Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி?


தமிழர்கள் எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்?  

42 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரந்த தேவதையா தெரிந்தால் நிச்சயம் சொல்கிறேன் இளைஞன். உங்களுக்கு சொல்லாமலா?

என்ன எஸ்கேப் ஆகுறிங்களோ??? :P :P :P

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

இல்ல மழலை தெரியாமல் எப்படி சொல்றது :P

Link to comment
Share on other sites

பிடித்திருக்கிறது என்பதற்காக முட்டாள்தனங்களை அரங்கேற்ற முடியுமா மதன்? பதிவுத் திருமணத்தை நான் ஏற்றுக்கொண்டேன் என்பதை விட அதை செய்யவேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.

தாலி கட்டுறத விடுவம் ஆனால் பிராமணரை அழைப்பது எதற்கு? பணம் கொடுப்பது பிரச்சினையில்லை ஆனால் வேற்றுமொழியில் உங்களுக்கு விளங்காமல் ஒன்றை சொல்லி உங்களுக்குத் திருமணம் செய்விப்பதற்கு யாரவர்? உங்கள் அன்னை தந்தை உறவுகளின் வாழ்த்துக்களுடன் நீங்கள் ஒன்றிணைவது சரி. ஆனால் இந்த பிராமணர்களுக்கு அந்த இடத்தில் என்ன வேலை. அதில்தான் தெளிவுவேண்டும் மதன்.

சடங்குகள் சம்பிரதாங்கள் என்கிற போலி வழக்குகளுக்குள் இருந்து மீறமுடியாத நிலைக்குள்ளாகியிருப்பது கவலைதான். உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு முடியாது. ஆனால் உங்கள் முடிவில் தெளிவு காணுங்கள் என்பது என் அன்பான வேண்டுகோள்.

சிலவேளைகளில் சில விட்டுக்கொடுப்புகளுக்காக நீங்கள் இந்த முடிவை எடுக்கலாம். சிலநேரங்களில் சில சமரசங்களை செய்துகொள்ளவேண்டிய சூழ்நிலைகளுக்குள்ளாயிருக்க

Link to comment
Share on other sites

பிடித்திருக்கிறது என்பதற்காக முட்டாள்தனங்களை அரங்கேற்ற முடியுமா மதன்? பதிவுத் திருமணத்தை நான் ஏற்றுக்கொண்டேன் என்பதை விட அதை செய்யவேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.

உண்மையை சொன்னால் சில சமயங்களில் அரங்கேற்ற வேண்டியிருக்கின்றது, நான் லண்டனில் இருந்து வெகு தூரத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்துகொண்டிருந்த போது அதே விடுதியில் மலேசியாவை சேர்ந்த ஒரு தமிழ் மாணவரும் தங்கியிருந்தார். அவருக்கு ஒரு நாளுக்கு ஒரு முறையாவது சோறு கறி சாப்பிட வேண்டும் இல்லை என்றால் சாப்பிட்ட மாதிரி இருக்காது. அந்த இடத்திலோ தமிழர்களோ இந்தியர்களோ இல்லை என்பதால் தென்னிந்திய சமையல் பொருட்கள் கிடைக்காது, அதனால் அவருக்கு சமையல் பொருட்கள் மலேசியாவில் இருந்து மிகுந்த பணசெலவில் பார்சலாக வரும், அவரும் அதை வைத்து சமைத்து சோறூ கறி சாப்பிடுவார். அந்த நகரத்தில் இருந்த மற்றவர்கள் மேற்கத்தைய உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக உயிர்வாழவில்லையா? உயிர்வாழ்வதற்கு தேவை உணவே அன்றி சோறூ இல்லை தானே? ஆனால் அவருக்கு பழகிவிட்டது பிடித்திருக்கின்றது அதனால் செய்கின்றார். இதனால் அவர் செய்வது முட்டாள் தனமாகிவிடாது, அவருடய உணர்வுகள் எனக்கு புரிகின்றன, எது எப்படியோ அவரால் இப்படி செய்தால் சந்தோஷமாக இருக்க முடிகின்றது, இதனால் மற்றவர்களுக்கு அவர் இடையூறு எதையும் தரவில்லையே. அப்படியே இருந்துவிட்டு போக்கட்டுமே. அது போலதான் இதுவும்

Link to comment
Share on other sites

இப்படியும் பார்க்கலாம் தானே மதன்?

உணவில் எந்த உணவென்றாலும் பிரச்சினையில்லை. ஆனால் அதை உட்கொள்ளும் முறையில் தான் பிரச்சினையே. கையால் அள்ளி வாயில் போட்டு மென்று உண்ணவேண்டிய உணவை, ஐயரை அழைத்து மந்திரம் ஓதி உண்பதைத்தான் முட்டாள்தனம் என்கிறேன். :?

Link to comment
Share on other sites

அதுதான் அந்த தென்னிந்திய உணவை அவருக்கு மலேசியாவில் இருந்து வரவழைத்து உண்ண பிடித்திருக்கு, எனக்கு பெற்றோர்களுக்க்காக ஐயரை வரவழைக்க பிடித்திருக்கு.

Link to comment
Share on other sites

மதன் அண்ணா சொல்லும் முறையில் திருமணம் செய்வது தான் நல்ல முறை என்று எனக்கு படுது.

இளைஞன் அண்ணா சொல்ற மாதிரி விளங்காத பாஷையில் மந்திரம் சொல்லும் போது அதன் தம்ழ் விளக்கத்தையும் சொல்லும் படி அய்யரை கேக்கலாம் தானே

புலம் பெயர்ந்த சமுதாயத்தில எமது பல அடையாளங்களை தொலைத்து விட்டோம் இதையுமா விட வேண்டும் :?

புலத்தில இருக்கிற நாங்க தான் எமது அடையாளங்களை முன்னேற்றம் என்ற பேரில இழக்கிறமே தவிர (உதாரணமா வெள்ளைக்காரர் இன்னும் மேரி டேவிட் போன்ற பழைய பெயர்களை வைக்கனம் ஆனா எங்கட தமிழர்கள் தமிழல்லாத வாயில நுழையாத அர்த்தமில்லாத பெயர்களை வைக்கினம்) மற்ற சமுதாயங்களில இப்படியான பாதிப்புகள் குறைவு.

அதுக்காக கண்ணை மூடிக் கொண்டு அர்த்தமில்லாத சடங்குகளை செய்யோணும் எண்டு இல்லை

Link to comment
Share on other sites

இனத்துவ அடையாளங்களை ஒரு சமூகம் இழக்கிறது என்றால் அது ஒன்றில் சிந்தனையில் வங்குரோத்துக்குச் சென்றிருக்க வேண்டும்...அல்லது இன்னொரு இனத்துக்கு அடிமைப்படத் தயாராகி விட்டது என்று கருத வேண்டும்...!

