை நடத்திறவங்களும் இருக்காங்க...அன்னை திரேசா போல.... என்றாலும் உங்களைக் கண்போல் கடைசி வரை வைத்துக் காப்பாற்றும் துணை இருப்பது நல்லதுதான்...அதைத் தேடிக்க வேண்டும் என்ற உங்க வாதம் சரியாத்தான் தோன்றும் சாதாரண மனிதர்களுக்கு....! ஆனால் ஒரு உயரிய இலட்சியத்திற்காய் பயணிப்பவனுக்கு....இது சரியாகுமா...??! உதாரணத்துக்கு...அன்னை திரேசாவ எடுத்துக்கோங்களேன்...! :wink: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னை திரிசோ சேவைக்கு வெளிக்கிட்டா சரி. அதற்காய் எல்லாரும் துணைவேண்டாம் என்று வெளிக்கிட்டால் சேவையைப்பெறுவது யார். அப்படி சேவைக்கு என வெளிக்கிட்டவர்களை எந்த இதுவும் பிரிக்க கூடாது என்பதும் சரி தான் துணை அது இது என்று அவர்களிற்கு இடையு}று தேவையற்றது தான். அவரவர் புத்தியில் எட்டவேணும். யார் வாழ்க்கை எப்படிப்போகும் என்று யாருக்கு தெரியும். :wink:

Link to comment
Share on other sites

உலகில் இத்தனை கோடிக்குள் ஒரு திரேசாதான் வந்தாங்க...அப்படி உயரிய இலட்சியத்தை வரைபவங்களுக்கு துணை என்பது அவங்க வாழும் சமூகமாத்தானே இருக்கும்...! ஆக ஆண் - பெண் துணை தேடல் என்பது சாதாரண மனிதர்களுக்கு அவர்களுக்கான வாழ்வுக்கால ஆதாரங்துக்காகவும் அன்புப் பரிமாற்றத்துக்கும் மேலாக இனவிருத்தியின் தேவை கருதியதும் என்பதையும் சேர்த்துச் சொல்லுங்க...! :wink: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கலாம். நடைமுறைவாழ்விற்கு இனவிருத்தியும் அவசியம் தானே. அதைவிட தன்நம்பிக்கை உள்ளவங்க. தனியாய் வாழலாம். ஏதோ ஒரு தேவையை எதிர்பார்த்து துணை தேடினம் என்றால். அந்த தேவை தமக்கு அவசியம் இல்லை என்றால். தனியாய் வாழலாம் வாழ முடியும் அப்படித்தான் நினைக்கிறம். :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.