இங்கு பலருக்கு நவீனத்தை எது எதற்குள் புகுத்துவது எதை எதைக் களைய வேண்டும் என்ற சிந்தனை அடிப்படையின்றி தங்கள் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் நியாயங்கள் என்று தங்களுக்கு தெரிந்தவற்றை கருத்தென எழுதிக் கொண்டிருக்கிறார்கள்..! சமூகம் என்பது தனி நபர்களில் உள்ள சமூக விதிவிலக்குகளின் கட்டமைப்பு அல்ல....! பாரம்பரியம் என்றாலும் நவீனம் என்றாலும் கருத்தொருமைப்பாட்டுக்குள் சமூகத்தில் அனைவராலும் ஏற்கப்பட வேண்டும் அன்றில்..அவ்வகை எழுத்துக்களின் விளைவு காசு கொடுத்து வாங்கிய சிலரின் கைதட்டல்களோடு அரங்கோடு அடங்க வேண்டியதுதான்...! :wink: :idea:

Link to comment
Share on other sites

மதன் அண்ணா சொல்வதையே நானும் ஏற்கிறேன். சட்டத்திற்கு முன் தாங்கள் கணவன் மனைவி என அடையாளம் காட்டுவதற்காகவே பதிவுத்திருமணம் செய்யப்படுகிறது. அதேபோலவே சமுதாயத்திற்கும் தாங்கள் கணவன் மனைவியென அடையாளப்படுத்துவதற்காகவே ஒரு சமயப்பெரியார் முன்னிலையில் சாஸ்திர சடங்கு சம்பிராயப்படி தாலி கட்டி கணவன் மனைவியாக பெற்றோர் சுற்றத்தார் பெரியோர்களின் ஆசியுடன் சந்தோசமாக வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

பதிவுத் திருமணம் சரி. மதரீதியான சடங்குகளூடான திருமணம் என்பது எதற்கு?

இங்கே கருத்தாடலுக்குரிய தலைப்பில் தமிழர்கள் என்பதை முக்கியமாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். எனவே தமிழர்களான ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என இணையும் போது அவர்களை இணைப்பது தாலி என்ற ஒரு பந்தத்தால் தான். தமிழர்களாகிய ஒவ்வொருவரும் தாலிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என சொல்லிப்புரிய வைக்கத்தேவையில்லை. எனவே தாலியை ஒரு ஆண் ஆனவன் பெண்ணுக்கு அணியும் போது மதரீதியாக சாஸ்திரப்படி கட்டினால் அது நாகரிகமற்ற செயலா? இல்லையே. எனவே திருமணம் என்னும் போது பதிவுத்திருமணமும் தேவை தான் மதரீதியான சடங்குத்திருமணமும் தேவைதான்.

Link to comment
Share on other sites

ஒரு திருமண வயதை அடைந்த ஆண் திருமண வயதை (21) அடையாத பெண்ணை காதலிக்கும் போது அவ்விடத்து இவர்கள் வாழ்க்கையில் பெற்றோர்கள் இக்காதலை ஏற்றுக்கொண்டு மதரீதியாக திருமணத்தை நடத்தி வைத்தாலும் சட்ட ரீதியாக இவர்களால் திருமண பந்தத்திற்குள் நுழைய முடியாதே. எனவே மதரீதியான சடங்கும் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்: வெண்ணிலாக்கா தாலி கட்டாதவை மந்திரம் ஊதாமல் கல்யாணங்கட்டினவ சந்தொசமா இல்லையே? நித்திலாக்கா தாலி கட்டுறத தான் உங்கட அடையாளமெண்டால் பொம்பிளையள் வெளிநாட்டில சீலை கட்டிக்கொண்டு போங்கவன். ஆம்பிளயள் வேட்டி கட்டிக்கொண்டு போங்களன். சரி குளிர்காலத்தில கஸ்ரமெண்டால் வெயில் காலத்தில செய்யலாந்தானே? நிறைய எங்கட அடையாளங்கள் அடுக்கிக் கிடக்குது அதுகளயும் செய்யுங்கோவன் :? அர்த்தம் இல்லாத சடங்குகள செய்யோணுமெண்டு சொல்லேல எண்டு சொல்லுறீங்கள் அப்ப தாலி கட்டுறத அர்த்தமான சடங்கு மந்திரம் ஊதுறது அர்த்தமான சடங்கெண்டால் அதில என்ன அர்த்தமிருக்கக்கா :?

Link to comment
Share on other sites

கடவுளே இல்லை என்கிறம்.. இதில திருமணமாம் அதில

தேவர்களை கூப்பிட்டு மந்திரமாம்.. :):lol:

சின்னப்புள்ளத் தனமா இல்ல இருக்கு :lol:

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துகளை வாசித்துக் கொண்டு போகும் போது

நான் பார்த்த சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஐரோப்பாவுக்கு வந்தவர்களின் திருமணங்களுக்கு

போகும் போது நடக்கிற ஒரு நிகழ்வு

கூடுதலாக ஆண் இங்கே பல காலம் வாழ்ந்தவராக இருப்பார்,

பெண் ஊரிலிருந்து வந்து அவரோடு பல காலம்

லிவிங் டு கெதர் மாதிரி வாழ்கை நடத்தியிருப்பார்.

இங்கே முதலிரவு உட்பட எதற்குமே நேர காலங்கள் சம்பிரதாயங்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.

மொய் வாங்கவோ அல்லது

கொடுத்த மொய்யைத் திருப்பி வாங்கவோ

அல்லது

ஊருக்கு கல்யாணம் நடந்ததாக காட்ட

வீடியோவுக்காக ஒரு கல்யாணம் நடக்கும்............................

அதுக்கும் ஒரு ஐயர் நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து கல்யாணம் நடத்தி வைப்பார்.

இப்படி கல்யாணம் நடக்கும் பெண்களில் 99 சதவீதமானவர்கள் வயிற்றில் குழந்தையொன்றை சுமந்து கொண்டு (2 முதல் 5-6 மாதங்களாக)இருப்பார்கள்.

இது கல்யாண வீடியோ எடுப்போருக்கு தெரியும்.

வயிற்றை மறைத்து எடுக்க பக்கத்து அக்கா அட்வைசெல்லாம் பண்ணுவார்.

இவை உண்மையிலே வீடியோ கல்யாணமாகவே இருக்கும்.

அதற்கு காரணம் வீடியோக்காரர் வரும் வரை எந்த ஒரு சடங்கும் தொடங்காது.

வீடியோக்காரர் இந்த இடத்தில் பட டைரக்டராகவே செயல்படுவார்.

இப்படி நேரம் கடந்து பிரச்சனைகள் ஏற்பட்டாலும்

12 மணிக்கு தாலி கட்ட ஓடித் திரிவார்கள்.

இதற்கு ஏற்றாற் போல ஐயர் மந்திரங்களை சென்சார் வேறு செய்து ஒப்பேத்திவிடுவார்.

இதையெல்லாம் பார்க்கும் போது சடங்குகள் என்றால் இப்படியா

என பல முறை சந்தேகங்கள் வந்ததுண்டு.

இதெல்லாம் சரியா?

Link to comment
Share on other sites

மொய் வாங்கவோ அல்லது

கொடுத்த மொய்யைத் திருப்பி வாங்கவோ

அல்லது

ஊருக்கு கல்யாணம் நடந்ததாக காட்ட

வீடியோவுக்காக ஒரு கல்யாணம் நடக்கும்............................

அதுக்கும் ஒரு ஐயர் நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து கல்யாணம் நடத்தி வைப்பார்

உண்மைதான் அஜீவன் அண்ணா.

இன்னும் ஒரு சந்தேகம் இருக்கிறது. இங்கு நடைபெறும்

திருமணங்கள் எல்லாம் சனி அல்லது ஞாயிறு நாட்களில் தான்

வரும். இது எப்படி? :roll: :roll:

Link to comment
Share on other sites

பெண் ஊரிலிருந்து வந்து அவரோடு பல காலம்

லிவிங் டு கெதர் மாதிரி வாழ்கை நடத்தியிருப்பார்.

இங்கே முதலிரவு உட்பட எதற்குமே நேர காலங்கள் சம்பிரதாயங்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.

மொய் வாங்கவோ அல்லது

கொடுத்த மொய்யைத் திருப்பி வாங்கவோ

அல்லது

ஊருக்கு கல்யாணம் நடந்ததாக காட்ட

வீடியோவுக்காக ஒரு கல்யாணம் நடக்கும்............................

அதுக்கும் ஒரு ஐயர் நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து கல்யாணம் நடத்தி வைப்பார்.

இப்படி கல்யாணம் நடக்கும் பெண்களில் 99 சதவீதமானவர்கள் வயிற்றில் குழந்தையொன்றை சுமந்து கொண்டு (2 முதல் 5-6 மாதங்களாக)இருப்பார்கள்.

அவங்க 5 6 மாதம் சேர்ந்து வாழ்ந்ததற்கு பின்னர் தான் புரிந்திருக்கு மத ரீதியாக திருமணத்தை நடத்தணும் என்று :)

Link to comment
Share on other sites

உண்மைதான் அஜீவன் அண்ணா... இதுபற்றி எழுதவேண்டும் என்றிருந்தேன் அதற்குள் நீங்கள் எழுதிவிட்டீர்கள். நன்றிகள்.

திருமணம் முடிக்காமலே முதலில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்துவிட்டுத்தான் இங்கு பலர் திருமணம் செய்கிறார்கள். (தமிழர்களைத் தான் சொல்கிறேன்). திருமணத்திற்கு முன்னரே உடல்ரீதியான உறவுகளும் ஏற்பட்டிருக்கும். இங்கே சடங்குகளும் சம்பிரதாயங்களும் சாமி சமயங்களும் ...? தம் தேவைக்கேற்ப சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் சாமியையும் சமயத்தையும் உதறிவிட்டுபோகும்போது, அவை தேவையே இல்லை என்று சொல்வதைக்கூடு உள்வாங்கமுடியவில்லை.

உண்மைகள் சுடத்தான் செய்யும்.

உண்மைகள் நீங்கள் நினைப்பது போன்று அழகானவையல்ல.

Link to comment
Share on other sites

மொய் வாங்கவோ அல்லது

கொடுத்த மொய்யைத் திருப்பி வாங்கவோ

அல்லது

ஊருக்கு கல்யாணம் நடந்ததாக காட்ட

வீடியோவுக்காக ஒரு கல்யாணம் நடக்கும்............................

அதுக்கும் ஒரு ஐயர் நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து கல்யாணம் நடத்தி வைப்பார்.

இப்படி கல்யாணம் நடக்கும் பெண்களில் 99 சதவீதமானவர்கள் வயிற்றில் குழந்தையொன்றை சுமந்து கொண்டு (2 முதல் 5-6 மாதங்களாக)இருப்பார்கள்.

இது கல்யாண வீடியோ எடுப்போருக்கு தெரியும்.

வயிற்றை மறைத்து எடுக்க பக்கத்து அக்கா அட்வைசெல்லாம் பண்ணுவார்.

இவை உண்மையிலே வீடியோ கல்யாணமாகவே இருக்கும்.

அதற்கு காரணம் வீடியோக்காரர் வரும் வரை எந்த ஒரு சடங்கும் தொடங்காது.

வீடியோக்காரர் இந்த இடத்தில் பட டைரக்டராகவே செயல்படுவார்.

இப்படி நேரம் கடந்து பிரச்சனைகள் ஏற்பட்டாலும்

12 மணிக்கு தாலி கட்ட ஓடித் திரிவார்கள்.

இதற்கு ஏற்றாற் போல ஐயர் மந்திரங்களை சென்சார் வேறு செய்து ஒப்பேத்திவிடுவார்.

அஜீவன் உண்மையை எல்லாம் இப்பிடி பப்பிளிக்கா சொல்ல கூடாது :twisted: :twisted:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலாக்கா தாலி கட்டாதவை மந்திரம் ஊதாமல் கல்யாணங்கட்டினவ சந்தொசமா இல்லையே? நித்திலாக்கா தாலி கட்டுறத தான் உங்கட அடையாளமெண்டால் பொம்பிளையள் வெளிநாட்டில சீலை கட்டிக்கொண்டு போங்கவன். ஆம்பிளயள் வேட்டி கட்டிக்கொண்டு போங்களன். சரி குளிர்காலத்தில கஸ்ரமெண்டால் வெயில் காலத்தில செய்யலாந்தானே? நிறைய எங்கட அடையாளங்கள் அடுக்கிக் கிடக்குது அதுகளயும் செய்யுங்கோவன் அர்த்தம் இல்லாத சடங்குகள செய்யோணுமெண்டு சொல்லேல எண்டு சொல்லுறீங்கள் அப்ப தாலி கட்டுறத அர்த்தமான சடங்கு மந்திரம் ஊதுறது அர்த்தமான சடங்கெண்டால் அதில என்ன அர்த்தமிருக்கக்கா

_________________

மிஸ் பூனைக்குட்டி.. சாறி உடுத்து போகின்ற..தமிழ் ஆடை அணிந்து திரிபவர்களை புலத்தில் கண்டதில்லையோ..?? இன்னும் வெஸ்டேன் ஆடை அணியாத பெண்களை நாங்கள் லண்டன்ல கண்டிருக்கம். அது அது அவரவர் விருப்பம் இதற்கு குளிர் ஒரு தடையல்ல. புலம்பெயர்ந்து தமிழர்கள் மட்டும் வாழவில்லை எத்தனை எத்தனை காரணங்களிற்காக முஸ்லீங்களும் இடம் மாறியிருக்கிறார்கள். அவர்கள் குருதா போட மறக்கிறார்களா..?? எத்தனை இந்திய பாகிஸ்தான் பெண்கள் சாறி உடுத்திறார்கள் குளிர் மழை என்று பார்க்காமல். அப்படி அணிகிற ஆண்கள் கூட இருக்கிறார்கள். அவர்களால் மாறாமல்் வாழ முடிகிறது. தங்கட கலாச்சாரத்தை அடையாளத்தை பேணமுடிகிறது ஏன் தமிழரால் முடியாது நாங்களா எல்லாத்திக்கையும் நுழைகிறம். எங்கட அடையாளத்தை காக்கவேணும் என்று நினைச்சால் எதுவும் பொருட்டாய் அமையாது. ஆனால் வசதிக்கேற்ப பலர் ஆடை அணிகிறார்கள் அதற்காகக அவர்களால் தமிழ் உடை உடுத்தவே முடியாது என்பதா அர்த்தம்.

முன்னைய காலத்தில் தாலியை வெறும் எளிமையாய் வைத்திருந்தார்கள் எல்லாரும் அதை பயன்படுத்தக்கூடியவாறு.. இப்ப தாலி என்கிறது எப்படி மாறியிருக்கு.. பவுனில நிக்குது.. 45.. 50 அதை பாதுகாக்கிறதே பெரிய வேலையாய்ப்போச்சு. இப்படி மாறிய தால தான் தாலியின் புனிதம் அறியாமல் திரியிறார்கள். என்ன பண்ண காலமோ..

தாலி என்பது ஒரு அடையாளம் உண்மையில் அர்த்தமுள்ள அடையாளம். அன்பின் அடையாளமாய் நாங்க பாக்கிறம். அது தானே.. உண்மை ஒரு ஆணும் பெண்ணும் நம்பிக்கையின் பால் சேர்ந்து வாழலாம்.. தாலி நம்பிக்கையை அதிகரிக்கும்.. இன்னொன்று சமூகத்திற்கும் எங்கட நம்பிக்கையை சொல்றதுக்கு இந்த தாலி ஒரு சாதனமாய் பாருங்கள். முன்னைய காலங்களில் பலவற்றை விளக்கிறதுக்கு இந்த தாலியைப்பயன்படுத்தினார்கள். இப்ப தாலி பெண்கள் மட்டும் போடுறது கஸ்டமாய் இருந்தால் ஆண்களையும் போடவையுங்கள் அதற்காக அதை தேவையற்றது என்பதில் என்ன நியாயம். தாலி பெண்களும் மெட்டி ஆண்களும் அணிகிற வழக்கம் இருந்து மருவி இரண்டையும் பெண்கள் அணியும் நிலை வந்திட்டுது. திருமணம் ஆன ஒருவரை அடையாளம் காட்டி அதற்கு புனிதம் கொடுப்பது தாலி. போற போக்கில.. நம்பிக்கையில வாழுவம் ஏன் பதிவுத்திருமணம் என்று கேப்பியள்.. அப்புறம்.. விலங்குகளாட்டம். அலையலாம் பாத்திருங்கள்.

Link to comment
Share on other sites

இன்னும் ஒரு சந்தேகம் இருக்கிறது. இங்கு நடைபெறும்

திருமணங்கள் எல்லாம் சனி அல்லது ஞாயிறு நாட்களில் தான்

வரும். இது எப்படி? :roll: :roll:

இதுதான் ஐரோப்பா ஐயர் சாத்திரம் or முகுர்த்தம் என்பது...........................

ஐயர்மார் சனி ஞாயிறுகளில் தனது உழைப்புக்காக நாள் குறித்துக் கொடுத்து விடுவார்கள்.

அதில் அவர்கள் சொல்லும் புருடாதான் பகல் 12மணிக்குத் தாலி கட்டினால் தோசமெல்லாம் போய் விடும் என்பது..................

நான் இது பற்றி ஒரு சாத்திரியிடம் பேசிய போது அவர் சொன்னார் ...............

"இப்பிடி முகுர்த்தங்கள் வரவே வராது.

ஐரோப்பாவில் இருக்கிற மாதிரி முகுர்த்தங்களை இந்தியாவிலோ, இலங்கையிலோ கேட்டால் தப்பு என்றுதான் சொல்லுவார்கள்.

என்ன செய்யிறது நானும்தான் வந்த இடத்தில இரண்டு மூன்று கலியாணத்தை நடத்தினன்.

வந்த இடத்தில செலவுக்கு ஏதாவது கிடைக்குதில்லே......................"

சில ஐயர் பிரச்சனைகள் :-

1. ஐயர் இரண்டு கலியாணத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பார்.

சிலர் ஒரு கலியாணத்தை நேரத்துக்கு முடித்து விட்டு

அடுத்த கலியாணத்துக்கு ஓடி விடுவார்கள்.

இப்பிடி முகுர்த்தங்கள்?

2. இரண்டு கலியாணத்துக்கு ஒப்புக் கொண்டு

ஒரு கலியாணத்தை நடத்த வேறு நாட்டிலிருந்து வர வழைத்தோ

அல்லது விருந்துக்கு வந்தவரையோ வைத்து மறு கலியாணத்தை நடத்துவார்.

இப்படிப் பட்டவர்கள் மாட்டிக் கொண்டு முழிப்பதே தனி வேடிக்கை.

கவுண்டர் செந்தில் கொமடி தோற்று விடும்.

நாட்டுக்கு நாடு இவர்கள் கலியாணம் செய்து வைக்கும் முறை மாறுபட்டிருக்கும்.

இவர்கள் சடங்கை கொஞ்சம் மாறிச் செய்யத் தொடங்கியதும் பிரச்சனை தொடங்கிவிடும்..................

இதற்கென்ரே சில சொடக்கு பாண்டிகள் கலியாண வீடுகளுக்கு வந்திருக்கும்.

அதுகள் ஐயர்மாரை ஒரு வழி பண்ணத் தொடங்கினால்...............?

ஐயோ பாவம்..........................

சொடக்கு பாண்டிகள்

பெரும் குளிரில சட்டையில்லாம மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க குளிர் வந்து தாக்கட்டும் என்று வேற கதவை திறந்து விடுங்கள்....................

இவங்களை எதிர்த்தால் கலியாணமே நடக்காது.

பலர் மாப்பிளையின் நண்பர்களாகவே இருப்பார்கள்?

இந்த நேரங்களில் அதிகமாக ஐயருக்கு வழி காட்டியாக இருப்பது வீடியோ இயக்குனர்கள் அல்லது போட்டோ இயக்குனர்கள்தான்.

அவர்கள் கூட உதவுவது வேலை முடிந்து நேரத்துக்கு போய்ச் சேர வேண்டுமென்ற நோக்கில்தான்.

சில ஐயர்மார் வைக்கும் சடங்கு பொருட்கள் குறைந்திருந்தால் வீடியோ தம்பியின் காதில் மெதுவாக முணுமுணுப்பார்.

அது என்ன தெரியுமா?

வீடியோவில் சடங்குப் பொருட்களை எடுக்காமல் காப்பாற்றும்படி சொல்லும் காதோடு மந்திரமே..............

கலியாணத்து வீடியோ தெலுங்கு படம் போல டபிங் செய்யப்பட்டதும் உண்டு.

வந்தவருக்கு சரியாக மந்திரம் தெரியாமல் ஒப்பேத்தப் போய் அந்த வீடியோ ஊருக்குப் போய் மாட்டி விடும் என்ற பயத்தில்

வேறொரு கலியாண மந்திரமும் சினிமா பாடல்களும் கை கொடுத்த சமயங்கள் பல.

என்ன செய்வது தப்பு வீடியோகாரரின் மைக் பிரச்சனை அல்லது ஆட்களின் சத்தம் என குறைகள் திசை திரும்பி விடும்.

வீடியோக்காரர்கள் இதைச் செய்வதற்குக் காரணமே ஐயர் மூலம் கிடைக்கும் ஓடர்களை காப்பாற்றவே...........................

ஐயர் மந்திரம் சொல்ல முன்னோ

அல்லது தாலி கட்டும் மந்திரம் சொல்லு முன்னோ

கடவுளைப் பார்க்கவே மாட்டார்.

வீடியோக்காரரைத்தான் பார்ப்பார்.....................

அவர் தலையாட்டினால்தான் மந்திரமே தொடங்கும்.

இனியாவது கவனித்துப் பாருங்கள்.

வீடியோ கடவுளுக்கு எவ்வளவு பவர் என்று.

எவ்வளவு இருக்கு............................சொல்ல................

..???????

Link to comment
Share on other sites

எங்கட கலாச்சாரத்தில பல குறைபாடுகள் இருக்கலாம் அதுக்காக எங்கட சுயத்தை இழந்து நாடோடிகளாக கலாச்சாரமில்லாதவர்களாக மாற வேணுமா :? :roll: :roll:

Link to comment
Share on other sites

வாழ்கைத் துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற மதனின் கேள்விக்கும் தாலிபற்றிய கருத்துக்கும் சம்பந்தமில்லையென நினைக்கிறேன்.

தாலிபற்றிய கருத்துக்கள் அறியவேண்டுமென்றால்:

http://www.yarl.com/kalam/viewtopic.php?t=10

Link to comment
Share on other sites

வாழ்கைத் துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற மதனின் கேள்விக்கும் தாலிபற்றிய கருத்துக்கும் சம்பந்தமில்லையென நினைக்கிறேன்.

தாலிபற்றிய கருத்துக்கள் அறியவேண்டுமென்றால்:http://www.yarl.com/kalam/viewtopic.php?t=10

மத ரீதியான சடங்கு தப்பு என கருத்துக்களை முன்வைத்தமையால் தான் தாலி என்ற கருத்துக்களும் இங்கு எழுதப்பட வேண்டியனிலை ஏற்பட்டது.

ம்ம் இருப்பினும் மதன் அண்ணாவின் அதாவது இத்தலைப்பிற்குரிய கருத்துக்களை முன்வைப்பதாயின் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதற்குரிய வழிகளில் காதலித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தலே சிறப்பென்பது என்னுடைய கருத்து, :P :P :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கைத்துணையை இப்படிதெரிவு செய்தால் பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்---ஓரு புத்திஜீவத பரிமாற்றம் போல ---வேற ஒரு புறஅழுத்தங்களில்லாமல் உனது தேவையை நான் பூர்ததி செய்கிறேன் எனது தேவையை நீ பூர்த்தி செய் என்றஅடிப்படையில்-thatS all---(தேவைகள்-காதல் அன்பு காமம் கவனிப்பு பிள்ளைப்பராமரிப்பு உண்மையாயிருத்தல்)--------ஸ்ராலின்

Link to comment
Share on other sites

மத ரீதியான சடங்கு தப்பு என கருத்துக்களை முன்வைத்தமையால் தான் தாலி என்ற கருத்துக்களும் இங்கு எழுதப்பட வேண்டியனிலை ஏற்பட்டது.

ம்ம் இருப்பினும் மதன் அண்ணாவின் அதாவது இத்தலைப்பிற்குரிய கருத்துக்களை முன்வைப்பதாயின் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதற்குரிய வழிகளில் காதலித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தலே சிறப்பென்பது என்னுடைய கருத்து, :P :P :P :wink:

கள்ளமில்லா..மனசுகள் இப்படித்தான் தங்கையே எப்போதும் எண்ணும்...கள்ளம் வேண்டும் என்பதுகள்... பலதும் எண்ணுங்கள்...! அவற்றைக் கண்டு கொள்ளாம..உங்கள் மனசுக்கு உகந்ததைச் செய்யுங்கள்... நீங்களும் சமூகமும் சிறக்க...! தங்கையின் வழியே அண்ணன் வழியும்..! :P :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை : பின்வாங்கிய அமைச்சர்கள்   Published By: NANTHINI 02 APR, 2023 | 04:08 PM   வெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் இன்றைய தினம் (2) மீண்டும் வைக்கப்படும் என்று உறுதியளித்திருந்த அமைச்சர்கள், நீதிமன்றில் வழக்கு இருப்பதால் அது தொடர்பாக பின்னர் தீர்மானிப்போம் என்று அதிலிருந்து பின்வாங்கியுள்ளனர். அண்மையில் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஷ்வரர் ஆலய வளாகத்தில் இருந்த தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்தன.   இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரால் நெடுங்கேணி பொலிஸ் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், அமைச்சர்களான டக்ளஸ், ஜீவன் தொண்டமான், மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.  இந்நிலையில் கடந்த வாரம் சர்வமத தலைவர்களின் பங்களிப்புடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டது.  அதன் பிரகாரம், முன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் சிவலிங்கம் உட்பட சேதப்படுத்தப்பட்ட விக்கிரகங்களை வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் இன்று (2) அதிகாலை விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.   எனினும், நேற்று (1) ஆலய நிர்வாகத்தினரை மீறி ஆலய வளாகத்தில் பிரதிஷ்டை நிகழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், விக்கிரகங்களை நிலைநிறுத்தும் நிர்வாகத்தின் எண்ணம் ஈடேறாமல் போய்விட்டது.  இதேவேளை இன்று விக்கிரகங்கள் நிச்சயம் வைக்கப்படும் என்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அனைத்து தரப்புக்கும் உறுதிபட தெரிவித்திருந்தனர்.   அந்த வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கு. திலீபன், ம. ராமேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் இன்றைய தினம் காலை ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர். எனினும், நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது விக்கிரகங்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் கலந்துரையாடி, இது தொடர்பாக தீர்மானிக்க முடியும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.  அவர்களது கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  நீங்கள் 'சிலைகளை வைப்போம்' என்று அறிக்கை விட்டபோது நீதிமன்றில் வழக்கு இருப்பது தெரியவில்லையா என ஊடகவியலாளர்களால் அமைச்சர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்குரிய பதில் அவர்களால் வழங்கப்படவில்லை.  ஆகவே, இன்றைய தினம் எப்படியும் விக்கிரகங்களை வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆலய நிர்வாகத்தினர் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர்.  அத்துடன் நேற்று ஒரு சிலர் எடுத்த தன்னிச்சையான முடிவுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது எம்மை ஏமாற்றும் செயற்பாடாகவே இருக்கிறது என ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/151954
    • உலகிலேயே வெண்பனி (snow) இல் போரிடுவதில் பின்லாந்தை மிஞ்ச யாரும் இல்லையாம்.  நேட்டோவுக்கும் கூட பின்லாந்தின் இணைவு ஒரு வரமே.
    • மகாராஷ்டிராவில் நடந்த வங்கிக் கொள்ளையின் பின்னணியில் வட கொரியா? ஹேக்கர்கள் செயல்படுவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜீன் லீ, ஜெஃப் ஒயிட், விவ் ஜோன்ஸ் பதவி,பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் 21 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் கூலித்தொழிலாளியாக இருக்கும் உங்களுக்கு பாலிவுட்டில் தலை காட்டும் வாய்ப்பு கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். உங்களது கதாபாத்திரம் என்ன? நேராக ஏடிஎம் சென்று பணத்தை எடுப்பது மட்டுமே அது. 2018-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பலரும் இப்படித்தான் பாலிவுட்டில் தலை காட்டப் போவதாக நம்பினார்கள். ஆனால், உண்மையில் வங்கிக் கொள்ளையின் ஒரு அங்கமாக தாங்கள் பயன்படுத்தப்படுகிறோம் என்பதை அவர்கள் அறியாத வகையில் ஏமாற்றப்பட்டிருந்தார்கள். புனே நகரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியை மையமாகக் கொண்டு 2018-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஒரு வார இறுதியில் சோதனை நடத்தப்பட்டது.   சனிக்கிழமை பிற்பகலில் அந்த வங்கியின் தலைமையகத்தில் இருந்த ஊழியர்களுக்கு திடீரென தொடர்ச்சியான எச்சரிக்கை தகவல்கள் வந்தன.   அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.டி.எம். கார்டு சேவை வழங்கும் நிறுவனமான விசா நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கைத் தகவல்கள் அவை. காஸ்மோஸ் வங்கி ஏ.டி.எம். அட்டைகளைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் பணத்தை எடுப்பதற்காக பல ஆயிரம் கோரிக்கைகள் குவிந்து கொண்டிருப்பதாக விசா நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கை அது. ஆனால், காஸ்மோஸ் ஊழியர்கள் அவர்களது கணினி கட்டமைப்பை சரிபார்த்த போது, வழக்கத்திற்கு மாறாக ஏதும் புலப்படவில்லை. சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, பாதுகாப்புக் காரணத்திற்காக காஸ்மோஸ் வங்கி ஏ.டி.எம். அட்டைகளில் இருந்து பணம் எடுக்கும் சேவையை நிறுத்தி வைக்குமாறு விசா நிறுவனத்தை அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், இந்த முடிவுக்கு வருவதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட அரை மணி நேர கால தாமதம் வங்கிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டது. மறுநாள், சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் என்று குறிப்பிட்டு ஒரு பட்டியலை காஸ்மோஸ் வங்கி தலைமையகத்திடம் விசா நிறுவனம் அளித்தது. உலகம் முழுவதும் வெவ்வேறு ஏ.டி.எம். மையங்களில் நடந்த சுமார் 12 ஆயிரம் பணப் பரிமாற்ற தகவல்கள் அதில் இடம் பெற்றிருந்தன. அதன் மூலம் காஸ்மோஸ் வங்கி சுமார் 116 கோடி ரூபாயை இழந்துவிட்டிருந்தது. இது துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டு பெரிய அளவில் நடந்த ஒரு துணிச்சலான வங்கிக் கொள்ளையாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ரஷ்யா உட்பட 28 வெவ்வேறு நாடுகளில் ஏடிஎம்களில் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். இவை அனைத்தும் இரண்டு மணி நேரம் 13 நிமிட இடைவெளியில் நடந்தவை. இது உலகளவில் நடைபெற்ற ஒரு அசாதாரண குற்றமாகும். ஆனால், இந்த குற்றத்தைப் பொருத்தவரை, ஏராளமான ஆண்கள் ஏ.டி.எம். மையங்கள் வரை நடந்து செல்வது, வங்கி அட்டைகளை செருகுவது மற்றும் பணக்கட்டுகளை பைகளில் திணிப்பது போன்ற சிசிடிவி காட்சிகளைக் கண்டு மகாராஷ்டிரா சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் வியப்படைந்தனர். அப்போது, அவர்கள் இந்த குற்றத்தின் முழு பரிணாமத்தை அறிந்திருக்கவில்லை. "இதுபோன்ற பண மோசடி நெட்வொர்க் பற்றி எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை" என்று இந்த விசாரணைக்கு தலைமை தாங்கிய ஐ.ஜி. பிரிஜேஷ் சிங் குறிப்பிட்டார். ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்று பணம் எடுக்கும் நபர்களை ஒரு குழு லேப்டாப் மூலம் கண்காணித்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார். பணத்தை எடுக்கும் நபர்கள், அதை மறைத்து வைக்க எத்தனிக்கும் போதெல்லாம், அதனைக் கண்டுபிடித்து அந்த நபரை கண்காணிப்பவர்கள் அடிப்பதை சிசிடிவி வாயிலாக பார்த்து வியந்ததாக பிரிஜேஷ் சிங் தெரிவித்தார். சிசிடிவி காட்சிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் தரவுகளைப் பயன்படுத்தி அடுத்து வந்த வாரங்களில் 18 சந்தேக நபர்களை, இந்திய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது சிறையில் உள்ளனர், விசாரணைக்காக காத்திருக்கிறார்கள். இவர்கள் யாரும் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அல்ல என்று சிங் கூறுகிறார். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு ஓட்டல் பணியாளர், ஓட்டுநர் மற்றும் செருப்புத் தைப்பவர் ஒருவரும் அடங்குவர். மற்றொருவர் பார்மசி பட்டதாரி. "அவர்கள் சராசரி மனிதர்கள்," என்று அவர் கூறுகிறார். ஆனாலும் கூட, பாலிவுட் காட்சிகளில் தலை காட்டுவதாக பணியமர்த்தப்பட்டதாக கூறப்பட்டாலும் அவர்களுக்கு உண்மையில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரிந்திருக்கும் என்று பிரிஜேஷ்சிங் எண்ணுகிறார். ஆனால் யாருக்காக வேலை செய்திருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியுமா? உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட, ரகசியமாக இயங்கும் வடகொரிய அரசே இந்தக் கொள்ளையின் பின்னணியில் இருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் நம்புகின்றனர். வட கொரியா உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று. ஆனாலும் கூட, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்க தன் வளங்களில் குறிப்பிடத்தக்க அளவை வடகொரியா பயன்படுத்துகிறது. இதன் விளைவாக, ஐநா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பதால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த கிம் ஜாங் உன், இதற்கு முன்பு யாரும் செய்யாத வகையில் 4 அணு ஆயுத சோதனைகள் உட்பட பல ஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனைகளை மேற்பார்வையிட்டுள்ளார். பட மூலாதாரம்,KRT/REUTERS தன்னுடைய பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், ஆயுதத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் தேவையான பணத்தை திருடுவதற்கு மேம்பட்ட ஹேக்கர்களின் குழுவை வட கொரிய அரசு பயன்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த ஹேக்கர்களை கொண்டு பல்வேறு உலக நாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வட கொரியா பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. வட கொரியாவின் சக்திவாய்ந்த இராணுவ புலனாய்வு அமைப்பால் இயக்கப்படும் லாசரஸ் குரூப் என்ற புனைப்பெயர் கொண்ட ஹேக்கர்கள் உலகெங்கிலும் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்குள் நுழைந்து கொள்ளையடிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். இறந்த பின் மீண்டு வந்ததாக பைபிளில் கூறப்படும் லாசரஸின் பெயரை, இந்த ஹேக்கர்களுக்கு சைபர்-பாதுகாப்பு வல்லுநர்கள் சூட்டினார். ஏனெனில் அவர்களின் வைரஸ்கள் கணினி நெட்வொர்க்குகளுக்குள் நுழைந்தவுடன், அவற்றைக் கொல்வது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாகிவிடுகிறது. 2014-ம் ஆண்டில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கணினி நெட்வொர்க்கை வட கொரியா ஹேக் செய்ததாக அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டினார். அப்போதுதான் இந்த ஹேக்கர்கள் குழு முதன் முதலில் சர்வதேச முக்கியத்துவம் பெற்றது. கிம் ஜாங் உன் கொலை செய்யப்படுவது போல சித்தரிக்கப்படும் "தி இன்டர்வியூ" என்ற திரைப்படத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹேக்கர்கள் சைபர் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI குற்றம் சாட்டியது. பட மூலாதாரம்,ROBYN BECK 2016ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் மத்திய வங்கியிலிருந்து 1 பில்லியன் டாலர் பணத்தை திருட முயன்றதாகவும், பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவை அமைப்பு உட்பட உலகெங்கிலும் பல அமைப்புகளிடம் இருந்தும் பிணைத்தொகையைப் பெற முயன்ற WannaCry இணையத் தாக்குதலை நடத்தியதாகவும் லாசரஸ் குழு மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் வட கொரியா, லாசரஸ் குழு என்ற ஒன்று இருப்பதாகக் கூறுவதையே கடுமையாக மறுக்கிறது. ஹேக்கிங் மூலம் பணம் பறிப்பு என்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் வடகொரியா நிராகரித்துள்ளது. ஆனால் முன்னணி சட்ட அமலாக்க முகமைகளோ, வட கொரியாவின் இணைய ஊடுருவல்கள் முன்னெப்போதையும் விட மேம்பட்டவை, பெரிய இலக்குகளைக் கொண்டவை என்று கூறுகின்றன. காஸ்மோஸ் வங்கிக் கொள்ளையைப் பொருத்தவரை, ஹேக்கர்கள் அதற்கு "ஜாக்பாட்டிங்" என்ற நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். ஏனெனில், ஏ.டி.எம். இயந்திரம் பணத்தைக் கொட்டுவது என்பதுபரிசு இயந்திரத்தில் ஜாக்பாட் அடிப்பது போன்றதுதான். தொடக்கத்தில், வங்கியின் கணினி கட்டமைப்புகள் வழக்கமான முறையிலேயே ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதாவது, யாரோ ஒரு ஊழியர் திறந்து பார்த்த மின்னஞ்சல் மூலம் கணினி நெட்வொர்க்கில் ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளனர். ஊடுருவியபின், ஏ.டி.எம். சுவிட்ச் எனப்படும் ஒரு சிறிய மென்பொருளை ஹேக்கர்கள் கையாண்டுள்ளனர். அதுதான் ஏ.டி.எம். மையங்களில் பணத்தை வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்க வங்கிக்கு செய்திகளை அனுப்புகிறது. இது உலகின் எந்த மூலையில் இருந்தும் தங்களது கூட்டாளிகள் ஏ.டி.எம். மையங்கள் வாயிலாக பணத்தை எடுக்க அனுமதிக்கும் அதிகாரத்தை ஹேக்கர்களுக்கு வழங்கியது. ஒவ்வொரு முறையும் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தொகையை மாற்றுவது மட்டுமே அவர்களால் முடியாத காரியமாக இருந்தது. ஆகவே, களத்தில் அவர்களுக்கு நிறைய ஆட்களும், ஏராளமான ஏ.டி.எம். அட்டைகளும் தேவையாக இருந்தது. வங்கியின் உண்மையான தரவுகளைப் பயன்படுத்தி நகல் ஏ.டி.எம். அட்டைகளை அவர்கள் தயாரித்துள்ளனர். பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான BAE சிஸ்டம்ஸ் உடனடியாக இது லாசரஸ் குழுவின் வேலை என்று சந்தேகித்தது. பல மாதங்களாக அவர்களைக் கண்காணித்து வந்த அவர்கள் இந்திய வங்கியைத் தாக்க சதி செய்வதை அறிந்து கொண்டிருந்தனர். ஆனால், எந்த வங்கி என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. "இது மற்றொரு குற்றச் செயலாக இருந்திருக்குமானால் மிகவும் தற்செயல் நிகழ்வாக இருந்திருக்கும்" என்கிறார் BAE பாதுகாப்பு ஆய்வாளர் அட்ரியன் நிஷ். காஸ்மாஸ் வங்கி திருட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள தளவாடங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. வட கொரிய குடிமக்கள் சட்டப்பூர்வமாகச் செல்ல முடியாத நாடுகள் உட்பட 28 நாடுகளில் ஹேக்கர்கள் எவ்வாறு கூட்டாளிகளைக் கண்டுபிடித்தனர்? என்பதே இதில் மிகப்பெரிய கேள்வி. பட மூலாதாரம்,JEAN H. LEE/GETTY IMAGES 'டார்க் வெப்'பில் ஒரு முக்கிய உதவியாளரை லாசரஸ் குழுமம் சந்தித்ததாக அமெரிக்க தொழில்நுட்ப பாதுகாப்பு புலனாய்வு அதிகாரிகள் நம்புகிறார்கள். 'டார்க் வெப்' என்பது முழுமையாக ஹேக்கிங் திறன்களை பரிமாறிக் கொள்ள அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வலையமைப்பு. ஹேக்கிங் சேவைகள், உபகரணங்கள் கூட பலராலும் அங்கே விற்கப்படுகின்றன. 2018ம் ஆண்டு பிப்ரவரியில், தன்னை பிக் பாஸ் என்று குறிப்பிடும் ஒருவர் கிரெடிட் கார்டு மோசடியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த குறிப்புகளை வெளியிட்டார். நகல் ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பதற்கான உபகரணங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் கனடாவில் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை அனுப்பும் குழுவை அணுகியதாகவும் அவர் கூறினார். காஸ்மோஸ் வங்கியில் கொள்ளையடிக்க லாசரஸ் குழுமத்திற்கு தேவையான சேவை இதுவே. பிக் பாஸுடன் அவர்கள் இணைந்து பணியாற்றத் தொடங்கினர். அமெரிக்காவின் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனமான Intel 471 இன் தலைமை உளவுத்துறை அதிகாரி மைக் டிபோல்ட்டிடம் பிக்பாஸ் பற்றி மேலும் அறிய விழைந்தோம். பிக் பாஸ் குறைந்தது 14 ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்ததையும், ஜி, ஹபீபி மற்றும் பேக்வுட் போன்ற மாற்றுப்பெயர்களைக் கொண்டிருப்பதையும் டிபோல்ட் குழு கண்டுபிடித்தது. வெவ்வேறு தளங்களில் ஒரே மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தியதால், அவரை பாதுகாப்புத் துறையினரால் இனங்காண முடிந்துள்ளது. "அடிப்படையில், அவர் சோம்பேறியாக இருந்தார்," என்கிறார் டிபோல்ட். "நாங்கள் இதை மிகவும் பொதுவான ஒன்றாகப் பார்க்கிறோம்: அவர்கள் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு மாற்றுப் பெயர்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒரே மின்னஞ்சல் முகவரியை வைத்திருக்கிறார்கள்." என்று அவர் கூறுகிறார். 2019ம் ஆண்டு அமெரிக்காவில் பிக் பாஸ் கைது செய்யப்பட்டார். அவர் 36 வயதான கனடிய குடிமகனான கலேப் அலுமாரி என்பது உலகிற்கு தெரியவந்தது. வட கொரியாவின் பின்னணியில் நடத்தப்பட்ட வங்கிக் கொள்ளைகளில் இருந்து நிதி மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக்கொண்ட அவருக்கு, 11 ஆண்டுகள், எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. காஸ்மோஸ் வங்கிக் கொள்ளை அல்லது வேறு எந்த ஹேக்கிங் சதியிலும் தங்களுக்கு தொடர்பு இருந்ததாக வட கொரியா ஒப்புக்கொண்டதில்லை. லண்டனில் உள்ள வட கொரியாவின் தூதரகத்திற்கு காஸ்மோஸ் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக பிபிசி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், தூதர் சோ இ-லை நாங்கள் முன்பு தொடர்பு கொண்டபோது, வட கொரிய அரசு மீதான ஹேக்கிங் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் "ஒரு கேலிக்கூத்து" என்றும், "எங்கள் நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் அமெரிக்காவின் முயற்சி" என்றும் பதிலளித்திருந்தார். 2021-ம் ஆண்டு பிப்ரவரியில், லாசரஸ் குழுக்களைச் சேர்ந்த ஹேக்கர்களாக சந்தேகிக்கப்பட்ட ஜோன் சாங் ஹியோக், கிம் இல் மற்றும் பார்க் ஜின் ஹியோக் ஆகிய 3 பேர் மீது அமெரிக்க புலனாய்வுத்துறை (FBI), அமெரிக்க ரகசிய சேவை மற்றும் நீதித்துறை ஆகியவை குற்றச்சாட்டுகளை அறிவித்தன: வட கொரியாவின் இராணுவ புலனாய்வு நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறிய அவர்கள், இப்போது பியோங்யாங் திரும்பி விட்டதாக கருதப்படுகிறது. பட மூலாதாரம்,DOJ வட கொரியாவில் 7,000 பயிற்சி பெற்ற ஹேக்கர்கள் இருப்பதாக அமெரிக்கா மற்றும் தென் கொரிய அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே இணையம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள வடகொரியாவிற்குள் இருந்து அவர்கள் அனைவரும் செயல்படுவது சாத்தியமில்லை, அவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஒரு முன்னாள் வட கொரிய ராஜிய அதிகாரியும், கிம் ஜாங் உன் ஆட்சியை விட்டு வெளியேறிய மிக மூத்த நபர்களில் ஒருவருமான Ryu Hyeon Woo, ஹேக்கர்கள் வெளிநாட்டில் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களை வழங்கினார். 2017-ம் ஆண்டில், குவைத்தில் உள்ள வட கொரிய தூதரகத்தில் அவர் பணிபுரிந்தார். அந்த பிராந்தியத்தில் சுமார் 10,000 வட கொரியர்களின் வேலைவாய்ப்பை மேற்பார்வையிட உதவினார். அந்த நேரத்தில், பலர் வளைகுடா முழுவதும் கட்டுமானத் தளங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர். அனைத்து வட கொரிய தொழிலாளர்களையும் போலவே ஊதியத்தின் பெரும்பகுதியை சொந்த நாட்டு அரசிடம் அவர்கள் ஒப்படைக்க வேண்டியிருந்தது. துபாயில் 19 ஹேக்கர்களை கையாளும் மேற்பார்வையாளரிடம் இருந்து தனது அலுவலகத்திற்கு தினசரி அழைப்புகள் வந்ததாக அவர் கூறினார். "உண்மையில் இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கணினி மட்டுமே அவர்களுக்குத் தேவை" என்கிறார் அவர். ஆனால் வெளிநாடுகளில் எந்த ஹேக்கர்களும் இல்லை என்று மறுக்கும் வட கொரியா, செல்லத்தக்க விசாக்களுடன் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்கள் மட்டுமே இருப்பதாக கூறுகிறது. ஆனால். உலகம் முழுவதும் இருந்து செயல்படும் இணையப் பிரிவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய எப்.பி.ஐ. குற்றச்சாட்டுகளுடன் Ryu Hyeon Woo அளித்துள்ள விளக்கம் பொருந்திப் போகிறது. 2017 செப்டம்பரில், வட கொரியா மீது அதுவரை இல்லாத கடுமையான தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்தது. எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்தியது; ஏற்றுமதியை மேலும் கட்டுப்படுத்தியது; அத்துடன் நில்லாது, வட கொரிய தொழிலாளர்களை 2019ம் ஆண்டு டிசம்பருக்குள் வீட்டிற்கு அனுப்[பமாறு ஐநா உறுப்பு நாடுகளை அது கேட்டுக் கொண்டது. இருப்பினும், ஹேக்கர்கள் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அவர்கள் இப்போது கிரிப்டோ-கரன்சி நிறுவனங்களை குறிவைத்து, $3.2 பில்லியன் திருடியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை விடுத்து கீ போர்டுகளை பயன்படுத்தும் உலகின் முன்னணி வங்கிக் கொள்ளையர்கள் என்று அவர்களை அமெரிக்க அதிகாரிகள் வர்ணிக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/cq5zqzd281po
    • மேற்குக்கு “உலகின் மிகபெரிய ஜனநாயக நாடு” என்ற முகம். கிழக்குக்கு “தவிர்க்க முடியாத வளர்முக நாடு” என்ற வால். ஈழத்தமிழருக்கு - எப்போதும் காட்டும் பிராந்திய வல்லூறின் நரித்தனம்.  
    • அண்ணை கடல்நீர் மட்டம் காலம் தோறும் உயர்வதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.